.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, May 29, 2007

மதசார்பற்ற நாடு இந்தியா?

மதசார்பற்ற நாடு இந்தியா?

மேலே நீங்கள் பார்க்கும் ஒளிப்படம், பாலக்காடு ரயில்வே கோட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்கப்பட்டு சேலம் ரயில்வே கோட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து தற்காலிக அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.2 கோடியே 11 லட்சத்தில் சேலம் ரயில்வே பள்ளி கட்டிடம் பகுதியில் தற்காலிக அலுவலகம் கட்ட 27-05-07 அன்று பூமி பூஜை நடந்தது அப்போது எடுத்த இந்த ஒளிப்படம் 28-05 அன்று தினகரன் நாளிதழில் வெளிவந்துள்ளது.
மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு ஒரு மதத்தினரின் மதச் சடங்கை அரசு நிகழ்ச்சியாக நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும் அயுதம் மற்றும் படைபலத்திலும் வளரும்நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறும் இந்திய இது போன்ற மூடநம்பிக்கைகளின் (பூஜை) மூலம் நாட்டைக்காப்பற்ற முடியும் என்று என்னுகிறார்களா?
இதோ செய்தி ஊடகங்களில் வந்த சில செய்தித் தொகுப்புகளைக் காண்போம்.
விடுதலை நாளிதழில் வந்த செய்தியை அப்படியே தருகிறோம்.
நரபலி மாதிரி - நாக்கு பலி காசியில் நடந்த மூடத்தனம்
வாரணாசி, மே 28- காசி புண்ணிய இடம். இங்கு செத்தால் நேரே கயிலாயம் போகலாம். அதற் காகவே அங்கே பரமசிவன் உட்கார்ந்திருக்கிறது. விசுவ நாதன் என்று இங்கே அதற்குப் பெயர். காசி விசுவநாதன் கோயில் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் இந்த லிங்கத்தைத் தொட்டுக் கும்பிடலாம். நம் ஊர் போலத் தீட்டெல்லாம் கிடையாது.அப்படிப்பட்ட கோயிலின் பக்கத்தில் ஒரு மசூதி உள்ளது. இங்கே செல்பவர் அங்கே போகக் கூடாது. அங்கே நுழை பவர் இங்கே வரக்கூடாது. இதைக் கண்காணிக்க ஏகப் பட்ட கட்டுக்காவல். நூற்றுக் கணக்கில் காவலர்கள் இருப் பார்கள். பக்தர்கள் கூட்டத்தை விடவும் இவர்களின் எண் ணிக்கைதான் கூடுதல்.கட்டுக்காவல் நிறைந்த இந்தக் கோயிலுக்கு ஒரு பெண் பக்தை வந்தார். வயது 55 இருக்கும். பெயர் செய்லிபாய். அவரது கணவனைச் சில நாள் களாகக் காணோமாம். அவ ரைக் கண்டுபிடித்துக் கொடுக் குமாறு கடவுளிடம் வேண்டிக் கொள்ள வந்தார். இந்தக் கடவுளையே காவலர்கள்தான் கட்டுக் காவலுடன் காப்பாற்றி வருகிறார்கள்.
இது எங்கே பக்தர்களைக் காப்பாற்றப் போகிறது? இந்தத் தெளிவான புத்தி இருந்தால் தான் பக்தி போய்விடுமே! புத்தி இல்லாததால்தானே பக்தியே வருகிறது!வெறுமனே வேண்டிக் கொண்டால் சாமி செய்யுமோ, செய்யாதோ என்ற நினைப்பில் பக்தை தன் நாக்கில் சிறு துண்டை நறுக்கி லிங்கத்தின் மேல் போட்டார். அக்கம்பக் கத்தில் இருந்த பக்தர்கள் கூச்சல் போடவே, பக்தையை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார்கள். துண்டான நாக்கைக் காணோம். எனவே, ஒட்ட வைக்க முடியாமல் காயத்திற்குச் சிகிச்சை செய்யப் பட்டு வருகிறது.இவ்வளவு கட்டுக் காவல் உள்ள காசி கோயிலுக்கு பிளேடு எடுத்துக்கொண்டு வந்தார் என்றால், என்ன காவல் லட்சணம் என்று விசாரணை நடந்து வருகிறது.காணாமல் போன கணவ னைக் கண்டுபிடித்துத் தா என்று கடவுளிடம் கேட்ட பக்தையின் துண்டிக்கப்பட்ட நாக்கையாவது கண்டுபிடித்துத் தரலாம் அல்லவா, காசி விசுவ நாதன்? ஊகும்... ஒன்றுக்கும் துப்பில்லாத கையாலாகாத காசிக் கடவுள்!
கடவுளைக் காப்பாற்ற அதிரடிப் படைபூரி ஜெகன்னாத் கோயிலுக்கு ஆபத்தாம்!
புவனேசுவர், மே 28- ஒரிசா மாநிலத்தில் பூரியில் உள்ள ஜெகன்னாத் கோயிலுக்குப் பெருத்த விளம்பரம் தருவார்கள். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்து காட்டுவார்கள். அவர்களுக்குக் கிருஷ்ணன் ஆண்டவனாவது, மண்ணாவது? எல்லாம் அங்கிருக்கும் அம்மணச் சிற்பங்களைப் பார்ப்பார்கள். இந்தக் கோயிலின் தேரோட்டம் பார்க்க நிறைய மக்கள் கூடுவர். கடலோர ஊரான பூரியின் தெருக்களில் மணலின் ஊடே தேரை இழுப்பதே கடினம்தான். ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்திற்கு மூன்று என்பார்களே, அதுபோல மூன்று தேர்கள். கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் என்று மூன்று பொம்மைகளை வைத்து இழுப்பார்கள்.அப்படிப்பட்ட ஜெகன்னாத் கோயிலுக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்தாம். கோயிலைத் தாக்கும் அபாயம் உள்ளதாம். ஆகவே, அதிரடிப்படையை நிறுத்திக் கடவுளையும், கோயிலையும் காப்பாற்றுவது என்று காவல்துறைத் தலைவர் முடிவு செய்துள்ளார்.கடவுளுக்குச் சக்தி கிடையாதோ? கடவுளின் கையில் இருக்கும் சங்கு, சக்கரங்கள் எதற்கு? கதாயுதம் எதற்கு? காது குடையவா? பக்தர்கள் சிந்திக்கவேண்டும்.
கும்பாபிசேகத்திற்குக் கைமேல் பலன் முனீசுவரன் கோயிலில் கொள்ளை முனீசுவரனின் மூஞ்சியை உடைத்தனர்!
கமுதி, மே 28- இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கருத்தறிவான் எனும் கிராமம். அங்கே சிறீதர்ம முனீசுவரன் - சிறீராஜகாளி கோயில் உண்டு. இந்த மாதம் 21 ஆம் தேதி இந்தக் கோயிலுக்குக் கும்பாபி சேகம் நடத்தப்பட்டதாம். புதுக் கருக்கு கலையாமல் கடவுள் பொம்மைகள் இருக் கும்போதே கும்பாபிசேகம் நடந்த நான்காம் நாள் ஒரு நிகழ்ச்சி நடந்து சாமியின் சக்தி யைச் சந்தி சிரிக்க வைத்து விட்டது.25 ஆம் தேதி இரவு கோயி லில் ஒரு கும்பல் புகுந்து சாமி பொம்மைகளை உடைத்து விட்டது. அத்தோடு நிற்காமல், சாமிகளின் தலையில் இருந்த மணிமுடி (கிரீடம்)யை எடுத் துச் சென்றுவிட்டது. கண் களில் பதிக்கப்பட்டிருந்த கண் மலர்களைப் பெயர்த்து எடுத் துப் போய்விட்டது. தங்க, வெள்ளி நகைகளைக் கொள்ளை அடித்துக் கொண்டு போய் விட்டது.முனீசுவரன் கோபக்கார சாமி என்று கதை அளப்பார் கள். அதற்கே இந்தக் கதி! முனீசுவரன் என்ன செய்தது? அடிவாங்கிக் கொண்டு அழக் கூட முடியாமல் கிடக்கிறது.முனீசுவரனின் சம்சாரமோ ராஜகாளி! காளியே கோபக் காரக் கடவுள் என்று கதை! அதன் கதையும் கந்தலாகி விட்டது.கையாலாகாத கடவுள் களின் சொத்துகளைத் திரும் பப் பெறுவதற்காகக் காவல் துறையிடம் முறையீடு செய்யப் பட்டுள்ளதாம். பக்கத்து ஊரான அரியமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர்மீது சந்தேகம் இருப்பதாகப் புகாரில் கூறப் பட்டுள்ளதாம்! கடவுள்களின் மீதே கைவைத்த ``பலே கில்லாடி’’யைத் தேடி விசாரணை நடைபெறுகிறதாம்! கடவுள் யோக்கியதை தினமும் சந்தி சிரிக்கிறது!

Saturday, May 26, 2007

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் கூடி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்பற்றி விவாதித்தனராம். இதுபற்றி துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து 'தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

'ஆதிசங்கராச்சார்யர் ஏற்படுத்திய நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் கூட்டம் பெங்களூரில் அண்மையில் நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை. பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம். பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.

இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம். இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டத்தை முடக்குவதற்கு அறிவு ஆராய்ச்சிக்கு முன் நிற்க முடியாத புராண இதிகாச மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகின்றனர் சங்கராச்சாரியார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமா - அதுவும் இந்து மதம் என்றாலே முழுக்க முழுக்கப் புராணக் குப்பைகள்தானே? நவீன அறிவியல் உலகத்தில் இந்தப் புராணங்கள் எல்லாம் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை, இல்லையென்றால், கொளுத்தப்பட வேண்டியவைகளே தவிர, பின்பற்றப்பட வேண்டியவையல்ல.

பூமியை பூமாதேவியென்றும், தண்ணீரைக் கங்காதேவியென் றும், காற்றினை வாயு பகவான் என்றும் கூறும் இந்து மடாதிபதிகள், பூமி மீது கால்வைத்து நடக்கலாமா? பூமிமீது மல ஜலம் கழிக்கலாமா? என்ற எளிமையான கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டுமே!

இரண்டாவதாக உண்மைக்கும் மாறான தகவல்களைத் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானக் கூடம் ராமன் பாலம் இருப்பதாகக் கூறுகிறது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யையே திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

நாசா இணைய தளத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ராமன் பாலம் என்றோ, 17 லட்சம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்றோ எந்த இடத்திலும் அவர்கள் சொல்ல வில்லை.

'இன்டோலிங்க் காம், வைஷ்ணவ நிறுவன நெட் ஒர்க்' என்னும் பார்ப்பன அமைப்பு ஒன்று நாசா கூறியதாகத் தவறான தகவலைத் தந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு இத்தகு அமைப்புகள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்டது இந்த பாலம் என்று கதைக்கிறார்களே - -பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் இருந்தானா என்பதற்கு முதலில் பதில் கூறட்டும்!

இன்றைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலுமீது சேற்றைவாரி இறைக்கும் இந்தச் சங்கராச்சாரியார்கள் அமைச்சரைச் சந்தித்து, ராமன் பாலம் குறித்து விளக்கம் பெற்று, அதனை ஏற்றுக் கொண்டனர் என்கிற செய்தி இதற்கு முன் வெளிவந்ததே! இந்த நிலையில் அமைச்சர்மீது அவதூறு பேசுவதும், ராமன் பாலம் பற்றிப் பேசுவதும் அறிவு நாணயம்தானா?

இவர்கள் நீதிமன்றம்தான் போகட்டும், வீதிமன்றம்தான் வரட்டும், அவர்களை அந்தந்த இடத்தில் சந்திக்க தமிழ்நாட்டு மக்களும் தயார்! தயார்!!

நன்றி: விடுதலை நாளிதழ் 25-05-2007

Friday, May 25, 2007

மதுவைத் தேடிச் சென்றவர்கள் மரணத்தைத் தழுவிய பரிதாபம்! த.மு.மு.க-வின் அவசரகால மீட்புப்பணி குழு உடனடி மீட்புப் பணியில்!!



மதுவைத் தேடிச் சென்றவர்கள் மரணத்தைத் தழுவிய பரிதாபம்!த.மு.மு.க-வின் அவசரகால மீட்புப்பணி குழு உடனடி மீட்புப் பணியில்!!


திருப்பூர், மே 24-மதுக்கடை பார் மீது பனியன் நிறுவன காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வெளிமாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்த கூலித் தொழிலாளர்கள். சரியான அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டதால்தான் சுவர் இடிந்து விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கலைவாணி தியேட்டர் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு கடையை ஒட்டியுள்ள பாரில் 50-க்கும் மேற்பட்டோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அந்த பார், 60 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் மது குடித்து முடித்த பலரும் வெளியே போக முடியாமல் பாரிலேயே இருந்தனர்.
பாரின் ஒரு பக்கத்தில் தனியார் பனியன் கம்பெனியின் 22 அடி உயர காம்பவுண்ட் சுவர் இருந்தது. இது, 400 அடி நீளத்தில் முற்றிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. மழை பெய்தபோது திடீரென்று சுவர் இடிந்து பாரின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்தது. பாரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு மண்ணாக அமுக்கப்பட்டனர். மழைக்கு பயந்து நுழைவாயிலில் ஒதுங்கியிருந்தவர்கள் சத்தம் கேட்டு அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த பொதுமக்களுடன் த.மு.மு.கவின் அவசரகால மீட்புப்பணிக் குழு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் மனித நீதி பாசரையைச் சேர்ந்த சகோதரர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மழையுடன் மின்தடையும் ஏற்பட்டதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டது.


தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் விரைந்து வந்து ராட்சத விளக்குகளை வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. மூலம் கற்கள் அகற்றப்பட்டன. இரவு ஒரு மணி வரை மீட்புப் பணி நடந்தது. இடிபாடுகளில் சிக்கி 27 பேர் பலியாகிக் கிடந்தனர். அவர்களின் உடல்கள் கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. படுகாயத்துடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சண்முகசுந்தரம் என்பவர் சிறிது நேரத்தில் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 28 ஆக உயர்ந்தது.

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிகம் தங்கி வேலை செய்கின்றனர். மதுரை, தேனி உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று நடந்த பார் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இறந்தவர்களில் 20 பேரின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அஸ்திவாரம் உறுதியாக இல்லாததால்தான் அதிக எடை கொண்ட கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர், இடிந்து விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. குழந்தைசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாரின் உரிமையாளர் கந்தசாமி, பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கந்தசாமி கைதானார். பார் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் அமையவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 பேர் மீது வழக்கு திருப்பூரில் பார் மீது சுவர் இடிந்து விழுந்து 28 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் கந்தசாமி, பனியன் கம்பெனி உரிமையாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மீது திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசாமி ஏற்கனவே கொலை வழக்கில் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.50 ஆயிரம் நிதிஉயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

2002 இல் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி அளிக்காமல் இருப்பதா? பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்.

2002 இல் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி அளிக்காமல் இருப்பதா? குஜராத் மோடி (பா.ஜ.க.,) அரசுக்கு பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்

புதுடில்லி, மே 24- 'உலக மக்கள் உரிமை'' எனும் தலைப்பில் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் இன்னமும் வழங்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.

குஜராத்தில் நிகழ்ந்த கொடுமை 2002 இல் ஏற்பட்ட கலவ ரத்தில் பல்லாஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்; பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை நிவாரணம் அளிக்கப்பட வில்லை. மறுவாழ்வு தரும் செயல்கள் மிகமிகத் தாமதமான முறையில் நடக்கின்றன. குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்; வாடகைக்கு வீடுகூடக் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான இடம் பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒன்றிரண்டு வழக்குகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், முடிக்கப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட 41 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

பா.ஜ. கட்சிக்குத் தொடர்பு

'முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்த வன்முறையாளர்களுக்கும், அன்றைய ஆளுங் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடந்த செல் பேசிப் பேச்சுகள் தொடர்பான ஆதாரங்கள் நிறையவே தற்போது கிடைத்துள்ளன. இந்து மத வெறிக் கட்சியான பா.ஜ. கட்சிக்கு இக்கலவரங்களில் உள்ள தொடர்புக்கு அத்தாட்சி கிடைத்துள்ளது.'' மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மதக்காரர்கள், அதாவது இந்து மதக்காரர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் குஜராத்தின் நரேந்திர மோடியின் பா.ஜ. கட்சி அரசு தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

Thursday, May 24, 2007

மாண்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் மீண்டார். மருத்துவர்களின் அலச்சியப்போக்கால் மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகள்!

மாண்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் மீண்டார்.
மருத்துவர்களின் அலச்சியப்போக்கால் மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகள்!

தேனி 24-05: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர்.

உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர்.
அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் 'உடல்' தரப்படும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த நிலையில் கேரள மாநிலம் சாந்தம்பாறையைச் சேர்ந்த ஆண்டவர் என்ற பெயர் கொண்ட இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இந்த நிலையில், கூட்டப்பன்பேரி ஆண்டவரின் 'உடலை' ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மயக்கத்தில் இருந்த ஆண்டவர் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து ஆண்டவர் நலமடைந்து விட்டதை உறுதி செய்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரிலும் மதுரையிலும் நடந்த இருவேறு அறுவை சிகிச்சைகளில் நோயாளிகள் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டாக்டர்களை போலீஸ் கைது செய்தது. டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
விளைவு?

அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டாக்டர்கள் சங்கம் அறிவித்தது.

பிரச்னை வேறொன்றுமில்லை. தவறான சிகிச்சையினாலோ, கவனக்குறைவாலோ ஒரு நோயாளி இறந்துவிட்டால் அல்லது அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொறுப்பாளியா, இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சில வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்குத் தந்திருக்கிறது.

தவறான சிகிச்சை அளித்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்தால், அதே பிரிவில் உள்ள மற்றொரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு அவரது பரிந்துரைக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்படக் கூடாது. இவைதான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்.

ஓர் அரசு அலுவலரோ, காவல்துறை அதிகாரியோ தங்களது கடமையை ஆற்றும்போது ஏற்படும் தவறுகளுக்காகத் தண்டனை பெறுவதில்லை. நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட முடிவு தவறாகிவிட்டது என்று கருதி மன்னிக்கப்படும். அதே அளவுகோல் டாக்டர்களுக்குப் பொருந்தாது. காரணம், இவர்களது கவனக்குறைவால் ஏற்பட இருப்பது பொருள் இழப்பல்ல, உயிரிழப்பு!

வரவர மருத்துவம் என்பது சேவை என்கிற எண்ணம் அகன்று வியாபாரமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, மேலும் பல லட்சங்கள் செலவழித்துப் படித்து, டாக்டர்களாக வருபவர்களிடம் வியாபார நோக்கம் இருப்பதில் அதிசயம் இல்லை. ஆனால், தொழிலில் அக்கறையும், கவனமும் இல்லாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

மருத்துவர்களின், மருத்துவமனைகளின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகரின் அனுபவமும், முன்னாள் நடிகை விஜியின் அனுபவமும், நினைவில் நிழலாடுகின்றன. இதுபோல் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் வெளியில் வராமல் நோயாளிகளின் மரணத்துடன் மண்ணாகி விட்டிருக்கின்றன.
இதற்கெல்லாம் காரணம், மருத்துவப் படிப்பு விலைபேசப்படுவதுதான். திறமையை மட்டுமே அளவுகோலாக்கி மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதை விட்டுவிட்டு, நன்கொடையின் அடிப்படையில் மருத்துவர்களை உருவாக்க முற்பட்டால், இதுபோல அப்பாவி மக்கள் பலபேர் உயிர்ப்பலி கொடுக்கப்படுவார்கள் என்பதை நாம் உணர வேண்டும். இனிமேல் எந்தவொரு டாக்டரிடம் சிகிச்சைக்குப் போகும்போதும், அவர் தகுதியின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவரா, இல்லை நன்கொடை மூலம் இடம்பிடித்தவரா, நாற்பது மார்க் வாங்கி எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவரா இல்லை, எண்பது மார்க் வாங்கி டாக்டரானவரா என்றெல்லாம் பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படாமல் இருந்தால் சரி.

சம்பந்தப்பட்ட டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்தது தவறாக இருக்கலாம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம், நோயாளிகளைப் பரிசோதிக்க மாட்டோம், அறுவைச் சிகிச்சைகள் நடைபெறாது என்று பொதுமக்கள் மீது தங்களது ஆத்திரத்தைத் திருப்புவது எந்த வகையில் நியாயம்? கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல், பொதுநலச் சிந்தனையில்லாமல் நடந்துகொள்ளும் டாக்டர்களின் செயல் கண்டனத்துக்குரியது. மருத்துவ நெறிகளுக்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாததும்கூட.
இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். சிகிச்சையின்போது நோயாளி இறந்ததற்காகக் கைது செய்வதென்றால் அத்தனை டாக்டர்களுமே கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான். டாக்டர்கள் கடவுளல்ல, எல்லா நோயாளிகளையும் குணப்படுத்த. டாக்டர்கள் மீது வழக்குத் தொடர்வது என்பது வேறு, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் கைது செய்வது என்பது வேறு.

போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் எந்த அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்களோ அதே அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினருமே!

Tuesday, May 22, 2007

30 வயதுக்குட்பட்ட இளம்‍‍பெண்கள் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லத்தடை.

வெளிநாட்டில் வீட்டு வேலைக்குச் செல்லும் இளம்பெண்களுக்குத் தடை

புதுடில்லி, மே 21-- வெளிநாடு களுக்கு வீட்டு வேலைகளுக் கும் மருத்துவமனைகளில் நர்சுகளாக பணியாற்றவும் செல்லும் பெண்களின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.ஆதாரப்பூர்வமாக ஒவ் வொரு ஆண்டும் 5.5 லட்சம் பேர் செல்வதாக தெரிவிக்கப் பட்டாலும், 10 லட்சம் பேர் வரை இதுபோன்ற பணி களுக்கு செல்கின்றனர்.

சில குறிப்பிட்ட நாடுகளில் இவர்கள் பாலியல் பலாத் காரத்துக்கு ஆட்படுகிறார்கள். குறைந்த சம்பளம் வாங்குவது, சரியான உணவு தர மறுப்பது, மனதளவில் துன்புறுத்தப்படு வது போன்றவற்றுக்கும் இவர் கள் ஆளாக்கப்படுகின்றனர். எனவே, 30 வயதுக்கு உட் பட்டோர் இதுபோன்ற வேலைகளுக்கு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்வதை மத்திய அரசு தடை செய்துள்ளது.

மத்திய அரசு தடை செய்துள்ள நாடுகள் வருமாறு:
சவுதி அரேபியா, பஹ்ரைன், அய்க்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார், ஓமன், மலேசியா, சிரியா, ஜோர்டான், ஆப்கானிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேசியா, ஈராக், புருனே, நைஜிரியா மற்றும் லிபியா.இந்த நாடுகளுக்கு இது போன்ற வேலைக்கு செல்லும் முன் குடியுரிமை அதிகாரி களின் ஒப்புதல் சான்றிதழ் பெறவேண்டும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங் கப்படும்.

Monday, May 21, 2007

Aadam Bridge: ராமன் பாலம் ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!

ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!


'ராமன் பாலத்தை, நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயனபடுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர் (எஸ். பத்ரி நாராயணனும் வி. சீனிவாசனும்)''கோயங்கா குடும்பத்துக் கணக்குப் பிள்ளை ஒருவர் மேற்காணும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

அவரைப் போலவே 'செட்டில்மென்ட் இலாகாவில்'' பணியாற்றிய ஒருவரும் இதே கருத்துகளுக்குச் சொந்தக்காரர் எனத் தம் பேட்டியின் மூலம் அறிவிக்கிறார். ஆதாரங்களை அவிழ்த்துக் கொட்டிவிட வேண்டியதுதானே! உலகின் முதல் பாலம் நைல்நதியில் கட்டப்பட்டது என்றும் கட்டி 4,657 ஆண்டுகள் ஆகின்றன என்றும் தி.க தலைவர் வீரமணி ஆதாரத்துடன் கூறினாரே! 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுக்கு முன் ராமன் கட்டினானா? என்றும் கேட்டாரே! பதில் கூறுங்களேன்!


மனிதன் உருவாகி 65 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அவன் பாலம் கட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆகிறது. எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்கிறீர்கள்? ஆதாம் பாலம் (ராமன் பாலம்) இயற்கையில் உருவாகிய மணல்மேடுதான்! மனிதன் கட்டியது என்பதற்கு பத்ரிநாராயணன் வலுவாக ஏதும் கூறவில்லையே! ராமன் கட்டினான் எனக் கூறவில்லையே!

காளைமாட்டைக் குதிரையாக்கிய என்.எஸ். ராஜாராம் போன்றவரான சீனிவாசன்கூட மணல்மேடுகள் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் மட்டுமே ஏற்படக் கூடும் - இங்கே அப்படி ஏற்படவில்லை என்கிறார்.

Satellite Picture
12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால்தான் இந்தியமாக்கடல் ஏற்பட்டது என்றும் ஜெர்மனியும் பிரான்சும் சேர்ந்த பரப்பளவுள்ள பீடபூமி அழிந்து போனது என்றும் பனி ஆராய்ச்சிக் கப்பலில் சென்ற அறிவியலாளர்கள் கூறியதைச் செய்தித்தாள்கள் 6.5.2007இல் வெளியிட்டனவே, படிக்க வில்லையா? (படிக்க: டெக்கான் கிரானிகிள்)ஆதாரப் பூச்சாண்டியும், ஆராய்ச்சியாளரின் கருத்துப் பூச்சாண்டியும் கருகிப் போய்விட்டதால் மல்கோத்ரா மாதிரி 'நம்பிக்கை' என்று உச்சாடனம் பண்ணுங்கள் அறிவியல் அடிப்படையில் பேசுவது மாதிரிப் 'பாவ்லா' பண்ணாதீர்கள்! புண்ணாக்கி விடுவோம்!

சேதுக்கடல் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் - எந்தப் பெயரால் எதிர்த்தாலும் - தேசத் துரோகிகள்தான்! யாராக இருந்தாலும்..! சங்கரமடத் தலைவர்களாக இருந்தாலும்! அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!

நன்றி: விடுதலை நாளிதழ் 20-05-2007

Sunday, May 20, 2007

இராமன் பாலம் புளுகு இனி எடுபடாது!

இராமன் பாலம் புளுகு இனி எடுபடாது!
சேதுகால்வாயில் கப்பலைக் கலைஞர் தொடங்கி வைக்கத்தான் போகிறார்சென்னை பொதுக்கூட்டத்தில் கீ வீரமணி ஆதாரத்துடன் விளக்கம்
சென்னை, மே 19- சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறை வேற்றி முதல் கப்பலை கலைஞர் அவர்கள் தொடங்கி வைக்கத்தான் போகிறார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சேது சமுத்திர திட்டம் பாதுகாப்புக் குழு அமைப்பின் சார்பில் 16.5.2007 அன்று சென்னை - அமைந்தகரை - புல்லாரெட்டி அவென்யூவில் ``சேது சமுத்திர திட்டமும் - ராமன் பாலமும்’’ என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
உலகில் எகிப்து நாட்டில் நைல் நதியில் கட்டப்பட்ட வளைவுப் பாலம் (கி.மு. 2650 ஆவணப்படி) முதன் முதலாக மெனிஸ் மன்னரால் கட்டப் பட்ட பாலம். மனிதன் முதன் முதலில்கட்டிய பாலம்இந்த ஆதாரத்தை எதிலி ருந்து நாங்கள் எடுத்துச் சொல் லுகிறோம். என்றால் சிவில் எஞ்சினியரிங் துறையிலே The History of the Bridges என்ற பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட தகவல் உங்கள் முன் னாலே வைக்கப்படுகிறது.

கி.மு. 2650 ஆண்டுகள் என்று சொன்னால் இப்போதைய கணக்குப்படி நீங்கள் சேர்த்துப் பார்த்தால் இந்த முதல் பாலம் கட்டப்பட்டது வெறும் 4657 ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்டது. இதுதான் மனிதன் முதன் முதலாகப் பாலம் கட்ட ஆரம்பித்ததே.

அணில் பாலம் கட்டியது என்று அவர்கள் சொன்னால், அணில் முதுகில் இருக்கிற கோடுகள் பற்றியும் கேள்விகள் எழத்தான் செய்யும். அது வேறு செய்தி. ஆனால், கட்டிய பாலம் என்பது அறிவியல் பூர்வமான செய்தி. நம்பிக்கை என்ற அடிப்படையில் அல்ல. அறிவியல், கட்டடவியல். அந்த அடிப்படையிலே கட்டப் பட்ட பாலம். கண் முன்னால் காணக்கூடிய பாலம். சரி இது முதல் பாலம் எகிப்து நாட்டிலே.இரண்டாவது பாலம் எப்பொழுது கட்டப்பட்டது?இரண்டாவது பாலம் ஆசிய நாட்டிலே எங்கே கட் டப்பட்டது என்ற கேள்விக்கு விடை என்னவென்றால் சீனா வில் பீஜிங்குக்குத் தெற்கே கற்களால் கட்டப்பட்ட சாவ் சோ பாலம். இது எப்பொழுது அங்கே கட்டப்பட்டதென்றால் (கி.பி. 600) 1407 ஆண்டு களுக்கு முன்னால் கட்டப் பட்டது. (இதன் நீளம் 37.6 மீட்டர். உயரம் 7.2 மீட்டர். சாலை அகலம் 9 மீட்டர்.)இந்தியாவில் எப்பொழுதுபாலம் கட்டப்பட்டது? அதேபோல இந்தியாவில் அய்தராபாத்தில் முசி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புராதன புல் பாலம்தான் மிகப் பழை மையான இந்தியப் பாலம்.

இது எப்பொழுது கட்டப் பட்டதென்றால் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் தான் கட்டப்பட்டது. இவ்வளவுதான் பாலம். அப்புறம் எதற்கு ஓலம்? தந்தை பெரியார் அவர்கள் எழுதி யதை `முரசொலி’யிலே கலைஞர் அவர்கள் எடுத்துப் போட் டிருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் `இராமாயண ஆராய்ச்சி’ என்ற நூலில் எழுதியிருக்கின்றார்.

இராமாயணம்நடந்த கதையா?``இராமாயணம் நடந்த கதையா? வால்மீகியின் கற் பனையில் உதித்த கதை’’ என்று சொன்னார். சகோதரர் சுப. வீரபாண்டியன் அவர்கள் சொன்ன மாதிரி ராஜாஜியே இந்தக் கருத்தைத்தான் கூறியி ருக்கின்றார். வால்மீகி இராமாயணம் கற்பனை. தந்தை பெரி யார் அவர்கள் இராமாயணத் தைப்பற்றி சொன்ன செய்தி.`புராணப் புளுகர்கள் மத வெறியர்கள் ராமாயணம் எப்போது நடந்தது என்று புளுகுகிறார்கள். திரேதா யுகத்தில் நடந்தது என்று எழுதி வைத்திருக்கிறார்கள். திரேதா யுகம் என்பது எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? (இராமயாணப் பிரசங்கிகள் என்ன சொல்லுகிறார்கள்? திரேதாயுகத்தில் நடந்தது என்று சொல்லுகிறார்கள்).
திரேதா யுகம் என்பது எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கிய யுகம்? 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் கொண்ட யுகமாம். அந்தக் கணக்கிலும் ஏறுக்கு மாறாக எக்குத்தப்பா புராணப் புளுகர்கள் கற்பனையை வானத்தை முட்டுமளவு விரித்-திருப்பதை பெரியார் கீழ்க்-கண்ட கேள்வி மூலம் அம்ப லப்படுத்தியிருக்கிறார். ராமா யணம் திரேதா யுகத்தில் நடந்தது என்கிறீர்கள். அந்தத் திரேதாயுகத்திற்கு 13 லட்சம் ஆண்டுகள் என்கிறீர்கள்; ஆனால், ராமாயணம் நடந்த போது ராவணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆட்சி நடத்தி னான், அது என்ன கணக்கு என்று பெரியார் கேட்கிறார்.

திரேதாயுகம் 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் என்று சொல்லுகின்றார்கள். ராமர் பாலம் 17 லட்சத்திற்கு முன்னால் இருந்தது என்று கதை அளக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அண்டப்புளுகு.
இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லைபொதுவாக இந்தப் புளுகும் கந்தப் புராணத்திலும் இல்லை என்று சொல்லிச் சொல்லித் தான் பழக்கம். கந்தப் புராணமே புளுகுக்கே அத்தாரிட்டி என்பதால்தான் அந்தப் பழ மொழி வந்திருக்கிறது போலி ருக்கிறது. ஆகவே அவர்களைப் பொறுத்த வரையிலே இதை யும் தாண்டிப் புளுகியிருக்கி றார்கள். திரேதா யுகமோ 13 லட்சம். இராமாயணமே அதில் ஒரு பகுதி என்றால், இராமாயண கதையில் ராவ ணன் 50 லட்சம் ஆண்டுகள் ஆட்சி நடத்தினான் என்றால் இது அறிவுக்குப் பொருத்தமா? அப்புறம் ஏன் இராமன் பாலம், 17 லட்சம் ஆண்டுக ளுக்கு முன் கட்டப்பட்டது என்று புளுக மாட்டான்? ஆகவே இந்த மக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று நினைத்து, இப்படிப்பட்ட கற்பனை களை சொல்லிக் கொண் டிருக்கின்றார்கள்.
தந்தை பெரியார்பாதுகாத்து வைத்தார்அது மட்டுமல்ல, இந்த நூல் தந்தை பெரியார் அவர் களால் பாதுகாத்து வைக்கப் பட்ட ஒரு அற்புதமான நூல். 1928-லே வால்மீகி இராமா யணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்த சி.ஆர். சீனிவாச அய்யங்கார் எழுதிய ``இதர இராமாய ணங்கள்’’ என்பது இந்த நூலினுடைய பெயர். இதை புரட்டினால் அப்ப டியே ஏடு, ஏடாக உடைந்து போகும். வால்மீகி இராமா யணம், துளசிதாஸ் இராமாய ணம், கம்ப இராமாயணம் என்ற இப்படித்தான் இராமா யணத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இராமாயணத்தைப்பற்றி படிக்கின்ற, பிரசங்கம் செய் கிறவர்களுக்கே தெரியாத அள வுக்குப் படித்தவர்கள் நாங்கள். திராவிட இயக்கத்தவர்கள்.``இதர இராமாயணங்கள்’’ஆகவே எங்களுக்குத் தெளி வாகத் தெரியும். ``இதர இராமா யணங்கள்’’ என்று சொல்லக் கூடிய இந்த நூலிலே யவன இராமாயணம் இருக்கிறது. கிறிஸ்தவ இராமாயணம் உண்டு. ரோமானியர் இராமாயணம் உண்டு. அதேபோல பவுத்த இராமாயணம் உண்டு. இவை இத்தனையும் இதிலே தொகுக்கப்பட்டிருக் கிறது. இந்த நூலில் 75 ஆம் பக்கத்தில் பவுத்த இராமாய ணம் இருக்கிறது. இது ஒரு கற்பனை என்பதற்கு அடையாளத்திற்காக சொல்லு கின்றேன். எனவே இராமர் பாலம் என்று கூறுவதற்கு அர்த்தமே இல்லை. வெறும் நம்பிக்கை என்று சொல்லி இந்த மக்களை மடையர்களாக ஆக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

இராமர் பாலம் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் கட் டப்பட்டது என்று சொன் னால் மனிதன் காட்டுமிராண்டி காலத்தில்கூட அப்படி இருந்திருக்க முடியாது. பவுத்த இராமாயணத்தில்ஒரு கருத்துபவுத்த இராமாயணத்திலே ஒரு கருத்து இருக்கிற பகுதியை எடுத்துச் சொல்லுகின் றேன். இந்த நூல் 1928-லே `சுதேசமித்திரன்’ பதிப்பு அச் சிட்ட நூல். இந்த நூலிலிருந்து எடுத்துச் சொல்லுகின்றோம்.``முன்னொரு காலத்தில் காசி தேசத்தை ஆண்டு வந்த தசரத சக்ரவர்த்தி தீமைகளை விளக்கி நன்மை போன்ற ராஜ்ய பரி பாலனம் செய்துவந்தார். அவனுக்கு பதினாயிரம் பத்தினிகள் இங்கே சுப. வீரபாண்டியன் அவர்கள்கூட சொன்னார்கள். தசரதனுக்கு ஆயிரம் மனைவிகள். ராமனுக்கு ஒரு மனைவி’’ (எத்தனை புரட்டுகள் என்பதைப் பற்றிச் சொன் னார்கள்). தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகள் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். தந்தை பெரியார் அவர்கள் அந்த காலத்திலும் ஒவ்வொரு கூட் டத்திலும் நகைச்சுவையோடு சொல்லுவார். அந்த காலத்தில் மக்கள் தொகை இருபதாயிரம் இருந்தாலே ஒரு முனிசிபாலிட்டி, அப்படியானால், தசரதன் மூன்று முனிசிபாலிட்டி வைத் திருந்திருக்கிறான். ஒரு மனைவியை சந்தித்து மீண்டும் அந்த மனைவியை சந்திப்பதற்கு எத்தனை வருடங் கள் ஆகும் என்று பொதுக் கூட்டத்தில் கேள்வி கேட்பார்.

இராமனுடைய தங்கைசீதை``தசரதனுக்கு பதினாயிரம் பத்தினிகள். அவர்களில் மூத்த வளும், ராணியுமாய் இருந்த வள் இரண்டு புத்திரர்களை யும், ஒரு புத்திரியையும் பெற்றாள் (இரண்டு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை). மூத்த குமாரனுக்கு இராம பண்டிதர் என்றும், இளையவனுக்கு லட்சுமணன் என்றும், குமாரிக்கு சீதை என்றும் பெயரிட்டார்கள். எனவே, இந்த இராமாயணப்படி இராமனுடைய மனைவி அல்ல சீதை. இந்த கதைப்படி சீதை ராமனுடைய தங்கை. அதுதான் பவுத்த இராமாயணம். ஆகவே, நீங்கள் இப்படி பிரச்சாரம் செய்ய ஆரம்பித் தால் இராமாயணத்தை நாங் கள் தெருத் தெருவாக கிழித் தெறியக் கூடிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்று பொருள் (பலத்த கைதட்டல்). ராமன் பாலம் பிரச்சினையை சுருட்டி வைத்துவிடுங்கள்ஆகவேதான் சொல்லுகிறோம், இந்த இராமன் பாலம் பிரச்சினையை சுருட்டி வைத்து விடுங்கள். இனிமேல் இராமன் பாலம் பிரச்சினையே கிடை யாது. கடலில், மணல் திட்டுகள் தான் இருக்கின்றன. நாசாவி லேயே சொல்லிவிட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். வரலாற்றை மாற்றியவர்கள்நாசாவிலே என்ன சொல்லி யிருக்கின்றார்கள்? இணைய தளத்திலே ஒரு கற்பனையான செய்தியை உருவாக்கினர். ஆரியர்கள் வெளியே இருந்து வந்தவர்கள். மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிகத்தில் திராவிடர்கள் இருந்தார்கள். அவர்கள் காளை மாட்டை வளர்த் தார்கள். திராவிடர்களுடைய சின்னமான காளை மாட்டு சின்னத்தையே மாற்றி ஆரியர் களுடைய குதிரையை சின்ன மாக வைத்து வரலாற்றையே மாற்றி விட்டார்கள். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ஆளைப் பிடித்து வரலாற்றையே மாற்றிக் காட்டியவர்கள். அவர்கள் காளை மாட்டு சின்னத்தை மாற்றி குதிரை சின்னமாக மாற்றியவர்கள்.

நாங்கள் வெளியிட்டிருக் கின்ற `சேது சமுத்திர திட்டமும் - ராமன் பாலமும்’ என்ற நூலில் ஒரு செய்தியை வெளி யிட்டிருக்கின்றோம்.`எதுதான் நிஜம்?’பக்கம் 23 இல் `எதுதான் நிஜம்?’ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருக் கின்றோம். அய்.நா.,வின் முன் னாள் ஆலோசகர், கடலியலா ளர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் இந்த ஆதம் பாலத்தைப்பற்றி ஒரு அற்புத மான கருத்தை வெளியிட்டார்கள். எப்படி கடலில் திட்டுகள் உருவாயின?``ஆற்று முகத்துவாரத்தில் நீர் வரத்து குறைந்த காலங் களில் திட்டுகள் ஏற்படுவ துண்டு. ஆற்றில் கலந்து வரும் மணல் தங்கும் வேகத்தைவிட குறைவான நீரோட்ட வேகம் இருந்தால் இத்தகைய திட்டு கள் உருவாவது இயல்பு. இது போன்ற திட்டு ஆழம் குறைந்த கடல்களிலும் உருவாகின்றன. அலையின் வேகம், கடல் மேற் பரப்பு, நீரோட்ட வேகம் குறை வாக உள்ள நேரங்களில் மணல் தரையில் சேர்ந்து, திட்டுகளா கின்றன. வேகமாக நீர் ஓடி னாலோ, அலை அடித்தாலோ கலங்கியிருக்கின்ற சேற்று மணல் நீரோடு சேர்ந்தோடும். நீரின் வேகம் குறைவாக இருந் தால் சேற்று மணல் நிலத்தில் தங்கி திட்டுகளாகும்.

எதிரெதிர் நீரோட்ட விளைவுவங்காள விரிகுடாவில் கார்த்திகை - தை மாதங்களில் வலசை நீரோட்ட காலத்தில் கங்கையின் வெள்ளம் வண்ட லுடன் சேர்ந்து இலங்கைக் கரையோரம் வரை கலங்கி வரும். இடசை நீரோட்டக் காலத்தில் (வைகாசி, ஆவணி) அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவுக்கு பாக் நீரிணை வழியாக வண்டல் மணல் கலந்த நீர் பயணிக்கும், எதி ரெதிர் நீரோட்டங்கள் நிகழ் வதால், பாக் நீரிணையின் இரு எல்லைகளிலும் திட்டுகள் இருக்கின்றன.

எப்படி மனிதனால் மணல் திட்டு அமைக்க முடியும்?இவை வடக்கே கோடியக் கரையிலிருந்து தெற்கே யாழ்ப் பாணம் வரை நீளும் மணல் திட்டும், மேற்கே தனுஷ்கோடி யிலிருந்து கிழக்கே தலைமன் னார் வரை நீளும் மணல் திட்டும் ஆகும். அத்தகைய ஒரு திட்டு மனிதனால் அமைக்கப் பட்டவை என்று கூறுவது அதீத கற்பனை. புவியியல் நிகழ்வுகளுக்கு கற்பனை வள மூட்டிய உலகம் முழுவது முள்ள பல எடுத்துக்காட்டு களுள் இதுவும் ஒன்று. தெற்கே உள்ள மணல் திட்டுகளை ராமன் கட்டியிருந்தால், வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?’’ என்று கேள்வி கேட்டுள்ளார்.சேதுகால்வாய் திட்டம் நிறைவேறிவிடுமோ?எனவே, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் எங்கே நடந்து விடுமோ? நிறைவேறி விடுமோ? என்று நினைக்கின்ற காரணத்தால், பொய்யான, கற்பனையை அள்ளி விடுகின் றார்கள்.கடைசியாக ஒன்றை சொல் லுகின்றேன்.ஜெயலலிதா எங்கே முகத்தை வைத்துக் கொள்வார்?இன்றைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற் றக் கழகம் அதனுடைய பொதுச்செயலாளர் ஜெயல லிதா எதிர்க்கிறாரே, அவர்க ளுடைய தேர்தல் அறிக்கை யிலே என்ன சொல்லியிருக் கின்றார்கள். ஆதம் பாலம் மணல் திட்டு, பவளப் பாறை என்றுதானே எழுதியிருக்கின் றார்கள்.அதற்கு நீங்கள் இப்பொ ழுது பின் வாங்க முடியுமா? மறுப்பு உண்டா என்று கேள்வி கேட்டால், அவர்கள் எங்கே தங்களுடைய முகத்தை வைத்துக் கொள்வார்கள்?தமிழர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்ஆகவே, நண்பர்களே, தமிழ் நாட்டை, தமிழர்களை ஏமாற் றலாம் என்று நினைக்காதீர்கள்.

மீண்டும் சொல்லுகின்றோம். இது பெரியார் பிறந்த மண். அண்ணா ஆண்ட மண். காமராசர் ஆண்ட மண். கலைஞர் ஆண்டு கொண்டிருக்கின்ற மண். உங்கள் புரட்டுக்கதை நடக்காதுஎனவே, உங்களுடைய புரட்டுக்கதை நடக்காது, நடக் காது. சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேறும் . சேது கால்வாயில் முதல் கப்பலை கலைஞர்தான் தொடங்கி வைப் பார்கள் (பலத்த கைதட்டல்).இன்னும் கேட்டால், எங் களுக்கு நன்றாக நினைவிருக் கிறது. பெரியார் - அண்ணா கப்பல்சென்னையிலே அன்னை மணியம்மையார் அவர்களை யும், எங்களையும் அழைத்து பூம்புகார் கப்பல் கழகத்தின் சார்பாக பெரியார் - அண்ணா கப்பலைத் தொடங்கினார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றிக் கொண்டு வருபவர் நம்முடைய கலைஞர் அவர்கள். எனவே, இந்த கப்பலையும் தொடங்கி வைக்கக் கூடிய காட்சியை நாம் பார்க்கத்தான் போகிறோம்.தாக்கும் தடந்தோள்களும் உண்டுஎத்தனை தடைகளை எதிர்க் கட்சியும், மதவாத அமைப் பினரும் உருவாக்கினாலும் தடைக்கற்கள் ஆயிரம் உண் டென்றாலும், அதைத் தாங்கும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு.தாங்கும் தடந்தோள்கள் மட்டுமல்ல, தாக்கும் தடந் தோள்களும் உண்டு, உண்டு என்று சொல்லி, வாய்ப் பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடை பெறுகிறேன்.- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
நன்றி; விடுதலை நாளிதழ் 19-05-2007

Saturday, May 19, 2007

Bomb blast at Hyderabad Makkha Masjid ‍ஹைதராபாத் மக்கா மஜ்தில் குண்டு வெடிப்பு.

‍ஹைதராபாத் மக்கா மஜ்தில் குண்டு வெடிப்பு.
ஹைதராபாத் சார்மினார் பகுதியில் உள்ள 17ம் நூற்றான்டை சோர்ந்த புகழ்பெற்ற மக்க பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை ஜீம்மா தொழுகையின்போது தீவிரவாதிகளால் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் இது வரை 5 பேர் கொல்லப்பட்டுள்னர் இன்னும் பலர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போரடியபடி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பள்ளியில் வெடிக்காத நிலையில் இருந்த இன்னும் இரன்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்துள்ளனர்.

வழக்கமாக 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் தொழும் இந்த மஸ்ஜிதில் இன்று மதியம் சரியாக 1.25 இந்திய நேரத்திற்கு இந்த குண்டு வெடித்தள்ளது. இதில் காயமுற்றவர்களை தொழ வந்திருந்த மற்றவர்கள் அருகில் உள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கும் இன்னும் பல மருத்துவமனைகளுக்கும் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்று சேர்த்துள்னர்.


புகழ்பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மஸ்ஜிதுக்கு போதிய பாதுகாப்பு வழங்காமல் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை ஆத்திரத்தில் இருந்த முஸ்லிம்கள் கல்வீசி தாக்கினர் பதிலுக்கு காவல்துறையினரும் லத்தி சார்ஜீம் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். மத்திய அரசு உடனடியாக சம்பவத்தை பற்றி விசாரனை செய்வதற்காக மத்திய புலனாய்வு குழு ஒன்றையும் மஹாராஸ்ட்டிர மாநில தீவிரவாத தடுப்பு காவல் பிரிவையும் அனுப்பி வைத்து உத்தரவிட்டுள்ளது.அந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உடனடியாக இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூ.ஐந்து லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 25000 மும் வழங்க உத்தரவிட்டுள்ளார் அவர் மேலும் இது பற்றி தெறிவிக்கையில் சமூக விரோத சக்திகளால் தொடுக்கப்பட்டுள்ள இந்த தாக்குதலானது நாட்டின் சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை குழைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சட்ட ஒழுங்கு சீர்குழையாமல் இருப்பதற்காகவும் மத நல்லினக்கம் கெடாமல் இருப்பதற்காகவும் மாநிலமெங்கும் காவல்துறையின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளத. அத்துடன் அன்டை மாநிலங்களான பெங்களுர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு இவ்விவகாரத்தை கூர்ந்து கவணித்து வருவதாக மத்திய அரசின் உள்விவகாரத் துறை அமைச்சர் தெறிவித்துள்ளார்.

ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதை பற்றிய சில தகவல்கள் :

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும். கி.பி 1617 ம் ஆண்டு ஹைதராபாத்தின் 6வது சுல்த்தானான முகம்மத் கூலி குதுப் ஷா என்பவரால் மிர் ஃபைசுல்லா பைக் மற்றும் ரங்கையா சவுத்திரி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த பள்ளியின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படடன பின்னர் வந்த ஆட்சியாளர்களான அப்துல்லாஹ் குதுப் ஷா மற்றும் தானா ஷா ஆகியோரின் ஆட்சிக் காலத்திலும் தொடரப்பட்ட இந்த பள்ளியின் பணிகள் கி.பி 1694 ம் ஆண்டு மொகலாயச் சக்கரவாத்தி அவுரங்கசிப் அவர்களால் இப்பள்ளியின் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு தொழுகைக்காக திறக்கப்பட்டது.

புகழ்பெற்ற சார்மினாரில் இருந்து 100 அடி தொலை வில் உள்ள இந்த பள்ளியின் மத்தியில் உள்ள வளைவானது மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதால் இது மக்கா பள்ளி என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இன்னும் இது 8000 ம் கொத்தனார்களை கொண்டு 77 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்த பள்ளியின் உள் வளாகமானது 75 அடி உயர உயரமும் 220 அடி அகலமும் 180 அடி நீளமும் உடையதாக உள்ளது. இன்னும் பல புகழ் பெற்ற பல கட்டிடக்கலை சிறப்பம்சங்களையும் தன்னிடத்தே கொன்டதாக இந்த பள்ளி உள்ளது.இந்த பள்ளியைப் பற்றிய சரித்திர குறிப்புக்களில், இந்த பள்ளியின் நிர்மான வேலைகள் ஆரும்பமாகியபோது இதை ஆரம்பித்த சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களையும் அழைத்து எவர் ஒரு தொழுகையைக் கூட விடாமல் இதுவரை தொழுதுள்ளாரோ அவர் வந்து இதற்காக அடிக்கல்லை நாட்டலாம் என்றபோது ஒருவரும் வரவில்லையாம் பின்னர் சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்களே அந்த அடிக்கல்லைலை நாட்டிவிட்டு தான் தனது 12 ம் வயதில் இருந்து இதுவரை ஒரு தொழுகையை கூட விடவில்லை என்று கூறியதாக வரலாறுன்டு. மேலும் இது இந்தி அரசால் புராதான சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த பள்ளியில் தான் சமூக ஒற்றுமையை குழைக்கும் வகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இதில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்ய வேணடும்.

Thursday, May 17, 2007

மதச்சார்பற்ற அரசு (Secular State) என்று கூவிக் கொண்டே, அலுவலக வளாகத்துக்குள் கோயில் கட்டுவதா?

சமூக நீதி கண்காணிப்புக்குழுவும் -சமூக சீர்திருத்த ஏற்பாட்டுக் குழுவும் அவசியம் தேவை!
கி.விரமணி

அரசின் அனைத்துத் துறைகளிலும் நடந்துவரும் பணிகளை ஆய்வு செய்ய டாக்டர் வி. சோமநாதன் அய்.ஏ.எஸ், தலைமையில் முதலமைச்சர் அலுவலகத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.


அய்ந்தாம் முறையாக முத்தமிழ் அறிஞர் மான்புமிகு கலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடையும் நிலையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய அளவு, சென்ற ஆண்டு தந்த தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் 90 விழுக்காடு நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாதவற்றையும்கூட பலவற்றை சாதித்துக் காட்டியுள்ளார்!

இட ஒதுக்கீட்டிலும் கண்காணிப்புக்குழு தேவை!

இந்த கண்காணிப்புக் குழுபோலவே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு விழுக்காடு (மகளிர் இட ஒதுக்கீடு உள்பட) சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதற்கு ஒரு கண்காணிப்புக் குழு (Monitoring Committee) போட்டு, சமூகநீதியில் முழு நம்பிக்கையுள்ள மூவர் குழு அல்லது அய்வர் குழு என்று ஒரு குழு போட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீடு, (S.C., S.T., M.B.C., B.C) உள்பட அரசுத்துறைகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி, அரசுக்குத் தகவல் அனுப்பிட வற்புறுத்தவேண்டும்.

எனவே, அந்த குழுவினரின் கண்காணிப்பு, மேற்பார்வை - அதற்கு சட்ட ரீதியான ஏற்பாடுகளைச் செய்யலாம்!

அலுவலக வளாகத்துக்குள் கோயில் கட்டுவதா?

மதச்சார்பற்ற அரசு (Secular State) என்று கூவிக் கொண்டே, மாவட்ட ஆட்சியர்கள் தேர் இழுப்பது, வடம் பிடிப்பது, மாவட்ட காவல்துறை அதிகாரிகளே நெருப்பு மிதிப்பது, ஒரு குறிப்பிட்ட மதத்தின் திருவிழாவில் கலந்துகொள்வது என்பது அசல் கேலிக் கூத்தே!

இதுபற்றி கேள்வி கேட்பாரற்று உள்ளது. அதுபோலவே, காவல்துறை அதிகாரிகள் அய்யப்பன் பக்தியை அப்பட்டமாக வெளிவேஷம் போட்டுக் காட்டுவது - அத்துறை நெறிமுறை (Dress Code - Discipline) இவற்றுக்கு விரோதமானது.

இவற்றையும் இவ்வாட்சி ஒழுங்கு - நெறிப்படுத்தவேண்டும்.

பக்தி அவரவர்களின் சொந்த விஷயம்!

பக்தி அவரவர் சொந்த விஷயம். விடுமுறை போட்டுவிட்டு அந்த வேஷத்தில் இருக்கலாமே தவிர, கடமையாற்றும்போது (Duty) இப்படி இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுதலும் அவசியம், அவசியம்!

அரசுப் பணிமனைகளுக்குள் கோயில் கட்டுவதும் நிறுத்தப் படல் வேண்டும்.

சமூக சீர்திருத்தத்துறை!

சமூக சீர்திருத்தத்துறை என்ற ஒரு துறை - மூட நம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் மனப்பாங்கு (Scientific Temper) முதலியவற்றை இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51-ஏ) அடிப்படைக் கடமைகளை வலியுறுத்தவும், ஒரு குழுவினரை நியமித்து அவர்கள் முதலமைச்சரின்கீழ் ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம்பற்றி வலியுறுத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தி, ரத்தம் சிந்தாத அமைதிப் புரட்சியை - சமுதாய மறுமலர்ச்சித் திட்டமாகச் செய்யவும் வாய்ப்பை ஏற்படுத்தினால் அது இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமையும் என்பதால் அதை அன்புடன் வேண்டுகோளாக பகுத்தறிவாளர்கள் சார்பில் வைக்கிறோம்.
நன்றி: விடுதலை நாளிதழ்.

Wednesday, May 16, 2007

மத்திய அமைச்சராக ராதிகா செல்வி 'புரோட்டோகாலை' (விதி) மீறிய தமிழக அரசு.

'புரோட்டோகாலை' (விதி) மீறிய தமிழக அரசு


சென்னை: மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது 'புரோட்டோகாலை' (விதி) மீறிய செயல் என கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்கள் யாரேனும் பதவியேற்பதாக இருந்தால் அதுகுறித்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகைதான் வெளியிடும். ஆனால் புதிய மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ராதிகா செல்வியின் பதவியேற்பு குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

18ம் தேதி காலை 9.30 மணிக்கு ராதிகாசெல்வி பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை, அத்துமீறி தமிழக அரசு வெளியிட்டது தவறு, இதன் மூலம் புரோட்டோ காலை தமிழக அரசு மீறி விட்டது என்று கூறப்படுகிறது.

சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.

மத்திய அமைச்சரைவயில் நேற்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு ஏ.ராசாவுக்கு மாற்றப்பட்டது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.

உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி, வனத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.

இதுதவிர புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கபப்ட்டுள்ளார். தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார். இணை அமைச்சராக அவர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இவருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.
கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, சென்னையில் போலீஸாரால் எண்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிதான் ராதிகா செல்வி.

பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை அப்படியே திமுக இழுத்துக் கொண்டு திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் நிறுத்தியது. ராதிகா வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கணிசமாக திமுகவுக்குத் திரும்பியது. ராதிகாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நாடார் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் நாடார் சமூகத்தினர் இடையே திமுக மீது அதிருப்தி நிலவி வந்தது.
இந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தித்தான் சரத்குமார் புதிய கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்த நிலையில்தான் சரத்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.

கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பேன்: ராதிகா

இதற்கிடையில் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன் என மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டள்ள ராதிகா செல்வி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.
மத்திய அமைச்சர் பதிவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என அவர் கூறினார்.

Thursday, May 10, 2007

மதுரை வன்முறைகள் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் விஜயகாந்த் ஆவேசம்.

‘தர்மபுரி பஸ் எரிப்புக்கு ஈடான பயங்கர சம்பவம்’ குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் விஜயகாந்த் ஆவேசம்.


சென்னை, மே 10: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: மதுரையிலும் மற்ற இடங்களிலும் திமுகவினர் நடத்திய திட்டமிட்ட வன்முறைகள் நம்மை திடுக்கிட வைத்துள்ளது.

மதுரை தினகரன் அலுவலகம், சன் தொலைக்காட்சிஅலுவலகமும் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்த கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளது. அலுவலக ஊழியர்கள் வெளியே வரமுடியாமல் 3 பேர் தீக்கிரையாகி உள்ளனர். தங்களை காப்பாற்றச் சொல்லி அவர்கள் கூக்குரலிட்டும் யாரும் முன்வரவில்லை. காவல்துறையினர் கைகட்டிக் கொண்டு இருந்தனர்.இச்சம்பவத்தில், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அரசு பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. வன்முறையாளர்களுக்கு பயந்து கடைகள் மூடப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுக்கடங்காத கலவரத்தைக் கண்டு பொதுமக்கள் அலறியடித்து வீட்டுக்குள் ஓடிஒளிந்துள்ளனர். மதுரை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. கண்ணகி மதுரையை எரித்ததை நாம் கண்டதில்லை. ஆனால், மதுரையை அழகிரி எரித்ததை இன்று தமிழ் மக்கள் அனைவரும் கண்கூடாக கண்டுள்ளனர். மதுரை நகரில் இவ்வளவு அத்துமீறிய செயல்கள் நடைபெற்றும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அங்கேயே இருந்தும்கூட, அவற்றின் கைகள் யாரால் கட்டப்பட்டு இருந்தன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர். இன்றைய வன்முறை வெறியாட்டத்துக்கு பிறகு, மதுரையில் மக்கள் நிம்மதியாக இருக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு எவ்வாறு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதேபோல் இந்த படுகொலையிலும் பாரபட்சமற்ற முறையில் விசாரித்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தூக்குத்தண்டனை வழங்கினால்தான், சட்டம் தன் கடமையைச் செய்ததாக அர்த்தமாகும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

பெண்களைப் புரட்டியெடுத்த போலீசார். இன்னொரு கொடியன்குளமான கூமாப்பட்டு.

பஞ்சபட்சி சாஸ்திரத்தின்படி, ஒரு கோழியால் கூமாப்பட்டி கிராமமே அல்லோலகல்லோலப்படப்போகிறது’ என்பதை எந்த ஜோதிடருமே சொல்லவில்லை போலிருக்கிறது. அங்கே ஒரு கோழியால் கோஷ்டிமோதல் உருவாகி, போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்து, தடியடியில் ஒரு பெண்ணும் பலியாகிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எழுபத்து மூன்று பேர் கைதாகி, ஏராளமான பெண்களும், குழந்தைகளும் போலீஸ் கையால் அடி, உதை வாங்கி... இத்தனைக்கும் காரணம் ஒரு கோழி.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் உள்வாங்கி இருக்கிறது கூமாப்பட்டி. தலித் மக்கள் கணிசமாக வாழும் கிராமம் இது. கடந்த 29_ம் தேதி இரவு ரமணி என்ற தலித் ஒருவர், மோட்டார் பைக்கில் அங்கு சென்றிருக்கிறார். அவரது பைக்கில் ஆனந்தம்மாள் என்பவரது கோழி அடிபட்டு இறந்து போனது. ஆனந்தம்மாளும், ரமணியும் தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர் என்று தலித்துகளின் இருவேறு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே வாய்த்தகராறு வலுக்க, விரைவில் அது இரு தரப்பினருக்கும் இடையில் அடிதடி, சொத்து நாசம் என்ற அளவுக்குப் பரிணாம வளர்ச்சியடைந்தது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள். அதன் பிறகும் இருதரப்பினரும் முட்டி மோதிக்கொள்ள முயன்றபோது, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, கூட்டத்தைக் கலைத்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவத்தில் எழுபத்து மூன்று பேரைக் கைது செய்தது போலீஸ். அந்தக் கிராமத்தில் உள்ள தலித் ஆண்கள் எல்லோரும் எஸ்கேப் ஆகிவிட, அதன்பிறகு ஒருவழியாக அமைதி ஏற்பட்டிருக்குமே என்றால், அதுதான் இல்லை. இந்தச் சம்பவத்துக்குப் பின் பலியான ஒரு பெண், போலீஸ் தடியடியால் பலியானதாகப் புகார்கள் எழும்ப, இரவோடிரவாக போலீஸார் இந்தக் கிராமத்துக்குள் புகுந்து, பெண்களையும், குழந்தைகளையும், போட்டுப் புரட்டி எடுத்ததாக மற்றொரு புகாரும் கிளம்பியுள்ளது.

போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.

இதையடுத்து கூமாப்பட்டி, அதன் அருகே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமங்களுக்கு நாம் சென்றோம். கிராமத்தின் நடுவே போலீஸ் வேன் நின்றது. ஆண்கள் நடமாட்டம் மிகக் குறைவாகவே தென்பட்டது. லட்சுமியின் மரணத்தால் கிராமத்தில் ஒருவித பதற்றம் தொற்றிக் கொண்டிருந்தது. நம்மிடம் பேசவே கிராமத்தவர்கள் பயந்தார்கள்.
இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.

‘‘எங்க தம்பி முத்து மாடனை போலீஸார் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போகும்போது, கம்பு ஊன்றி நடக்கும் எங்க அம்மா அதைத் தடுக்கப் பார்த்திருக்காங்க. போலீஸார் எங்க அம்மாவைக் கீழே தள்ளி அடிச்சிருக்காங்க. சம்பவத்தன்று நாங்க ஊரில் இல்லை. எங்க அம்மா இறந்த பிறகுதான், அவங்க ஆஸ்பத்திரியில் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது!’’ என்றனர் அவர்கள் வேதனையுடன்.
அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.

‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.

பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.

போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க.
ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.

போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார்.
போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.

ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன்.
சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.

‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.

இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம்.
‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.

கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.

‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.

மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம்.
‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர்.
லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.

‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.

ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்.

Friday, May 4, 2007

குஜராத் எண்கவுண்டர்; அப்பாவி ‍கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.

முஸ்லிம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர்
அப்பாவி ‍கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி


மே 03, 2007 டெல்லி: குஜராத் போலி எண்கவுண்டர்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மதக் கலவரத்தை தூண்டிவிட்டு அதில் அரசியல் குளிர் காயும் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் பாஜக அரசு இப்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது. தீவிரவாதிகள் என்ற பெயரில் முஸ்லீம்களை விரட்டி விரட்டி எண்கவுண்டர் செய்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த வழக்கில் வன்சாரா உள்பட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலில் இந்த அதிகாரிகளைக் காக்க முயன்றார் மோடி. ஆனால், சிபிஐ விசாரணை வரும் என்ற நிலை உருவானதால், தனது மாநில சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் அதிகாரியாக இருந்த சிஐடி பிரிவு டிஐஜியான ரஜனீஷ் ராய் அனைத்து விவரங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டார். சொராபுதீன் ஷேக் என்பவரையும், அவரது மனைவி கெளசர் பீபியையும் பஸ்சில் இருந்து கடத்திச் சென்ற வன்சாரா தலைமையிலான போலீஸ் படை ஷேக்கை சுட்டுக் கொன்றது. இந்தக் கொலையை நேரில் பார்த்து விட்ட துள்சிராம் பிரஜாபதியும் சுட்டுக் கொன்றனர். அதைவிடக் கொடுமையாக ஷேக்கின் மனைவி கெளசர் பீபியை இரண்டு பண்ணை வீடுகளில் (இதில் ஒரு பண்ணை வீடு பாஜக எம்எல்ஏவுக்கு சொந்தமானது)வைத்து கற்பழித்து, கொலை செய்து உடலை எரித்து சாம்பலை தோட்டத்தில் விசிறியடித்துவிட்டனர்.

இந்த விவகாரங்களை வெளியில் கொண்டு வந்த டிஐஜி ரஜனீஷ் ராயை மாற்றிவிட்டார் நரேந்திர மோடி. இதனால் இந்த வழக்கில் இனிமேல் மேற்கொண்டு உண்மைகள் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி பாலசுப்பிரமணியம் ஆகியோர் இரு வாரத்துக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு குஜராத் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இந்த சொராபுதீன் ஷேக் கிரனைட் கல் ஏற்றுமதியாளர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அவரைக் கொல்ல வன்சாரா அண்ட் கோவுக்கு கிரனைட் ஏற்றுமதி கும்பல் தான் பணம் தந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவர்களிடம் பணம் வாங்கிய வன்சாரா, சொராபுதீனை பயங்கர தீவிரவாதியாக சித்தரித்து காலி செய்துள்ளார். இதில் மன்னிக்க முடியாத விஷயம் அவரது மனைவியான அப்பாவி கெளசர் பீபியையும் கற்பழித்து கொலை செய்தது தான்.