.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, February 23, 2009

எல்லாப் புகழும் இறைவனுக்கே! ஆஸ்கார் மேடையில் தமிழில் புகழ்ந்த ரஹ்மான்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஆஸ்கார் மேடையில் தமிழில் இறைவனைப்புகழ்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்.
லாஸ் ஏன்ஜெல்ஸ் 23-02-2009: 81வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.00 மணிக்குத் தொடங்கியது.


ஸ்லம்டாக் மில்லியனர் (சேரிநாய் கோடிஸ்வரன்) படத்தில் மிகச் சிறந்த இசையமைப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மானு்க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் மிகச் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இரு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இந்தியர் என்ற மகிழ்வில் நாமும் அவரை வாழ்த்துகிறோம்!

ஆஸ்கர் விருது விழா நடக்கும் கோடாக் திரையரங்கில் இந்தப் படத்தின் பாடலான 'ஜெய் ஹோ' பாடலை மேடையில் ஆடல் பாடலுடன் அரங்கேற்றி ஆஸ்கர் அரங்கையே அதிரச் செய்தார்.

இந் நிலையில் சிறந்த பாடலுக்கான விருதும் ஜெய் ஹோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மேடையில் ஆடிக் கொண்டிருந்த நிலையில் ரஹ்மானுக்கு இரண்டாவது விருதும் கிடைத்தது.

விருதைப் பெற்ற பின் ரஹ்மான் பேசுகையில்,

நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்துடனும் பெரும் மகிழ்ச்சியுடனும் இருந்தேன். ஏதோ திருமணத்துக்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்குக் காரணம் என் தாயின் ஆசிர்வாதம். அவருக்கும் விருது வழங்கிய அகாடெமிக்கும் என் நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன். கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எல்லாம் கிடைக்கும்.

இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்ற ரஹ்மான், ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்று தனது சிந்தனை மொழியான தாய் மொழி தமிழில் பேசி தன் இறைவனுக்கு நன்றி செலுத்தியுள்ளார். உளப்பூர்வமான நன்றி அது.

2 ஆஸ்கார் விருதுகள் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேடித்தந்துள்ள தமிழரான ஏ.ஆர்.ரஹ்மான் எத்தனை படங்களில் இசை அமைத்துள்ளார் என்று பார்ப்பதை விட எத்தனை விருதுகள் பெற்றுள்ளார் என்று பார்ப்போம்.

அவரைப் பற்றியும் அவரது விருதுகள் பற்றியும் ஒரு சிறிய அலசல்.

தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பாளராகவும, இசை நடத்துனராகவும் பணியாற்றியவர் ஆர்.கே.சேகர். இவரது மகனாக 1967ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி பிறந்தார் ஏ.எஸ்.திலீப் குமார். இவர்தான் இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான்.

ரஹ்மானுக்கு 9 வயதாக இருந்தபோது தந்தை சேகர் மரணமடைந்தார். இதனால் குடும்பம் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. வீட்டில் இருந்த இசைப் பொருட்களையெல்லாம் விற்றும், வாடகைக்கு விட்டும் ஜீவனம் நடத்த வேண்டிய கஷ்டமான நிலை.

இந்த நிலையில், 1989ம் ஆண்டு இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான்.

இந்தக் காலகட்டத்தில், கீ போர்ட் பிளேயராக மாறினார் ரஹ்மான். தனது பால்ய நண்பரான டிரம்ஸ் சிவமணி மற்றும் ஜான் ஆன்டனி, ஜோஜோ, ராஜா ஆகியோருடன் இணைந்து இசைக் குழுக்களில் பணியாற்றத் தொடங்கினார்.

கீபோர்ட், ஹார்மோனியம், கிதார் பியானோ, சிந்தசைசர் ஆகியவற்றில் திறமை மிக்கவராக விளங்கினார்.

ஆனால் சிந்தசைசரில்தான் அவருக்கு அதிக பிரியம். இசையையும், தொழில்நுட்பத்தையும் சரியான கலவையில் இணைக்கும் கருவி என்பதால் சிந்தசைசரில் அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயின்றார். 11 வது வயதில் இசைஞானி இளையராஜாவிடம் கீபோர்ட் கலைஞராக சேர்ந்தார்.

பின்னர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகிர் உசேன், குன்னக்குடி வைத்தியநாதன், எல்.சங்கர் ஆகியோருடனும் இணைந்து பணியாற்றினார்.

எல்.சங்கருடன் இணைந்து அவர் நடத்திய பல உலகளாவிய கச்சேரிகளில் ரஹ்மானும் இணைந்து பங்காற்றினார்.

இதற்கிடையே லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் ஸ்காலர்ஷிப்பை முடித்தார். மேற்கத்திய கிளாசிகல் இசையில் டிகிரியும் முடித்தார்.

1992ம் ஆண்டு ரஹ்மானின் இசைப் பயணத்தில் முக்கிய மைல் கல். தனியாக சொந்தமாக இசைப் பதிவு மற்றும் இசைக் கலப்பு ஸ்டுடியோவை தொடங்கினார் ரஹ்மான். தனது வீட்டுக்குப் பின்னால் இந்த ஸ்டுடியோவைத் தொடங்கினார். பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்று அதற்குப் பெயர். இன்று இந்தியாவின் அதி நவீன ரெக்கார்டிங் ஸ்டுடியோக்களில் ஒன்றாக பஞ்சதன் விளங்குகிறது.

இந்த ரெக்கார்டிங் ஸ்டுடியோவைத் தொடங்கிய பின்னர் விளம்பர ஜிங்கிள்ஸ், டிவி நிறுவனங்களின் முகப்பு இசை (ஏசியாநெட், ஜெஜெ டிவி ஆகியவற்றின் முகப்பு இசையை ரஹ்மான்தான் வடிவமைத்தார்) உள்ளிட்ட இசைப் பணிகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மணிரத்தினம் உருவில் ரஹ்மானுக்கு திடீர் திருப்பம் ஏற்பட்டது. தனது ரோஜா படத்துக்கு இசை மற்றும் பின்னணி இசை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டார் மணிரத்தினம்.

சந்தோஷத்துடன் ஒத்துக் கொண்ட ரஹ்மான், தனது திறமைகளை அப்படியே அதில் கொட்டினார். ரோஜா ஏற்படுத்திய இசை பாதிப்பை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல் படத்திலேயே இந்தியா முழுவதையும் தன் பக்கம் ஈர்த்த பெருமைக்குரியவர் ரஹ்மான். கூடவே தேசிய விருதையும் பெற்று இந்திய இசைப் பிரியர்கள் மத்தியில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். இசையிலும் ஒரு புதிய வடிவத்தை அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு ரஹ்மானின் இசைப் பயணம் புயல் வேகத்தில் இருந்தது. 1997ல் இசையமைத்த மின்சாரக் கனவு, 2002ல் இசையமைத்த லகான், 2003ம் ஆண்டு இசையமைத்த கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளைப் பெற்றார்.

அதிக அளவிலான தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இசையமைப்பாளர் இன்றைய தேதிக்கு நம்ம ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமே.

ரோஜாவுக்குப் பிறகு தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தனது முத்திரையைப் பதித்தார் ரஹ்மான். தமிழைப் போலவே இந்தியிலும் முன்னணி இசையமைப்பாளராக பரிணமித்தார்.

இந்தியாவின் முன்னணி பாடலாசிரியர்களான வாலி, குல்ஸார், மெஹபூப், வைரமுத்து ஆகியோருடன் இணைந்து அதிக பாடல்களைக் கொடுத்த பெருமைக்குரியவர் ரஹ்மான்.

அதேபோல மணிரத்தினம், ஷங்கர் என முன்னணி இயக்குநர்களுடனும் அதிக அளவில் பணியாற்றியவரும் ரஹ்மான்தான்.

குறிப்பாக மணிரத்தினம், ஷங்கரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிப் போனார் ரஹ்மான்.

திரை இசை தவிர்த்து தனியான ஆல்பங்கள் பலவற்றையும் படைத்துள்ளார் ரஹ்மான்.

1999ம் ஆண்டு ஷோபனா, பிரபுதேவா ஆகியோருடன் இணைந்து மியூனிச் நகரில் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து கச்சேரி செய்தார் ரஹ்மான்.

2002ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த பிரபல நாடக இசையமைப்பாளர் ஆண்ட்ரூ லாயிட் வெப்பருடன் இணைந்து லண்டன் வெஸ்ட் என்ட் ஹாலில், பாம்பே ட்ரீம்ஸ் என்ற மேடை நாடகத்திற்கு இசையமைத்தார் ரஹ்மான்.

இதுதான் மேற்கத்திய இசையின் பக்கம் ரஹ்மானின் முத்திரை முதலில் பதிந்த நிகழ்வு.

அதேபோல 2004ம் ஆண்டு லார்ட் ஆப் தி ரிங்ஸ் என்ற நாடகத்திற்கு இசையமைத்தார்.

கடந்த 6 ஆண்டுகளில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தூபாய், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் 3 வெற்றிகரமான உலக இசை நிகழ்ச்சிகளை நடத்தினார் ரஹ்மான்.

2008ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி கனெக்ஷன்ஸ் என்ற திரை இசை அல்லாத ஆல்பத்தை வெளியிட்டார் ரஹ்மான்.

கர்நாடக இசை, மேற்கத்திய கிளாசிகல், இந்துஸ்தானி மற்றும் கவ்வாலி இசையில் திறமை மிக்கவரான ரஹ்மானுக்கு புதிய வடிவில் புதிய இசையைக் கொடுப்பது அல்வா சாப்பிடுவது போல.

ஒவ்வொரு இசை வடிவிலும் உள்ள சிறப்புகளை எடுத்து, புதிய வடிவில் அவற்றை சாமானியர்களுக்கும் ரசிக்கும் வகையில் கொடுத்ததே ரஹ்மானின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இளம் வயதினருக்கான இசையை மட்டுமே ரஹ்மான் கொடுக்கிறார் என்ற ஒரு பேச்சு இருந்தாலும் கூட எந்த நிலையினரும் ரசிக்கக் கூடிய வகையிலேயே ரஹ்மானின் இசை உள்ளது என்பதை இசைப்பிரியர்கள் யாரும் மறுக்க முடியாது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் போலவே அவரது குடும்பப் பயணமும் ரம்மியமானது.
அவரது மனைவி சாய்ரா பானு. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமன் என மூன்று மகள்கள்.
ரஹ்மானின் முதல் படங்கள் ...

தமிழில் ரஹ்மானுக்கு முதல் படம் ரோஜா. இந்தியிலும் இது டப் ஆனது.

இந்தியில் ரஹ்மானின் நேரடி முதல் படம் ரங்கீலா.

மலையாளத்தில் முதல் படம் யோதா.

தெலுங்கில் முதல் படம் சூப்பர் போலீஸ்.

ஆங்கிலத்தில் முதல் படம் வாரியர்ஸ் ஆப் ஹெவன்.

ரஹ்மானை அலங்கரித்த விருதுகள் ...

எத்தனை படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தாரோ அதை விட சற்று கூடுதலாகவே விருதுகளைக் குவித்து வைத்திருக்கிறார் ரஹ்மான்.

அவரது விருதுகளின் உச்சம் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள்.

இவை தவிர ரஹ்மான் பெற்ற பிற விருதுகள் ..

ஆர்.டி.பர்மன் சிறந்த இசைத் திறமைக்கான விருது (ரோஜா, 1995), பத்மஸ்ரீ (2000), அவாத் சம்மான் (2001), அல் அமீன் கல்விக் கழக சமுதாய விருது (2001), அமீர் குஸ்ரூ சங்கீத் நவாஸ் விருது (2002), லதா மங்கேஷ்கர் சம்மான் (2005), மகாவீர் மகாத்மா விருது (2005), ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக விருது (2006).

தேசிய விருதுகள்


ரோஜா (1993), மின்சார கனவு (1997), லகான் (2002), கன்னத்தில் முத்தமிட்டால் (2003).

பிலிம்பேர் விருதுகள்

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), ரங்கீலா (1996), பாம்பே (1996), காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), தில் சே (1999), ஜீன்ஸ் (1999), தால் (2000), முதல்வன் (2000), அலை பாயுதே (2001), லகான் (2002), லெஜன்ட் பகத் சிங் (2003), சாதியா (2003), ஸ்வதேஸ் (2005), ரங் தே பசந்தி (2007), சில்லுன்னு ஒரு காதல் (2007), குரு (2008), குரு (சிறந்த பின்னணி இசை, 2008)

ஸ்க்ரீன் விருது

காதல் தேசம் (1997), மின்சார கனவு (1998), வந்தே மாதரம் (1998), தால் (2000), ரங் தே பசந்தி (2007), குரு (2008), ஜோதா அக்பர் (2009), ஜானே து யா ஜானே நா (2009).

தினகரன் சினி விருதுகள்

மின்சார கனவு (1998), ஜீன்ஸ் (1999), முதல்வன், காதலர் தினம் (2000).

தமிழக அரசு விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1995), காதலன் (1995), பாம்பே (1996), மின்சார கனவு (1998), சங்கமம் (2000).

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), காதல் தேசம் (1997), ஜீன்ஸ் (1999).

கலாசாகர் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

பிலிம்பேன்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

சினி கோயர்ஸ் விருது

ரோஜா (1993), ஜென்டில்மேன் (1994), காதலன் (1995), பாம்பே (1996).

ஜீ விருது

ஜீ சினி விருது (குரு, 2008), ஜீ சங்கீத் விருது (தில் சே, 1999), ஜீ சினி விருது (தால், 2000), ஜீ கோல்ட் பாலிவுட் இன்டர்நேஷனல் விருது (தால், 2000), ஜீ பேர்குளோ விருது (லகான், 2002), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (லகான், 2002), ஜீ சினி விருது (சாதியா, 2003), ஜீ கோல்ட் பாலிவுட் விருது (சாதியா, 2003), ஜீ சினி விருது (லெஜன்ட் ஆப் பகத் சிங், 2003), ஜீ சினி விருது (ரங் தே பச்தி, 2007),

சர்வதேச இந்திய திரைப்பட விருது


தால் (2000), லகான் (2002), சாதியா (2003), ரங் தே பசந்தி (2007), குரு (2007),

குளோபல் இந்தியன் திரை விருது

சிறந்த பின்னணி இசை, சிறந்த இசை (ரங் தே பசந்தி, 2007)

இதோ இப்போது பெற்றுள்ளவைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்...

வாழ்த்துக்கள் சகோதரா!
Thanks to thatstamiloneindia.in

Sunday, February 22, 2009

நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம்?

கோழிக்கோடு முஸ்லிம்களின் மாநாட்டில் எழுச்சி உரை!

நன்றி: சத்தியமார்க்கம்.காம்


தமிழகத்தைச் சேர்ந்த 'மனித நீதிப் பாசறை', கேரளத்தைச் சேர்ந்த 'தேசிய ஜனநாயக முன்னணி', கர்நாடகாவைச் சேர்ந்த 'கர்நாடக ஜனநாயக முன்னணி' ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றாக இணைந்து 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்ற அமைப்பின் பெயரில் அதிகாரம் மக்களுக்கே என்ற கோஷத்துடன் தேசிய அரசியல் மாநாட்டைக் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த 13.02.2009ஆம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, டில்லி உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து பி.எப்.ஐ. உறுப்பினர்கள் உட்பட இலட்சகணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.


முதல் நாளான 13ம் தேதி நடந்த தேசிய மாணவர்கள் கருத்தரங்கத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் அமைப்பின் பிரதிநிதிகள் பங்காற்றினர். அதே நேரத்தில் மற்றொரு இடத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சகோதரத்துவக் கூட்டம் நடந்தது. இதில், பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அமைப்பின் தலைவர்கள், ஐக்கிய அரபு எமிரேட், கத்தர், பஹ்ரைன், ஓமன், குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.

அன்று மாலையில் சயீத் திப்பு சுல்தான் நகரில் 'அரசியல் அதிகாரமளித்தலும் மாற்று வகைகளும்' என்ற தலைப்பிலான தேசியக் கருத்தரங்கம் நடந்தது. பாப்புலர் பிரண்ட் பொதுச் செயலர் ஷரீப் தலைமையில் நடந்த இந்தக் கருத்தரங்கில், தமிழகத்திலிருந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த நாள் காலையில் மனித உரிமைகள் ஆர்வலர் கூட்டம் நடந்தது. அதே நேரத்தில், ஓட்டல் ஸ்பேனில் அரசியல் ஆர்வலர்களின் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பி.எப்.ஐ.யின் முன்னாள் தலைவர் அபூபக்கர் தலைமை வகித்தார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல பகுதிகளிலும் உள்ள அரசியல் சார்ந்த முஸ்லிம் அமைப்பினர் பங்கு பெற்றனர். அன்று மாலை 3 மணிக்கு சயீத் பகத் சிங் நகரில், பயங்கரவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் நடந்தது. இக்கருத்தரங்கத்தை, மகசேசே விருது பெற்ற சந்தீப் பாண்டே துவக்கிவைத்தார். இதில், கான்பூரைச் சேர்ந்த சுவாமி லட்சுமி சங்கராச்சார்யா, சுப்ரீம் கோர்ட் நீதிபதி பிரசாந்த் பூஷன், சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதி நாளான 15ஆம் தேதி காலை 10 மணிக்கு ஓட்டல் ஸ்பேனில் தேசிய இட ஒதுக்கீடு குழுவின் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கேரள பாப்புலர் பிரண்ட் தலைவர் நசிருதீன் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் பல்வேறு சிறுபான்மை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இடஒதுக்கீடு குறித்து விவாதித்தனர். அதே வேளையில் ஓட்டலின் மற்றொரு பகுதியில் தேசிய ஊடகவியலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு 'தேஜஸ் டெய்லி'யின் ஆசிரியர் கோயா தலைமை வகித்தார். கூட்டத்தை சுப்ரீம் கோர்ட் வக்கீல் பிரசாந்த் பூஷன் துவக்கிவைத்தார். இதில் இந்தியாவின் பலப் பாகங்களிலிருந்தும் பல்வேறு செய்தி, ஊடகத் துறையினர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பத்திரிக்கையின் பல்வேறு மாற்று வழிகளைப் பற்றி அலசப்பட்டது. குறிப்பாக, "முஸ்லிம்களுக்கு எதிரான ஊடக வன்முறையைச் சில பத்திரிகை, தொலைகாட்சிகள் செய்கின்றன. அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உண்மையைப் பதிவு செய்யவேண்டும்" என்று பேசப்பட்டது. "மதவாதத்திற்கு எதிரான செய்திகளைத் தவறாமல் பதிவு செய்யவேண்டும்; செய்தி வெளியிடுவதைக் கடந்து சமூகத்தையே மாற்றக்கூடிய பத்திரிக்கையாளர்கள் தங்கள் பலம் உணர்ந்து சமூக பங்களிப்பு ஆற்ற வேண்டும்" என்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் தமிழகத்தின் நக்கீரன், ஜு.வி, புதிய காற்று போன்ற பத்திரிகைகள் பங்கேற்று தங்கள் கருத்துகளையும் பதிவு செய்தனர். மொத்தத்தில் செய்தித் தளத்தில் ஒரு மாற்று வழியை இக்கருத்தரங்கம் அறிமுகப்படுத்தியது.

மற்றொரு இடத்தில், தேசிய உலமாக்கள் கருத்தரங்கம், "அதிகாரமளித்தலில் மதம் என்ற தலைப்பில் நடந்தது.

தேசியப் பெண்கள் கருத்தரங்கம் கோழிக்கோடு கடற்கரை அருகில் நடந்தது. "அரசியல் அதிகாரத்தில் பெண்கள்' என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடந்த இக்கருத்தரங்கை ராஜஸ்தான் பி.யு.சி.எல். அமைப்பின் தலைவர் கவிதா ஸ்ரீ வத்சவா துவக்கி வைத்தார். இக்கருத்தரங்கில் தமிழகம் சார்பில் ஜம்மியத்துன்னிசா அமைப்பின் பொருளாளர் சித்தி அலியார், அமெரிக்காவைச் சேர்ந்த மரியம் இஸ்மாயில், புது தில்லி ஹசீனா ஹாசிய ஆகியோர் கலந்து கொண்டார்.

"உலகம் முழுக்க எங்கு வன்முறை, இனப் படுகொலை நடந்தாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள் பெருகிவிட்டன. இந்தப் பாசிசத்தை எதிர்க்கப் பெண்கள் அணிதிரள வேண்டும். இந்த எதிர்ப்புப் போரில் பங்களிக்க வேண்டும்.

அதே போல் நாட்டில் பாலியல் குற்றங்கள் பெருக முக்கியக் காரணம் முதலாளித்துவ கலாச்சாரங்கள்தாம். அவை பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் பண்பாட்டை வளர்கின்றன. அவற்றை நாம் அடித்து விரட்ட வேண்டும். நாட்டில் உள்ள பெண்கள் ஓர் அணியில் ஒன்று திரளவேண்டும். நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்பன போன்ற பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்தக் கருத்தரங்கம் இஸ்லாமியப் பெண்களிடம் புதிய கருத்துப் பாய்ச்சலை உருவாக்கி உள்ளது எனலாம்.

15ம் தேதி மாலை 3 மணிக்கு பி.எப்.ஐ. அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட அணிவகுப்புப் பேரணி நடந்தது. இப்பேரணியில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு ராஜாஜி சாலையில் உள்ள ஸ்டேடியத்தில் இருந்து பி.எப்.ஐ. தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் புறப்பட்ட இப்பேரணி மூன்று கி.மீ. தூரம் பயணித்து கோழிக்கோடு கடற்கரையில் உள்ள திடலை அடைந்தது. அங்கு, இரவு 7 மணிக்குப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தைத் தென்னாப்ரிக்க அதிபரின் சிறப்பு ஆலோசகர் இப்ராகிம் ரசூல் துவக்கி வைத்தார்.

இதில், தமிழக பி.எப்.ஐ. தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஆண்கள், பெண்கள் என நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கோழிக்கோடு கடற்கரையே மனிதக் கடலில் மூழ்கிப் போயிருந்ததை காண முடிந்தது.

இக்கூட்டத்தில் பேசிய பி.எஃப்.ஐ தமிழகத் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, இலங்கை தமிழர்கள் பிரச்சனை குறித்துத் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

"இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் - குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் - பலியாகின்றனர். குறிப்பாக மருத்துவமனையில்கூட குண்டுகள் வீசப்படுகிறது.

சிங்கள அரசின் இந்த அராஜகப் போக்கை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ட்டப்பேரவையில் தீர்மானம் போட்டும் உலகெங்கும் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியும் மத்திய அரசு இவ்விஷயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை.

அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது பேச்சில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறுபான்மையினர் என்போர் தமிழர்களுக்கு எதிரானவர்களாகவே காலங்காலமாய்ச் சித்தரிக்கப் பட்டுவரும் வேளையில், பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் கொடுத்திருப்பது ஈழத்தில் அமைதி திரும்பும் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

நன்றி: சத்தியமார்க்கம்.காம்

Tuesday, February 17, 2009

50 கோடி மதிப்பிலான வக்பு நிலம் மீட்பு! வாரியத்தின் வீரியமான செயல்.

சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.50 கோடி மதிப்பிலான 25 கிரவுண்டு வக்ப் நிலம் மீட்பு!


நமது செய்தியாளர்

http://www.tmmk.in/

தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப் பேற்றார். அப்போது பத்திரிகையாளர் களை சந்தித்த அவர், ''ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் வக்ப் நிலங்களை மீட்பதுதான் எனது முதல் பணி'' என்று சூளுரைத்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி யிருக்கும் நிலங்கள் பற்றிய விவரங்களை சேகரித்தார். அப்போது சென்னையில் கடற்கரை அருகே திருவல்லிக்கேணி யில் டாக்டர் பெசன்ட் சாலையில் திவான் சாஹிப் கபரஸ்தான் வக்புக்குச் சொந்தமான 25 கிரவுண்டு நிலம் 1917ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருப்பதும் அதை மீட்டெடுக்க நீதிமன்றங்கள் மூலம் முயற்சிக்கப்பட்டும் அது தோல்வியில் முடிந்துள்ளதும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து இதனை மீட்டெடுக்கும் பணியில் வாரியத் தலைவர் தீவிரம் காட்டினார்.


இந்த வக்ப் நிலத்தில் அருணா கார்டன் என்ற பெயரில் தோட்டத்தை உருவாக்கி அதனை வாகனங்களை பார்க்கிங் செய்யும் இடமாக ஆக்கிரமிப் பாளர்கள் உபயோகித்து நான்கு தலை முறையாக லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வந்துள்ளனர். மேலும் மூன்று அடுக்கு மாடி வீட்டையும் கட்டியுள்ள னர். ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.


இந்த வக்ப் நிலத்தை காலி செய்து வாரியத்திடம் ஒப்படைக்குமாறு பிறப் பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த வழக்கு கடந்த 11.02.2009 அன்று தள்ளுபடி ஆனது. இதையடுத்து வக்ப் வாரிய தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரனை தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் செயலாற்றி நிலத்தை மீட்டு வாரியத்திடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மைலாப்பூர், திருவல்லிக்கேணி வட்டாட்சியர் திரு. ரவிச்சந்திரனிடம் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் பகுதி காவல் துணை ஆணையரை தொடர்பு கொண்டு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கு மாறும் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் காவலர்கள் துணையுடன் கடந்த 12.02.2009 அன்று ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் வக்ப் வாரிய ஊழியர்கள் ஏராளமானோர் இருந்தனர். இந்த விஷயத்தை கேள்வி யுற்ற திருவல்லிக்கேணி மற்றும் மைலாப் பூர் பகுதி தமுமுகவினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாரியத் தலைவர், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைப் பார்வையிட்டுச் சென்றார்.


பரபரப்பான கட்டத்தில்...


பகல் 2.00 மணியளவில் அங்கு பார்க்கிங் செய்யப்பட்டிருந்த வாகனங் களை அப்புறப்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டது. நான்கு சக்கர வாகனங் களை அப்புறப்படுத்தும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதன்மூலம் சுமார் 40 கார்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் அப்பகுதி மக்களின் உதவியுடன் 30 ஆட்டோக்கள், 50 இருசக்கர வாகனங் களை வக்ப் வாரிய ஊழியர்கள் அப்புறப்படுத்தினார்கள். தொடர்ந்து ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, அங்கு கட்டப்பட்டிருந்த கூடாரங்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன. இவையனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.


இந்த நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக அப்பகுதி பொதுமக்கள் குவிந்ததால் திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் பரபரப்பு காணப்பட்டது.


இதனிடையே சுமார் ஒன்றரை கிரவுண்ட் நிலத் தில் கட்டப்பட்டிருந்த மூன்று அடுக்கு மாடியிலிருந்து ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்று அவர்கள் கோரியதால் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் 12 மணி நேரம் கால அவகாசம் வழங்கினார். இதையடுத்து அதை மட்டும் விடுத்து 23 1/2 கிரவுண்டு நிலத்திற்கான முக்கிய நுழைவு வாயிலை பூட்டி வட்டாட்சியர் சீல் வைத்தார்.



மீட்கப்பட்ட இடம் தாசில்தார் முன்னிலையில் சீல் வைக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து கடந்த 13.02.2009 அன்று காலை 10 மணியளவில் மீண்டும் வட்டாட்சியர் காவல்துறை படையுடன் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால் அங்கே திமுக கவுன்சிலர் காமராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியரை சூழ்ந்து கொண்டு அவரைப் பணி செய்யவிடாமல் தடுத்த னர். இதற்கிடையே ஆக்கிரமிப்பாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தடை யாணை பெற முயன்றனர். வக்ஃப் வாரிய வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக் கவே வீட்டை காலி செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி நீதிபதி உத்தர விட்டார்.


ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தனர். இதற்கு முன்னர் இருந்த வக்ப் வாரிய தலைவர்கள் எடுத்த முயற்சியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர் போல ஆனது. வக்ப் இடம் இப்படி அநியாயமாக கைவிட்டுப் போகிறதே என்று நாங்கள் வருத்தத்தில் இருக்கையில் தற்போதைய வாரியத் தலைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு இந்த நிலத்தை மீட்டு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் என்று மகிழ்ச்சி பொங்க கூறினர். பல ஜமாஅத் பெரியவர்கள் ஒன்றுகூடி இதுகுறித்து பேசுகையில் உணர்ச்சி மிகுதியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். மேலும் அவர்கள், நிலத்தை மீட்டதோடு நின்றுவிட்டால் மீண்டும் இதனை ஆக்கிரமிக்க முயற்சிப்பார்கள். எனவே இதனை முஸ்லிம்களுக்கு பயனுள்ள வகையில் மருத்துவமனையோ, மேல் நிலைப் பள்ளியோ, ஐ.டி.ஐ. நிறுவனமோ, திருமண மண்டபமோ கட்ட வேண்டும் என்றார்கள். வேறு சிலர், இப்பகுதியில் வணிக வளாகம் கட்டினால் வக்புக்கு அதிகப்படியான வருமானம் கிடைக்கும் என்றனர்.



வாரியத் தலைவரின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


கடந்த அதிமுக ஆட்சியின் போது வாரியத் தலைவராக இருந்த திருமதி. பதர் சயீத் அவர்கள் சென்னை ராயபுரம் கௌஸ் முகைதீன் பேட்டை என்கிற ஜி.எம்.பேட்டையில் உள்ள காஜி சர்வீஸ் இனாம் (எ) முகமதியர் கபரஸ்தான் வக்ஃபுக்குச் சொந்தமான நிலத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 552 குடியிருப்புகளைக் கட்டுவதற்கு வக்ஃப் நிலத்தை ஒப்படைத்தார். இந்த 552 குடியிருப்பு களில் 452 குடியிருப்புக்களை மீனவர் களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 100 குடியிருப்புக்களையும், பெருங்குடியில் கட்டப்பட்டுள்ள 276 குடியிருப்புக் களில் 176 குடியிருப்புக்களையும் வக்ஃப் வாரியத்திற்கு ஒதுக்கி, ஒதுக்கீடு உரிமை மற்றும் வாடகை வசூலிக்கும் உரிமையை தன் வசம் எடுத்துக் கொண்டு அதற்கான விண்ணப்பங் களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது.


வாரியத்தின் மற்றொரு சாதனை!
இந்த விஷயம் தன் கவனத்திற்கு வந்தபோது வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள், குடியிருப்புக் களை குடிசை மாற்று வாரியம் கட்டி யிருந்தாலும் அந்த நிலம் வக்புக்குச் சொந்தமானது என்பதைக் கவனத்தில் கொண்டு மேற்குறிப்பிட்ட 100 குடியிருப்புக்கள் உட்பட 276 குடியிருப்புக்களின் ஒதுக்கீடு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் வாரியத் திற்கு ஒதுக்கக் கோரி வாரியக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். மேலும் இதுதொடர் பாக தமிழக முதல்வரையும், உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் நேரில் சந்தித்தும் இதனை வலியுறுத்தினார். வக்ஃப் வாரியத் தலை வரின் தொடர் முயற்சிகளின் பயனாக கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் கூட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை பரிசீலனை செய்து மேற்குறிப்பிட்ட 276 குடி யிருப்புகளை வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து, இந்தக் குடியிருப்புக்களின் ஒதுக்கீட்டு உரிமை, வாடகை வசூலிக்கும் உரிமை என அனைத்து உரிமைகளையும் தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.


பாராட்டுக்குரியவர்கள்.


இதுகுறித்து வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி அவர்கள் கூறுகையில்,


''இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வக்ஃப் வாரியத்திற்கு ஆதரவாக 11.02.2009 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை களை மேற்கொண்டோம். அதன் பயனாக மறுநாளே (12.02.2009) வட்டாட்சியர் உதவியுடன் ஆக்கிர மிப்புகளை அகற்றியுள்ளோம்.


இந்த விஷயத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்களின் பணி மகத்தானதாகும். வட்டாட்சியர் மூலம் அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகளே ஒரே நாளில் 24 கிரவுண்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை அவர் நிரூபித்து விட்டார். (திருமதி. மைதிலி ராஜேந்திரன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி திரு. கருப்பன் ஐ.ஏ.எஸ். அவர்களின் மகளாவார்).


சென்னையின் முக்கியப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் இந்த நிலத்தை பார்த்த போது அதிர்ச்சி யடைந்து இதனை மீட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் நடவடிக்கைகளை எடுத்தேன். இந்த நிலத்தை மீட்டெடுக்க நீதிமன்றத்தின் உதவி மிக அவசியம் எனக் கருதி யதால் தமிழ்நாட்டில் சிறந்த வழக்கறி ஞர்களில் ஒருவரான திரு. லஷ்மி நாராயணன் அவர்களிடம் இந்த வழக்கை ஒப்படைத்தேன். அவர் இந்த வழக்கை மிகுந்த ஈடுபாட்டோடு அணுகி, இந்த வழக்கில் வக்ப் வாரியத்திற்கு வெற்றியைத் தேடித் தந்தார். மேலும் ஆக்கிரப்பாளர்கள் தடையாணைப் பெறுவதற்காக உயர் நீதிமன்றத்தை அணுகியபோது அவர் அருகிலிருந்து தடையாணை கிடைக்கவிடாமல் செய்தார். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நிலமும், மூன்று அடுக்கு மாடி இருக்கும் இடமும் வக்ஃபுக்குச் சொந்தமானது என்று நீதிமன்றம் பதிவு செய்துள்ளது'' என்று கூறிய வாரியத் தலைவர், ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீட்டை காலி செய்ய ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் அளித்துள் ளது. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து தடையாணை பெற முயற்சிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதை முறியடிப் பதற்கான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வக்ஃப் வாரியத்தின் நன்மைக்காக திரு. லஷ்மி நாரா யணன் அவர்களை தான் நியமித்த போது அதனை சிலர் கடுமையாக விமர்சித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

Friday, February 13, 2009

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும்

இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும்
- சீத்தாராமன்

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர்.சீத்தாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர். பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அன்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர் தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி கல்லூரியில் பயின்றவர் கணக்குத் தணிக்கையாளராகவும் உள்ள இவர் தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

மத்திய கிழக்கு வங்கித் துறையின் 2007-ஆம் ஆண்டிற்கான சிறந்த வங்கியாளர் விருது 2006-ஆம் ஆண்டின் அரபு ஆசிய நாடுகளின் சிறந்த வங்கியாளர் விருது உள்பட பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் சீத்தாராமன், சிறந்த பேச்சாளரும்கூட. பொருளியல் பிரச்சினை குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். தஞ்சாவூருக்குச் சொந்தக்காரரான இவர், இந்தியாவுக்கு இஸ்லாமிய வங்கியே சிறந்தது வறுமையை ஒழிக்க இதுவே ஏற்றது என அழுத்தமாக வாதிடுகின்றார் அண்மையில் சென்னையில் நடைபெற்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தபோது அவர் அளித்த நேர்காணல் :

*இந்தியா போன்ற நாடுகள் இஸ்லாமிய வங்கியிலிருந்து எவ்வாறு பயன் பெற முடியும்?

வளைகுடா நாடுகளில் விரவிக் காணப்படுகின்ற எண்ணெயில் இருந்தும் எரிவாயுவிலிருந்தும் ஏராளமான பணம் ஈட்டப்படுகின்றது. இந்தியா இஸ்லாமிய வங்கியை ஏற்றுக்கொண்டால் அந்த வளைகுடாப் பணம் முழுவதும் இந்தியாவில் முதலீடு செய்யப்படும் நிலை உள்ளது மைக்ரோ ஃபைனான்ஸ் எனப்படும் சிறு கடன் திட்டம் இஸ்லாமிய நிதித்துறைக்கு முற்றிலும் ஏற்றது வறுமையை ஒழிப்பதற்கு இந்தத் திட்டம் சிறந்த தீர்வாகவும் உள்ளது.

*இஸ்லாமிய வங்கி வட்டி வசூலிக்கும் வர்த்தக வங்கியிலிருந்து எவ்வாறு வேறுபட்டது?

இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களுக்கு உட்பட்டவை. இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Sharing and Caring) அவை செயல்படுகின்றன. வட்டி வங்கிகள் வட்டி வசூலிக்கின்றன இஸ்லாமிய வங்கிகள் வட்டியைத் தடை செய்துள்ளன. சூதாட்டம் மது அருந்துதல் மற்றும் மனித வள மேன்மைக்குப் பொருந்தி வராத தொழில்கள் அனைத்தையும் ஷரீஅத் தடை செய்துள்ளது. இஸ்லாமிய வங்கிகளில் நாங்கள் கடன் வழங்கு வதில்லை இலாபத்திலும் நட்டத்திலும் பங்கு எனும் அடிப்படையில் (Equity) நிதியுதவி அளிக்கிறோம் இந்த முறையில் செய்யப்படுகின்ற ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையானவை இந்த முறையில் இரகசிய நிபந்தனைகள் எதுவும் இல்லை.

*நீங்கள் வட்டி எதுவும் வசூலிப்பதில்லை எனில் உங்கள் பங்குதாரரை எவ்வாறு கட்டுப்படுத்துவீர்கள்?

ஷுகுக் எனப்படும் இஸ்லாமியப் பங்குப் பத்திரங்களை வெளியிட நாங்கள் சிறப்புக் கண்காணிப்பு மையத்தை (Special Purpose Vehicle) ஏற்படுத்த உள்ளோம் பொறுப்பு உணர்வு என்பது பங்குதாரர்கள் இருவருக்கும் சம அளவில் உள்ளது என்பதை ஷரீஅத் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

*எத்தனை நாடுகளில் இஸ்லாமிய நிதியத்தை அடிப்படையாகக் கொண்ட வங்கிகள் உள்ளன? மொத்தம் எத்தனை வங்கிகள் உள்ளன? இந்த வங்கிகளில் எவ்வளவு பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது?

இங்கிலாந்து, ஜப்பான், கனடா, தாய்வான் உள்பட 36 நாடுகளில் இஸ்லாமிய வங்கிகள் உள்ளன 715 வங்கிகள் உலகம் முழுவதும் செயல்படுகின்றன. இஸ்லாமிய வங்கிகளில் 12 டிரில்லியன் டாலர்கள் புழக்கத்தில் உள்ளன.

*இது உலகமயமாக்கல் காலம் இதில் உலகம் முழுவதும் உள்ள பொருளியல் முறைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. இதுபோன்ற சூழலில் இஸ்லாமிய வங்கிகள் மட்டும் உலகப் பொருளியல் முறைகளுடன் கலவாமல் எவ்வாறு தனித்து பாதுகாப்பான முறையில் செயல்பட முடியும்?

இன்று உலகில் நிலவும் பொருளியல் சிக்கலுக்கு நேர்மையற்ற வங்கிச் செயல்பாடுகள்தாம் காரணம். சொத்து வங்கிப் பரிவர்த்தனைக்குப் (Asset – Banked Transactions) பதிலாக அவர்கள் சொத்தை அடிப்படையாகக் கொண்ட பரிவர்த்தனையில் (Asset – Based Transactions) ஈடுபடுகின்றனர். ஆனால் இஸ்லாமிய வங்கிகளில் எல்லாப் பரிவர்த்தனைகளும் சொத்தை அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றன உற்பத்திப் பொருள்களும் (Products) சொத்தை அடிப்படையாகக் கொண்டவை. இது பாதுகாப்பை உறுதி செய்கின்றது.

*இஸ்லாமிய வங்கியை அறிமுகப்படுத்த இந்திய ஒழுங்குமுறை ஆணையம் ஏன் தயங்குகிறது?

இந்தியாவில் இஸ்லாமிய வங்கியை அறிமுகம் செய்ய ஷரீஅத்தை அடிப்படையாகக் கொண்ட ஷரீஅத் குழு ஒழுங்குமுறை அமைப்பு தரப்பட்டியல் முகமை மற்றும் கணக்குத் தணிக்கையாளர்கள் ஆகியோரை நாங்கள் உருவாக்க வேண்டியுள்ளது. நவீன இஸ்லாமிய வங்கி முறை என்பது 30 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுடைய தொழில் முறையாகும். நமது நாட்டிலும் சில ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய வங்கிகள் தோன்றும் என நான் நம்புகின்றேன்.

நன்றி: சமரசம் (அதிகாலை.காம் மூலம்)

Thursday, February 12, 2009

Slumdog millionaire: சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்

Slumdog millionaire: Review in TAMIL (Exclusive)
சர்வதேச அரங்கில் கொச்சைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் மானம்.

- தமிழ்ச்செல்வன்

ஸ்லம்டாக் மில்லினியர் என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்க்கை முறையின் தனித்துவத்தை கொச்சைப்படுத்தி இந்தியாவின் மானத்தை ஒரு அயல்நாட்டு திரைப்பட இயக்குனரின் சாமர்த்திய திறமையால் சர்வதேச அரங்கில் அசிங்கப்படுத்தபட்டுள்ளன.

இது போன்ற நிகழ்வுகள் வரும் காலங்களில் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்குமா?


கடந்த சில தினங்களுக்கு முன் ''சினிமாத்துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். அந்தப் பதிவிற்கான பல விமர்சனங்கள் மின் அஞ்சலின் மூலம் வரப் பெற்றேன் அதில் ஒரு விமர்சனம் அமெரிக்காவிலிருக்கும் ஒரு சகோதரரிடமிருந்து வந்தது இவை...
***----------***
From: Navaneetha Krishnan. USA.
வணக்கம்!
மிகவும் உணர்வுப்பூர்வமான... அதே சமயம் ஒவ்வொரு தமிழனுக்கும், ஏன் ஒவ்வொரு மனிதனுக்கு எழ வேண்டிய உணர்வு! அருமை.... அற்புதம்! நீங்கள் ஏன் இதுபோன்ற வித்தியாசமான, நியாயமான ஆக்கங்களை அதிகாலை.காம் இணையம் வழியாக வாசகர்களோடு பகிர்ந்துகொள்ளக்கூடாது? இன்னும் அதிகமான உள்ளங்கள் படித்துப் பயன்பெறுமே! ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டுப்போகட்டுமே! நாம் அதைச் செய்வோமே!
இதுதான் என்னை தங்களுக்கு எழுதத் தூண்டியது. இந்த உணர்வுகளை நானும் அடைந்தேன்! அமெரிக்காவின் ஒரு பிரபல திரையரங்கிற்கு, நான் இந்தத் திரைப்படத்தை ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவே பார்க்கச் சென்றது நூறு சதம் உண்மை. ஆனால் வெட்கித்தலைகுனிந்தேன். காரணம் மும்பைக்குடிசைகளைப்பற்றிய காட்சியமைப்புக்காக அல்ல, அந்தத் திரையரங்கில் கிட்டத்தட்ட 2-3 நபர்கள்தான் இந்தியர்கள், இதில் நானும் என் மனைவியும் உட்பட. படம் முடிந்ததும் அனைத்து அமெரிக்கர்களின் பார்வையும் எங்கள் மீது இருந்ததை இப்பொழுதும் நான் உணர்கிறேன். ஏதோ அந்தப்படத்தில் நடித்த ஒரு நடிகர் அங்கு வந்து படம் பார்த்துவிட்டு வெளியே வரும்பொழுது எப்படி மேலும் கீழுமாக பார்ப்பார்களோ அது போல் பார்த்ததற்கு காரணம் பிறகுதான் புரிந்தது. பச்சையாகச் சொல்லவேண்டுமெனில் "கேவலப்படுத்தியிருக்கிறார்கள்". இந்தியா வல்லரசாகும், அப்படியாகும், இப்படியாகும் என்று மார்தட்டிக்கொள்ளும் இந்த 2009-ல் இன்றும் இந்தியா இப்படித்தான் இருக்கிறதா? என்ற கேள்விக்கனைகளும், இந்தியா மீதான் அவர்களின் தவறான கோணமும் இன்னும் தொடருவதற்கு இது உந்துகோலாக இருக்கிறது. இந்தக்காட்சிகளின்படி இது உண்மையா? பொய்யா? என்ற விவாதம் வேறு. ஆனால் ஆஸ்கார் நோக்கி செல்லும் ரஹ்மான் மாத்திரமே நம் கண்ணுக்குத் தெரிவதால் நாம் இதை இப்போதைக்கு ஒரு புறம் தள்ளிவைப்போம் அவ்வளவே! நன்றி!!
புரட்சி வாழ்த்துக்களுடன் - நவநீ/நவின்
***---------------***
இந்த விமர்சனம் கண்டவுடன் நண்பர் வைத்தீஸ்வரன் மூலம் இத்திரைப்படத்தின் குறுந்தகடு வாங்கப் பெற்று இந்த திரைப்படம் பற்றிய விமர்சனம் எழுதினேன்.

இந்தியாவின் மிகப் பெரும் வர்தக நகரமான, மும்பை நகரை அழகான வார்த்தையில் சொல்வதென்றால் "தூங்காத நகரம்" என்று சொல்லலாம் அந்த நகரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் மும்பையின் குடிசை வாழ் பகுதி மக்களின் வாழ்க்கை முறையின் மறுபக்கத்தை மிக துல்லியமாக பதிவு செய்திருக்கிறது. இதுவரை இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் இந்திய மொழிகளில் தயாரித்து வெளியிட்டு வந்த அசிங்கங்கள் ஒரு சில பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மறைத்தோ அல்லது தெரியாமலோ வந்த பல சம்பவங்கள் இந்த படத்தின் மூலம் உலகின் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நூற்றுப்பத்து கோடி மக்கள் தொகையுடன், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, தொழில்துறையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் மிகப்பெரிய அளவில் சாதனைகள் படைத்துவரும் ஒரு நாடு. உலகின் அடுத்த வல்லரசு என்று சொல்லிக்கொள்ளும் ஒரு தேசத்தின் மானம் உலக அளவில் துகிலுரியப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வாழ்ந்து வரும் அஹமது சல்மான் ருஸ்டி கடந்த 1988 ம் ஆன்டு தனது 4வது நூலான "சாத்தானின் வேதங்கள்" மூலம் இஸ்லாத்தை விமர்சித்து எழுதியதற்காக ருஸ்டியை ஈரான் முன்னாள் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமெய்னி கொலை செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தார். ஆனால் மேற்கத்திய நாடுகள் அவனது நரகல் நடை எழுத்திற்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. கர்ப்பப்பை சுதந்திரம் (?) கேட்டு எழுதிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லீமாவுக்கு அமோக வரவேற்புகள் வாழ்த்துக்கள். இது போல் ஒரு சமூகத்தை இழிவு படுத்தி எழுதினால் அதற்கு ஆஸ்கார் விருது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேற்கத்திய நாட்டின் கேடு கெட்ட கலாச்சாரப் புத்தி இது.

மிக திறமைவாய்ந்த இயக்குனரான அந்த வெள்ளைக்காரன் இந்தியாவின் கேவலங்கள் என்று என்ன இருக்கிறதோ, அதை எல்லாம் ஒரே படத்திலேயே வரிசைப்படுத்தி இருப்பது அவனின் அதீத திறமைக்கு ஒரு சான்று. இதில் வரும் அவலங்களான வன்முறை, ஏமாற்றல், அடிப்படை வசதியின்மை , குழந்தை தொழிலாளி, வறுமை, குப்பைகள் நிறைந்த சேரிப்புற வாழ்க்கை, வீட்டு வன்முறை, பாலியல் தொழில் , சிறுவர் சீர்கேடு, சிறுவர் வன்முறை, நிழல் உலக தாதாக்கள், மத ரீதியான சண்டைகள், வெட்டுக்குத்துகள், இந்திய சமூகத்தில் பெண் தொடர்பான பார்வை , தொலைக்காட்சி/சினிமா தொடர்பான அதீத மோகம், அதற்கும் மேலாக திருட்டு என்று இத்தனை வருட கால இந்திய சினிமா வரலாற்றில் கொஞ்சம் கொஞ்சமாக, பகுதி பகுதியா காட்டப்பட்டதை எல்லாம் இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் ஒரே படத்தில் காட்டி இந்தியாவின் மானத்தை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்துள்ளான் அந்த இயக்குனன்.

இதன் காரணமாகவோ என்னவோ இந்தியரான அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோல்டன் குலோப் மற்றும் பாஃப்டா விருதுகளும் படத்தொகுப்பாளர், ரெசூல் பூக்குட்டி என்பவருக்கு பாஃப்டா விருதும் வழங்கி அவர்களை ஆஸ்காருக்கும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இந்தியாவை கவுரவமாக கேவலப்படுத்த மேற்குலகுக்கு கிடைத்த அரிய ஆயுதம் இந்த படம். அதனால் தான் இந்தப்படத்திற்கு விருது மேல் விருது கொடுத்து அருமையாக விளம்பரம் செய்கிறார்கள்.

முதல் சந்தேகம் , ஏ.ஆர் ரஹ்மான் ஆங்கில படத்துக்கு இசை அமைப்பது இது முதல் முறை அல்ல . அவரது முந்தய படங்கள் அதிகம் பேசப்பட வில்லை அல்லது ஏதாவது விருதுக்கு கூட பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம்.? அவரது திறமை இந்த படம் மூலமாக தான் உலகுக்கு தெரிய வேண்டிய அவசியம் என்ன?

படத்தில் நடிக்கும் எந்த ஒரு முக்கிய கதாபாத்திரமும்(இந்தியர்) ஏன் நல்ல முறையில் சித்தரிக்கப்படவில்லை?

நாயகனாக வரும் 2 சகோதரர்களை அதாவது திருடர்களை முஸ்லிம்களாக காட்டியுள்ள இயக்குனன் அதில் ஒரு தொழு‍கைக் காட்சியும் வைத்து 'நான் பாவம் செய்பவன், என்னை மன்னித்துவிடு இறைவா' என்று இறையும் காட்சிகள் தேவையில்லாமல் புகுத்தப்பட்டு முஸ்லிம்களின் கண்ணியத்தை கொச்சைப்படுத்தியிருக்கின்றான்.

கதாநாயகனை சுற்றி நடக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் என்ன ...?

அவர்கள் மிக மிக கொடூரமாக சித்தரிக்கப்பட வேண்டிய தேவை என்ன? உதாரணமாக அந்த போலீஸ் காரர், தொகுப்பாளராக வரும் அனில் கபூர் கூட ஏன் வில்லனாக சித்தரிக்கப்பட வேண்டும்.

சிறுவர்களை கடத்தும் அந்த கும்பல், கண்களை குருடாக்கும் காட்சிகள், அண்ணன் தம்பி உறவு முறிவுக்கான காட்சிகளில் ஏன் அளவு கடந்த கொடூரம்?

இவ்வளவு கீழ்த்தரமாக இந்திய மனிதர்களை காட்டும் இயக்குனன் , உல்லாச பயணிகளாக வரும் இரு அமெரிக்க பாத்திரங்களை மட்டும் மனிதாபிமானம் உள்ளவர்களாக காட்டுகிறான். அந்த காட்சியிலும் கூட இந்திய போலீஸ்காரர் கொடூரமானவராக சித்தரிக்கப்பட்டுள்ளார். இப்படியான காட்சி அமைப்பு கதையின் கருவிற்கு கட்டாயம் தேவை தானா?

அணு சக்தி ஒப்பந்தம் போடும் நாட்டில் பசியில் திருடும் சிறுவனை ஓடும் ரயில் இருந்து தள்ளி விடுகிறார்கள். மற்ற நாடுகளுக்கு ஆயுத உதவி செய்யும் நாட்டில் எத்தனை கோடி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை.? சந்திரனுக்கு ராக்கெட் விடும் நாட்டில் தான் எத்தனை குழந்தைகள் குப்பை பொருக்கி பிழைக்கிறார்கள். வல்லரசு கனவு காணும் தேசத்தில் எத்தனை கோடி பிச்சைக்காரர்கள்? இதை எல்லாம் பார்க்கும் மேற்கு உலகின் எத்தனை பேர் இந்தியாவுக்கு வர அஞ்சுவர். இதை பார்க்கும் அவர்களுக்கு ஏற்படும் உள ரீதியான தாக்கம் எப்படி இருக்கும்.

கண்களில் சூடான திராவகத்தை ஊற்றி ஸ்பூனால் கண்களை தோண்டி சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு தயார்படுத்துவதை பார்க்கும் அமெரிக்க குழந்தைகள் இனிமேல் இந்தியர்களை எப்படி பார்ப்பார்கள்?

வர்த்தக/வளர்ச்சியடைந்த மும்பை நகரின் புற தோற்றமே இது என்றால் மற்ற இந்திய நகரங்கள் பற்றி இதுபோன்ற கேள்விகள் அந்த காட்சிகளை பார்க்கையில் எழும். ஆனாலும் இயக்குனன் பொய்யான ஒன்றை காட்டவில்லை, நிஜமான ஒரு சில சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறான்.

நாம் அமெரிக்கா போன்ற நாடுகளின் மக்களையும், அந்த நாட்டு வாழ்க்கை முறையையும் கேவலமாக சித்தரித்தால் அவர்களும் இது போல தான் கொண்டாடுவார்களா?

இந்தியத் திரைப்படத்துறைக்கு அந்த தைரியம் இருக்கிறதா? இந்த படம் மறைமுகமாக ஏற்படுத்தும் சமூக பொருளாதார தாக்கம் என்ன?


இன்னுமொரு சான்று, இந்திய எழுத்தாளர் அரவிந்த் அடியா என்ற ஒருவர் எழுதிய வைட் டைகர் என்ற புத்தகம் கடந்த வருடம் சர்வதேச விருதான பூக்கேர் (The White Tiger wins the 2008 Man Booker Prize for Fiction )விருது பெற்றது. இதில் கூட அந்த எழுத்தாளர் இந்திய ஏகாதிபத்தியத்தையும், அதன் கலாச்சாரம் மற்றும் பல ஊழல் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்காக விருது வழங்கி அந்த புத்தகம் உலக அளவில் பிரபலப்படுத்தப்பட்டது. இம்முறையும் அது போன்ற ஒரு நிகழ்வே நடை பெறுகிறது.

அந்நிய நாட்டு திரை துறையினரின் இந்த போக்கை இந்திய அரசு தொடர்ந்து அனுமதிக்குமேயானால் வரும் காலங்களில் இந்தியாவின் நீதித்துறை, நிர்வாகத்துறை, பாதுகாப்புத் துறைகளில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் தவறுகள் காட்சிகளாக பதியப்பட்டு சர்வதேச அரங்கில் துகிலுரிக்கப்படும் ஆட்சியாளர்கள் இப்போ‍தே விழித்துக் கொள்ளாவிட்டால் நாட்டின் பாதுகாப்பு எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கிறோம்.

Monday, February 9, 2009

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை
நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

-தமிழ்ச் செல்வன்

நான் சினிமா பார்பதும் இல்லை அதற்கான விமர்சனங்கள் எழுதுவதும் இல்லை சில நேரங்களில் விமர்சனத்திற்குறிய திரைகாட்சிகளை மட்டும் பார்பதுண்டு ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகத் திரைத்துறையின் மிக உயரிய விருதான 2 விருதுகளைப் பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமை‍யை அடைந்துள்ளார். (ஸ்லம்டாக் மில்லியனர் திரைக்கதையில் நமக்கு உடன்பாடு இல்லை அந்தக் கதை இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்கை முறையை அசிங்கப்படுதியுள்ளதாக அறிந்தேன்) ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையிலும் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார். இவரது விசயத்தில் தமிழ்திரை உலகினர் நடந்து கொண்ட விதம் இந்த கட்டுரை எழுதத் தூண்டியது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்.

இந்திய மொழிப்படங்கள் தவிர உலக மொழிகளிலும் தனது இசைத் திறமையால் பல விருதுகளைப் ‍வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில மொழி திரைப்படத்திற்கு சிறந்த இசைக்கான விருதுகளை பெற்றுள்ளார். கோல்டன் குலோப் விருதுக்குப் பிறகு பிரிட்டனின் மிக உயர்ந்த விருதான பாஃப்டா விருதும் பெற்றுள்ளார் இந்த பாஃப்டா விருது இவருடன் இன்‍னொரு இந்தியருக்கும் கிடைத்துள்ளது.

இரண்டு மிக உயர்ந்த விருதுகளைப் பெரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதே ஆகும் ஏ.ஆர்.ரஹ்மான் சாதித்தது ஏராளம் இவரது ஆடியோ சீடிக்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இவரது விருதுகளையும் சாதனைகளையும் விவரிக்க இந்த ஆக்கமல்ல ஆனால் உலக அளவில் இவ்வளவு பெரிய சாதனைகள் புரிந்துள்ள ஒரு இந்தியன் குறிப்பாக தமிழனை நமது தமிழ் திரை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் நமது விமர்சனம்.

காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.

1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமையாக பேசுவார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக விருது பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வளவு பெரிய விருது பெற்ற ஒரு தமிழனின் சாதனை, இடைத்தேர்தல் வேட்டு சத்தத்தில் சப்தமில்லாமல் போனதது தான் வேதனை. அந்த நேரத்தில் தமிழ் தொலைக்காட்சிகள் இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களிலும் தன் முகத்தை திருப்பிக் கொண்டன சரி, இதுவாவது போகட்டும் இது அவாள்களின் வாடிக்கை. விருதை வாங்கிக் கொண்டு சென்னை வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை என்பது தான் தமிழ்த் திரை உலகினரின் இன்னோரு முகத்தை காட்டியது.

ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு மட்டும் அந்த தெரு திருவிழா கோலம் பூண்டிருந்தது. திரை உலகத்தப் பொருத்தவரை ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது? அங்கும் மதவாதம் காவி சிந்தனை தலைக்கேறிப் போயுள்ளது.

ஆச்சரியத்தில் மூழ்கி அதிர்ச்சியில் இருந்தவர்கள் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த உயரிய விருதுகளைப் பெற்ற முதல் இந்தியன் என்ற முறையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

சிம்பொனி இசையமைத்து வந்த ஒரு தமிழனுக்கு தமிழ்த்திரை உலகமும் தமிழ் ஊடகங்களும் ஆண்டுக்கு மேல் புகழ்பாடி வந்தன இது போன்ற சாதனையை யாரும் இதுவரைசெய்திடவில்லை என்ற ஒரு மாயைதோற்றம் அப்போது உண்டாக்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதுகளைப் பெற்று வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லீம் எனபதால் பாராட்டுவிழா அடுத்த கட்டம் பாராட்டுவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள் திரை உலகிலும் ஊறிப்போயுள்ள செங்பரிவார சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம்.

இவர்கள் தான் இந்திய சுதந்திர வரலாற்றை சரியாக படம் பிடித்து மக்களுக்கு சொல்பவர்களா? இந்தியாவின் சுதந்திரத்தில் தனது விகிதாச்சாரத்திற்கும் அதிகமான தியாகங்களைக் கொண்ட சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு உடலாலும், உயிராலும், பொருளாளும் அதிகமதிகம் தியாகங்கள் செய்த சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இந்த காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், திருடர்களாகவும், தமிழை இன்று வரை அதன் உயிரோட்டத்தோடு அதன் கருத்துக்களை சிதைக்காமல் பேசும் முஸ்லிம்களை தமிழை கடன் வாங்கி கொத்திக் கொதறி பேசுபவர்கள் போல் சித்தரித்து வெகுஜன மக்களிடமிருந்து தனிமை படுத்தும் பணியை நீண்ட காலம் செய்து வந்தார்கள்.

சுதந்திர தியாகச் செம்மல் மைசூர் சிங்கம் திப்புவின் தியாகம் எத்தனை திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது? மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாறு எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? நமது பகுதியைச் (தென்தமிழ்நாடு)சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரனா? யார் அவன்? என்று அந்த வரலாற்றை தேடிச் சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த சுதந்திர போராட்ட வீரன் கான்சாகிப் என்று அடையாளம் கண்டவுடன் அவன் ஒரு முஸ்லிம் என்பதால் அந்த வரலாற்று உண்மையை அங்கேயே போட்டு மூடிவிட்டார் நன்றாக நடிக்கத் தெரிந்த அந்த நடிகர்.

விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லிம் என்பதால் பாராட்டக்கூட மனமில்லாத காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக் கூட்டத்தின் முகம் இதோ கிழிந்து தொங்குகிறது.

கமல், மணிரத்தினம், போன்றவர்கள் என்றால்... இல்லாத ஒன்று உறுவாக்கப்படுகிறது இந்த ஊடகங்களால்.

திரைப்படம் மற்றும் அதன் துறையில் நமக்கு உடன்பாடில்லை அது சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் கேடு கெட்ட துறை. ஆனால் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மிகப் பெரிய ஊடகம் என்பது உண்மை.

இப்போது நடந்து கொண்ட இந்த நிகழ்வு இந்தத் துறையில் ஊரிப்போயியுள்ள சாதிய வெறி காவி சிந்தனை எந்த அளவுக்கு தலைக்கேறிப்போயுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சிந்தனை மாற்றத்தை உண்டுபன்னும் இந்தத்துறையில் காவி சிந்தனை ஊறிப்போயுள்ளது நாட்டு நலனுக்கு உகந்தததல்ல.

Sunday, February 8, 2009

நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல... தமுமுக தலைவர் உரை.

நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல...

மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாட்டில் தமுமுக தலைவர் உரை.

சென்னை : "பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கம் உள்ளவர்களும் அரசியலுக்கு வந்து, மக்கள் சேவை ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது,'' என்று, மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழாவில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம்.ஹேச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசியதாவது.

தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாட்டில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் டாக்டர் MH ஜவாஹிருல்லா அவர்கள் பேசியதாவது:

தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசியக் கட்சிகள், 55 மாநிலக் கட்சிகள், 827 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.நாள்தோறும் தேர்தல் ஆணையத்திற்குப் புதிதாகப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வருவதாக அறியப்படுகிறது. நாட்டில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லாத நிலையில், புதிதாக மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உள்ளது. நமது மக்கள் இன்னும் பல தளங்களில் சுதந்திரத்தைப் பறிகொடுத்த நிலையில் உள்ளனர். தற்போதைய பார்லிமென்டில் உள்ள 522 உறுப்பினர்களில் 120 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களில் 40 பேர் மீது கொலை, பாலியல் பலாத் காரம் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நல்லவர்கள், நல்ல பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கியே இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இது, நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கமுள்ளவர்களும் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும்; ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 45 கோடி பேர், அதாவது, மக்கள் தொகையில் 41.6 சதவீதம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் வதாக உலக வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகில் உள்ள ஏழை மக்களில் 33 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், அதிக வருமானம் உடையவர்களில் முதல் 10 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்தை அனுபவித்து வருகின்றனர்.நமது நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வருவாய் நாளொன்றுக்கு 20 ரூபாயைத் தாண்டவில்லை. இந்த அவல நிலையை நீக்க, ஏழை எளிய மக்களின் தேவைகள், சட்டமியற்றும் அவைகளில் வலிமையாக ஒலிப்பதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உதயமாகிறது.நமது நாட்டு அரசு மக்களுக்குச் செய்யும் செலவில் ஒரு ரூபாய்க்கு வெறும் 15 பைசா மட்டுமே அடித்தட்டு மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறிப்பிட்டார்.

காந்தியடிகள், "இந்த உலகில் எல்லாருக்கும் தேவையானது போதுமான அளவு உள்ளது. ஆனால், பேராசைக்கு அளவே இல்லை' என்று குறிப் பிட்டார்.லஞ்சம் புற்றுநோய் போல் ஒரு சமுதாயத்தை வீழ்த்தி விடும். லஞ்சம் வாங்குபவர் அதைக் கொடுப்பவர் மற்றும் அதற்கு வழிவகுப்பவர் ஆகியோரை இறைவன் சபிப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நமது நாடு, கல்வி, காவல், நீதித்துறை, சுகாதாரம் உள்ளிட்ட மக்களுக்குச் சேவை செய்யும் அரசுத் துறைகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு லஞ்சத்தின் அளவு 21 ஆயிரத்து 68 கோடி ரூபாய் என்று இருப்பதாக, "டிரான்ஸ்பரன்சி இண்டர் நேஷனல்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அவலப் போக்கை தலைகீழாக மாற்றி, லஞ்ச லாவண்யமற்ற இந்தியாவை உருவாக்குவதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம். ‍ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்... மனிதநேய மக்கள் கட்சி மக்கள் பணியாற்ற உதயமாகிவிட்டது....

அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்
மனிதநேய மக்கள் கட்சி மக்கள் பணியாற்ற உதயமாகிவிட்டது....
கடந்த 13 ஆண்டுகளாக மக்கள் சேவையாற்றிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இறையருளால் தனது அரசியல் பிரிவை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ் துவக்கவிழா மாநாட்டிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெரும்திறளாக மக்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் விரிவான செய்திகளுக்கு www.tmmk.in or www.tmmk-ksa.com

Friday, February 6, 2009

MMK மாநாடு: நேரடி ஒளிபரப்பிற்கான இணைப்புகள்.

இறையருளால் இந்திய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தப் போகும் மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழா மாநாட்டு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பு இன்ஷா அல்லாஹ் கீழ்கண்ட இணைப்புகளிலிருந்து காணலாம்.


mms://66.36.252.46/vconnect


http://www.dawahtelevision.com

ஒட்டுமொத்த முஸ்லீம் சமுதாயத்தின் நீண்ட நாள் கனவு நினைவாகப் போகும் நாள்..... இறையருளால் வெற்றியடைய வல்ல ரஹ்மானை பிரார்த்திக்கி‍‍‍றேன்.

Wednesday, February 4, 2009

தாய்க்கழகம் அழைக்கிறது... சமுதாயமே திரண்டு வா

தாய்க்கழகம் அழைக்கிறது சமுதாயமே திரண்டு வா...!

சமுதாயக் கண்மணிகளே...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நீங்களெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இக்கடிதத்தை வரைகிறேன். அடர்த்தியான பணிகளின் காரணமாகவும், தொடர்ச்சியான பயணங்களின் காரணமாகவும் எழுத முடியவில்லை.


ஆனால், அதே காரணத்தை இப்போதும் சொல்ல முடியாதல்லவா...! வரலாற்று திருப்புமுனைக்காக நீங்களெல்லாம் அல்லும் பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களையெல்லாம் உற்சாகப்படுத்துவது எங்களின் அவசிய பணியல்லவா...!


பிப்ரவரி 7 எப்போது வரும்? நமது தலைவர்களையும் சொந்தங்களையும் ஒருசேர தாம்பரத்தில் காணும் நிமிடங்கள் எப்போது மலரும்? என்றெல்லாம் நினைத்து நினைத்து பூரிப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கும் உங்களைக் காணும் பேராவலில் நாங்களும் உள்ளோம்.


கண்மணிகளே...


1995ல் நாம் தமுமுகவை தொடங்கிய போது இவ்வளவு தூரம் பயணிப்போம் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? எத்தனை சிறைகள், எத்தனைக் கொடுமைகள், அத்தனைகளையும் எதிர் கொண்டு... புயலை உரசி, இடிகளை உள்வாங்கி இன்று இமயமாய் உயர்ந்திருக்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.


இந்த இயக்கத்திலே, சமுதாய நீரோட்டத்திலே இணைந்ததற்காக எவ்வளவு எதிர்ப்புகளை எதிர்கொண்டோம் என்பதை எண்ணிப் பார்க்கின்றபோது இதையெல்லாம் நாம்தான் நிகழ்த்தி னோமோ என்ற ஆச்சரியம் மேலிடு கிறது.


எல்லாம் வல்ல இறைவனல்லவா நம்மை இயக்கியிருக்கிறான்!!


குடும்பத்தைப் பகைத்தவர்கள், முதலாளிகளை எதிர்த்தவர்கள், இயக்கப் போராட்டத்தில் பங்கெடுத்ததற்காக வேலையை இழந்தவர்கள், வெளிநாட்டு வாய்ப்புகளை பறிகொடுத்தவர்கள், அரச வன்முறைகளால் உடல் காயங்களைப் பெற்றவர்கள் என்று தியாகிகளின் பாசறையாய் தமுமுக இருக்கிறது.


அதனால்தான் நம்மை யாராலும் அழிக்க முடியவில்லை. அழிக்க நினைத்தவர்கள் பின்னாளிலே நம்மை வளர்க்க முனைந்தார்கள். நம்மை வளைக்க நினைத்தவர்கள் அது முடியாததால் நம்மோடு அரசியல் அணியிலே இணைந்தார்கள். அல்லது தம்மையும் இணைத்துக் கொண்டார்கள். ஆம், வரலாற்றை அதன் போக்கில் அல்ல, நமது போக்கிலே வடிவமைத்த திறமை நமக்கு உண்டு. அல்ஹம்துலில்லாஹ்!


13 ஆண்டுகளாக நாம் ஆற்றிய பணிகள் தமிழகத்தில் எவரும் செய்யாதது. செய்ய முடியாததன்றோ...!

  • அவசர ரத்த தான சேவையில் முதல் நிலை

  • 54 ஆம்புலன்ஸ்களோடு உயிர் காப்பு பணி

  • மரங்களை நட்டு சுற்றுச் சூழலை பாதுகாத்தல்

  • கல்வி உதவிகள், விழிப்புணர்ச்சி கருத்தரங்குகள் என நாம் ஆற்றிய, ஆற்றி வருகின்ற பணிகள் முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது.


தனிமைப்படுத்தப்பட்ட நமது சமுதாயத்தை, தரணி போற்றும் வகை யில் தகுதி கொண்டதாக மாற்றியமைத்த சாதனை நமது இயக்கத்தையே சாரும்.

கண்மணிகளே...


ஒடுக்கப்பட்ட நமது குரலை நாம் நடத்திய போராட்டங்கள் வீரியமாய் ஒலிக்கச் செய்தன. அதன் விளைவு தீர்க்கப்படாத நமது பிரச்சினைகள் தீர்வுக்கு வந்தன.

  • 1999ல் வாழ்வுரிமை மாநாடு

  • 2004ல் தஞ்சை பேரணி

  • 2007ல் டெல்­ பேரணி

இவையெல்லாம் உரிமைப் போரில் நாம் பதித்த வரலாற்றுத் தடங்கள். இதை எண்ணி எண்ணி சமுதாயம் அகமகிழ்கிறது.


உச்சக்கட்டமாக நமது இலட்சியக் கோரிக்கைகளில் முதன்மையானதாக தமிழக அளவிலான இடஒதுக்கீட்டை 3.5 சதவீதம் என்ற அளவிலே நாம் வெற்றிகரமாக, இந்த சமுதாயத்திற்கு பெற்றுக் கொடுத்த போது நம்மை இந்த சமுதாயம் மார்போடு அணைத்ததை நாம் கண்டோம், களித்தோம்.


நாம் அரியணை ஏற்றிய திமுக அரசிடம் வாக்குகளை கொடுத்து உரிமையைப் பெற்றோம். சமுதாயத்திற்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய நிம்மதி கிடைத்தது.


அப்போதுதான் சமுதாயத்தின் அறிவு ஜீவிகளிடமிருந்து மட்டுமே வந்த ஒரு கோரிக்கை மக்கள் மன்றத்திடமிருந்தும் நமக்கு வந்தது.


நேரடி அரசியலில் இறங்காமலேயே வெற்றிகளைக் குவிக்கும் தமுமுக, ஏன் மார்க்க, சமுதாயப் பணிகளோடு அரசியல் பணியையும் கையிலெடுக்கக் கூடாது என்ற அந்தக் கேள்வி நூற்றுக்கணக் கிலே எழும்பி, அது ஆயிரம், லட்சம் என்று நம்மை உலுக்கியது.


ஜமாஅத்துகள், சங்கங்கள் பெயரில் நமக்கு உரிமையான நிர்பந்தங்கள் வேறு! பொது நிகழ்ச்சிகளில் நம்மைச் சுற்றி முற்றுகை வேறு! இப்படி சமுதாய நிர்பந் தங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமே பட்டாசு சப்தங்களாய் வெடித்தன.


அதன்பிறகே ஆகஸ்ட் 26, 2007 அன்று தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிலே அரசியல் கட்சியை உருவாக்கும் முடிவுக்கு நமது சமுதாயக் கண்மணிகளாகிய நீங்கள் ஒப்புதல் வழங்கினீர்கள்.


பலகட்ட ஆய்வுகள், பலதரப்பட்ட ஆலோசனைகளை உள்வாங்கி நமது தலைமை நிர்வாகக்குழு நிதானமாய் திட்டங்களைத் தீட்டியது.

  • நமது உயிரோட்டமாய், ரத்த ஓட்டமாய் இருக்கும் தமுமுகவின் இன்றைய பணிகளுக்கு பாதிப்பு வரக் கூடாது.

  • நமது மார்க்க பணிகளுக்கு ஊனம் ஏற்பட்டுவிடக் கூடாது.

  • சமரசமற்ற போராட்டங்களில் வீரியம் குறையக் கூடாது. என்ற எண்ணங்களின்படி தமுமுக அதே வீரியத்தோடு அதே பாதையில் பயணிக்கும். அதன் அரசியல் அமைப்பாக மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறோம் என அறிவித்தோம்.

நமது இந்த முடிவை சர்க்கரைப் பொங்கலாய் சமுதாயம் வரவேற்றது. இயக்கவாதிகளோ சர்க்கரைக் கிடங்கில் விழுந்த தேனியின் மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.


நமது அடிப்படை லட்சியங்களில், கொள்கைகளில் சமரசம் கூடாது. அதற்கு தமுமுக இயங்குவதுதான் நல்லது. துணையாக அரசியல் கட்சி மலரட்டும் என்ற அவர்களது எண்ணங்களை தலைமை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைத்தார்கள்.


கண்மணிகளே...


டிசம்பர் 7, 2008 அன்றுதான் ''பணிகளைத் தொடங்குக..'' என்று அறிவிப்பு கொடுத்தோம். ஜனவரி 4, 2009 அன்று திருச்சியில் கூடிய பொதுக்குழுவுக்குப் பின்னர் பணிகள் சூடுபிடித்தன.


இன்றோ, தமிழகத்தில் நமது விளம்பரங்களே இல்லாத இடங்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு கழகத்தின் போர் வீரர்களாகிய நீங்கள் (தொண்டர்கள்) அசத்தி விட்டீர்கள்.


டிஜிட்டல் பேனர்கள் என்ன? சுவர் விளம்பரங்கள் என்ன? வகைவகை யான துண்டுப் பிரசுரங்கள் என்ன? வண்ண சுவரொட்டிகள் என்ன? இப்படி என்ன.. என்ன... என்ன... என்று எண்ணி பெருமூச்சு விடுமளவுக்கு பல வடிவ விளம்பரங்களைப் பார்க்கும் நண்பர்கள் எங்களுக்கு தொலைபேசியிலே தெரிவிக்கும் போது நாங்களெல்லாம் இறைவன் புகழைப் பாடி அவனையே துதிக்கிறோம்.


இப்படிப்பட்ட தொண்டர்கள், தோழர்களை, ஊழியர்களை எங்களுக்குத் தந்த இறைவனைத்தானே நாம் போற்ற முடியும்!


உங்கள் அளவுக்கு இல்லாவிடிலும் தலைமையின் சார்பிலே நாங்களும் விளம்பரங்களை செய்கிறோம், நாளிதழ்கள், வார இதழ்கள், வாரமிருமுறை இதழ்கள், பண்பலை வானொலிகள், தொலைக்காட்சிகள் என பரபரப்பை கூட்டியிருக்கிறோம்.


என்ன இருந்தாலும் உங்களோடு எங்களால் ஓரளவுக்குத்தானே போட்டி போட முடியும்?


கண்மணிகளே...


நேரமில்லை, ஓய்வில்லை, உறக்க மில்லை. ஓடிக்கொண்டே உழைக்கிறோம், உழைத்துக் கொண்டே ஓடுகிறோம். வாகனங்களிலேயே உறங்குகிறோம். சிறிது ஓய்வெடுக்கிறோம்.


எல்லாம் சமுதாயத்திற்காக... சமுதாய நலனிற்காக... இதற்கான கூ­லி நமக்கு இறைவனிடம் இருக்கிறது என்பதை மட்டும் மறவாதீர்கள்.


பேருந்து, வேன், கார் என முன் பதிவுகள் தொடங்கி நாட்களாகி விட்டது. கோவை மாவட்டம் சார்பில் வாகனங்கள் மட்டுமின்றி ''மனிதநேய எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரில் வாடகை ரயிலையே பிடித்து விட்டார்கள்.


இனி பதிவு செய்வதற்கு பேருந்துகளே இல்லையாம். கவலையுடன் புகார் கூறுகிறார்கள் தொண்டர்கள்.


கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது.


வாகனங்களின் எண்ணிக்கையும் மக்களின் வருகைப் பதிவும் நாமே எதிர் பார்க்காத வகையில் பிரமிப்பூட்டுகிறது. ஜனவரி 3 அன்று செயற்குழுவில் மாவட்ட நிர்வாகிகள் அளித்த பட்டியலை ஒப்பிடும் போது அது பலமடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் உங்களின் அயராத உழைப்புதான் என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை.


கண்மணிகளே...


மக்கள் ஒன்றை புரிந்த கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் குரல் கொடுக்க நேர்மையான, துணிச்சலான பிரதிநிதிகள் தேவை. இப்போது அந்த வெற்றிடத்தை வெற்றி இடங்களாக மாற்றும் ஆற்றல் தமுமுகவிற்கே உண்டு என உறுதியாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தான் மக்கள் வெள்ளமாக திரளப் போகிறது. சென்னையின் நுழைவாயிலாம் தாம்பரம் திணறப் போகிறது.


கண்மணிகளே...


வாகனங்கள் எல்லாம் முன்பதிவு செய்யப்பட்டுள்ள தால் வாகனங்கள் கிடைக்க வில்லையே என்ற உற்சாகம் கலந்த புலம்பலும் நமது காதில் விழுகிறது. எது எப்படியோ... புறப்பட தயாரானவர்கள் யாரும் வராமல் தவறிவிடக் கூடாது. நெல்மணிகளை அள்ளுவது போல் அவர்களை யெல்லாம் அணைத்து, இணைத்து திரட்டிவருவது உங்கள் பொறுப்பாகும்.


கண்மணிகளே...


இக்கடிதத்தைப் படிக்கும் போது நமது ஆயத்தப் பணிகள் உச்சக்கட்டத்தில் இருக்கும் என கருதுகிறேன்.


வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தாங்கள் கலந்துகொள்ள முடிய வில்லையே... என அங்கலாய்க்கிறார்கள். அவர்களுக்காகவே நமது கழக இணையதளத்தில் மாநாட்டு நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளோம். அது அவர்களது ஆவலை ஏக்கத்தை ஓரளவாவது போக்கும் என்று நம்புவோமாக.


நமது பணியில் அணியில் எப்போதும் பேராதரவாக இருக்கும் ஜமாஅத்தார் களை மறவாமல் அழைத்து வாருங்கள். பெண்களை பாதுகாப்போடு கூட்டி வாருங்கள். மாணவர்களையும் இளைஞர் களையும் அழைத்து வாருங்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அது இயல்பாகவே திரளக்கூடியது.


வாருங்கள், வாருங்கள். சமுதாய எழுச்சியால் பேரின்பத்தோடு பங்கெடுக்க ஓடி வாருங்கள் என்று வீடு வீடாகச் சென்று கடைசி நேர பணிகளை கச்சித மாக நிறைவேற்றுங்கள். வரும்போது வாகனங்களின் வேகத்தில் போட்டா போட்டி வேண்டாம் என்றும் இங்கே அக்கறையுடன் குறிப்பிட விரும்புகிறோம்.


கண்மணிகளே...


தஹஜ்ஜத் தொழுதுவிட்டு அல்லது சுப்ஹு தொழுதுவிட்டு மாநாட்டின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்யும் கண்மணிகள் ஏராளம். அல்லாஹ்வின் உதவியும், திருப்தியும்தான் நமக்கு வலுவான உதவியாக இருக்க இயலும். மாநாடு வெற்றி பெறுவதற்கு, நமது ஒற்றுமை மேலும் வ­மைப் பெறுவ தற்கும், நமது இலட்சியத்தை அடை வதற்கும் தஹஜ்ஜத், சுபுஹு உட்பட ஒவ்வொரு தொழுகையிலும் அல்லாஹ் விடம் கையேந்துவோம்.


கண்மணிகளே...


மடலை நிறைவு செய்கிறேன். ஒன்றை மட்டும் கூறிவிட்டு கடைசியாக ஒரே வரி, ஒற்றை வரி. அதுதான் நமது அழைப்பின் முகவரி என்ற அளவில் ஒன்றை பிரகடனப்படுத்துங்கள்.


அஃது ''தாய்க்கழகம் அழைக்கிறது... சமுதாயமே திரண்டு வா...'' என்பதாகும்.

அன்புடன்

எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

Tuesday, February 3, 2009

மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு!

மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாடு!
எங்கும் வரலாறு காணாத எழுச்சி!!

நமது செய்தியாளர்

தமுமுகவின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு வரலாறு காணாத எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முஸ்லிம்கள் இந்த அளவுக்கெல்லாம் பிரமிப்பூட்டும் விளம்பரங்களை செய்வார்களா? என தமிழ்நாடே ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது என அரசியல் விமர்சகர் ஒருவர் நம்மிடம் கூறினார்.


அந்த அளவுக்கு யானை பலத்தோடு களத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள் தமுமுக தொண்டர்கள். அவர்களின் உழைப்பைப் பார்த்து ஜமாஅத்துகள் எல்லாம் எங்களின் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள். இந்த எழுச்சி சமுதாயத்தை ஒன்றுபடுத்துவதாக சமுதாயப் பிரமுகர்கள் நம்மிடம் கருத்து தெரிவிக் கின்றனர்.


சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளி­ருந்து வந்திறங்கும் சகோதரர்கள் திக்குமுக்காடிப் போகின்றனர். ''விளம்பரங்கள் தூள் கிளப்பு கின்றன'' என்று வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.


வெளிநாடுகளில் வாழும் கொள்கை சகோதரர்கள் தங்கள் ஊர்களில்
விளம்பரங்கள் மற்றும் ஏற்பாடுகள் எப்படி இருக்கின்றன என கேட்டு, தாயகத்தில் பணியாற்றுபவர்களை மேலும் உற்சாகப் படுத்துவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.


அதுவும் முன் எப்போதையும் விட ஒதுங்கியிருந்த ஜமாஅத்துகள் எல்லாம் என்னென்ன உதவிகள் தேவை என தன்னார்வத்தோடு பணிகளில் பங்கெடுப் பது ஒரு சமுதாய திருப்பமாகும். கடந்த 23 மற்றும் 30ஆம் தேதிகளின் போது ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு மாநாடு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டது நல்ல தொடக்கமாக இருப்பதாக நண்பர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


இந்நிலையில் எஸ்.எம்.எஸ். மூலம் தினந்தோறும் பரவும் செய்திகள் நவீன பிரச்சாரமாகத் திகழ்கிறது.


பரபரப்பான சூழ்நிலையில் தமுமுகவின் தலைமை நிர்வாகக்குழு பிப்.1 அன்று சென்னை பிரசிடென்ட் ஹோட்டலில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியது.


அதில் மனிதநேய மக்கள் கட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் அதன் முக்கிய நிர்வாகிகளையும் அறிவித்தார். பொதுச் செயலாளர்
பி. அப்துஸ் ஸமது அவர்களும், பொருளாளராக எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் அவர்களும் பணியாற்று வார்கள் என அவர் மிகுந்த உற்சாகத்திற்கிடையே அறிவித்தார்.


எந்தக் கூட்டணியில் இடம் பெறுவீர்கள்? என்று செய்தி யாளர்கள் கேட்டபோது அதை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், மாநாட்டிற்குப் பிறகு அறிவிப்பார்கள் என்றார்.


கட்சியின் விதிமுறைகளை ஏற்கும் எந்த சமுதாயத்தைச் சேர்ந்த வர்களும் இதில் இணைந்து பணியாற்றலாம் என்று அவர் கூறியது பத்திரிகை நண்பர்களால் வெகுவாக வரவேற்கப் பட்டது.


பிப்ரவரி 1 அன்று மாலை மாநாட்டுத் திடலை பார்வையிடுவதற்காக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களும், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களும் தாம்பரம் சென்றனர். அவர்களுக்கு காஞ்சி மாவட்ட தமுமுக சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. மாநாட்டுத் திடல் பணிகள் துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி மேற்பார்வையில் துரித கதியில் நடைபெற்று வருகிறது.


போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறும் நிலையில் மாநாடு எல்லா வகையிலும் வெற்றிபெற வேண்டுமென் பதற்காக அனைவரும் தொழுது பிரார்த்திக்கும்படி தலைமைக் கழகத்தின் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டிருக்கிறது.


மாநாட்டு நிகழ்ச்சிகள்
www.tmmk.in, www.tmmk-ksa.com மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால் உலகெங்கிலும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. உளத்தூய்மையோடு ஆற்றும் பணிகளை இறைவன் அங்கீ கரிப்பான் என்பதில் ஐயமில்லை. தாம்பரம் நோக்கி எல்லோரும் புறப்படுகிறார்கள். அரசியல் களம் உண்மையிலேயே சூடுபிடித்து விட்டது.

Source: www.tmmk.in

தமுமுக பேராதரவுடன் துவங்குகிறது மனிதநேய மக்கள் கட்சி!

பிப்ரவரி 7ல் துவங்குகிறது தமுமுக பேராதரவுடன்

மனிதநேய மக்கள் கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர்

எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் இன்று சென்னையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

“தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவுச் செய்யப்பட்ட அரசியல் கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்கவிழா மாநாடு வரும் பிப்ரவரி 7 அன்று சென்னை அருகே தாம்பரத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து சமூக சேவை அமைப்பாக செயல்படும்.

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது பொருளாளர் மற்றும் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது (வலமிருந்து இடம்)

புதிதாக தொடங்கப்படவுள்ள மனிதநேய மக்கள் கட்சி சிறுபான்மையினர் மட்டும் அல்லது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாக பாடுபடும் அமைப்பாக செயல்படும். இந்த அமைப்பில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும் நிர்வாகிகளாகவும் செயல்படலாம், அரசியல்தளத்தில் புறக்கணிக்கப்படும் ஒழுக்க நெறிகளை கட்டிக்காக்கும் வகையில் மனிதநேய மக்கள் கட்சி செயல்படும். அரசியல் வாழ்வில் தூய்மையான நெறிமுறைகளை பின்பற்றி மக்களுக்கு தூய்மையான சேவையை ஆற்ற இயலும் என்பதை எடுத்துக் காட்டும் வகையிலும் மனிதநேய மக்கள் கட்சி இயங்கும்.

தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெறும் மாநாட்டின் ஒரு பகுதியாக காலையில் சமுக நீதி கருத்தரங்கம் நடைபெறுகின்றது. இந்த கருத்தரங்கில் பேராசிரியர் மார்க்ஸ், விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகிர், அருட்திரு ஆனந்த், கஜேந்திரன் மற்றூம் தேவநேயன் ஆகியோர் பங்கு கொள்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு துவங்கும் மாநாட்டில் மாநாட்டு திடலில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை தமுமுகவின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாளருமான சையத் நிஸார் அஹ்மது அவர்கள் கொடியேற்றுவார். அதனைத் தொடர்ந்து நடைபெறும் முதல் அரங்கில் தமுமுகவின் துணைச் செயலாளர்கள் மற்றும் அணி செயலாளர்கள் மாநாட்டின் தீர்மானங்கள் முன்மொழிந்து உரை நிகழ்த்துகின்றனர். பின்னர் நடைபெறும் வாழ்த்தரங்கில் மவ்லவி டி.ஜே.எம். சலாஹுத்தீன், பேராயர் எஸ்றா சற்குணம், எஸ்.என். நடராஜன், திரு. வீரபாண்டியன், முனைவர் தவத்திரு சங்கர் சுவாமி காணி, மவ்லவி முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் புதிய அரசியல் கட்சியை வாழ்த்தி உரையாற்றுகிறார்கள். பிறகு நடைபெறும் அரங்கில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, செயலாளர்கள் அன்சாரி, உமர், ஜுனைத், முஹம்மது கவுஸ், நாசர் ஆகியோர் உரையாற்றுகிறார்கள். மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மாநாடு நடைபெறுகின்றது. மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது முதல் அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.

மாநாட்டின் மேடை டெல்லி செங்கோட்டை வடிவத்தில் தயாராகி வருகின்றது. தமிழகம் மற்றம் புதுச்சேரியில் இருந்து லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் இந்த மாநாட்டில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.’’
பேட்டியின் போது தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி. அப்துஸ் ஸமது, எம். தமிமுன் அன்சாரி, மௌலா நாசர், துணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத், டி.ஏ. இஸ்மாயில் ஆகியோர் உடனிருந்தனர்.

படங்கள் உடந்தை சஃபி

நன்றி: www.tmmk.in

உலக அமைப்பில் கவுரவ அந்தஸ்து: முஸ்லிம் மாணவரின் சாதனை

உலக அமைப்பில் கவுரவ அந்தஸ்து: முஸ்லிம் மாணவரின் சாதனை

சீனாவில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விமானம் மற்றும் ராக்கெட் இன்ஜின்களில் பயன்படும் திரவ இயக்கவியல் பற்றி ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து உலக அமைப்பில் கவுரவ உறுப்பினர் பதவியை பெற்றுள்ளார்.


கிரீஸ் நாட்டில் செயல்படும் உலக பொறியியல் விஞ்ஞான அமைப்பின் சார்பில் சீனா சாங்காய் நகரில் கடந்த 10ம் தேதி முதல் 12 வரை உலக அளவிலான விமானம் மற்றும் ராக்கெட் வடிவமைப்பு பற்றிய கருத்தரங்கு நடந்தது. அமெரிக்கா உட்பட 105 நாடுகளை சேர்ந்த 135 இன்ஜினியரிங் துறை வல்லுனர்கள், 35 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து பங்கேற்ற மூன்று பேரில் ராமநாதபுரம் செய்யதம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவரான செய்யது சுல்த்தான் அலாவுதீன் இடம்பெற்றிருந்தார். இவர் "விமான, ராக்கெட் இன்ஜின் இயக்கத்தில் செயல்திறன் மேம்பாடு பற்றிய கம்ப்யூட்டர் மூலம் திரவ இயக்கவியல் ஆய்வு' என்பது குறித்த கட்டுரையை சமர்ப்பித்தார். இந்த கட்டுரையை சிறந்த படைப்பாக தேர்வு செய்த உலக பொறியியல் விஞ்ஞான அமைப்பு, செய்யது சுல்த்தான் அலாவுதீனுக்கு கவுரவ உறுப்பினர் அந்தஸ்து வழங்கியது.

இவர் கூறுகையில், "சர்வதேச கருத்தரங்கில் எனது கட்டுரை சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து ஜப்பான் ஹொக்கைடோ பல்கலை., மற்றும் சீனா வான்லி பல்கலை., முழு கல்வி உதவித் தொகையுடன் கூடிய மேற்படிப்பு வழங்க முன்வந்துள்ளது.


பிரிட்டன் யுனிவர்சிட்டி பிரஸ் என்ற நிறுவனம் ஆய்வு படைப்பை சர்வதேச இதழில் வெளியிட முடிவு செய்துள்ளது' என்றார். சாதனை படைத்த மாணவரை கல்லூரி செயலாளர் சின்னத்துரை அப்துல்லா, கல்லூரி முதல்வர் முகமது செரீப், பேராசிரியர்கள் செல்வக்குமார், ராஜசேகர் பாராட்டினர்.

சாதனை படைத்த மாணவருக்கு எமது பாராட்டுக்கள்!

நன்றி: தினமலர் - 28 ஜனவரி 2009


சிங்கப்பூரில் சாதனை படைத்த ராமநாதபுரம் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

ராமநாதபுரம், டிச. 18: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான கருத்தரங்கில் படைப்புகள் சமர்ப்பித்து தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் கூட்டமைப்பு ஆகியன இணைந்து உலக அளவிலான 13-வது பயோ மெடிக்கல் தொழில்நுட்ப கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் நடத்தின.

இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி முடிய நடைபெற்ற கருத்தரங்கில் உலகம் முழுவதிலும் இருந்து 64 நாடுகளைச் சேர்ந்தோர் சுமார் 900-க்கும் மேற்பட்ட படைப்புகளை சமர்ப்பித்தனர். இவற்றில் 300 மட்டும் இறுதிப் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டன.

இறுதிப் போட்டிக்காக தேர்வான கட்டுரைகளை ஆய்வு செய்த நடுவர் குழுவினர் சிறந்த படைப்பாக ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.

செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு பயிலும் எலெக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் ஏ.அகமது மொய்தீன், எம்.பாலநாகராஜன் ஆகிய இருவரது கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டது.

இவர்களுக்காக கல்லூரியில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு முதல்வர் முகம்மது ஷெரீப் தலைமையும் துணை முதல்வர் எம்.பெரியசாமி முன்னிலையும் வகித்தனர். செயலர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

அவர் பேசியது:

மாணவர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு இரு மாணவர்களுக்கும் போட்டியில் பங்கேற்க தேவையான நிதியை கல்லூரியே ஏற்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற சாதனைகளை நிகழ்த்துவோருக்கு நிதி உதவி உள்பட அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.

வரும் ஜனவரி மாதம் எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த 4 ஆம் ஆண்டு மாணவர் செய்யது சுல்தான் அலாவுதீன் உலக அளவில் நடைபெற உள்ள ராக்கெட் வடிவமைப்பு பற்றிய தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்க சீனா செல்வதாகவும் தெரிவித்தார்.

துறைத் தலைவர்கள் ஜி.மகேந்திரன், எஸ்.ராஜசேகர் உள்பட கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி: சித்தார்கோட்டை.காம்.