.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label TMMK. Show all posts
Showing posts with label TMMK. Show all posts

Monday, June 13, 2011

வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.


அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


------------

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமுமுக மண்டலப் பொதுச் செயலாளர் ஹூசைன் கனி கூறியதாவது
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Wednesday, June 8, 2011

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் "வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?" என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம் பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம் வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக தமுமுக தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம் அது.

தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில் பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில் சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.

ஆண்டுகள் பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிவுள்ளது.

பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்...
  • *வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
  • *தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட.
( இவர் மார்க்க பிரச்சாரம் செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில் தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம்.

SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும் நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின் நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்...

Tuesday, September 28, 2010

இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

மறைகளண்ட தக்லீதுகளின் உலறல்கள்.
இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக?
ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே அதற்கு யார் காரணம் என்பதும் சமுதாயம் அறிந்துள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் உள்ளார். திருவிடைச்சேரியில் என்ன நடந்தது என்று சமுதாய மக்கள் அனைவரும் அறிவர். இந் நிலையில் இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திருகிறதா தமுமுக என்று ஷேக் தாவூத் என்ற மனநோயளி தனது வலைபூவில் பிதற்றியிருக்கிறார்.

திருவிடைச் சேரியில் நடந்தது என்ன என்று ஏற்கனவே தெளிவாக எழுதிவிட்ட நிலையில் மீண்டும் எழுதி நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.

திருவிடைச்சேரியில் நடந்தது என்னவென்று அந்த ஊர் ஜமாத்தார்கள் எழுதி உள்ள கடிதம்:



இனியாவது நடுநிலையோடு சிந்திக்க முன்வரட்டும்.


நடந்த சம்பவங்களின் விபரத்திற்கு:
“The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html

http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml

http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

Tuesday, September 7, 2010

திருவிடச்சேரியில் வன்முறை வெறியாட்டம்: தமுமுக கடும் கண்டனம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

“திருவாருர் மாவட்டம், திருவிடச்சேரியில் 05.09.2010 அன்று சமூக விரோதிகள் நடத்தியுள்ள வன்முறை வெறியாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

சமூக விரோதிகள் திருவிடச்சேரி ஜமாத் தலைவரையும் அவரது மைத்துனரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதும், முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் படுகாயப்படுத்தி இருப்பதும் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் இத்தகைய துப்பாக்கி கலாச்சாரத்தை அணுவளவும் சகிக்க முடியாது.

வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீதும், வெளியூரிலிருந்து வந்த அடியாட்கள் மீதும், வன்முறையாளர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பு மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

வன்முறையில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தமுமுக தனது ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறது.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Sunday, August 1, 2010

உங்களது வாக்கை பதிவு செய்யவும்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இதில் உள்ள இணைப்பை http://twocircles.net/polls/tcn_person_year_2010.html கிளிக்கி அதில் வரும் பக்கத்தில் உங்களது வாக்கை டாக்டர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், தலைவர் தமுமுக,அவர்களுக்கு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.


- நீதியின் குரல்

Saturday, July 3, 2010

சவுதி அல்ஹஸா மாநகர தமுமுக பொதுக்குழு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சவுதி அரேபியா அல்ஹஸா மாநகர பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் அஹமது சுகர்னோ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை மார்க்க அரங்கம், சமுதாய அரங்கம் - அரசியல் அரங்கம் என பிரிவுகளாக நடைப்பெற்றது தலைமையுரையாற்றி பேசிய தமுமுக மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக விளங்கும் தமுமுக பணிகள் இன்னும் சிறப்பாக நடைப்பெற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து வரவேற்புரையாற்றிய சகோ. லால்பேட்டை அமானுல்லாஹ் தனது உரையில், வெளிநாட்டு வாழ்க்கையில் பொருள் ஈட்டுவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்றில்லாமல், சமுதாயத்திற்கான தேவைகளில் ஒவ்வொருவர்களின் பங்களிப்பினையும் தனது உதவும் கரங்களை கொண்டு அழுத்தமாக நல்கி வரும் இயக்கம் தமுமுக தான் என்று குறிப்பிட்டார்.

மார்க்க அரங்கத்தில் முதல் நிகழ்ச்சியாக, “தியாகம் – ஓர் இஸ்லாமிய பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய மவ்லவி. அப்துல் ஹக் ஜமாலி, மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான், தியாகம் என்பதே இங்கே சுயநலன் சார்ந்து தான் இருக்கிறது, இந்த உலகில் செய்யப்படும் தியாகங்கள் என்ற பெயரில் செய்யப்படும் தியாகங்கள் எல்லாமே தியாகம் அல்ல. தியாகம் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தவர்கள் ஸஹாபாக்கள் தான் என்றார்.

தொடர்ந்து, இஸ்லாம் வலியுறுத்தும் சமத்துவம் – சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றிய தமுமுக அப்கேக் நகர பொருளாளர் சகோ. அப்கேக் அப்துல் மூமின், “இஸ்லாமியர்களிடையே தொழுகையில் இருக்கும் சமத்துவம், மற்ற விஷயங்களில் இல்லாமல் போனது ஏன்?” என்று வினா எழுப்பி அனைவர்களின் சிந்தனையும் தூண்டினார். மேலும் இஸ்லாம் வலியுறுத்தும் கொள்கைகள் எல்லாம் பின்பற்றுவதற்காக தான், புறக்கணிப்பதற்காக அல்ல என்றும் வலியுறுத்தினார்.

மார்க்க அரங்கின் நிறைவுப் பகுதியாக ஒளுச் செய்வது எப்படி என்று செயல் விளக்கப் பயிற்சியினை தமுமுக அல்ஹஸா மாநகர தலைவர் சகோ.அஹமது சுகர்னோ செய்து காட்டினார். தொடர்ந்து உறுப்பினர்களும் ஒளுச் செய்வது குறித்து சிறப்பாக செய்து காட்டினர்.

ஜும்ஆ பேருரை நிகழ்த்திய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி, மறுமையில் சுவனத்தில் நுழைவது மட்டுமே வெற்றி, சுவனத்தில் நுழைபவர்களே வெற்றியாளர்கள் என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவுச் செய்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு கூடிய இரண்டாம் அமர்வில் சிறப்புரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் சகோ.அப்கேக் அப்துல் அலீம், தனது உரையில், “ இந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு அடிப்படையே குர்ஆன் – ஹதீஸ் தான். இன்று தமிழகத்தில் சமுதாய மக்களிடையே இருக்கும், பாதுகாப்பு உணர்வு, தமுமுக துவங்கப்படுவதற்கு முன் இல்லை என்றார்.

நமக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளுக்காக ஆட்சியாளர்களின் கவனத்தினை ஈர்ப்பதற்காக போராட்டம், மறியல், தர்ணா போன்ற அறவழி போராட்டங்கள் எல்லாம் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை, ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டால் நீதிமன்றங்களை அணுகுவது எப்படி, காவல்துறை - அரசு அதிகாரிகளை அணுகுவது எப்படி போன்ற அடிப்படை விஷயங்களை கூட மக்கள் தெரிந்திராமல் இருந்தனர். அல்ஹம்துலில்லாஹ், தமுமுக-வின் வருகைக்கு பிறகே மக்கள் இதுப்போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டனர்.

வாழ்வில் தன்னுடைய வறுமையை எதிர்த்து போராடும் அதேவேளையில் சமுதாயத்திற்காக தமிழ்நாட்டில் களத்தில் நின்று போராடி இரத்தம் சிந்தவும் தயாராக இருக்கும் போராளிகளின் உழைப்பினை வெளிநாடு வாழ் தமிழர்களாகிய நாம் பெரிதும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்.

நம் சமுதாய அக்கறை இல்லாமல் சுயநலவாதிகளால் கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் எல்லாம் நம் சொந்தம் தான். அவர்களுக்கு உதவுவது நமது கடமை என்றார். வருங்கால தலைமுறை நிம்மதியாக இருக்க தமுமுக-வின் செயல்பாடுகளே காரணம் என்று குறிப்பிட்டு , அனைவர்களின் சிந்தனையையும் தூண்டி உரையினை நிறைவுச் செய்தார்.

“அரசியல் அரங்கில் நிறைவுரையாற்றிய தமுமுக கிழக்கு மண்டல துணை தலைவர் மவ்லவி அலாவுதின் பாகவி,. ம.ம.க-வின் ஒவ்வொரு அசைவும் மற்ற கட்சிகளால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

கல்வி கற்பதற்கு இஸ்லாமியர்கள் லாயக்கு இல்லை என்று ஆதிக்க சக்திகளால் செய்யப்பட்டிருந்த தப்பான கற்பிதம் நெல்லை மாணவியின் ஜாஸ்மின் செய்த சாதனை மூலம் நொறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சி, அதிகாரம் எல்லாம் நம்மிடையே வருவதற்கு நிறைய ஆட்சிப் பணி அதிகாரிகள் உருவாக வேண்டும், அதற்காக தமுமுக கடுமையாக உழைக்கிறது.

தமுமுக-வின் செய்தித்தாளான மக்கள் உரிமை விற்பனையில் தொய்வு ஏற்பட அனுமதிக்க கூடாது, விற்பனையை அதிகரிக்கும் பொறுப்பு ஒவ்வொரு நிர்வாகிகளுக்கும் உண்டு.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான இயக்கம் என்று இல்லாமல் சமூகம் தாண்டிய சேவைகளை புரிவதில் ம.ம.க. முன்ணணியில் இருக்கிறது என்று குறிப்பிட்டு தனது உரையினை நிறைவு செய்தார்.

இறுதியாக சுபஹான் நன்றியுரையாற்றினார். பொதுக்குழு கூட்ட அரங்க ஏற்பாடுகளை குன்னம் ராஜ் முஹம்மது, ஆயங்குடி அப்துஸ் ஸலாம் ஆகியோரும், உணவு ஏற்பாடுகளை கொள்ளிடம் அப்துல் ரஹ்மான், கந்தகுமாரன் அமானுல்லாஹ், இராஜகெம்பீரம் சிக்கந்தர், பாட்சா பின்னத்துர் முஹம்மது ரஃபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்




போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.



காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.





Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Monday, January 4, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தானா? மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்

புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:

சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துப்தர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்லிம் ஒருவரை முஸ்லிம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. நியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Sunday, November 8, 2009

ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செய்து வரும் அதே வேலையில், கடல்கடந்தும் தமது மனிதநேயப் பணிகளை பரந்து விரிந்து செய்து வருகின்றன. அயல் தேசங்களில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின் காரணமாக தான் பாணியாற்றும் தேசங்களில் இருந்துகொண்டே மனிதநேயப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். நமது இரு கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்ததில்லை ஆனால் தனது கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை. தமுமுக தலைமையின் வழிகாட்டுதலில் அயல் நாடுகளிலும் தமுமுகவின் கிளைகள் பரந்து விரிந்து செயல்பட்டு மனிதநேயப் பணிகளில் முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில் சவூதி அரேபிய – தலைநகர் ரியாத் மத்திய மண்டல த.மு.மு.கவின் பொதுக்குழு கடந்த 06-11-2009 அன்று கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி ஜமால் உமரி அவர்கள் கிராஅத் ஓத, மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

முதலாக மண்டல நிர்வாகத்தின் கணக்குகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யவிருப்பதை முன்னிட்டு பொருப்பிலிருந்த மண்டல நிர்வாகிகள் தமது பொருப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடுப்புப் பெற்றனர்.


உணவு இடைவேளைக்குப் பின், கிழக்கு மண்டலத்திலிருந்து பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் தேர்தல் அதிகாரிகளாக வருகை தந்திருந்த மவுலவி அலாவுதீன் பாகவி, சகோதரர் அப்துல் காதர், சகோ இஸ்மாயில், சகோ நூருதீன் ஆகியோரின் முன்னிலையில் மத்திய மண்டல த.மு.மு.கவிற்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மத்திய மண்டல நிர்வாகிகளை தேர்தல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் மண்டலத் தலைவராக மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுரைச் சேர்ந்த மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்கள் மண்டலத் தலைவராகவும். இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த எம். முஹம்மது ஹூஸைன் கனி அவர்கள் மண்டல பொதுச் செயலாளராகவும். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சகோ ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனையில் மத்திய மண்டலத்தின் துணைத் தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே. பி. முஹம்மது அவர்களையும், துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் மீ-மீசலைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மது அவர்களையும் தேர்வு செய்தனர்.

அல் கஸ்ஸாவிலிருந்து வருகைபுரிந்திருந்த சிறப்புப் பேச்சாளர் மவுலவி அலாவுதீன் பாகவி அவர்களின் உரைக்குப் பின் தாயகத்திலிருந்து த.மு.மு.கவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும் இணையம் வழியாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்கள் தங்களது உரையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தொடர்ந்து மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபடவும் அதற்கு உறுதுணையாக மற்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் ஏற்புரைக்குப்பின், பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு கிழக்கு மண்டல த.மு.மு.க தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் பதில் அளித்தார்கள். இறுதியாக சகோ. நூர் முஹம்மது நன்றி உரையாற்ற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.

இப்பொதுக்குழுவில் நூற்றி ஜம்பதிற்கும் மேற்பட்ட த.மு.மு.க உறுப்பினர்கள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக் குழுவை த.மு.மு.க மத்திய மண்டல தொண்டரணியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பணிகள் சிறக்க துவாச் செய்தவர்களாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயப் பணியின் கடமைகளை உணர்ந்தவர்களாக விட்டபணிகளைத் தொடர வெற்றிக்களிப்புடன் களைந்து சென்றார்கள்...

Sunday, August 30, 2009

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்

கூத்தாநல்லூரில் நேற்று (ஆக 29) இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஜஸாக் அல்லாஹ்!

திருவாரூர் மாவட்ட தமுமுக சார்பாக

Monday, June 15, 2009

எழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்

எழுச்சியுடன் நடைபெறும் தமுமுக தலைவரின் லண்டன் பயணம்

- நமது நிருபர்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்
ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.


சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தமுமுக
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.



3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.

ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.

ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.

லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.
-நமது நிருபர்

பிரிட்டனில் தொடர்து வரும் தமுமுக தலைவர் நிகழ்சிகள்

ஜுன் 13 அன்று லண்டன் இஸ்லாமிக் தாவா சென்டர் ஆண்டு விழா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குக் கொள்கிறார்

ஜுன் 14 லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் ஆங்கிலத்தில் இஸ்லாத்தில் மனித உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஜுன் 15 லண்டன் கிரேடன் பள்ளிவாசலில் தமிழக சகோதர்களுடன் கலந்துரையாடல்

ஜுன் 21 அன்று பிரான்ஸ் நாட்டில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டும் விழா மற்றும் கருத்தரங்கில் பங்குக் கொள்கிறார்
(தொடர்புக்கு அன்சாரி 00 33 612 581419)

Friday, May 15, 2009

மத்திய சென்னை வன்முறை: காட்டிக் கொடுத்த சமுதாய துரோகிகள்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டுப் போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் 6 பேர் மீது திமுக குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.


சரியாக குறிபார்த்து தாக்குதல் நடந்ததின் பிண்ணனியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற ஐஸ் ஹவுஸ் பகுதியின் பூத் ஏஜன்டாக த.த.ஜ வின் மாநில நிர்வாகி ஒருவர் இருந்துள்ளார். கள்ள ஓட்டுக்கள் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.ஹைதர் அலி ம.ம.க தொண்டர்களுடன் நிகழ்விடத்திற்கு வந்துள்ளார்.

எங்கு அடித்தால் கள்ள ஓட்டை சரியாக போட்டு முடிக்க முடியும் என்று சரியாக திட்டமிட்டு, வந்த வாகனத்தையும் வாகனத்தில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களையும் அடையாளம் காட்டி தாக்குதல் நடத்த காட்டிக் கொடுத்துள்ளார் த.த.ஜ வின் மாநில நிர்வாகியான அந்த பூத் ஏ‍ஜென்ட்.

இயக்க வெறியின் காரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரனை காட்டிக் கொடுத்து மாற்று மதத்தவர்கள் கையினால் கொலைவெறி தாக்குதல் நடத்தி ரத்தம் சிந்த உடந்தையாக இருந்த த.த.ஜவினர் நாளைக்கு குஜராத்தை போல் ஒரு சம்பவம் தமிழ்நாட்டிலும் நடக்க இயக்க வெறியின் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளையே இஸ்லாமிய விரோதிகளு்ககு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனதருமை முஸ்லிம் சமுதாயமே! தனி மனித கருத்து வேருபாடின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை மாற்று மதத்தவர்களிடம் காட்டிக் கொடுத்து கருவறுக்கத் துடிக்கும் த.த.ஜவினரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கி‍றேன் என்று சொல்வார்கள். ஒன்றாக பழகி, ஒன்றாக இருந்த நண்பர்களுத்தான் தெரியும் அவரின் பலமும் பலகீனமும் அதே நண்பர் எதிரணியில் இருந்தால் இவரின் ரகசிய செயல் திட்டங்கள் அனைத்தும் எதிரிக்கு இலகுவாக கிடைத்து விடும். வெல்வது எதிரி! கொல்வது ? நண்பனையா? இங்கே முஸ்லிம் சமுதாயம் சமுதாய துரோகிகளால் காட்டிக் கொடுத்து ரத்தம் சிந்தப்படுகிறது.

இவர்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

Tuesday, April 28, 2009

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.
நமது மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் 2009 என்ற வலைபூவில் வாசகர் விமர்சனத்தில் பதிவு செய்துள்ளதை நமது நீதியின் குரல் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
_________________________________________
- MOHAMED ABUTHAHIR

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்

1)அரசியல் வேண்டாம் என்ற பயணத்தில் இருக்கும் த.த.ஜ. அத்தின் தற்போதைய தேர்தல் நிலைப்பாட்டினை வரலாறு மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். மயிலாடுதுறையில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட த.த.ஜ. வேறு யாரை ஆதரிக்கப்போகிறது? காங்கிரஸிற்கும் ஆதரவில்லை, அ.தி.மு.க.விற்கும் ஆதரவில்லை என்கிற போது வேறு யாரைதான் ஆதரிக்க போகிறது? .வரும் நாடாளுமன்றத்தில் தமிழக சார்பில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெற இயலாமல் போகுமேயானால் அதற்கு த.த.ஜ. அத்தும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தி.மு.க.விற்கு ஆதரவு என்று கூறும் த.த.ஜ. தி.மு.க. சமுதாய துரோகங்களே செய்யவில்லை என்று சாட்சிக் கூறத் தாயாரா? இல்லை கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுப்பதும், குண்டுவெடிப்பினை காரணம்காட்டி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பியதும், ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்துவருவதும், உலகம் கண்டிராத குஜ்ராத் இனப்படுகொலையை தலைமை ஏற்று நடத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு துணை நின்றதும், தற்போதை தேர்தலில் கூட ஒரு முஸ்லிமிற்கு கூட போட்யிட வாய்ப்பு வழங்காததும், தன்னுடைய குடும்பத்தினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் இன்றுவரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்காதததும் ம.ம.க.யின் சமுதாய துரோகங்களுக்கு ஒப்பிடுகையில் சாதாரணமானதுதான் என்று கூறுகிறார்களோ என்னவோ?

2). த.த.ஜ. தி.மு.க.வை ஆதரிப்பதில் சில காரணங்கள் இருந்தாலும் ம.ம.க. வேட்பாளர்கள் எங்கு நின்றாலும், யார் நின்றாலும் தோற்கடிப்போம் என அழைப்பு விடுப்பதில்தான் எமக்கு ஆட்சேபம். மதிப்புமிக்க முஸ்லிம்கள் ஓட்டானது சிதறுண்டு மதிப்பிழந்து போவதனாலேயே நாம். த.த.ஜ.அத்தின் நிலைப்பாட்டினை விமர்சித்தோம். எங்கள் ஊர் மயிலாடுதுறை தொகுதியில் வருகிறது. எங்கள் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ் போன்ற ஒரு இஸ்லாமியனின் வெற்றி த.த.ஜ. அத்தின் நிலைப்பாட்டினால் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமே விமர்சன் த்திற்கான காரணம்.
வக்ப் வாரியத்தின் தலைவர் பதவிக்கு த.த.ஜ. அத்தினை சார்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரைக்படுவதாக செய்திகள் கசிகின்றன. பொறுத்திருந்துப் பார்ப்போம்
திமுகவிற்கு ஆதரவு எனும் ததஜவின் நிலைப்பாடு சரிதான். மற்ற திமுக அல்லாத கூட்டணி கட்சிகள் பொட்டியிடும் தொகுதியில் என்ன செய்வது என்பதுதானே கேள்வி. அந்த வேளையில் மயிலாடுதுரையில் ஏன் மமகவை ஆதரிக்க கூடாது என்பதற்கு ததஜவிடம் சரியான பதில் இல்லை தான்.

3)அன்புச் சகோதரர்களுக்கு,
தமுமுகவின் நிறுவனரான குணங்குடி ஹனீஃபா அவர்களிடமிருந்து மீளெழுச்சி பெற்றபோதிலிருந்தே 'அரசியலில் பங்கு பெற வேண்டும்; வேண்டாம்' என்ற இரு வேறுபட்ட கருத்துகளை அதன் தலைவர்கள் கொண்டிருந்தனர் என்பது ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

'தமுமுக அரசியலில் பங்கு வகிக்காது; பதவி பெறாது' என்பது பீஜேயின் உறுதியான நிலைபாடாகவும் 'அரசியல் வேண்டும்' என்பது இப்போதைய தலவர்களான பேரா. ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலீ போன்றோரின் வெளிப்படுத்தாத உள்ளக் கிடக்கையாகவும் அப்போது கிடந்தது.

இப்போது தமுமுக அரசியலில் இறங்கி, மமக கண்ட கையோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால், காலங்காலமாகப் 'பதவி பெறப் போவதில்லை' என்று அன்று முதல் இன்றுவரை மேடை தோறும் முழங்கிய ததஜ, வாரியத் தலைவர் பொறுப்புக்குத் தலையசைத்தால் முஸ்லிம்களிடத்தில் அது செல்லாக் காசாகி விடும்.

தவிர,
தமுமுகவைத் தோற்கடிப்பது என்னவோ மார்க்கக் கடமையைப்போல் ததஜ பிம்பம் காட்டுவது கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

4)நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயலும் முஸ்லிமைத் தோற்கடித்து விட்டு, 'முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என்று 'உணர்வு' கண்ணீர் வடிக்கப் போகிறதா?

அல்லது,
'நம் சகோதரன்தானே, வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் போகட்டுமே!' என்று தன் நிலைபாடை மாற்றிக் கொள்ளப் போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

5)தவ்ஹீத் ஜமாத்தின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது.திமுக அதிமுக போடும் அர்த்தமற்ற அரசியல் கோமாளித்தனத்தை இது பிரதிபளிக்கிறது.
தமுமுக வை பிஜேபியோடு ஒப்பிடுவதும், பிஜேவை மோடியோடு ஒப்பிடுவதும். கீழ்த்தரமான விசயங்கள்.

நான் தவ்ஹீத்வாதி. பிஜே சொல்வதுதான் சரி என்று நினைத்தாள் நான் எங்கள் தொகுதியில் ரித்தீஸ் என்ற காமெடியனுக்குதான் வாக்களிக்க வேண்டும்.இதற்கு நான் தயார் இல்லை.பண பலத்தின் மூலம் அரசியல் பன்னும் ரித்தீஸ் தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்ததை சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கும், நமது பிரச்சனைகள் நிச்சயம் கண்டுகொள்ளப்பட மாட்டாது.


6)நமது ஓட்டை திமுகவிற்கு போட்டு வீணடிப்பதை விட தமுமுகவிற்கு வாக்களித்து நம் பலத்தை காண்பித்தாள் மற்ற கட்சிகள் நம்மையும் திரும்பி பார்க்கும்.
நான் பீஜே மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அதே நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எனக்கு வேண்டப் பட்டவர் அல்ல.
அரசியல் என்று வரும்போது மமகவைத்தான் ஆதரிப்பேன். பீஜே பயான் கேட்பேன். அதற்காக ஓட்டுப் போட மாட்டேன்.
திமுகவுடன் அதிமுக சேர்ந்தாலும் மமகவும் ததஜவும் சேராதுபோல.
நல்ல சகோதரத்துவம், போங்க.
அல்லாஹு அக்பர்!

7)தற்கால பிஜேயின் செயல்பாடுகளையும் நிலைபாடுகளையும் குறித்து நாம் அறிவோம். மார்க்க விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் முன்னுக்குப் பின் முரண், பொய், அவதூறு, மார்க்கத்தைத் தன் வசதிக்கும் தன் அறிவுக்கும் ஏற்றாற் போன்று வளைத்தொடித்தல்...... பட்டியல் நீளூம். எனவே, தூரநோக்கற்ற குறுகிய சிந்தையுடன் எடுக்கும் அவரின் நிலைபாடுகளைக் குறித்து சமுதாயத்திற்கு அதிகம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனினும் 'மமகவைத் தோற்கடித்தே தீருவோம்' என சபதம் செய்து களமிறங்கியிருக்கும் ததஜவின் நிலைபாடு, சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, நடுநிலையோடு எடுக்கப்பட்ட நிலையா? என்பதை உணர்வில் வெளியிட்டுள்ள விளக்கமே மிக அழகாக எடுத்துக்காட்டும்.

மமகவைத் தோற்கடித்தே தீருவது என தீர்மானம் போடப்பட்டுள்ளதன் காரணாமாக பிஜே சொல்வது::
1. அவர்கள் ரவுடியிசம் செய்தனர்
2. கட்டப்பஞ்சாயத்து செய்தனர்
3. சமுதாயத்திற்குத் துரோகம் இழைத்தனர்
4. அரசியலில் இறங்கமாட்டோம் என சத்தியம் செய்து விட்டு வாக்குறுதி மீறினர்.
5. சமுதாய சொத்துக்களை அடித்தும் மிரட்டியும் கொள்ளையடித்தனர்.
6. 'ஃபித்ரா, சுனாமி போன்ற வசூல் பணங்களில் கையாடல் செய்தனர்.
7. இவற்றிற்கெல்லாம் மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் செயலாற்றினர்.
இவற்றைத் தவிர பிற வலுவான காரணங்கள் ஏதுமில்லை.

பிஜே கூறும் இவையனைத்தையும் மமகவினர் செய்தனர் என்றே வைத்துக் கொள்வோம்(4. வாக்குறுதி மீறினர் என்பது மட்டும் எனக்குத் தெரிந்து உண்மை)

தற்போதைய தேர்தலில் இவர்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவினர் இவ்விஷயங்களில் எல்லாம் யோக்கியர்கள் என இவர் கூற வருகிறாரா?

ரவுடியிசம், கட்டைப்பஞ்சாயத்துக்குப் பெயர் போனவர்கள் மு.க. அழகிரியும் ஸ்டாலினும்.

தமிழகத்தைப் பகுதிவாரியாக பிரித்து பட்டா போட்டு கொடுக்காத குறையாக கருணாநிதி தனது மகன், குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார்.

சமுதாய வஞ்சனை, துரோகம் இவையனைத்துக்கும் முழு சொந்தக்காரர் கருணாநிதி தான். கடந்த 50 ஆண்டுகாலமாக கருணாநிதி சமுதாயத்தை வஞ்சித்து வருவதைப் போன்று வேறு யார் வஞ்சித்தார்?

அனைத்தையும் விடுவோம். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மனம் வராத கருணாநிதி, எந்த வகையில் சமுதாய பாதுகாவலன் ஆவார்?. இவரை நம்பலாம், முஸ்லிம்களாகிய, இதுவே முதல் முறையாக அரசியல் களம் காணும் மமகவினரை நம்பக் கூடாதா?

'8)எதிர்காலத்தில் இவர்களும் பதவி பெற்ற பின்னர் நம்மை வஞ்சித்து விடுவர்' என குறி சொல்வதற்கு ததஜவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. எதிர்காலத்தில் நடப்பதைக் கூறும் அளவுக்கு பிஜேவுக்கு அல்லாஹ்வின் அதிகாரம் கிடைத்து விட்டதோ?

அப்படியே அவர்கள் வஞ்சித்து விடுவர் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த 50 ஆண்டுகாலமாக முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து, சிங்கிள் கிளாஸ் டீக்குச் சென்னை ப்ளாட்ஃபார்மில் அலைந்து திரிந்த கருணாநிதி, இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடிக்கும் அளவுக்குக் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகியிருக்கிறாரே, அதனை ஒரு முஸ்லிம் அனுபவிக்க போகிறார் எனில் அனுபவித்து விட்டுப் போகட்டுமே?. கருணாநிதிக்குச் சொத்தோ, அதிகாரமோ இனி ஒன்று புதிதாக தேவையில்லை. அனைத்திலும் பின் தங்கியிருக்கும் இச்சமுதாயத்திலிருந்து ஒருவராவது ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரராக வந்து விட்டுப் போகட்டுமே!

பொய்யிலும் ஏமாற்றிலும் நெஞ்சில் குத்தும் துரோகத்திலும் பெயர்பெற்ற கருணாநிதிக்குக் கொடுப்பதை ஒரு முஸ்லிமுக்குக் கொடுத்து விட்டுப் போகலாம்.

இனி, வாக்குறுதி மீறுதல்.

மீறவே கூடாத, மீறி விட்டால் ஷிர்க்கை விட மிகப் பெரிய பாவத்துக்குரிய வாக்கு மீறுதலா மமகவினர் செய்து விட்டனர்?

9)சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயம் எனில் வாக்குமீறுவதில் என்ன தவறு இருக்கிறது?. இது கூடாது என்பதற்கு மார்க்கத்தில் பிஜேயிடம் ஆதாரம் கேட்கமுடியாது. ஏனெனில், மார்க்கத்தைத் தன் விருப்பத்திற்கு வளைத்தொடிப்பதில் இன்று பிஜேயும் சளைத்தவரல்ல.

எனவே வாக்குமீறுதல், சமுதாயநலனை விட பெரிய விஷயமாக நமக்குப்படவில்லை. வாக்கு மீறினால் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என மார்க்கம் வரையறுத்துள்ளது. அதனால், அவ்விஷயத்தில் ரொம்பவே பிஜே அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இனி, அப்படியே வாக்குமீறி விட்டனர், அதனால் தான் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்றால் கூட,

'சென்னை வாழ்வுரிமை மாநாட்டில் அம்மா!!! செயலலிதா முஸ்லிம் சமுதாயத்தின் முன்னிலையில், இதே பிஜேயின் முன்னிலையில் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிக்கு எதிராக அடுத்த தேர்தலிலேயே நடந்து கொண்டார். வாக்குறுதி மீறுபவர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ள ததஜ, அதிமுகவை அழிப்பதற்கு - அதனைத் தோற்கடித்தே தீருவோம் என்று எப்பொழுதாவது தீர்மானம் போட்டதா?. கடந்த தேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அம்மாவின் பின்னால் வாலாட்டிச் சென்றனர்?

எனவே வாக்குறுதி மீறுதலிலும் நீதமான அணுகுமுறை பிஜேயிடம் இல்லை. அந்தக் காரணத்தைக் கூறுவதற்கு பிஜேக்கோ ததஜவிற்கோ எந்த அருகதையும் இல்லை.

10)'ஃபித்ரா, சுனாமி வசூலைக் கொள்ளையடித்தனர் விஷயம், சிரிப்பு தான் வருகிறது!

ததஜ வெளியிட்ட சுனாமி வசூல் கணக்கில்....

உணர்வில் விளம்பரத்திற்கு 50000, ஆட்டோ செலவு, தொண்டர்கள் சீருடை, தொப்பி வாங்க என நீண்ட பட்டியல் போட்டிருந்தனரே?

சுனாமி உதவிக்காக அனுப்பியவர்களின் பணத்தை இதற்கெல்லாம் செலவழித்தோம் என கணக்குக் காட்ட இவர்களுக்கு வெட்கமாக இல்லை? சூனாமிக்காக வாங்கப்பட்ட தொண்டர் சீருடையில் ததஜ என அடித்தல்லவா போட்டிருந்தனர்? ததஜவின் சீருடைக்குச் சுனாமி வசூல் பணமா?

உணர்வில் 'சுனாமிக்கு உதவுங்கள்' என்ற விளம்பரம் செய்ததற்கு உதவி செய்தவர்களின் பணமா?

சுனாமி பணத்தைத் தங்கள் விருப்பத்திற்குச் செலவு செய்து, அதனைப் பட்டியல் போட்டும் காண்பித்த ததஜவினருக்குத் தமுமுகவினர் சுனாமி பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர் எனக் கூற எவ்வித அருகதையும் இல்லை.

இனி என்ன உள்ளது? ஒரே விஷயம் - தமுமுக ததஜவிற்கு எதிராக செயல்பட்டது!

ஆம், முஸ்லிமல்லாத, 50 ஆண்டுகாலமாக சமுதாயத்தை நெஞ்சில் குத்தி வாழ்ந்து வரும் கருணாநிதிக்குக் கேட்காமலே ஆதரவு கொடுத்து விட்டு, எந்த ஒரு அரசியல் கட்சி கூட போடாத அளவிற்குச் சொந்தம் சகோதரர்களைத் தோற்கடித்தே தீருவோம் என(கவனிக்க: மோடிக்குக் காவடி தூக்கிய செயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என இவர்கள் தீர்மானம் போடவில்லை. மாறாக அவளுடன் இதுவரை ஒட்டியே இருந்தனர்), தீர்மானம் போட்டு பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இவர்களுக்குச் சமுதாய துரோகம் முற்றிப் போய் இருப்பதற்குத் தனிப்பட்ட பகை மட்டுமே காரணம்! அல்லாமல் சமுதாய நோக்கம் இதில் அறவே இல்லை!

11)சமுதாயம் விழித்துக் கொண்டாகி விட்டது. பிஜே சொல்வதெல்லாம் சரி தான் என ததஜவில் இருப்பவர்கள் வேண்டுமெனில் தலையாட்டி செல்லலாம். சமுதாயம் பிஜேயை நன்றாக புரிந்து கொண்டாகி விட்டது!

இனி திமுகவிற்கு ஆதரவு என கேட்காமலே ததஜ துண்டு விரித்தது சரியா? என பார்ப்போம்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு உருப்படியாக சொன்ன ஒரே காரணம் - கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மை தான்.

ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் துரோகிக்கு வாக்குறுதி கொடுக்க பிஜேக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வேண்டுமெனில் ததஜ சார்பில் பிஜே வாக்கு கொடுத்தார் என கூறி கொள்ளுங்கள்.

சமுதாயம் தன் நன்றிக்கடனை ஏற்கெனவே தமுமுக மூலம் கொடுத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் ததஜ பேசலாம் எனில், அதனைப் போன்ற சம உரிமை தமுமுகவிற்கும் உள்ளது. தமுமுக சமுதாயத்தின் சார்பில் ஏற்கெனவே நன்றி கடனை அடைத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் நன்றி கடன் அடைக்க தமுமுகவுக்கு உரிமை இல்லை, எனில் ததஜவுக்கும் அந்த உரிமை இல்லை.

சமுதாயத்தின் சார்பில் ததஜ செய்யலாம் எனில் தமுமுகவும் செய்யலாம்.

எனவே எவ்வகையில் நோக்கினாலும் துரோகி கருணாநிதிக்கு மற்றொரு முறை நன்றி கடன் அடைக்க வேண்டிய தேவையே இல்லை.

அப்படியே வலுக்கட்டாயமாக அடைத்தே தீர வேண்டும் எனில், பிஜேயும் பிஜே கூறுவதை எல்லாம் சரி தான் என கேட்டு தலையாட்டும் ததஜவினரும் துரோகி கருணாநிதிக்குத் தங்களின் நன்றி கடனை அடைத்து மோட்சம் பெறுங்கள்!!!
பரவலாக பார்க்கும்போது, த.த.ஜமாத்தின் ம.ம.க. எதிர்ப்பு என்பது வரவேற்கப்படாத ஒன்றாக தெரிகிறது. சமுதாய வாக்குகள் நீர்த்துப் போகத் தான் த.த.ஜமாத்தின் முடிவு வழி வகுக்கும். ஆக.. சமுதாய இயக்கங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமையில்லாத இருண்ட பாதையைத் தான் காட்டுகின்றன.

12)பழையதை கிளரிவிட்டு ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக சுயநலம் மனோயிச்சை காழ்ப்புணர்ச்சி என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து அணுகி செயல்படும் போக்கு சரிக்கும் தவறுக்கும் உள்ள் வேறுபாட்டை மறைத்து விடும்..

இவ்வுண்மையை அனைவரும் உணர்ந்து விழிப்புணர்வோடு ஒருவரையொருவர் எதிரியாக கருதி செயல்படாமல், தூய்மையான, சுமூகமான தியாக மனப்பான்மையுடன் வெறுப்பையும் குரோதத்தையும் களைந்து செயல் படாதவரை முஸ்லிம் சமுதாய நலன் என்பதும் வெரும் பேச்சுதான் என்பதிலும் சந்தேகமில்லை. மேலும் இதனால் அவர்களுக்கும் மறுமையில் ஏதும் நலன் விளையும் வாய்பில்லை என்பதும் தெளிவு.

இதை தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்கள் உணர்ந்திடும் வரை அவர்கள் தலைவர்கள் உணரமாட்டார்கள்,, முஸ்லிம்கள் நிலையிலும் ஏதும் நல்லதொரு மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியமுமில்லை...

அல்லாஹ் இதனை மாற்றிட உதவியும் அருளும் புரியவேண்டும். என பிராத்திப்போமாக.... ஆமீன்

13)சமுதாய நலனைக் குறித்து நீங்கள் உண்மையாக கவலை கொண்டால்.....

இதுகாலம் வரை சமுதாயத்தை வஞ்சித்த திமுகவை விட்டுவிடுவோம். இந்தத் தேர்தலில் ஒரு சீட்டில் கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது சமுதாய நலனா?

அதிமுக, பாஜகவின் பினாமி, அது சமுதாயத்தின் எதிரி எனில், திமுக சமுதாயத்தின் துரோகி என்பதை வசதியாக சகோதரர் PJ மறந்து விடுகிறார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக சுமார் 167 முஸ்லிம்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம். ஆனால், அந்தக் குண்டுவெடிப்பு நடக்கக் காரணமான 19 முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கோவை கலவரம் சம்பவத்தில் எத்தனை பேர் எத்தனை ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் சிறையில் கிடந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா?

கருணாநிதி, துரோகிகளை விடக் கேவலமானவன் என்பதற்கு இதனை விட பெரிய சான்று எது வேண்டும்?

அப்படிப்பட்டவனுடன் பேரம் பேசுவது தான் சரியான நிலை. அல்லாமல் சமுதாயத்திற்குப் போவதற்கு போக்கிடம் இல்லை என்பதற்காக அந்தத் துரோகிக்குச் சமுதாய ஓட்டுகளைக் கண்ணை மூடி வாரி வழங்குவது சுத்த மடத்தனம்.

14)தமுமுக தன்னை விட்டுப் போனாலும் நஷ்டமில்லை, ததஜ மூலமாக இச்சமுதாயத்தின் ஓட்டுகளைக் கூறு போட்டு விடலாம் என்பதை முன்னரே உணர்ந்ததால் தானே, குறைந்த பட்சம் ஒரே ஒரு முஸ்லிமையாவது திமுக வேட்பாளர்களில் கூட இந்தக் கருணாநிதி நிறுத்தவில்லை? இதனை விடப் பச்சை துரோகியும் வஞ்சகனும் உலகில் வேறு யாராவது உண்டா?

முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கட்டும். பிஜே பேசி விட்டால் எல்லாம் சரி தான் என்ற நிலை 90 களில் இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதிலும் சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது போல் பேச்சை மாற்றி மாற்றி பேசுவதிலும் பிஜேக்குப் போட்டியாக இப்பொழுது சமுதாயத்தில் கூட எவரும் இல்லை என்பதைச் சமுதாயம் நன்றாக உணர்ந்துள்ளது.

பாஜகவைத் தமிழகத்தில் இறக்குமதி செய்த, இரத்தக்காட்டேறி மோடிக்குப் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து கூறி உச்சி முகர்ந்த இன வெறிபிடித்த ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என ததஜ அறிவித்திருந்தால் அதற்கு சமுதாய நலனின் மீது அக்கறை உண்டு எனக் கூறலாம்.

திமுகவிற்கு ஆதரவாம்; மமக போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சாக பாடுபடுவார்களாம்.

அப்ப பாஜக, அதிமுக?

15).இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் குதிரை சவாரி என்பதற்கும் பிஜே விளக்கம் அளித்தால், கேட்டுப் புல்லரித்துப் போகின்றவர்களுக்கு புழகாங்கிதமடைந்து முழங்க வாய்ப்பாக இருக்கும்.

இடஒதுக்கீடு கொடுத்ததற்காக அடுத்தத் தேர்தலில் நன்றிக்கடனாக திமுகவை ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்கள்! அதை தமுமுகவிலோ அல்லது ஒத்தக்கருத்டுடைய ஏதேனும் முஸ்லிம் கட்சியிலிருந்தோ செய்திருக்கலாமே? தவ்ஹீதுப் பிரச்சாரமே எங்கள் முதர்பனி என்று வெளியேறி (தமுமுகவை உடைத்து) முன்பு ஜெயலலிதா தற்போது கருணாநிதி என்று லீகர்களைவிடவும் மோசமாக முஸ்லிம்களை அரசியல் வழிகெடுக்க ததஜ ஏன்? என்பதே பலரின் கேள்வி.

ததஜ அரசியல் கட்சியா மார்க்கப்பிரச்சார அமைப்பா? திமுக முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களாகச் சென்ற சட்டமன்றத் தேர்தலில் சகோ.பிஜே செய்த பிரச்சாரங்களெல்லாம் சந்தர்ப்பவாதக் குற்ற்ச்சாட்டுக்களா? அல்லது திமுக அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டதா?

ஓர் அரசியல்வாதி சந்தர்ப்பவாதியா இருக்கலாம்; ஆனால் தவ்ஹீதுவாதி எக்காரணம் கொண்டு சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது.

16)பிஜே தமுமுகவிலிருந்து வெளியேறக்காரணமே, அவர் கூறுவதற்கு அங்கு யாரும் செவி சாய்க்கத் தயாராகாதது தான்.

வெறும் அடிப்படை உறுப்பினராகத் தான் அவர் இருப்பார். ஆனால், இயக்கத்தின் தலைமையை விட அதிகாரம் படைத்தவராக அவர் இருப்பார்; இருக்க வேண்டும். அவரின் பேச்சு எடுபடவில்லை என்ற நிலை வந்தால், உடனடியாக பிளவு தான்.

இதற்கு சரியான உதாரணம்:

சகோதரர் ஹாமித் பக்ரீ கைது செய்யப்பட்ட போது, தமுமுக தலைமையிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகும் முன்னரே அன்று இரவு வின் தொலைகாட்சியில் தோன்றி, 'தமுமுக ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் ஜாமீனூக்காகவோ அவர் வழக்கு விஷயமாகவோ எந்த விஷயத்திலும் உதவி புரியாது' என அறிக்கை வெளியிட்டது தான்.

இந்நேரத்தில், பிஜே தமுமுகவின் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும் தான். 'மனம் திறந்த மடல்' எழுதி விட்டு, அமைப்பாளர் பதவியைக் கூட அந்நேரத்தில் விட்டு விலகியிருந்தார்.

17)தமுமுகவின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை 'அரசியலில் கால் பதித்தால் மட்டுமே, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு ஓரளவாவது தீர்வு கொண்டு வரமுடியும்' என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், பிஜே இதற்கு நேர் முரணான கருத்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, தவ்ஹீதை வளர்க்க தமுமுக வேண்டும் அவ்வளவு தான். அதற்கு மேலாக அரசியலில் இறங்க வேண்டும் என்பதற்கு அவர் எதிர் கருத்தில் இருந்தார்.

தமுமுகவில் அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பிஜேயின் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற நிலை வந்தப் பிறகு தான், என்னென்னவோ காரணங்களை அடுக்கி தமுமுகவை உடைத்தார்.

இது உண்மையில்லை எனில், 'தவ்ஹீத் பிரச்சாரத்திற்குத் தமுமுக எதிராக உள்ளது என கூறி வெளியேறியவர், முஸ்லிம் விரோதி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பாரா?'

அரசியல் வேண்டாம் என்றவர், தொடர்ந்து அரசியலில் தலையை நுழைத்து ஏன் தான் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது தான் புரியவே செய்யாத விஷயம்.

'18)தமுமுக அரசியலில் போட்டியிடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. அந்தக் கருத்து பி.ஜேயின் கருத்துத்தான் ஆரம்பம் முதலே ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர்அலியும் அரசியல் பிரவேசம் சமுதாயத்திதேவை என்று பல முறை கூறி உள்ளார்கள் பல செயற்குழு பொதுக்குழுவில் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளன அதிகப்படியான ஆதவு வந்தவுடன் அரசியலுக்குப் போனால் நான் இயக்கத்த விட்டு போய்விடுவேன் என்று பிஜே மிரட்டுவார் உடனே அவை கைவிடப்படும். அரசியல் பிரவேசம் கூடாது என்று தமுமுகவோ அதன் நிர்வாகிகயோ ஒரு போதும் சொன்னதில்லை பிஜேயைத் தவிர. '

இது முட்ரிலும் உண்மை. நான் கலந்து கொண்ட திருச்சி பொதுகுலுவிலும் இப்படிதான் 'அரசியலுக்கு வந்தால் நான் விலகி விடுவென் என்றார்.' அப்பொலுது புதிய தமிழகத்தை அதரிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கூடியபொழுது இவ்வாரு கூறினார்.

19)நான் இப்பொழுது எந்த இயக்கத்திலும் இல்லை. எதை மறைத்தாலும் சுயநலத்துக்காக தவ்ஹீத்வாதிகளை கூருபோட்ட பெருமை அண்ணன் பீஜே அவர்களைதான் சாரும்.

20)ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டதிலிருந்து முஸ்லிம் சகோதரர்களூக்கு எதிரான தன் தனிப்பட்ட பகையை வெளிப்படுத்தி விட்டது. இதுவரை பாஜகவையோ அதிமுகவையோ தோற்கடித்தே தீருவோம் என ஒரு பெயருக்குக் கூட தீர்மானம் நிறைவேற்றாத ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டத்திலிருந்து ததஜ எதிரிகளின் கையாளாக ஆகி விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.

21)துரோகி கருணாநிதிக்காகவும் அவரின் கட்சி சார்பாக போட்டியிடும் ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளுக்காகவும் தேர்தல் பணி செய்வதற்கு, ததஜ கூறிய பிரதான காரணங்களில் ஒன்று - இடஒதுக்கீடு அதிகரிப்பதாகவும் முந்தைய இடஒதுக்கீடு தவறு சீர் செய்யபடும் என்றும் - திமுக ததஜவிற்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருக்கிறது என்பதே.

ஆனால் அவ்வாறான எந்த ஒர்ர் உறுதிமொழியும் திமுக ததஜவிற்கு இதுவரை கொடுக்கவில்லை
தௌஹீது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யின் கூடாரமாகவும் சமுதாய மக்களிடம் எவ்வித கூச்சமும் இன்றி பொய்களை அவிழ்த்து விடும் மானங்கெட்டவர்களாகவும் ததஜ மாறி விட்டது.

22)பி ஜெ தனிச்சின்னத்தில் நின்றாலும் இந்த மமக வை ஆதரிக்கும் கூட்டம் அவருக்கு உழைக்க வாக்களிக்க முன்பந்தியில் நிற்கும். யாருடன் இருந்தாலும் தனிசின்னம் அதிக தொகுதிகள் அதில் மமக பிரளவில்லை. வேலூர் தேனி தொகுதிகளில் அந்த முன்னணி நிற்கவில்லை.மத்திய சென்னையில் சகோதரர் ஹைதர்அலி பெயர் உறுதிசெய்யப்பட்ட பின்புதான் அதிமுக ஆளை மாற்றியது. இது சங் டிவி கூட்டம் மறைமுகமாக ஆர் எஸ் எஸ் வழி ஜெயலலிதாவிற்கு கொடுத்த பிரஸ்ஸர். சரத்குமார் கூட்டணியையும் சங் டிவி ராதிகா வழி பிரஸ்ஸர் கொடுத்து பிரித்தது. வைகோவை எதிர்த்து கார்த்திக்கை நிறுத்தி பிரஸ்ஸர் கொடுக்க நினைத்த திமுக அதை கொல்லைபுறம் வழி நடத்தியது.தொடர்ந்து செய்தி வாசிப்பவர்கள் கூர்ந்து நோக்குபவர்கள் நன்கு அறிவர்.

இடஒதுக்கீடு தந்தற்காக ஆதரவு கடிதம் கொடுத்த சில நாட்களுக்கு பிறகு முத்துப்பேட்டை பிரச்சனையில் பி ஜே கூட்டத்தில் பேசும் போது கருணாநிதியை குறிப்பிட்டு நீ 3.5 தந்ததாக பேப்பரில் சொன்னாய். நடைமுறையில் இல்லை. முஸ்லீம்களுக்கு பாதுகாப்பாய் இருப்பேன் என்றாய் இன்று துரோகம் செய்கிறாய். நீயும் பேப்பரில் தந்தது போல் நாங்களும் பேப்பரில் தந்தது முடிந்துவிட்டது. இனி அதற்கு மதிப்பில்லை என்று பலமுறை அறிவித்த பி ஜே இப்போது அதை பேசுவது அவருக்கு ஒரு நாக்கா அல்லது பலதா.இஸ்லாமியனுக்கு வெட்கம் ஈமானில் உள்ளது என்று நபிகள் சொன்னார். பி ஜே யிற்கும் அவரை அரசியலில் ( மார்க்கத்தில் அல்ல) தாங்குகிறவர்களுக்கும் அது இல்லையா.; நாகர்கோவிலில் தவ்ஹீத் மறுமலர்ச்சிக்கு 1976 முதல் வித்திட்டபோதும் 80களின் முடிவுவரை நன்கு அறிந்தவன்.

சகோதரர்களே! அந்த பி ஜே இவர் அல்ல. அன்று அவருடன் இருந்த கூட்டமும் இப்போ இவரின் தவறான செயல்களால் அவருடன் இல்லை.

23)ம.ம.க வின் தேர்தல் நிலையை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பேச தனிசின்னத்தில் சமுக பிரதிநிதிகள் சட்ட சபை பாராளுமன்றங்களில் வேண்டும் அதற்கு தீர்வு சொல்லுங்கள். எனவே உள்ளுர் சகோதர சகோதரிகள் மமக விற்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் குடும்பங்களுக்கு தெரிவித்து மமக விற்பு வாக்களியுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.


24)ததஜவிடம் நியாயமான கேள்விகளுக்கு எப்பொழுதுமே பதில் இருக்காது.

இங்கு கேள்வி ஒன்று தான்:

ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளையும் நாற்காலிக்காக பாஜகவுடன் மானம், சூடு, சுரணை இன்றி ஒருமுறை கூட்டணி வைத்துக் கொண்ட போலி திராவிட வேடம் இடும் கருணாநிதியையும் வெற்றி பெற பொய் காரணம் கூறி களமிறங்கி பணியாற்றும் ததஜ, 'மமகவினர் போட்டியிடும் தொகுதியில் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சுடன் களப்பணியாற்றுவோம்' என தீர்மானம் போட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

துரோகிகள், ஊழல் பேர்வழிகள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள், சமுதாய எதிரிகள், பதவி பித்து பிடித்து அலையும் பேமானிகள்..... இப்படிப்பட்டவை எல்லாம் தான் காரணம் எனில்,

இவை அனைத்துக்கும் முழு தகுதி படைத்தவர் கருணாநிதி தான்.

முஸ்லிம் சமுதாயத்தை நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் சுமார் 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கருணாநிதியை நம்புவார்களாம். ஆனால், நேற்றுவரை ஒன்றாக இருந்து அடியும் மிதியும் கொண்டு 'மனம் திறந்த மடல் மூலம்', 'மறுமைக்காகவே உழைப்பவர்கள்' என்றும் 'தன்னலம் பாரா சேவகர்கள்' என்றும் பலவாறாக புகழ்ந்து அவர்களுக்கு எதிராக வாயசைக்க வருபவர்களுக்கு எதிராக மறுமையில் இறைவனிடம் நான் முறையிடுவேன் என தன்னால் மெச்சிப் பாராட்டப்பட்டவர்களை, நம்பமாட்டார்களாம்.

குடிகாரன் கூட காலையில் எழுந்தால் தெளிந்து விடுவான். இரவில் உளறியதை நினைத்து வெட்கப்படவும் செய்வான்.

ஆனால், பிஜேயோ தன் வாய்க்குத் தானே எதிரி என்பதற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரைத் தலைமையாகக் கொண்ட ததஜவின் தீர்மானங்கள் அனைத்துமே தனிப்பட்ட பகைமையின் பிரதிபலிப்புகளே.

இதனைச் சமுதாயம் மிக நன்றாக உணர்ந்தே இருக்கிறது.

சமுதாயத்தை நீண்டகாலத்துக்கு யாராலும் ஏமாற்ற முடியாது.


25')'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியும்...
நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்
ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக சிந்தித்து செய்ல்படகூடியவர்களா?

அல்லது

எந்த அழைப்பிதலும் இல்லாமள் (மமகவை (முஸ்லிம்களை) உயிரை கொடுத்து தோற்கடிக்க வேண்டும்) என்பதற்காக கலைஞரிடம் கூனி குறுகி குனிந்து ஆதரவு கடிதத்தை கொடுத்துல்லார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக செய்ல்படகூடியவர்களா?????

சகோதரர்களே! சிந்தியுங்கள்.... நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.... இறையச்சத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கீழுள்ள ஹதீஸை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.


முஸ்லிம் சகோதரர்களே உணர்ந்து கொள்ளுங்கள் யார் உன்மையான தவ்ஹீத்வாதிகள் என்று.


லாத்த ஹாஸதூ வலாத்த நாஜஸு வலாத்த பாகலூ வலாத்த தபாரூ வலா பய்ழ பய்ழகும் அலா பய்ழ பய்ழின் வ கூன இபாதல்லாஹி இஹ்வானா.
அல் முஸ்லிமு அஹ்லுல் முஸ்லிமி லா எதழிமுஹூ வலா யஹ்ஸிலுஹூ வலா யஹ்ஸிருஹூ அத்தக்ஃவா ஆஹூனா. அய்யுஸிர்ரு தலாத மர்ராஅத். பி ஹஸ்இம்ரின் மினஷ்ஷர்ரீ அய்யுஹ்கிர அஹாஹுல் முஸ்லிமா, குல்லு முஸ்லிமி அலல் முஸ்லிமி ஹாரம் தமுஹு வமாலுஹு வ இர்துஹூ. (ரவாஹூல் முஸ்லிம்)


அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் “பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிரும், பொருளும் அவரது மானம் உள்பட மூன்று விஷயங்கள் ஹாராமாகும். (இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸாகும்)


……………..”நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்......(3: 103)
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காபீர்களை (உங்களுக்குஉற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......(4: 144)…..
முஸ்லிம் சகோதரர்களே ஒற்றுமையின் பக்கம் வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை ஆட்சியாளர்களாக்கி வைப்பான்.

THIS VIEWS TAKEN FROM READER COMMENT IN SATYAMARGAM.COM And http://mmkelection2009.blogspot.com/2009/04/blog-post_25.html

Thanks to Satyamargam.com and mmkelection.blogspot.com

Saturday, April 25, 2009

அன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர்

1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இன்று மத்திய சென்னையில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி அவர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றிய சகோதரர் அபூ சுமையா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கருத்து பதிவு பகுதியில் பதிவு செய்துள்ள தகவலை நன்றியுடன் பதிவு செய்திள்ளேன்.
Blog Editor
____________________________________________________________________

இன்று மத்திய சென்னை தொகுதியில் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் திமுக வேட்பாளர் மட்டுமே அவர் கண்ணுக்கு எதிரியாக தெரியும்; தெரிய வேண்டும். சகோதரர் ஹைதர் அலி, எப்படிப்பட்ட மோசமானவராக இருந்தாலும் சகோதரர் பிஜேக்கு எவ்வளவு பெரிய துரோகம் இழைத்திருந்தாலும்...... தேர்தல் என்று வரும் போது, அதுவும் மத்திய சென்னை தொகுதி என்று வரும் போது, அதிலும் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார் என வரும் போது சகோதரர் பிஜே கொஞ்சமாவது நன்றியுள்ளவராக இருந்தால்......... சகோ. ஹைதர் அலி வெற்றி பெற தன் ஆதரவைக் கொடுத்து, வீதியில் இறங்கி உழைக்க வேண்டும்.

இதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதில், நேரடியாக நான் தொடர்பு கொண்டவன் என்பதால், அல்லாஹ்வுக்காக இவ்விடத்தில் அதனை நினைவுகூர கடமைபட்டுள்ளேன்.

1999 பாராளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அத்தேர்தலில் துரோகி கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். இதன் காரணமாக அப்போது பிஜே உடனிருந்த தமுமுக பாப்பாத்தி செயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களை வெற்றி பெற வைக்க முழு மூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு களமிறங்கியிருந்தது.

இதே மத்திய சென்னை தொகுதியில் அப்பொழுது அதிமுக சார்பில் சகோ. லத்தீப் சாகிப் அவர்கள் போட்டியிட்டார்கள். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலும் அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் கள்ள ஓட்டு கொடிகட்டிப் பறக்கும் எனவும் கள்ள ஓட்டை மட்டும் நாம் தடுத்து விட்டாலே சகோ. லத்தீப் அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கள்ள ஓட்டு நடக்காமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமுமுகவினர் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, எல்லா வாக்கு சாவடியிலும் தமுமுக தொண்டர்கள் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சகோதரர்கள் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என பீஜே பேசிய பேச்சைக் கேட்டு, அரசியலில் எவ்வித நாட்டமும் இல்லாத நானும் தேர்தல் பணிக்காக தமுமுக சகோதரர்களுடன் களமிறங்கியிருந்தேன்.

இதே மத்திய சென்னை தொகுதியில், அண்ணா நகர் பகுதியிலுள்ள ஒரு அரசு மேல் நிலைபள்ளியில், இப்பொழுது இதே மத்திய சென்னையில் போட்டியிடும் சகோதரர் ஹைதர் அலி தலைமையில் நான் உட்பட சில சகோதரர்களுக்குக் கள்ள ஓட்டு நடைபெறாமல் கண்காணிக்க தமுமுக பொறுப்பு தந்திருந்தது.

கள்ள ஓட்டு நடப்பது தெரிய வந்தால் எவ்விதம் யார், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அப்போதைய தேர்தல், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன. அது இரண்டாம் கட்ட தேர்தல். முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்த கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து சுமார் 20க்கு மேற்பட்ட ஸ்டாண்டர்ட் வேன்களும் சுமார் 10க்கு மேற்பட்ட பஸ்களும் அண்ணாநகர் வாக்குச்சாவடி பகுதிகளில் பார்க் செய்யப்பட்டிருந்ததையும் பூத்தினுள் அதிகாரிகளின் துணையுடன் முழு பூத்தையுமே திமுக+பாஜகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருந்ததையும் திமுக+பாஜகவினர் அல்லாத வேறு யாரையுமே ஓட்டு போட விடாமல், உரிய அடையாள அட்டைகள்/ரேசன் கார்டுகள் இருந்தும் அதிகாரிகளை வைத்து அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் ஓட்டு போட்டாகி விட்டது என்றும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டறிந்தோம்.

எங்களுக்குத் தரப்பட்டிருந்த அறிவுரைபடி உடனடியாக தகவலைச் சகோதரர் ஹைதர் அலிக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னோம்.

சம்பவ இடத்திற்கு நாங்கள் கூறியது சரிதானா? என்பதைச் சோதிப்பதற்காக விரைந்து வந்தச் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், நாங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் கண்டவுடன் பூத் தேர்தல் அதிகாரியிடம் அப்போது அங்கு திரண்டிருந்த(ஓட்டு போட விடமால் தடுக்கப்பட்ட கோபத்தில் இருந்த) அதிமுகவினர் புடைசூழ வாக்குவாதம் செய்தார்.

வெறும் 5 நிமிடம் தான் ஆகியிருக்கும். எங்கிருந்து அத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று தெரியாது. சுமார் 2000 பேருக்குக் குறையாமல் இருப்பர். சகோதரர் ஹைதர் அலியோடு இணைத்து நாங்கள் துரத்தி், துரத்தி அடிக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சகோ. ஹைதர் அலிக்கு ஆதரவாக திரண்டிருந்த அதிமுகவினரில் ஒருவரைக் கூட அந்த இடத்தில் காணோம். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த நாங்களும் சகோதரர் ஹைதர் அலியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டி அடிக்கப்பட்டோம். அந்நேரத்தில், சகோ. ஹைதர் அலிக்குப் பாதுகாப்பாக அரசாங்கம் ஏகே47 துப்பாக்கியுடன் ஒருவரை நியமித்திருந்தது. கூட்டத்தின் அடி பொறுக்க முடியாமல், பாதுகாப்புக்கு வந்திருந்தவரிடம் வானத்தை நோக்கிச் சுட சகோ. ஹைதர் அலி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம். துரோகி கருணாநிதி நியமித்த ஆளல்லவா??.. சிறிது நேரத்தில் அவனும் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

அன்று நாங்கள் அடி வாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் பசுமையாக மனதில் உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி, வழியில் கண்ட ஒரு டாக்டரின் காரை மறித்து ஏறி, பின்னர் சிறிது தூரம் சென்று வேறு ஆட்டோ பிடித்தூ....எப்படியோ எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். அங்கு அறையினுள் சகோ. லத்தீப் தலைமையில் தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

நடந்தச் சம்பவத்தைச் சகோ. லத்தீப் சாகிப்பிடம் தெரிவித்ததும், உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும், உங்கள் தலைவரிடம் பேசி சொல்லுங்கள் என்றார்.

சகோ. ஹைதர் அலி , சகோ. பிஜேயை அழைத்துத் தகவல் கூறி, உடனடியாக கருணாநிதி வீட்டை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து, தொண்டர்களை அங்கு வர வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முறைபடி நடைபெறாததை மத்திய அரசுக்கும் தேர்தல் கமிசனுக்கும் கொண்டு செல்ல இதுவே உகந்த வழி என்றும் போராட்டம் அறிவித்தால் எதிர்கட்சிகளும் உடன் இறங்கும் என்றும் கூறினார்.

'தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல்படி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சகோ. லத்தீப் வெற்றிபெறுவது உறுதி(அத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் என நினைக்கிறேன், வாக்கு வித்தியாசத்தில் சகோ. லத்தீப் தோல்வியடைந்தார்) என்றும் நாம் இப்போது அவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தினால் மத்திய சென்னை தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் அது நமக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே, சமுதாய நலனுக்காக நாம் வாங்கிய அடியைப் பொறுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றபின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகம் திரும்புங்கள்' என சகோ. பிஜேயிடமிருந்து பதில் கிடைத்தது.

களத்தின் நிலவரம் என்ன என்பதை அறியாமல் அவரே ஒரு கற்பனை உலகிலிருந்து கொண்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே என மனம் நொந்து சகோ. ஹைதர் அலி தளர்ந்து போய் அமர்ந்தார்.

அப்பொழுது அவர் கூறிய ஒரு வாசகம்:

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறாகி விட்டது!'

அன்று இறைவன் பாக்கியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஹைதர் அலியுடன் நாங்கள் பெற்றிருந்த அடியினைக் கண்டிருந்த சகோ. ஹைதர் அலி, அலுவலகத்தில் கூறி எங்களுக்கு மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்து தரக் கூறி, அதனையாவது செய்யுங்கள் என்றிருந்தார்.

இப்படிப்பட்ட சகோ. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லாஹ்வைத் தான் இதே சகோ. பிஜே, தனது 'மனம் திறந்த மடலில்' , தன்னலம் பாராமல் உழைக்கும் சேவகர்கள் என்றும் சிறைக்குச் செல்லவும் அடியும் உதையும் கொள்ள தயாரானவர்கள் என்றும் இவர்களைச் சமுதாயம் முழுக்க நம்பலாம் என்றும் ஒருமுறை வானளாவ புகழ்ந்திருந்தார்.

இதனை எல்லாம் நான் இங்கு எடுத்துக் கூற நான் ஒன்றும் தமுமுகவோ அல்லது மமக அனுதாபியோ அல்ல. அன்று தேர்தல் பணிக்குச் சென்றதும் தமுமுகவுக்காக அல்ல. பிஜே அன்று அங்கு இருந்ததால் தான் அவரின் அழைப்புக்குச் செவி சாய்த்துத் தேர்தல் பணியாற்றச் சென்றேன். இதனைப் படிப்பவர்கள் நான் தமுமுகவிற்கு அனுதாபம் தேட இதனைக் கூறுவதாக நினைக்கலாம்.

எல்லாம் இறைவன் அறிவான். நான் நேரடியாக அனுபவப்பட்ட இந்தச் சம்பவத்தில், அன்று ரோட்டில் சமுதாயத்துக்காக ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டவர் தான் இன்று அதே மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.

சகோ. பிஜே நன்றாக மனதில் கை வைத்து யோசிக்கட்டும். நாளை மறுமையில் இதற்கான சாட்சியாக நான் நிற்பேன்.

அன்று பிஜே சொல் கேட்டு அடி வாங்கியவருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கச் சகோ. பிஜே கடமைபட்டுள்ளார். சமுதாய நன்மைக்காகத் தான் துரோகி கருணாநிதியை ஆதரிக்கிறோம் என கதையளக்கும் சகோ. பிஜே, தான் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போகும் சகோதரர் ஒருகாலத்தில் தன் பேச்சைக் கேட்டு சமுதாயத்துக்காக இன்று தான் ஆதரிக்கும் கருணாநிதி+பாஜக கூட்டத்தால் அடி வாங்கியவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்!

(இங்கு நான் குறிப்பிட்டுள்ள விஷயம் பொய் என எந்தத் ததஜ அனுதாபியாவது மாமிசம் உண்ண வருவாரானால், வருவதற்கு முன்னர் ஒருமுறையாவது சகோ. பிஜே அவர்களிடம் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறி உண்மையா?? இல்லையா? என்பதைக் கேட்டு விட்டு வரவும்)

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

Wednesday, April 8, 2009

முஸ்லிம்களிடம் ம.ம.க கட்டாய வசூல் எனவே எதிர்கிறோம். TNTJ அறிவிப்பு!

ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ விர பிரசாரம்:
தவ்ஹீத் ஜ மாஅத்

நன்றி: தினமணி
சென்னை, ஏப். 7: முஸ்லி ம்க ளி டம் கட்டாய வசூ லி ல் ஈடுபட்டு வரும், ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ வி ர பி ரசாரம் செய்வோம் என்று " த மி ழ் நாடு தவ்ஹீத் ஜ மாஅத்' அமைப் பு அ றி வி த்துள்ளது. இது கு றி த்து, செய் தி யா ள ர்க ளி டம் அமைப் பி ன் தலைவர் ஜை னுல் ஆ பி தீ ன் செவ்வாய்க் கி ழமை கூ றி யது:

வரும் நாடாளுமன்ற த் தேர்தலி ல் த மி ழகத் தி ல் தி முக வையும், பு துவை யி ல் காங் கி ரஸ் கட் சி யையும் ஆத ரி க்க பொதுக்குழு கூட்டத் தி ல் மு டி வு எடுக்கப்பட்டுள்ள து. த மி ழகத் தி ல் முஸ்லி ம்க ளுக்கு தி முக அரசு 3.5 சதவீத இட ஒதுக் கீ டு வழங் கி யுள்ள து. 6 மாத காலமா கி யும் இந்த இட ஒதுக் கீ டு முஸ்லி ம்களுக்கு ச ரி வர கி டைக்க வி ல்லை. என வே, தி முக ஆத ரி த்து தீ வி ரமாக பி ரசா ரம் செய்யாமல் அ றி க்கை மூலம் தி முகவுக்கு வாக்க ளி க்குமாறு கோ ரி க்கை மட்டும் வைக்க மு டி வு செய் துள்ளோம். இட ஒதுக் கீ டு அ ளி க்கத் தவ றி ய காங் ரைஸையும், முஸ்லிம்களை மிரட்டும் விடுதலைச் சி றுத்தைகளை யும் ஆத ரி ப்ப தி ல்லை.

" மனிதநேய மக்கள் கட்சி ' முஸ்லிம்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகி ற து. எனவே அக்கட் சி எங்கு போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்வோம்'' என்றார் ஜைனுல் ஆபிதீன்.
நன்றி: தினமணி 08-04-2009

Sunday, March 29, 2009

ம.ம.க தனித்து போட்டியிடும் வாய்பளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.

கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

Tuesday, March 17, 2009

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

செவ்வாய், 17 மார்ச் 2009
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.

"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 'உரிய மரியாதை' கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.

திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).

திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).

இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).

இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் 'உள்குத்து' அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் 'இனிய' பிரச்சாரம் நடக்கலாம்.

போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இ.தே.ம.க.வுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)

இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.

தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!

ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.

"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!

"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)


- நல்லடியார்!