.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, May 10, 2009

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்கீரன் இதழுக்கு அளித்த நேர்காணல்.

பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்கீரன் இதழுக்கு அளித்த நேர்காணல்.

ன்றைய தமிழக அரசியலில் வெகுஜன மக்களின் உணர்வு களை பிரதிபலிப்பதாக இல்லை. அதனால் தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை உருவாக்கவே “மனிதநேய மக்கள் கட்சி’ தோற்று விக்கப்பட்டிருக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக 1995-ல் துவக்கப்பட்ட த.மு.மு.க.வின் அர சியல் பிரிவாக “மனிதநேய மக்கள் கட்சி’யை உ
ருவாக்கியிருக்கிறோம்.

த.மு.மு.க.வின் முழு முகவரி முஸ்லிம் சமூகத்திற்கானது என் றாலும் ம.ம.க.வை அப்படி நீங்கள் பார்க்கக்கூடாது. ம.ம.க.வை முஸ் லிம்களுக்காக மட்டுமல்ல… சிறுபான்மை யினர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள், பிற் படுத்தப்பட்டவர்கள், பழங்குடியினர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என அனைத்து சமூக மக்களுக்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் கட்சியாக வார்த்தெடுக்கவிருக்கிறோம். அதனால்தான் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது பொறுப்புகளிலும் அனைத்து சமூக மக்களையும் கொண்டு வந்திருக்கிறோம். அந்த வகையில், முஸ்லிம்களின் பின்னணியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருந்தாலும் அனைத்து மக்களுக்கான அரசியல்தளமாக ம.ம.க.வை விரிவுபடுத்துவதே முதல் நோக்கம்.

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் அரசியல் என்பது பெரியவர் காயிதே மில்லத் அவர்களின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சார்ந்ததாகவே இருந்தது. பின்னாளில் தேசிய லீக் கட்சியையும் சார்ந்ததாக மாறிப்போனது. இதற்கு நிறைய காரணங்கள் உண்டு.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்கிற முயற்சி எடுத்தவர் காயிதே மில்லத். இதற்காக 1967 சட்டமன்றத் தேர்தலின்போது பிராமண எதிர்ப்பாளராக இருந்த பேரறிஞர் அண்ணாவையும் பிராமணரான ராஜாஜியையும் ஓர் அணியில் கொண்டுவர மிகப்பெரிய கிரியா வூக்கியாக இருந்தவர் காயிதேமில்லத். இந்த அணி வெற்றிபெற தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள்.

இந்த வலிமைக்கேற்ப தி.மு.க. அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது. அதன்பிறகு, முஸ்லிம் சமூகத்தின் மீது திராவிட கட்சிகள் சவாரி செய்வதில்தான் அக்கறை காட்டியதே தவிர முஸ்லிம் மக்களுக்கா அரசியல் அதிகாரத்தை தருவதற்கு விரும்பவில்லை. அதே மாதிரி திராவிட கட்சிகளின் இந்த கொள்கைக்கு ஆட்பட்டதுபோல முஸ்லிம் சமூக தலைவர் களும்கூட ஒரு சார்பு அரசியலையே தூக்கிப்பிடித்தனர். இதில் சுகம் கண்டன திராவிட கட்சிகள். இந்த சுகத்தினை இழந்துவிடாமல் இருக்க முஸ்லிம் கட்சி களை பலகீனப்படுத்துவதில் முனைப்பு காட்டின. காயிதேமில்லத் மறைவிற்குப் பிறகு திராவிட கட்சிகளுக்கு நல்ல பலனும் கிடைத்தது.

ஆம்… தனி சின்னத்தில் நின்று தனது அடையாளத்தை இழந்துவிடாமல் பாது காத்து வந்த முஸ்லிம் லீக், திராவிட கட்சிகளின் சின்னங்களில் நின்று வெற்றிபெற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு வந்தது. அதேசமயம், 10-க்கும் குறையாத சீட்டுகளை பெற்றுவந்த முஸ்லிம் கட்சிகள், 1 சீட் பெறுவதே தங்களுக்கான லட்சியம் என்பதுபோல தேய்ந்துவிட்டன. இதனால், அரசியலில் தங்களின் சுய முகவரியை இழக்க நேரிட்டது. அந்த சுய முகவரியை இன்றளவும் திராவிட கட்சிகளிடமிருந்து முஸ்லிம் கட்சிகளால் மீட்க முடியவில்லை. இதனால், வலிமையான சட்டங்களை இயற்ற வைக்கும் ஆற்றலையும் இழந்து நின்றது முஸ்லிம் சமூகம். உதாரணமாக… கடந்த காலங்களில் லீக்கிற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை எப்போதோ பெற்றிருக்க முடியும். 1976-லேயே இந்த தனி இடஒதுக்கீட்டை கேரளாவில் பெற்றது லீக். காரணம் அங்கு தங்களின் தனித்தன்மையை இழக்காமல் தக்கவைத்துக் கொண்டதுதான். தனிச்சின்னத்தில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாகவும் லீக் அங்கு இருப்பதால்தான் இதனை சாதிக்க முடிந்தது.


ஆனால், தமிழகத்தில்…? திராவிட கட்சிகளைச் சார்ந் தே நிற்கவேண்டிய சூழலை ஏற்றுக்கொண்டதால் வலிமையை இழந்தனர். கோரிக் கைகளையும் வலிமை யாக வலியுறுத்த முடியவில்லை. இந்தச் சூழலில்தான் 1995-ல் த.மு. மு.க.வை உருவாக்கினோம். மக்கள் சக்தியை ஒருமுகப்படுத்தினோம். எங்களின் ஆரோக் கியமான கொள்கை வழித்தடங்களை ஏற்று முழுமையாக எங்கள் பக்கம் திரண்டனர் மக்கள். இடஒதுக்கீடு கோரிக்கைக்காக மத்திய-மாநில அரசுகளை கண்டித்து தொடர் மாநாடுகள், போராட்டங்கள், சாலை மறியல்கள், சிறை நிரப்பும் போராட்டங்கள் என த.மு.மு.க.வின் சமூகப்பணி வலிமை அடைந்தது.

இந்த வலிமையைக் கண்டு பிரதான தமிழக அரசியல் கட்சிகள் உற்று நோக்கின. தி.மு.க. அரசுக்கு ஆதரவு தரவேண்டுமானால் கோரிக்கை பற்றிய கெடு விதித்தோம். த.மு.மு.க.வின் சக்தியை உணர்ந்து முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தர முன்வந்து அறிவித்தார் கலைஞர்.

த.மு.மு.க. துவக்கப்பட்ட இந்த 14 வருடத்தில், முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீட்டிற்காக போராடியதுபோல, சமூக மக்களின் அனைத்துப் பிரச்சனை களுக்காகவும் போராடியிருக்கிறோம். இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் நாங்கள் பெற முடிந் திருக்கிறது.

இந்த வலிமையைக் கொண்டுதான் முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது, அனைத் துத் தரப்பு மக்களின் அரசியல் அதி காரங்களையும் வென்றெடுப்பதற்காக தேர்தல் அரசியலில் இறங்கியுள்ளோம். அரசியல்தளத்தில் நாங்கள் எதை சாதித்தோம் என கேட்டால் இரண்டு மாதமே ஆன கட்சியால் (ம.ம.க.) எந்த பதிலும் கூற முடியாது. ஆனால், எங்கள் கட்சியின் இன்றைய உறுப்பினர்கள் 1995 முதல் மக்கள் சேவையாற்றி வருபவர்கள் என்பதை மறந்துவிட க்கூடாது.

2004 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணி 40 இடங்களில் வெற்றிபெற த.மு.மு.க.வின் பங்களிப்பு மிகப்பெரியது. அதேபோல 2006 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. அணியும் அ.தி.மு.க. அணியும் சம அளவில் மோதின. ஏராளமான தொகுதிகளில் தி.மு.க. அணி வெற்றிபெற முடிந்ததற்கு எங்கள் கட்சியின் இன் றைய உறுப்பினர்கள் போர்க்கால உழைப்பு தான் காரணம் என்பதை ஊர் அறியும். அது கோபால புரத்துக்கும் புரியும்.

சிறுபான்மையினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு எட்டாக்கனியாய் இருந்த போது, அடுக்கடுக்கான போராட்ட வடிவங்கள் மூலம் அதை தமிழகத்தில் சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

சுனாமிப் பேரலை தமிழகத்தைத் தாக்கியபோது, எமது கட்சியின் இன்றைய உறுப்பினர்கள்தான் மனித நேயத்தோடு சேவையாற்றினார்கள். அதிகாரிகள் யோசித்தபோதும் அழுகிய உடல்களைத் தூக்க ராணுவம் யோசித்தபோதும் எமது உறுப்பினர்கள்தான் பிணங்களை, சாதி மத பேதமின்றி மார்பில் அணைத்து தூக்கி அடக்கம் செய்தனர்.

தமிழகத்தில் எமது உறுப்பினர்கள்தான் அதிகமான அளவில் ரத்ததான சேவைகளை அன்றாடம் வழங்குகிறார்கள். அனைத்துத்தரப்பு மக்களுக்காக, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தமிழகம் முழுவதும் நடத்திவருவது நாங்கள் மட்டுமே! இப்படி மக்கள் நலன் சார்ந்த பணிகளை நிறைய பட்டியலிட முடியும்.

மக்கள்நல சேவையில் ம.ம.க.வினரின் பங்களிப்பு அதிகம் இருப்பினும் ம.ம.க.வின் வலிமை என்பது முஸ்லிம் சமூகத்தின் “வோட் பேங்க்’கை வைத்துதான் இருக்கிறது. அந்த வகையில், தமிழக மக்கள் தொகையில் 80 லட்சம் பேர் முஸ்லிம்கள். மத்திய சென்னை, மயிலாடுதுறை, வேலூர், ராமநாதபுரம், திருச்சி, பொள்ளாச்சி, தஞ்சை, அரக்கோணம், ஆரணி, தென்காசி ஆகிய 10 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்கள் நாங்கள்தான். முஸ்லிம் மக்களின் ஆதரவு 99 சதவீதம் எங்கள் பக்கம் இருப்பதை உணர்ந்துதான் குட்டி குட்டி முஸ்லிம் அமைப்புகளையெல்லாம்கூட தங்களுக்கு ஆதரவு தரச்சொல்லி அறிவாலயம் இழுத்துக்கொண்டு வருகிறது.

முதலில் 23 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த ஜெயலலிதாகூட, மத்திய சென்னையில் ம.ம.க. வேட்பாளராக ஹைதர்அலி போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டதும் முஸ்லிம் சமூக ஆதரவு நமக்கு கிடைக்காமல் போய்விடுமே என்ற அச்சத்தில் வேட் பாளரையே மாற்றினார். இவையெல்லாமே ம.ம.க.வுக்கு ஆதரவான மனநிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார் கள் என்பதற்கான எடுத்துக் காட்டுகள்.

ம.ம.க.வின் அரசியல் பணிகளில்

தனிநபர் துதி பாடல் களும் கட்அவுட் கலாச்சாரங்களும் மலிந்து கிடக்கும் தமிழக அரசியலில் மாற்று அரசியலை முன்னிறுத்துவது முதன்மையான பணி. தலைவர்களை வளைய வந்தால் பதவிகள் கிடைக்கும், பணத்தை அள்ளி வீசினால் வேட் பாளராகிவிடலாம் என்பது இன்றைய அரசியலின் சாபக்கேடு. எல்லா தொண்டர்களும் தலைவர்கள், தலை வர்கள் எல்லாம் தொண்டர்கள் என்ற சமத்துவத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

இன்றைய ஆடம்பர அரசியல் ஏழைகளை, ஏழ்மையில் வாடும் அறிவுஜீவிகளை ஒதுக்கி வைத் திருக்கிறது. அரசியல் பாரம்பரியம், மீடியா வெளிச்சம், பணபலம், ஜால்ரா கொள்கை இவற்றில் ஏதாவது ஒரு தகுதி இருப்பவர்கள்தான் அரசியலில் மேன்மையடைய முடியும் என்ற சூழல் வளர்ந்திருக்கிறது. அதைத் தகர்க்கும் பணியை தொடங்கியிருக்கிறோம். பேச்சாற்றல், எழுத்தாற்றல், நிர்வாக அறிவு, களப்பணி ஆர்வம்கொண்ட சாமானியர்களும் அரசியலில் உயர் பொறுப்புகள் பெறும் வகையில் எங்களது அரசியலை அமைத்திருக் கிறோம்.

கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சியே செலவு செய்யும் என்பதை கொள்கையாக அறிவித்து அதனை அமல்படுத்தியிருப்பதும் நாங்கள்தான்.

இத்தகைய சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தான் எம்மை வெகு மக்கள் இயக்கமாக, எளிய மக்களின் தாய்வீடாக மாற்றியிருக்கிறது. ஆக வெகுமக்களின் உணர்வுகளையே பிரதிபலிக்கும் அரசியல் இயக்கமாக மாற்று அரசியலை முன்னிறுத்தி முதல் அடியை இந்தத் தேர்தல் மூலம் எடுத்து வைத்திருக்கிறோம். ஆரோக்கியமான அரசியலை வென்றெடுப்பதில் நிச்சயம் சாதிப்போம். தேர்தலின் முடிவுகள் மூலம் எமது மக்கள் இதனை நிரூபிப் பார்கள்.

நன்றி:

29 April 2009

No comments: