.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label MMK. Show all posts
Showing posts with label MMK. Show all posts

Wednesday, June 8, 2011

சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்.

சமுதாயச் சொந்தங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


தமுமுக மற்றும் மமகவின் மீது சேற்றை வாரி இறைப்பதையே தனது முழு நேரப்பணியாக செய்துவரும் பிஜே அவர்கள் சமீத்தில் "வடமரைக்காயர் அலுவலகம் யாருக்குச் சொந்தம்? நடந்தது என்ன? சட்டமன்ற போராட்டம் ஏன்?" என்றும் அதற்கு பல காரணங்களையும் கூறி முஸ்லிம்களை முஸ்லிம்களோடு மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் கீழ்த்தரமான யூத பாசிச வேலையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். வழக்கம் போல் இவரின் பிதற்றல்களுக்கு அமைதியாக இருப்பது போல் இருந்து விட்டோம். ஆனால் தனது ரசிகர் பட்டாளத்தின் மூலம் ஒரு அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உண்மை போல் சித்தரிக்க முயலுவதால் இந்த பதிவு இடவேண்டிய கட்டயத்திற்கு நம்மை தள்ளிவிட்டார்.

கடந்த 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரியாத் மத்திய மண்டல தமுமுக அலுவலகத்தில் சவூதி அரேபியா அணைத்து மண்டல நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது அதில் தமுமுக நிர்வாகத்திற்கு நிரந்தர வருமானம் மற்றும் சொந்த அலுவலகம் பற்றி ஆலோசனைகள் செய்து ஒட்டு மொத்த வளைகுடா மண்டலங்களும் சேர்ந்து அதற்கான நிதிகளை வளைகுடாவில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த நமது சமுதாய மக்களிடம் வசூலித்து மேற்றகண்ட திட்டங்களை நிறைவேற்றுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தமுமுகவின் நிரந்தர வருமானத்திற்காக வசூலித்து வாங்கிய சொத்துக்களில் 7 வடமரைக்காயர் அலுவலகமும் அடங்கும்.

அன்றைய காலகட்டத்தில் தமுமுகவிற்கு அரசு தரப்பிலிருந்து பல்வேறு நெருக்கடிகள் இருந்து வந்தன. திமுகவின் ஆட்சி காலம் அது, முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட காலகட்டம். வீரியமாக பல போராட்டக்களங்களை தமுமுக முன்னெடுத்துச் சென்ற நேரம் அது. அதன் எதிரொலியாக தமுமுக தடைசெய்யப்பட்டுவிடுமோ எனும் அளவிற்கு அரசின் நெருக்கடிகள் இருந்தநேரம் அது.

தமுமுகவிற்கு வாங்கும் சொத்துக்களை தமுமுகவின் பெயரில் பதிவு செய்யாமல் ஒரு அறக்கட்டளை உறுவாக்கி அந்த அறக்கட்டளைக்கு அப்போது தமுமுக வின் மாநில அமைப்பாளராக பொருப்புவகித்த தொண்டியைச் சேர்ந்த பீர்முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படிடையில் அவரை சேர்மனாக நியமித்து சொத்துக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது.

2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி தமுமுகவை விட்டு வெளியேறி விட்டார். அவர் வெளியேறும் போது தமுமுகவின் சொத்துக்களில் சிலவற்றையும் தமுமுகவின் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக உறுவாக்கப்பட்ட உணர்வு வார இதழையும் கலவாடிச் சென்றுவிட்டார்.

ஆண்டுகள் பல ஆனபிறகும் திருந்துவார் என்பதற்காக சில ஆதாரங்களை கண்ணியம் கருதி வெளியிடாமல் இருந்தோம். இப்போது வேதாளம் மீண்டும் முருங்கமரத்தில் ஏறிவுள்ளது.

பீர் முஹம்மது மகன் ஜெய்னுல் ஆபிதீன் தன் நிலையை மாற்றிக் கொள்ளாவிட்டால்...
  • *வளைகுடா நிர்வாகிகளால் வசூலித்த பொருளாதாரத்திலிருந்து தான் அந்தச் சொத்துக்கள் வாங்கப்பட்டன.
  • *தமுமுகவின் பெயரைச் சொல்லி தமுமுகவிற்காக மட்டுமே வசூலித்த ஆதாரங்களை வெளியிடுவோம். அவரது உரைகள் உட்பட.
( இவர் மார்க்க பிரச்சாரம் செய்யும் பேச்சாளர் என்ற காரணத்தால் இவரது அயோக்கியத்தனம் மேலும் வெளியில் தெரிந்தால் மார்க்கத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்ற உயர்ந்த நோக்கில் இது வரை மக்கள் மத்தியில் வெளியிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இப்பவும் நாம் பொறுமை காக்கிறோம்.

SM பாக்கரின் INTJ என்ற பெயரை நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு செய்தது போல் இந்த உலகத்தில் வேண்டுமானால் தனது கிரிமினல் புத்தியாலும் நாவன்மையாலும் வேஷம் போட்டு தப்பி விடலாம் நாளை மறுமையில் ஏகஇறைவனின் நீதிமன்னறத்தில் இறைவனின் பிடி கடுமையாக இருக்கும் என்பதை எச்சரிக்கிறோம்...

Thursday, February 4, 2010

உருது ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமுமுக மறியல்

வேலூர், பிப். 2: வேலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 5 பெண்கள் உள்பட 450 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளிக்கு 12 ஆண்டுகளாக 10 உருது ஆசிரியர்கள் நிரப்பப்படாமல் இருப்பதையொட்டி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்டு தமுமுக மாநிலத் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேசியது:

வேலூரில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி 100 ஆண்டுகளைக் கடந்து விட்டது. உருது வழியில் போதனை செய்ய இந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அரசுப் பள்ளியுடன் சேர்த்து தமிழகத்தில் 3 உருது பள்ளிகள் மட்டுமே தற்போது உள்ளன.

தஞ்சாவூர், மதுரையில் இயங்கி வந்த உருது பள்ளிகள் மூடப்பட்டுள்ளனன.

காலிப் பணியிடங்களை நிரப்பாமல் 12 ஆண்டுகளாக பள்ளி நடைபெற்று வருவது வருத்தமளிக்கிறது. உருதுப் பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரிடம் பலமுறை கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்.

இந்தப் பள்ளியில் 1,400 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 800 பேர் உருது பயில்கின்றனர். இவர்களுக்கு 7 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்வழி, ஆங்கில வழி பயிலும் 600 மாணவ, மாணவிகளுக்கு 32 ஆசிரியர்கள் உள்ளனர். ஆகவே காலியாக உள்ள 10 உருது ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.

மறியல் போராட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி ரிஷாதி, மாநில துணைச் செயலாளர் தருமபுரி ஒய்.சாதிக்பாஷா, மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.நாஸிர் உமரி, வேலூர் மாநகரத் தலைவர் கே.எம்.சதகத்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் பங்கேற்ற 5 பெண்கள் உள்ளிட்ட 450 பேரையும் போலீஸப்ர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

Friday, May 15, 2009

மத்திய சென்னை வன்முறை: காட்டிக் கொடுத்த சமுதாய துரோகிகள்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டுப் போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் 6 பேர் மீது திமுக குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.


சரியாக குறிபார்த்து தாக்குதல் நடந்ததின் பிண்ணனியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற ஐஸ் ஹவுஸ் பகுதியின் பூத் ஏஜன்டாக த.த.ஜ வின் மாநில நிர்வாகி ஒருவர் இருந்துள்ளார். கள்ள ஓட்டுக்கள் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.ஹைதர் அலி ம.ம.க தொண்டர்களுடன் நிகழ்விடத்திற்கு வந்துள்ளார்.

எங்கு அடித்தால் கள்ள ஓட்டை சரியாக போட்டு முடிக்க முடியும் என்று சரியாக திட்டமிட்டு, வந்த வாகனத்தையும் வாகனத்தில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களையும் அடையாளம் காட்டி தாக்குதல் நடத்த காட்டிக் கொடுத்துள்ளார் த.த.ஜ வின் மாநில நிர்வாகியான அந்த பூத் ஏ‍ஜென்ட்.

இயக்க வெறியின் காரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரனை காட்டிக் கொடுத்து மாற்று மதத்தவர்கள் கையினால் கொலைவெறி தாக்குதல் நடத்தி ரத்தம் சிந்த உடந்தையாக இருந்த த.த.ஜவினர் நாளைக்கு குஜராத்தை போல் ஒரு சம்பவம் தமிழ்நாட்டிலும் நடக்க இயக்க வெறியின் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளையே இஸ்லாமிய விரோதிகளு்ககு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனதருமை முஸ்லிம் சமுதாயமே! தனி மனித கருத்து வேருபாடின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை மாற்று மதத்தவர்களிடம் காட்டிக் கொடுத்து கருவறுக்கத் துடிக்கும் த.த.ஜவினரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கி‍றேன் என்று சொல்வார்கள். ஒன்றாக பழகி, ஒன்றாக இருந்த நண்பர்களுத்தான் தெரியும் அவரின் பலமும் பலகீனமும் அதே நண்பர் எதிரணியில் இருந்தால் இவரின் ரகசிய செயல் திட்டங்கள் அனைத்தும் எதிரிக்கு இலகுவாக கிடைத்து விடும். வெல்வது எதிரி! கொல்வது ? நண்பனையா? இங்கே முஸ்லிம் சமுதாயம் சமுதாய துரோகிகளால் காட்டிக் கொடுத்து ரத்தம் சிந்தப்படுகிறது.

இவர்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

Sunday, May 10, 2009

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்கீரன் இதழுக்கு அளித்த நேர்காணல்.

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்கீரன் இதழுக்கு அளித்த நேர்காணல்.

ன்றைய தமிழக அரசியலில் வெகுஜன மக்களின் உணர்வு களை பிரதிபலிப்பதாக இல்லை. அதனால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கவே “மனிதநேய மக்கள் கட்சி’ தோற்று விக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக 1995-ல் துவக்கப்பட்ட த.மு.மு.க.வின் அர சியல் பிரிவாக “மனிதநேய மக்கள் கட்சி’யை உ
ருவாக்கியிருக்கிறோம்.

த.மு.மு.க.வின் முழு முகவரி முஸ்லிம் சமூகத்திற்கானது என் றாலும் ம.ம.க.வை அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. ம.ம.க.வை முஸ் லிம்களுக்காக மட்டுமல்ல… சிறுபான்மை யினர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், பிற் படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அனைத்து சமூக மக்களுக்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் கட்சியாக வார்த்தெடுக்கவிருக்கிறோம். அதனால்தான் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொறுப்புகளிலும் அனைத்து சமூக மக்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில், முஸ்லிம்களின் பின்னணியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைத்து மக்களுக்கான அரசியல்தளமாக ம.ம.க.வை விரிவுபடுத்துவதே முதல் நோக்கம்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்ததாகவே இருந்தது. பின்னாளில் தேசிய லீக் கட்சியையும் சார்ந்ததாக மாறிப்போனது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்கிற முயற்சி எடுத்தவர் காயிதே மில்லத். இதற்காக 1967 சட்டமன்றத் தேர்தலின்போது பிராமண எதிர்ப்பாளராக இருந்த பேரறிஞர் அண்ணாவையும் பிராமணரான ராஜாஜியையும் ஓர் அணியில் கொண்டுவர மிகப்பெரிய கிரியா வூக்கியாக இருந்தவர் காயிதேமில்லத். இந்த அணி வெற்றிபெற தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

இந்த வலிமைக்கேற்ப தி.மு.க. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதன்பிறகு, முஸ்லிம் சமூகத்தின் மீது திராவிட கட்சிகள் சவாரி செய்வதில்தான் அக்கறை காட்டியதே தவிர முஸ்லிம் மக்களுக்கா அரசியல் அதிகாரத்தை தருவதற்கு விரும்பவில்லை. அதே மாதிரி திராவிட கட்சிகளின் இந்த கொள்கைக்கு ஆட்பட்டதுபோல முஸ்லிம் சமூக தலைவர் களும்கூட ஒரு சார்பு அரசியலையே தூக்கிப்பிடித்தனர். இதில் சுகம் கண்டன திராவிட கட்சிகள். இந்த சுகத்தினை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் கட்சி களை பலகீனப்படுத்துவதில் முனைப்பு காட்டின. காயிதேமில்லத் மறைவிற்குப் பிறகு திராவிட கட்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆம்… தனி சின்னத்தில் நின்று தனது அடையாளத்தை இழந்துவிடாமல் பாது காத்து வந்த முஸ்லிம் லீக், திராவிட கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றிபெற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வந்தது. அதேசமயம், 10-க்கும் குறையாத சீட்டுகளை பெற்றுவந்த முஸ்லிம் கட்சிகள், 1 சீட் பெறுவதே தங்களுக்கான லட்சியம் என்பதுபோல தேய்ந்துவிட்டன. இதனால், அரசியலில் தங்களின் சுய முகவரியை இழக்க நேரிட்டது. அந்த சுய முகவரியை இன்றளவும் திராவிட கட்சிகளிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் மீட்க முடியவில்லை. இதனால், வலிமையான சட்டங்களை இயற்ற வைக்கும் ஆற்றலையும் இழந்து நின்றது முஸ்லிம் சமூகம். உதாரணமாக… கடந்த காலங்களில் லீக்கிற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை எப்போதோ பெற்றிருக்க முடியும். 1976-லேயே இந்த தனி இடஒதுக்கீட்டை கேரளாவில் பெற்றது லீக். காரணம் அங்கு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டதுதான். தனிச்சின்னத்தில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் லீக் அங்கு இருப்பதால்தான் இதனை சாதிக்க முடிந்தது.


ஆனால், தமிழகத்தில்…? திராவிட கட்சிகளைச் சார்ந் தே நிற்கவேண்டிய சூழலை ஏற்றுக்கொண்டதால் வலிமையை இழந்தனர். கோரிக் கைகளையும் வலிமை யாக வலியுறுத்த முடியவில்லை. இந்தச் சூழலில்தான் 1995-ல் த.மு. மு.க.வை உருவாக்கினோம். மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தினோம். எங்களின் ஆரோக் கியமான கொள்கை வழித்தடங்களை ஏற்று முழுமையாக எங்கள் பக்கம் திரண்டனர் மக்கள். இடஒதுக்கீடு கோரிக்கைக்காக மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொடர் மாநாடுகள், போராட்டங்கள், சாலை மறியல்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் என த.மு.மு.க.வின் சமூகப்பணி வலிமை அடைந்தது.

இந்த வலிமையைக் கண்டு பிரதான தமிழக அரசியல் கட்சிகள் உற்று நோக்கின. தி.மு.க. அரசுக்கு ஆதரவு தரவேண்டுமானால் கோரிக்கை பற்றிய கெடு விதித்தோம். த.மு.மு.க.வின் சக்தியை உணர்ந்து முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தர முன்வந்து அறிவித்தார் கலைஞர்.

த.மு.மு.க. துவக்கப்பட்ட இந்த 14 வருடத்தில், முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடியதுபோல, சமூக மக்களின் அனைத்துப் பிரச்சனை களுக்காகவும் போராடியிருக்கிறோம். இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் நாங்கள் பெற முடிந் திருக்கிறது.

இந்த வலிமையைக் கொண்டுதான் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, அனைத் துத் தரப்பு மக்களின் அரசியல் அதி காரங்களையும் வென்றெடுப்பதற்காக தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளோம். அரசியல்தளத்தில் நாங்கள் எதை சாதித்தோம் என கேட்டால் இரண்டு மாதமே ஆன கட்சியால் (ம.ம.க.) எந்த பதிலும் கூற முடியாது. ஆனால், எங்கள் கட்சியின் இன்றைய உறுப்பினர்கள் 1995 முதல் மக்கள் சேவையாற்றி வருபவர்கள் என்பதை மறந்துவிட க்கூடாது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி 40 இடங்களில் வெற்றிபெற த.மு.மு.க.வின் பங்களிப்பு மிகப்பெரியது. அதேபோல 2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் சம அளவில் மோதின. ஏராளமான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றிபெற முடிந்ததற்கு எங்கள் கட்சியின் இன் றைய உறுப்பினர்கள் போர்க்கால உழைப்பு தான் காரணம் என்பதை ஊர் அறியும். அது கோபால புரத்துக்கும் புரியும்.

சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு எட்டாக்கனியாய் இருந்த போது, அடுக்கடுக்கான போராட்ட வடிவங்கள் மூலம் அதை தமிழகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

சுனாமிப் பேரலை தமிழகத்தைத் தாக்கியபோது, எமது கட்சியின் இன்றைய உறுப்பினர்கள்தான் மனித நேயத்தோடு சேவையாற்றினார்கள். அதிகாரிகள் யோசித்தபோதும் அழுகிய உடல்களைத் தூக்க ராணுவம் யோசித்தபோதும் எமது உறுப்பினர்கள்தான் பிணங்களை, சாதி மத பேதமின்றி மார்பில் அணைத்து தூக்கி அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் எமது உறுப்பினர்கள்தான் அதிகமான அளவில் ரத்ததான சேவைகளை அன்றாடம் வழங்குகிறார்கள். அனைத்துத்தரப்பு மக்களுக்காக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழகம் முழுவதும் நடத்திவருவது நாங்கள் மட்டுமே! இப்படி மக்கள் நலன் சார்ந்த பணிகளை நிறைய பட்டியலிட முடியும்.

மக்கள்நல சேவையில் ம.ம.க.வினரின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் ம.ம.க.வின் வலிமை என்பது முஸ்லிம் சமூகத்தின் “வோட் பேங்க்’கை வைத்துதான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் முஸ்லிம்கள். மத்திய சென்னை, மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம், திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, அரக்கோணம், ஆரணி, தென்காசி ஆகிய 10 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்தான். முஸ்லிம் மக்களின் ஆதரவு 99 சதவீதம் எங்கள் பக்கம் இருப்பதை உணர்ந்துதான் குட்டி குட்டி முஸ்லிம் அமைப்புகளையெல்லாம்கூட தங்களுக்கு ஆதரவு தரச்சொல்லி அறிவாலயம் இழுத்துக்கொண்டு வருகிறது.

முதலில் 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஜெயலலிதாகூட, மத்திய சென்னையில் ம.ம.க. வேட்பாளராக ஹைதர்அலி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் சமூக ஆதரவு நமக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் வேட் பாளரையே மாற்றினார். இவையெல்லாமே ம.ம.க.வுக்கு ஆதரவான மனநிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார் கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

ம.ம.க.வின் அரசியல் பணிகளில்

தனிநபர் துதி பாடல் களும் கட்அவுட் கலாச்சாரங்களும் மலிந்து கிடக்கும் தமிழக அரசியலில் மாற்று அரசியலை முன்னிறுத்துவது முதன்மையான பணி. தலைவர்களை வளைய வந்தால் பதவிகள் கிடைக்கும், பணத்தை அள்ளி வீசினால் வேட் பாளராகிவிடலாம் என்பது இன்றைய அரசியலின் சாபக்கேடு. எல்லா தொண்டர்களும் தலைவர்கள், தலை வர்கள் எல்லாம் தொண்டர்கள் என்ற சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இன்றைய ஆடம்பர அரசியல் ஏழைகளை, ஏழ்மையில் வாடும் அறிவுஜீவிகளை ஒதுக்கி வைத் திருக்கிறது. அரசியல் பாரம்பரியம், மீடியா வெளிச்சம், பணபலம், ஜால்ரா கொள்கை இவற்றில் ஏதாவது ஒரு தகுதி இருப்பவர்கள்தான் அரசியலில் மேன்மையடைய முடியும் என்ற சூழல் வளர்ந்திருக்கிறது. அதைத் தகர்க்கும் பணியை தொடங்கியிருக்கிறோம். பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக அறிவு, களப்பணி ஆர்வம்கொண்ட சாமானியர்களும் அரசியலில் உயர் பொறுப்புகள் பெறும் வகையில் எங்களது அரசியலை அமைத்திருக் கிறோம்.

கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியே செலவு செய்யும் என்பதை கொள்கையாக அறிவித்து அதனை அமல்படுத்தியிருப்பதும் நாங்கள்தான்.

இத்தகைய சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தான் எம்மை வெகு மக்கள் இயக்கமாக, எளிய மக்களின் தாய்வீடாக மாற்றியிருக்கிறது. ஆக வெகுமக்களின் உணர்வுகளையே பிரதிபலிக்கும் அரசியல் இயக்கமாக மாற்று அரசியலை முன்னிறுத்தி முதல் அடியை இந்தத் தேர்தல் மூலம் எடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கியமான அரசியலை வென்றெடுப்பதில் நிச்சயம் சாதிப்போம். தேர்தலின் முடிவுகள் மூலம் எமது மக்கள் இதனை நிரூபிப் பார்கள்.

நன்றி:

29 April 2009

Wednesday, May 6, 2009

குல்லா வியாபாரியும், குரங்குகளும்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்…(துவங்குகிறேன்)!

குல்லா வியாபாரியும், குரங்குகளும்!
-முஹம்மத் காமில் - 9884728520

அன்பு இஸ்லாமிய பெரியோர்கள், சகோதர, சகோதரிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன், மன்னராட்சிகாலத்தில் ஷஹீத் திப்புசுல்தான் அவர்கள் அன்றைய முஸ்லிம் மன்னர்களின் ஒற்றுமை இன்மையாலும், காட்டிக் கொடுக்கும் துரோகிகளாலும் வீரமரணமடைந்தார். இஸ்லாமியர்களின் ஆட்சி அதிகாரம் படிப்படியாக இந்தியாவில் துடைத் தெறியப்பட்டது. ஆனால், தீரர் திப்பு அவர்கள் நம் நினைவுகளில், உணர்வுகளில் கலந்து இன்றும் நம்மோடு வரலாற்றில் நிலைத்து நிறகிறார். காட்டி கொடுத்த துரோகிகள் தான் இழிவடைந்து அழிந்துவிட்டனர். இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் லஹ்னத்திற்கு (சாபத்திற்கு) ஆளாகினர்.

சுதந்திர போராட்ட காலத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டு, முஸ்லிம் லீக்கின் தலைமையை பின்பற்றி மாபெரும் சாதனைகளை படைத்தனர். வட்ட மேசைமாநாட்டில் காங்கிரசுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஆதரித்ததன் மூலம் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உரிமைகள் கிடைக்க முஸ்லிம் லீக் உதவியது. இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் - காங்கிரஸ் கட்சி தலித், மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காத நிலையில், முஸ்லிம் லீக் சார்பாக ஓர் தலித்தை அமைச்சராக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது. சுதந்திரம் பெற்றபின் டாக்டர் அம்பேத்கர் அவர்களை முஸ்லிம் லீக் சார்பாக அரசியல் சாசன சபைக்கு அனுப்பி சரித்திரம் படைத்தனர். இவ்வாறு முஸ்லிம்களுக்கு மட்டும் உழைக்காமல் தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட அனைவருக்காகவும் போராடிய மாபெரும் இயக்கமான முஸ்லிம்லீக் இன்று, அத்தலைவர்களின் திறமையின்மையாலும், துணிவு இன்மையாலும், தியாகத்திற்கு தயாராக இல்லாததாலும் ஒரு “சீட்டு” இயக்கமாக சுருங்கி அதுவும் இரவல் சின்னத்தில் MP பதவிக்கு போட்டியிட ‘திருவோடு’ ஏந்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சுதந்திர காலத்தில் ‘தாய் சபையாக’ வழிகாட்டியாக திகழ அன்றைய தலைவர்களின் வீரமும், தியாகமும், திறமையும் காரணமாக அமைந்தன. இன்றைய தலைவர்கள் தங்களின் பதவி சுகத்திற்காக போட்டி போட்டு பல ‘லீக்குகளை’ உருவாக்கி முஸ்லிம் லீக்கை ‘பாட்டி சபையாக’ மாற்றிவிட்டனர். காங்கிரஸீம், திமுகவும் முஸ்லிம் லீக்கை சுரண்டியும், உடைத்தும், இன்றைய சுயநல தலைவர்களுக்கு பதவி ‘எலும்புத்துண்டை’ வீசி தங்கள் வீட்டு செல்லப் பிராணிகளாகவே மாற்றிவிட்டனர். உடைந்த முஸ்லிம் லீக்கையே ஒன்று சேர்க்க இயலாமல், திமுகவின் சிறுபான்மை பிரிவாகவே மாறி முஸ்லிம்களின் உரிமைக்காக போராட துணிவின்றி ‘கையேந்தி’ பல்காட்டி நிற்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியில் பாபர் பள்ளி இடிக்கப்பட்டபோது வெட்கமின்றி முஸ்லிம் லீக் காங்கிரசுடன் கேரளாவில் ஆட்சி மஞ்சத்தில் மகிழ்ந்தது. பெரியவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள் இக்கேவலமான நிலையை கண்டு கொதித்து முஸ்லிம்லீக்கிலிருந்து பிரிந்து சென்றார். காங்கிரஸ் கட்சி பாபர் பள்ளி இடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை, இடிப்பதை வேடிக்கை மட்டும் பார்த்தோம் என முஸ்லிம்களை நக்கலடிக்கின்றனர்.

அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் பாபர் மசூதியை மீண்டும் கட்டுவோம் என்று கூறிய உறுதிமொழி பாராளுமன்றத்தில் இன்றும் எதிரொலிக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாபர் பள்ளி இடித்த இடத்தை அரசின் கட்டுப்பாட்டில் வைக்காமல் கோவில்கட்டி சிலை வணக்கம் நடத்த அனுமதித்து, பாதுகாப்பும் வழங்குகிறது காங்கிரஸ் ஆட்சி. இக்கட்சியிலும் முஸ்லிம்கள் பெயரளவில் பதவி சுகத்திற்காக காலம் தள்ளுகின்றனர்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களைவிட காங்கிரஸில் ‘பெரிய’ முஸ்லிம் தலைவர் எவரும் இல்லை. ஆனால் அவருடைய நிலையே கேவலமானதாக இருந்துள்ளது. சுதந்திர காலத்தில் காங்கிரஸ், முஸ்லிம்களுக்கு செய்த துரோகத்தை தனது புத்தகத்தில் எழுதிய ஆசாத் அவர்கள், அந்த உண்மைகளை மூடி முத்திரையிட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு அதை பிரிக்க வேண்டும் என கூறி இறந்துவிட்டார்.

“அதிகாரம் படைத்த ஆட்சியாளரிடம் சத்தியத்தை உரைப்பதே மிகச்சிறந்த ‘ஜிஹாத் என அண்ணல் நபி (ஸல்). ஆவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் மௌலானாக்கள் பதவி சுகத்திற்காக சத்தியத்தை சாப்பிட்டுவிட்டு, மறைத்துவிட்டு இறந்து விடுவது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம். சத்தியத்தை கூறுவதற்கே 50 ஆண்டுகள் தேவையென்றால் போராடுவது எப்போது, உரிமை பெறுவது எப்போது?. எனவே, முஸ்லிம் அல்லாதவர்களின் தலைமையில், கட்சிகளில் இணைந்து, முஸ்லிம்களின் உரிமையை பெற்றுத்தருவேன் என்பது மாபெரும் ஏமாற்று வேலை.

1967 தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று உறுதி கூறிய திமுக, வெற்றி பெற்றபின் முஸ்லிம் லீக்கிற்கு அமைச்சரவையில் இடம் தராமல் ‘வாக்கு’ மாறி துரோகம் செய்தது. அன்று துவங்கி இன்று வரை முஸ்லிம்லீக்கை தன் நலனுக்காக அவ்வப்போது உடைத்து கூறுபோட்டது.

கடந்த காலங்களில் திமுக வெற்றிக்கு முஸ்லிம்களின் ஓட்டுகளே (வாக்குகளே) முக்கிய காரணம் என்பதை திமுகவே மறுக்கமுடியாது. இந்நிலையிலும் 12 சதவீதத்திற்கு மேலுள்ள முஸ்லிம்களுக்கு திமுக சார்பாக ஒரு முஸ்லிமுக்கும் MP தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. முஸ்லிம்லீக் சார்பாக ஒரு முஸ்லிமுக்கு மட்டும் வேலூரில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் முஸ்லிம்லீக் கூட்டணி ஒப்பந்தம் செய்யவில்லை, மாறாக அடிமை சாசணம் செய்துள்ளனர். முஸ்லிம்லீக் தலைவரே வேட்பாளராக நிற்க முடியாத அவலம், அது மட்டுமின்றி திமுக சின்னத்தில்தான் நிற்க வேண்டுமாம்! நாளை BJP க்கு பாராளுமன்றத்தில் ஓட்டுபோட வேண்டும் என்று திமுக உத்தரவிட்டால் முஸ்லிம்லீக் ஓட்டுபோட வேண்டும் மீறினால் பதவி பறிபோய்விடும் இதற்கு பெயர் ஒப்பந்தமா? அடிமை சாசனமா?

இப்படிதான் முஸ்லிம்களின் மானம். ‘தாய்சபை’ என்ற பெயரில் மாற்றாரின் காலடியில் பதவி ‘வரத்திற்காக’ தவம் கிடக்கிறது. இதற்குதான் முஸ்லிம்லீக் உருவாக்கப்பட்டதா? முஸ்லிம்களின் தியாகம் யாருடைய பதவி சுகத்திற்காக பணியவைக்கப்படுகிறது. முஸ்லிம்லீக்கை உருவாக்கிய தலைவர்கள் இப்படித்தான் அரசியல் செய்ய கற்றுக்கொடுத்தார்களா? மறுமையிலும் இத்தகையவர்களை மன்னிக்கமாட்டார்கள் அத்தகைய துரோகத்தை இன்றைய முஸ்லிம்லீக்கின் ‘பாட்டி சபையின்’ தலைவர் என கருதி செய்துவருகிறார்கள். பேராசிரியர் காதர் மைதீன் அவர்கள் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, அவமானத்தை தனது சுயசரிதையில் எழுதி ‘சீலிட்டு’ 100 ஆண்டுக்கு பிறகு பிரித்து படிக்குமாறு எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. முஸ்லிம்லீக் முன்னோர்கள் செய்த சாதனையை பற்றி பேச பெருமைப்பட இன்றைய முஸலிம்லீக்கிற்கு உரிமை இல்லை.

இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் இதுவரை எந்த முஸ்லிம் அரசியல் இயக்கமும் எடுக்காத நிலைபாட்டை தமுமுக – மமக துணிந்து எடுத்துள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து தனித்து போட்டியிடுகிறது. இத்தகைய துணிவு அரசியல் களத்தில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்லீக்கிற்கு இல்லை ‘தாய்சபையையோ, பாட்டி சபையையோ’ எங்கிருந்தோ ஒரு ‘தாத்தா’ ரிமோட் கண்ட்ரோலில் இயக்க மானமுள்ள வாரிசுகள் அனுமதிக்கமாட்டார்கள். மானமுள்ளவர்கள் சிந்திக்கட்டும் சுயநலம் உள்ளவர்களும், நயவஞ்சகர்களும் அழிவை தேடிக்கொள்வர். வருங்கால சமுதாயத்திற்கு முன் உதாரணமாக திகழ்பவர்கள் தான் தலைவர்களே தவிர சமூகத்தை தன் சுயநலனுக்காக சவக்குழிக்கு அனுப்ப முயற்சிப்பவர்கள் கேவலமான முடிவையே தேடிக்கொள்வர். காயிதேமில்லத் அவர்களின் காலத்தில் திமுகவின் சின்னத்தில் முஸ்லிம் லீக் போட்டியிடவில்லை. அதனால்தான் அவருடைய பெயர் இனறும் உச்சரிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் அரசியல் உரிமைக்காக மமக போராடுகிறது அதற்காக பெரிய விலையை கொடுத்துள்ளது. அமைச்சருக்கு இணையான வக்ப் வாரிய தலைவர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு சுயஉரிமைக்காக தேர்தல் களத்தில் போராட்டத்தை நடத்துகிறது. அதுமட்டுமல்ல காங்கிரஸ் தருவதாக கூறிய வெளிநாட்டு தூதர் போன்ற கவர்ச்சிகரமான பதவிகளையும் நிராகரித்துள்ளது. சாதாரண MC பதவிக்கே எப்படி வெறிபிடித்து அழைகிறார்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்கவும். அடிமை அரசியலில் இருந்து விடுதலைபெற, தொலைநோக்கு பார்வையுடன் கிடைத்த பதவியையும் இழந்து எதிர்கால சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

தனிமனித புகழ்பாடி, எத்தகைய அவமானம் ஏற்பட்டாலும், காலில் விழுந்தாவது பதவியைபெறும் இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் - சகோ.பேரா.ஜவாஹிருல்லாஹ்வோ, சகோ. ஹைதர் அலியோ தனித்து ஓர்முடிவு எடுக்காமல் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுடன் நன்கு ஆலோசித்து எடுத்த ஓர் தீர்க்கமான முடிவைகண்டு துரோகிகளும், சுயநலமிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மமகவின் பலநாட்கள் ஆலோசனையும், முடிவும் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்துகிறது. தாம்பரம் மமக துவக்க விழாவில் மற்ற அரசியல் கட்சியினரை அழைக்காதது மிகப்பெரும் எழுச்சி ஆகும். மமக தன் சுயபரிசோதனையில் உள்ளது பாராட்டத்தக்கது.

திமுகவிற்காக ஷஹித் பழனிபாபா அவர்களை விட அதிகமாக உழைத்த வேறு ஓர் முஸ்லிமை அடையாளம் காட்ட இயலாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழனிபாபாவுக்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் பரிசாக வழங்கப்பட்டது. கோவை கலவரத்தில் 19 முஸ்லிம்கள் ஷஹிதாக்கப்பட்டனர். முஸ்லிம்களை கொன்றவர்களுக்கு திமுக அரசில் பதவி உயர்வு பரிசாக அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமல்லாமல், பாக்தாத் அபுகரிப் சிறையை விட அதிகமாக கொடுமைகளும் திமுக ஆட்சியில் நடந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற்றிருந்தால் இத்தகைய நிலை ஏற்பட்டிருக்காது. நான் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சுமார் 8 1/2 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் இத்தகைய அவலங்களை நன்கு அறிவேன். சிறையிலிருந்து வெளிவந்து சுமார் 2 ½ ஆண்டுகள் கடந்துவிட்டன. 2004ல் தமுமுகவிலிருந்து PJ வெளியேறிய பின் தமுமுகவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை காண்கிறேன். அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக அரசு சிறை கைதிகளை விடுதலை செய்தபோது தமுமுக முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக பெரும் முயற்சி செய்தது, ஆனால், திமுக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை மட்டும் விடுதலை செய்யாமல் துரோகம் செய்தது.

12 சதவீதத்திற்கு மேல் உள்ள முஸ்லிம்களுக்கு 3 1/2 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த இட ஒதுக்கீட்டை கிறுத்துவர்ககள் தூக்கி வீசி விட்டனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காக உஹத் யுத்தத்திற்கு செல்லும்போது, நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை முஸ்லிம்ளிடம் குழப்பத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் வலிமையை, ஒற்றுமையை குழைக்க முயற்சி செய்தான். அதில் அவன் சிறு வெற்றியும் பெற்றான். ஆனால் வரலாற்றில் நயவஞ்சகன் என பதிவு செய்யப்பட்டான். எப்போதெல்லாம் முஸ்லிம்கள் உரிமைக்காக, ஆட்சி அதிகாரத்திற்காக போராடுகிறார்களோ அப்போதெல்லாம் அப்துல்லாஹ் இப்னு உபைகள் தோன்றிக் கொண்டுதான் உள்ளனர்.

இன்றைய தமிழக அரசியல் களத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக, தனித்தன்மைக்காக, தமுமுக, மமக போராடும் போது PJ தன் துரோகத்தை வெளிப்படையாக காட்டியுள்ளார். இவர்தான் சமுதாயத்தின் ஒரே தலைவர் என ஆணவத்துடன் ‘படம்’ காட்டிவருகிறார். கடந்த காலங்களில் இவருடைய காட்டிக் கொடுத்த செயல்களையும், நயவஞ்சகங்களையும் சிறையில் இருந்தவன் என்ற முறையில் நன்கு அறிந்தவன்.

சைத்தான் தன் வேலையை செய்தால்தான் சைத்தான், செய்யாவிட்டால் சைத்தான் அல்ல. PJ தன் வேலையை செய்யாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். ‘இனம் இனத்தோடுதான் சேரும்’ என்பதற்கு ஏற்ப இஸ்லாமிய துரோகிகள் அனைவரும் ‘கை’கோர்த்து செயல்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. 3 மாதத்தில் தமுமுக -வை அழிப்பேன் என சபதம் செய்தவர் தன்னால் இயலாததால் தமுமுகவின் வளர்ச்சியை கண்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலைக்கு சென்றுவிட்டார் என்பதை அவருடைய பேச்சுக்களும், எழுத்துக்களும் நிரூபிக்கின்றன.

முஸ்லிம்களுக்கு தேர்தலில், போட்டியிட சரியான இடம் தராமல், மனதில் இடம் தருவதாக வசனம் பேசுவதும், கூட்டணி கட்சிகளை உடைத்து கூறுபோடுவதும் தான் திமுகவின் கூட்டணி தர்மம். இன்று தமுமுகவை, மமகவை உடைக்க முடியாததால் முஸ்லிம்களின் ஓட்டு சிதறிவிடும் என்று தோல்வி பயத்தில் ‘தலையை சொறிவதற்கு கொள்ளிக்கட்டையை எடுத்தது’ போன்ற நிலையில் PJ வின் ஆதரவை திமுக பெற்றுள்ளது! பலமுறை புதிய இயக்கம் கண்டு இறுதியாக? தானே (தவ்ஹீதுக்கு) நிறுவனராக கற்பனை செய்து கொண்டு உருவாக்கிய TNTJ இன்று உடைந்து மாவட்ட கிளைகளையும் கலைத்து, மாநில நிர்வாகிகளையும், நீக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டு துவண்டு விட்ட PJ தனக்கு ஓர் மறுவாழ்வு கிடைக்காதா என காத்திருந்த நிலையில், தமுமுக திமுகவைவிட்டு – உரிமையை நிலைநாட்ட பிரிந்து விட்டநிலையில். PJ தனக்கு மறுவாழ்வு கிடைத்து விட்டது என்ற நப்பாசையில் திடீரென திமுகவிற்கு ஆதரவு என கூறியுள்ளார். PJ வின் மீது முஸ்லிம்களுக்கு உள்ள வெறுப்பை அறியாமல் அரசியல் சாணக்கியர் கலைஞர் மாபெரும் தவறை செய்து விட்டார். PJ வின் நட்பு தான் முஸ்லிம்களின் ஓட்டு திமுகவிற்கு அரவே கிடைக்காமல் செய்துவிட்டது என்பதை இன்ஷா அல்லாஹ் தேர்தலுக்கு பின் உணர்வார்.

Pj. தமுமுக - வின் ‘பைலா’ வைப் பற்றி கூறி வழக்கு தொடருவேன் என ‘பிளாக்மெயில்’ செய்கிறார். கடந்த காலங்களில் இவ்வாறு பலர்மீது வழக்கு தொடர்வதாக ‘பிளாக்மெயில்’ செய்துள்ளார். என்மீது 1997ல் சுமார் 10,000 ரூ செலவு செய்து ரூ ஒரு லட்சம் கோரி மான நட்டவழக்கு போட்டார். இவருடைய ‘பூச்சாண்டிக்கு’ பயப்படாமல் வழக்கை எதிர் கொள்ள தயாரானேன். ஆனால், இவருக்கு மானமில்லை என்பதை ஒப்புக்கொண்டு வழக்கு நடத்தாமல் விட்டுவிட்டார். இதுபோல் பெரியவர் SM பாஷா அவர்கள்மீது தொடுத்த கிரிமினல் வழக்கும் ‘புஸ்வானம்’ தான்.

தமுமுக பைலா ஒன்றும் வேத புத்தகம் அல்ல. காலநிலைக்கு ஏற்ப மாற்றம் செய்வதில் தவறு இல்லை. ஆனால் அல்லாஹ்வின் குர்ஆனிலேயே குழப்பத்தை உருவாக்கிய PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர் தேர்தலுக்குபின் அறிவார். வல்லத்தில் அல்லாஹ்வின் கோபத்தால் கவிழ்ந்த ‘காபா’ போன்ற சினிமா செட்டப்பை கட்டிய நவீன அப்ரஹா PJ வை முஸ்லிம்கள் அறிவர். கலைஞர் அறியமாட்டார்.

பாலைவனத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக காபாவின் அருகில் ஜம்ஜம் நீர் ஊற்றை அல்லாஹ் அருளியுள்ளான். ஆனால் தஞ்சை தரணியில், காவிரிக்கரையில் பல நீருற்றுகள் இருந்த இடத்தில் நவீன அப்ரஹா PJ காபா போன்ற சினிமா செட் போட்டதால் அல்லாஹ்வின் லஹ்னத் - கோபப்பார்வை ஏற்பட்டு நிரூற்றுகள் வற்றிவிட்டன.

PJ. உடன் சேர்ந்த திமுக மீதும் அல்லாஹ்வின் கோபப்பார்வை இன்ஷா அல்லாஹ் ஏற்படும்.

ஓராண்டுக்கு முன் சகோ. பாக்கருக்கு எழுதிய கடிதத்தில் PJ வை பற்றிய உண்மைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டிய நிலையை கூறி இன்னும் எத்தனை நாட்கள் அண்ணனுக்காக பாவ மூட்டைகளை சுமக்க போகிறீர்கள் என வினவினேன். அல்லாஹ் என் போன்றவர்களின் துஆவை ஏற்று TNTJ வை உடைத்து புதிய அமைப்பை உருவாக்கியுள்ளான்.

சகோ. ஹைதர்அலி அவர்கள் வக்ப் போர்டில் ஊழல் செய்ததாக PJ கூறுவது உண்மையாக இருந்தால் வழக்கு தொடர வேண்டியதுதானே ஏன் இதுவரை ஊழல் வழக்கு தொடரவில்லை. திமுக அமைச்சர் ஒருவரே கட்டபஞ்சாயத்து செய்து பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் PJ, தமுமுகவினர் கட்டபஞ்சாயத்து செய்ததாக ஒருவர் மீதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததுண்டா?

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் மூன்று நாட்கள் நோன்பு நோற்றால் பாவம் தீர்ந்துவிடும் என ரகசிய ஃபத்வா கொடுத்த கள்ள ஆலிம் PJ ஜகாத் கொடுக்காத முஸ்லிம்களை கொள்ளையடிக்கலாம் என ரகசிய ஃபத்வா கொடுத்த கள்ளஆலிம் PJ .

அடுத்தவர்கள் மீது பொய்யையும், அபாண்டமான பழிகளையும் குற்றச்சாட்டுகளையும் கூறும் கள்ள ஆலிம் PJ என்பதையும் உலகம் அறியும்.

ஷஹித் பழனி பாபா பற்றி எத்தகைய பொய் செய்திகளை பரப்பினார் என்பதை முஸ்லிம்கள் நன்கு அறிவர். அவர் ஷஹித் ஆனவுடன் நீலிக்கண்ணீர் வடித்த நயவஞ்சகர் என்பதை நன்கு அறிவோம்.

ஒரு குல்லா வியாபாரி மரத்தின் நிழலில் படுத்திருந்தபோது குரங்குகள் அவர் அணிந்திருந்ததுபோல குல்லாக்களை மாட்டிக்கொண்டன. தூங்கி எழுந்த குல்லா வியாபாரி தான் அணிந்திருந்த குல்லாவை எடுத்து கீழே வீசியதும் மரத்தில் இருந்த குரங்குகளும் குல்லாக்களை வீசி எறிந்தன. குல்லா வியாபாரி குல்லாக்களை எடுத்துக்கொண்டு நடையை கட்டினார் என ஒரு கதையை பள்ளியில் படித்துள்ளேன்.

இந்த குரங்குத் தத்துவத்தைத் தான் PJ வும் கடைபிடிக்கிறார். இவர் இறையச்சமின்றி வீசி எறியும் வார்த்தைகளை இவருடைய ரசிகர் கூட்டம் பேசித்திரிகிறது. இவருக்கு சாதகம் இல்லையென்றால் தன் வார்த்தைகளையே மாற்றி கூறுவார். அப்போதும் குரங்குகளின் செயல் போல ரசிகர் கூட்டம் சிந்தித்து பார்க்காமல் அதையே பின்பற்றுகிறது.

ஜமாத் நிர்வாகிகளை மிரட்டினார்கள், சுனாமியில் ஊழல், செல்வந்தர்களிடம் மிரட்டி பணம் பறித்தனர், கட்டப்பஞ்சாயத்து செய்தனர். வக்ப் வாரிய சொத்துக்களை தாரைவார்த்தனர் என ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை கூறும் PJ ஆதாரம் இருந்தால் வழக்கு தொடுத்திருப்பார் என்பதை அவருடைய ரசிகர்கள் சிந்தித்தால் உணர்வார்கள்.

PJ கூறுவது உண்மைதான் என வாதத்திற்கு ஏற்றுக்கொண்டாலும் இவ்வளவு தவறுகளுக்கும் காரணமாக – ஆளும் கட்சியை தமுமுக பயன்படுத்திதாக PJ வே கூறும்போது அவ்வளவு மோசமான ஆளும்கட்சியை – திமுகவை PJ ஆதரிப்பது பெரும் பாவம் அல்லவா. அல்லாஹ்விற்கு PJ வின் ரசிகர்கள் என்ன பதில் கூறுவார்கள்? தயவுசெய்து மனிதர்போல் சிந்திக்கவும். மக்களை முட்டாளாக்க இவ்வாறு வார்த்தை ஜாலங்களில் விளையாடுகிறார்.

1991 தேர்தலுக்கு முன் திருச்சி நடுவன் சிறையில் NSA தேசிய பாதுகாப்புச் சட்ட கைதியாக ஷஹித் பழனிபாபா இருந்தபோது டாக்டர் ராமதாஸ் அவர்களும் அன்றைய பா.ம.க பொதுசெயலாளர் தலித் எழில்மலை அவர்களும் தேர்தல் உடன்பாடு குறித்து ஒப்பந்தம் செய்துகொண்டபோது நானும் உடன் இருந்தேன் அப்போது பழனிபாபா அவர்கள் தேர்தல் உடன்பாட்டைவிட சமூக உடன்பாட்டையே வலியுறுத்தினார். முஸ்லிம்களும் வன்னியரும் தலித்துக்களும் ஒற்றுமையுடன் இருந்து சமூக ஒற்றுமையும், ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று கூறினார். அப்போது சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு ஜிஹாத் கமிட்டிக்கு நோட்டோ, சீட்டோ தேவையில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புதான் முக்கியம் என கூறினார். டாக்டர். ராமதாஸ் அவர்களும் பல ஊர்களில் முஸ்லிம்களுக்கு வன்னியருக்கும் இருந்த பிரச்சினைகள் தீர உதவினார்.

1991 ல் பாபா அவர்கள் கூறிய வசனங்களை இன்று PJ கூறுகிறார். ‘நோட்டும் வேண்டாம், சீட்டும் வேண்டாம்’ என்று முஸ்லிம்களை 18 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்து செல்கிறார். நோட்டு வேண்டாம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் 1992 பாபர் மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியாக கலவரம் அப்பாவி முஸ்லிம்கள் கைது என அடக்கு முறைகளை கண்டு பாபா அவர்கள் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கும் முயற்சியில் இருந்தார் என்பதை அவருடன் இருந்தவர்கள் அறிவர்.

அவ்வாறு பாபா ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்தால் முஸ்லிம்களின் எழுச்சியை தடுக்க முடியாது என்பதை உணர்ந்துதான் ஷஹிதாக்கப்பட்டார். எனவே இன்று முஸ்லிம்களின் எழுச்சியை தடுப்பதற்கான எதிரிகளின் நயவஞ்சக சதியில் PJ வும் பங்கெடுக்கின்றார். PJ வின் பித்தலாட்டங்களை நயவஞ்சகங்களை விமர்சிப்பவர்களை வழக்கு தொடுப்பேன் என மிரட்டுவதும், அவருடைய அநியாயங்களை எதிர்ப்பவர்கள் மீது மது,மாது மற்றும் பொருளாதார குற்றச்சாட்டு கூறி வீடியோ ஆதாரம் உள்ளது என அபாண்டமாக பழி சுமத்துவதும் PJ வுக்கு வாடிக்கை. இதுவரை யாரைபற்றியும் இவர் கூறியதுபோல் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டதில்லை. இவருடைய வார்த்தையில் சில ரசிகர்கள் மட்டும் மயங்கி உள்ளனர்.

உண்மையில் PJ வின் துரோகங்கள், நயவஞ்சகங்கள் காட்டிக்கொடுத்தல் அரபிக் கல்லூரி லீலைகள் முதல் ஆற்காட்டு லீலைகள் வரை, இஸ்லாத்தை விட்டு வெளியேறி ‘முர்தத்தாக’ இருந்தது முதல் குர்ஆணை ஹராமான வேலைக்கு பயன்படுத்தியது வரை தொகுத்து இன்ஷா அல்லாஹ் PJ ஓர் ஆய்வு’ - தொண்டி முதல் ஆற்காடு வரை என ஒரு CD விரைவில் ஆதார பூர்வமாக வெளியிட்டு அவருடைய முகமூடி கிழிக்கப்படும். அப்போது அவருடன் இருப்பவர்களும், ஆதரிப்பவர்களும் அவமானத்தால் கூனிக்குறுகும் நிலை இன்ஷா அல்லாஹ் ஏற்படும்.

PJ வின் மறுவாழ்வுக்காக திமுகவை ஆதரிக்கும் நிலையை தமிழக உலமாக்கள் நன்கு அறிவார்கள். தனித்து விடப்பட்ட PJ இன்று திமுக தயவில் எழுந்து நிற்க முயற்சிக்கின்றார். எனவே இதை நன்கு புரிந்துகொண்டு முஸ்லிம்கள் குறிப்பாக உலமாக்கள் ஓர் மௌன புரட்சியை இன்ஷா அல்லாஹ் ஏற்படுத்துவார்கள்.

PJ வை பற்றிய உண்மையான குற்றச்சாட்டுகளுக்கு என்றுமே பதிலளித்ததில்லை. அவரைப்பற்றி வெளியீடுகளை அலட்சியப்படுத்தினார். ஆனால் மக்கள் உண்மையை உணர்ந்து அவரை விட்டு விலகிவிட்டனர். இன்று அவரைபற்றி வெளியிட்ட வெளியீடுகளின் தாக்கம் என்ன என்பதை உணர்ந்துவிட்டார்.

சூழ்ச்சி செய்பவர் அந்த சூழ்ச்சியாலேயே அழிவார் என திருமறை கூறுகிறது. PJ தன் சூழ்ச்சிகளுக்கு யார் யாரை, எந்த அமைப்புகளை, எந்த பத்திரிக்கைகளை, எந்த டிவியை பயன்படுத்தினாரோ அவை அனைத்தும் இன்று அவருக்கு எதிராக அல்லாஹ் திருப்பி விட்டான். தற்போது உணர்வு இதழ் மட்டும் உள்ளது. அதுவும் இன்ஷா அல்லாஹ் அவருக்கு எதிராக திரும்பும். முஸ்லிம் மீடியா டிரஸ்டின் சார்பாக வெளிவரும் உணர்வு இதழின் டிரஸ்டிகளில் பெரும்பான்மையானவர்கள் PJவுக்கு எதிராக உள்ளதால் இன்ஷா அல்லாஹ் உணர்வும் அவருக்கு எதிராக திரும்பும். அல்லாஹ்வின் வாக்கு பொய்ப்பதில்லை.

‘மேலும் அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். 3:54

நான் எந்தக் கட்சியிலும் இயக்கத்திலும் உறுப்பினராக இல்லை. தமுமுகவின் சமுதாய மார்க்க, மனிதநேய பணிகளை, போராட்டங்களை கண்டு அவர்களை ஆதரிக்கின்றேன். முஸ்லிம்களுக்கு ஒரு முஸ்லிம் தலைமையில் இயக்கம் தேவை மற்றவர்களை நம்பி ஏமாந்தது போதும் நமது உரிமைகளை நாமே பெறுவோம். அதிகாரத்தை நாமும் கையில் எடுப்போம். நேர் வழியில் நீதி வழியில் செல்வோம். மமக தனித்து தேர்தலில் நிற்பதுதான் முதல் வெற்றி. இனி, இன்ஷா அல்லாஹ் வெற்றிகள் தொடரும்.

முஹம்மத் காமில் - 9884728520

குறிப்பு :
1) தமுமுக, மமக தொண்டர்கள் அதிக அளவில் முஸ்லிம்கள் ஓட்டுபோட உழைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் அது பெரும் வெற்றியாக மாறும்.
2) PJ மேடையில் திமுக வேட்பாளர்கள் இருக்கும் போட்டோக்களை முஸ்லிம்களிடம் காட்டி முஸ்லிம்களுக்கு உண்மை நிலையை உணர்த்துங்கள்
3) இப்பிரசுரத்தை நகல் எடுத்து மக்களுக்கு வழங்கவும்.

Tuesday, April 28, 2009

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

த.த.ஜவின் கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.
நமது மனிதநேய மக்கள் கட்சியின் தேர்தல் 2009 என்ற வலைபூவில் வாசகர் விமர்சனத்தில் பதிவு செய்துள்ளதை நமது நீதியின் குரல் வாசகர்களுக்கு அளிக்கிறோம்.
_________________________________________
- MOHAMED ABUTHAHIR

நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்

1)அரசியல் வேண்டாம் என்ற பயணத்தில் இருக்கும் த.த.ஜ. அத்தின் தற்போதைய தேர்தல் நிலைப்பாட்டினை வரலாறு மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். மயிலாடுதுறையில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ்வை தோற்கடிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட த.த.ஜ. வேறு யாரை ஆதரிக்கப்போகிறது? காங்கிரஸிற்கும் ஆதரவில்லை, அ.தி.மு.க.விற்கும் ஆதரவில்லை என்கிற போது வேறு யாரைதான் ஆதரிக்க போகிறது? .வரும் நாடாளுமன்றத்தில் தமிழக சார்பில் ஒரு முஸ்லிம் கூட இடம்பெற இயலாமல் போகுமேயானால் அதற்கு த.த.ஜ. அத்தும் பொறுப்பேற்கத்தான் வேண்டும். தி.மு.க.விற்கு ஆதரவு என்று கூறும் த.த.ஜ. தி.மு.க. சமுதாய துரோகங்களே செய்யவில்லை என்று சாட்சிக் கூறத் தாயாரா? இல்லை கோவை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மறுப்பதும், குண்டுவெடிப்பினை காரணம்காட்டி நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை சிறைக்கு அனுப்பியதும், ஒவ்வொரு டிசம்பர் மாதமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற அப்பாவி இஸ்லாமியர்களை கைது செய்துவருவதும், உலகம் கண்டிராத குஜ்ராத் இனப்படுகொலையை தலைமை ஏற்று நடத்திய பா.ஜ.க.ஆட்சிக்கு துணை நின்றதும், தற்போதை தேர்தலில் கூட ஒரு முஸ்லிமிற்கு கூட போட்யிட வாய்ப்பு வழங்காததும், தன்னுடைய குடும்பத்தினர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் இன்றுவரை இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முயற்சிக்காதததும் ம.ம.க.யின் சமுதாய துரோகங்களுக்கு ஒப்பிடுகையில் சாதாரணமானதுதான் என்று கூறுகிறார்களோ என்னவோ?

2). த.த.ஜ. தி.மு.க.வை ஆதரிப்பதில் சில காரணங்கள் இருந்தாலும் ம.ம.க. வேட்பாளர்கள் எங்கு நின்றாலும், யார் நின்றாலும் தோற்கடிப்போம் என அழைப்பு விடுப்பதில்தான் எமக்கு ஆட்சேபம். மதிப்புமிக்க முஸ்லிம்கள் ஓட்டானது சிதறுண்டு மதிப்பிழந்து போவதனாலேயே நாம். த.த.ஜ.அத்தின் நிலைப்பாட்டினை விமர்சித்தோம். எங்கள் ஊர் மயிலாடுதுறை தொகுதியில் வருகிறது. எங்கள் தொகுதியில் போட்டியிடும் ஜவாஹிருல்லாஹ் போன்ற ஒரு இஸ்லாமியனின் வெற்றி த.த.ஜ. அத்தின் நிலைப்பாட்டினால் இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கமே விமர்சன் த்திற்கான காரணம்.
வக்ப் வாரியத்தின் தலைவர் பதவிக்கு த.த.ஜ. அத்தினை சார்ந்த ஒருவரின் பெயர் பரிந்துரைக்படுவதாக செய்திகள் கசிகின்றன. பொறுத்திருந்துப் பார்ப்போம்
திமுகவிற்கு ஆதரவு எனும் ததஜவின் நிலைப்பாடு சரிதான். மற்ற திமுக அல்லாத கூட்டணி கட்சிகள் பொட்டியிடும் தொகுதியில் என்ன செய்வது என்பதுதானே கேள்வி. அந்த வேளையில் மயிலாடுதுரையில் ஏன் மமகவை ஆதரிக்க கூடாது என்பதற்கு ததஜவிடம் சரியான பதில் இல்லை தான்.

3)அன்புச் சகோதரர்களுக்கு,
தமுமுகவின் நிறுவனரான குணங்குடி ஹனீஃபா அவர்களிடமிருந்து மீளெழுச்சி பெற்றபோதிலிருந்தே 'அரசியலில் பங்கு பெற வேண்டும்; வேண்டாம்' என்ற இரு வேறுபட்ட கருத்துகளை அதன் தலைவர்கள் கொண்டிருந்தனர் என்பது ஓரளவுக்கு எல்லாருக்கும் தெரிந்ததுதான்.

'தமுமுக அரசியலில் பங்கு வகிக்காது; பதவி பெறாது' என்பது பீஜேயின் உறுதியான நிலைபாடாகவும் 'அரசியல் வேண்டும்' என்பது இப்போதைய தலவர்களான பேரா. ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலீ போன்றோரின் வெளிப்படுத்தாத உள்ளக் கிடக்கையாகவும் அப்போது கிடந்தது.

இப்போது தமுமுக அரசியலில் இறங்கி, மமக கண்ட கையோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. அதில் தவறொன்றும் இல்லை.

ஆனால், காலங்காலமாகப் 'பதவி பெறப் போவதில்லை' என்று அன்று முதல் இன்றுவரை மேடை தோறும் முழங்கிய ததஜ, வாரியத் தலைவர் பொறுப்புக்குத் தலையசைத்தால் முஸ்லிம்களிடத்தில் அது செல்லாக் காசாகி விடும்.

தவிர,
தமுமுகவைத் தோற்கடிப்பது என்னவோ மார்க்கக் கடமையைப்போல் ததஜ பிம்பம் காட்டுவது கடைந்தெடுத்த இரட்டைநிலைபாடு.

4)நாடாளுமன்றத்துக்குச் செல்ல முயலும் முஸ்லிமைத் தோற்கடித்து விட்டு, 'முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை' என்று 'உணர்வு' கண்ணீர் வடிக்கப் போகிறதா?

அல்லது,
'நம் சகோதரன்தானே, வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் போகட்டுமே!' என்று தன் நிலைபாடை மாற்றிக் கொள்ளப் போகிறதா?

பொறுத்திருந்து பார்ப்போம்.

5)தவ்ஹீத் ஜமாத்தின் இந்த முடிவு வருத்தம் அளிக்கிறது.திமுக அதிமுக போடும் அர்த்தமற்ற அரசியல் கோமாளித்தனத்தை இது பிரதிபளிக்கிறது.
தமுமுக வை பிஜேபியோடு ஒப்பிடுவதும், பிஜேவை மோடியோடு ஒப்பிடுவதும். கீழ்த்தரமான விசயங்கள்.

நான் தவ்ஹீத்வாதி. பிஜே சொல்வதுதான் சரி என்று நினைத்தாள் நான் எங்கள் தொகுதியில் ரித்தீஸ் என்ற காமெடியனுக்குதான் வாக்களிக்க வேண்டும்.இதற்கு நான் தயார் இல்லை.பண பலத்தின் மூலம் அரசியல் பன்னும் ரித்தீஸ் தேர்தல் முடிந்தவுடன் செலவு செய்ததை சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கும், நமது பிரச்சனைகள் நிச்சயம் கண்டுகொள்ளப்பட மாட்டாது.


6)நமது ஓட்டை திமுகவிற்கு போட்டு வீணடிப்பதை விட தமுமுகவிற்கு வாக்களித்து நம் பலத்தை காண்பித்தாள் மற்ற கட்சிகள் நம்மையும் திரும்பி பார்க்கும்.
நான் பீஜே மீது மிகுந்த மரியாதை கொண்டவன். அதே நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எனக்கு வேண்டப் பட்டவர் அல்ல.
அரசியல் என்று வரும்போது மமகவைத்தான் ஆதரிப்பேன். பீஜே பயான் கேட்பேன். அதற்காக ஓட்டுப் போட மாட்டேன்.
திமுகவுடன் அதிமுக சேர்ந்தாலும் மமகவும் ததஜவும் சேராதுபோல.
நல்ல சகோதரத்துவம், போங்க.
அல்லாஹு அக்பர்!

7)தற்கால பிஜேயின் செயல்பாடுகளையும் நிலைபாடுகளையும் குறித்து நாம் அறிவோம். மார்க்க விஷயங்களிலும் அரசியல் விஷயங்களிலும் முன்னுக்குப் பின் முரண், பொய், அவதூறு, மார்க்கத்தைத் தன் வசதிக்கும் தன் அறிவுக்கும் ஏற்றாற் போன்று வளைத்தொடித்தல்...... பட்டியல் நீளூம். எனவே, தூரநோக்கற்ற குறுகிய சிந்தையுடன் எடுக்கும் அவரின் நிலைபாடுகளைக் குறித்து சமுதாயத்திற்கு அதிகம் விளக்கம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. எனினும் 'மமகவைத் தோற்கடித்தே தீருவோம்' என சபதம் செய்து களமிறங்கியிருக்கும் ததஜவின் நிலைபாடு, சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு, நடுநிலையோடு எடுக்கப்பட்ட நிலையா? என்பதை உணர்வில் வெளியிட்டுள்ள விளக்கமே மிக அழகாக எடுத்துக்காட்டும்.

மமகவைத் தோற்கடித்தே தீருவது என தீர்மானம் போடப்பட்டுள்ளதன் காரணாமாக பிஜே சொல்வது::
1. அவர்கள் ரவுடியிசம் செய்தனர்
2. கட்டப்பஞ்சாயத்து செய்தனர்
3. சமுதாயத்திற்குத் துரோகம் இழைத்தனர்
4. அரசியலில் இறங்கமாட்டோம் என சத்தியம் செய்து விட்டு வாக்குறுதி மீறினர்.
5. சமுதாய சொத்துக்களை அடித்தும் மிரட்டியும் கொள்ளையடித்தனர்.
6. 'ஃபித்ரா, சுனாமி போன்ற வசூல் பணங்களில் கையாடல் செய்தனர்.
7. இவற்றிற்கெல்லாம் மேலாக தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு எதிராக தமிழகம் முழுவதும் செயலாற்றினர்.
இவற்றைத் தவிர பிற வலுவான காரணங்கள் ஏதுமில்லை.

பிஜே கூறும் இவையனைத்தையும் மமகவினர் செய்தனர் என்றே வைத்துக் கொள்வோம்(4. வாக்குறுதி மீறினர் என்பது மட்டும் எனக்குத் தெரிந்து உண்மை)

தற்போதைய தேர்தலில் இவர்கள் ஆதரவு தெரிவிக்கும் திமுகவினர் இவ்விஷயங்களில் எல்லாம் யோக்கியர்கள் என இவர் கூற வருகிறாரா?

ரவுடியிசம், கட்டைப்பஞ்சாயத்துக்குப் பெயர் போனவர்கள் மு.க. அழகிரியும் ஸ்டாலினும்.

தமிழகத்தைப் பகுதிவாரியாக பிரித்து பட்டா போட்டு கொடுக்காத குறையாக கருணாநிதி தனது மகன், குடும்பத்தினருக்குக் கொடுத்துள்ளார்.

சமுதாய வஞ்சனை, துரோகம் இவையனைத்துக்கும் முழு சொந்தக்காரர் கருணாநிதி தான். கடந்த 50 ஆண்டுகாலமாக கருணாநிதி சமுதாயத்தை வஞ்சித்து வருவதைப் போன்று வேறு யார் வஞ்சித்தார்?

அனைத்தையும் விடுவோம். இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முஸ்லிம்களுக்கு ஒரு சீட் கூட கொடுக்க மனம் வராத கருணாநிதி, எந்த வகையில் சமுதாய பாதுகாவலன் ஆவார்?. இவரை நம்பலாம், முஸ்லிம்களாகிய, இதுவே முதல் முறையாக அரசியல் களம் காணும் மமகவினரை நம்பக் கூடாதா?

'8)எதிர்காலத்தில் இவர்களும் பதவி பெற்ற பின்னர் நம்மை வஞ்சித்து விடுவர்' என குறி சொல்வதற்கு ததஜவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?. எதிர்காலத்தில் நடப்பதைக் கூறும் அளவுக்கு பிஜேவுக்கு அல்லாஹ்வின் அதிகாரம் கிடைத்து விட்டதோ?

அப்படியே அவர்கள் வஞ்சித்து விடுவர் என்றே வைத்துக் கொள்வோம். கடந்த 50 ஆண்டுகாலமாக முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சித்து, சிங்கிள் கிளாஸ் டீக்குச் சென்னை ப்ளாட்ஃபார்மில் அலைந்து திரிந்த கருணாநிதி, இன்று ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இடம் பிடிக்கும் அளவுக்குக் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியாகியிருக்கிறாரே, அதனை ஒரு முஸ்லிம் அனுபவிக்க போகிறார் எனில் அனுபவித்து விட்டுப் போகட்டுமே?. கருணாநிதிக்குச் சொத்தோ, அதிகாரமோ இனி ஒன்று புதிதாக தேவையில்லை. அனைத்திலும் பின் தங்கியிருக்கும் இச்சமுதாயத்திலிருந்து ஒருவராவது ஆசியாவில் மிகப் பெரிய பணக்காரராக வந்து விட்டுப் போகட்டுமே!

பொய்யிலும் ஏமாற்றிலும் நெஞ்சில் குத்தும் துரோகத்திலும் பெயர்பெற்ற கருணாநிதிக்குக் கொடுப்பதை ஒரு முஸ்லிமுக்குக் கொடுத்து விட்டுப் போகலாம்.

இனி, வாக்குறுதி மீறுதல்.

மீறவே கூடாத, மீறி விட்டால் ஷிர்க்கை விட மிகப் பெரிய பாவத்துக்குரிய வாக்கு மீறுதலா மமகவினர் செய்து விட்டனர்?

9)சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயம் எனில் வாக்குமீறுவதில் என்ன தவறு இருக்கிறது?. இது கூடாது என்பதற்கு மார்க்கத்தில் பிஜேயிடம் ஆதாரம் கேட்கமுடியாது. ஏனெனில், மார்க்கத்தைத் தன் விருப்பத்திற்கு வளைத்தொடிப்பதில் இன்று பிஜேயும் சளைத்தவரல்ல.

எனவே வாக்குமீறுதல், சமுதாயநலனை விட பெரிய விஷயமாக நமக்குப்படவில்லை. வாக்கு மீறினால் அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என மார்க்கம் வரையறுத்துள்ளது. அதனால், அவ்விஷயத்தில் ரொம்பவே பிஜே அலட்டிக் கொள்ள வேண்டாம்.

இனி, அப்படியே வாக்குமீறி விட்டனர், அதனால் தான் அவர்களுக்கு எங்கள் ஆதரவு இல்லை என்றால் கூட,

'சென்னை வாழ்வுரிமை மாநாட்டில் அம்மா!!! செயலலிதா முஸ்லிம் சமுதாயத்தின் முன்னிலையில், இதே பிஜேயின் முன்னிலையில் ஒரு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதிக்கு எதிராக அடுத்த தேர்தலிலேயே நடந்து கொண்டார். வாக்குறுதி மீறுபவர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டுள்ள ததஜ, அதிமுகவை அழிப்பதற்கு - அதனைத் தோற்கடித்தே தீருவோம் என்று எப்பொழுதாவது தீர்மானம் போட்டதா?. கடந்த தேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அம்மாவின் பின்னால் வாலாட்டிச் சென்றனர்?

எனவே வாக்குறுதி மீறுதலிலும் நீதமான அணுகுமுறை பிஜேயிடம் இல்லை. அந்தக் காரணத்தைக் கூறுவதற்கு பிஜேக்கோ ததஜவிற்கோ எந்த அருகதையும் இல்லை.

10)'ஃபித்ரா, சுனாமி வசூலைக் கொள்ளையடித்தனர் விஷயம், சிரிப்பு தான் வருகிறது!

ததஜ வெளியிட்ட சுனாமி வசூல் கணக்கில்....

உணர்வில் விளம்பரத்திற்கு 50000, ஆட்டோ செலவு, தொண்டர்கள் சீருடை, தொப்பி வாங்க என நீண்ட பட்டியல் போட்டிருந்தனரே?

சுனாமி உதவிக்காக அனுப்பியவர்களின் பணத்தை இதற்கெல்லாம் செலவழித்தோம் என கணக்குக் காட்ட இவர்களுக்கு வெட்கமாக இல்லை? சூனாமிக்காக வாங்கப்பட்ட தொண்டர் சீருடையில் ததஜ என அடித்தல்லவா போட்டிருந்தனர்? ததஜவின் சீருடைக்குச் சுனாமி வசூல் பணமா?

உணர்வில் 'சுனாமிக்கு உதவுங்கள்' என்ற விளம்பரம் செய்ததற்கு உதவி செய்தவர்களின் பணமா?

சுனாமி பணத்தைத் தங்கள் விருப்பத்திற்குச் செலவு செய்து, அதனைப் பட்டியல் போட்டும் காண்பித்த ததஜவினருக்குத் தமுமுகவினர் சுனாமி பணத்தைக் கொள்ளையடித்து விட்டனர் எனக் கூற எவ்வித அருகதையும் இல்லை.

இனி என்ன உள்ளது? ஒரே விஷயம் - தமுமுக ததஜவிற்கு எதிராக செயல்பட்டது!

ஆம், முஸ்லிமல்லாத, 50 ஆண்டுகாலமாக சமுதாயத்தை நெஞ்சில் குத்தி வாழ்ந்து வரும் கருணாநிதிக்குக் கேட்காமலே ஆதரவு கொடுத்து விட்டு, எந்த ஒரு அரசியல் கட்சி கூட போடாத அளவிற்குச் சொந்தம் சகோதரர்களைத் தோற்கடித்தே தீருவோம் என(கவனிக்க: மோடிக்குக் காவடி தூக்கிய செயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என இவர்கள் தீர்மானம் போடவில்லை. மாறாக அவளுடன் இதுவரை ஒட்டியே இருந்தனர்), தீர்மானம் போட்டு பிரச்சாரம் செய்யும் அளவுக்கு இவர்களுக்குச் சமுதாய துரோகம் முற்றிப் போய் இருப்பதற்குத் தனிப்பட்ட பகை மட்டுமே காரணம்! அல்லாமல் சமுதாய நோக்கம் இதில் அறவே இல்லை!

11)சமுதாயம் விழித்துக் கொண்டாகி விட்டது. பிஜே சொல்வதெல்லாம் சரி தான் என ததஜவில் இருப்பவர்கள் வேண்டுமெனில் தலையாட்டி செல்லலாம். சமுதாயம் பிஜேயை நன்றாக புரிந்து கொண்டாகி விட்டது!

இனி திமுகவிற்கு ஆதரவு என கேட்காமலே ததஜ துண்டு விரித்தது சரியா? என பார்ப்போம்.

திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு உருப்படியாக சொன்ன ஒரே காரணம் - கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது தான்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பது உண்மை தான்.

ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் துரோகிக்கு வாக்குறுதி கொடுக்க பிஜேக்கு அதிகாரம் கொடுத்தது யார்?

வேண்டுமெனில் ததஜ சார்பில் பிஜே வாக்கு கொடுத்தார் என கூறி கொள்ளுங்கள்.

சமுதாயம் தன் நன்றிக்கடனை ஏற்கெனவே தமுமுக மூலம் கொடுத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் ததஜ பேசலாம் எனில், அதனைப் போன்ற சம உரிமை தமுமுகவிற்கும் உள்ளது. தமுமுக சமுதாயத்தின் சார்பில் ஏற்கெனவே நன்றி கடனை அடைத்து விட்டது.

சமுதாயத்தின் சார்பில் நன்றி கடன் அடைக்க தமுமுகவுக்கு உரிமை இல்லை, எனில் ததஜவுக்கும் அந்த உரிமை இல்லை.

சமுதாயத்தின் சார்பில் ததஜ செய்யலாம் எனில் தமுமுகவும் செய்யலாம்.

எனவே எவ்வகையில் நோக்கினாலும் துரோகி கருணாநிதிக்கு மற்றொரு முறை நன்றி கடன் அடைக்க வேண்டிய தேவையே இல்லை.

அப்படியே வலுக்கட்டாயமாக அடைத்தே தீர வேண்டும் எனில், பிஜேயும் பிஜே கூறுவதை எல்லாம் சரி தான் என கேட்டு தலையாட்டும் ததஜவினரும் துரோகி கருணாநிதிக்குத் தங்களின் நன்றி கடனை அடைத்து மோட்சம் பெறுங்கள்!!!
பரவலாக பார்க்கும்போது, த.த.ஜமாத்தின் ம.ம.க. எதிர்ப்பு என்பது வரவேற்கப்படாத ஒன்றாக தெரிகிறது. சமுதாய வாக்குகள் நீர்த்துப் போகத் தான் த.த.ஜமாத்தின் முடிவு வழி வகுக்கும். ஆக.. சமுதாய இயக்கங்கள் தமிழ் முஸ்லிம் சமூகத்தை ஒற்றுமையில்லாத இருண்ட பாதையைத் தான் காட்டுகின்றன.

12)பழையதை கிளரிவிட்டு ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக சுயநலம் மனோயிச்சை காழ்ப்புணர்ச்சி என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்து அணுகி செயல்படும் போக்கு சரிக்கும் தவறுக்கும் உள்ள் வேறுபாட்டை மறைத்து விடும்..

இவ்வுண்மையை அனைவரும் உணர்ந்து விழிப்புணர்வோடு ஒருவரையொருவர் எதிரியாக கருதி செயல்படாமல், தூய்மையான, சுமூகமான தியாக மனப்பான்மையுடன் வெறுப்பையும் குரோதத்தையும் களைந்து செயல் படாதவரை முஸ்லிம் சமுதாய நலன் என்பதும் வெரும் பேச்சுதான் என்பதிலும் சந்தேகமில்லை. மேலும் இதனால் அவர்களுக்கும் மறுமையில் ஏதும் நலன் விளையும் வாய்பில்லை என்பதும் தெளிவு.

இதை தமிழக மற்றும் இந்திய முஸ்லிம்கள் உணர்ந்திடும் வரை அவர்கள் தலைவர்கள் உணரமாட்டார்கள்,, முஸ்லிம்கள் நிலையிலும் ஏதும் நல்லதொரு மாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியமுமில்லை...

அல்லாஹ் இதனை மாற்றிட உதவியும் அருளும் புரியவேண்டும். என பிராத்திப்போமாக.... ஆமீன்

13)சமுதாய நலனைக் குறித்து நீங்கள் உண்மையாக கவலை கொண்டால்.....

இதுகாலம் வரை சமுதாயத்தை வஞ்சித்த திமுகவை விட்டுவிடுவோம். இந்தத் தேர்தலில் ஒரு சீட்டில் கூட முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாத திமுகவிற்கு ஆதரவு கொடுப்பது சமுதாய நலனா?

அதிமுக, பாஜகவின் பினாமி, அது சமுதாயத்தின் எதிரி எனில், திமுக சமுதாயத்தின் துரோகி என்பதை வசதியாக சகோதரர் PJ மறந்து விடுகிறார்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்காக சுமார் 167 முஸ்லிம்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம். ஆனால், அந்தக் குண்டுவெடிப்பு நடக்கக் காரணமான 19 முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றொழித்த கோவை கலவரம் சம்பவத்தில் எத்தனை பேர் எத்தனை ஆண்டுகள் விசாரணை என்ற பெயரில் சிறையில் கிடந்தார்கள் என்ற கணக்கு தெரியுமா?

கருணாநிதி, துரோகிகளை விடக் கேவலமானவன் என்பதற்கு இதனை விட பெரிய சான்று எது வேண்டும்?

அப்படிப்பட்டவனுடன் பேரம் பேசுவது தான் சரியான நிலை. அல்லாமல் சமுதாயத்திற்குப் போவதற்கு போக்கிடம் இல்லை என்பதற்காக அந்தத் துரோகிக்குச் சமுதாய ஓட்டுகளைக் கண்ணை மூடி வாரி வழங்குவது சுத்த மடத்தனம்.

14)தமுமுக தன்னை விட்டுப் போனாலும் நஷ்டமில்லை, ததஜ மூலமாக இச்சமுதாயத்தின் ஓட்டுகளைக் கூறு போட்டு விடலாம் என்பதை முன்னரே உணர்ந்ததால் தானே, குறைந்த பட்சம் ஒரே ஒரு முஸ்லிமையாவது திமுக வேட்பாளர்களில் கூட இந்தக் கருணாநிதி நிறுத்தவில்லை? இதனை விடப் பச்சை துரோகியும் வஞ்சகனும் உலகில் வேறு யாராவது உண்டா?

முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கட்டும். பிஜே பேசி விட்டால் எல்லாம் சரி தான் என்ற நிலை 90 களில் இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை. முன்னுக்குப் பின் முரணாக பேசுவதிலும் சமய சந்தர்ப்பத்திற்குத் தகுந்தது போல் பேச்சை மாற்றி மாற்றி பேசுவதிலும் பிஜேக்குப் போட்டியாக இப்பொழுது சமுதாயத்தில் கூட எவரும் இல்லை என்பதைச் சமுதாயம் நன்றாக உணர்ந்துள்ளது.

பாஜகவைத் தமிழகத்தில் இறக்குமதி செய்த, இரத்தக்காட்டேறி மோடிக்குப் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து கூறி உச்சி முகர்ந்த இன வெறிபிடித்த ஜெயலலிதாவைத் தோற்கடித்தே தீருவோம் என ததஜ அறிவித்திருந்தால் அதற்கு சமுதாய நலனின் மீது அக்கறை உண்டு எனக் கூறலாம்.

திமுகவிற்கு ஆதரவாம்; மமக போட்டியிடும் தொகுதிகளில் எல்லாம் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சாக பாடுபடுவார்களாம்.

அப்ப பாஜக, அதிமுக?

15).இன்னும் எத்தனை காலத்திற்கு இந்தக் குதிரை சவாரி என்பதற்கும் பிஜே விளக்கம் அளித்தால், கேட்டுப் புல்லரித்துப் போகின்றவர்களுக்கு புழகாங்கிதமடைந்து முழங்க வாய்ப்பாக இருக்கும்.

இடஒதுக்கீடு கொடுத்ததற்காக அடுத்தத் தேர்தலில் நன்றிக்கடனாக திமுகவை ஆதரிப்பதாக வாக்குக் கொடுத்து, அதை நிறைவேற்றுவதாகச் சொல்கிறார்கள்! அதை தமுமுகவிலோ அல்லது ஒத்தக்கருத்டுடைய ஏதேனும் முஸ்லிம் கட்சியிலிருந்தோ செய்திருக்கலாமே? தவ்ஹீதுப் பிரச்சாரமே எங்கள் முதர்பனி என்று வெளியேறி (தமுமுகவை உடைத்து) முன்பு ஜெயலலிதா தற்போது கருணாநிதி என்று லீகர்களைவிடவும் மோசமாக முஸ்லிம்களை அரசியல் வழிகெடுக்க ததஜ ஏன்? என்பதே பலரின் கேள்வி.

ததஜ அரசியல் கட்சியா மார்க்கப்பிரச்சார அமைப்பா? திமுக முஸ்லிம்களுக்குச் செய்த துரோகங்களாகச் சென்ற சட்டமன்றத் தேர்தலில் சகோ.பிஜே செய்த பிரச்சாரங்களெல்லாம் சந்தர்ப்பவாதக் குற்ற்ச்சாட்டுக்களா? அல்லது திமுக அவற்றையெல்லாம் சரி செய்துவிட்டதா?

ஓர் அரசியல்வாதி சந்தர்ப்பவாதியா இருக்கலாம்; ஆனால் தவ்ஹீதுவாதி எக்காரணம் கொண்டு சந்தர்ப்பவாதியாக இருக்கக்கூடாது.

16)பிஜே தமுமுகவிலிருந்து வெளியேறக்காரணமே, அவர் கூறுவதற்கு அங்கு யாரும் செவி சாய்க்கத் தயாராகாதது தான்.

வெறும் அடிப்படை உறுப்பினராகத் தான் அவர் இருப்பார். ஆனால், இயக்கத்தின் தலைமையை விட அதிகாரம் படைத்தவராக அவர் இருப்பார்; இருக்க வேண்டும். அவரின் பேச்சு எடுபடவில்லை என்ற நிலை வந்தால், உடனடியாக பிளவு தான்.

இதற்கு சரியான உதாரணம்:

சகோதரர் ஹாமித் பக்ரீ கைது செய்யப்பட்ட போது, தமுமுக தலைமையிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியாகும் முன்னரே அன்று இரவு வின் தொலைகாட்சியில் தோன்றி, 'தமுமுக ஹாமித் பக்ரி கைது விஷயத்தில் ஜாமீனூக்காகவோ அவர் வழக்கு விஷயமாகவோ எந்த விஷயத்திலும் உதவி புரியாது' என அறிக்கை வெளியிட்டது தான்.

இந்நேரத்தில், பிஜே தமுமுகவின் வெறும் அடிப்படை உறுப்பினர் மட்டும் தான். 'மனம் திறந்த மடல்' எழுதி விட்டு, அமைப்பாளர் பதவியைக் கூட அந்நேரத்தில் விட்டு விலகியிருந்தார்.

17)தமுமுகவின் தலைவர்களில் பெரும்பாலானவர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை 'அரசியலில் கால் பதித்தால் மட்டுமே, முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு ஓரளவாவது தீர்வு கொண்டு வரமுடியும்' என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால், பிஜே இதற்கு நேர் முரணான கருத்து கொண்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை, தவ்ஹீதை வளர்க்க தமுமுக வேண்டும் அவ்வளவு தான். அதற்கு மேலாக அரசியலில் இறங்க வேண்டும் என்பதற்கு அவர் எதிர் கருத்தில் இருந்தார்.

தமுமுகவில் அரசியலில் இறங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்து, பிஜேயின் சொல்லுக்கு மதிப்பில்லை என்ற நிலை வந்தப் பிறகு தான், என்னென்னவோ காரணங்களை அடுக்கி தமுமுகவை உடைத்தார்.

இது உண்மையில்லை எனில், 'தவ்ஹீத் பிரச்சாரத்திற்குத் தமுமுக எதிராக உள்ளது என கூறி வெளியேறியவர், முஸ்லிம் விரோதி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பாரா?'

அரசியல் வேண்டாம் என்றவர், தொடர்ந்து அரசியலில் தலையை நுழைத்து ஏன் தான் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்பது தான் புரியவே செய்யாத விஷயம்.

'18)தமுமுக அரசியலில் போட்டியிடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை. அந்தக் கருத்து பி.ஜேயின் கருத்துத்தான் ஆரம்பம் முதலே ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர்அலியும் அரசியல் பிரவேசம் சமுதாயத்திதேவை என்று பல முறை கூறி உள்ளார்கள் பல செயற்குழு பொதுக்குழுவில் ஆய்வும் நடத்தப்பட்டுள்ளன அதிகப்படியான ஆதவு வந்தவுடன் அரசியலுக்குப் போனால் நான் இயக்கத்த விட்டு போய்விடுவேன் என்று பிஜே மிரட்டுவார் உடனே அவை கைவிடப்படும். அரசியல் பிரவேசம் கூடாது என்று தமுமுகவோ அதன் நிர்வாகிகயோ ஒரு போதும் சொன்னதில்லை பிஜேயைத் தவிர. '

இது முட்ரிலும் உண்மை. நான் கலந்து கொண்ட திருச்சி பொதுகுலுவிலும் இப்படிதான் 'அரசியலுக்கு வந்தால் நான் விலகி விடுவென் என்றார்.' அப்பொலுது புதிய தமிழகத்தை அதரிப்பது தொடர்பாக முடிவு எடுக்க கூடியபொழுது இவ்வாரு கூறினார்.

19)நான் இப்பொழுது எந்த இயக்கத்திலும் இல்லை. எதை மறைத்தாலும் சுயநலத்துக்காக தவ்ஹீத்வாதிகளை கூருபோட்ட பெருமை அண்ணன் பீஜே அவர்களைதான் சாரும்.

20)ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டதிலிருந்து முஸ்லிம் சகோதரர்களூக்கு எதிரான தன் தனிப்பட்ட பகையை வெளிப்படுத்தி விட்டது. இதுவரை பாஜகவையோ அதிமுகவையோ தோற்கடித்தே தீருவோம் என ஒரு பெயருக்குக் கூட தீர்மானம் நிறைவேற்றாத ததஜ, மமகவைத் தோற்கடித்தே தீருவோம் என தீர்மானம் போட்டத்திலிருந்து ததஜ எதிரிகளின் கையாளாக ஆகி விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.

21)துரோகி கருணாநிதிக்காகவும் அவரின் கட்சி சார்பாக போட்டியிடும் ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளுக்காகவும் தேர்தல் பணி செய்வதற்கு, ததஜ கூறிய பிரதான காரணங்களில் ஒன்று - இடஒதுக்கீடு அதிகரிப்பதாகவும் முந்தைய இடஒதுக்கீடு தவறு சீர் செய்யபடும் என்றும் - திமுக ததஜவிற்கு எழுத்து மூலம் உறுதி வழங்கியிருக்கிறது என்பதே.

ஆனால் அவ்வாறான எந்த ஒர்ர் உறுதிமொழியும் திமுக ததஜவிற்கு இதுவரை கொடுக்கவில்லை
தௌஹீது பெயரைக் களங்கப்படுத்தும் விதத்தில் பொய்யின் கூடாரமாகவும் சமுதாய மக்களிடம் எவ்வித கூச்சமும் இன்றி பொய்களை அவிழ்த்து விடும் மானங்கெட்டவர்களாகவும் ததஜ மாறி விட்டது.

22)பி ஜெ தனிச்சின்னத்தில் நின்றாலும் இந்த மமக வை ஆதரிக்கும் கூட்டம் அவருக்கு உழைக்க வாக்களிக்க முன்பந்தியில் நிற்கும். யாருடன் இருந்தாலும் தனிசின்னம் அதிக தொகுதிகள் அதில் மமக பிரளவில்லை. வேலூர் தேனி தொகுதிகளில் அந்த முன்னணி நிற்கவில்லை.மத்திய சென்னையில் சகோதரர் ஹைதர்அலி பெயர் உறுதிசெய்யப்பட்ட பின்புதான் அதிமுக ஆளை மாற்றியது. இது சங் டிவி கூட்டம் மறைமுகமாக ஆர் எஸ் எஸ் வழி ஜெயலலிதாவிற்கு கொடுத்த பிரஸ்ஸர். சரத்குமார் கூட்டணியையும் சங் டிவி ராதிகா வழி பிரஸ்ஸர் கொடுத்து பிரித்தது. வைகோவை எதிர்த்து கார்த்திக்கை நிறுத்தி பிரஸ்ஸர் கொடுக்க நினைத்த திமுக அதை கொல்லைபுறம் வழி நடத்தியது.தொடர்ந்து செய்தி வாசிப்பவர்கள் கூர்ந்து நோக்குபவர்கள் நன்கு அறிவர்.

இடஒதுக்கீடு தந்தற்காக ஆதரவு கடிதம் கொடுத்த சில நாட்களுக்கு பிறகு முத்துப்பேட்டை பிரச்சனையில் பி ஜே கூட்டத்தில் பேசும் போது கருணாநிதியை குறிப்பிட்டு நீ 3.5 தந்ததாக பேப்பரில் சொன்னாய். நடைமுறையில் இல்லை. முஸ்லீம்களுக்கு பாதுகாப்பாய் இருப்பேன் என்றாய் இன்று துரோகம் செய்கிறாய். நீயும் பேப்பரில் தந்தது போல் நாங்களும் பேப்பரில் தந்தது முடிந்துவிட்டது. இனி அதற்கு மதிப்பில்லை என்று பலமுறை அறிவித்த பி ஜே இப்போது அதை பேசுவது அவருக்கு ஒரு நாக்கா அல்லது பலதா.இஸ்லாமியனுக்கு வெட்கம் ஈமானில் உள்ளது என்று நபிகள் சொன்னார். பி ஜே யிற்கும் அவரை அரசியலில் ( மார்க்கத்தில் அல்ல) தாங்குகிறவர்களுக்கும் அது இல்லையா.; நாகர்கோவிலில் தவ்ஹீத் மறுமலர்ச்சிக்கு 1976 முதல் வித்திட்டபோதும் 80களின் முடிவுவரை நன்கு அறிந்தவன்.

சகோதரர்களே! அந்த பி ஜே இவர் அல்ல. அன்று அவருடன் இருந்த கூட்டமும் இப்போ இவரின் தவறான செயல்களால் அவருடன் இல்லை.

23)ம.ம.க வின் தேர்தல் நிலையை எதிர்ப்பவர்கள் சிறுபான்மையினரின் பிரச்சனைகளை பேச தனிசின்னத்தில் சமுக பிரதிநிதிகள் சட்ட சபை பாராளுமன்றங்களில் வேண்டும் அதற்கு தீர்வு சொல்லுங்கள். எனவே உள்ளுர் சகோதர சகோதரிகள் மமக விற்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் அவர்கள் குடும்பங்களுக்கு தெரிவித்து மமக விற்பு வாக்களியுங்கள். எல்லா புகழும் இறைவனுக்கே.


24)ததஜவிடம் நியாயமான கேள்விகளுக்கு எப்பொழுதுமே பதில் இருக்காது.

இங்கு கேள்வி ஒன்று தான்:

ரித்தீஸ் போன்ற சினிமா கூத்தாடிகளையும் நாற்காலிக்காக பாஜகவுடன் மானம், சூடு, சுரணை இன்றி ஒருமுறை கூட்டணி வைத்துக் கொண்ட போலி திராவிட வேடம் இடும் கருணாநிதியையும் வெற்றி பெற பொய் காரணம் கூறி களமிறங்கி பணியாற்றும் ததஜ, 'மமகவினர் போட்டியிடும் தொகுதியில் அவர்களைத் தோற்கடிக்க முழுமூச்சுடன் களப்பணியாற்றுவோம்' என தீர்மானம் போட்டுச் செயல்பட வேண்டிய அவசியம் என்ன வந்தது?

துரோகிகள், ஊழல் பேர்வழிகள், ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்துப் பேர்வழிகள், சமுதாய எதிரிகள், பதவி பித்து பிடித்து அலையும் பேமானிகள்..... இப்படிப்பட்டவை எல்லாம் தான் காரணம் எனில்,

இவை அனைத்துக்கும் முழு தகுதி படைத்தவர் கருணாநிதி தான்.

முஸ்லிம் சமுதாயத்தை நம்பவைத்துக் கழுத்தறுப்பதில் சுமார் 50 ஆண்டு பாரம்பரியம் கொண்ட கருணாநிதியை நம்புவார்களாம். ஆனால், நேற்றுவரை ஒன்றாக இருந்து அடியும் மிதியும் கொண்டு 'மனம் திறந்த மடல் மூலம்', 'மறுமைக்காகவே உழைப்பவர்கள்' என்றும் 'தன்னலம் பாரா சேவகர்கள்' என்றும் பலவாறாக புகழ்ந்து அவர்களுக்கு எதிராக வாயசைக்க வருபவர்களுக்கு எதிராக மறுமையில் இறைவனிடம் நான் முறையிடுவேன் என தன்னால் மெச்சிப் பாராட்டப்பட்டவர்களை, நம்பமாட்டார்களாம்.

குடிகாரன் கூட காலையில் எழுந்தால் தெளிந்து விடுவான். இரவில் உளறியதை நினைத்து வெட்கப்படவும் செய்வான்.

ஆனால், பிஜேயோ தன் வாய்க்குத் தானே எதிரி என்பதற்கு இலக்கணமாக வாழ்பவர். இவரைத் தலைமையாகக் கொண்ட ததஜவின் தீர்மானங்கள் அனைத்துமே தனிப்பட்ட பகைமையின் பிரதிபலிப்புகளே.

இதனைச் சமுதாயம் மிக நன்றாக உணர்ந்தே இருக்கிறது.

சமுதாயத்தை நீண்டகாலத்துக்கு யாராலும் ஏமாற்ற முடியாது.


25')'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும், சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியும்...
நாடாளுமன்றத்தில் தேசிய அளவி லான பிரச்சினைகளை பேசுவதற்காகத் தான் இரண்டு எம்.பி. வாய்ப்புகளை கேட்கிறோமே தவிர, ஏதாவது ஒரு பதவியில் இருக்க வேண்டும் என்பதோ அல்லது பதவி மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ எமது நோக்கமல்ல என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஹாரூணிடம் தெளிவுபடுத்தினார்
ஒரு கட்டத்தில் தமுமுக தலைவரின் கைகளை பிடித்துக் கொண்டு 'ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள்' என வலியுறுத்த... உஷாரான தமுமுக தலைவர், சமுதாயத்தின் மனநிலையைக் கூறி 'இரண்டு தொகுதிகளுக்கு குறைய முடியாது' என மறுத்துவிட்டார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக சிந்தித்து செய்ல்படகூடியவர்களா?

அல்லது

எந்த அழைப்பிதலும் இல்லாமள் (மமகவை (முஸ்லிம்களை) உயிரை கொடுத்து தோற்கடிக்க வேண்டும்) என்பதற்காக கலைஞரிடம் கூனி குறுகி குனிந்து ஆதரவு கடிதத்தை கொடுத்துல்லார்களே இவர்கள் இஸ்ஸாமிய சமுதாயத்திற்காக செய்ல்படகூடியவர்களா?????

சகோதரர்களே! சிந்தியுங்கள்.... நாம் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.... இறையச்சத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தும் கீழுள்ள ஹதீஸை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்.


முஸ்லிம் சகோதரர்களே உணர்ந்து கொள்ளுங்கள் யார் உன்மையான தவ்ஹீத்வாதிகள் என்று.


லாத்த ஹாஸதூ வலாத்த நாஜஸு வலாத்த பாகலூ வலாத்த தபாரூ வலா பய்ழ பய்ழகும் அலா பய்ழ பய்ழின் வ கூன இபாதல்லாஹி இஹ்வானா.
அல் முஸ்லிமு அஹ்லுல் முஸ்லிமி லா எதழிமுஹூ வலா யஹ்ஸிலுஹூ வலா யஹ்ஸிருஹூ அத்தக்ஃவா ஆஹூனா. அய்யுஸிர்ரு தலாத மர்ராஅத். பி ஹஸ்இம்ரின் மினஷ்ஷர்ரீ அய்யுஹ்கிர அஹாஹுல் முஸ்லிமா, குல்லு முஸ்லிமி அலல் முஸ்லிமி ஹாரம் தமுஹு வமாலுஹு வ இர்துஹூ. (ரவாஹூல் முஸ்லிம்)


அல்லாஹூடைய தூதர் சொன்னார்கள் “பொறாமை கொள்ளாதீர்கள், போட்டிப் போடாதீர்கள், விலையேற்றம் செய்யாதீர்கள், ஒருவர் ஒரு பொருளை வாங்கும் பொழுது அதை கேட்டு வாங்கதீர்கள். நீங்கள் ஒருவருக்கு ஒருவர் உற்ற சகோதரர்களாக இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு அநீதி இழைக்க மாட்டான், அவனுக்கு கொடுமை செய்யமாட்டான், அவனை கேவலமானவனாக கருத மாட்டான். ஒரு முஸ்லிமை மற்றொரு முஸ்லிமை கேலவமானவனாக கருதுவது கொடுமையிலும் கொடுமையாகும். இதுதான் இறையச்சமாகும் என தன் நெஞ்சத்தில் கை வைத்து மூன்று முறை கூறினார்கள்.
ஒரு முஸ்லிமுக்கு மற்றொரு முஸ்லிமின் உயிரும், பொருளும் அவரது மானம் உள்பட மூன்று விஷயங்கள் ஹாராமாகும். (இது முஸ்லிமில் பதிவு செய்யப்பட்ட ஹதீஸாகும்)


……………..”நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள். உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்......(3: 103)
முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காபீர்களை (உங்களுக்குஉற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......(4: 144)…..
முஸ்லிம் சகோதரர்களே ஒற்றுமையின் பக்கம் வாருங்கள் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை ஆட்சியாளர்களாக்கி வைப்பான்.

THIS VIEWS TAKEN FROM READER COMMENT IN SATYAMARGAM.COM And http://mmkelection2009.blogspot.com/2009/04/blog-post_25.html

Thanks to Satyamargam.com and mmkelection.blogspot.com

Saturday, April 25, 2009

அன்று ஓட, ஓட அடித்து விரட்டப்பட்ட இன்றைய மத்திய சென்னை ம.ம.க. வேட்பாளர்

1999 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது இன்று மத்திய சென்னையில் போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் ஹைதர் அலி அவர்களுடன் சேர்ந்து களப்பணியாற்றிய சகோதரர் அபூ சுமையா அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் கருத்து பதிவு பகுதியில் பதிவு செய்துள்ள தகவலை நன்றியுடன் பதிவு செய்திள்ளேன்.
Blog Editor
____________________________________________________________________

இன்று மத்திய சென்னை தொகுதியில் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்களில் திமுக வேட்பாளர் மட்டுமே அவர் கண்ணுக்கு எதிரியாக தெரியும்; தெரிய வேண்டும். சகோதரர் ஹைதர் அலி, எப்படிப்பட்ட மோசமானவராக இருந்தாலும் சகோதரர் பிஜேக்கு எவ்வளவு பெரிய துரோகம் இழைத்திருந்தாலும்...... தேர்தல் என்று வரும் போது, அதுவும் மத்திய சென்னை தொகுதி என்று வரும் போது, அதிலும் சகோ. ஹைதர் அலி போட்டியிடுகிறார் என வரும் போது சகோதரர் பிஜே கொஞ்சமாவது நன்றியுள்ளவராக இருந்தால்......... சகோ. ஹைதர் அலி வெற்றி பெற தன் ஆதரவைக் கொடுத்து, வீதியில் இறங்கி உழைக்க வேண்டும்.

இதற்கான காரணம் ஒன்று உள்ளது. அதில், நேரடியாக நான் தொடர்பு கொண்டவன் என்பதால், அல்லாஹ்வுக்காக இவ்விடத்தில் அதனை நினைவுகூர கடமைபட்டுள்ளேன்.

1999 பாராளுமன்ற தேர்தல் என நினைக்கிறேன். அத்தேர்தலில் துரோகி கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைத்து களம் கண்டார். இதன் காரணமாக அப்போது பிஜே உடனிருந்த தமுமுக பாப்பாத்தி செயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. அதிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களை வெற்றி பெற வைக்க முழு மூச்சாக இறங்கி வேலை செய்ய வேண்டும் என தீர்மானம் போட்டு களமிறங்கியிருந்தது.

இதே மத்திய சென்னை தொகுதியில் அப்பொழுது அதிமுக சார்பில் சகோ. லத்தீப் சாகிப் அவர்கள் போட்டியிட்டார்கள். சென்னை திமுகவின் கோட்டை என்பதாலும் அப்பொழுது திமுக ஆட்சியில் இருந்ததாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாலும் கள்ள ஓட்டு கொடிகட்டிப் பறக்கும் எனவும் கள்ள ஓட்டை மட்டும் நாம் தடுத்து விட்டாலே சகோ. லத்தீப் அவர்களின் வெற்றியை உறுதிபடுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கள்ள ஓட்டு நடக்காமல் இருப்பதை உறுதிபடுத்தும் வகையில் தமுமுகவினர் உழைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, எல்லா வாக்கு சாவடியிலும் தமுமுக தொண்டர்கள் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டனர்.

இப்பணிக்காக சகோதரர்கள் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என பீஜே பேசிய பேச்சைக் கேட்டு, அரசியலில் எவ்வித நாட்டமும் இல்லாத நானும் தேர்தல் பணிக்காக தமுமுக சகோதரர்களுடன் களமிறங்கியிருந்தேன்.

இதே மத்திய சென்னை தொகுதியில், அண்ணா நகர் பகுதியிலுள்ள ஒரு அரசு மேல் நிலைபள்ளியில், இப்பொழுது இதே மத்திய சென்னையில் போட்டியிடும் சகோதரர் ஹைதர் அலி தலைமையில் நான் உட்பட சில சகோதரர்களுக்குக் கள்ள ஓட்டு நடைபெறாமல் கண்காணிக்க தமுமுக பொறுப்பு தந்திருந்தது.

கள்ள ஓட்டு நடப்பது தெரிய வந்தால் எவ்விதம் யார், யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றிருந்தன.

அப்போதைய தேர்தல், தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்றன. அது இரண்டாம் கட்ட தேர்தல். முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருந்த கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து சுமார் 20க்கு மேற்பட்ட ஸ்டாண்டர்ட் வேன்களும் சுமார் 10க்கு மேற்பட்ட பஸ்களும் அண்ணாநகர் வாக்குச்சாவடி பகுதிகளில் பார்க் செய்யப்பட்டிருந்ததையும் பூத்தினுள் அதிகாரிகளின் துணையுடன் முழு பூத்தையுமே திமுக+பாஜகவினர் கைப்பற்றி கள்ள ஓட்டு போட்டுக் கொண்டிருந்ததையும் திமுக+பாஜகவினர் அல்லாத வேறு யாரையுமே ஓட்டு போட விடாமல், உரிய அடையாள அட்டைகள்/ரேசன் கார்டுகள் இருந்தும் அதிகாரிகளை வைத்து அவர்கள் பெயர் பட்டியலில் இல்லை என்றும் ஓட்டு போட்டாகி விட்டது என்றும் விரட்டப்பட்டுக் கொண்டிருந்ததையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் கண்டறிந்தோம்.

எங்களுக்குத் தரப்பட்டிருந்த அறிவுரைபடி உடனடியாக தகவலைச் சகோதரர் ஹைதர் அலிக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு சொன்னோம்.

சம்பவ இடத்திற்கு நாங்கள் கூறியது சரிதானா? என்பதைச் சோதிப்பதற்காக விரைந்து வந்தச் சகோதரர் ஹைதர் அலி அவர்கள், நாங்கள் கூறியது முற்றிலும் உண்மை என்பதைக் கண்டவுடன் பூத் தேர்தல் அதிகாரியிடம் அப்போது அங்கு திரண்டிருந்த(ஓட்டு போட விடமால் தடுக்கப்பட்ட கோபத்தில் இருந்த) அதிமுகவினர் புடைசூழ வாக்குவாதம் செய்தார்.

வெறும் 5 நிமிடம் தான் ஆகியிருக்கும். எங்கிருந்து அத்தனை பெரிய கூட்டம் வந்தது என்று தெரியாது. சுமார் 2000 பேருக்குக் குறையாமல் இருப்பர். சகோதரர் ஹைதர் அலியோடு இணைத்து நாங்கள் துரத்தி், துரத்தி அடிக்கப்பட்டோம். தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது சகோ. ஹைதர் அலிக்கு ஆதரவாக திரண்டிருந்த அதிமுகவினரில் ஒருவரைக் கூட அந்த இடத்தில் காணோம். தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்த நாங்களும் சகோதரர் ஹைதர் அலியும் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் விரட்டி அடிக்கப்பட்டோம். அந்நேரத்தில், சகோ. ஹைதர் அலிக்குப் பாதுகாப்பாக அரசாங்கம் ஏகே47 துப்பாக்கியுடன் ஒருவரை நியமித்திருந்தது. கூட்டத்தின் அடி பொறுக்க முடியாமல், பாதுகாப்புக்கு வந்திருந்தவரிடம் வானத்தை நோக்கிச் சுட சகோ. ஹைதர் அலி பலமுறை வேண்டுகோள் விடுத்தார். ம்ஹூம். துரோகி கருணாநிதி நியமித்த ஆளல்லவா??.. சிறிது நேரத்தில் அவனும் எங்கு சென்றான் என்பது தெரியவில்லை.

அன்று நாங்கள் அடி வாங்கிக் கொண்டு ஓடிய ஓட்டம், 10 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் பசுமையாக மனதில் உள்ளது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடி, வழியில் கண்ட ஒரு டாக்டரின் காரை மறித்து ஏறி, பின்னர் சிறிது தூரம் சென்று வேறு ஆட்டோ பிடித்தூ....எப்படியோ எம்.எல்.ஏ ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம். அங்கு அறையினுள் சகோ. லத்தீப் தலைமையில் தலைவர்கள் தேர்தல் நிலவரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

நடந்தச் சம்பவத்தைச் சகோ. லத்தீப் சாகிப்பிடம் தெரிவித்ததும், உடனடியாக ஏதாவது செய்தே ஆக வேண்டும், உங்கள் தலைவரிடம் பேசி சொல்லுங்கள் என்றார்.

சகோ. ஹைதர் அலி , சகோ. பிஜேயை அழைத்துத் தகவல் கூறி, உடனடியாக கருணாநிதி வீட்டை முற்றுகை இடும் போராட்டம் அறிவித்து, தொண்டர்களை அங்கு வர வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் முறைபடி நடைபெறாததை மத்திய அரசுக்கும் தேர்தல் கமிசனுக்கும் கொண்டு செல்ல இதுவே உகந்த வழி என்றும் போராட்டம் அறிவித்தால் எதிர்கட்சிகளும் உடன் இறங்கும் என்றும் கூறினார்.

'தற்போது நமக்குக் கிடைக்கும் தகவல்படி சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சகோ. லத்தீப் வெற்றிபெறுவது உறுதி(அத்தேர்தலில் சுமார் ஒரு இலட்சம் என நினைக்கிறேன், வாக்கு வித்தியாசத்தில் சகோ. லத்தீப் தோல்வியடைந்தார்) என்றும் நாம் இப்போது அவ்வாறான போராட்டம் ஒன்று நடத்தினால் மத்திய சென்னை தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம் என்றும் அது நமக்குத் தான் இழப்பை ஏற்படுத்தும் என்றும் எனவே, சமுதாய நலனுக்காக நாம் வாங்கிய அடியைப் பொறுத்துக் கொள்வோம். வெற்றி பெற்றபின் மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் அலுவலகம் திரும்புங்கள்' என சகோ. பிஜேயிடமிருந்து பதில் கிடைத்தது.

களத்தின் நிலவரம் என்ன என்பதை அறியாமல் அவரே ஒரு கற்பனை உலகிலிருந்து கொண்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே என மனம் நொந்து சகோ. ஹைதர் அலி தளர்ந்து போய் அமர்ந்தார்.

அப்பொழுது அவர் கூறிய ஒரு வாசகம்:

'மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது தவறாகி விட்டது!'

அன்று இறைவன் பாக்கியத்தால் நாங்கள் உயிர் பிழைத்தோம் என்று தான் சொல்ல வேண்டும். ஹைதர் அலியுடன் நாங்கள் பெற்றிருந்த அடியினைக் கண்டிருந்த சகோ. ஹைதர் அலி, அலுவலகத்தில் கூறி எங்களுக்கு மருத்துவ சிகிட்சைக்கு ஏற்பாடு செய்து தரக் கூறி, அதனையாவது செய்யுங்கள் என்றிருந்தார்.

இப்படிப்பட்ட சகோ. ஹைதர் அலி மற்றும் ஜவாஹிருல்லாஹ்வைத் தான் இதே சகோ. பிஜே, தனது 'மனம் திறந்த மடலில்' , தன்னலம் பாராமல் உழைக்கும் சேவகர்கள் என்றும் சிறைக்குச் செல்லவும் அடியும் உதையும் கொள்ள தயாரானவர்கள் என்றும் இவர்களைச் சமுதாயம் முழுக்க நம்பலாம் என்றும் ஒருமுறை வானளாவ புகழ்ந்திருந்தார்.

இதனை எல்லாம் நான் இங்கு எடுத்துக் கூற நான் ஒன்றும் தமுமுகவோ அல்லது மமக அனுதாபியோ அல்ல. அன்று தேர்தல் பணிக்குச் சென்றதும் தமுமுகவுக்காக அல்ல. பிஜே அன்று அங்கு இருந்ததால் தான் அவரின் அழைப்புக்குச் செவி சாய்த்துத் தேர்தல் பணியாற்றச் சென்றேன். இதனைப் படிப்பவர்கள் நான் தமுமுகவிற்கு அனுதாபம் தேட இதனைக் கூறுவதாக நினைக்கலாம்.

எல்லாம் இறைவன் அறிவான். நான் நேரடியாக அனுபவப்பட்ட இந்தச் சம்பவத்தில், அன்று ரோட்டில் சமுதாயத்துக்காக ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டவர் தான் இன்று அதே மத்திய சென்னையில் போட்டியிடுகிறார்.

சகோ. பிஜே நன்றாக மனதில் கை வைத்து யோசிக்கட்டும். நாளை மறுமையில் இதற்கான சாட்சியாக நான் நிற்பேன்.

அன்று பிஜே சொல் கேட்டு அடி வாங்கியவருக்குத் தார்மீக ஆதரவு கொடுக்கச் சகோ. பிஜே கடமைபட்டுள்ளார். சமுதாய நன்மைக்காகத் தான் துரோகி கருணாநிதியை ஆதரிக்கிறோம் என கதையளக்கும் சகோ. பிஜே, தான் எதிர்த்து பிரச்சாரம் செய்யப்போகும் சகோதரர் ஒருகாலத்தில் தன் பேச்சைக் கேட்டு சமுதாயத்துக்காக இன்று தான் ஆதரிக்கும் கருணாநிதி+பாஜக கூட்டத்தால் அடி வாங்கியவர் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளட்டும்!

(இங்கு நான் குறிப்பிட்டுள்ள விஷயம் பொய் என எந்தத் ததஜ அனுதாபியாவது மாமிசம் உண்ண வருவாரானால், வருவதற்கு முன்னர் ஒருமுறையாவது சகோ. பிஜே அவர்களிடம் இந்தச் சம்பவத்தை எடுத்துக் கூறி உண்மையா?? இல்லையா? என்பதைக் கேட்டு விட்டு வரவும்)

--
அன்புடன்
சகோ. அபூ சுமையா.
*****************************************************
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10)

Wednesday, April 8, 2009

முஸ்லிம்களிடம் ம.ம.க கட்டாய வசூல் எனவே எதிர்கிறோம். TNTJ அறிவிப்பு!

ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ விர பிரசாரம்:
தவ்ஹீத் ஜ மாஅத்

நன்றி: தினமணி
சென்னை, ஏப். 7: முஸ்லி ம்க ளி டம் கட்டாய வசூ லி ல் ஈடுபட்டு வரும், ம னி த நேய மக்கள் கட் சி யை எ தி ர்த்து தீ வி ர பி ரசாரம் செய்வோம் என்று " த மி ழ் நாடு தவ்ஹீத் ஜ மாஅத்' அமைப் பு அ றி வி த்துள்ளது. இது கு றி த்து, செய் தி யா ள ர்க ளி டம் அமைப் பி ன் தலைவர் ஜை னுல் ஆ பி தீ ன் செவ்வாய்க் கி ழமை கூ றி யது:

வரும் நாடாளுமன்ற த் தேர்தலி ல் த மி ழகத் தி ல் தி முக வையும், பு துவை யி ல் காங் கி ரஸ் கட் சி யையும் ஆத ரி க்க பொதுக்குழு கூட்டத் தி ல் மு டி வு எடுக்கப்பட்டுள்ள து. த மி ழகத் தி ல் முஸ்லி ம்க ளுக்கு தி முக அரசு 3.5 சதவீத இட ஒதுக் கீ டு வழங் கி யுள்ள து. 6 மாத காலமா கி யும் இந்த இட ஒதுக் கீ டு முஸ்லி ம்களுக்கு ச ரி வர கி டைக்க வி ல்லை. என வே, தி முக ஆத ரி த்து தீ வி ரமாக பி ரசா ரம் செய்யாமல் அ றி க்கை மூலம் தி முகவுக்கு வாக்க ளி க்குமாறு கோ ரி க்கை மட்டும் வைக்க மு டி வு செய் துள்ளோம். இட ஒதுக் கீ டு அ ளி க்கத் தவ றி ய காங் ரைஸையும், முஸ்லிம்களை மிரட்டும் விடுதலைச் சி றுத்தைகளை யும் ஆத ரி ப்ப தி ல்லை.

" மனிதநேய மக்கள் கட்சி ' முஸ்லிம்களிடம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகி ற து. எனவே அக்கட் சி எங்கு போட்டியிட்டாலும் அவர்களை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்வோம்'' என்றார் ஜைனுல் ஆபிதீன்.
நன்றி: தினமணி 08-04-2009

Tuesday, March 17, 2009

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்...!

செவ்வாய், 17 மார்ச் 2009
நன்றி: சத்தியமார்க்கம்.காம்

ஊர்ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள். முஸ்லிம்கள் பிளவுபட்டால் அரசியல்வாதிகளுக்குக் கொண்டாட்டம்! அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய/தமிழக முஸ்லிம்கள் இப்படித்தான் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். மத்திய/மாநில ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டியவர்கள் பிறருக்காகக்கொடி பிடித்து கோஷம்போடப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் புதிதாகத் தோன்றியுள்ள சிலகட்சிகளும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. இதுவரையிலும் முஸ்லிம்களுக்கு ஒரேயொரு சீட்டைக் கொடுத்து என்றும் நிரந்தரமாக இதயத்தில் இடம் கொடுக்கும் ராஜதந்திரம் இனியும் எடுபட வாய்ப்பில்லை என்று அண்மையில் அரசியல் கட்சியாகப் பரிணமித்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவு (ம.ம.க) மாறுபட்ட சிந்தனை உறுதியுடன் இருக்கிறது.

"எங்காளுக்குக் கருப்பு செவப்பத் தவிர வேற கலரே தெரியாம இருந்துச்சி" என்று தொடங்கிய பழனி பாபாவிலிருந்து செல்லரிக்கத் தொடங்கிய திமுகவின் முஸ்லிம் அடிமைப் பத்திரம், ததஜவில் தொடர்ந்து, வியப்பூட்டும் வகையில் தற்போது த.மு.மு.கவின் கைமாறி இருக்கிறது என்பதை, அதன் தலைவர் பேரா.ஜவாஹிருல்லாஹ்வின் வெகுஅண்மைக்கால நேர்முக/ அறிக்கைகள் தெளிவு படுத்துகின்றன. 'உரிய மரியாதை' கிடைத்தால் அதிமுகவுடன் கூட்டணியமைத்தும் தேர்தலைச் சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சி காய்நகர்த்தி வருகிறது.

திமுகவைப் பொருத்தவரையில் இத்தேர்தலில் காங்கிரஸுக்கு முன்பைவிட அதிகத்தொகுதிகளை வழங்கி மதிமுக,பாமக மற்றும் கம்யூனிஸ்டுகளின் வெற்றிடத்தைக் காங்கிரஸுக்குக் கொடுத்து மத்திய அரசை ஆட்டுவிக்கப் போதுமான குறைந்தபட்ச தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் திமுகவின் முரண்பட்ட நிலைப்பாட்டால் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் பறிபோகுமென எதிர்பார்க்கப்படுகிறது.எனவே காங்கிரஸுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் இருந்து தேமுதிகவுக்கு 4லிருந்து 6 தொகுதிகள்வர ஒதுக்கி, அடிக்கடி குடைச்சல் கொடுக்கும் பாமகவுக்கு செக் வைக்கப்படலாம் (பாமகவுக்கு அம்மா பக்கமிருந்தும் அழைப்பிருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்).

திமுக=15, காங்கிரஸ்=12, காதர் முஹைதீன்=1, திருமாவளவன்=1 அல்லது 2, தேமுதிக=6லிருந்து 8 போக மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணிக்கு வரும் பட்சத்தில் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணியை தவிர வேறுவழியில்லை என்ற உறுதியான நம்பிக்கையில் கலைஞர் அதிகபட்சம் 2 அல்லது 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று சொல்லக்கூடும். (15+12+1+2+7+3).

இதுபோக,"எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க எங்களின் கதவுதிறந்தே உள்ளது" என மனிதநேய மக்கள்கட்சி அறிவித்து அதிமுக அழைப்பையும் எதிர்பார்த்துள்ளது. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஜெயலலிதா,மனிதநேய மக்கள் கட்சிக்கு 3 அல்லது 4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் என்றும் ஆசை காட்டியிருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.

அதிமுகவைப் பொருத்தவரை இத்தேர்தலில் இருபது சீட்டுகளை வைத்துக் கொண்டு, கம்யூனிஸ்டுகளுக்குத் தலா நான்கு தொகுதிகளும் மதிமுகவுக்கு 4-5 தொகுதிகளும் வழங்கக்கூடும். அன்புச்சகோதரி ஜெயலலிதாவின் அன்பு அழைப்பை ஏற்று, தமிழினத்திற்கு துரோகமிழைத்த திமுக-காங்கிரஸ் கூட்டனியைத் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாமக, அதிமுக கூட்டணிக்கு வந்தால் பாமகவுக்கு ஆறு தொகுதிகளையும் ஒதுக்கக்கூடும். மனிதநேய மக்கள்கட்சியும் அதிமுக கூட்டணிக்குள் வந்தால் மதிமுகவிடம் இருந்து (Mr.வைகோ! உங்கள் கட்சியில் முன்பிருந்த மூத்தத் தலைவர்கள் தற்போது இல்லையே....) அல்லது அதிமுகவுக்கான தொகுதிகளிலிருந்து 1-2 ஐச்சேர்த்து மூன்று தொகுதிகள்வரை முஸ்லிம்களுக்கு வழங்கக்கூடும்! (19+4+4+4+6+3).

இதுவரை ஒரேயொரு தொகுதியைப் பரிசாகப்பெற்று பாராளுமன்றத்தில் தமிழக முஸ்லிம்களின் குரலை ஒலித்த (?) கலாச்சாரத்தை மாற்றியமைத்து இம்முறை 4-6 தொகுதிகளில் கூட்டணியாக அல்லது தனித்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக மமக முனைப்புடன் உள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும் கூட்டணியாகப் போட்டியிட்டாலும் 'உள்குத்து' அரசியலுக்கு வெளியாட்களின் தேவை மமகவுக்கு இருக்காது. "தேர்தலில் போட்டியிட மாட்டோம்" என்று சொல்லிவந்த தமுமுக தற்போது அரசியல் சாக்கடையில் இறங்கிவிட்டதாக முன்னாள் சகாக்களின் 'இனிய' பிரச்சாரம் நடக்கலாம்.

போதாதென்று இந்திய தேசிய மக்கள் கட்சியும் பத்து இடங்களில் போட்டி இடப்போவதாகச் சொல்லி வருகிறார்கள். (சட்டமன்றத் தேர்தலுக்கே இ.தே.ம.க.வுக்குப் பத்து தொகுதிகள் அதிகம்!;-) முஸ்லிம்லீக்,மனிதநேய மக்கள் கட்சி,இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் குறிவைத்துள்ள தொகுதிகளில் வேலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகியவை உள்ளன.எதிரெதிர் கூட்டனியாக அல்லது தனித்து நின்றால் வேலூரில் முஸ்லிம் வேட்பாளரை எதிர்த்து இன்னொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் நிலை ஏற்படும்.(உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணா!)

இருபத்தேழு லட்சம் (8%) வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தேமுதிகவை விட, தமிழக முஸ்லிம்கள் சற்று அதிகமாகவே உள்ளனர். அரசுப்பூர்வமற்ற புள்ளிவிபரப்படி 13-15 சதவீதம் அல்லது ஒருகோடிக்கும் மேலாக தமிழக முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் பிரிந்து நின்று பிறகட்சிக் கூட்டணிக்கு ஏங்கி,பரஸ்பரம் எதிர்த்து நிற்பதை விடுத்து, தமிழகத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஓரணியாக தனித்துப் போட்டியிடலாம்.

தமிழகத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் ஜாதிவாரி வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களையே தொகுதிக்கேற்ப நிறுத்துகின்றனர். எந்தக் கட்சியில் இருந்தாலும் தன்ஜாதிக்காரர்களுக்குக் குரல்கொடுக்கும் சட்ட/நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியாகக் கிடைக்கிறார். தேர்தலில் வெற்றி பெறும்வரைதான் கட்சிக்காரர் வென்றபிறகு அந்தந்த ஜாதிக்காரராகவே நமது உறுப்பினர்கள் இருக்கிறார்கள்! இலட்சங்களாகப் பிரிந்துள்ள ஜாதிக்காரர்கள் தங்களுக்கென உறுப்பினரை பெறும்போது ஒருகோடிக்கும் அதிகமுள்ள முஸ்லிம்கள் ஓரணியில் நின்றால் அவர்களைவிட அதிகமாகவே உறுப்பினர்களைப்பெற முடியும்!

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் 40-60 தொகுதிகள் 80,000க்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டுள்ளன. இவற்றில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் மட்டும் 20-30 தொகுதிகள் தேறும்! பெரும்பாலான தேர்தலில் 20,000-30,000 வாக்காளர்களே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள். சென்ற சட்டசபைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு புதிதாகப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் அதிமுகவின் 8000-15000 வாக்குகளைப் பிரித்ததே காரணமென்பதை நினைவில் கொண்டால் வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஓரணியில் நின்று வெற்றி/தோல்வியை நிர்ணயிக்க முடியும்!

எந்தக் கட்சியுடனும் கூட்டணியின்றி தனித்து நின்றாலும் 1-2 தொகுதிகளில் கொஞ்சம் சிரத்தை எடுத்து, திட்டமிட்டுத் தேர்தல் களப்பணியாற்றினால் முஸ்லிம்கள் வெல்லக் கூடிய சூழல் உள்ளது. தோற்றாலும் இவர்களுக்கு இழப்பில்லை. திமுக-அதிமுக யார் வென்றாலும் எதிரணியின் தோல்விக்கு முஸ்லிம்களே காரணம் என்பதை இணைந்து நின்று உணர்த்தினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்தத் தேர்தலிகளில் முஸ்லிம்கள் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்து இருப்பார்கள்!

ஒற்றுமையாக ஓரணியில் நிற்க மற்றவர்களுக்கு இருக்கும் காரணங்களை விட 'முஸ்லிம்' என்ற காரணமே போதும்.முஸ்லிம் பெரும்பான்மையுள்ள அல்லது வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கத் தேவையான வாக்குகளைக் கொண்ட தொகுதிகளில் எந்தக் கட்சியும் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் கட்சியினரின் ஒட்டுக்களுடன் முஸ்லிம்களின் ஓட்டுக்களும் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும்.முஸ்லிம்களிடம் ஜாதிவாரி பிரிவினை இல்லையென்பதால் எந்தக்கட்சியின் வெற்றிக்கும் முஸ்லிம்கள் ஓட்டு அவசியமாகிறது. இதை அனைத்து அரசியல்கட்சிகளுமே உணர்ந்துள்ளன.

"இருவர் பிணங்கிக் கொள்ளும்போது அவர்களைச் சமாதானப் படுத்துபவரே சிறந்தவர்" என்ற ஒற்றுமை முழக்கம் முஸ்லிம்களைவிட வேறுயாருக்குப் பொருந்தும்? அல்லாஹ் அக்பர் என்றதும் ஓரணியாக தொழுகையில் நிற்க முடியும்போது உரிமைகளை வென்றெடுப்பதற்கும் ஓரணியில் நிற்கலாமே!

"வேதமாகிய அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையாகப் பற்றிப்பிடியுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்...." (திருக்குர்ஆன் 003:103)


- நல்லடியார்!

Tuesday, March 3, 2009

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி

மனித நேய மக்கள் கட்சி 6தொகுதிகளில் போட்டி
த மு மு க மாநில தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவிப்பு



கோவை-மார்ச்-3
மனித நேய மக்கள் கட்சி வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் தனித்துப் போட்டியிடும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர்அலி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், பொருளாளர் ஹாரூண் ரஷீத் ஆகியோர் இன்று கோவையில் நிருபர்களிடம் கூறினார்கள்.

மனித நேய மக்கள் கட்சி பிப்ரவரி 7ம் தேதி துவங்கப்பட்டது. முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக் கட்சியாக இருந்தாலும், த.மு.மு.க.வின் முழுக் கட்டுபாட்டில் இயங்கும். மனித நேய மக்கள் கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பதற்காக தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக தஞ்சை, மதுரை, மண்டலங்களில் கலந்தாய்வு முடிந்து விட்டது. இன்று கோவையில் நடைபெற்றது. நாளை சென்னை மண்டலத்தில் கலந்தாய்வு நடைபெறும். இன்னும் ஓரிரு நாட்களில் 32 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சை, திருநெல்வேலி அல்லது தென்காசி தனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். ஏதேனும் அரசியல் கட்சிகள் சிறுபான்மை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக எழுத்துப் பூர்வமாக வாக்குறுதி அளித்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி நிலவரம் மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம் மோதல் சம்பவம் துர்பாக்கியமான செயல். அப்பாவி மக்கள், காவல்துறையையும், நீதித்துறையையும் நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்களே பகிங்கரமாக மோதிக் கொள்வது வேதனையானது. மருத்துவனை நோயாளிக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் மறுத்தது போல் இச்செயல்கள் உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராணுவ நடவடிக்கையின் மூலம், இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. இவ்வாறாகக் கூறினார்கள். இந்த பேட்டியின் போது மாநிலச் செயலாளர், கோவை உம்மர், மாவட்டத் தலைவர் பஷீர், மாவட்டச் செயலாளர் அமீர், மாவட்ட பொருளாளர் கபீர் ஆகியோர் உடனிருந்தார்கள். பின்னர், த.மு.மு.க. மர்க்கஸில் இன்று பகல் 12.00 மணியளவில் மனித நேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டலச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுவில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை நியமித்தல் சம்பந்தமாக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தார்கள்.

செய்தி.புகைப்படம்: கோவை தங்கப்பா