.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, April 28, 2009

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.
நமது மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் 2009 என்ற வலைபூவில் வாசகர் விமர்சனத்தில் பதிவு செய்துள்ளதை நமது நீதியின் குரல் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
_________________________________________
- MOHAMED ABUTHAHIR

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்

1)அரசியல் வேண்டாம் என்ற பயணத்தில் இருக்கும் த.த.ஜ. அத்தின் தற்போதைய தேர்தல் நிலைப்பாட்டினை வரலாறு மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். மயிலாடுதுறையில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட த.த.ஜ. வேறு யாரை ஆதரிக்கப்போகிறது? காங்கிரஸிற்கும் ஆதரவில்லை, அ.தி.மு.க.விற்கும் ஆதரவில்லை என்கிற போது வேறு யாரைதான் ஆதரிக்க போகிறது? .வரும் நாடாளுமன்றத்தில் தமிழக சார்பில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெற இயலாமல் போகுமேயானால் அதற்கு த.த.ஜ. அத்தும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தி.மு.க.விற்கு ஆதரவு என்று கூறும் த.த.ஜ. தி.மு.க. சமுதாய துரோகங்களே செய்யவில்லை என்று சாட்சிக் கூறத் தாயாரா? இல்லை கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுப்பதும், குண்டுவெடிப்பினை காரணம்காட்டி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பியதும், ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்துவருவதும், உலகம் கண்டிராத குஜ்ராத் இனப்படுகொலையை தலைமை ஏற்று நடத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு துணை நின்றதும், தற்போதை தேர்தலில் கூட ஒரு முஸ்லிமிற்கு கூட போட்யிட வாய்ப்பு வழங்காததும், தன்னுடைய குடும்பத்தினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் இன்றுவரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்காதததும் ம.ம.க.யின் சமுதாய துரோகங்களுக்கு ஒப்பிடுகையில் சாதாரணமானதுதான் என்று கூறுகிறார்களோ என்னவோ?

2). த.த.ஜ. தி.மு.க.வை ஆதரிப்பதில் சில காரணங்கள் இருந்தாலும் ம.ம.க. வேட்பாளர்கள் எங்கு நின்றாலும், யார் நின்றாலும் தோற்கடிப்போம் என அழைப்பு விடுப்பதில்தான் எமக்கு ஆட்சேபம். மதிப்புமிக்க முஸ்லிம்கள் ஓட்டானது சிதறுண்டு மதிப்பிழந்து போவதனாலேயே நாம். த.த.ஜ.அத்தின் நிலைப்பாட்டினை விமர்சித்தோம். எங்கள் ஊர் மயிலாடுதுறை தொகுதியில் வருகிறது. எங்கள் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ் போன்ற ஒரு இஸ்லாமியனின் வெற்றி த.த.ஜ. அத்தின் நிலைப்பாட்டினால் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமே விமர்சன் த்திற்கான காரணம்.
வக்ப் வாரியத்தின் தலைவர் பதவிக்கு த.த.ஜ. அத்தினை சார்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரைக்படுவதாக செய்திகள் கசிகின்றன. பொறுத்திருந்துப் பார்ப்போம்
திமுகவிற்கு ஆதரவு எனும் ததஜவின் நிலைப்பாடு சரிதான். மற்ற திமுக அல்லாத கூட்டணி கட்சிகள் பொட்டியிடும் தொகுதியில் என்ன செய்வது என்பதுதானே கேள்வி. அந்த வேளையில் மயிலாடுதுரையில் ஏன் மமகவை ஆதரிக்க கூடாது என்பதற்கு ததஜவிடம் சரியான பதில் இல்லை தான்.

3)அன்புச் சகோதரர்களுக்கு,
தமுமுகவின் நிறுவனரான குணங்குடி ஹனீஃபா அவர்களிடமிருந்து மீளெழுச்சி பெற்றபோதிலிருந்தே 'அரசியலில் பங்கு பெற வேண்டும்; வேண்டாம்' என்ற இரு வேறுபட்ட கருத்துகளை அதன் தலைவர்கள் கொண்டிருந்தனர் என்பது ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

'தமுமுக அரசியலில் பங்கு வகிக்காது; பதவி பெறாது' என்பது பீஜேயின் உறுதியான நிலைபாடாகவும் 'அரசியல் வேண்டும்' என்பது இப்போதைய தலவர்களான பேரா. ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலீ போன்றோரின் வெளிப்படுத்தாத உள்ளக் கிடக்கையாகவும் அப்போது கிடந்தது.

இப்போது தமுமுக அரசியலில் இறங்கி, மமக கண்ட கையோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால், காலங்காலமாகப் 'பதவி பெறப் போவதில்லை' என்று அன்று முதல் இன்றுவரை மேடை தோறும் முழங்கிய ததஜ, வாரியத் தலைவர் பொறுப்புக்குத் தலையசைத்தால் முஸ்லிம்களிடத்தில் அது செல்லாக் காசாகி விடும்.

தவிர,
தமுமுகவைத் தோற்கடிப்பது என்னவோ மார்க்கக் கடமையைப்போல் ததஜ பிம்பம் காட்டுவது கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

4)நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயலும் முஸ்லிமைத் தோற்கடித்து விட்டு, 'முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என்று 'உணர்வு' கண்ணீர் வடிக்கப் போகிறதா?

அல்லது,
'நம் சகோதரன்தானே, வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் போகட்டுமே!' என்று தன் நிலைபாடை மாற்றிக் கொள்ளப் போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

5)தவ்ஹீத் ஜமாத்தின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது.திமுக அதிமுக போடும் அர்த்தமற்ற அரசியல் கோமாளித்தனத்தை இது பிரதிபளிக்கிறது.
தமுமுக வை பிஜேபியோடு ஒப்பிடுவதும், பிஜேவை மோடியோடு ஒப்பிடுவதும். கீழ்த்தரமான விசயங்கள்.

நான் தவ்ஹீத்வாதி. பிஜே சொல்வதுதான் சரி என்று நினைத்தாள் நான் எங்கள் தொகுதியில் ரித்தீஸ் என்ற காமெடியனுக்குதான் வாக்களிக்க வேண்டும்.இதற்கு நான் தயார் இல்லை.பண பலத்தின் மூலம் அரசியல் பன்னும் ரித்தீஸ் தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்ததை சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கும், நமது பிரச்சனைகள் நிச்சயம் கண்டுகொள்ளப்பட மாட்டாது.


6)நமது ஓட்டை திமுகவிற்கு போட்டு வீணடிப்பதை விட தமுமுகவிற்கு வாக்களித்து நம் பலத்தை காண்பித்தாள் மற்ற கட்சிகள் நம்மையும் திரும்பி பார்க்கும்.
நான் பீஜே மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அதே நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எனக்கு வேண்டப் பட்டவர் அல்ல.
அரசியல் என்று வரும்போது மமகவைத்தான் ஆதரிப்பேன். பீஜே பயான் கேட்பேன். அதற்காக ஓட்டுப் போட மாட்டேன்.
திமுகவுடன் அதிமுக சேர்ந்தாலும் மமகவும் ததஜவும் சேராதுபோல.
நல்ல சகோதரத்துவம், போங்க.
அல்லாஹு அக்பர்!

7)தற்கால பிஜேயின் செயல்பாடுகளையும் நிலைபாடுகளையும் குறித்து நாம் அறிவோம். மார்க்க விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் முன்னுக்குப் பின் முரண், பொய், அவதூறு, மார்க்கத்தைத் தன் வசதிக்கும் தன் அறிவுக்கும் ஏற்றாற் போன்று வளைத்தொடித்தல்...... பட்டியல் நீளூம். எனவே, தூரநோக்கற்ற குறுகிய சிந்தையுடன் எடுக்கும் அவரின் நிலைபாடுகளைக் குறித்து சமுதாயத்திற்கு அதிகம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனினும் 'மமகவைத் தோற்கடித்தே தீருவோம்' என சபதம் செய்து களமிறங்கியிருக்கும் ததஜவின் நிலைபாடு, சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, நடுநிலையோடு எடுக்கப்பட்ட நிலையா? என்பதை உணர்வில் வெளியிட்டுள்ள விளக்கமே மிக அழகாக எடுத்துக்காட்டும்.

மமகவைத் தோற்கடித்தே தீருவது என தீர்மானம் போடப்பட்டுள்ளதன் காரணாமாக பிஜே சொல்வது::
1. அவர்கள் ரவுடியிசம் செய்தனர்
2. கட்டப்பஞ்சாயத்து செய்தனர்
3. சமுதாயத்திற்குத் துரோகம் இழைத்தனர்
4. அரசியலில் இறங்கமாட்டோம் என சத்தியம் செய்து விட்டு வாக்குறுதி மீறினர்.
5. சமுதாய சொத்துக்களை அடித்தும் மிரட்டியும் கொள்ளையடித்தனர்.
6. 'ஃபித்ரா, சுனாமி போன்ற வசூல் பணங்களில் கையாடல் செய்தனர்.
7. இவற்றிற்கெல்லாம் மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் செயலாற்றினர்.
இவற்றைத் தவிர பிற வலுவான காரணங்கள் ஏதுமில்லை.

பிஜே கூறும் இவையனைத்தையும் மமகவினர் செய்தனர் என்றே வைத்துக் கொள்வோம்(4. வாக்குறுதி மீறினர் என்பது மட்டும் எனக்குத் தெரிந்து உண்மை)

தற்போதைய தேர்தலில் இவர்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவினர் இவ்விஷயங்களில் எல்லாம் யோக்கியர்கள் என இவர் கூற வருகிறாரா?

ரவுடியிசம், கட்டைப்பஞ்சாயத்துக்குப் பெயர் போனவர்கள் மு.க. அழகிரியும் ஸ்டாலினும்.

தமிழகத்தைப் பகுதிவாரியாக பிரித்து பட்டா போட்டு கொடுக்காத குறையாக கருணாநிதி தனது மகன், குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார்.

சமுதாய வஞ்சனை, துரோகம் இவையனைத்துக்கும் முழு சொந்தக்காரர் கருணாநிதி தான். கடந்த 50 ஆண்டுகாலமாக கருணாநிதி சமுதாயத்தை வஞ்சித்து வருவதைப் போன்று வேறு யார் வஞ்சித்தார்?

அனைத்தையும் விடுவோம். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மனம் வராத கருணாநிதி, எந்த வகையில் சமுதாய பாதுகாவலன் ஆவார்?. இவரை நம்பலாம், முஸ்லிம்களாகிய, இதுவே முதல் முறையாக அரசியல் களம் காணும் மமகவினரை நம்பக் கூடாதா?

'8)எதிர்காலத்தில் இவர்களும் பதவி பெற்ற பின்னர் நம்மை வஞ்சித்து விடுவர்' என குறி சொல்வதற்கு ததஜவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. எதிர்காலத்தில் நடப்பதைக் கூறும் அளவுக்கு பிஜேவுக்கு அல்லாஹ்வின் அதிகாரம் கிடைத்து விட்டதோ?

அப்படியே அவர்கள் வஞ்சித்து விடுவர் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த 50 ஆண்டுகாலமாக முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து, சிங்கிள் கிளாஸ் டீக்குச் சென்னை ப்ளாட்ஃபார்மில் அலைந்து திரிந்த கருணாநிதி, இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடிக்கும் அளவுக்குக் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகியிருக்கிறாரே, அதனை ஒரு முஸ்லிம் அனுபவிக்க போகிறார் எனில் அனுபவித்து விட்டுப் போகட்டுமே?. கருணாநிதிக்குச் சொத்தோ, அதிகாரமோ இனி ஒன்று புதிதாக தேவையில்லை. அனைத்திலும் பின் தங்கியிருக்கும் இச்சமுதாயத்திலிருந்து ஒருவராவது ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரராக வந்து விட்டுப் போகட்டுமே!

பொய்யிலும் ஏமாற்றிலும் நெஞ்சில் குத்தும் துரோகத்திலும் பெயர்பெற்ற கருணாநிதிக்குக் கொடுப்பதை ஒரு முஸ்லிமுக்குக் கொடுத்து விட்டுப் போகலாம்.

இனி, வாக்குறுதி மீறுதல்.

மீறவே கூடாத, மீறி விட்டால் ஷிர்க்கை விட மிகப் பெரிய பாவத்துக்குரிய வாக்கு மீறுதலா மமகவினர் செய்து விட்டனர்?

9)சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயம் எனில் வாக்குமீறுவதில் என்ன தவறு இருக்கிறது?. இது கூடாது என்பதற்கு மார்க்கத்தில் பிஜேயிடம் ஆதாரம் கேட்கமுடியாது. ஏனெனில், மார்க்கத்தைத் தன் விருப்பத்திற்கு வளைத்தொடிப்பதில் இன்று பிஜேயும் சளைத்தவரல்ல.

எனவே வாக்குமீறுதல், சமுதாயநலனை விட பெரிய விஷயமாக நமக்குப்படவில்லை. வாக்கு மீறினால் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என மார்க்கம் வரையறுத்துள்ளது. அதனால், அவ்விஷயத்தில் ரொம்பவே பிஜே அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இனி, அப்படியே வாக்குமீறி விட்டனர், அதனால் தான் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்றால் கூட,

'சென்னை வாழ்வுரிமை மாநாட்டில் அம்மா!!! செயலலிதா முஸ்லிம் சமுதாயத்தின் முன்னிலையில், இதே பிஜேயின் முன்னிலையில் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிக்கு எதிராக அடுத்த தேர்தலிலேயே நடந்து கொண்டார். வாக்குறுதி மீறுபவர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ள ததஜ, அதிமுகவை அழிப்பதற்கு - அதனைத் தோற்கடித்தே தீருவோம் என்று எப்பொழுதாவது தீர்மானம் போட்டதா?. கடந்த தேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அம்மாவின் பின்னால் வாலாட்டிச் சென்றனர்?

எனவே வாக்குறுதி மீறுதலிலும் நீதமான அணுகுமுறை பிஜேயிடம் இல்லை. அந்தக் காரணத்தைக் கூறுவதற்கு பிஜேக்கோ ததஜவிற்கோ எந்த அருகதையும் இல்லை.

10)'ஃபித்ரா, சுனாமி வசூலைக் கொள்ளையடித்தனர் விஷயம், சிரிப்பு தான் வருகிறது!

ததஜ வெளியிட்ட சுனாமி வசூல் கணக்கில்....

உணர்வில் விளம்பரத்திற்கு 50000, ஆட்டோ செலவு, தொண்டர்கள் சீருடை, தொப்பி வாங்க என நீண்ட பட்டியல் போட்டிருந்தனரே?

சுனாமி உதவிக்காக அனுப்பியவர்களின் பணத்தை இதற்கெல்லாம் செலவழித்தோம் என கணக்குக் காட்ட இவர்களுக்கு வெட்கமாக இல்லை? சூனாமிக்காக வாங்கப்பட்ட தொண்டர் சீருடையில் ததஜ என அடித்தல்லவா போட்டிருந்தனர்? ததஜவின் சீருடைக்குச் சுனாமி வசூல் பணமா?

உணர்வில் 'சுனாமிக்கு உதவுங்கள்' என்ற விளம்பரம் செய்ததற்கு உதவி செய்தவர்களின் பணமா?

சுனாமி பணத்தைத் தங்கள் விருப்பத்திற்குச் செலவு செய்து, அதனைப் பட்டியல் போட்டும் காண்பித்த ததஜவினருக்குத் தமுமுகவினர் சுனாமி பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர் எனக் கூற எவ்வித அருகதையும் இல்லை.

இனி என்ன உள்ளது? ஒரே விஷயம் - தமுமுக ததஜவிற்கு எதிராக செயல்பட்டது!

ஆம், முஸ்லிமல்லாத, 50 ஆண்டுகாலமாக சமுதாயத்தை நெஞ்சில் குத்தி வாழ்ந்து வரும் கருணாநிதிக்குக் கேட்காமலே ஆதரவு கொடுத்து விட்டு, எந்த ஒரு அரசியல் கட்சி கூட போடாத அளவிற்குச் சொந்தம் சகோதரர்களைத் தோற்கடித்தே தீருவோம் என(கவனிக்க: மோடிக்குக் காவடி தூக்கிய செயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என இவர்கள் தீர்மானம் போடவில்லை. மாறாக அவளுடன் இதுவரை ஒட்டியே இருந்தனர்), தீர்மானம் போட்டு பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இவர்களுக்குச் சமுதாய துரோகம் முற்றிப் போய் இருப்பதற்குத் தனிப்பட்ட பகை மட்டுமே காரணம்! அல்லாமல் சமுதாய நோக்கம் இதில் அறவே இல்லை!

11)சமுதாயம் விழித்துக் கொண்டாகி விட்டது. பிஜே சொல்வதெல்லாம் சரி தான் என ததஜவில் இருப்பவர்கள் வேண்டுமெனில் தலையாட்டி செல்லலாம். சமுதாயம் பிஜேயை நன்றாக புரிந்து கொண்டாகி விட்டது!

இனி திமுகவிற்கு ஆதரவு என கேட்காமலே ததஜ துண்டு விரித்தது சரியா? என பார்ப்போம்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு உருப்படியாக சொன்ன ஒரே காரணம் - கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மை தான்.

ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் துரோகிக்கு வாக்குறுதி கொடுக்க பிஜேக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வேண்டுமெனில் ததஜ சார்பில் பிஜே வாக்கு கொடுத்தார் என கூறி கொள்ளுங்கள்.

சமுதாயம் தன் நன்றிக்கடனை ஏற்கெனவே தமுமுக மூலம் கொடுத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் ததஜ பேசலாம் எனில், அதனைப் போன்ற சம உரிமை தமுமுகவிற்கும் உள்ளது. தமுமுக சமுதாயத்தின் சார்பில் ஏற்கெனவே நன்றி கடனை அடைத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் நன்றி கடன் அடைக்க தமுமுகவுக்கு உரிமை இல்லை, எனில் ததஜவுக்கும் அந்த உரிமை இல்லை.

சமுதாயத்தின் சார்பில் ததஜ செய்யலாம் எனில் தமுமுகவும் செய்யலாம்.

எனவே எவ்வகையில் நோக்கினாலும் துரோகி கருணாநிதிக்கு மற்றொரு முறை நன்றி கடன் அடைக்க வேண்டிய தேவையே இல்லை.

அப்படியே வலுக்கட்டாயமாக அடைத்தே தீர வேண்டும் எனில், பிஜேயும் பிஜே கூறுவதை எல்லாம் சரி தான் என கேட்டு தலையாட்டும் ததஜவினரும் துரோகி கருணாநிதிக்குத் தங்களின் நன்றி கடனை அடைத்து மோட்சம் பெறுங்கள்!!!
பரவலாக பார்க்கும்போது, த.த.ஜமாத்தின் ம.ம.க. எதிர்ப்பு என்பது வரவேற்கப்படாத ஒன்றாக தெரிகிறது. சமுதாய வாக்குகள் நீர்த்துப் போகத் தான் த.த.ஜமாத்தின் முடிவு வழி வகுக்கும். ஆக.. சமுதாய இயக்கங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமையில்லாத இருண்ட பாதையைத் தான் காட்டுகின்றன.

12)பழையதை கிளரிவிட்டு ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக சுயநலம் மனோயிச்சை காழ்ப்புணர்ச்சி என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து அணுகி செயல்படும் போக்கு சரிக்கும் தவறுக்கும் உள்ள் வேறுபாட்டை மறைத்து விடும்..

இவ்வுண்மையை அனைவரும் உணர்ந்து விழிப்புணர்வோடு ஒருவரையொருவர் எதிரியாக கருதி செயல்படாமல், தூய்மையான, சுமூகமான தியாக மனப்பான்மையுடன் வெறுப்பையும் குரோதத்தையும் களைந்து செயல் படாதவரை முஸ்லிம் சமுதாய நலன் என்பதும் வெரும் பேச்சுதான் என்பதிலும் சந்தேகமில்லை. மேலும் இதனால் அவர்களுக்கும் மறுமையில் ஏதும் நலன் விளையும் வாய்பில்லை என்பதும் தெளிவு.

இதை தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்கள் உணர்ந்திடும் வரை அவர்கள் தலைவர்கள் உணரமாட்டார்கள்,, முஸ்லிம்கள் நிலையிலும் ஏதும் நல்லதொரு மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியமுமில்லை...

அல்லாஹ் இதனை மாற்றிட உதவியும் அருளும் புரியவேண்டும். என பிராத்திப்போமாக.... ஆமீன்

13)சமுதாய நலனைக் குறித்து நீங்கள் உண்மையாக கவலை கொண்டால்.....

இதுகாலம் வரை சமுதாயத்தை வஞ்சித்த திமுகவை விட்டுவிடுவோம். இந்தத் தேர்தலில் ஒரு சீட்டில் கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது சமுதாய நலனா?

அதிமுக, பாஜகவின் பினாமி, அது சமுதாயத்தின் எதிரி எனில், திமுக சமுதாயத்தின் துரோகி என்பதை வசதியாக சகோதரர் PJ மறந்து விடுகிறார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக சுமார் 167 முஸ்லிம்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம். ஆனால், அந்தக் குண்டுவெடிப்பு நடக்கக் காரணமான 19 முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கோவை கலவரம் சம்பவத்தில் எத்தனை பேர் எத்தனை ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் சிறையில் கிடந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா?

கருணாநிதி, துரோகிகளை விடக் கேவலமானவன் என்பதற்கு இதனை விட பெரிய சான்று எது வேண்டும்?

அப்படிப்பட்டவனுடன் பேரம் பேசுவது தான் சரியான நிலை. அல்லாமல் சமுதாயத்திற்குப் போவதற்கு போக்கிடம் இல்லை என்பதற்காக அந்தத் துரோகிக்குச் சமுதாய ஓட்டுகளைக் கண்ணை மூடி வாரி வழங்குவது சுத்த மடத்தனம்.

14)தமுமுக தன்னை விட்டுப் போனாலும் நஷ்டமில்லை, ததஜ மூலமாக இச்சமுதாயத்தின் ஓட்டுகளைக் கூறு போட்டு விடலாம் என்பதை முன்னரே உணர்ந்ததால் தானே, குறைந்த பட்சம் ஒரே ஒரு முஸ்லிமையாவது திமுக வேட்பாளர்களில் கூட இந்தக் கருணாநிதி நிறுத்தவில்லை? இதனை விடப் பச்சை துரோகியும் வஞ்சகனும் உலகில் வேறு யாராவது உண்டா?

முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கட்டும். பிஜே பேசி விட்டால் எல்லாம் சரி தான் என்ற நிலை 90 களில் இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதிலும் சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது போல் பேச்சை மாற்றி மாற்றி பேசுவதிலும் பிஜேக்குப் போட்டியாக இப்பொழுது சமுதாயத்தில் கூட எவரும் இல்லை என்பதைச் சமுதாயம் நன்றாக உணர்ந்துள்ளது.

பாஜகவைத் தமிழகத்தில் இறக்குமதி செய்த, இரத்தக்காட்டேறி மோடிக்குப் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து கூறி உச்சி முகர்ந்த இன வெறிபிடித்த ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என ததஜ அறிவித்திருந்தால் அதற்கு சமுதாய நலனின் மீது அக்கறை உண்டு எனக் கூறலாம்.

திமுகவிற்கு ஆதரவாம்; மமக போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சாக பாடுபடுவார்களாம்.

அப்ப பாஜக, அதிமுக?

15).இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் குதிரை சவாரி என்பதற்கும் பிஜே விளக்கம் அளித்தால், கேட்டுப் புல்லரித்துப் போகின்றவர்களுக்கு புழகாங்கிதமடைந்து முழங்க வாய்ப்பாக இருக்கும்.

இடஒதுக்கீடு கொடுத்ததற்காக அடுத்தத் தேர்தலில் நன்றிக்கடனாக திமுகவை ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்கள்! அதை தமுமுகவிலோ அல்லது ஒத்தக்கருத்டுடைய ஏதேனும் முஸ்லிம் கட்சியிலிருந்தோ செய்திருக்கலாமே? தவ்ஹீதுப் பிரச்சாரமே எங்கள் முதர்பனி என்று வெளியேறி (தமுமுகவை உடைத்து) முன்பு ஜெயலலிதா தற்போது கருணாநிதி என்று லீகர்களைவிடவும் மோசமாக முஸ்லிம்களை அரசியல் வழிகெடுக்க ததஜ ஏன்? என்பதே பலரின் கேள்வி.

ததஜ அரசியல் கட்சியா மார்க்கப்பிரச்சார அமைப்பா? திமுக முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களாகச் சென்ற சட்டமன்றத் தேர்தலில் சகோ.பிஜே செய்த பிரச்சாரங்களெல்லாம் சந்தர்ப்பவாதக் குற்ற்ச்சாட்டுக்களா? அல்லது திமுக அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டதா?

ஓர் அரசியல்வாதி சந்தர்ப்பவாதியா இருக்கலாம்; ஆனால் தவ்ஹீதுவாதி எக்காரணம் கொண்டு சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது.

16)பிஜே தமுமுகவிலிருந்து வெளியேறக்காரணமே, அவர் கூறுவதற்கு அங்கு யாரும் செவி சாய்க்கத் தயாராகாதது தான்.

வெறும் அடிப்படை உறுப்பினராகத் தான் அவர் இருப்பார். ஆனால், இயக்கத்தின் தலைமையை விட அதிகாரம் படைத்தவராக அவர் இருப்பார்; இருக்க வேண்டும். அவரின் பேச்சு எடுபடவில்லை என்ற நிலை வந்தால், உடனடியாக பிளவு தான்.

இதற்கு சரியான உதாரணம்:

சகோதரர் ஹாமித் பக்ரீ கைது செய்யப்பட்ட போது, தமுமுக தலைமையிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகும் முன்னரே அன்று இரவு வின் தொலைகாட்சியில் தோன்றி, 'தமுமுக ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் ஜாமீனூக்காகவோ அவர் வழக்கு விஷயமாகவோ எந்த விஷயத்திலும் உதவி புரியாது' என அறிக்கை வெளியிட்டது தான்.

இந்நேரத்தில், பிஜே தமுமுகவின் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும் தான். 'மனம் திறந்த மடல்' எழுதி விட்டு, அமைப்பாளர் பதவியைக் கூட அந்நேரத்தில் விட்டு விலகியிருந்தார்.

17)தமுமுகவின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை 'அரசியலில் கால் பதித்தால் மட்டுமே, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு ஓரளவாவது தீர்வு கொண்டு வரமுடியும்' என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், பிஜே இதற்கு நேர் முரணான கருத்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, தவ்ஹீதை வளர்க்க தமுமுக வேண்டும் அவ்வளவு தான். அதற்கு மேலாக அரசியலில் இறங்க வேண்டும் என்பதற்கு அவர் எதிர் கருத்தில் இருந்தார்.

தமுமுகவில் அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பிஜேயின் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற நிலை வந்தப் பிறகு தான், என்னென்னவோ காரணங்களை அடுக்கி தமுமுகவை உடைத்தார்.

இது உண்மையில்லை எனில், 'தவ்ஹீத் பிரச்சாரத்திற்குத் தமுமுக எதிராக உள்ளது என கூறி வெளியேறியவர், முஸ்லிம் விரோதி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பாரா?'

அரசியல் வேண்டாம் என்றவர், தொடர்ந்து அரசியலில் தலையை நுழைத்து ஏன் தான் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது தான் புரியவே செய்யாத விஷயம்.

'18)தமுமுக அரசியலில் போட்டியிடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. அந்தக் கருத்து பி.ஜேயின் கருத்துத்தான் ஆரம்பம் முதலே ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர்அலியும் அரசியல் பிரவேசம் சமுதாயத்திதேவை என்று பல முறை கூறி உள்ளார்கள் பல செயற்குழு பொதுக்குழுவில் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளன அதிகப்படியான ஆதவு வந்தவுடன் அரசியலுக்குப் போனால் நான் இயக்கத்த விட்டு போய்விடுவேன் என்று பிஜே மிரட்டுவார் உடனே அவை கைவிடப்படும். அரசியல் பிரவேசம் கூடாது என்று தமுமுகவோ அதன் நிர்வாகிகயோ ஒரு போதும் சொன்னதில்லை பிஜேயைத் தவிர. '

இது முட்ரிலும் உண்மை. நான் கலந்து கொண்ட திருச்சி பொதுகுலுவிலும் இப்படிதான் 'அரசியலுக்கு வந்தால் நான் விலகி விடுவென் என்றார்.' அப்பொலுது புதிய தமிழகத்தை அதரிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கூடியபொழுது இவ்வாரு கூறினார்.

19)நான் இப்பொழுது எந்த இயக்கத்திலும் இல்லை. எதை மறைத்தாலும் சுயநலத்துக்காக தவ்ஹீத்வாதிகளை கூருபோட்ட பெருமை அண்ணன் பீஜே அவர்களைதான் சாரும்.

20)ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டதிலிருந்து முஸ்லிம் சகோதரர்களூக்கு எதிரான தன் தனிப்பட்ட பகையை வெளிப்படுத்தி விட்டது. இதுவரை பாஜகவையோ அதிமுகவையோ தோற்கடித்தே தீருவோம் என ஒரு பெயருக்குக் கூட தீர்மானம் நிறைவேற்றாத ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டத்திலிருந்து ததஜ எதிரிகளின் கையாளாக ஆகி விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.

21)துரோகி கருணாநிதிக்காகவும் அவரின் கட்சி சார்பாக போட்டியிடும் ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளுக்காகவும் தேர்தல் பணி செய்வதற்கு, ததஜ கூறிய பிரதான காரணங்களில் ஒன்று - இடஒதுக்கீடு அதிகரிப்பதாகவும் முந்தைய இடஒதுக்கீடு தவறு சீர் செய்யபடும் என்றும் - திமுக ததஜவிற்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருக்கிறது என்பதே.

ஆனால் அவ்வாறான எந்த ஒர்ர் உறுதிமொழியும் திமுக ததஜவிற்கு இதுவரை கொடுக்கவில்லை
தௌஹீது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யின் கூடாரமாகவும் சமுதாய மக்களிடம் எவ்வித கூச்சமும் இன்றி பொய்களை அவிழ்த்து விடும் மானங்கெட்டவர்களாகவும் ததஜ மாறி விட்டது.

22)பி ஜெ தனிச்சின்னத்தில் நின்றாலும் இந்த மமக வை ஆதரிக்கும் கூட்டம் அவருக்கு உழைக்க வாக்களிக்க முன்பந்தியில் நிற்கும். யாருடன் இருந்தாலும் தனிசின்னம் அதிக தொகுதிகள் அதில் மமக பிரளவில்லை. வேலூர் தேனி தொகுதிகளில் அந்த முன்னணி நிற்கவில்லை.மத்திய சென்னையில் சகோதரர் ஹைதர்அலி பெயர் உறுதிசெய்யப்பட்ட பின்புதான் அதிமுக ஆளை மாற்றியது. இது சங் டிவி கூட்டம் மறைமுகமாக ஆர் எஸ் எஸ் வழி ஜெயலலிதாவிற்கு கொடுத்த பிரஸ்ஸர். சரத்குமார் கூட்டணியையும் சங் டிவி ராதிகா வழி பிரஸ்ஸர் கொடுத்து பிரித்தது. வைகோவை எதிர்த்து கார்த்திக்கை நிறுத்தி பிரஸ்ஸர் கொடுக்க நினைத்த திமுக அதை கொல்லைபுறம் வழி நடத்தியது.தொடர்ந்து செய்தி வாசிப்பவர்கள் கூர்ந்து நோக்குபவர்கள் நன்கு அறிவர்.

இடஒதுக்கீடு தந்தற்காக ஆதரவு கடிதம் கொடுத்த சில நாட்களுக்கு பிறகு முத்துப்பேட்டை பிரச்சனையில் பி ஜே கூட்டத்தில் பேசும் போது கருணாநிதியை குறிப்பிட்டு நீ 3.5 தந்ததாக பேப்பரில் சொன்னாய். நடைமுறையில் இல்லை. முஸ்லீம்களுக்கு பாதுகாப்பாய் இருப்பேன் என்றாய் இன்று துரோகம் செய்கிறாய். நீயும் பேப்பரில் தந்தது போல் நாங்களும் பேப்பரில் தந்தது முடிந்துவிட்டது. இனி அதற்கு மதிப்பில்லை என்று பலமுறை அறிவித்த பி ஜே இப்போது அதை பேசுவது அவருக்கு ஒரு நாக்கா அல்லது பலதா.இஸ்லாமியனுக்கு வெட்கம் ஈமானில் உள்ளது என்று நபிகள் சொன்னார். பி ஜே யிற்கும் அவரை அரசியலில் ( மார்க்கத்தில் அல்ல) தாங்குகிறவர்களுக்கும் அது இல்லையா.; நாகர்கோவிலில் தவ்ஹீத் மறுமலர்ச்சிக்கு 1976 முதல் வித்திட்டபோதும் 80களின் முடிவுவரை நன்கு அறிந்தவன்.

சகோதரர்களே! அந்த பி ஜே இவர் அல்ல. அன்று அவருடன் இருந்த கூட்டமும் இப்போ இவரின் தவறான செயல்களால் அவருடன் இல்லை.

23)ம.ம.க வின் தேர்தல் நிலையை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பேச தனிசின்னத்தில் சமுக பிரதிநிதிகள் சட்ட சபை பாராளுமன்றங்களில் வேண்டும் அதற்கு தீர்வு சொல்லுங்கள். எனவே உள்ளுர் சகோதர சகோதரிகள் மமக விற்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் குடும்பங்களுக்கு தெரிவித்து மமக விற்பு வாக்களியுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.


24)ததஜவிடம் நியாயமான கேள்விகளுக்கு எப்பொழுதுமே பதில் இருக்காது.

இங்கு கேள்வி ஒன்று தான்:

ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளையும் நாற்காலிக்காக பாஜகவுடன் மானம், சூடு, சுரணை இன்றி ஒருமுறை கூட்டணி வைத்துக் கொண்ட போலி திராவிட வேடம் இடும் கருணாநிதியையும் வெற்றி பெற பொய் காரணம் கூறி களமிறங்கி பணியாற்றும் ததஜ, 'மமகவினர் போட்டியிடும் தொகுதியில் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சுடன் களப்பணியாற்றுவோம்' என தீர்மானம் போட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

துரோகிகள், ஊழல் பேர்வழிகள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள், சமுதாய எதிரிகள், பதவி பித்து பிடித்து அலையும் பேமானிகள்..... இப்படிப்பட்டவை எல்லாம் தான் காரணம் எனில்,

இவை அனைத்துக்கும் முழு தகுதி படைத்தவர் கருணாநிதி தான்.

முஸ்லிம் சமுதாயத்தை நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் சுமார் 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கருணாநிதியை நம்புவார்களாம். ஆனால், நேற்றுவரை ஒன்றாக இருந்து அடியும் மிதியும் கொண்டு 'மனம் திறந்த மடல் மூலம்', 'மறுமைக்காகவே உழைப்பவர்கள்' என்றும் 'தன்னலம் பாரா சேவகர்கள்' என்றும் பலவாறாக புகழ்ந்து அவர்களுக்கு எதிராக வாயசைக்க வருபவர்களுக்கு எதிராக மறுமையில் இறைவனிடம் நான் முறையிடுவேன் என தன்னால் மெச்சிப் பாராட்டப்பட்டவர்களை, நம்பமாட்டார்களாம்.

குடிகாரன் கூட காலையில் எழுந்தால் தெளிந்து விடுவான். இரவில் உளறியதை நினைத்து வெட்கப்படவும் செய்வான்.

ஆனால், பிஜேயோ தன் வாய்க்குத் தானே எதிரி என்பதற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரைத் தலைமையாகக் கொண்ட ததஜவின் தீர்மானங்கள் அனைத்துமே தனிப்பட்ட பகைமையின் பிரதிபலிப்புகளே.

இதனைச் சமுதாயம் மிக நன்றாக உணர்ந்தே இருக்கிறது.

சமுதாயத்தை நீண்டகாலத்துக்கு யாராலும் ஏமாற்ற முடியாது.


25')'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியும்...
நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்
ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக சிந்தித்து செய்ல்படகூடியவர்களா?

அல்லது

எந்த அழைப்பிதலும் இல்லாமள் (மமகவை (முஸ்லிம்களை) உயிரை கொடுத்து தோற்கடிக்க வேண்டும்) என்பதற்காக கலைஞரிடம் கூனி குறுகி குனிந்து ஆதரவு கடிதத்தை கொடுத்துல்லார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக செய்ல்படகூடியவர்களா?????

சகோதரர்களே! சிந்தியுங்கள்.... நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.... இறையச்சத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கீழுள்ள ஹதீஸை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.


முஸ்லிம் சகோதரர்களே உணர்ந்து கொள்ளுங்கள் யார் உன்மையான தவ்ஹீத்வாதிகள் என்று.


லாத்த ஹாஸதூ வலாத்த நாஜஸு வலாத்த பாகலூ வலாத்த தபாரூ வலா பய்ழ பய்ழகும் அலா பய்ழ பய்ழின் வ கூன இபாதல்லாஹி இஹ்வானா.
அல் முஸ்லிமு அஹ்லுல் முஸ்லிமி லா எதழிமுஹூ வலா யஹ்ஸிலுஹூ வலா யஹ்ஸிருஹூ அத்தக்ஃவா ஆஹூனா. அய்யுஸிர்ரு தலாத மர்ராஅத். பி ஹஸ்இம்ரின் மினஷ்ஷர்ரீ அய்யுஹ்கிர அஹாஹுல் முஸ்லிமா, குல்லு முஸ்லிமி அலல் முஸ்லிமி ஹாரம் தமுஹு வமாலுஹு வ இர்துஹூ. (ரவாஹூல் முஸ்லிம்)


அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் “பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிரும், பொருளும் அவரது மானம் உள்பட மூன்று விஷயங்கள் ஹாராமாகும். (இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸாகும்)


……………..”நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்......(3: 103)
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காபீர்களை (உங்களுக்குஉற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......(4: 144)…..
முஸ்லிம் சகோதரர்களே ஒற்றுமையின் பக்கம் வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை ஆட்சியாளர்களாக்கி வைப்பான்.

THIS VIEWS TAKEN FROM READER COMMENT IN SATYAMARGAM.COM And http://mmkelection2009.blogspot.com/2009/04/blog-post_25.html

Thanks to Satyamargam.com and mmkelection.blogspot.com

Saturday, April 25, 2009

அன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர்

1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இன்று மத்திய சென்னையில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி அவர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றிய சகோதரர் அபூ சுமையா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கருத்து பதிவு பகுதியில் பதிவு செய்துள்ள தகவலை நன்றியுடன் பதிவு செய்திள்ளேன்.
Blog Editor
____________________________________________________________________

இன்று மத்திய சென்னை தொகுதியில் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் திமுக வேட்பாளர் மட்டுமே அவர் கண்ணுக்கு எதிரியாக தெரியும்; தெரிய வேண்டும். சகோதரர் ஹைதர் அலி, எப்படிப்பட்ட மோசமானவராக இருந்தாலும் சகோதரர் பிஜேக்கு எவ்வளவு பெரிய துரோகம் இழைத்திருந்தாலும்...... தேர்தல் என்று வரும் போது, அதுவும் மத்திய சென்னை தொகுதி என்று வரும் போது, அதிலும் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார் என வரும் போது சகோதரர் பிஜே கொஞ்சமாவது நன்றியுள்ளவராக இருந்தால்......... சகோ. ஹைதர் அலி வெற்றி பெற தன் ஆதரவைக் கொடுத்து, வீதியில் இறங்கி உழைக்க வேண்டும்.

இதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதில், நேரடியாக நான் தொடர்பு கொண்டவன் என்பதால், அல்லாஹ்வுக்காக இவ்விடத்தில் அதனை நினைவுகூர கடமைபட்டுள்ளேன்.

1999 பாராளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அத்தேர்தலில் துரோகி கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். இதன் காரணமாக அப்போது பிஜே உடனிருந்த தமுமுக பாப்பாத்தி செயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களை வெற்றி பெற வைக்க முழு மூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு களமிறங்கியிருந்தது.

இதே மத்திய சென்னை தொகுதியில் அப்பொழுது அதிமுக சார்பில் சகோ. லத்தீப் சாகிப் அவர்கள் போட்டியிட்டார்கள். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலும் அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் கள்ள ஓட்டு கொடிகட்டிப் பறக்கும் எனவும் கள்ள ஓட்டை மட்டும் நாம் தடுத்து விட்டாலே சகோ. லத்தீப் அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கள்ள ஓட்டு நடக்காமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமுமுகவினர் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, எல்லா வாக்கு சாவடியிலும் தமுமுக தொண்டர்கள் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சகோதரர்கள் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என பீஜே பேசிய பேச்சைக் கேட்டு, அரசியலில் எவ்வித நாட்டமும் இல்லாத நானும் தேர்தல் பணிக்காக தமுமுக சகோதரர்களுடன் களமிறங்கியிருந்தேன்.

இதே மத்திய சென்னை தொகுதியில், அண்ணா நகர் பகுதியிலுள்ள ஒரு அரசு மேல் நிலைபள்ளியில், இப்பொழுது இதே மத்திய சென்னையில் போட்டியிடும் சகோதரர் ஹைதர் அலி தலைமையில் நான் உட்பட சில சகோதரர்களுக்குக் கள்ள ஓட்டு நடைபெறாமல் கண்காணிக்க தமுமுக பொறுப்பு தந்திருந்தது.

கள்ள ஓட்டு நடப்பது தெரிய வந்தால் எவ்விதம் யார், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அப்போதைய தேர்தல், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன. அது இரண்டாம் கட்ட தேர்தல். முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்த கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து சுமார் 20க்கு மேற்பட்ட ஸ்டாண்டர்ட் வேன்களும் சுமார் 10க்கு மேற்பட்ட பஸ்களும் அண்ணாநகர் வாக்குச்சாவடி பகுதிகளில் பார்க் செய்யப்பட்டிருந்ததையும் பூத்தினுள் அதிகாரிகளின் துணையுடன் முழு பூத்தையுமே திமுக+பாஜகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருந்ததையும் திமுக+பாஜகவினர் அல்லாத வேறு யாரையுமே ஓட்டு போட விடாமல், உரிய அடையாள அட்டைகள்/ரேசன் கார்டுகள் இருந்தும் அதிகாரிகளை வைத்து அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் ஓட்டு போட்டாகி விட்டது என்றும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டறிந்தோம்.

எங்களுக்குத் தரப்பட்டிருந்த அறிவுரைபடி உடனடியாக தகவலைச் சகோதரர் ஹைதர் அலிக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னோம்.

சம்பவ இடத்திற்கு நாங்கள் கூறியது சரிதானா? என்பதைச் சோதிப்பதற்காக விரைந்து வந்தச் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், நாங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் கண்டவுடன் பூத் தேர்தல் அதிகாரியிடம் அப்போது அங்கு திரண்டிருந்த(ஓட்டு போட விடமால் தடுக்கப்பட்ட கோபத்தில் இருந்த) அதிமுகவினர் புடைசூழ வாக்குவாதம் செய்தார்.

வெறும் 5 நிமிடம் தான் ஆகியிருக்கும். எங்கிருந்து அத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று தெரியாது. சுமார் 2000 பேருக்குக் குறையாமல் இருப்பர். சகோதரர் ஹைதர் அலியோடு இணைத்து நாங்கள் துரத்தி், துரத்தி அடிக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சகோ. ஹைதர் அலிக்கு ஆதரவாக திரண்டிருந்த அதிமுகவினரில் ஒருவரைக் கூட அந்த இடத்தில் காணோம். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த நாங்களும் சகோதரர் ஹைதர் அலியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டி அடிக்கப்பட்டோம். அந்நேரத்தில், சகோ. ஹைதர் அலிக்குப் பாதுகாப்பாக அரசாங்கம் ஏகே47 துப்பாக்கியுடன் ஒருவரை நியமித்திருந்தது. கூட்டத்தின் அடி பொறுக்க முடியாமல், பாதுகாப்புக்கு வந்திருந்தவரிடம் வானத்தை நோக்கிச் சுட சகோ. ஹைதர் அலி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம். துரோகி கருணாநிதி நியமித்த ஆளல்லவா??.. சிறிது நேரத்தில் அவனும் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

அன்று நாங்கள் அடி வாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் பசுமையாக மனதில் உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி, வழியில் கண்ட ஒரு டாக்டரின் காரை மறித்து ஏறி, பின்னர் சிறிது தூரம் சென்று வேறு ஆட்டோ பிடித்தூ....எப்படியோ எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். அங்கு அறையினுள் சகோ. லத்தீப் தலைமையில் தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

நடந்தச் சம்பவத்தைச் சகோ. லத்தீப் சாகிப்பிடம் தெரிவித்ததும், உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும், உங்கள் தலைவரிடம் பேசி சொல்லுங்கள் என்றார்.

சகோ. ஹைதர் அலி , சகோ. பிஜேயை அழைத்துத் தகவல் கூறி, உடனடியாக கருணாநிதி வீட்டை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து, தொண்டர்களை அங்கு வர வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முறைபடி நடைபெறாததை மத்திய அரசுக்கும் தேர்தல் கமிசனுக்கும் கொண்டு செல்ல இதுவே உகந்த வழி என்றும் போராட்டம் அறிவித்தால் எதிர்கட்சிகளும் உடன் இறங்கும் என்றும் கூறினார்.

'தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல்படி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சகோ. லத்தீப் வெற்றிபெறுவது உறுதி(அத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் என நினைக்கிறேன், வாக்கு வித்தியாசத்தில் சகோ. லத்தீப் தோல்வியடைந்தார்) என்றும் நாம் இப்போது அவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தினால் மத்திய சென்னை தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் அது நமக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே, சமுதாய நலனுக்காக நாம் வாங்கிய அடியைப் பொறுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றபின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகம் திரும்புங்கள்' என சகோ. பிஜேயிடமிருந்து பதில் கிடைத்தது.

களத்தின் நிலவரம் என்ன என்பதை அறியாமல் அவரே ஒரு கற்பனை உலகிலிருந்து கொண்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே என மனம் நொந்து சகோ. ஹைதர் அலி தளர்ந்து போய் அமர்ந்தார்.

அப்பொழுது அவர் கூறிய ஒரு வாசகம்:

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறாகி விட்டது!'

அன்று இறைவன் பாக்கியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஹைதர் அலியுடன் நாங்கள் பெற்றிருந்த அடியினைக் கண்டிருந்த சகோ. ஹைதர் அலி, அலுவலகத்தில் கூறி எங்களுக்கு மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்து தரக் கூறி, அதனையாவது செய்யுங்கள் என்றிருந்தார்.

இப்படிப்பட்ட சகோ. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லாஹ்வைத் தான் இதே சகோ. பிஜே, தனது 'மனம் திறந்த மடலில்' , தன்னலம் பாராமல் உழைக்கும் சேவகர்கள் என்றும் சிறைக்குச் செல்லவும் அடியும் உதையும் கொள்ள தயாரானவர்கள் என்றும் இவர்களைச் சமுதாயம் முழுக்க நம்பலாம் என்றும் ஒருமுறை வானளாவ புகழ்ந்திருந்தார்.

இதனை எல்லாம் நான் இங்கு எடுத்துக் கூற நான் ஒன்றும் தமுமுகவோ அல்லது மமக அனுதாபியோ அல்ல. அன்று தேர்தல் பணிக்குச் சென்றதும் தமுமுகவுக்காக அல்ல. பிஜே அன்று அங்கு இருந்ததால் தான் அவரின் அழைப்புக்குச் செவி சாய்த்துத் தேர்தல் பணியாற்றச் சென்றேன். இதனைப் படிப்பவர்கள் நான் தமுமுகவிற்கு அனுதாபம் தேட இதனைக் கூறுவதாக நினைக்கலாம்.

எல்லாம் இறைவன் அறிவான். நான் நேரடியாக அனுபவப்பட்ட இந்தச் சம்பவத்தில், அன்று ரோட்டில் சமுதாயத்துக்காக ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டவர் தான் இன்று அதே மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.

சகோ. பிஜே நன்றாக மனதில் கை வைத்து யோசிக்கட்டும். நாளை மறுமையில் இதற்கான சாட்சியாக நான் நிற்பேன்.

அன்று பிஜே சொல் கேட்டு அடி வாங்கியவருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கச் சகோ. பிஜே கடமைபட்டுள்ளார். சமுதாய நன்மைக்காகத் தான் துரோகி கருணாநிதியை ஆதரிக்கிறோம் என கதையளக்கும் சகோ. பிஜே, தான் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போகும் சகோதரர் ஒருகாலத்தில் தன் பேச்சைக் கேட்டு சமுதாயத்துக்காக இன்று தான் ஆதரிக்கும் கருணாநிதி+பாஜக கூட்டத்தால் அடி வாங்கியவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்!

(இங்கு நான் குறிப்பிட்டுள்ள விஷயம் பொய் என எந்தத் ததஜ அனுதாபியாவது மாமிசம் உண்ண வருவாரானால், வருவதற்கு முன்னர் ஒருமுறையாவது சகோ. பிஜே அவர்களிடம் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறி உண்மையா?? இல்லையா? என்பதைக் கேட்டு விட்டு வரவும்)

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

Tuesday, April 21, 2009

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை, ஏப். 21: மயிலாடு துறை மக்களவைத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் எம். எச்.ஜவாஹிருல்லாஹ் செவ்வாய்க்கிழமை வேட் பு மனு தாக்கல் செய்தார்.

ம னித நேய மக்கள் கட் சியி ன் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். எச்.ஜவாஹி ருல்லாஹ், மயிலாடுதுறை சார் ஆட்சி யர் அஜய்யாதவி டம் செவ்வாய்க் கி ழமை தனது வேட் பு மனுவைத் தாக்கல் செய்தார்.

சொத்து ம தி ப் பு : அசையும், அசையா சொத்துகள், நகைகள், பணம் கை யி ருப் பு உள்ளிட்டவை என ரூ. 77 லட் சம் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பி ட்டுள்ளார்.

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் வேட்புமனு தாக்கல்.

மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலி வேட்புமனு தாக்கல்.

ஏப்21: மனித நேய மக்கள் கட்சி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் ஹைதர்அலி போட்டியிடுகிறார். இவர் இன்று சென்னை மாநகராட்சியில் தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாவிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக ஜனநாயக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளராக மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறேன், அத்தொகுதியை வளம் பெற செய்ய நடவடிக்கை எடுப்பேன். இதுவரை இங்கு வெற்றி பெற்றவர்கள் தங்களை மட்டும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

வெள்ள நிவாரண நிதி கூட அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வில்லை. அதிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. நான் வெற்றி பெற்றால் இது போன்ற குறைபாடுகள் களையப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் சமமாக மதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்புமனு தாக்கலின்போது, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பிரசாத், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் நடராஜன், வக்கீல் சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக வேட்பாளர் ஹைதர் அலி ஆயிரக் கணக்காக கட்சி தொண்டர் களுடன் ராஜா அண்ணா மலை மன்றத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் வரை திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார். பொருளாளர் ஆருண், அமைப்பு செயலாளர் ஜெயினுலாதீன், தலைமை நிலைய செயலாளர் இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Saturday, April 18, 2009

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
வேட்பாளர் சலிமுல்லாஹ் கான்

மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீக், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது

இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.



ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்

அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.

வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்

சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.

அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது

முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

நன்றி:முகவைத்தமிழன்

Friday, April 17, 2009

வதந்திகளை நம்பவேண்டாம்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது இவை உண்மைக்குப் புறம்பான தகவலாகும்.

திமுக கூட்டணியிலிருந்து ம.ம.க. வெளியேறியது ஏன்?

திமுக கூட்டணியிலிருந்து ம.ம.க. வெளியேறியது ஏன்?

வெளிவராத உண்மைகள்

நமது செய்தியாளர்

பிப்ரவரி 7 அன்று யாரும் எதிர்பாராவண்ணம் மக்கள் அலை தாம்பரத்தை முற்றுகையிட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாட்டிற்கு திரண்ட லட்சக்கணக்கானோர் பங்கேற்ற மாநாட்டில் ம.ம.க.வின் அரசியல் பிரகடனம் தெளிவுபடுத்தப்பட்டது.

முஸ்லிம்கள் இனி அடிமை அரசியலுக்கு பணியமாட்டோம் என்றும், பிற இன மக்களின் ஆதரவோடும் பங்கேற்போடும் அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க துணிச்சலான முடிவுகளை எடுப்போம் என்றும் சூளுரைக்கப்பட்டது. ஒரு சீட்டு கலாச்சாரம் முடிவுக்கு வந்துவிட்டது என்றதோடு, முஸ்லிம்கள் நிறைந்து வாழும் நாடாளுமன்றத் தொகுதிகளும் அடையாளம் காட்டப்பட்டது.


புதிய நம்பிக்கையோடு முஸ்லிம்கள் எழுந்து நின்றார்கள். இதுதான் பலரது தூக்கத்தைக் கெடுத்தது. முஸ்லிம்கள் தனித்த அடையாளத்தோடு அரசியல் ரீதியாக அணிதிரள்வது தங்களது கடந்தகால சுகத்திற்கும், எதிர்கால நம்பிக்கைக்கும் பேராபத்தாக முடிந்துவிடுமோ என பதறிவிட்டனர்.


இதுதான் மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியிலிருந்து நயமாக கழற்றிவிடப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாகும்.


இறுக்கம்


மாநாடு முடிந்த பின்னால் மரியாதை நிமித்தமாகக்கூட திமுகவிடமிருந்து வாழ்த்துச் செய்தி வரவில்லை. கலைஞர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரபலங்கள் அனைவருக்கும் நமது மாநாட்டின் அழைப்பிதழை வழங்கினோம். அவர்களிடம் ஒருவகையான இறுக்கம் நிலவியதை தாமதமாகவே நம்மால் புரிந்துகொள்ள முடிந்தது.


தொடர்ந்த கோரிக்கை


தொடர்ந்து ம.மக.வின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டங்களும், தேர்தல் நிலை விளக்கக் கூட்டங்களும் சென்னை, மேலப்பாளையம், பல்லாவரம், பொதக்குடி, சேலம் என தொடர்ச்சியாக நடந்த போதெல்லாம் திமுக கூட்டணியில் நாம் நீடிக்க விரும்பியதையும், ஆறு தொகுதிகளில் நமது செல்வாக்கு இருக்கிறது. அதிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் நமக்குத் தரவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தோம். தமுமுக சார்பில் சமீபத்தில் நடைபெற்ற கோபிச்செட்டிபாளையம், கிருஷ்ணகிரி பொதுக்கூட்டங்களிலும் இதே கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.


முதல் சுற்று


இந்தப் பின்னணியில் மார்ச் 16 அன்று மு.க.ஸ்டாலின், தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களிடம் அலைபேசியில் பேசினார். ''அண்ணே... உங்கள் கூட்டணியில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!'' என சற்றே விளையாட்டாக ஸ்டாலின் பேசியிருக்கிறார். ''எங்களுக்கு எத்தனைத் தொகுதிகள் தருவீங்க?'' என்று ஹைதர் அலி அவர்களிடம் 'தமாஷாக' ஸ்டாலின் கேட்க... நாம் உட்கார்ந்து பேசுவோம் என அவர் பதிலளித்திருக்கிறார்.


மார்ச் 17 அன்று ம.ம.க. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் அறிவாலயம் சென்று முதல்கட்ட பேச்சுவார்த்தையை மு.க. ஸ்டாலினிடம் நடத்தியுள்ளனர். அப்போது பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்களும் அருகில் இருந்துள்ளனர்.


நாங்கள் அதிகமான தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். வேலூர், மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட தொகுதிகளிலிருந்து ஏதாவது மூன்று தொகுதிகள் தேவை என ம.ம.க. சார்பில் கேட்கப் பட்டது.


ஆதரவு மட்டும்


அவர்களோ... ''இந்த தேர்தலில் முன்பு போல் வெறுமனே ஆதரவு மட்டும் தாருங்கள். சட்டசபை தேர்தலில் மற்றதை பார்த்துக் கொள்ளலாம்'' என அதிர்ச்சி குண்டுகளை வீசியுள்ளனர்.


''அதற்கு வாய்ப்பில்லை'' என ம.ம.க. தரப்பு கூற, பிறகு, மீண்டும் சந்திப்போம் என்ற அளவிலேயே முதல் சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.


இரண்டாவது சுற்று


பிறகு மார்ச் 27 அன்று இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் ம.ம.க. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், தமுமுக பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ், ம.ம.க. பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதில் பேசும்போது, பூஜ்யத்திலிருந்து புறப்பட்டு ஒரு தொகுதி என்ற நிலையிலேயே திமுக தரப்பு நின்றது. ம.ம.க. குழுவினர், 'இரண்டு தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபாவும்' என்ற நிலைக்கு வந்தனர். கடைசியாக, 'இரண்டு தொகுதிகள் தந்தால் சரி' என்ற மனநிலைக்கு ம.ம.க. தரப்பு மனதளவில் தயாராக இருந்தது.


ஆனால், திமுக தரப்பும் விடாப்பிடியாக நீடித்ததால் பேச்சுவார்த்தை இழுபறியானது. ஒரு கட்டத்தில் ஆற்காடு வீராசாமி அவர்கள் தமுமுக தலைவரின் அருகில் வந்து, 'மே 16ஆம் தேதி உங்களை எம்.பி.யாகப் பார்க்க வேண்டும்' எனக் கூற, ஒரு தொகுதி என்பதை மறை முகமாக சொல்லப்படுகிறது என்பதை பேராசிரியர் புரிந்துகொண்டு, 'இரண்டு தொகுதிகள் தான்' என உறுதியாக நிற்க, இனி பிரச்சி னையை கலைஞரிடம் பேசித் தீர்ப்பது என முடிவாகியது.


இந்த பரபரப்பால் கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான பயணத்தை ரத்து செய்த பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள், கலைஞர் சந்திப்புக்காக காத்திருப்பது என முடிவு செய்தார்.


கலைஞருடன் சந்திப்பு


அன்று மாலையே கோபாலபுர இல்லத்தில் அதே ம.ம.க. குழுவினர் கலைஞரை சந்தித்தனர். தயாநிதி மாறன், மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோர் அப்போது இருக்க, கலைஞர், பேராசிரியர் ஜவாஹி ருல்லாஹ்வோடு வழக்கம்போல் உற்சாகமாக பேசியிருக்கிறார்.


கடைசியாக ஜவாஹிருல்லாஹ் அவர்கள், 'எங்களுக்கு இரண்டு தொகுதிகள் தேவை' என்பதைச் சுட்டிக்காட்ட, அருகிலிருந்த ஆற்காட்டார் குறுக்கிட்டு, ''கலைஞர் உடல்நிலையைப் பாருங்கள்'' என பொருத்தமற்ற சூழலில் ஒரு கருத்தைக் கூறி, குழப்பத்தை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்.


இவையாவும் கலைஞர் முன்னிலையில் நடக்கிறது. பொதுவாக வேறு
முஸ்லிம் தலைவர்களாக இருந்திருந்தால், அப்படியே உருகி, இளகி, ஆனந்தக் கண்ணீர்விட்டு ஒரு தொகுதியை மட்டும் ஏற்றுக்கொண்டு திரும்பியிருப்பார்கள். அந்த 'மெஸ்மரிச' நாடகத்திற்கு பலியாகி இருப்பார்கள்.
ஆனால் ம.ம.க. குழுவின் உறுதியை கலைஞரும், மற்றவர்களும் துளியும் எதிர்பார்க்கவில்லை. அந்த சந்திப்பும் லி பேச்சுவார்த்தையும் எந்த முடிவையும் எடுக்காமலேயே நிறைவுற்றது.


கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்தில் கூடியிருந்த செய்தியாளர்கள் வெளியே வந்த ம.ம.க.வினரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பேரா. ஜவாஹிருல்லாஹ்வுக்கு அருகில் வந்த பொன்முடி, 'சாதகமாக சொல்லுங்கள்' எனக் கூற, அவர் மறுத்துவிட்டு 'பேச்சுவார்த்தை நீடிக்கிறது' என்பதை மட்டும் கூறிவிட்டு புறப்பட்டு விட்டார்.


இந்நிலையில் மார்ச் 28 அன்று மாலை திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு கள் அறிவிக்கப்படவிருக்கிறது என்ற செய்தி காற்றில் பரவியது.


அன்று காலை பேரா. ஜவாஹிருல்லாஹ், கிருஷ்ணகிரிக்கு, ஐந்து
ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிக்கப்பட்டு பார்வையிடும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து புறப்பட்டு போய்க் கொண்டிருந்தார்.


மீண்டும் அழைப்பு


அன்று மதியம் 12 மணிக்கு அவரை ஆற்காட்டார் அலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் பேரா. ஜவாஹிருல்லாஹ்வும் தனது நிலையிலேயே உறதி காட்டினார்.


அன்று மாலை மு.க.ஸ்டாலின், பேரா.ஜவாஹிருல்லாஹ்வை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ''டெல்லியிலிருந்து குலாம் நபி ஆசாத் வந்துவிட்டார். திருமாவளவனும், காதர் மொய்தீனும் வர உள்ளனர். நீங்களும் வாருங்கள். தொகுதிகளை அறிவித்து விடலாம்'' என கூறியுள்ளார்.


முடியவே முடியாது


''இரண்டு தொகுதிகள்தானே...'' என பேரா. ஜவாஹிருல்லாஹ் ஸ்டாலினிடம் திருப்பிக் கேட்டிருக்கிறார். ''இல்லை. ஒரு தொகுதிதான்'' என ஸ்டாலின் பதிலளித்துள்ளார். ''அப்படியென்றால் அதை எங்களால் ஏற்க முடியாது'' எனக்கூற, ''இதை கலைஞரிடம் கூறவா?'' என ஸ்டாலின் கேட்க, ''தாராளமாக எங்கள் நிலையைச் சொல்லுங்கள்'' என பேரா. ஜவாஹிருல்லாஹ் கூற, அதோடு உரையாடல் முடிந்து விட்டது.


எந்த நிலையிலும் சமுதாய மக்களின் எதிர்பார்ப்பையும், கட்சியினரின் உறுதி யையும் விட்டுக் கொடுப்பதில்லை என்ற உறுதியோடு பேரா. ஜவாஹிருல்லாஹ் இருந்திருக்கிறார்.


அந்த பரபரப்பான சூழ்நிலையில் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கத்தார் நாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்தார். தலைவர் ஜவாஹி ருல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கிருஷ்ணகிரி பொதுக்கூட்ட மேடையில் இருந்தனர்.


அறிவாலய பரபரப்பு


அப்போது அண்ணா அறிவாலயத்தில் கூடிநின்ற பத்திரிக்கையாளர்கள், ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு, ''கூட்டணிக் கட்சிகள் எல்லோரும் வந்து விட்டார்கள். நீங்கள் வரவில்லையா?'' எனக் கேட்க, அவரோ, ''அங்கு என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் தகவல் தாருங்கள்'' எனக் கூறினார்.


அப்போதுதான் காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட் டோருக்கான தொகுதிகள் எண்ணிக்கைகள் அறிவிக்கப்பட்டதையும், பத்திரிக்கையாளர்கள் ''மனிதநேய மக்கள் கட்சி என்னவாயிற்று?'' என கேட்டதையும் மேடையில் இருந்தவாறே தலைவர்கள் கேட்டறிந்தனர். எல்லோருக்கும் அதிர்ச்சி! உலகமெங்கும் தொலைக்காட்சியைப் பார்த்துவிட்டு அலைபேசிகள் முற்றுகை யிட்டன.


காரணம், கலைஞரின் முகபாவம், ம.ம.க. குறித்து அவர் பதிலளித்த விதம், ஏற்கனவே நடத்திய பேச்சுவார்த்தைகளை மறைத்துவிட்டு ''அவர்களின் தலைவர்களில் ஒருவர் வெளிநாட்டில் உள்ளார். அவர் வந்ததும் பேச்சுவார்தை நடை பெறும்'' எனக் கூறியது, இவையாவும் முஸ்லிம்களுக்கு மத்தியில் கோப அலையை பரப்பியது.


அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்ற, மீடியாக்களோ ம.ம.க.வின் அடுத்தக்கட்ட நிலைபாடு என்ன என்பது குறித்து விதவிதமாக செய்திகளைப் பரப்பின.


குலாம்நபி ஆசாத்


கிருஷ்ணகிரி பொதுக்கூட்டம் முடித்து விட்டு இரவு 10.30 மணியளவில் தலைவர்கள் விடுதியில் தீவிரமாக சூழ்நிலையை விவாதித்துக் கொண்டிருந்த போது, குலாம் நபி ஆசாத் பேரா. ஜவாஹிருல்லாஹ் வின் அலைபேசியில் தொடர்பு கொண்டார்.


''ஒரு தொகுதியை ஏற்க முடியாதா?'' என கேட்க அவரிடம் 'முடியாது' என பேராசிரியர் மறுத்துவிட்டார். அடுத்த நாள் காலை பத்திரிகைகளில் ம.ம.க. குறித்து செய்திகள் இடம்பிடித்தன.


29 அன்று காலை பிரசிடென்ட் ஹோட்டலில் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், தங்கபாலு, சுதர்சனம், இளங்கோவன், வாசன் ஆகியோருடன் மனிதநேய மக்கள் கட்சி குறித்து ஆலோசனை நடத்த, அதில் ப.சிதம்பரம் அவர்கள் ம.ம.க.வின் பலம்குறித்து எடுத்து ரைத்ததாகவும், அதற்கேற்ப உளவுத்துறை, ம.ம.க. அணி மாறினால் 17 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


அன்று மதியம் காங்கிரஸ் எம்.பி. ஹாரூண் அவர்கள் ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரியை தொடர்பு கொண்டு பேசினார். ''பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை, சோனியாவுடன் சந்தித்துப் பேசவைக்க குலாம் நபி ஆசாத் முயற்சி செய்கிறார். இதை தலைவரிடம் கூறுங்கள்'' என தெரிவித்தார். யோசிப் போம் என நமது தரப்பில் கூறப்பட்டது.


வெளிநாட்டிலிருந்து தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்கள் வருகைதர வேண்டியிருந்ததால், '30ஆம் தேதி ம.ம.க.வின் உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறும்' என அறிவிக்கப் பட்டதால், மீடியாக்கள் தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.


காங்கிரஸின் முயற்சி


உயர்நிலைக்குழு கூடி ஆய்வு நடத்திக் கொண்டிருந்த போது, காங்கிரஸ் எம்.பி. ஹாரூணை குலாம் நபி ஆசாத் அனுப்பிவைக்க, அவர் தலைமையகத் திற்கு வருகை தந்தார்.


கலைஞரை சந்தித்துவிட்டு வந்ததாகக் கூறியவர், ''ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியதை எடுத்துரைத்தார்.


நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்.


பின்னர் ஹாரூண் அவர்கள், காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட
தொகுதிகளிலிருந்து ஒரு தொகுதி கிடைக்க மேலிடம் முயற்சி செய்யும் என்று கூறிவிட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வரவேயில்லை. திமுக தரப்போ ஏதோ ஒரு மிதப்பில் திளைக்க... அடிமை அரசியலைவிட தன்மான அரசியலே முக்கியம் என்ற நிலையில் ம.ம.க.வும் உறுதி காட்டியது. ஏப்ரல் 5 வரை இதே நிலை நீடிக்க, பின்னர் புதிய நிலையை நோக்கி ம.ம.க. நகர்ந்தது.


திமுகவின் திடீர் போக்கு


காலம் காலமாக முஸ்லிம் அமைப்புகள் ஒரு தொகுதியையே பெரிய விஷயமாகக் கருதிவரும் நிலையில், உங்க ளுக்கு இரண்டு தொகுதிகள் வேண் டுமோ? என்ற திமிர் போக்குதான் திமுக தலைமையிடம் நிலைகொண்டி ருந்தது. கலைவாணர் அரங்கில் 1500 பேரை கூட்டிய கட்சிக்கு ஒரு தொகுதி... தாம்பரத் தில் லட்சக்கணக்கானோரை திரட்டிய கட்சிக்கும் அதே ஒரு தொகுதியா? இது என்ன நியாயம்? என அரசியல் பார்வை யாளர்கள் நியாயம் பேசினர். அதில் நூற்றுக்கு நூறு நியாயமிருந்தது.


பா.ம.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் விட்டுச் சென்ற 14 உபரி தொகுதிகளில் தங்கள் பலத்திற்கேற்ப குறைந்தது 2 தொகுதிகளைத் தாருங்கள் என்றுதான் ம.ம.க. கேட்டது.


சூழ்ச்சி?


திமுக கூட்டணியில் நிறைய கட்சிகள் இடம்பெற்று இருந்திருந்தால் ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு ராஜ்ய சபாவும் தாருங்கள் என்று சமாதானம் ஆகியிருப் போம். வெற்றியைத் தரக்கூடிய எல்லோரும் ஓடிவிட்ட நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற உபரி தொகுதி களிலிருந்து கூட நமக்கு கொடுக்க மனம் வரவில்லையெனில், திமுகவின் சூழ்ச்சி என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இப்போதே இவர்களுக்கு இரண்டு தொகுதிகள் கொடுத்து, அதில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் பின்னர் பா.ம.க. போல பெரும் எழுச்சிப் பெற்றுவிடு வார்கள். இவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும் என்ற திட்டத்திலேயே அரைமனதோடு திமுக பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கிறது.


கலைஞரின் எண்ணம்?


தங்கள் கட்சிதான் முஸ்லிம்களின் உற்ற நண்பன் என்ற நிலையை தமுமுக உடைத்தது. எஞ்சியிருக்கும் நம்பிக்கையை ம.ம.க. தகர்த்து வருகிறது. எனவே முஸ்லிம்களின் ஒன்றுபட்ட அரசியல் எழுச்சியை நாம் அங்கீகரிப்பது தங்களது குடும்ப நலனுக்கு ஆபத்து என கலைஞர் நினைத்திருக்கிறார். அதனால் தான் ம.ம.க.வை சரியான நேரத்தில் கூட்டணியிலிருந்து கலைஞர் கழற்றி விட்டிருக்கிறார்.


வெளிநாடு சென்றிருந்த தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை வந்ததும் 30ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தலாம் என நாம் காத்திருந்தோம்.


அது நடைபெறக் கூடாது என்பதற் காகவே 28ஆம் தேதியே கருணாநிதி தங்களது 21 தொகுதிகளையும் அறிவித்து, ம.ம.க.வை அவமானப்படுத்தி இருக்கிறார்.


அவர் காயிதே மில்லத்தின் சமாதிக்கு பொன்னாடை போர்த்திவிட்டு, அருகில் ஒரு பச்சைக்கொடி கூட்டத்தை வைத்துக் கொண்டால் போதும். முன்பு போல முஸ்லிம் ஓட்டு கிடைத்துவிடும் என தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.


ம.ம.க.வுக்கு துரோகம் செய்ததற்கான பலனை குறைந்தது 17 தொகுதிகளில் திமுகலிகாங்கிரஸ் கூட்டணி சந்திக்கப் போகிறது என்பதை மே 13 தேர்தல் விரைவில் உணர்த்தும். கலைஞரை அந்த முடிவு திருத்தும்!

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் விபரம்.

மத்திய சென்னை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, ராமநாதபுரம்
ஆகிய நான்கு தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டி!


பிப்ரவரி 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப் பட்டு இரண்டே மாதங்களில் அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது.


திமுக கூட்டணியிலிருந்து திட்டமிட்டு கழற்றி விடப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி, எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது.

இப்போது மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி என நான்கு தொகுதிகளில் போட்டியிடுவது என ம.ம.க. உயர்நிலைக்குழு அறிவித்திருக்கிறது.

பொருளாதார செலவுகளை கருத்தில் கொண்டு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது.


இந்நிலையில் ம.ம.க.வின் தலைமை யில் பல கட்சிகள் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளன. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


டாக்டர் ராமதாஸ் (பா.ம.க.) போன்ற தலைவர்கள், தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்) டி.கே.ரங்க ராஜன் (மார்க்சிஸ்ட்), டி.ராஜேந்தர் (லட்சிய திமுக) போன்ற அரசியல் பிரபலங்களும் தமுமுக தலைமையகம் நோக்கி வருகை தந்தது ம.ம.க.வின் அரசியல் பலத்தை வெளிக்காட்டியுள்ளது.


காயிதே மில்லத்தின் காலத்திற்குப் பின்பு தமிழக முஸ்லிம்களின் அரசியல் எழுச்சியடைந்துள்ளது.


முஸ்லிம்களின் பின்னணியில் இயங்கும் ம.ம.க., பல்வேறு கட்சிகளுக்கு ''கூட்டணி தலைமை தாங்கும்'' அரசியல் தகுதியை இரண்டே மாதத்தில் பெற்றிருப் பது அரசியல் ஆச்சரியமாகும்.


ஒரு முஸ்லிம் பின்னணி கொண்ட கட்சிக்கு செய்தி ஊடகங்கள் தரும் முக்கியத்துவம் நம்மை மேலும் நம்பிக்கை யோடு செயல்படத் தூண்டுகிறது.


முஸ்லிம்களும், பிற மக்களும் ம.ம.க.வின் அரசியல் நகர்வை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறார்கள். நம்மை ஒழித்துக்கட்ட நினைத்தவர்கள் இப்போது நிலைகுலைந்து போயுள்ளார்கள். ம.ம.க.வின் எழுச்சி காரணமாக ஆளும் கூட்டணி 17 தொகுதிகளில் தோல் வியைத் தழுவும் என்ற உளவுத்துறை யின் அறிக்கை உண்மையாகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்.

ம.ம.க. தேர்தல் நிலைபாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்
கேள்வி-பதில்களாக இங்கே தெளிவுபடுத்தப்படுகிறது

கேள்வி: ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு பிற்காலத்தில் இரண்டு தொகுதி களை பேரம் பேசியிருக்கலாமே?

பதில்: வடமாவட்டங்களில் மட்டும் இருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஒரு தொகுதியை மட்டும் கொடுத்திருந் தால் உங்கள் கருத்தை பரிசீலித் திருக்கலாம். அவர்களுக்கு இரண்டு கொடுத்தது நமக்கு மகிழ்ச்சிதான். அதே அளவு பங் கீட்டை தமிழகமெங்கும் 14 ஆண்டு கால மாய் வேரூன்றி, இன்று ம.ம.க.வாக மலர்ந் திருக்கும் நமக்கும் தந்திருக்கலாம். உபரியாக 14 தொகுதிகள் திமுகவிடம் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு தொகுதி என்ற நிலையை ஒழிப்பதற் காகத்தான் ம.ம.க.வே தொடங்கப்பட் டுள்ளது. முந்தைய சமுதாயக் கட்சிகள் செய்த அதே தவறை நாமும் செய்யக் கூடாது. இன்று ஒரு தொகுதியை ஏற்றிருந் தால் இனி காலம் முழுக்க அதே அளவு டனேயே நமது அரசியல் முடிந்திருக்கும்.
இப்போது துணிச்சலாக நாம் எடுத்த முடிவு காரணமாக இப்போது நமக்கு சிறு இழப்பு என்றாலும், எதிர்காலம் சிறப்பாக அமையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இன்றைய இழப்புகள்தான் நாளைய வெற்றிகள், இழக்கமால் எதையும் பெறமுடியாது என்பதை ஊசலாட்ட முன்னவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்

.
கேள்வி: பல்லாவரத்தில் நடந்த ம.ம.க. கூட்டத்தில் கலைஞரையும், திமுகவையும் தாக்கிப் பேசியதால் தாங்கள் கூட்டணியிலிருந்து கழற்றி விடப்பட்டதாக திமுகவினர் கூறுகிறார்களே...?


பதில்: முற்றிலும் தவறான செய்தி. நமது தலைமை நிர்வாகிகள் பேசும் பொதுக்கூட்டங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. அதை யாருக்கு வேண்டுமானாலும் போட்டுக் காண்பிக்கிறோம். அப்படி பேசியதாக கூறுபவர்கள் அதனை நிறுபிக்கட்டும். இதுபோன்ற பொய்யான செய்திகளைக் கூறி, நம்மை வெளியே அனுப்பியதற்கு திமுக தரப்பு காரணங்களை கற்பிக்க முயல்கிறது. அவ்வளவுதான்.


கேள்வி: திமுக தரப்பு உங்களைக் கழற்றிவிட வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா?


பதில்: மதுரை வக்ப் வாரிய கல்லூரியில் 9 பேராசிரியர்களின் இடத் தையும் முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும் என அழகிரி தரப்பு கோரியது. அதை வக்ஃப் வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி அவர் கள் அனுமதிக்கவில்லை. பல முக்கிய திமுக புள்ளிகளின் வக்ஃப் சொத்தை ஆக்கிரமித்திருந்தனர். அவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டன. மேலும் பல சொத்துக்கள் மீட்கப்படும் முயற்சிகளிலும் இருந்தன. இவைகள் முக்கியக் காரணங்களாக இருக்கலாம் என யூகிக்கிறோம். அடுத்து அடங்கி, ஒடுங்கிப் போகும் அரசியலில் சமுதாய நிலைப்பாட்டுக்காக நிமிர்ந்து நின்றது மற்றொரு காரணமாக இருக்கலாம்.


கேள்வி: திமுக கூட்டணியிலிருந்து வெளியேறிய ஹைதர் அலி அவர்கள் வக்ப் வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகாமல் நீடித்திருக்கலாமே?


பதில்: யாரும் செய்யாத பல நல்ல விஷயங்களை வாரியத்தில் தொடங்கி வைத்துவிட்டு பாதியில் வெளியேறு கிறோமே என்ற கவலை நமக்கு இல்லை. இறைவன் எதை நாடுகிறானோ அதுதான் நடக்கும்.

பதவியில் நீடிக்க வாய்ப்புகள் இருந்தும் நமது நெறிமுறைகளின் அடிப்படையில் அவர் ராஜினாமா செய்தார். சமுதாய நலனுக்காகத்தான் வக்ப் வாரியத்தைப் பெற்றோம். சமுதாய மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித் துவத்திற்கு பங்கம் ஏற்படும் நிலையில் அதற்காகவே அதிலிருந்து வெளியேறினோம்.

தமுமுகவினருக்கு பதவி என்பது சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு. அதுவே நமது லட்சியம் அல்ல. சமுதாய நலனை முன்னிறுத்தியே நமது அசைவு கள் இருக்கும் என்பதை சகோ. ஹைதர் அலி அவர்கள் மூலம் நிரூபித்திருக் கிறோம்.


கேள்வி: திமுக-அதிமுக அணி களின் பண பலத்திற்கு முன்னாள் உங்களால் வெற்றிபெற முடியுமா?

பதில்: இறைவன் மீது நம்பிக்கை வைத்து களமிறங்குகிறோம். நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கை இல்லை. வெற்றிகளை மட்டுமே கணக்கில் கொள் பவர்களுக்குத்தான் இதுபோன்ற பயம் வரும். நாமோ வெற்றிலிதோல்விகள் இரண்டையும் துணிச்சலோடு எதிர்பார்த்து இறங்குகிறோம். வெற்றி பெற்றால் பணி செய்வோம். தோல்வியடைந்தால் கிடைத்த வாக்குகளை பலப்படுத்தி அதை அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு எப்படி பயன்படுத்துவது என சிந்திப்போம். திமுக பல தோல்விகளுக்குப் பிறகு தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. ஒரு தேர்தலிலேயே ஜெயித்துவிட வேண்டும் என நினைப்பது அரசியலில் ஒருவகை மூடநம்பிக்கையாகும்.

கேள்வி: அதிமுகவோடு அதிகாரப் பூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தி னீர்களா?

பதில்: அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் தைகள் நடக்கவில்லை.

கேள்வி: வேலூரில் முஸ்லிம் லீக்கை எதிர்ப்பீர்களா?

பதில்: எல்லா கட்சிகளிலிருந்தும் பரவலாக முஸ்லிம்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நமது விருப்பம். வேலூரில் முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு எதிராக நாம் வேட்பாளரை நிறுத்த மாட்டோம்.

கேள்வி: மத்திய சென்னை தொகுதியை ம.ம.க. கேட்டதற்கு கலைஞர் கடும் கோபம் அடைந் தாராமே? ம.ம.க.வை கூட்டணியில் இருந்து கை விட்டதற்கு இதுவும் ஒரு காரணமா?

பதில்: யாருக்கு எந்தத் தொகுதி என்று யாரும் யாருக்கும் பட்டா போட்டுக் கொடுத்துவிடவில்லை. முஸ்லிம்கள் நிறைந்த நாடாளுமன்றத் தொகுதி யாக மத்திய சென்னை அடை யாளம் காட்டப்பட்டுள்ளது. தொகுதி சீரமைப்புக் குப் பின்பு முன்பைவிட முஸ்லிம்களின் எண்ணிக்கை அங்கு கூடுதலாக உள்ளது. துறைமுகம், ஆயிரம் விளக்கு, எழும்பூர், சேப்பாக்கம்லி திருவல்லிக்கேணி போன்ற முஸ்லிம்கள் வெற்றி பெறும் சட்டமன்றத் தொகுதிகள் மத்திய சென்னையில் வருகிறது. நமது மக்களும், நமது கட்சி யின் பலமும் எங்கு இருக்கிறதோ அங்கு தான் நாம் போட்டி யிட முடியும்.


இசை வேளாளர்கள் நிறைந்த தொகுதியில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியுமா? தலித்துகள் நிறைந்த சிதம்பரம் தொகுதி யில் பிராமணர்கள் வெற்றிபெற முடியுமா? வன்னியர்கள் நிறைந்த தர்மபுரியில் தேவர்கள் வெற்றிபெற முடியுமா? தேவர் கள் நிறைந்த மதுரை யில் நாடார்கள் வெற்றிபெற முடியுமா?


ஆனால், முஸ்லிம்கள் நிறைந்த மயிலாடுதுறையில் அய்யர் ஒருவர் வெற்றி பெற முடிகிறது. ராமநாதபுரத்தில் தேவர் ஒருவர் வெற்றிபெற முடிகிறது. மத்திய சென்னையில் பிராமணர் வெற்றிபெற முடிகிறது. இதை தவறென்று சொல்ல வில்லை. ஜனநாயகத்தில் இதுபோன்ற ஆரோக்கி யம் வளர வேண்டும். ஆனால், முஸ்லிம் களால் பிற இன மக்கள் நிறைந்த தொகுதி களில் வெற்றிபெற முடியுமா? என்பது ஒரு கேள்வி. போட்டியிட முடியுமா? என்பது மிகமுக்கிய கேள்வி.


இந்நிலையில்தான் சமுதாய மக்கள் நிறைந்த மத்திய சென்னையைக் கேட் டோம். ஏற்கனவே திமுகவின் முரசொலி மாறனை பலமுறையும், அவரது மகன் தயாநிதி மாறனை ஒருமுறையும் முஸ்லிம் கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்திருக் கிறார்கள். இம்முறை இத்தொகுதியை ம.ம.க.வுக்கு கேட்டது எப்படித் தவறாகும்?


ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, துறைமுகம் என முஸ்லிம்கள் நிறைந்த (சென்னை சட்ட மன்ற) தொகுதிகளில் கலைஞர், ஸ்டாலின் என அவரது குடும்பத்தினரும், பேரா. அன்பழகனும் மாறி மாறி வெற்றி பெற்றதை அவர்கள் மனசாட்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மத்திய சென்னை யைக் கேட்டதே குற்றமாகக் கருதினால், முஸ்லிம்களின் தொகுதிகளை மட்டுமே குறிவைத்து போட்டியிட்டு அரசிய­ல் அனைத்தையும் பெற்றவர்கள் மீது நாம் எத்தனையோ விமர்சனங்களை வைக்க முடியும். பேரனின் தொகுதியைக் கேட்ட தற்காக தாத்தா கோபப்படுவதைப் பற்றி முஸ்லிம்களும், முஸ்லிம் அமைப்பு களும் நுட்பமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது.

Friday, April 10, 2009

ம.ம.க தனித்து போட்டியிடும் வாய்பளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.

கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

Wednesday, April 8, 2009

முஸ்லிம்களிடம் ம.ம.க கட்டாய வசூல் எனவே எதிர்கிறோம். TNTJ அறிவிப்பு!

ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ விர பிரசாரம்:
தவ்ஹீத் ஜ மாஅத்

நன்றி: தினமணி
சென்னை, ஏப். 7: முஸ்லி ம்க ளி டம் கட்டாய வசூ லி ல் ஈடுபட்டு வரும், ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ வி ர பி ரசாரம் செய்வோம் என்று " த மி ழ் நாடு தவ்ஹீத் ஜ மாஅத்' அமைப் பு அ றி வி த்துள்ளது. இது கு றி த்து, செய் தி யா ள ர்க ளி டம் அமைப் பி ன் தலைவர் ஜை னுல் ஆ பி தீ ன் செவ்வாய்க் கி ழமை கூ றி யது:

வரும் நாடாளுமன்ற த் தேர்தலி ல் த மி ழகத் தி ல் தி முக வையும், பு துவை யி ல் காங் கி ரஸ் கட் சி யையும் ஆத ரி க்க பொதுக்குழு கூட்டத் தி ல் மு டி வு எடுக்கப்பட்டுள்ள து. த மி ழகத் தி ல் முஸ்லி ம்க ளுக்கு தி முக அரசு 3.5 சதவீத இட ஒதுக் கீ டு வழங் கி யுள்ள து. 6 மாத காலமா கி யும் இந்த இட ஒதுக் கீ டு முஸ்லி ம்களுக்கு ச ரி வர கி டைக்க வி ல்லை. என வே, தி முக ஆத ரி த்து தீ வி ரமாக பி ரசா ரம் செய்யாமல் அ றி க்கை மூலம் தி முகவுக்கு வாக்க ளி க்குமாறு கோ ரி க்கை மட்டும் வைக்க மு டி வு செய் துள்ளோம். இட ஒதுக் கீ டு அ ளி க்கத் தவ றி ய காங் ரைஸையும், முஸ்லிம்களை மிரட்டும் விடுதலைச் சி றுத்தைகளை யும் ஆத ரி ப்ப தி ல்லை.

" மனிதநேய மக்கள் கட்சி ' முஸ்லிம்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகி ற து. எனவே அக்கட் சி எங்கு போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்வோம்'' என்றார் ஜைனுல் ஆபிதீன்.
நன்றி: தினமணி 08-04-2009

Monday, April 6, 2009

ம னிதநேய மக்கள் கட் சி எங்கு போட் டி யி ட்டாலும், அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும். ததஜ அறிவிப்பு!

ம னிதநேய மக்கள் கட் சி எங்கு போட் டி யி ட்டாலும், அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு!

திமுக அரசால் முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டில் எததனையோ குளறுபடிகள் என்றும் ரோஸ்டர், பூஸ்டர் என்றும் அன்று திமுகவை கடுமையாக விமர்சித்த த.த.ஜ வினர் இன்று திமுக முஸ்லிம்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டின் காரணமாக வரும் மக்களவை தேர்தலில் ஆதரவு என்றும் மனித நேய மக்கள் கட்சி எங்கு போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படும் என்றும் கோவை அருகே போத்தனூரில் மாநில மேலான்மை குழு உறுப்பினர் பி. ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக போட்டியிடவுள்ள 21 மக்களவை தொகுதி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒட்டு மொத்த 21 தொகுதியிலும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்குக்கூட வாய்பளிக்காமல் முஸ்லிம் சமுதாயத்தை முழுமையாக புறக்கணித்துள்ள திமுகவுக்கு ததஜவின் ஆதரவு நிலை சமுதாய அக்கரையுடன் எடுக்கப்பட்ட நிலைபாடா? அல்லது தமுமுக எதிர்ப்பு நிலையிலிருந்து எடுக்கப்பட்ட நிலைபாடா? முஸ்லிம் சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது.

வரூன்காந்தியின் வக்கிரமான பேச்சு. மோடி வகையராக்களின் முஸ்லிம்களை கருவறுக்கும் திட்டம். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியிருக்கும் உரிமையைக்கூட மதிக்காமல் தாடி வைப்பதும் புர்கா அனிவதும் தாலிபானிசம் என்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி. பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் பாசிச சக்திகள் என்று முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமென்றும் முஸ்லிம்கள் எப்பொழுதும் அச்சுறுத்தலிலும் பயத்திலும் இந்த நாட்டில் வாழவேண்டும் என்று இவர்களுக்கெல்லாம் எந்த கொள்கை வழிகாட்டியது. முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குவதில் இந்துத்துவாவிற்கு இருக்கும் ஒற்றுமையை பாருங்கள்.

மறுமையை நம்பி வாழும் முஸ்லிம்களாகிய நம்மிடம் ஏன் இந்த ஒற்றுமை இல்லை. நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள சமுதாயமாக ஆக்கியுள்ளோம் (2:143) என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். ததஜ தலைவர்களே நடு நிலை என்றால் என்ன?

ஒரு தினகரனோ, தயாநிதியோ, பாலுவோ வெற்றிபெற்று அதிகாரத்தில் அமரும் போது அவர்களது தவறுகளை உங்களால் தட்டிக் கேட்க முடியுமா? களவாடிச் சென்ற உணர்வில் பக்கம் பக்கமாக சுட்டிக்காட்டி எழுத முடியுமா? மேடைதோரும் உங்களால் முழங்க முடியுமா? மாதக்கணக்கில் தொலைக்காட்சியில் பேச முடியுமா? உங்கள் மனசாட்சியை தொட்டு இறைவனுக்கு அஞ்சி பதில் சொல்லுங்கள்.

அதே இடத்தில் ஒரு அப்துல் காதரோ, அப்துல் ரஹ்மானோ, இபுறாகீமோ வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தில் இருக்கும் போது உங்களது பேனாவிற்கும் நாவிற்கும் உள்ள வலிமையை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. உங்கள் ஸ்டைலில் சொல்வதாக இருந்தால் சட்டையை பிடித்து கேள்வி கேட்கும் உரிமையை சமுதாயம் அடைகிறது. முஸ்லிம் லீக் சகோதரர்களுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குறை நிறைகளை சுட்டிக் காட்டுகிறோம் எழுதுகிறோம் அல்லவா? அவர்களும் அதற்கு பதிலளிக்கிறார்கள். அது போன்ற உரிமையை தினகரனிடமும் தயாநிதியிடமும் பாலுவிடமும் நீங்கள் பெற முடியுமா? கேட்க முடியுமா?

மனித நேய மக்கள் கட்சியில் இன்று வரை மக்களவை தேர்தல் பற்றிய நிலைபாடு எடுப்பதில் உள்ள தாமதம் ஒன்று (தவறு நிகழ்ந்துவிடக்கூடாதே என்று) இறைவனுக்கு அஞ்சுவதால் அடுத்து சமுதாயம் (நீங்கள் உட்பட) நாளைக்கு கேள்வி கேட்டுவிடக்கூடாதே என்ற அச்சம் காரணமாக நிதானமாய் முடிவெடுக்க கால அவகாசம் தேவைப்படுகிறது. நிதானம் அல்லாஹ்வின் பன்பு அவசரம் ஷைத்தானின் பன்பு.

சமுதாய நலன் கருதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தனது நிலைபாட்டை மறு பரிசீலனை செய்யாவிட்டால் இப்போது எடுத்திருக்கும் உங்கள் முடிவிற்கு நாளை நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லும் நிலையில் இருப்பீர்கள் என்பதை சொல்லிக் கொள்கிறோம். அது மட்டுமல்ல உங்கள் மீது சமுதாயம் வைத்திருக்கும் கொஞ்ச நம்பிக்கையையும் நீங்கள் இழக்க நேரிடும். ஒரு முஸ்லிம் சகோதரன் என்ற முறையில் உரிமையுடன் கோரிக்கை வைக்கிறேன்.

"ஜமாஅத்தை பற்றிக்கொள்ளுங்கள்; பிரிந்து செல்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்; எவர் சொர்க்கத்தின் நறுமணத்தை நுகர விரும்புகிறாரோ அவர் ஜமாஅத்தை அவசியமாக்கிக்கொள்ளட்டும்" இவ்வாறு நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக உமர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி ]

[ நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: "நிச்சயமாக உங்களிடையே சில தலைவர்கள் தோன்றுவார்கள்; அவர்களிடம் நல்லவற்றையும் காண்பீர்கள், தீயவற்றையும் காண்பீர்கள்.

யார் அவர்களின் தவறுகளை கண்டிக்கிறாரோ, அவர் தமது பொறுப்பிலிருந்து நீங்கிவிட்டார்.

யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் பாதுகாப்பு பெற்றார்.

யார் அவர்களது தீய செயல்களைப் பொருந்தி துணை செய்கிறாரோ அவர் நாசமடைந்தார் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.

உடன் சஹாபாக்கள் அவர்களிடம் கேட்டார்கள்; அல்லாஹ்வின் தூதரே! அவர்களுடன் போர் செய்யலாமா?

என்று கேட்கப்பட்டதற்கு

அதற்கு "அவர்கள் தொழுகையை நிறைவேற்றும்வரை போர் செய்யக்கூடாது" என்று கூறினார்கள்.

அறிவிப்பாவர்: உம்முஸமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: திர்மிதி, அஹ்மத் ]

"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்." அல்குர்ஆன் 3:103

குர்ஆன் வசனங்களையும் நபி صلى الله عليه وسلم அவர்களின் பொன்மொழியினையும் சமுதாய மக்கள் இன்றைய நிலையில் நன்கு சிந்தித்து செயல்பட கடமைப்பட்டுள்ளோம்.

இன்றைய நமது சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து பல தலைவர்களின் பின்னால் அணி அணியாக நிற்பதும் அந்த தலைவர்கள் எதைச் சொன்னாலும் அது சரி என முடிவெடுக்கின்ற நிலையிலும் இருக்கின்றனர். அது சரியா? தவறா? என்றெல்லாம் சிந்தித்தும் பார்ப்பதில்லை.

"(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவை உண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு." அல்குர்ஆன் 3:105

இத்தைகைய வசனங்கள் பிரிவை ஏற்படுத்திக்கொள்ளாமல் ஒன்று பட்ட சமுதாயமாகவே இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன. ஆதலால்தான் அல்லாஹ் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. 3:103 என்று தனது திருமறையை பற்றிப்பிடிக்க கூறுகிறான். இங்கு அல்குர்ஆனை அல்லாஹ் கயிற்றுக்கு உவமானமாகக் கூறுவதின் நோக்கம் பல தனித்தனி நார்கள் ஒன்றினைத்து கயிறாக உருமாறுவதைத்தான் "கயிறு" என்று நமக்கு எளிதான உரை நடையில் உணார்த்துகிறான்.

ஒன்றுபட்டால் ஆட்சி அதிகாரம் நம்மைத்தேடி நிச்சயம் வரும் என்று நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும். இதை விடுத்து பல குழுக்களாக செயல்படலாம் என முடிவெடுத்து செயல்பட நினைப்பவர்கள் திருமறையின் 3:103, 3:105 வசனங்களுக்கு பதில் கூறட்டும்!

வல்ல அல்லாஹ் நாம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

Sunday, April 5, 2009

தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமா?

நான் குதிருக்குள் இல்லை!

நன்றி: சத்தியமார்க்கம்.காம்
ஜனநாயகம், மதச்சார்பின்மை இவ்விரண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இரு பெரும் தூண்களாகும். "சட்டத்தின் முன் அனைவரும் சமம்; அனைவருக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைகளின்படி செயல்பட்டுக் கொள்வது நமது ஜனநாயகம் வழங்கும் அடிப்படை உரிமையாகும்" - உலக அளவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிப்புடன் வைக்கும் சட்டத்தின் மிக முக்கிய நிபந்தனைகளான இவை இரண்டும் துரதிஷ்டவசத்தால் பெரும்பாலான சமயங்களில் வெறும் ஏட்டில் மட்டும் வைத்து அழகு பார்க்கும் வரிகளாக மாறிப்போகின்றன.

அனைவருக்கும் சமமான நீதி நடைமுறை உறுதிப் படுத்தப்படுவதே ஜனநாயகம் தழைப்பதற்கும் மக்கள் அமைதியாக வாழ்வதற்குமான அடிப்படை காரணிகளாகும். ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை நீதி என்பது பணம், பதவியுடையவர்களுக்கு ஒரு விதமாகவும் ஏழைகளுக்கு வேறு விதமாகவுமே உள்ளது. அதனாலேயே காஞ்சி காம கோடி, அத்வானி, மோடி, ஜெயலலிதா, ஹர்ஷத் மேத்தா போன்ற இன்னபிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அராஜகம், மோசடி போன்றவற்றில் ஊறிப்போனவர்கள் உள்ளேயும் வெளியேயும் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி வலம்வருகின்றனர். அதேவேளை, சின்னஞ்சிறு குற்றச்செயல்களில் ஈடுபடும் சாதாரணமானவர்கள் மீது மட்டும் சட்டம் தனது முழுவலிமையைப் பிரயோகிக்கின்றது.

சமநீதி விஷயத்தில் வலியவன், எளியவன் என்ற பாரபட்சம் பார்க்கும் நீதி, முஸ்லிம்கள் என்று வரும் பொழுது அத்தகைய கருணை வாசலையும்கூட அடைத்து விடுகின்றது.

அநியாயம் செய்திருந்தாலும் வலியவனுக்குச் சாதகமாகவும் அநீதி இழைக்கப் பட்டிருந்தாலும் எளியவனுக்குப் பாதகமாகவும் வளைந்து கொடுக்கும் இத்தகையச் செயலைளை "நீதி தேவன் மயக்கம்" என்ற பெயரில் அறிஞர் அண்ணா ஒரு நாடகம் எழுதினார். 1954ஆம் ஆண்டு மேடையில் அரங்கேறிய அவரது நாடகம் இப்போது(ம்) அரங்கேறிக் கொண்டிருப்பது நமது நீதிமன்றங்களில்!

இந்திய விமானப்படை ஊழியர் அன்ஸாரீ அஃப்தாப் அஹ்மது என்பவர் சீக்கிய ஊழியர்களுக்கு வழங்கப் பட்டு நடைமுறையிலிருக்கும் தாடி வளர்த்துக் கொள்ளும் மத உரிமையைத் தனக்கும் அளிக்க வேண்டும் எனக் கேட்டுத் தொடர்ந்த வழக்கில், இந்திய விமானப்படை வழிகாட்டு நெறிமுறைகள் 2003இன்படி "சீக்கியர்களுக்கு வழங்கும் உரிமையை 2002ஆம் ஆண்டுக்குப்பிறகு விமானப்படைக்குத் தேர்வு செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு வழங்க முடியாது" என்று கடந்த ஆண்டு பஞ்சாப்/ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மற்றவர்க்கு வளைந்தும் முஸ்லிம் என்றால் நிமிர்ந்தும் நிற்கும் சட்டம் இந்திய விமானப்படைக்கு மட்டும் சொந்தமானதன்று.

மத்தியப்பிரதேசத்தின் விதிஷா மாவட்டத்திலுள்ள சிரஞ்ச் நகரில் இயங்கி வரும் 'நிர்மலா கான்வெண்ட்' என்ற பள்ளியில் தொடக்கம் முதல் பத்தாம் வகுப்புவரை முஹம்மது ஸலீம் என்ற முஸ்லிம் மாணவர் கல்வி பயின்று வந்தார். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது அவருக்குத் தாடி வளர்ந்து விட்டது. "தாடியை மழிக்காமல் பள்ளிக்கு வருவதாக"க் கூறிப் பள்ளியின் நிர்வாகி ப்ரின்ஸிபால் தெரஸா மார்ட்டின், மாணவர் ஸாலிமைப் பள்ளியிலிருந்து நீக்கினார். அதை எதிர்த்து, தன்னைத் "தாடி வளர்த்துக் கொள்ளப் பள்ளி அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி முதலில் பள்ளிக்கு முறைப்படி விண்ணப்பித்தார். பள்ளி நிர்வாகம் மறுதலித்துவிடவே, உயர்நீதி மன்றத்தில் மாணவர் ஸலீம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.

"முழுமையாக மழித்துக் கொண்டு வரவேண்டும்" என்ற பள்ளிச் சட்ட-திட்டத்தினைத் தளர்த்தக் கோரி ஸலீம் சமர்ப்பித்த மனு உயர்நீதி மன்றத்தில் கடந்த 30.12.2008இல் தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விடாப் பிடியாக, "தாடி வளர்ப்பது என்னுடைய மத உரிமை. மதசார்பற்ற இந்தியாவில் வாழும் குடிமகனுக்கு (சட்டப் பிரிவு 25இன்படி) தன் மத நம்பிக்கைப்படி வாழ்வதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எனவே தாடி வளர்த்துக் கொண்டு பள்ளிக்கு வருவதற்கு எனக்கு அனுமதி வழங்க வேண்டும்" எனக் கோரி, உச்சநீதி மன்றத்துக்கு வழக்கைக் கொண்டு சென்றார்.

ஸலீம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி இரவீந்திரன் தலைமையிலான அமர்வு நீதிமன்றம் விசாரித்தது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, மாணவர் ஸாலிமுடைய கோரிக்கையை, அவர் பயிலும் பள்ளியின் சட்ட-திட்டங்களை மட்டும் காரணம் காட்டி மறுதலித்திருந்தால் பிரச்சினை பெரிதாகி இருக்காது.

ஆனால், சட்டம் கற்றுத் தேர்ந்ததாகச் சொல்லப் படும் ஒரு நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு என்பவர், "தாடி வைப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்" என்ற காரணம் கூறி கடந்த திங்கட்கிழமை (30.3.2009) வழக்கைத் தள்ளுபடி செய்து, தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். சுமார் 1400 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இஸ்லாமிய நடைமுறைக்கும் வெறும் 30 ஆண்டுகால வரலாறுடைய தாலிபானுக்கும் என்ன சம்பந்தம்? நீதிபதி மார்கண்டேய கட்ஜுவிற்கே வெளிச்சம்!

தாலிபான் என்ற பெயரே அறியப் படாத ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நம் நாட்டில் முஸ்லிம் ஆண்கள் தாடி வளர்த்தும் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தும் வருகின்றனர். தாடி இல்லாத ஆண் சீக்கியர் இல்லை என்னும் அளவுக்கு சீக்கிய ஆண்கள் தாடியோடுதான் இருப்பர். தாடி வளர்த்திருப்பவரெல்லாம் தாலிபான் அமைப்பின் உறுப்பினரா? நம் பிரதமரை நீதிபதி கட்ஜு ரொம்பத்தான் தாக்குகிறார்!

"தாலிபான்களை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது" என்று கூறியதோடு, "நாளைக்கு ஒரு (முஸ்லிம்) மாணவி, பர்தா அணிந்து கொண்டு பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கலாம். நாம் அதை அனுமதிக்க முடியுமா?" என்று நீதிபதி கட்ஜு அறிவு(?)ப்பூர்வமான ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

"நாட்டின் மதசார்பற்ற நிலைபாட்டைப் பயன் படுத்திக் கொண்டு இந்தியாவைத் தாலிபான் மயமாக்குவதை அனுமதிக்க இயலாது" எனவும் நீதிமன்றத்துக்குள்ளேயே நீதிபதி ஜோக்கடித்திருக்கிறார்.

"சீக்கியர்களுக்குத் தாடி வளர்த்துக் கொள்ளவும் தலைப்பாகை அணியவும் அனுமதி இருக்கும்போது, என்னை மட்டும் தாடியை மழிக்க நிர்பந்திப்பது பள்ளி நிர்வாகத்தின் தெளிவான இரட்டை நிலைபாடு" என ஸலீம் வாதித்தார்.

ஆனால் பயனில்லை. "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 30ஆம் பிரிவின்படி சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், தனியாக சட்டம் உருவாக்கிக் கொள்வதற்கு அனுமதியுள்ளது. அவற்றைப் பின்பற்றுவதற்கு இயலாது எனில், ஸலீம் வேறு ஒரு பள்ளியைத் தேர்வு செய்து கொள்ளட்டும்" எனவும் நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.

இந்நாட்டில் ஒரு சமுதாயத்திற்கு அனுமதிக்கப்படும் நீதி, அதே வடிவில் பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் எனில் மறுக்கப்படுகிறது. இது "இந்திய அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் மத அடிப்படைகளைப் பின்பற்றுவதற்கான உரிமைகளுக்கு" முரணான நிலைபாடு எனில், வழக்கிற்குத் தொடர்பில்லாத வகையில் இஸ்லாமிய அடிப்படைகளைச் சம்பந்தமில்லாத தனிப்பட்ட குழுக்களோடு தொடர்பு படுத்தி இழிவுபடுத்துவது இந்திய நீதித்துறைக்கு அவமானத்தைப் பெற்றுத்தரும் செயலாகும். அனைவரையும் சமமான கண்ணோட்டத்தோடு அணுகவேண்டிய, நாட்டின் உன்னத பீடத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பான அதிகாரியின் சட்டமீறலுமாகும்.

"தாடி வளர்ப்பதும் பர்தா அணிவதும் தாலிபானிசமாகும்; இந்தியாவில் தாலிபானிஸம் வளர்வதை அனுமதிக்கமுடியாது" என்று உண்மையைப் பொய்களுடன் கலந்து உண்மையைப் பொய்யாக்குவதையும் பொய்யை உண்மையாக்குவதையும் அதனை வைத்து சமூகத்தில் பதட்டத்தை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவதையும் தங்களது பாணியாகக் கொண்டுள்ள ஹிந்துத்துவத்தின் ஒரு மோடி, அத்வானி வகையறாக்களின் வாயிலிருந்து இத்தகைய சொற்கள் உதிர்ந்திருந்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், அதுவே நாட்டின் உன்னத பீடத்தை அலங்கரிக்கும் ஒரு நீதிபதியின் வாயிலிருந்து வருவதென்றால்.....?

நீதிபதி கட்ஜுவின் அறியாமைக் கருத்துகளுக்கு எதிராகவும் நீதியின் இரட்டைமுக நிலைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய நீதித்துறையின் மீது இப்பொழுதும் நம்பிக்கை இழக்காத முஸ்லிம்கள் என்ன செய்யலாம்? என்று சிந்தித்தோமெனில், நமக்குக் கிடைக்கும் விடை, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் 'தாலிபான்' பேச்சை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம் என்பதே.

"நான் ஒரு மதசார்பற்றவன்" என்று நீதிபதி கட்ஜு கூறிய தன்னிலை விளக்கத்தில் ஓர் உண்மை பொதிந்திருக்கிறது.

தலைப்பை இன்னொரு முறை படித்துக் கொள்ளவும்!

நன்றி:சத்தியமார்க்கம்.காம்