.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, March 24, 2010

கல்கி ஆசிரமத்தில் போதையாட்டக் காட்சிகள் -அதிர்ச்சி வீடியோ!

பக்தியின் பெயரால் மக்களை மாக்களாக மாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரமப் போலிச்சாமியார்களின் வரிசையில், கல்கி பகவான் என்ற பெயரில் விஜயகுமார் என்ற கல்கி விஜயகுமாரும் அவரின் மனைவியும் இணைகிறார்கள். அவர்கள் நடத்தும் ஆசிரமத்தில் ஆண்களும் பெண்களும் போதையில் பைத்தியங்களைப் போன்று நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 1

சமீபத்தில் சினிமா நடிகை ரஞ்சிதாவுடன் போலிச் சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுப் போலிச் சாமியார்களின் லீலைகளை வெளிச்சமிட்ட சன் தொலைக்காட்சியே இந்த ஒரு மணி நேரம் அடங்கிய வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 2

"நிஜம்" என்ற தன்னுடைய நிகழ்ச்சி ஒன்றில் கல்கி ஆசிரமத்தினுள் பக்தியின் பெயரால் நடக்கும் போதையாட்டத்தைத் தத்ரூபமாக சன் தொலைக்காட்சி படம்பிடித்து வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் ஆண்களும் பெண்களும் போதை பொருள் உட்கொண்டவர்களைப் போன்று சிரித்தும் அழுதும் தரையில் கிடந்து அழுது புரண்டும் நிர்வாணமாகவும் போதையாட்டம் போடும் காட்சிகள், மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

Download:
FLVMP43GP
Download:
FLVMP43GP

பாகம் - 3

பக்தி, கடவுள் நம்பிக்கை ஆகிய சாதாரண மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை முதலெடுக்கும் இத்தகைய போலிச் சாமியார்களின் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Tuesday, March 23, 2010

மன்னிப்பு கேட்டது முத்தாரம் வார இதழ்!

முத்தாரம் வார இதழில் (29.03.2010) நபிகள் நாயகம் போல ஒருவரை கார்டூன் வரைந்து கட்டுரை வெளியிட்டது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேற்கண்ட சம்பவத்தையொட்டி தமுமுக சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் சீனிமுகம்மது, ம.ம.க செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து நபி (ஸல்) அவர்களின் கார்டூன் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் மார்ச் 22 அன்று மதியம் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி ஆசிரியரை தொடர்பு கொண்டு சமுதாயத்தின் கண்டனத்தை தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் தங்களது தவரை ஏற்று வருத்தம் தெரிவித்து முத்தாரம் த.மு.மு.கவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியது.

Monday, March 22, 2010

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா


நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது - அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் - சில ‘லெட்டர் பேட்’ (தாவுத் மியன், கமுதி பஷீர்) அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா.அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது..

கூட்டம் தொடங்கிய பிறகுதான் ஜனாப் எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ‘நாரே தக்பிர்’ முழங்க வைத்தது.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி - சிலரின் முகம் சுழித்தது.

திருமாவின் உரை - வழக்கம் போல ’கனீரென்று’ தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது. மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.
மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ’மகர்’ சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ‘தாழ்த்தப்பட்ட’ மக்கள் இன்னும் ‘வர்னாசிரம’ பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
தோழமையுடன்,
(பிறைநதிபுரத்தான்)

நன்றி:பிறைநதிபுரத்தான்.

காலாவதியான மருந்துகளை சந்தைகளில் விற்று கோ‍டிகளை சுருட்டும் சமூக விரோத கும்பல்!

பொது மக்களே விழித்திருங்கள்!போலி மருந்துகள் காலாவதியான மருந்துகளை சந்தைகளில் விற்று கோ‍டிகளை சுருட்டும் சமூக விரோத கும்பலை காவல் துறை கைது செய்துள்ளது!

போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் அதற்கு மூளையாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு.


போலி மருந்து தயாரிப்பாளர்கள் காலாவதியான மருந்துகள் விற்பனையாளர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, அல்லது மருந்து பற்றி சந்தேகம் வந்தால் 044 - 24338421 என்ற எண்ணில் தகவல் கூறலாம் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சென்னை நூறடி ரோட்டில் உள்ள ஒரு பெரிய மருந்து வினியோகிக்கும் நிறுவனத்தினர், காலாவதியான மருந்துகளை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் போட்டு விடுவார்கள். அந்த மருந்துகளை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ரவி, அவரது மனைவி சுதாராணி இருவரும் ஆட்கள் வைத்து சேகரித்து “தில்லுமுல்லு” செய்து வந்துள்ளனர்.
குப்பை கிடங்கில் போடப்படும் காலாவதியான மருந்துகளை சேகரிக்கும் ரவி, பிறகு அவற்றை புரசைவாக்கத்தில் உள்ள சஞ்சய்குமார் என்பவரது வீட்டுக்கு எடுத்துச் செல்வார். அங்கு மருந்துகளின் தேதிகள், விலைகள் மாற்றப்படும்.

காலாவதியான மருந்து அட்டைகள், பார்ப்பதற்கு புத்தம் புதுசு போல மாற்றப்பட்டு விடும். இந்த மோசடி முடிந்த பிறகு அந்த காலாவதியான மருந்துகளை மருத்துவ நிறுவனங்களில் விற்று விடுவார்கள்.

காலாவதியான மருந்து, மாத்திரைகளில் இப்படி மோசடி செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் மனித விரோத கொடூர செயலில் பல்வேறு கும்பல் ரகசியமாக இயங்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக காலாவதியான மருந்துகள் நடமாட்டம் அதிகரித்தது. இதை மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கண்டு பிடித்தது. அந்த நிறுவனம் போலிகளை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வடிவமைப்புடன் மருந்துகளை தயாரித்து வெளியிடும்.

உதாரணத்துக்கு கடந்த ஆண்டு ஒரு அட்டையில் 10 மாத்திரைகள் கொண்டதாக வெளியிட்டால், இந்த ஆண்டு 12 அல்லது 15 மாத்திரைகள் இருக்கும் வகையில் தயாரிக்கும்.
சமீபத்தில் இந்த நிறுவனம் ஒரு மருந்துக்கு ரூ. 35 விலை நிர்ணயம் செய்திருந்தது. இது தெரியாமல் காலாவதி மருந்து தயாரிப்பாளர்கள் ரூ. 30 என்று திருத்தி இருந்தனர்.

தங்கள் மருந்து பெயரில் போலி மருந்துகள் விற்பனையாவதாக மருந்துக் கட்டுப் பாட்டுத்துறையிடம் அந்த நிறுவனம் புகார் செய்தது. அதன் பேரில் சென்னையில் கடந்த சனிக்கிழமை தொடங்கி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கொட்டப்படும் காலாவதியான மருந்துகளை சேகரித்து விற்கும் சுதாராணி, கிடங்கில் பணிபுரிந்த கிருபாகரன், ராமகிருஷ்ணன், விஜயகுமார், கோவிந்தன், தர்மராஜன், ஜெகதாம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் காலாவதியான மருந்து புழக்கத்தில் விடப்பட்டிருப்பது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலி மருந்துகளை எப்படி கண்டு பிடிப்பது என்று மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆனால் மக்கள் பயப்பட தேவை இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. போலி மருந்து தயாரிப்பாளர்கள் குறித்து தகவல் தெரிந்தாலோ, அல்லது மருந்து பற்றி சந்தேகம் வந்தால் 044 - 24338421 என்ற எண்ணில் தகவல் கூறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து விற்பனை குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று தமிழகத்தில் போலி மருந்துகளை தயாரிப்பவர்கள் மற்றும் காலாவதியான மருந்துகளை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து, காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போலி மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்வதோடு, காலாவதியான மருந்துகளையும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் மருந்துக்கடைகளில், காவல்துறை மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூட்டு ஆய்வு செய்து இப்பிரச்சினையை அடியோடு களைய உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று துறை அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டார்.

மேலும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையை வலுவுள்ள துறையாகத் தரம் உயர்த்த வேண்டும் எனவும், பொது மக்களுக்கு மருந்துகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வண்ணம், மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அவ்வப்போது பொது மக்களுக்கு தேவையான எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

இது போன்ற குற்றச் செயல்களில் நேரடியாக ஈடுபடுபவர்கள் தவிர, மூளையாகச் செயல் படுபவர்களையும் மற்ற மாநிலங்களில் இருந்து இக்குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ், காவல் துறை தலைமை இயக்குனர் லத்திகாசரண், கூடுதல் காவல்துறை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் ராஜேந்திரன், மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, March 20, 2010

கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!

தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!!

நன்றி: ஜூவி

நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்!

பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்! அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள். சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

அரசியல் செல்வாக்கில் ஈரோடு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், ''விவசாயிகளுக்கு விதைப்புல தொடங்கி அறுவடை வரைக்கும் காசு நீட்டுறது கந்து வட்டிப் பேர்வழிங்க தான். இங்கே 'மைக்ரோ'ல ஆரம்பிச்சு 'மேக்ரோ' வரைக்கும் வட்டி பிசினஸ் சக்கைப்போடு போடுது. நாள் வட்டி, வார வட்டின்னு பல டைப். இதுல ஒரு தவணை கட்டத் தவறினாலே, வட்டி குட்டி போடும். விவசாயிகளுக்கு நிலத்தின் பேர்ல கந்து வட்டிக்கு பணம் தந்து, கட்டமுடியாம அபகரிச்சு பல நூறு ஏக்கருக்கு அதிபதியா மாறிய ஆசாமிகள் இங்கே ஏராளம். நிலத்தை பறிகொடுத்த விவசாயி, அதே நபர்கிட்ட அதே நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழைக்கிற கொடுமையும் நடந்துகிட்டிருக்குது. இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எக்கச்சக்கமா இருக்கிறதால எதுவும் பண்ண முடியல...'' என்றார்.

அபராத வட்டி.. செடி வேர் அடி..!

கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்!

ராத்திரி நேரம்... நடு வீட்டில்...

சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ரூவாய்க்கும் சேர்த்து வட்டி போட்டுருவாங்க. 1,000 ரூவா கடன் வாங்கியிருந்தா... மாசம் 3,000 ரூவா வட்டி மட்டுமே கட்டியாகணும். கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, கடன் கொடுத்த ஆளு பொழுது சாய்ஞ்சா கடைக்காரரோட வீட்டுக்குப்போய் நடு வீட்டுல சேரைப்போட்டு உட்கார்ந்துக்குவாரு. ராத்திரி 11 மணி வரைக்கும் உட்கார்ந்து இருந்துட்டு, கிளம்பி வந்துடுவாரு. கடைக்காரரு வீட்டுக்கு வர்றதுக்கே 10 மணியாகும். அப்படி இருக்கும்போது தெனமும் ஒரு ஆம்பளை வீட்டுக்கு வந்துட்டுப் போறதை பார்த்தா அக்கம்பக்கத்துல என்ன நினைப்பாங்க, சொல்லுங்க? இப்படி டார்ச்சர் செஞ்சு வசூலிக்கறது சகஜம்!'' என்றார் மார்க்கெட் கடைக்காரர் ஒருவர்.

''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர்.

கொள்ளை போகும் பொருட்கள்..!

கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும்கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம். ''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக் குறாங்க பாவப்பட்ட மக்கள். பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி.

தொடர்கதையாகும் கொடுமைகள்..!

கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்துட்டு கட்ட முடியாதவங்க வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்குவாங்க. மது பானங்களை கொண்டுவந்து வீட்டுலேயே வெச்சு குடிக்கிறது... வீட்டுல இருக்குற பொண்ணுங்களை தரக்குறைவா பேசுறதுன்னு நடக்குற அநியாயங்கள் எல்லாம் உச்சகட்டக் கொடுமை. இதனால, ராசிபுரத்துல தற்கொலை வரைக்கும் போய், காப்பாத்தப்பட்டவங்க பலர் இருக்காங்க. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகள்ல, விசைத்தறி ஓட்டும் குடும்பங்கள் நிறைய. அங்கெல்லாம் திருப்பிக் கட்ட முடியாதவங்க வீட்டுப் பொம்பளைங்களை பாலியல்ரீதியா துன்புறுத்தும் கொடுமைகளை இன்னும் தடுத்து நிறுத்தவே முடியல. கந்து வட்டி கொடூரர்களுக்கு போலீஸ்காரங்களே பக்கத்துணையா நிற்குறாங்க. ஏன்னா, அவங்களுக்கு மாசம் தவறாம மாமூல் கொடுத்துடுறாங்க...'' என்று வேதனைப்பட்டார்.

கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..!

''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும்நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்!

விஷச் செடி... மூலிகைச் செடி..!

மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண் டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம். அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி.

அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது!

நன்றி: ஜூவி

-- கே.ராஜாதிருவேங்கடம், எஸ்.ஷக்தி
படங்கள்: தி.விஜய், எம்.விஜயகுமார்

Wednesday, March 17, 2010

பேராசிரியர் மதமாற்றம்! அடுத்தது யார் அ.மார்க்ஸா?

பேராசிரியர் மதமாற்றம்

March 17, 2010 – 12:00 am

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட சுட்டியைப் பார்க்கவும். அடுத்தது யார் அ.மார்க்ஸா?

ஜடாயு

சைவத்தில் இருந்து இஸ்லாத்திற்கு… (மக்கள் உரிமைக்கு பெரியார் தாசன் அளித்த பேட்டி)

பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்

தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரும் பேராசிரியருமான முனைவர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். அவர் இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்று அறிவித்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார் தாசன். பெரியாhpன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் சிசுக் கொலைகள் குறித்த திரைப்படமான கருத்தம்மாவில் நடித்துள்ளார்.பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றவர்.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். கடந்த மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார். பெரியார் தாசன் தனது இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பத்தாண்டுகளாக தனது உள்ளத்தில் ஏற்பட்ட முடிவை இப்போது தான் நிறைவேற்ற முடிந்தது என்று பெரியார் தாசன் குறிப்பிட்டார்.

http://www.tmmk.in/index.php?option=com_content&view=article&id=426:periyardasan-convert-islam&catid=81:tamilnadu&Itemid=198

அன்புள்ள ஜடாயு,

தன் ஆன்மீக ஈடேற்றத்துக்காக ஒருவர் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலம். அது வரவேற்கத்தக்கது.

நான் பேரா. பெரியார்தாசன் அவர்களை நேரில் அறிவேன். இனிய எளிய மனிதர். இம்மானுவேல் கான்ட் மீது பிடிப்பும் பற்றும் கொண்டவர். என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷுக்கும் அவருக்கும் நெருக்கம் உன்டு. என்னுடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகோன்டிருக்கிறார். கான்ட் குறித்து அவரிடம் விவாதித்திருக்கிறேன்.

அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.

எந்த மதமும் தன்னளவில் மேம்பட்டதோ குறைவனதோ அல்ல. எனக்கு ஒரு வழி ஏற்புடையதாக இருக்கிறது. பிறிதொருவருக்கு அவரது இயல்புகளின் அடிப்படையில் இன்னொரு மதம் ஏற்புடையதாகிறது. ஒருவருக்கு கண்டிப்பான அப்பா தேவைப்படலாம். ஒருவருக்கு நல்லாசிரியனாக மட்டுமே இருக்கும் அப்பா தேவைபப்டலாம். ஒருவருக்கு பாசமே உருவான அப்பா தேவைப்படலாம்.

இஸ்லாம் உறுதியான் பதில்களைச் சொல்லி அறுதியான விசுவாசத்தை எதிர்பார்க்கும் மதம். அந்த விசுவாசமும் கட்டுப்பாடும் அப்துல்லா அவர்களுக்கு சாத்தியமாக்வேன்டுமென்றும், அது அவரை முழுமையும் நிறைவும் கொள்ளச் செய்யுமென்றும் நம்புகிறேன்.

என்னைப்பொறுத்தவரை பொதுவாக இப்படி ஒரு தெளிவான நிலைபாடுகளை இவர்கள் எடுக்கும்போது இவர்களைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இவர்களுக்கு இந்து மரபின் மீது உள்ள விமரிசனம் அது இஸ்லாமாக இல்லை என்பதே என்ற புரிதல் அனைத்தையும் எளிதாக்கிவிடுகிறது.

அப்துல்லா அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

ஜெ

Source: http://www.jeyamohan.in/?p=6795

Monday, March 15, 2010

அந்த சாமியார் அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..

அதை சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே..!

நித்திய ஆனந்த சுவாமிகளின் வீடியோ காட்சிகள் விஸ்வரூபம் எடுத்ததுமே அவருக்கு நெருக்கமான பிரபலங்களைப் பற்றிய விவாதங்களும் பெரிதாக வெடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக முற்போக்கு எண்ணம் கொண்டவரும் பெரியாரிஸ்ட்டுமான எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி! நித்யானந்தரின் புகழ் பாடும் பீரங்கியாக மாறி இணையதளங்களில் இவர் எழுதிக் குவித்ததும் இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் நாம் சாரு நிவேதிதாவிடம் பேசினோம். நேற்றைய பக்தர் - இன்றைய பித்தர் என்று அவர் கலந்துகட்டி அடித்த பதில்கள் செமயோ செம ரகம்!

''நித்யானந்தாவுடன் உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது? அவருடைய பெரிய விசிறியாக நீங்கள் மாறியது எப்படி?''

''அவர் எழுதிய 600 பக்கங்களுக்கும் மேலான ஆங்கிலப் புத்தகம் ஒண்ணு எனக்கு கிடைச்சது. அதை வாசிச்ச மாத்திரத்திலேயே நான் திகைச்சுப் போயிட்டேன். 35 வருஷ காலமாக எழுத்துலகத்தில இருக்கிறவன் நான். என்னை அந்த எழுத்துகள் உலுக்கிப் போட்டிடுச்சு. ஓஷோ, புத்தா போன்றவங்களோட கருத்துகளை எல்லாம் விஞ்சத்தக்க விஷயங்களை நித்யானந்தர் அந்தப் புத்தகத்தில சொல்லி இருந்தார். சாதாரண ஆட்கள் இத்தகைய கருத்துகளைச் சொல்ல வாய்ப்பே இல்லை. என்னோட மனசுல ஏற்பட்ட இந்த வியப்பை அப்படியே என்னோட இணையத்தில எழுதினேன். அதைப் பார்த்த நடிகை ராகசுதா என்னை போன்ல கான்டக்ட் பண்ணி, 'சுவாமியைப் பார்க்க வாங்களேன்...'னு கூப்பிட்டாங்க. பொண்ணுங்க கூப்பிட்டாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச் சிடுமில்ல... அதனால 'அவசியம் வரேன்'னு சொன்னேன்.

இந்த இடத்திலதான் நீங்க இன்னொரு ஆச்சர்யத்தைக் கேட்கணும்... அப்போ நான் புதுச்சேரியில இருந்து சென்னைக்கு வந்துக்கிட்டு இருந்தேன். எதிரில் நித்யானந்தா ஒரு ஜீப்ல போய்க்கிட்டு இருக்கார். என்னோட நண்பரும் அதைப் பார்த்தார். நான் உடனே ராகசுதாவுக்கு போன் பண்ணி, 'நான் நித்யானந்தரை ஜீப்ல பார்த்தேன்'னு சொன்னேன். உடனே அவங்க சிரிச்சுக்கிட்டே, 'அதான் சுவாமியோட மகிமை. சுவாமி இப்போ பெங்களூருல இருக்கார். அவர் எப்படி புதுச்சேரி ரூட்ல வந்திருக்க முடியும்!'னு சொன்னாங்க. நான் மெரண்டு போயிட்டேன். ஆதிசங்கரர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு விளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்!''

''நித்யானந்தர் மாய மந்திரம் செய்ததை எல்லாம் ஒரு பெரியாரிஸ்ட்டான நீங்கள் எப்படி நம்பினீர் கள்?''

''நான் யாரையும் அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும். என்னோட மனைவிக்கு கடுமையான கால் வலி. எத்தனையோ இடங்கள்ல காட்டியும் அவளோட கால் வலி தீரலை. ஆனா நித்யானந்தர் அவளோட காலை ஒரு தடவை தான் தொட்டார். அடுத்த நிமிஷமே அவளோட வலி சரியாகிடிச்சு. இதே மாதிரி எத்தனையோபேரோட வியாதிகளை அவர் குணப்படுத்தியதை என் கண்ணால பார்த்திருக்கேன். தன் மனைவியை வியாதியிலேர்ந்து மீட்டதுக்காக ஒரு மூத்த நடிகர் நித்யானந்தரோட கால்களை கட்டிப் பிடிச்சு அழுதார். இது மட்டுமில்லை... ரெண்டாயிரம் பக்கங்கள் கொண்ட 300 புத்தகங்களை நித்யானந்தர் எழுதி இருக்கார். அத்தனையும் ஞானத்தை கரைச்சு குடிச்ச எழுத்துகள். அதோட உலகத்திலேயே மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தில இருக்கிற ஒரு லட்சம் சுலோகங்களையும் அட்சரம் பிசகாமல் சொல்றவர் அவர். பர்ட்டிக்குலரா எந்த சுலோகத்தை குறிப்பிட்டுக் கேட்டாலும் டாண்ணு சொல்லுவார். 32 வயசுக்குள்ள இதெல்லாம் சாத்தியமே இல்லாததுதானே... அந்தளவுக்கு சக்தி படைச்சவன் (இதுவரை 'ர்' போட்டவர் சற்றே கோபமாகி 'ன்'னுக்குத் தாவியதை என்னவென்று சொல்ல!) வயாக்ரா மாத்திரையைப் போட்டுகிட்டு அசிங்கமான காரியங்கள் செய்வதை எங்கே போய்ச் சொல்றது? உனக்கிருக்கிற அசாத்திய சக்தியை நடிகைகிட்டே காண்பிக்கிறயே... நீயா சாமியாரு?''

''ரஞ்சிதாவை நீங்கள் நித்யானந்தரோடு பார்த்திருக் கிறீர்களா?''

''நடிகர் விஜய்யோட அம்மா ஷோபா, கோவை சரளா, நடிகர் அர்ஜுன் போன்றவர்கள் எல்லாம் சாமியாருக்கு பெரிய விசிறிங்க... ஏன் பாலிவுட் ஸ்டாரான விவேக் ஓபராய்கூட மாசத்துக்கு ஒரு தடவை சாமியாரை சுத்தி வந்திடுவார். இதோடு, பல முன்னாள் செக்ஸ் நடிகைகளையும் நான் சாமியாரோட பார்த்திருக்கேன். நைட் முழுக்க ஹோட்டல், பார்னு கூத்தடிக்கிற ஒரு கவர்ச்சி நடிகை ஆசிரமத்தில ஹீலிங் பயிற்சி பண்ணிக்கிட்டு இருப்பார். அதையெல்லாம் பார்க்குறப்பவே ஏதோ தப்புத்தண்டா நடக்குதுன்னு மனசுக்குள்ள தோணினச்சு. இருந்தாலும் நித்யானந்தாவோட எழுத்தும் பேச்சும் அபூர்வ சக்தியும் என்னைய நம்ப வெச்சிடிச்சு.''

''நித்யானந்தர் - ரஞ்சிதா சி.டி. காட்சிகள் உண்மை தானா?''

''அப்பட்டமான உண்மைதான். அந்தக் காட்சி களைப் பார்த்துப் பார்த்து நான் ரொம்பக் கடுப்பில இருக்கேன். 'ஏன் நீ பெரிய யோக்கியனா'ன்னு நீங்க கேட்கலாம். அவன் பண்ணக்கூடாத அந்தத் தப்பை நான் பண்ணலாம். ஏன்னா 'நானொரு உமனைசர்'னு பகிரங்கமாவே சொல்லி இருக்கேன். ஆனா நீ... பிரமச் சர்யத்தை போதிச்சிட்டு நடிகையோடு கும்மாளம் போடுறியே?

இந்த சாமியார்கள் விஷயத்தில எனக்கு ஒண்ணு மட்டும் விளங்கவே மாட் டேங்குது. செக்ஸுக்கும் ஆன்மிகத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரமம் தொடங்கினா யாரும் வெட்டவா போறாங்க? இந்த சாமியாரும் நிஜமான அந்த விஷயத்தை முதலி லேயே சொல்லிட்டு செஞ்சிருந்தா... இன்னிக்கு ரஞ்சி தாவோடு கொஞ்சிக் குலாவுறதை யாரும் தப்புன்னு சொல்ல முடியுமா?

அந்த சி.டி பதிவு இப்போ எடுக்கப்பட்டதே இல்லை. குறைஞ்சது நாலு வருஷத்துக்கு முன்னாலதான் அந்தக் காட்சி பதிவு பண்ணப்பட்டிருக்கு. இதுக்குப் பின்னால பெரிய அரசியலே ஒளிஞ்சிருக்கு. போன மாசம்கூட நான் ரஞ்சிதாவை சாமியாரோட பார்த்தேன். அதனால தான் இந்த உண்மையை இவ்வளவு அழுத்தமா சொல்றேன்.''

''நீங்கள் சாமியாரிடம் பணம் வாங்கிக் கொண்டு தான் புகழ் புராணம் பாடியதாகவும், இப்போது அதை மறைப்பதற்காக சாமியார் மீது வழக்குப் போடப் போவதாகவும் சொல்லப்படுகிறதே?''

''பணம் சம்பாரிக்கணும்னா நான் எப்படி வேணும் னாலும் சம்பாரிச்சிருப்பேன். எவ்வளவு வேணும்னாலும் சம்பாரிச்சிருப்பேன். சாமியைப் பார்க்க ஐயாயிரம், பாத பூஜை செய்ய 25 ஆயிரம்னு பல தடவை அவனுக்கு நான்தான் தண்டம் அழுதிருக்கேன். புத்தகத்தை மொழிபெயர்த்ததுக்கு அவன்தான் இன்னும் எனக்கு பாக்கி கொடுக்க வேண்டியிருக்கு. இதுக்கிடையில கும்ப மேளாவுக்கு போறதுக்காக என் மனைவி ஒரு லட்ச ரூபாயை அவன்கிட்ட கொடுத்திருக்கா. அதையெல்லாம் திருப்பித் தரச் சொல்லித்தான் அவன் மேல நான் வழக்குப் போடப் போறேன். மத்தபடி சில மாமா பயலுக கிளப்பிவிடுற கதைக்கெல்லாம் நான் கலங்க மாட்டேன்!''


- இரா.சரவணன்
நன்றி: ஜூவி

Sunday, March 14, 2010

பேரா. பெரியார் தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்!

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது...


நேர்காணல் தரும் பேராசிரியர்


நமது குழுவினருடன்...


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் இங்கு உள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10ஆண்டுகளாக இஸ்லாத்தை ஆய்வு செய்து வந்ததாகவும், அதன் பின்னரே இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் ‍கொண்டதாகவும் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு இஸ்லாமிய நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புனித உம்ராவை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்றுள்ளார் அதன் பின் மதினா செல்கிறார்.

14-03-2010 அன்று ஜித்தாவில் உள்ள செனையா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் "நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

பேரா.பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குறிப்பு:
நமது மக்கள் உரிமை வார இதழுக்காக பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் அளித்த சிறப்பு நேர்காணலின் தொகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது த.மு.மு.க இணையத்திலும் நமது வலைப்பூவிலும் காணொளியுடன் காணலாம்.

Sunday, March 7, 2010

பகலில் ஆன்மீகம்... இரவில் பெண்மீகம்!


த்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி லேட்டஸ்ட் பட்ஜெட்டை படித்த போது, ''பொதுமக்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகள், ஆதாயத்தோடோ வியாபார நோக்கத்தோடோ செயல்பட்டால், அவை வரிவிலக்கு சலுகைக்கு உட்பட்டு வராது.

அதேசமயம், பல அறக் கட்டளை அமைப்புகள், இந்த சட்டத்தை தளர்த்தி வரி விலக்கு கொடுக்குமாறு கேட்டு வருகின்றன. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 10 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் பெறும் அறக்கட்டளைகள் இனி வரிவிலக்கை பெறலாம்!'' என்று அறிவித்தார்.

இப்படி, மத்திய நிதி அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த மறுநாளே, அந்த பகீர் விஷயத்தை டெல்லி போலீஸார் வெளிச்சத்துக் கொண்டு வந்தனர். ஆன்மிகத்தின் பெயரில் ஆஸ்ரமம் உருவாக்கி வரிவிலக்கு பெற்ற ஒரு ஆள், விபசார இடைத்தரகராகவும் கொடிகட்டிப் பறந்த விவகாரம் அது..!

வெப்-சைட் மூலம் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், டெல்லி போலீஸார் கடந்த சில மாதங் களாகவே ஒரு கும்பலை கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் கடந்த 26-ம் தேதி சிக்கியது. அதில் சிக்கிய முக்கியப் புள்ளி டெல்லியில் ஆஸ்ரமம், சாய்பாபா கோயில் என்று நடத்திய தோடு, ஆன்மிகப் பிரசாரப் புள்ளியாக இருப்பதும் தெரிந்தது. அவன் பெயர் ஷிவ் முராத் திவிவேதி!

'விபசார சாமியார்' திவிவேதி பற்றி டெல்லி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

''திவிவேதி தன்னை 'இச்சாதாரி' சாது என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். இச்சாதாரி சாது என்றால், இவன் கழுத்தில் பாம்பு (விஷப்பல் பிடுக்கப்பட்டதுதான்..!) ஒன்று இருக்கும். பொதுவாக நாகதேவதை, மனிதனின் உருவம் எடுக்கும் என்றும் தன்னைக் கொன்றவரை பழி வாங்கும் என்றும் நிறைய சினிமா கதைகளை நம்பும் பொது ஜனங்களை ஈர்க்கவே கூடுதல் அட்ராக்ஷனாக தன் கழுத்தில் எப்போதும் பாம்பை வைத்துக்கொண்டான் இந்த ஷிவ் முராத் சாமியார். ஒருபக்கம் ஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர், சாது, ஆன்மிக குரு, பிரசாரகர், மெடிட்டேஷன், மருத்துவம் என மான் தோல் போர்த்திய புலியாக பகலில் ஆன்மிகத் தொண்டு செய்துவந்த இந்த சாமியார்... இரவுகளில் பல வி.ஐ.பி-க்களின் இச்சையைத் தணிக்கும் கேவலமான 'நெட்வொர்க்'கையும் நடத்தி வந்தான். அதுவும் நாடு முழுக்க நடத்தியிருக்கிறான் இந்த கில்லாடி வேஷதாரி...'' என்று முன்னோட்டம் தந்தவர்கள், சாமியாரின் பூர்வாசிரமத்தை சொல்லத் தொடங்கினார்கள்.

''32 வயதான ஷிவ் முராத் சாமியாருக்கு சொந்த ஊர், அலகாபாத் அருகில் இருக்கும் சித்ரகூட்! அயோத்தி யிலிருந்து வெளியேறிய ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் முதன் முதலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இந்த சித்ரகூட்தான். துளசிதாஸர் தனது 'ராம் சரித் மானஸ்' எழுதியதும் இந்த ஊரில்தான். இங்கிருந்து இப்படியரு அசிங்கம் பிடித்த ஆள் கிளம்பி வந்திருப்பது கொடுமைதான்.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஷிவ் முராத், டெல்லிக்கு வேலை தேடி வந்து 'பார்க் ராயல்' நட்சத்திர ஹோட்டலில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்திருக்கிறான். பின்னர் டெல்லி லாஜ்பத் நகரில் மசாஜ் வேலையை தொடர... அப்போதே அவனுக்கு விபசார புரோக்கர்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொழிலில் ஈடுபட்டபோது... 1997-ல் போலீஸில் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு சென்றான். அதன்பிறகு தன் தொழிலை மீண்டும் 1998-ல் தொடங்கி, இன்னும் இன்னும் ஹைடெக்காகப் போய்... 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதாகியுள்ளான்!

விபசாரத் தொழிலைத் தொய்வின்றியும் பயமின்றியும் தொடர இவன் போட்டுக்கொண்ட சாமர்த்தியமான திரைதான் ஆன்மிக வேஷம்! இந்த கபட சாமி இரவில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, இடைத்தரகர் அவதாரம் எடுப்பான். முன்னாள் விபசார புரோக்கர் என்றாலும், சாமியார் போர்வையில் காவி உடுத்தி, தாடியில் பிரசங் கம் செய்த இவனை பக்தர்களாகப் பார்க்க வந்த பல போலீஸ் அதிகாரிகளுக்கும் இவன் மீது சந்தேகம் வர வில்லை. கடந்த மூன்று மாதங்களாக இவன் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தொலைத் தொடர்புகள் மூலம் ரகசியமாக கண்காணித்து வந்தபோதுதான்... 'ஓ அவனா நீ!' என்று உஷாரானார்கள் போலீஸார்.

தனக்கு நன்றாக நம்பிக்கை வந்த பிறகுதான் குறிப்பிட்ட வாடிக்கையாளார்களுக்கு பெண்களை சப்ளை செய் வான் இந்த ஆ'சாமி'! அப்படி நம்பிக்கை பெற்ற ஒரு வாடிக்கையாளரை மிரட்டி தங்களுக்கு ஒத்துழைக்க வைத்த போலீஸார், தாங்களே நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி, புதிய வாடிக்கையாளராக நடித்து விபசாரத்துக்குப் பெண்களைக் கேட்டு... கையும் களவுமாக இவனைப் பிடித்தார்கள். அப்படி கைதானபோதும்கூட, கருமம் பிடித்த இந்த கும்பல் காவி நிற துணியால் முகத்தை மறைத்துக்கொண்டதுதான் கொடுமை!

இவனை போலீஸ் பிடித்தபோது ஐந்து இளம் பெண் களும் சிக்கினார்கள். இதில் விமானப் பணிப் பெண், டெல்லி பல்கலைக்கழகக் கல்லூரியில் நிர்வாக இயல் படிக்கும் பெண், சினிமா பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் பெண் என்று உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள்! சினிமா பயிற்சிக் கல்லூரிப் பெண், மும்பையைச் சேர்ந்த ஒரு சுங்க இலாகா அதிகாரியின் மகள் என்று 19 முதல் 22 வயசு பெண்கள்! இப்படி உயர் குடும்பத்துப் பெண்கள், பணத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் எப்படி இந்த பகீர் சாமியாரிடம் மடங்கினார்கள் என்பதுதான் பெரிய அதிர்ச்சி!'' என்றார்கள்.

போலீஸ் அதிகாரி பங்கஜ் சிங்கிடம் பேசினோம். ''இந்த போலி சாமி தன் வாடிக்கையாளர்களுக்கு விபசார பெண்களை தேடுவதற்கு வசதியான வழியாகத்தான் ஆன்மிகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான். அதை எல்லோ ரும் நம்புவதற்காக, முறைப்படி ஆன்மிக விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டதுதான் இவனுடைய கிரிமினல்தனத்தின் உச்சம்! மத்திய பிரதேசத்தில் ஒரு மடத்தில் சேர்ந்து ஆன்மிகத்தில் சில விஷயங் களைக் கற்றிருக்கிறான். அங்கே இரண்டு வருட பயிற்சிக்குப் பின்னர் தன்னை ஸ்ரீசாய்பாபா பக்தராகவும், அற்புத சக்திகள் கொண்ட அசாத்திய துறவியாகவும் காட்டிக் கொண்டு முழு வீச்சில் இறங்கிவிட்டான். இதன் விளைவாக, பக்தர்களின் எண்ணிக்கை கூடியது. பாபா கான்பூர், சுவாமி பீமானந்த் மகாராஜ், இச்சாதாரி சாது என்று ஏராளமான பட்டப் பெயர்களில் பக்தர்கள் சிலிர்த்துக்கொண்டு இவனைத் தேடி வந்தார்கள்.

டெல்லிக்குள் இருக்கும் கான்பூர் என்கிற பகுதியில் தான் ஆன்மிகத்துக்கான அஸ்திவாரத்தை போட்டான். அங்கே பக்தி மணம் கமழும் கோயிலை கட்டி, பெண்களை தன்னுடைய வலையில் சிக்க வைக்கத் தொடங்கினான். ஒன்பதாம் வகுப்பே படித்த இவன் சொற்பொழிவுகளில் பொளந்து கட்டினான். லட்சக் கணக்கான பக்தர்கள் வந்தனர். ஏக பத்தினி விரதனான ராமனின் அவதார கதைகளையும், பல ஆன்மிக கதை களையும் சொல்லி பிரமிக்க வைக்கும் ஸ்டைல்தான் இவனது ஸ்பெஷாலிட்டி..!'' என்று சொல்லி, சாமியார் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ சி.டி-யை நம்மிடம் கொடுத்தார். அதில் உள்ள சொற்பொழிவுக் காட்சிகளைப் பார்த்தால், சத்தியமாக இது டுபாகூர் ஆசாமி என்று சந்தேகமே வராது போலிருந்தது. தொடர்ந்து பேசிய போலீஸ் அதிகாரி பங்கஜ், ''பெரிய பெரிய துறவிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகளைப் போன்று, இவன் நடந்து வரும்போது மலர்களை தூவுவது, முற்றும் துறந்த முனிவர்களுக்கு இணையாக தனியான இருக்கையில் அமரவைப்பது, இவன் கழுத்தில் பாம்பு நெளிவதற்கான செட்-அப்களைச் செய்வது என்று ஊதியத்துக்கு நிறையவே அடியாட்கள் வைத்திருந்தான். அவர்களையே ராத்திரியில் பெண்கள் சப்ளைக்கு பாதுகாவலர்களாக வைத்துக்கொண்டானா என்றும் விசாரித்து வருகிறோம்.

மெடிட்டேஷன் பற்றி பகலில் இவன் எடுக்கும் வகுப்புகளுக்கு டெல்லியின் மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். தான் குறிவைக்கும் பெண்களை தானே நேரடியாக டீல் செய்திருக்கிறான். அவர்களைப் பேசிப் பேசி மயக்கி, பணத்தையும் விட்டெறிந்துதான் அந்தப் பெண்களின் கற்பை விலைக்கு வாங்கியிருக்கிறது இந்தத் திமிங்கிலம். வீட்டுப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விடுதி மாணவிகள், வேலை தேடும் பெண்கள், நடிப்பாசை, மாடலிங் ஆசை கொண்ட பெண்கள் என்று மட்டுமின்றி, உச்சகட்டமாக பள்ளிச் சிறுமிகள் வரை தனது தொழிலுக்கு வலை வீசியிருக்கிறான். தான் அனுப்பிய இடங்களுக்குப் போகும் பெண்களில் சிலருக்கு ஐயாயிரம் பத்தாயிரம் என்று பணம் கொடுத்திருக்கிறான். பெரிய இடத்துப் பெண்களுக்கு வேறு ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறான். அதெல்லாம் என்னவென்று விசாரித்து வருகிறோம். அதோடு, இவனிடம் வாடிக்கை யாளர்களாக இருந்தவர்களில் அதிகார சக்தி மிக்கவர்களும் உண்டா என்று விசாரித்து வருகிறோம்...'' என்றார். அரசு மையங்களில் பெரிய வேலைகளை முடிப்பதற்காக பெண்களை ஒரு கருவியாக இந்த ஏடாகூட சாமியார் பயன்படுத்தியதுண்டா என்பது போலீஸின் ஒரு சந்தேகம்.

லோக்கல் ஸ்டேஷன் போலீஸாருக்கு இந்த சாமியின் தில்லுமுல்லுகள் அரசல் புரசலாகத் தெரிந்தே இருந்தும் இத்தனை நாளாகக் கண்டு கொள்ளவில்லையாம். சிறப்பு போலீஸ் அதிகாரிகள்தான் கண்ணி வைத்து வளைத்தனர்.

''டெல்லியில் மட்டுமல்லாது, தனது சொந்த ஊருக்குப் பக்கத்தில் சம்ராவு என்ற கிராமத்திலும் அறக்கட்டளை தொடங்கி, ஆஸ்ரமம் கட்டி சாய்பாபா கோயிலையும் உருவாக்கினான் இந்த ஆள். அவற்றில் பணமும், நன்கொடைகளும் கொட்டியது. இதற்காக 'திவிவேதி டிரஸ்ட்' தொடங்கினான். மேலும் டெல்லியிலும் தனது சொந்த ஊரான சித்ரகூட்டிலும் ஏராளமான சொத்து களை வாங்கிக் குவித்திருக்கிறான். டெல்லியில் மூன்று இடங்களில் ஜம்மென்று பில்டிங், நிலம் எல்லாம் உள்ளது. சொந்த ஊரில் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டி வருகிறான். இவனது சகோதரர் ஒரு டாக்டர்... அவருக்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்டி யிருக்கிறான்'' என்று தகவல் சொல்லுகிறார்கள் போலீஸ் துறைக் குள்ளேயே!

சாமியாரின் சாய்பாபா கோயில் மூன்று மாடிக் கட்டடத்தில் உள்ளது. இதன் கீழ்ப்பகுதி யிலும் முதல் மாடியிலும் சாய்பாபாவின் சிலைகளும் பூஜைகளுக்கான பொருட்களும் இருக்கும். இதே கோயிலில் ஜம்மு வைஷ்ணவா தேவியின் குகைக்கோயில் அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளான். இவன் கைதான பிறகும் அந்தக் கோயிலில் தினமும் காலையிலும் மாலையிலும் ஆரத்திகள் நடக்கிறது. பக்தர்களும் வந்தபடிதான் இருக்கிறார்கள்..!

ஆஸ்ரமத்திலிருந்து ஏராள மான டைரிகளும் வங்கிக் கணக்குகளும் போலீஸாரின் சோதனையில் கிடைத்துள்ளது. இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களின் தொடர்புகளோடு கடந்த 10 வருட வங்கிக் கணக்கு களும் பிரமிக்கவைக்கும்படி உள்ளது. உள் நாட்டு முதலீடு தவிர, வெளிநாட்டுக்கும் இந்த சாமியார் பணம் அனுப்பிய தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது!

விசாரணையின்போது, ''எத்தனை நாள்தான் இந்தத் 'தொழி லையே' பார்ப்பது? நீங்கள் வந்து என்னைப் பிடிக்காவிட்டாலும் நானே எல்லாவற்றையும் ஏறக் கட்டிவச்சிட்டு, ஊரில் உள்ள ஆஸ்பத்திரியை கட்டி முடித்த கையோடு வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்தேன். அதற் குள் அவசரப்பட்டு(?) வளைத்து விட்டீர்கள்'' என்று சாமியாரின் திருவாய் மலர்ந்ததாம்! ''அரசு குடியிருப்பில் இடம் கேட்டு அவன வனும் அல்லாடிக் கொண்டிருக்க... டெல்லியில் மூன்று அரசாங்க வீடுகளை வாடகைக்கு எடுத்து, அங்கு 50 பெண்களை தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கான் இந்த சாமியார். இவனோடு தொடர்புடைய 200 விபசார பெண்களில், ரஷ்யாவை சேர்ந்த பெண்களும்கூட அடக்கம்! இந்த ஆள் கைதான அடுத்த நிமிடமே எல்லோரும் பறந்துவிட்டனர். இவனுக்கு டெல்லி தவிர மற்ற மெட்ரோ நகரங்களில் உள்ள நெட்வொர்க் பற்றி விசாரிக்கிறோம்'' என்று பிரமிப்போடு சொல்லும் போலீஸார், மூன்று கட்டடங்கள், இருபது ஏக்கர் நிலம், கடைகள், சொகுசு கார்கள், சி.டி. தயாரிக்கும் நிறுவனம், பத்திரிகை இதழ் அச்சகம் என்று சொத்துப் பட்டியலைச் சொல்லி வாய் பிளக்க வைக்கிறார்கள்.

இரண்டு பக்தி தொலைக் காட்சிகள் மேற்படியாரின் ஆன்மிக சொற்பொழிவுகளை 'பிரைம் டைமி'ல் தினந்தோறும் ஒளிபரப்பி வந்த காமெடியை என்ன சொல்ல! இதைவிட உச்ச கட்ட அநியாயமும் உண்டு. அதாவது, இந்த ஆளின் ஆன்மிக பக்தி சொற் பொழிவு டி.வி.டி-யில் இரண்டு மொபைல் எண்களும் வெப்சைட் விலாசமும் தரப்பட்டுள்ளது. இந்த மொபைல் எண்ணை 'கூகிள் சர்ச்'சில் போட்டுப் பார்த் தால்... இவர் நடத்தும் ராத்திரி நெட்வொர்க்கான 'ஜெய் மேத்தா' விபசார விளம்பர வெப்-சைட் வரும். இதில் வரிசையாக பெண்களின் ஆல்பமும் இருக்குமாம்!

காவியை வைத்தே ஜாலி பண்ணிக் கொண்டிருந்த இந்த நபரின் கைதுக்கு அரசியல் சாயம் கொடுக்கிற வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன! ''பெட்ரோல் டீசல் விலையையட்டி, எதிர்க்கட்சிகள் காட்டிவந்த எதிர்ப்புகளை கலகலக்க வைக்கவே இந்த போலி சாமியார் விவகாரத்தை இந்த நேரம் பார்த்து டெல்லியை ஆளும் அரசு கையில் எடுத்தது'' என்பதே அந்தப் பேச்சு.

''இந்த விவகாரத்தில் முன்னாள் பி.ஜே.பி. எம்.பி-க்கள் சிலரும், தற்போதைய சமாஜ்வாடி எம்.பி-க்கள் சிலரும்கூட சிக்கக் கூடும்'' என்று ஹேஷ்யம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தன்னை உலுக்கி எடுத்து விசாரிக்கும் போலீஸாரிடம், 'உடல் பசியைத் தீர்ப்பதும்கூட ஒருவகை ஆன்மிகம்தான். அதற்கு உதவுவது தவறில்லை'' என்று ஒரு தத்துவத்தை இந்த டுபாகூர் அவிழ்த்துவிட... விசாரணை போலீஸார் கொதித்துப் போய் மூலையில் தள்ளி மொக்கினார்களாம்!

!

ல அரசியல் பிரமுகர்களும் இவனது பகல் நேர ஆன்மிக சொற்பொழிவுக்கு அடிமை. ராஷ்டிரபதி பவனையட்டியுள்ள டெல்லி நார்த் பிளாக்கில் இவனது சொற்பொழிவு இரண்டு வருடம் முன்பு நடந்தது. இதை ஏற்பாடு செய்தவர்கள், பி.ஜே.பி-யைச் சேர்ந்த எம்.பி-க்கள். இதில் மறைந்த கிஷண்லால், விஜயகுமார் மல்ஹோத்ரா மற்றும் (கிரிக்கெட் வீரர்) கீர்த்தி ஆஸாத் போன்ற எம்.பி-க்களோடு... பி.ஜே.பி-யின் சில எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டு மெய்சிலிர்த்தார்களாம். சமாஜ்வாடி எம்.பி-யான ஆர்.கே.சிங் மற்றும் ஹரிஷ்குமார் என்கிற மாவட்ட கலெக்டர் ஒருவரும்கூட இவரது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களாம்!

டத்தைப் பார்த்தால், 'காஞ்சிபுரம் தேவநாத குருக் கள் விவகாரம் போலவோ' என்ற அலறல் எழுவது நியாயமே! ஆனால், இது கோவை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் மலையோர கிராமமான குப்பனூர் கோயில் திருவிழாவில், பலர் பார்க்க 'பாரம்பரிய தாசர்கள்' அரங்கேற்றும் பக்திக் காட்சி!

வருடந்தோறும் மாசி மகத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர், 'கவாள வீதியுலா' நடைபெறுவது வழக்கம். சாமியாடியபடி வீதியுலா வரும் பாரம்பரிய தாசர்கள், வாழைப்பழங்களை தங்களது வாயில் கவ்விக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் மண்டியிடுகிறார்கள் பெண் பக்தைகள். திடீரென ஆக்ரோஷமாக சாமியாடும் தாசர்கள், வாயில் கவ்வி வைத்திருக்கும் வாழைப்பழத்தை, அந்தப் பெண் பக்தைகளின் வாயில் திணிக் கிறார்கள். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நிற்கும் பொதுமக்கள், படபடவென கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி தாசர்களிடம் இருந்து பழம் பெறும் பெண்கள் பெரும்பாலும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களாம். இந்தப் பழப் பரிமாற்றத்துக்குப் பிறகு பலருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்த ஏரியாவாசிகள் சொல்கிறார்கள்!

6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் காரமடை அரங்கநாதர் கோயில் திருவிழாவிலும், இந்த கவாள வீதி உலா நடந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அங்கு கவாளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு, குப்பனூர் அளவில் சுருங்கிவிட்டது!

- அ.சுப்புராஜ்

- சரோஜ் கண்பத்

நன்றி: ஜூவி