.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, March 23, 2010

மன்னிப்பு கேட்டது முத்தாரம் வார இதழ்!

முத்தாரம் வார இதழில் (29.03.2010) நபிகள் நாயகம் போல ஒருவரை கார்டூன் வரைந்து கட்டுரை வெளியிட்டது. பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேற்கண்ட சம்பவத்தையொட்டி தமுமுக சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் சீனிமுகம்மது, ம.ம.க செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து நபி (ஸல்) அவர்களின் கார்டூன் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது.

மேலும் மார்ச் 22 அன்று மதியம் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி ஆசிரியரை தொடர்பு கொண்டு சமுதாயத்தின் கண்டனத்தை தெரிவித்தார்.

ஒரு மணி நேரத்தில் தங்களது தவரை ஏற்று வருத்தம் தெரிவித்து முத்தாரம் த.மு.மு.கவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியது.

No comments: