.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, January 23, 2010

வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை பிப்ரவரி வரை நீட்டிப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை இதுவரை பெறாதவர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கு. கலைச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமானம் இதுவரை ரூ. 24 ஆயிரமாக இருந்தது. இது ரூ. 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்காதவர்கள் வரும் பிப்ரவரி 26ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படும் இலவச விண்ணப்ப படிவத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.

பள்ளி இறுதி வகுப்பிற்கு மேலான கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். பதிவுதாரர்கள் தங்களது வேலைவாய்பபு அலுவலகப் பதிவினை நாளது தேதிவரை புதுப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட சான்று, அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் விண்ணப்பதாரரின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 26ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே இத்திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், ஆண்டுக்கு ஒருமுறை சமர்பிக்க வேண்டிய சுய உறுதிமொழி ஆவணத்தை வரும் பிப்ரவரி 26-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணத்தை சமர்ப்பிக்காதவர்களுக்கு தொடர்ந்து உதவித்தொகை வழங்குவது நிறுத்தம் செய்யப்படும்.

பயனாளிகள் அனைவருக்கும் நடப்பு காலாண்டிற்கான உதவித்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காதவர்கள் மேலே குறிப்பிட்ட ஆவணங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

வரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்! தியாகி பென்சனுக்காக அலையும் கான்சாஹிபின் வாரிசுகள்!!

வரலாற்று வீரம்...
''வீரத்தின் ‍பெயர் மருதநாயகம்!''
தியாகி பென்சனுக்காக அலையும் கான்சாஹிபு வாரிசுகள்!
நன்றி ஜூவி

'வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மடிந்த மருதநாயகத்தின் வாரிசான நான் தியாகி பென்ஷனுக்காக 20 வருஷமா மனு போடுகிறேன். இன்னும் பென்ஷன் கிடைத்தபாடில்லை. இனி அலைவதற்கு உடம்பில் திராணி இல்லை. ஆகவே, நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்!' - மதுரையை ஆண்ட கான்சாஹிபு என்ற மருதநாயகத்தின் வாரிசுகளில் ஒருவரான பாபா சாஹிபுவிடமிருந்துதான் நமக்கு இப்படியரு கண்ணீர்க் கடிதம்!

மருதநாயகம் என்கிற வித்தியாசமான மனிதரின் வீர வரலாற்றை நடிகர் கமல்ஹாசன் படமாக எடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நாடறியும். ஆனால், அந்த வீரருடைய வாரிசுகளின் பஞ்சடைந்த பரிதாப வாழ்க்கை யாருக்குத் தெரியும்?

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வசிக்கும் பாபா சாஹிபுவை சந்திக்கச் சென்றோம். மண்ணால் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குக் கொஞ்சம் ஓலையும் கொஞ்சம் தகரமும் சேர்ந்து மேல் கூரையாக இருந்தது. வீட்டுக்குக் கதவுகள் இல்லை; கரன்ட் வசதியும்இல்லை.

'ஜூ.வி-யிலிருந்து வந்திருக்கிறோம்...'' என்றதும் தட்டுத்தடுமாறி எழுந்து வணக்கம் சொன்ன பாபா சாஹிபு, தனது மனக்குறையை மளமளவெனக் கொட்ட ஆரம்பித்தார். 'மொகலாயர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் ஏற்பட்டபோது, வரி வசூலிப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர் கான்சாஹிபு துரை. பிற்பாடு, 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்டதால் அவருக்கு மதுரைநாயகம் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மருதநாயகம் என்றாகிவிட்டது. வரி வசூலில் ஒரு பகுதியை ஆங்கிலேயர்களுக்குக் கப்பமாகச் செலுத்தும் முறை அப்போது இருந்தது. கான்சாஹிப் துரை அதை எதிர்த்து வெள்ளையர்களோடு போரிட்டார். கடைசியில், அவர்களாலேயே தூக்கிலிடப்பட்டார்.

தங்களை எதிர்த்த கான்சாஹிபு போன்றவர்களைக் கொன்று சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டது வெள்ளையர் அரசாங்கம். கான்சாஹிப் துரையின் வாரிசுகளில் எஞ்சியிருப்பது நான் மட்டுமே. எனக்கு 71 வயதாகிறது. என் மனைவி மஹபூர் பியாரி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். நசீராபேகம், சுபேதாரனி என்ற மகள்களும், சிக்கந்தர் பாட்ஷா, ஹீரால்சேட் பாட்ஷா, திவான் பாட்ஷா ஆகிய மகன்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக இவர்களில் யாருக்குமே என்னால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. 42 வயதாகும் என் மூத்த மகள் நசீராபேகம் இப்போது மனநோயாளியாகி விட்டாள். மூத்தவன் சிக்கந்தர் பாட்ஷா வீட்டை விட்டே ஓடிவிட்டான். நுட (எலும்பு) வைத்தியம் பார்த்துப் பிழைப்பு நடத்திய எனக்கும் இப்போது வலது கை விளங்காமல் போய்விட்டது. ஏதோ என் பிள்ளைகளின் சொற்ப சம்பாத்தியத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது...' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பாபா சாஹிபு.

அவர் மகன் திவான் பாட்ஷா நம்மிடம், 'யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். கட்டபொம்மன், மருது சகோதரர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வெள்ளையரை எதிர்த்தவர்கள். கான்சாஹிப் துரையோ மதுரை மண்டலத்தையும் நெல்லை மண்டலத்தையும் சேர்த்து ஆண்டவர். அப்படிப்பட்டவரின் வாரிசை இந்த அரசு ஏன் இப்படி கேவலப்படுத்துகிறது என்றே புரியவில்லை. பென்ஷனுக்காக 1988-ம் ஆண்டிலிருந்து இது வரை கலெக்டர், முதல்வர், ஜனாதிபதி என அதிகாரம் படைத்த அத்தனை பேருக்கும் என் தந்தை மனுப் போட்டு ஓய்ந்து போய்விட்டார். அவற்றுக்கு வந்த பதில்கள் மட்டுமே ஒரு தகரப் பெட்டி நிறைய இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் அக்கா சுபேதாரனி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 வருடமாக தினக்கூலியாக இருக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரை நிரந்தரம் செய்யக்கோரி ரெண்டு வருஷமா போராடுறேன். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான் கடைசியாக ஒரு கடிதத்தை ஜூ.வி-க்கு எழுதச் சொன்னார் அப்பா...'' என்றவர், ''இனிமேலும் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால், நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். அதற்கு முன் தமிழக முதல்வரும், விருதுநகர் கலெக்டரும் எங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்களா?'' என்றபோது பாட்ஷாவின் குரல் உடைந்து போனது!

பென்ஷன் வழங்கும் பணிக்கு பொறுப்பான விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தாவிடம் இது பற்றிக் கேட்டோம். சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கை அழைத்து விவரங்களைத் தெரிந்துகொண்டு நம்மிடம் பேசியவர், 'நேரடியான தியாகிகள் பென்ஷன் என்றால், உரிய விசாரணைகள் மூலம் மாவட்ட நிர்வாகமே வழங்கலாம். சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய வீரர்களின் வாரிசுகளுக்கு என்றால், தமிழக அரசு ஆணை பிறப்பித்தால்தான் ஓய்வூதியம் வழங்க முடியும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உரிய கல்வித் தகுதியும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் இருப்பதாகச் சொல்வதால் சுபேதாரனிக்கு அரசு வேலை வழங்க உடனடியாகப் பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்...'' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும், இது போன்ற தியாகிகளின் வாரிசுகள் பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படுவது யாருக்கு அசிங்கம்?
- கே.கே.மகேஷ்
படங்கள்: கே.குணசீலன்
நன்றி ஜூவி.

Monday, January 18, 2010

வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன் செய்து சாதனை(!)

தமிழக முதல்வர் ஐயா கலைஞர் அவர்களே!
உங்கள் காப்பீட்டு திட்டத்தால் பாதிக்கப்பட்டவர் நீதி கேட்கிறார்!!
நீதி வழங்குங்கள்!!!

'கலைஞர் காப்பீட்டு' திட்டத்தை 'காலனுக்கே கல்தா கொடுக்கும் அற்புதத் திட்டம்...' என்கிறார்கள் ஆளும் கட்சியினர். ஆனால், இந்தத் திட்டத்தை பணம் காய்ச்சி மரமாக நினைக்கும் சில தனியார் மருத்துவமனைகள் செய்யும் அல்லுசில்லுகளுக்கு அளவில்லாமல் போய்விட்டது. மதுரையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏழைப் பெண் ஒருவருக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன் செய்து சாதனை(!) படைத் திருக்கிறார்கள் டாக்டர்கள்.

நம்மிடம் பேசினார் பாதிக்கப்பட்ட பெண்ணான அழகுமீனாளின் கணவர் சந்திரமோகன். ''நானும் என் பொண்டாட்டியும் கட்டட வேலை பார்க்கிறோம்.

எங்களுக்கு மூணு பொண்ணுங்க வளர்ந்து நிக்குதுங்க. மூத்த பொண்ணு பிறவி ஊமை. சித்தாளு வேலையில் கிடைக்குற காசு கஞ்சிக்கே பத்தாட்டியும்கூட, பிள்ளைங்கள எப்படியாவது படிக்க வைக்கணும்னு நிறைய கனவு வெச்சிருந்தோம். ரெண்டு வருஷம் முன்னாடி என் பொண்டாட்டி பஸ்ஸில் ஏறும்போது கால் தவறி விழுந்துட்டா. அப்ப, வலது கால் மூட்டுல மடக்குன்னு சத்தம் கேட்டுச்சு. கவர்மென்ட்டு ஆஸ்பத்திரியில் காட்டுனப்ப, 'மூட்டு ஜவ்வு கிழிஞ்சிருச்சு... ஆபரேஷன் பண்ணணும்'னு சொன்னாங்க. ஆனா, பண வசதியில்லாம தள்ளிப் போட்டுக்கிட்டே இருந்தோம். இப்ப, கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலமா ஆபரேஷன் செஞ்சுக்குறதுக் காக கடந்த 8-ம் தேதி மதுரை விக்ரம் ஆஸ்பத்திரியில என் பொண்டாட் டியை சேர்த்தேன்.

அட்மிஷன் போட்டவுடனே, 'ஆபரேஷன் மட்டும்தான் இலவசம். பெட் சார்ஜ், மருந்து செலவு எல்லாம் 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஆகும். அதுக்காக முதல்ல 5 ஆயிரம் பணத்தைக் கட்டுங்க'னு சொன் னாங்க. வேற வழியில்லாம நானும் அலைஞ்சு திரிஞ்சு கடன் வாங்கி, பணத்தைக் கட்டினேன். ஆபரேஷன் தியேட்டர்ல மூணு மணி நேரம் ஆபரேஷன் பண்ணுன டாக்டர் வெளியே வந்து, 'ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது'னு சொல்லிட்டுப் போனாரு...'' என்றவர் தொடர்ந்து,

''நாங்க உள்ளே போனோம். அப்ப அங்கே வேலை பார்க்குற ஒரு அம்மா உள்ளே வந்து, அழகு மீனாளின் கால் மேல இருந்த போர்வையை விலக்கி பார்த்துட்டு, 'அச்சச்சோ! வலது கால்ல சவரம் பண்ணிட்டு இடது கால்ல ஆபரேஷனை பண்ணிட்டாங்களே...'னு சத்தம் போட்டுச்சு. எங்களுக்கு மூச்சே நின்னுடும் போலிருந்துச்சு. பதறிக்கிட்டு ஓடியாந்த டாக்டருங்க, எங்களை வெளியே அனுப்பிட்டு திரும்பவும் வலது கால்ல ஆபரேஷன் பண்ணுனாங்க. 'அவசரத்துல தப்பு நடந்து போச்சு'னு எங்ககிட்ட ஒப்புக்கிட்டாங்க. 'எதிர்காலத்துல என் பொண்டாட்டி காலுக்கு ஏதாச்சும் பாதிப்பு ஆச்சுன்னா பொறுப்பை ஏத்துகிறோம்'னு நாங்க எழுதிக் கேட்டா, அதையும் கொடுக்க மாட்டேங்கிறாங்க. கலைஞர் போட்ட திட்டம் கைகொடுக்குதேனு சந்தோஷமா வந்தோம். ஆனா, அரசாங்கத்துக்கு கெட்ட பேர் வர்ற மாதிரி இவங்க பண்றாங்க. எங்களுக்கு உரிய நியாயம் கேட்டு கலெக்டர்கிட்ட மனு குடுக்குறதா இருக்கோம். கலைஞர் அய்யா கவனத்துக்குப் போனா நிச்சயம் எங்களுக்கு நீதி கிடைக்கும்...'' என்றார் அப்பாவியாக..!

விக்ரம் மருத்துவமனையின் சார்பில் நம்மிடம் பேசிய டாக்டர் நாராயணசாமி, ''மருத்துவத் துறை விதிமுறைகளின்படி நோயாளியின் விவரங்களைப் பற்றி வெளியே சொல்லக் கூடாது. நடந்த விவரங்களை ஸ்டார் ஹெல்த் இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டோம். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்...'' என்றார்.

எல்லாம் சரி... சிக்கல் இருக்கிற வலது காலை விட்டுட்டு எந்தக் குறையும் இல்லாத இடது காலில் அப்படி என்னதான் ஆபரேஷன் செஞ்சீங்க டாக்டர் சார்..?
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நன்றி ஜூவி...

Saturday, January 16, 2010

முஸ்லிம்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?


பொங்கல் விழா தமிழர் திருநாள் தானே. முஸ்லிம்கள் ஏன் அதை விமரிசையாகக் கொண்டாடுவதில்லை? பலர் இப்படி கேட்பதுண்டு. நமது கொள்கைக் கோட்பாடுகளை நன்கறிந்த ஒரு முஸ்லிமல்லாத கல்வியாளர் நம்மிடம் இவ்வாறு கேட்டார்.

திட்டங்களை அள்ளித் தெளித்து பணங்களை குவித்தது இந்த நிறுவனம்.

பொங்கல் திருநாளின் கோட்பாடுகள் என்ன என்று வினவினோம்.

* அறுவடையாகி வீடு வரும் புது நெல்லில் பொங்கல் செய்து, சுற்றங்கள், நட்புகளுக்கு விருந்தளித்து மகிழ்தல்,

* விவசாயத்திற்கு உதவிகரமான சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல்,

* உறவுகள் வளரும் வகையில் வீர விளையாட்டுகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி சமூக ஒருங்கிணைப்பை உண்டாக்குதல்,

* இவையெல்லாம் பொங்கல் விழாவின் பின்னணிகள் என்றார்.

அப்படிப் பார்த்தால், முஸ்லிம்கள் ஆண்டு முழுவதும் பொங்கல் கொண்டாடி வருகிறோம் என்றோம். அறுவடை நெல் வந்தாலும் வராவிட்டாலும், அண்டை வீட்டாருடன் உணவைப் பகிர்ந்து கொள்வது நபிகள் நாயகம் வலியுறுத்தியுள்ள வழிமுறை.

ஆட்டின் குளம்பைக் கொண்டு குழம்பு வைத்தாலும் சற்று (தண்ணீரை சேர்த்து) அதிகமாக வையுங்கள். அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள் வதற்காக என்று நபிகள் நாயகம் தம் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறியுள்ள செய்தி வரலாற்றில் பதிவாகி யுள்ளது.

சென்னை போன்ற மாநகரங்கள் விவசாயத்திற்குச் சம்பந்தமில்லாத வாழ்க்கை முறைக்கு வழுக்கி விழுந்து விட்டன. கடையில் அரிசி வாங்கி இங்கும் பொங்கல் கொண்டாடப் படுகிறது. ஆனால் இங்குதான், அடுத்த வீட்டில் யார் வசிக்கிறார் என்று அறியாத கூட்டம் வாழ்ந்து வருகிறது.

அடுத்த கிரகங்கள் எல்லாம் அண்டை வீடுகளாகிவிட்ட இந்த அறிவியல் யுகத்தில் அண்டை வீடுகள் நமக்கு வேற்று கிரகங்கள் போல் விலகி விட்டன. இது மிக அவலமான சமூக விபத்து.

“அடுத்த வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறாற உண்பவர் உண்மையான முஸ்லிம் இல்லை'' என்றார்கள் நபிகள் நாயகம். “அண்டை வீட்டார் யார்? என்று கேட்டதற்கு “உங்கள் வீட்டின் இரு மருங்கிலும் உள்ள 40 வீடுகளைச் சேர்ந்தோர் உங்களுக்கு அண்டை வீட்டார்தான்'' என்று நாயகம் விளக்கமளித்தார்கள்.

உணவையும், நல்லுணர்வையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு. அது எல்லா நாளும் தொடர வேண்டும். ஒருநாள் கொண்டாட்டத்தோடு முடிந்து விடாது.

சூரியனுக்கு நன்றியா?

சூரிய ஒளிதான் விவசாயத்திற்கு உதவுகிறது. மாடுகள் உழவுக்குப் பயன் பட்டன. ஆகவே அவற்றிற்கு நன்றி தெரிவிப்பது பொங்கலின் ஓர் அம்சம். நன்றி சொல்வது ஒரு மேன்மை மிகுந்த பண்பு. பழந் தமிழினம் மேன்மையான குணங்கள் நிரம்பிய இனம். ஆயினும் நாம் நன்றி சொல்வதை சூரியனோ, மாடுகளோ விளங்கிக் கொள்வதில்லை.

மாறாக, சூரியனையும், மாடுகளையும் படைத்த உன்னத இறைவனிடம் நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை உணவுக்கும் நன்றி சொல்லக் கடமை பட்டவர்கள் என்று உணர வேண்டும்.

மாடுகளைப் பூட்டி உழவு செய்த காலம் போய் இப்போது ட்ராக்டர் போன்ற கருவிகள் வந்துவிட்டன. மாட்டுக்கு நமது நன்றி புரியும் என்று மாட்டுப் பொங்கல் கொண்டாடினால், இப்போது ட்ராக்டருக்கு கொண்டாட வேண்டும்.

ஆண்டில் ஒருமுறை அறுவடை செய்தபோது தைப் பொங்கல். பலமுறை அறுவடை செய்யும் காலம் இப்போது வேளாண் புரட்சியால் விளைந்திருக்கிறது.
பொங்கலை ஒரு திருநாளாகக் கொண்டாடும் தமிழர்கள், அதன் விழுமி யங்களுக்குத்தான் விழா கொண்டாட வேண்டும்.

நபிகள் நாயகம் இஸ்லாமியப் பெரு நாளில் வீர விளையாட்டுக்களை நடத்தி யுள்ளார்கள். அவை வீரத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் தருவ தாகத்தான் இருக்க வேண்டும். பிற உயிர்களை வதைத்து, இன்பம் காண்பதாக இருக்கக் கூடாது.

பொங்கல் என்பது மதப் பண்டிகை அல்ல, அது ஒரு விழா தான். ஆயினும் முஸ்லிம்கள் அதை விமரிசையாகக் கொண்டாடவில்லை என்ற கூற்றுக்கு சூரிய வழிபாடு போன்ற ஆரியக் கருத்துக்கள் பொங்கலில் ஊடுருவியது ஒரு காரணம்.

பொங்கலை முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்திய நண்பர் இந்துத்துவ வெறியாளர் இல்லை. மதங்களைக் கடந்து மனிதர்கள் ஒன்று பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உள்ளவர்.

முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமைக்கு உடன்பாடுடையவர்கள். பண்டைய வரலாற்றின் பக்கங்களே இன்றைய மக்களுக்கு இதை எடுத்துரைக்கும்.

-ஹாஜாகனி

Monday, January 11, 2010

வாடகை மனைவி! பாகம்2 - நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்..

வாடகை மனைவி!
நடுங்கவைக்கும் விஷக்கலாச்சாரம்!!
தமிழகத்தின் குடும்பயியலை குழிதோண்டி புதைக்கும் இழிகலாச்சாரத்தை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு??
சமூக நலன் கருதி தட்டிக் கேட்க சமுதாய அமைப்புகள் முன் வருமா???
நன்றி ஜூவி

வாயில் குதப்பிய வெற்றிலை, சாயம் போன ஜிப்பா, அக்குளில் ஒரு தோல் பை, அதற்குள் கசங்கிய ஆல்பம்..! இப்படித்தான் சில தமிழ் சினிமாக்களில் நாம் அந்தத் தொழிலின் 'புரோக்கர்'களைப் பார்த்திருப்போம்.

வாடகை மனைவிகளைப் பேசி அமர்த்தும் ஓர் இடைத்தரகரைப் பார்த்தபோது அசந்தே நின்றுவிட்டோம். அவருடைய காரும், பேரும், ஊருமெல்லாம் வேண்டாம். ஆனால், அவர் மீது வீசியது ஹைகிளாஸான வெளிநாட்டு பர்ஃபியூம். அவரே பார்ப்பதற்கு சினிமா ஹீரோ கணக்காக இருந்தார். அவர் கையோடு கொண்டுவந்த 'லேப்-டாப்'பை க்ளிக் செய்தபோது, 'பவர் பாயின்ட் பிரஸன்டேஷன்' பாணியில் அடுத்தடுத்து சில குடும்பத் தலைவிகளின் புகைப்படம் மற்றும் விவரங்கள்.

''நமக்குத் தெரிஞ்ச இன்னொருத்தர், ஃபேமிலி கேர்ள்ஸை அப்படியே வெப் கேமரா முன்னாடி பேசச் சொல்லி, இப்படி அப்படி நடக்கச் சொல்லி, அவங்களோட வீட்டில் ஒரு குடும்பத் தலைவியாக வளைய வர்ற காட்சிகளையும் அப்படியே பதிவு செஞ்சு வெச்சுருவாரு. கஸ்டமர்களுக்கு போட்டுக் காட்டும்போதே ஒருவித 'கிக்' ஆயிடும். வரிசையா பொண்ணு பார்க்கிற மாதிரி வீடு வீடா கூட்டிட்டுப் போயி காட்ட வேண்டாம் பாருங்க. லேப்-டாப் வீடியோவைப் பார்த்து நேரடியா ஒருத்தரை செலக்ட் பண்ணிக்கிட்டா... ஜோலி முடிஞ்சுது, இல்லையா?" என்றார், நாம் சந்தித்த 'லேப்-டாப்'பர்!

எப்படியோ போராடி அப்படியரு லேப்-டாப் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றோம். நம்மையும் ஒரு தொழிலதிபராகவே கூறியிருந்ததால், குறிப்பிட்ட அந்த இடைத்தரகர் வரிசையாக, ஆர்வ மாகப் போட்டுக் காட்ட ஆரம்பித்தார்.

எடுத்த எடுப்பிலேயே கம்பீரமாக காட்டன் புடவை உடுத்தியபடி எதிரில் இருந்த யாரிடமோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்மணியைக் காட்டினார். வீட்டுக்கு வந்திருக்கும் யாரோ ஒரு விருந்தினரிடம் பேசுவதும், இடையில் எழுந்துபோய் அவருக்கு ஒரு தட்டில் பிஸ்கட்கள் கொடுப்பதும் அதில் தெரிந்தது. இன்னொரு அறையிலிருந்து டீக்காக உடுத்தியபடி வெளியில் வந்த மனிதர்40-களில் இருந்தார். ''மேடத்தோட ஹஸ்பெண்ட்..." என்றார் இடைத்தரகர். வெளியில் கிளம்புவதாகச் சொல்லி விட்டுப் புறப்படுகிறார் அந்தக் கணவர். அதோடு காட்சி முடிகிறது.

''இந்த மேடம் ரொம்ப ஹோம்லி, சாஃப்ட்டான டைப்! டெலிகாம்ல நல்ல வேலை. பொதுவா, நார்த் இந்தியாவுல இருந்து வர்றவங்களை மட்டும் மாசக் கணக்குல ரேட் பேசி புக் பண்ணிப்பாங்க. மேடம் ரெகுலரா வேலைக்கும் போய்க்கிட்டு இருப்பாங்க. பிசினஸ் புள்ளிகளுக்கும் இங்கே பகல் நேரத்துல அவங்க வந்த வேலை சரியா இருக்கும்தானே... தினமும் சாயங்காலம் ஆனா தன்னோட சொந்த வீட்டுக்கு வர்ற மாதிரியே மேடம் வீட்டுக்குப் போயிடுவாரு!" என்று விவரித்துக்கொண்டே போனார் இடைத்தரகர்.

யார் பார்த்தாலும் சட்டென்று தப்பாகவே தெரியாத வண்ணம் அந்த சாம்பிளை எடுத்திருப்பது புரிந்தது. அந்த வீட்டையும் தனி க்ளிப்பிங்காக வைத்திருந்தார். ''தங்குறவங்களுக்கு வீடும் புடிக்கணுமில்லையா?" என்று கேட்டு அயர வைத்தார் நம்மை!

வீடியோ காட்சியில் விரிந்த அந்த வீட்டின் வாசலில்... குட்டை குட்டையான குரோட்டன்ஸ் செடிகள் அழகாய் வெட்டப்பட்டிருக்க, பெயர் தெரியாத ஏதோ ஒரு பூச்செடிகள் நீல நிறத்தில் அந்த வீட்டின் சுற்றுப்புறத்தை அழகாக்கி வைத்திருந்தன. கேமரா அப்படியே உள்ளே நுழைய, வீட்டு ஹாலின் நடுநாயகமாக ஒரு உருளியில் அழகான ரோஸ் நிற செம்பருத்திப் பூக்கள் நீரில் பரப்பப்பட்டிருக்க, உருளிக்கு அருகில் கலைநயமிக்க சின்ன டேபிளில் மரத்தாலான நர்த்தன விநாயகர் சிலை!

இப்படிப் போகிற அந்தக் காட்சியிலும் வக்கிரமாக எதுவுமே இல்லை.

''இந்த மேடத்தோட ஹஸ்பெண்ட் பார்த்தீங்களே... அவரும் கோவை பக்கத்துல ஒரு காலேஜ்ல லெக்சரரா இருக்கார். கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் குழந்தை இல்லை. முதல்ல இவங்க டிபார்ட்மென்ட்ல ஒரு சின்னப் பையனோட பழக்கம் வந்துச்சு. ஹஸ்பெண்ட் கண்டிச்சாரு போல. பெரிசா சண்டை ஆயிடுச்சு. மேடம் பிரிஞ்சு போயிட்டாங்க. ஊர் உலகத்துக்கு பயந்து லெக்சரரே போயி மேடத்தைத் திரும்பவும் கூட்டிவந்து வச்சுக்கிட்டாரு. அதுக்கப்புறம்தான் மெதுமெதுவா இன்னொரு லேடி மூலமாக நமக்கு அறிமுகம் ஆனாங்க. புருஷன்-பொண்டாட்டி ரெண்டு பேருமே சீக்கிரமா ஒரு அண்டர்ஸ்டாண்டிங்குக்கு வந்துட்டாங்க. சும்மாங்களா... போன வருஷம்கூட ரெண்டு பேருக்கும் ஃபுல்லா யூரோப் டூருக்கு நம்ம கஸ்டமர் ஒருத்தரே ஏற்பாடு பண்ணாருங்களே..!" என்று சிரித்தார் இடைத்தரகர்.

நமக்குத் தடதடவென்று உடம்பு உலுக்கிப் போட்டது. அப்படியரு முகம்... அப்படியரு நடை உடை பாவனையில்... 'இவர்களா இப்படி!' என்ற படுகௌரவத் தோற்றத்தில் இருந்தார்கள் அந்தப் பெண்மணியும் கணவரும்.

இதே போன்ற பிசினஸில் சில மாதங்கள் இருந்து விட்டு, தற்போது அது பிடிக்காமல் ஒதுங்க நினைக்கும் ராஜன் என்பவரையும் நாம் இதே லிங்க்கை வைத்து சந்தித்தோம்.

கரூர் காந்தி கிராமத்தில் உள்ள ஒரு பெண்மணியின் கதையை அவர் சொன்னபோது, வேதனையாக இருந்தது.

''கரூர் பக்கத்துலதான் அதோட ஊர். அப்பா கிடையாது, அம்மா மட்டும்தான். அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துபோகவும் சித்தி வீட்டுல இருந்துதான் டிகிரி முடிச்சிது. அப்பத்தான் பஸ்ல போறப்ப, வர்றப்ப ஒரு பையனை பார்த்து லவ் பண்ணியிருக்கு. வீட்டை விட்டு வெளியே வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. பனியன் கம்பெனியில சூபர்வைஸரா மாசம் நாலாயிரம் சம்பளம் வந்துச்சு அந்தப் பையனுக்கு. அதை வெச்சு எதுவுமே செய்யமுடியாத நிலையில்தான் தன்கூடப் படிச்ச கோயம்புத்தூர் பொண்ணு ஒருத்தி மூலமா இந்த விஷயம் தெரிஞ்சுகிட்டு, அப்ரோச் பண்ணுச்சு. இப்ப அது ரேஞ்சுக்கு மாசம் குறைஞ்சது இருபதாயிரம் ரூபாயாச்சும் கிடைக்குது!" என்றவரிடம், ''காதல் கணவர் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்?" என்றோம்.

''காதல் - கத்தரிக்காயெல்லாம் கல்யாணம் ஆன கொஞ்ச காலத்துக்குதான் சார். அதுக்கப்புறம் ஒவ் வொரு ஆம்பளைக்குள்ளே இருக்கிற ஒவ்வொரு மைனஸா வெளியில வருது. இந்த பையன் செமத்தியா குடிப்பான் போல. காசு கிடைக்குதுன்னதும் மெதுமெதுவா புரிஞ்சு, அமைதியாயிட்டான்! கான்ட் ராக்ட்ல தங்குற ஆளுங்க வீட்டுக்குள்ள இருக்கிற நேரத்துல, தண்ணியடிச்சிட்டு வந்து தகராறு பண்ணக் கூடாது... அது மட்டும்தான் அவனுக்கு கண்டிஷன்!" என்றார் ராஜன் சாதாரணமாக!

இந்த விவகாரம் குறித்து நமக்கு முதல் க்ளூ கொடுத்த, கடந்த இதழில் கட்டுரையின் ஆரம்பத்தில் நம்மோடு பேசிய கோவிந்தன் என்ன சொல்கிறார்?
''எங்க டிரஸ்ட் சார்பா நாங்க கள ஆய்வு செஞ்சப்ப - காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய நகரங்களில்தான் இந்த 'வாடகை மனைவி' கலாசாரம் படுவேகமாகப் பரவுவது புரிந்தது. இந்த நகரங்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொழில்துறை வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டவை. வெளி மாநில ஆட்கள் வந்து வாரக்கணக்கில், மாதக்கணக்கில் தங்கி தங்கள் பிசினஸை கவனிக்கும் இடங்கள். இந்த நகரங்களில் வசிக்கும் ஒரு சில வில்லங்க விபசார புரோக்கர் களின் புத்தியில் உதித்ததுதான் இந்த 'வாடகை மனைவி' கான்செப்ட். இந்த ஊர்களில் இருக்கும் விபசார புரோக்கர்கள் பணத் தேவையிலோ, பணத்தாசையிலோ உள்ள தம்பதியை வெகு அழகாகப் பேசி இதற்கு வளைக்கிறார்கள்.

பெரும்பாலும், பெண்களை மட்டுமே முதலில் சந்திக்கும் இந்த கும்பல், தங்களது ஆசை வலையை பக்குவமாக விரிக்கும். சிக்குபவர்கள் முதலில் கணவருக்குத் தெரியாமல்தான் இதில் இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில் விஷயம் தெரியும்போது, குடும்ப மானத்துக்கு பயந்து சகித்துக்கொள்ளும் முடிவுக்கு வரும் கணவர்கள், காலப்போக்கில் இதை வருமான வழியாகவே பார்க்க ஆரம்பித்து, முற்றிலுமாக சும்மா இருந்துவிடுகிறார்கள். சம்பந்தப்பட்ட பெண் மட்டுமின்றி, அவருடைய கணவரும் பிசினஸ் புள்ளியை நேரில் பார்த்துப் பேசி சம்மதித்தால்தான் 'கான்ட்ராக்ட்' ஓகே ஆகும் என்கிற இடங்கள்கூட உண்டு!" என்ற கோவிந்தன்,

''இரண்டு காரணங்கள்தான் இந்த கலாசாரச் சீரழிவுக்கான காரணிகள். ஒன்று... மாறிவிட்ட நமது கலாசாரப் பழக்கவழக்கம். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும் நம்மில் பலர், குடும்ப தாம்பத்ய விஷயத்திலும் மெள்ள மெள்ள மேற்கத்திய நாகரிகத்துக்கு மாறத் தொடங்கியிருக்கிறோம் என்பதுதான் வேதனையான உண்மை.

இன்னொரு காரணம்... அளவுக்கதிகமான பணத்தாசை. முன்பெல்லாம் வீடுகளில் ஒரு டி.வி. இருப்பதே அதிசயமாக இருக்கும். இப்போது ரூமுக்கு ஒரு டி.வி. என்றும் சின்ன கார் - பெரிய கார் என்று இரண்டு கார் இருக்க வேண்டும் என்றும் நடுத்தரக் குடும்பங்களே ஆசைப்படுகிற நிலைமை வந்துவிட்டது. அஞ்சாமல் கடன் வாங்குவது... அடைக்க முடியாமல் சிக்கித் தவிப்பது என்று பாடாய்ப் படும் குடும்பங்களைத்தான் இடைத்தரகர்கள் சுலபமாக இனம் கண்டு வளைக் கிறார்கள்.

இதெல்லாம் போக, 'பாதுகாப்பான உறவு' என்று சொல்லித்தான் பிசினஸ் புள்ளிகளை இந்த கான்ட்ராக்ட் விவகாரத்தில் வீழ்த்துகிறார்கள். ஆனால், ஹெச்.ஐ.வி. வராது என்ற உத்தரவாதம் இங்கும் கிடையாது. இவர்களுக்கெல்லாம் இதன் பாதிப்பு இப்போது தெரியாததால், விஷயம் பெரிதாக வெளியே வரவில்லை. இன்னும் நாலைந்து வருடங்கள் கழித்து இந்த பாதிப்பை உணர்ந்து, அப்போது அலறுவார்கள்.

இதன் விபரீதங்களை உணர்ந்து, இந்த மாதிரியான 'வாடகை மனைவி' கலாசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், அவர்களாகவே அதை விட்டு விலக வேண்டும். அரசாங்கமும் இந்த விபரீதத்தைக் கண்டுபிடித்து, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் கவுன்சிலிங்குகளை வழங்க வேண்டும். பாலியல் தொழில் செய்வோருக்குத் தரப்படுகிற எல்லாவிதமான விழிப்பு உணர்வையும் இது போன்ற பெண்களுக்கும் தந்தாக வேண்டும். இந்தக் கலாசாரச் சீரழிவை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால்... அது நினைத்துப் பார்க்கமுடியாத விபரீதங்களில் போய் முடியும்!" என்றார் கோவிந்தன்.
நன்றி: ஜூனியர் விகடன்
-மு. தாமரைக்கண்ணன்
படங்கள்: என்.ஜி. மணிகண்டன்

Saturday, January 9, 2010

வெட்டுப்பட்டு ரத்தம் சொட்ட உயிருக்குப் போராடும் காவல் அதிகாரி!! வேடிக்கை பார்க்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள்!!!

செத்துவிட்ட மனிதாபிமானம்!

வெட்டுப்பட்டு ரத்தக்காயங்களுடன் உயிருக்குப் போராடிய ஒரு காவல் அதிகாரியை உரிய ‍நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!!

அணிவகுத்து நிற்கும் வாகனங்களுடன் வேடிக்கை பார்க்கும் சுகாதரத்துறை அதிகாரிகள்!!!






படுகொலை! அந்தக் கடைசி நிமிடம்... வீடியோவை காண இங்கே சொடுக்கவும்.
நன்றி: தினமலர்

திருநெல்வேலி : நெல்லையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிய எஸ்.ஐ., வெற்றிவேலை காப்பாற்ற ஆம்புலன்சுக்காக அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். தங்களுடன் வந்த வாகனம் ஒன்றில் முதலிலேயே எஸ்.ஐ.,யை மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சிக்கவில்லை.


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ., வெற்றிவேல்(43), நேற்று முன்தினம் ஆம்பூர் அருகே ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டியும், வெடிகுண்டுகள் வீசியும் கொலை செய்யப்பட்டார். சுகாதாரத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சுற்றுச்சூழல் அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் வழியில் ஆம்பூர் அருகே இந்த கோர சம்பவம் நடந்தது. அமைச்சர்களுடன் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் குற்றவாளிகளை துரத்திச்சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியும் அவர்கள் தப்பிவிட்டனர். எஸ்.ஐ., வெற்றிவேல் வெட்டுக்காயங்களுடன் நடுரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அமைச்சர்கள், கலெக்டர் ஜெயராமன், சுகாதார உயர் அதிகாரிகளுடன் அத்தனை வாகனங்கள் இருந்தும், 108 வாகனம் வருவதற்காக காத்திருந்தனர்.


தன்னை காப்பாற்றும்படி கைகளை தூக்கி வெற்றிவேல் மன்றாடினார். அமைச்சர் பன்னீர் செல்வத்தின் உதவியாளர், தண்ணீர் பாட்டிலை அவரிடம் நீட்டினார். வெற்றிவேல் கையை நீட்டவும், அவரின் ரத்தம் தன் மீது பட்டுவிடுமோ என உதவியாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர். நடுரோட்டில் இரண்டு முறை எழ முயற்சித்தும் முனகல் சத்தத்துடன் முடியாமல் வெற்றிவேல் வீழ்ந்தார். அவரின் உயிர் போராட்டம், பார்த்தவர்களை சங்கடப்படுத்தியது. வெற்றிவேல் பிற்பகல் 2.40 மணிக்கு வெட்டப்பட்டார். 20 நிமிடங்களுக்கு பிறகே அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனத்தில் அவர் கொண்டுசெல்லப்பட்டார். சிறிது தூரம் சென்றபின், எதிரே வந்த ஆம்புலன்சில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்! சிகிச்சைக்கு லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள்!! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!!!

மதுரை : மதுரை அரசு மருத்துவமனை ஆப்பரேஷன் தியேட்டரில், எச்.ஐ.வி., பாதித்த பெண்ணுக்கு, பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால், தனக்குத் தானே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அந்த பெண். இதுகுறித்து விசாரிக்க டீன் சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முத்து, விஜயா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) தம்பதி. எய்ட்ஸ் நோயாளிகளான இவர்கள், மதுரையில் கட்டட தொழிலாளர்களாக உள்ளனர். பெண் குழந்தை உள்ள நிலையில், விஜயா மீண்டும் கர்ப்பமானார். அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து கொண்டார். ஜன.,5 இரவு 1 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆப்பரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு டாக்டர்கள், நர்சுகள் இல்லாத நிலையில், ஆண் குழந்தை வெளியே வர ஆரம்பித்தது. விஜயாவின் அலறல் சத்தம் கேட்டு யாரும் வரவில்லை. ஆப்பரேஷன் டேபிளில் இருந்து கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தையை தானே வெளியே எடுத்தார். பதினைந்து நிமிடங்களுக்கு பின், அங்கு வந்த மருத்துவ மாணவி, தொப்புள் கொடியை "கட்' செய்துவிட்டு, மருந்து கொடுத்துவிட்டு சென்றார். "ஆண் குழந்தை பிறந்துள்ளதால், 1500 ரூபாய் தரவேண்டும்' என்று பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதற்கு, விஜயா தர மறுத்தார். இதனால், தொற்றுநோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக அறையில், அவருக்கு படுக்கை ஒதுக்கப்படவில்லை. ஜன.,6 மதியம் 12 மணி முதல் நேற்று முன் தினம் வரை மகப்பேறு வராண்டாவில், கொட்டும் பனியில் பச்சிளம் குழந்தையுடன் விஜயா தங்கினார்.


நமது நிருபரிடம் அவர் கூறியதாவது: மருத்துவமனையில் பணம் கொடுத்தால்தான் எல்லா வேலையும் நடக்கிறது. "உனக்கெல்லாம் எதற்கு குழந்தை. "பெட்' கொடுக்க முடியாது. வெளியேறு' என, என்னை ஊழியர்கள் துரத்தினர். இங்கு பிறந்ததற்கு ரிக்கார்டு வேண்டும் என்பதற்காக, வெளியே செல்லாமல் வராண்டாவில் தங்கினேன். எந்த ஆவணமும் இன்றி வெளியேறினால், "திருட்டுக் குழந்தை' என்று சொல்லிவிடுவர், என பயந்துதான் அங்கேயே இருந்தேன். ஆனால், நான் தலைமறைவாகி விட்டதாக, வார்டு பதிவேட்டில் குறித்துள்ளனர், என்றார்.

எய்ட்ஸ் நோயாளிகளுக்கான மதுரை நெட்வொர்க் ஆப் பாசிட்டிவ் பீப்பிள் வெல்ப்பேர் சொசைட்டி அமைப்பு தலைவர் பாபு கூறியதாவது : கடந்த 2006ல் எனது மனைவிக்கும் இதே நிலைதான் ஏற்பட்டது. இன்று வரை நிலைமை மாறவில்லை. காயம்பட்ட மருத்துவமனை ஊழியரைக்கூட ஸ்டிரெச்சரில் அழைத்துச் செல்ல, சக பணியாளர்கள் லஞ்சம் கேட்கும் நிலையில் மருத்துவமனை உள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ள நிலையில், விஜயாவுக்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள், நர்சுகள் தயங்கியுள்ளனர். இப்பிரச்னை குறித்து மதியம் நிலைய மருத்துவ அதிகாரியிடம் புகார் கூறச் சென் றோம். ஆனால், அவர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள வீட்டில் தங்காமல், வெளியே தங்கியிருந்ததால் புகார் செய்ய முடியவில்லை. டீனும் அறையில் இல்லை. எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள். இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், மருத்துவமனை முன்பு எய்ட்ஸ் நோயாளிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம், என்றார்.


இதுகுறித்து டீன் சிவக்குமார் கவனத்திற்கு நமது நிருபர் கொண்டு சென்றார். உடனடியாக விஜயாவிடம் விசாரித்த அவர், ""சம்பந்தப்பட்ட டாக்டர்கள், நர்சுகளிடம் இன்று விசாரணை நடத்தப்படும்'', என்றார். மருத்துவமனையில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுக்காதவரை, இதுபோன்ற மனிதாபிமானற்ற செயல்கள் தொடரும் என்பது உண்மை.


விசாரணையின் போது அதிர்ச்சி: விஜயாவிடம் டீன் சிவக்குமார் விசாரித்துக் கொண்டிருந்த போது, இருதய நோயாளியின் உறவினர்கள் இருவர் வந்தனர். "ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்த நிலையில், ஊசி ஒன்று போட வேண்டும். அந்த மருந்து இங்கு இல்லை. வெளியே வாங்கினால் விலை 6000 ரூபாய். அந்த மருந்து எங்களிடம் உள்ளது. 3000 ரூபாய்க்கு கிடைக்கும்' என இரு நர்சுகள் லஞ்சம் கேட்டதாக புகார் கூறினர். அதிர்ச்சியடைந்த டீன், இதுகுறித்து விசாரிக்குமாறு நர்சு கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நன்றி: தினமலர்

Thursday, January 7, 2010

வாடகை மனைவி! தமிழகத்தில் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரம்.

வாடகை மனைவி! இதயத்தை நொறுக்கும் ஒளிப்பதிவு ஆதாரங்களுடன்....
பதறச் செய்யும் ஒரு விஷக் கலாச்சாரம்.

நன்றி: ஜூனியர் விகடன்

ஜனவரி... 3-ம் தேதி....

திருச்சி, உறையூரில் குறுக லான தெருவில் இருக்கிறது, அந்த பழங்காலத்து வீடு..!

துருப்பிடித்த இரும்பு கிரில் கதவு... திறக்கும்போதே கிறீச்சிடுகிறது. அதைக் கேட்டதுமே உள் வாசல் கதவு மெதுவாய் திறக்கிறது.

ஏற்கெனவே சொல்லி வைத்திருந் ததால் அதிகம் அறிமுகப் பேச்சு இல்லை!

''வாங்க, வணக்கம்!'' என நம்மையும், நம்மை கூட்டிச் சென்ற தொழிலதிபரையும் கைகூப்பி வரவேற்கிறார், அந்தக் குடும்பத் தலைவி. வீட்டுக்குள் நுழைந்த சில மைக்ரோ செகண்டுகளில் நம் கண்கள் உள்ளே அளவெடுக்கின்றன.

எப்போதோ அடித்த டிஸ்டம்பர் பெயின்ட் பாதிக்குமேல் உதிர்ந்து வெளிறிய சுவர்கள்... ஒரு ஹால், இரண்டு படுக்கையறை, சமையலறை..! ஹாலில் நான்கு ஃபைபர் சேர்கள் கிடக்க, புத்தம் புது எல்.ஜி. டி.வி--யில் ஏதோ பாடல் காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

டி.வி.டி. பிளேயர், ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று மேல்நடுத்தர வர்க்கத்துக்கான வசதிகளைக் கொண் டிருந்தாலும், அது ஒரு வாடகை வீடு என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருக்கிறோம். 'வீடு மட்டு மல்ல... நம்மை வரவேற்கும் அந்தக் குடும்பத் தலைவியே ஒரு வாடகை மனைவிதான்...' எனும்போது வாசகர்களுக்கு எப்படி தீயை மிதித்தாற்போல் இருக்கும் என்று புரிகிறது. விவகாரத்தை முதலில் கேள்விப்பட்டபோது அதே உணர்வு தான் நமக்கும்.

'மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறுவதாக நாம் இதுவரை கேள்விப்பட்டிருந்த அதே விபரீத கலாசாரம், தமிழ்நாட்டுக் குள் காலடி வைத்துவிட்டது' என்று கோவிந்தன் சொன்னபோது, முதலில் நாம் நம்பவில்லை. ஆனால், துளிகூட ஜீரணிக்க முடியாவிட்டாலும் உண்மை அதுதான்!

''ஒரு மாதம், இரண்டு மாதம் என்று தொழில் நிமித்தமாக ஊர் மாறி, மாநிலம் மாறி தமிழகம் வரும் பல தொழிலதிபர்களுக்கு 'விழிப்பு உணர்வு' கூடிப் போயிருக்கிறது. ஹெச்.ஐ.வி-க்கு இரையாவதற்கோ, தினம் தினம் ஒரு பெண்ணைத் தேடிப் போய்க் கொண்டிருக்கவோ அவர்களில் பலருக்கு இஷ்டமில்லை. அதுவும் தவிர, அழகான ஒரு குடும்பத்துக்குத் தலைவியா இருக்கிற பெண்களை - கௌரவமான ஒரு உத்தியோகம் பார்க்கிற நடுத்தர வயது இல்லத்தரசிகளை - மொத்தமாக சில நாட்கள் தங்களுக்கே தங்களுக்கு என்று வைத்துக் கொள்வதில் அவர்களுக்குத் தனியாக ஒரு கிக் இருக்கிறது. பேசிய அமவுன்ட்டை கொடுத்துவிடுகிறார்கள். இவர்களைச் 'சேர்த்து'விடுபவர்களையும் 'புரோக் கர்' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது...'' என்று கோவிந்தன் கொடுத்த அறிமுகத் திலேயே, நம் தலை தட்டா மாலை சுற்றியது.


கோவிந்தன்..?

திருச்சியில் 'லைட் டிரஸ்ட்' என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார் இவர்.

''மலைப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வேலைத் திட்டங்களில் ஈடுபடுவதுதான் எனது டிரஸ்டின் வேலை. இதற்காக வேலூர் மலைப் பகுதிகளில், சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் என தமிழகத்தின் பல்வேறு மலைப்பிரதேசங்களிலும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி களுக்கு அடிக்கடி சென்று வருவது என் வழக்கம். அப்படி ஒருமுறை காஞ்சிபுரத்துக்கு சென்றபோதுதான் 'வாடகை மனைவி' என்ற பயங்கரத்தை முதலில் கேள்விப்பட்டேன். கணவர், குழந்தைகள், மற்றும் புகுந்த வீட்டுச் சொந்தங்களுடன் ஒரு சராசரி இல்லத்தரசியாகவே வாழும் சில பெண்கள், மாதக் கணக்கில் வேறொருவருக்கு மனைவி யாகப் போய் வாழ்ந்துவிட்டு, கான்ட்ராக்ட்(?) காலம் முடிந்தவுடன் பழையபடி தங்கள் வீட்டுக்கே வந்து சேர்ந்து, வழக்கமான குடும்ப வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் என்பதை சாட்சிகளுடன் உறுதி செய்துகொண்டபோது, கிட்டத்தட்ட நடுங்கிப் போய்விட்டேன்!

இந்த பயங்கரத்தின் அடி ஆழம் வரைக்கும் சென்று பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் எனது டிரஸ்ட் ஊழியர்கள் சிலருடன் களத்தில் இறங்கினேன். முதலில் காஞ்சிபுரத்தில் ஒரு புரோக்கரின் உதவியுடன் ஒரு வாடகை மனைவியை சந்தித்தோம். அந்தப் பெண்

காஞ்சிபுரம் பக்கமுள்ள ஒரு டீச்சர் டிரெய்னிங் இன்ஸ்டிட்யூட்டில் லெக்சரராக இருந்தார். புரோக்கர், அந்தப் பெண்ணின் வீட்டுக்கே நேரடியாக என்னை அழைத்துச் சென்றார். குடும்பப்பாங்கான அழகும், அடக்கமும், லேசான மிரட்சியும் கொண்டிருந்த அந்தப் பெண்ணை அவர் வீட்டிலேயே போய், அவருடைய புகுந்த வீட்டு சொந்தங்களுக்கு மத்தியில் 'கான்ட் ராக்ட்'டுக்குப் பேச முடிந்தது.

வறுமைக்காக வழி தவறிப் போகிற பெண்களை நாம் பார்த் திருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்ணின் வீட்டு சூழலைப் பார்த்தபோது, நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தை நடத்துவதற்கு அங்கே எந்தக் குறையும் இருக்கிற மாதிரி தெரியவில்லை. என்னை அந்தப் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு புரோக்கர் கிளம்பி விட்டார். காபி கொண்டுவந்து கொடுத்தவர், எடுத்த எடுப்பிலேயே 'என்னைப் பிடிச்சிருக்கா?' என்று ஏதோ பெண் பார்க்க வந்தவரிடம் கேட்பதுபோல் விசாரிக்கவும்... தூக்கி வாரிப் போட்டது. மேற்கொண்டு பேசப் பேசத்தான் இந்த பகீர் கலாசாரத்தின் நெட்வொர்க் தமிழ் நாட்டில் எந்தளவுக்கு விரியத் தொடங்கியுள்ளது என்று புரிந்தது...'' -சொல்லி நிறுத்திய கோவிந்தன்...

''அதையெல்லாம் உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு முன், ஒரு கான்ட்ராக்ட் எப்படி முடிவாகிறது என்பதை நீங்களே கண்ணால் பார்த்துவிட்டு வாருங்கள். அப்போதுதான் இதன் முழுப் பரிமா ணத்தைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்று, சில ஏற்பாடுகள் செய்து நம்மை அனுப்பி வைத்தார்.

வாடகை மனைவிக்கான 'தேடலு டன்' திருச்சிக்கு வந்திருந்த ஒரு சென்னைத் தொழிலதிபருடன் ஏதோ 'மாப்பிள்ளைத் தோழன்' ரேஞ்சுக்கு நம்மையும் கோத்துவிட்டார் அவர். நம் வசம் உள்ள ரகசிய கேமராவில், ஒவ்வொரு நொடியும் காட்சிகளோடு சேர்ந்து பதிவாகிறது என்பது தொழில திபருக்குத் தெரியாது. முப்பது வயது மதிக்கத்தக்க அந்த குடும்பத் தலை வியும் அதை அறியார்!

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தலையெடுக்கத் தொடங்கியிருக்கும் ஒரு விபரீத விஷக் கலாசாரத்தின் சாட்சியாக அந்த வீட்டுக்குள் நடப் பதை வாசகர்கள் நம்மோடு சேர்ந்து அமைதியாகக் கவனிக்கவும். இன்னும் அதிர்ச்சிகரமான ஆதாரங்களுடன், பின்னணிகளை பிறகு பார்ப்போம் -

குடும்பத் தலைவி: (மெல்லிய குரலில்) வாங்க....உக்காருங்க....

தொழில் அதிபர்: வணக்கங்க!

குடும்பத் தலைவி: தண்ணீ குடிக்கிறீங் களா?

தொழில் அதிபர்: ம்....குடுங்க...

கு.த: இந்தாங்க.... (சமையலறைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து தருகிறார்).

தொ.அ: தாங்க்ஸ்ங்க... நீங்களும் உக்கா ருங்க!

கு.த: இப்பதான் வர்றீங்களா?

தொ.அ: ஆமாம்... (ஒரு பெயரைச் சொல்லி) உள்ள வரமாட்டேன் னுட்டார். வாசல்லயே அப்படியே கிளம்பிட்டார்.

கு.த: ஆமாம்.... எப்பவுமே அவரு போயிடுவாரு....

தொ.அ: சொந்த வீடா இது...

கு.த: இல்லீங்க, வாடகை வீடு.

தொ.அ: உங்க பேருங்க..?

கு.த: (பெயரைச் சொல்கிறார்).

தொ.அ: நான் யாருன்னு சொன் னாரா?

கு.த: ம்....ஒண்ணும் சொல்லலை.

தொ.அ: என் பேரு ...... (சொல்கிறார்!). நான் சென்னை. மெடிக்கல் லைனுல இருக்கறேன். அடிக்கடி திருச்சி வருவேன்.

கு.த: ஓ, அப்படியா...

தொ.அ: மேரேஜ் ஆயிடுச்சா, உங்களுக்கு?

கு.த: ம்....ஆயிருச்சு.

தொ.அ: அப்படியா, ஹஸ்பெண்ட் என்ன பண்றாங்க?

கு.த: ஒரு பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்றாங்க.

தொ.அ: என்னவா..?

கு.த: சும்மா... கம்பெனியில ஒர்க் பண்றார்...

தொ.அ: சரி, சரி.. குழந்தைங்க இருக் குதா..?

கு.த: ஒரு பையன்... ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறான்.

தொ.அ: எத்தனை வருஷம் ஆச்சு கல்யாணமாகி?

கு.த: ஏழு, எட்டு வருஷம் ஆச்சு

தொ.அ: அவரு உங்களோட சொந்தக்கார பையனா?

கு.த: ஆமாம்...

தொ.அ: நீங்க வேற எங்கயும் ஒர்க் பண்றீங்களா?

கு.த: இல்லீங்க... நான் ஹவுஸ் ஒய்ஃப்தான்.

தொ.அ: வீட்டுலதான் இருக்கீங்க.... ம்... என்ன படிச்சிருக்கீங்க?

கு.த: (சின்ன தயக்கத்துடன்) டுவெல்த் வரைக்குந்தான்....

தொ.அ: ஏன்.... டிகிரி போக லையா?

கு.த: ம்ஹ§ம்... படிக்கலை!

தொ.அ: ............தான் சொன்னாரு, எனக்கு எல்லா மேட்டரும்...

கு.த: ம்ம்ம்ம்...

தொ.அ: நான் எப்ப திருச்சி வந்தா லும் எங்கயாவது போறதுண்டு! அதான் அவர்கிட்ட(?)கேட்டேன். அவர் சொன்னாரு... இந்த மாதிரி இருக்காங்கன்னு! உங்களுக்கும் ஒண்ணும் பிரச்னை இருக்கா துன்னு சொன்னார்! அதான் பார்க் கலாம்ன்னு வந்தேன். ஆல்ரெடி நாலஞ்சு டைம் அவரு ஆபீஸுக்கு நீங்க வந்துருக்கீங்க. அப்ப நான் அறிமுகப்படுத்திக்கலை. பேசலை... ஆனா உங்களைப் பார்த்திருக்கேன்.

கு.த: ஓ... அங்கேயே பார்த் திருக்கீங்களா..!

தொ.அ: ஆமாங்க. நீங்க எவ்ளோ வாங்கறீங்க?

கு.த: 25,000 ரூபாய்.

தொ.அ: மாசத்துக்கு தானே?

கு.த: ம்.. மாசத்துக்குதான்.

தொ.அ: ஓ.. நான் இப்ப 25,000 ரூபாய் குடுத்துட்டா, நான் சொல்ற அந்த ஒன்மன்த்துக்கு வேற எங்கயும் போக மாட்டீங்க தானே...?

கு.த: வேற எங்கயும் போக மாட்டேன்.

தொ.அ: எப்படிங்க.... நான் வீட்டுக்கு வரணுமா? இல்லாட்டி நீங்க வெளியே வருவீங்களா?

கு.த: வெளியவும் வருவேன். நீங்க வீட்டுக்கும் வரலாம். ஒண்ணும் பிரச் னையில்லை.

தொ.அ: வீட்டுக்குன்னா? வீட்டுல குழந்தை..?

கு.த: என்னைப் பொறுத்தவரைக்கும் குழந்தை இல்லாத நேரத்துலதான் வரமுடியும். ஏன்னா, பையன் ஸ்கூலுக்கு போயிடுவான். எயிட் டு ஃபோர் ஓ கிளாக் அவன் போயிடு வான். டியூஷனுக்கும் இடையில போயிடுவான். 4 மணிக்கு மேல, அந்த நேரத்துல ஆள் இல்லாத நேரத்துலயும் நீங்க வந்து போய்க்கலாம்.

தொ.அ: (நீண்ட மௌனத்துக்குப் பிறகு) ஓ!

கு.த: குழந்தை இல்லாத நேரம் போக, மத்தபடி வீட்டுக்காரர் இருக் கறப்பகூட வரலாம்.

தொ.அ: அப்படியா... வரலாமா? அவருக்குத் தெரியுமாங்க எல்லாம்?

கு.த: அவருக்குத் தெரி யுங்க.

தொ.அ: அவரு ஒண்ணும் சொல்ல மாட்டாரா?

கு.த: எல்லாம் அவருக்குத் தெரியும். ஒண்ணும் சொல்ல மாட்டாரு.

தொ.அ: என்னங்க சொல்றீங்க..? பிரச்னை எதுவும் வந்துறாதா? நான் இங்க இருக்கற நேரம் அவரு வந்து ஏதாவது ரசாபாசம் ஆகிடப் போகுது...

கு.த: இல்லை... இல்லை... அந்த ஒரு மாசத்துக்கு நீங்க 'பே' பண்ணிடறீங்க, இல்லையா...

தொ.அ: இந்த மாசத்துல ஆல்ரெடி யாரும் இருக்காங்களா?

கு.த: ம்.... இருக்காங்க.

தொ.அ: யாருன்னு தெரிஞ்சுக்க லாமா?

கு.த: அவரும் ஒரு கம்பெனி ஓனர்.

தொ.அ: திருச்சியா அல்லது வெளி யூரா?

கு.த: உள்ளூர்க்காரங்க எப்படி? வெளியூர்தாங்க.

தொ.அ: ஓஹோ... நான் வர்றப்பலாம் ஊட்டி, கொடைக்கானல்னு வேற ஊர்களுக்கும் போறதுண்டு. அங்கெல் லாம்கூட வருவீங்களா....?

கு.த: போலாங்க. எங்க ஃபேமிலியைப் பொறுத்தவரைக்கும் சனி, ஞாயிறு மட்டும்தான் வெளியூர் வருவேன். அந்த சமயத்துல பையனை வீட்டுக் காரர் பார்த்துப்பாரு...

தொ.அ: அப்படியே பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்னையில்லை. உங்களுக் குத் தெரிஞ்ச ஃபிரெண்ட்ஸ் வேற யாரும் இதேமாதிரி இருக்காங்களா?

கு.த: இருக்காங்க! அவங்க எல்.ஐ.சி-ல ஒர்க் பண்றாங்க. லெக்சரரா ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. இ.பி-யில ஒர்க் பண்றவங்களும் இருக்காங்க. சொன்னாக்கா, பண்ணித் தரலாம்.

தொ.அ: அவங்கள்லாம் எவ்வளவு?

கு.த: எல்லாம் கொஞ்சம் பெரிய ஃபேமிலி பாருங்க. நல்லா இருப் பாங்க. ஐம்பதாயிரம் வரைக்கும் வாங்கறாங்க.

தொ.அ: அவங்க வீட்டுக்குல்லாம்கூட தெரியுமா?

கு.த: அதுங்களா... .ஒரு சிலர் வீட்டுல தெரியலாம். ஆனா, அவங்க ஹஸ்பெண்டுக்கு எந்த அளவுக்கு தெரியும்னு எனக்கு சரியாத் தெரியலை!

தொ.அ: ஆனா, வருவாங்கள்ல?

கு.த: ம்...

தொ.அ: எப்படி? வேலைக்குப் போனா எப்படி வருவாங்க?.

கு.த: எத்தனை நாள் வேணுமோ லீவு எடுத்துட்டு வருவாங்க!

தொ.அ: ஓ... ஓ... வேற பிரச்னை எதுவும் இருக்காதுல்ல?

கு.த: ஒரு பிரச்னையும் இருக்காது. நீங்க என்ன பிரச்னையைக் கேட் கறீங்க?

தொ.அ: இந்த ஹெச்.ஐ.வி... எய்ட்ஸ் அந்த மாதிரின்னு சொல்றாங்களே... ஒரே பயமா இருக்கு (சிரிக்கிறார்!).

கு.த: (பதிலுக்கு மெலிதாகச் சிரித்து) நாங்க ஃபேமிலி கேர்ள்ஸ்தானேங்க! அதனால ஒண்ணும் வராது! அதுமாதிரி கேக்கறாங்கனுதான், ஒருத்தர்கிட்டே அக்ரிமென்ட் தொடங்குறதுக்கு முன்னாடி நாங் களும்கூட ஃபிரெஷ்ஷா மெடிக்கல் டெஸ்ட் எடுத்துத் தந்துடறோம்.

தொ.அ: அதான்... அடுத்த மாசத்துக்கு இது பண்ணிக்கலாம்னுதான்... அன்னிக்கு ............கிட்ட 5,000 பணம் கொடுத்திருந்தேன், கொடுத் துட்டாரா?

கு.த: கொடுத்துட்டாரு.

தொ.அ: இதே வருஷத்துல மறுபடி வருவேங்க. அப்ப உங்க ஃபிரெண்ட் யாராவது அரேஞ்ச் பண்ணிக்கலாம்... (சிரிக்கிறார்).

கு.த: பார்த்துக்கலாம்ங்க. இல்லாட்டி அவர்கிட்டயே(?)கூட கேட்கலாம்.

தொ.அ: இந்த லெக்சரர் வேலை பாக்குறவங்க... (சட்டென்று) அது மாதிரி இல்லாட்டியும் காலேஜ் பொண்ணுங்க யாராவது இருக் காங்களா?

கு.த: காலேஜ் பொண்ணுங்களா? எனக்குத் தெரிஞ்சு காலேஜ் லெக் சரர்தான் இருக்காங்க....

தொ.அ: (மறுபடி) இந்த மாதிரி சின்னப் பொண்ணுங்க இல்லைன்றீங்க... ஆனா, இதுல பிரச்னை எதுவும் இருக்காதுல்ல..?

கு.த: இல்லீங்க... திருச்சியில அம்பது அறுபது பேர் இருக்காங்க....

தொ.அ: அவ்வளவு பேருங்களா?! எப்படி..? இவங்க எல்லாருக்குமே பேசி முடிக்கிறதுக்கு ஆள் இருக் காங்களா?

கு.த: ம்... இருக்காங்க. இப்ப உங்களை அறிமுகப்படுத்தி வெச்சாங்கள்ல... அவங்கள மாதிரி நிறைய பேர் இருக்காங்க.

தொ.அ: இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் பணம் தரணுமுங்களா...

கு.த: அவங்களே கமிஷன் மாதிரி எடுத்துப்பாங்க...

தொ.அ: பட்.. என்னிக்காவது இதெல்லாம் பிரச்சனைஆயிடாதா?

கு.த: அப்படி ஆகறதுக்கு சான்ஸ் இல்லை, ஏன்னா நாங்க எல்லாம் ஃபேமிலீல இருக்கோம் பாருங்க... அதனால யாருக்கும் இப்படினு தெரியாது. அதுவும் வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சு பண்றதால ஒண்ணும் பிரச்னையில்லை.

தொ.அ: அவரு எப்படிங்க அக்செப்ட் பண்றாரு, ஆச்சர்யமா இருக்கு!

கு.த: இல்லை.... தெரிஞ்சுதான், நாங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணித்தான் இப்படி பண்றது.

தொ.அ: ஃபேமிலியில ஏதாச்சும் பெரிசா பணப் பிரச்னைங்களா?

கு.த: பிரச்னை இருக்கு. அவரு வாங்கற சம்பளம் எங்களுக்குப் பத்தாது. அதனால இந்த மாதிரி!

தொ.அ: அடுத்த குழந்தை எதுவும் பெத்துக்கலையா.....

கு.த: இல்லைங்க... பார்க்கலாம்.

தொ.அ: (சில நொடி அமைதி நிலவ) சரி... அதான் அடுத்த மாசத்துக்கு கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு...

கு.த: கண்டிப்பா வாங்க.

தொ.அ: இன்னும் 20,000 ரூபாய் தரணும், சரிங்களா?

கு.த: வரும்போது தாங்க!

தொ.அ: சரிங்க. அப்ப அடுத்த மாசத்துக்கு நீங்க வேற யாரையும் எடுத்துக்க வேணாம்.

கு.த: இல்லீங்க... பணம் வாங்கிட்டா அப்படிஎங்க குடும்பத்துல செய்ய மாட்டோம்!

தொ.அ: ஓகே, நான் கிளம் புறேன்...

கு.த: போய்ட்டு வாங்க..!

விக்கித்துப் போன நிலையிலேயே நாம் வெளியில் வருகிறோம். அடுத்தடுத்து நாம் சந்தித்த இன்னும் சில முகங்கள், அவர்களின் சுற்றுச் சூழல்கள்... தோரணைகள்...

அது ஒரு விசாரணை வெடி குண்டு!
- தொடர்வோம் அடுத்த இதழில்...

Monday, January 4, 2010

ஜிஹாதும் பயங்கரவாதமும் ஒன்று தானா? மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் கருத்திற்கு தமுமுக தலைவர் கண்டன கடிதம்

புதுடெல்யில் கடந்த டிசம்பர் 23 அன்று நடைபெற்ற மத்திய உளவுத்துறையின் 22வது ஐ.பி. என்டோமென்ட் சொற்பொழிவின் போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் ஒப்பிட்டு உரையாற்றினார். இந்த உரையை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய கடிதம்:

சமீபத்தில் மத்திய உளவுத்துறை (ஐ.பி.) கூட்டத்தில் வெறுக்கத்தக்க தீவிரவாதத்தை புனித ஜிஹாதிற்கு இணையானது என்று தாங்கள் பேசியதாக வெளிவந்துள்ள செய்தி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை மிக மோசமாக புண்படுத்தியுள்ளது. ஜிஹாத் என்பது ஒரு போராட்டம் தான். ஆனால் அது யாருக்கு எதிராக எந்த நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்து உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜிஹாத் என்பது பொய்மைக்கும் அநீதிக்கும் எதிராக தொடுக்கப்படும் போராட்டம் ஆகும். ஆனால் இந்த போராட்டம் வன்முறை வாயிலாக மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று சொல்வது வடிகட்டிய பொய்யாகும்.

உங்கள் உரையில் சிலுவை யுத்தங்களை பாரம்பரிய போர்கள் என்றும் ஜிஹாதை நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் யுத்தம் என்றும் நீங்கள் வேறுபடுத்தி பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மைக்கு புறம்பான கருத்து என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்த்தவர்கள் ஆகிய இரு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அரசுகளுக்கு இடையே அச்சமூகங்களின் ஆட்சியாளர்கள் தலைமையில் நடைபெற்ற முழுமையான யுத்தங்களாகும். முஸ்லிம்கள் இது போன்ற நிலையில் நடைபெறும் யுத்தங்களில் பங்குக் கொள்ளும் போது தான் அதனை ஜிஹாத் என்றழைக்க இயலும். இது போன்ற யுத்தங்களில் பங்குக் கொள்ளும் நிலையிலும் கூட முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், மதகுருமார்கள் மட்டுமல்லாது வழிப்பாட்டு ஸ்தலங்கள், நீர்நிலைகள், பயன் தரும் தாவரங்களை கூட எந்த காரணத்திற்காகவும் தாக்கக் கூடாது என்று இஸ்லாம் தெளிவான போர் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது.

இறைவனோ அவனது இறுதித்துப்தர் முஹம்மது (ஸல்) அவர்களோ பயங்கரவாதச் செயல் ஈடுபடுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையிடவில்லை. உண்மையில் போர் நடைபெறும் நிலையில் கூட அதில் ஈடுபடாத அப்பாவி மக்களுக்கு எவ்வித துன்பமும் விளைவிக்க கூடாது உட்பட எவ்வித பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுவடுவதையும் இஸ்லாம் தடைச் செய்துள்ளது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் உரையில் ஜிஹாதை பயங்கரவாதத்துடன் நீங்கள் ஒப்பிட்டுள்ளது மூலம் இஸ்லாம் கூறும் ஜிஹாத் கோட்பாடு குறித்த உங்கள் மனநிலை தெளிவற்றது என்பது வெளிச்சமாகியுள்ளது. எவ்வித தயக்கமும் இல்லாமல் ஆனால் முழு பொறுப்புடன் நான் ஒன்றை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். பயங்கரவாதச் செயல் ஈடுபடும் முஸ்லிம் ஒருவரை முஸ்லிம் என்றே சொல்ல இயலாது. எனெனில் அமைதியை நிலைநாட்டும் மார்க்கமாக இஸ்லாம் விளங்குகின்றது.. அதன் பொருளும் அமைதி என்பதாகவே அமைந்துள்ளது.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் கும்பல்களுக்கு தாங்கள் ஜிஹாதில் ஈடுபட்டுள்ளதாக கூறிக் கொள்ள எவ்வித உரிமையும் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீவிரப்போக்கை கைவிடுமாறு போதித்துள்ளார்கள். தீவிர போக்குத் தான் கடந்த கால சமூகங்கள் அழிந்ததற்கான கரணமாக இருந்தது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சில முஸ்லிம் கும்பல்கள் தீவிரவாதச் செயல் ஈடுபட்டால் அவர்கள் இறைவனது உத்தரவிற்கு முரணான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்றே கருதப்படும். இத்தகைய போக்கை நியாயப்படுத்துபவர்கள் தோல்வியை தான் சந்திப்பார்கள். எனெனில் இவை இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகளுக்கு முரணாகவும் வெறுக்கத்தக்க பாவங்களாகவும் அமைந்துள்ளன. நீதியின் அடிப்படையிலும், பொறுமையுடனும். நிலைகுலையா தன்மையுடனும் நெருக்கடியான சூழல்களை எதிர்கொள்ளுமாறு திருக்குர்ஆன் வழிகாட்டியுள்ளது.. நியாயமாக ஒரு மனிதரை கொலைச் செய்வது முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு இணையானது என்று திருக்குர்ஆன் வயுறுத்துகின்றது. மனித உயிர் மிக புனிதமானது என்ற இஸ்லாத்தின் இந்த அடிப்படை தத்துவத்தை புரியாத நிலையில் தான் பயங்கரவாதிகள் தங்கள் செயல்களை அமைத்துக் கொள்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் பயங்ரவாதச் செயல்களை மிக வெறுக்கத்தக்கது என்றும் அதில் ஈடுபடுபவர்களை மிக மோசமான குற்றவாளிகள் என்று இஸ்லாமிய அறிஞர்கள் கருதுகிறார்கள்.

எதார்த்தமான உண்மைகள் இப்படியிருக்க நீங்கள் ஐ.பி. அதிகாரிகள் கூட்டத்தில் ஆற்றிய உரை எங்கள் சமூகத்திற்கு பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் சமூகத்திற்கும் மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிக்கும் இடையிலான உறவையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. இச்சூழல் நீங்கள் வெளிப்படுத்திய உண்மைக்கு புறம்பான கருத்தை நீங்கள் திரும்பப் பெற்று நீங்கள் நியாயவான் என்பதை உறுதி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாஅத்தே இஸ்லாமி, 'ஷரிஅத் பாதுகாப்பு குழு போன்ற முஸ்லிம் அமைப்புகளும் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Sunday, January 3, 2010

எச்சரிக்கை!! காசாகும் குடும்ப அந்தரங்கங்கள்.

நன்றி: ஜூனியர் விகடன்

குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால், தயங் காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர

விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.


இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள். சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள். பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார். இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார். 'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது. ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது. ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான். புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான். செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை. யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான். நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம். அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல. அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது. இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள். செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!