.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, October 30, 2008

ஒட்டுனர்களைக் கொல்லும் மர்மக் கும்பல்!

ஒட்டுனர்களைக் கொல்லும் மர்மக் கும்பல்!



அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான்

http://tmmk.in/news/999607.htm

கடந்த 20.10.2008 அன்று மாலை 4.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி யில் வாடகைக் கார்கள் நிறுத்துமிடத்தில் செஞ்சியைச் சேர்ந்த முபாரக் என்ற இளைஞர் (வயது 22) டாட்டா சுமோ காரில் இருந்தார். அப்போது இருநபர்கள் அவரிடம் வந்தனர். தன்னை காவல் துறையைச் சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். இங்குள்ள டி.எஸ்.பி. யுடைய மகன் ஓடிவிட்டார். அவரைத் தேடி (அவர் இருக்கு மிடம் தெரிந்து விட்டது) கொண்டு வர வேண்டும். கார் வாடகைக்கு வருமா? என்று கேட்ட தோடு, தின வாடகை ரூ.800 என்றும் எரிபொருள் நாங்கள் நிரப்பித் தருகிறோம் என்றும் பேசி முடித்து அங்கிருந்து சுமார் மாலை 5 மணிக்கு காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அதுசமயம் ஓட்டுநர் முபாரக்கின் சகோதரர் சாஹித் என்பவரும் அங்கு இருந்திருக்கிறார். இவர்கள் புறப்பட்டுச் சென்றதையும் அவர் பார்த்தார். வண்டி புறப்பட்டு போய்க் கொண்டிருந்த வழியிலிருந்து தனது வீட்டிற்கும் வண்டி உரிமையாளருக்கும் தகவலைச் சொல்லி பலமுறை போன் செய்திருக்கிறார். இறுதியாக இரவு 7.30 மணிக்கு ஓட்டுநர் முபாரக் தனது உரிமையளாருக்கு போன் செய்து ஓடிப் போன பெண்ணை இரவு 3 மணிக்கு மேல்தான் கொண்டு வர முடியும் என்றும் அதுவரை வண்டியை வந்தவாசிக்கு அருகாமையில் நிறுத்தி வைப்போம் என்றும் சொல்கிறார்கள், எனது செல் போனில் சார்ஜ் இல்லை. அதனால் இந்த தகவலை தங்களுக்குச் சொல்கிறேன். நாளைதான் நான் வரமுடியும் என்றும் சொல்கிறார். இதற்குப் பிறகு தொடர்பு இல்லை.

இந்நிலையில் 22.10.2008 அன்று வந்தவாசிக்கு அருகில் உள்ள தாழப் பள்ளம் என்ற இடத்தில் கிணற்றுடன் சேர்ந்த குளம் உள்ளது. அந்தக் குளத்தில் ஓர் ஆண்பிணம் மிதப்பதாக வந்தவாசி நகர காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு காவல்துறை சென்று பிணத்தை கைப் பற்றி பரிசோதனை செய்யும் பொழுது இஸ்லாமியர்களின் உடல் அடையாளங் கள் கண்டு உடனடியாக காவல்துறை அதிகாரிகள் வந்தவாசி தமுமுக மாவட்ட துணைச் செயலளாருக்கும் நகர நிர்வாகி களுக்கும் தகவல் தந்ததையடுத்து அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். உடனடியாக அருகில் உள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவலைச் சொல்லி உங்கள் பகுதியில் யாரும் காணாமல் போய் இருக்கிறார்களா? என்று சொன்ன தின் பேரில் செஞ்சியில் உள்ள வாடகைக் கார் ஓட்டுநர் முபாரக் 20ம் தேதி போய்விட்டு 21ஆம் தேதி வரு வதாகச் சொன்னார். 22ஆம் தேதி வரை வரவில்லை என்ற கலக்கத்தில் அவர்கள் தேட தமுமுக செஞ்சி நகர நிர்வாகிகளால் இந்தத் தகவலை வெளியிட பதறியடித்துக் கொண்டு முபாரக்கின் பெற்றோர்கள் உறவினர்கள் தமுமுக நிர்வாகிகளை உதவிக்கு அழைத்துக் கொண்டு உட னடியாக வந்தவாசிக்கு விரைந்தனர். வந்தவாசி காவல்துறையால் கைப்பற்றப் பட்டு சவங்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த முபாரக்கின் சடலத்தைப் பார்த்த முபாரக் கின் உறவினர்கள் கதறி அழுதனர். தமுமுகவின் நகர நிர்வாகிகள் உறுப்பினர் கள் என பல நூறு பேர் ஒன்றாகத் திரண்டு முபாரக்கின் உடலைப் பெற்று உடலுடன் செஞ்சிக்குச் சென்று அடக்கம் செய்து நடந்த தகவலை தமுமுகவின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்களுக்கு தெரியப் படுத்தப்படுத்தினர். அதன் பின்னர் பொதுச் செயலாளர் அவர்கள் மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைத் அவர்களைத் தொடர்பு கொண்டு உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்று நிலைமையைக் கண்டறிய வேண்டுமென கேட்டுக் கொண்டதிற்கு இணங்க மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம். ஜுனைத், மக்கள் உரிமைச் செய்தியாளர் ஆகியோர் கடந்த 24.10.2008 அன்று காலை வந்தவாசி நகரத்துக்குச் சென்று காவல்துறை துணைக் கண்காணிப் பாளர், ஆய்வாளர் ஆகியோரை சந்தித்து காவல் துறை மேற்கொண்ட நட வடிக்கை தொடர்பாக கேட்டறிந்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு வந்தவாசி நகரத்தின் வாடகைக் கார் ஓட்டுநர் அன்சாரி என்பவரை இதேபோன்று காரை வாடகைக்குப் பேசி அழைத்துச் சென்று வந்தவாசிக்கு அருகில் உள்ள சாத்தனூர் சாலையில் கொலை செய்து விட்டு வண்டியை எடுத்துக் சென்று விட்டனர். இதேபோன்று அந்த சடலத்தையும் தண்ணீரில் மிதக்கவிட்டிருந்தனர். அந்தக் கொலையைச் செய்த நபர்கள் கடலூர் மாவட்டம் விருத்தாச் சலத்துக்கு அருகில் உள்ள கம்மா புரம் என்ற ஊரைச் சேர்ந்த வெங்கடரமணி என்பவனும் வந்த வாசிக்கு அருகில் உள்ள மருதாடு என்ற ஊரைச் சேர்ந்த முன்னாள் திமுக ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் என்பவரின் மகன் செந்தில் குமார் என்பவனும் மேற்கண்ட கொலைக்கான குற்றவாளிகள் இவர்கள் இருவர் மீதும் கொலைக் குற்ற வழக்கு நடத்தப்பட்டு கடந்த 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் தலா 22 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டு இரு கொலைக் குற்றவாளிகளும் உயர்நீதி மன்றத்தில் மேல்முறை யீடு செய்து தற்போது ஜாமீனில் வெளிவந்துள் ளனர். இதையறிந்த வந்தவாசி காவல்துறை அதிகாரி கள் இருவரையும் கொண்டு வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

குற்றவாளிகள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக வாக்கு மூலம் அளித்தனர். இந்நிலையில் 20ஆம் தேதி செஞ்சியில் கார் வாட கைக்கு எடுக்கும் போது உடனிருந்த கொலையான முபாரக்கின் சகோதரரை தமுமுக நிர்வாகிகளும் காவல்துறை யினரும் அழைத்து வந்து வேறொரு காவல் நிலையத்தில் இருந்த குற்றவாளி களைக் கொண்டு அடையாள அணி வகுப்பு நடத்தினார்கள். அவர் இவர்கள் அல்ல என்று சொல்லியதற்கு பிறகு வந்தவாசி நகர காவல் நிலையத்தில் நிறுத்தி முபாரக்கின் சகோதரரை வைத்து அடையாள அணிவகுப்பு நடத்தினார்கள்.

செஞ்சியில் அவர்களை நன்றாக பார்த்திருந்த காரணத்தால் கொடிய குற்ற மிழைத்த குற்றவாளிகள் இருவரையும் முபாரக்கின் சகோதரர் சாஹித் மிக இலகுவாக அடையாளம் காட்டினார். அத்துடன் மட்டும் இல்லாமல் இக்கொடிய வர்களைக் கண்டவுடன் “அடப்பாவி களா - என் தம்பியை எப்படிடா கொன்றீர்கள்?’’ எனக் கதறியது நெஞ்சை உலுக்குவதாக இருந்ததாக போலீஸார் கூறினர்.

இந்நிலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிள்ளைநாயகம் தமுமுக மாவட்டத் துணைச் செயலாளரிடம் அதே தேதியில் அவன் சிதம்பரத்தில் இருந்ததாக ஒரு தகவல் உண்டு என்றும் காவல்துறையின் செயல்வேகம் சற்று தொய்வு அடைவது போன்றும் தெரிவ தாக தமுமுக மாவட்ட நிர்வாகிகள் கூறக் கேட்டோம். இச்செய்திகளை மேற்கண்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதோடு உங்களுடைய செயல்பாடுகள் நீதிக்கு எதிராக இருக்கக்கூடாது என்றும் சட்டத்திற்கு முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் அவ்வாறு செய் யத் தவறினால் ஜனநாயக ரீதியாக சட்டத்தின் முன் நீங்கள் நிறுத்தப்படுவீர் கள் என்ற அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்தார். உடனடியாக கொலையான முபாரக்கின் இல்லத்துக்கு சென்று அவருடைய பெற்றோர், உறவினர் வீட்டுக்குச் சென்று தமுமுக மாநிலச் செயலாளர் ஏ.எஸ்.எம்.ஜுனைத் மற்றும் நிர்வாகிகள் 22வயது வாலிபனை இழந்து தவிக்கும் முபாரக்கின் தாய் மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் சொல்லி விட்டு வந்தனர். இதில் குறிப்பிடத்தக்க சம்பவம் 2005லும் கொலை செய்யப் பட்டவர் முஸ்லிம் ஓட்டுநர்தான். 11.10.2008 அன்று கொலை செய்ய முயன்று தப்பித்து வந்தவரும் ஒரு முஸ்லிம் ஓட்டுநர்தான். 20.10.2008 அன்று கொலை செய்யப்பட்ட வரும் முஸ்லிம் ஓட்டுநர்தான். முஸ்லிம் என்றே இனம் கண்டு கொலை செய்யும் இம்மானுடக்கூட்டத்தின் மன்னிக்க முடியாத மாபாதகக் குற்றவாளிகள் சட்டத் தின் முன் தண்டிக்கப்பட்டு மகனை இழந்து துடிக்கும் ஒரு தாயின் கண்ணீர் துடைக்கப்படுமா? அல்லது காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டு நீதிகள் மறுக் கப்பட்டு இது போன்று இனம்பார்த்து கொலை செய்து கொள்ளையடிக்கும் கூட்டங்களை வளரவிடுமா? என்ன செய்யப் போகிறது சட்டமும் தமிழக அரசும் என்பதை கண்டறியக் காத்திருப்போம்.

ST டிராவல்ஸ்: தினம் ஒரு வாடிக்கையாளருக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு

STடிராவல்ஸ்&கார்கோ(பி)லிட்
வழங்கும்



10 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
தங்க மழை



தினமும் ஒரு வாடிக்கையாளருக்கு 4 கிராம் தங்க நாணயம் பரிசு


சென்னை விமான நிலையம் வந்திறங்கும் எமது வாடிக்கையாளர்களின் பணயச்சீட்டு குழுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு அன்றைய தினமே 4கிராம் தங்க நாணயம் வழங்கப்படும்.



இச் சலுகை நவம்பர் 1 முதல் 30 வரை மட்டுமே.

1. மேற்கண்ட தேதிகளில் சென்னை வந்திறங்கிய பயணிகளுக்கு மட்டுமே இச்சலுகை பொருந்தும். பரிசுகள் சென்னையில் மட்டுமே வழங்கப்படும்.



2. பயணிகள் நமது அலுவலகத்திலிருந்து வாகனங்களில் புறப்படுவதற்க்கு சற்று முன்னரே பரிசுக்குறியவர் அறிவிக்கப்பட்டு அவருக்கு பரிசு வழங்கப்படும்.

Tuesday, October 21, 2008

இலங்கை தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.!முதல்வருக்கு தமுமுக தலைவர் வேண்டுகோள்.

இலங்கையில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட நடவடிக்கை வேண்டும்...!


தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் வேண்டுகோள்.



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்குப் பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். இக்கடிதத்தின் நகல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எதிராக எடுத்துவரும் பயங்கரவாத நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் தமிழர் இனத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் பயங்கரவாதத்தில் ராஜபக்சே அரசு ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டித்து தமிழகமே ஓரணியில் திரள நீங்கள் எடுத்துக் கொண்ட வலிமையான நடவடிக்கைகளைப் பாராட்டுகிறேன். இதேபோல், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை மனம்போன போக்கில் சுட்டுத் தள்ளும் இலங்கை கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்த பிரச்சனைகளை எதிர்கொள்வதற்காக ஒருமித்த நடவடிக்கை எடுக்கத் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இங்கே கூட்டியுள்ள தமிழக முதல்வர் கலைஞர் அவர்களைப் பாராட்டுகிறோம். இதே நேரத்தில் தமிழகம் முழுவதுமே ஓர் அணியில் இந்த பிரச்சனையை அணுகுகின்றது என்பதை எடுத்துக்காட்டக் கூட்டப்பட்டுள்ள இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் பங்கு கொள்ளாதது மிகுந்த வருத்தத்தைத் தருகின்றது.

இலங்கையில் நடைபெற்று வரும் வன்செயல்களுக்கு சிங்களப் பேரினவாத அரசே முழுமுதல் காரணமாகும். சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்திவரும் வன்செயல்களுக்கு முடிவுகட்ட நமது இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் அதே நேரத்தில் இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அவல நிலையை தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், மக்களும் மறந்துவிடக் கூடாது.

இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருபவர்களில் சுமார் 17 சதவிகிதத்தினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவர். தொன்மையான வரலாறு கொண்ட இவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் அபிலாஷைகள் - அகிம்சை அடிப்படையிலான போராட்ட வடிவங்களாக முன் வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழ் முஸ்லிம்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளார்கள். 1956ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது அது தமிழுக்கு உரிய அந்தஸ்தைத் தருவதற்குத் தவறியதைக் கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகியவர் தமிழ் முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஏ.எம்.ஏ. அஜீஸ் ஆவார்.

1960ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட்ட மாபெரும் சத்தியாகிரகத்தின் போது நூற்றுக்கணக்கான தமிழ் முஸ்லிம்களும் அதில் கலந்து கொண்டு சிறையை நிரப்பினர். இதில் முன்னணி வகித்தவர்கள் தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகளான மசூர் மௌலானா, எருக்கலம்பிட்டி கே.எஸ்.ஏ.கபூர் போன்றோர் ஆவர். 1977 தமிழீழத்துக்கான ஆணை கேட்ட போது கூடக் கல்முனை தொகுதியில் த.வி.கூட்டணி சார்பில் போட்டியிட்டவர் சம்சுதின் எனும் தமிழ் முஸ்லிமேயாவார். இதேவேளை தமிழர்களிடத்திலும் பலவகை கட்சிகள் பலவகை கொள்கை அடிப்படையிலான அமைப்புகள் இயங்கியது போல முஸ்லிம்கள் தரப்பிலும் வேறு ஒரு சில தேசியக் கட்சிகளும் அமைப்புகளும் இடம்பிடித்திருந்தன என்பதும் உண்மைதான். ஆனாலும் வடகிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தமிழீழமானது அவர்களுக்கும் உரியது என்றே நம்பி இருந்தனர். இதன்காரணமாகவே 1977 தேர்தலைத் தொடர்ந்தும் 1983 கலவரத்தினைத் தொடர்ந்தும் வடகிழக்குப் பகுதிகளில் உருவாகிய ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து கொண்டனர். கிழக்கு இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப் (நுஞசுடுகு) போராளிகளாய் காணப்பட்டனர்.

இப்படியாகத் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்பட்ட நிலை 1985ல் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து சீர்குலைந்து விட்டது. இன்று வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம்களின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. ஒருபக்கம் சிங்களப் பேரினவாத அரசின் ராணுவம், இன்னொரு பக்கம் தமிழ் போராளிக் குழுக்கள் என இருதரப்பின் தாக்குதல்களுக்கு இலக்காகி துயர நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

1990களில் யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் இருந்து ஒரு இரவுப் பொழுதிலே பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்னும் அகதிகளாக தமது சொந்த நாட்டில் வாழும் அவலம் தொடங்கியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகும் வாழச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் மீது மிக மோசமான தாக்குதல் நடைபெற்று அங்கு வாழும் முஸ்லிம்கள் அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. மாவிலாறு அணைக்கட்டுத் தொடர்பான தகராறில் புலிகள் மூதூரில் வாழ்ந்த முஸ்லிம்களை பகடைக்காய்களாக ஒருபக்கம் பயன்படுத்த, இன்னொரு பக்கம் இலங்கை ராணுவம் மூதூரில் குண்டுகள் வீச, அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்வும் வளமும் பெருமளவில் இன்று சிதைந்துவிட்டது. இதனை ஒரு எடுத்துக்காட்டாகவே குறிப்பிடுகிறேன்.

மொத்தத்தில் மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல் ஒருபக்கம் சிங்கள பேரினவாத அரசு, இன்னொரு பக்கம் புலிகள் என இரண்டு தரப்பிற்கும் இடையே சிக்கி இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வு சின்னாபின்னமாகி விட்டது.

இச்சூழலில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளில் ஒருபகுதியாக அதன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையையும் பாதுகாக்க, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1987ல் ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்பட்டார்கள். அந்த ஒப்பந்தம் தமிழ் முஸ்லிம்களை மூன்றாம்தரக் குடிமக்கள் போன்று கருதியது. அந்த நிலை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு தமிழ் முஸ்லிம்களின் வாழ்வுரிமையும் காப்பாற்றப்படும் வகையில் இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சிங்கள பேரினவாதத்தை முறியடிக்கத் தமிழர்களும் தமிழ் முஸ்லிம்களும் ஒருங்கிணந்து செயல்படுவது காலத்தின் கட்டாயமாகும். தமிழ் முஸ்லிம்களை ஒதுக்கி வைத்துவிட்டு இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது என்பது அறிவுடைமையாகாது.

தற்போதய மகிந்த ராஜபக்சே அரசு இராணுவ ரீதியான தீர்வை நாடியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இந்திய அரசு தனது அனைத்து செல்வாக்குகளையும் பயன்படுத்தி தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டுகிறோம். இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமிழ்பேசும் முஸ்லிம்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் என அனைத்துத் தரப்பு தமிழர்களின் வாழ்வுரிமை காக்கப்பட இன்னும் உறுதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தந்தை - மகன்களை நிர்வாணப்படுத்தி நீலாங்கரை காவல்துறையின் மனித உரிமை மீறல்!

தொடரும் காவல் துறையின் மனித உரிமை மீறல்!


தந்தை - மகன்களை நிர்வாணப்படுத்தி நீலாங்கரை காவல்துறையின் மனித உரிமை மீறல்!!


காவல் நிலையத்தை முற்றுகையிட்டது தமுமுக!!!


அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான்




காஞ்சி மாவட்டம் கிழக்கு கடற் கரைச் சாலையில் உள்ளது பனையூர். நீலாங்கரை காவல் நிலை எல்லைக் குட்பட்ட இப்பகுதியின் தமுமுக கிளைத் தலைவராக இருப்பவர் யூசுப். இவரை யும் இவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலை நிகழ்த்தியுள்ளார் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ.


யூசுப் அவரது தம்பி காதர் பாஷா ஆகியோருக்கும், யூசுபின் தந்தை தமீம்ஷா மற்றும் மற்ற தம்பிகள் முஜிபு, பரகத் ஆகியோருக்கும் இடையே தங்கள் சொந்த நிலம் தொடர்பான பிரச்சினை யில் யூசுபின் வீடு தாக்கப்பட்டது.

இதையறிந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ தனது நீண்ட நாள் கனவு நனவாக கிடைத்த வாய்ப்பாகக் கருதி இதை முழுமையாய் பயன்படுத்தி யூசுபையும் அவரது குடும்பத்தினரையும் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இப் பிரச்சினையில் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காத நிலையில், தானாகவே இப்பிரச்சினையில் தலையிட்டு காவலர் களை அனுப்பி இரண்டு தரப்பினரையும் தனித்தனியே காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அவர்களோ காவலர்களிடம், “நாங்களே எங்கள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள் வோம்’’ என்று சொல்லியுள்ளனர்.

இதையடுத்து ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ, உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்தையும் சில போலீஸ் காரர்களையும் அனுப்பி இரண்டு தரப்பி னரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரச் செய்துள்ளார். மாலை 5 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம், “இப்பிரச்சினை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டது. ஆகவே நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது புகார் கொடுங்கள். அதிகாரிகள் முன்னிலை யில் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என வஞ்சக மாகப் பேசி புகார் பெற்றுள்ளார்.

மறுபுறமோ, “உங்கள் மீது யூசுப் புகார் அளித்துள்ளார், ஆகவே நீங்கள் அவர் மீது புகார் கொடுங்கள்’’ என்று கூற, அவர்களும் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அப்புகாரைப் படித்த ஆய்வாளர், “இந்தப் புகார் வேண்டாம். நான் சொல் வது போல புகார் மனு எழுதுங்கள்’’ எனக்கூறி புகார் பெற்றுள்ளார் ஆய்வா ளர் சேகர் பெர்னான்டோ.

புகாரை வலியுறுத்தி பெற்ற ஆய் வாளர், இரண்டு தரப்பினரையும் “சமரசம் பேசலாம் வாருங்கள்’’ எனக்கூறி அழைக்கப்பட்ட இரண்டு தரப்பினரிட மும் இன்னும் சற்று நேரத்தில் துணை ஆணையர் வந்து விடுவார் எனக் கூறியே இரவு 12 மணி வரை காலம் கடத்தியுள்ளார். பிறகு யூசுபின் தந்தை யையும் தம்பிகளையும் ஒன்றுசேர நிர்வாணப்படுத்தியுள்ளார். இதையடுத்து யூசுப், “சார் இதெல்லாம் சரியல்ல, இதுபோல நீங்கள் ஈடுபடுவது நல்லதல்ல’’ எனக்கூற, “நீ மட்டும் என்னடா, நீயும் லுங்கியை அவுருடா’’ எனக்கூற அவரையும் நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்.

இரவு 1 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்த துரைப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் ராதாகிருஷ் ணன், ஆய்வாளர் பெர்னான்டோ இரு வரும் யூசுப் உட்பட அவரது குடும்பத் தினர் அனைவரின் மீதும் உடனடியாக இரவோடு இரவாக கடுமையான குற்றப் பிரிவுகளைக் கொண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் அனைவரும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர் னான்டோ நிகழ்த்திய மனித உரிமை மீறல் அப்பகுதி முஸ்லிம்களிடம் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.

பரங்கிமலை ஒன்றிய தமுமுக செயலாளர் ஜாகீர் இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன், மாவட்டச் செயலாளர் யாக்கூப் ஆகியோரிடம் கூற, மனித உரிமை மீறல் நிகழ்த்திய சேகர் பெர்னான்டோவின் அராஜகத்தைக் கண்டித்து மேற்படி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரங்கி மலை ஒன்றிய தமுமுக சார்பில் நீலாங்கரை காவல் நிலையம் முற்றுகைப் போராட் டத்தை அறிவிக்க, ஒரே நாளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு கைதானார்கள்.

இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன் அவர்கள் கூறுகையில், “இப்பகுதியில் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கையாளும் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோவிற்கு துரைப்பாக்கம் ஏ.சி. ராதாகிருஷ்ணன் துணை போகிறார். இது வன்மையாகக் கண்டிக்க த்தக்கது. அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், சேகர் பெர்னான்டோ மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரு கிறோம். அந்நடவடிக்கை எடுக்கும்வரை இன்ஷாஅல்லாஹ் மாநிலத் தலைமையின் ஆலோசனையுடன் விரைவில் மாவட்டம் தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை அறிவிப்போம்’’ என்றார்.

Monday, October 20, 2008

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!
~~~~~
"சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இது போன்ற மாநாடுகளை பெருநகரங்களில் நடத்துவதை தடைசெய்ய அரசு முன்வருமா?"
சென்னை: விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.
திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.'
தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!

Friday, October 17, 2008

இந்து அமைப்புக்கும் - மக்கள் ஓசை தினசரிக்கும் மலேசியாவில் தடை

ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை பாதுகாப்பு அமைப்புக்கும், மக்கள் ஓசை தமிழ் தினசரிக்கும் மலேசியாவில் தடை

வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2008

கோலாலம்பூர்: இந்துக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமான ஹிண்ட்ராப் அமைப்புக்கு (Hindraf) மலேசியா அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என அந் நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சர் சையத் ஹமீ்த் அல்பார் வெளியிட்டுள்ளார். மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதைக் கண்டித்தும், தங்களுக்கும் சம உரிமைகள் கோரியும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.

இந்தப் போராட்டங்களை ஹிண்ட்ராப் அமைப்பு தான் முன்னின்று நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அமைப்பினர் நடத்திய அமைதிப் பேரணி மீது மலேசிய போலீசார் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவ்வப்போது இந்த அமைப்பின் நிர்வாகிகளை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகின்றனர்.

இந் நிலையில் தான் ஹிண்ட்ராப் அமைப்புக்கே தடையை விதித்துள்ளது மலேசியா அரசு. இது ஒரு சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது.இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு மலாய் மக்களுக்கும் பிறருக்கும் இடையே இந்த அமைப்பு இன மோதலை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த அமைப்பை தடை செய்யாவிட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்குமே பெரும் ஆபத்தாகிவிடும் என்றும் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

ஹின்ட்ராப் தலைவர்களிடம் விசாரணை:முன்னதாக கைது செய்யப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி பிரதமரை சந்திக்கச் சென்ற அந்த அமைப்பின் தலைவர்கள் ஜெயதாஸ், செல்வம் மற்றும் சாந்தி ஆகியோர் மீது நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அத்துமீறி பிரதமர் இல்லத்தில் நுழைந்ததாகவும், கூட்டம் நடத்தியதாகவும் அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மூன்று பேரும் டாங்வாங்கி மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஹின்ட்ராப் அமைப்பினர் அங்கு குவிந்தனர். அவர்களிடம் ஏஎஸ்பி சிட்னி க்ளைடி ஜெரிமியா விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு ஜெயதாஸ் கூறுகையில், போலீஸார் மக்கள் சேவகர்களாக இல்லை. அரசியல்வாதிகளுக்கு சாதமாக செயல்படுகின்றனர். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அத்துமீறல் எதுவும் செய்யவில்லை. உரிமைகளை மட்டுமே அங்கு பயன்படுத்தி நியாயம் கேட்டோம் என்றார்.

விடுதலை மனு நிராகரி்ப்பு:‌இந் நிலையில் சிறையில் இருக்கும் 5 பேரும், விசாரணை‌யி‌ன்‌றி‌ பல மாத‌ங்களாக த‌ங்க‌ளை ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வைப்பது ச‌ட்ட ‌விரோதமானது எ‌ன்று கூறி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்த‌னர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் ஓசைக்கு தடை:இதற்கிடையே மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதளான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.அந்தப் பத்திரிக்கையின் ஆண்டு உரிமத்தை மலேசியா புதுப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நாளை முதல் அந்தப் பத்திரிக்கையை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து மக்கள் ஓசையின் பொது மேலாளர் பெரியசாமி கூறுகையில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், எங்களது பத்திரிக்கையின் உரிமத்தை இந்த ஆண்டு புதுப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.இதனால் பத்திரிக்கை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. மீறி நாங்கள் பத்திரிக்கையை வெளியிட்டால் எங்களை கைது செய்வார்கள்.

இது குறித்து உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பாரிடம் முறையிடவுள்ளோம் என்றார்.இது பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என பல்வேறு மலேசிய அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

முஸ்லிம்கள் மீது தீண்டாமைக் கொடுமை! தடுத்து நிறுத்துமா தமிழக அரசு...?

திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது தீண்டாமைக் கொடுமை

தடுத்து நிறுத்துமா தமிழக அரசு...?


ஏறிய ஏணியை எட்டி உதைத்துள்ள தி.மு.க எம்.எல்.ஏ.


கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம்ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று எடுத்தெரிந்து பேசியுள்ளார்.

======

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் கம்பூர் ஆகும். கம்பூர் கிராமத்தைச் சுற்றி வடக்குவேரி, திருபாம்புரம், வள்ளார் கோவில்பத்து ஆகிய கிராமங்களைச் சுற்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வாழ்ந்து வருகின் றனர். கம்பூர் கிராமம் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு, புதுமனைத் தெரு ஆகிய நான்கு தெருக்களில் மட்டும் சுமார் 150 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.


கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.


அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது. பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.


பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.


இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’ என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆனால் ஜமாஅத் பெரியவர்களின் ஆலோச னைக்கு இணங்க, அருகில் உள்ள சுரைக்காயூர், மாளிகை நத்தம், துலார், கருப்பூர், திருபாம்பூர் ஆகிய கிராமங் களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடை பெற்றது.


திருபாம்புரத்தைச் சேர்ந்த நாட்டாண்மை என்று அழைக்கப்படும் கிரா மத் தலைவர் கலியபெருமாள், கம்பூர் என்ற ஊரே இல்லாத நிலையில் பேச்சு வார்த்தை எதற்கு? என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். ஐந்து கிராம பஞ்சாயத் திற்கும் அவர் கட்டுப்படாததால் ஜமாஅத் சார்பில் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கம்போல் காவல்துறை புகாரை கிடப்பில் போட்டது. இதையடுத்து நன்னிலம் டி.எஸ்.பி. நாராயணசாமியிடம் புகார் அளித்துள்ள னர். இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருபாம்புரம் பகுதி மக்களுக்கு ஆதர வாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார்.


பொது விநியோகக் கடை, முஸ்லிம் களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் திருபாம்புரம் பகுதியில் தான் அமைந்துள்ளது. ஆனால் திருபாம்புரத் தைச் சேர்ந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 5.9.08 அன்று முதல் முஸ்லிம் களுக்கு டீ கொடுக்கக்கூடாது, பொது விநியோக கடையில் பொருட்களை வழங்கக்கூடாது, விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் செல்லக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.


இதனால், முஸ்லிம்கள் திருப்பாம்புரத் தில் டீ குடிக்கச் சென்றால் டீ தர மறுத் துள்ளனர். டிராக்டர் உழுவதற்கு எடுத் துச் சென்றால் இரும்பு பைப்கள், உருட் டுக் கட்டைகளை சாலையில் போட்டு தடுத்துள்ளனர். வயல் வேலைகளுக்கு கூலி ஆட்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் கம்பூர் பகுதி முஸ்லிம்களிடம் பேசினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்செயல் இந்திய இறையாண்மை சட்டத்தின்படி தங்களது வாழ்வாதார சூழல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கம்பூர் முஸ்லிம்கள் மனம் வெதும்புகின்றனர்.


இந்நிலையில் காவல்துறையிடம் திருபாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராமு, ரவி, கலியபெருமாள், பாண்டியன் ஆகியோர் மீது கம்பூர் முஸ்லிம்கள் புகார் அளித்தனர். மேலும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் இருதரப் பினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்குப் பின்பும் அதே நிலை நீடித்தது. மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொலைப்பேசி யில் தொடர்புகொண்டு கம்பூர் தீர்வு காண வலியுத்தினர். திருவாரூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 22.09.08 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சமூக பகிஷ்கரிப்பு நடவடிக் கையைக் கைவிடுவது என்றும், விவசாய கூலி வேலைக்கு செல்வதை தடுத் தாலோ அல்லது கடைகளில் பொருட்கள் வழங் கப்படவில்லை என்று தெரிந் தாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காணாமல் போன கம்பூர் ஊர் பெயர்ப் பலகை சம்பந்தமாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், இருதரப்பினரும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்தனர்.


ஆனால் இந்த நிலையிலும், எழுதப் படாத தீர்ப்பாக திருபாம்புரம் பகுதி மக்கள் கம்பூர் முஸ்லிம்கள் மீது தீண்டா மையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று தெரிந்து எடுத்தெரிந்து பேசியுள்ளார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் ஜீவாதார உரிமை களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என மௌனமாக காத்துக் கொண்டிருக் கின்றனர் கம்பூர் முஸ்லிம்கள்.