.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Tuesday, June 22, 2010

600 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க... தமுமுக கோரிக்கை


தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை ஐந்து நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் மிகமுக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைக்கின்றோம்.

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

1968ல் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள்.

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 51 முஸ்லிம் கைதிகள் உட்பட 600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

அரசு சார்பில் விமர்சையோடு நடைபெறும் செம்மொழி மாநாட்டு மூலமாக இவர்கள் விடுதலையானால், மனிதநேயம் கொண்டோர் அனைவரும் தமிழக முதல்வரை வாழ்த்துவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

Friday, May 21, 2010

குணங்குடி ஹனிபா விடுதலை

13 ஆண்டுகள் ரயில் குண்டு வழக்கில் சிறையில் வாடிய குணங்குடி ஹனிபா மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் மீது போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனைவரையும் விடுதலைச் செய்தது. எல்லா புகழும் இறைவனுக்கே

Monday, March 22, 2010

விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா


நேற்று (21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.

அனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது - அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் - சில ‘லெட்டர் பேட்’ (தாவுத் மியன், கமுதி பஷீர்) அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.

மவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.

பேரா.அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது. கூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது..

கூட்டம் தொடங்கிய பிறகுதான் ஜனாப் எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ‘நாரே தக்பிர்’ முழங்க வைத்தது.

கூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

ஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி - சிலரின் முகம் சுழித்தது.

திருமாவின் உரை - வழக்கம் போல ’கனீரென்று’ தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது. மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார். ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.
மேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ’மகர்’ சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ‘தாழ்த்தப்பட்ட’ மக்கள் இன்னும் ‘வர்னாசிரம’ பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.

உரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.

தமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.

தனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
தோழமையுடன்,
(பிறைநதிபுரத்தான்)

நன்றி:பிறைநதிபுரத்தான்.

Saturday, January 23, 2010

வரலாற்று வீரம்... வாரிசுகளின் பரிதாபம்! தியாகி பென்சனுக்காக அலையும் கான்சாஹிபின் வாரிசுகள்!!

வரலாற்று வீரம்...
''வீரத்தின் ‍பெயர் மருதநாயகம்!''
தியாகி பென்சனுக்காக அலையும் கான்சாஹிபு வாரிசுகள்!
நன்றி ஜூவி

'வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மடிந்த மருதநாயகத்தின் வாரிசான நான் தியாகி பென்ஷனுக்காக 20 வருஷமா மனு போடுகிறேன். இன்னும் பென்ஷன் கிடைத்தபாடில்லை. இனி அலைவதற்கு உடம்பில் திராணி இல்லை. ஆகவே, நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்!' - மதுரையை ஆண்ட கான்சாஹிபு என்ற மருதநாயகத்தின் வாரிசுகளில் ஒருவரான பாபா சாஹிபுவிடமிருந்துதான் நமக்கு இப்படியரு கண்ணீர்க் கடிதம்!

மருதநாயகம் என்கிற வித்தியாசமான மனிதரின் வீர வரலாற்றை நடிகர் கமல்ஹாசன் படமாக எடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நாடறியும். ஆனால், அந்த வீரருடைய வாரிசுகளின் பஞ்சடைந்த பரிதாப வாழ்க்கை யாருக்குத் தெரியும்?

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வசிக்கும் பாபா சாஹிபுவை சந்திக்கச் சென்றோம். மண்ணால் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குக் கொஞ்சம் ஓலையும் கொஞ்சம் தகரமும் சேர்ந்து மேல் கூரையாக இருந்தது. வீட்டுக்குக் கதவுகள் இல்லை; கரன்ட் வசதியும்இல்லை.

'ஜூ.வி-யிலிருந்து வந்திருக்கிறோம்...'' என்றதும் தட்டுத்தடுமாறி எழுந்து வணக்கம் சொன்ன பாபா சாஹிபு, தனது மனக்குறையை மளமளவெனக் கொட்ட ஆரம்பித்தார். 'மொகலாயர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் ஏற்பட்டபோது, வரி வசூலிப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர் கான்சாஹிபு துரை. பிற்பாடு, 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்டதால் அவருக்கு மதுரைநாயகம் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மருதநாயகம் என்றாகிவிட்டது. வரி வசூலில் ஒரு பகுதியை ஆங்கிலேயர்களுக்குக் கப்பமாகச் செலுத்தும் முறை அப்போது இருந்தது. கான்சாஹிப் துரை அதை எதிர்த்து வெள்ளையர்களோடு போரிட்டார். கடைசியில், அவர்களாலேயே தூக்கிலிடப்பட்டார்.

தங்களை எதிர்த்த கான்சாஹிபு போன்றவர்களைக் கொன்று சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டது வெள்ளையர் அரசாங்கம். கான்சாஹிப் துரையின் வாரிசுகளில் எஞ்சியிருப்பது நான் மட்டுமே. எனக்கு 71 வயதாகிறது. என் மனைவி மஹபூர் பியாரி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். நசீராபேகம், சுபேதாரனி என்ற மகள்களும், சிக்கந்தர் பாட்ஷா, ஹீரால்சேட் பாட்ஷா, திவான் பாட்ஷா ஆகிய மகன்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக இவர்களில் யாருக்குமே என்னால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. 42 வயதாகும் என் மூத்த மகள் நசீராபேகம் இப்போது மனநோயாளியாகி விட்டாள். மூத்தவன் சிக்கந்தர் பாட்ஷா வீட்டை விட்டே ஓடிவிட்டான். நுட (எலும்பு) வைத்தியம் பார்த்துப் பிழைப்பு நடத்திய எனக்கும் இப்போது வலது கை விளங்காமல் போய்விட்டது. ஏதோ என் பிள்ளைகளின் சொற்ப சம்பாத்தியத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது...' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பாபா சாஹிபு.

அவர் மகன் திவான் பாட்ஷா நம்மிடம், 'யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். கட்டபொம்மன், மருது சகோதரர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வெள்ளையரை எதிர்த்தவர்கள். கான்சாஹிப் துரையோ மதுரை மண்டலத்தையும் நெல்லை மண்டலத்தையும் சேர்த்து ஆண்டவர். அப்படிப்பட்டவரின் வாரிசை இந்த அரசு ஏன் இப்படி கேவலப்படுத்துகிறது என்றே புரியவில்லை. பென்ஷனுக்காக 1988-ம் ஆண்டிலிருந்து இது வரை கலெக்டர், முதல்வர், ஜனாதிபதி என அதிகாரம் படைத்த அத்தனை பேருக்கும் என் தந்தை மனுப் போட்டு ஓய்ந்து போய்விட்டார். அவற்றுக்கு வந்த பதில்கள் மட்டுமே ஒரு தகரப் பெட்டி நிறைய இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் அக்கா சுபேதாரனி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 வருடமாக தினக்கூலியாக இருக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரை நிரந்தரம் செய்யக்கோரி ரெண்டு வருஷமா போராடுறேன். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான் கடைசியாக ஒரு கடிதத்தை ஜூ.வி-க்கு எழுதச் சொன்னார் அப்பா...'' என்றவர், ''இனிமேலும் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால், நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். அதற்கு முன் தமிழக முதல்வரும், விருதுநகர் கலெக்டரும் எங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்களா?'' என்றபோது பாட்ஷாவின் குரல் உடைந்து போனது!

பென்ஷன் வழங்கும் பணிக்கு பொறுப்பான விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தாவிடம் இது பற்றிக் கேட்டோம். சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கை அழைத்து விவரங்களைத் தெரிந்துகொண்டு நம்மிடம் பேசியவர், 'நேரடியான தியாகிகள் பென்ஷன் என்றால், உரிய விசாரணைகள் மூலம் மாவட்ட நிர்வாகமே வழங்கலாம். சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய வீரர்களின் வாரிசுகளுக்கு என்றால், தமிழக அரசு ஆணை பிறப்பித்தால்தான் ஓய்வூதியம் வழங்க முடியும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உரிய கல்வித் தகுதியும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் இருப்பதாகச் சொல்வதால் சுபேதாரனிக்கு அரசு வேலை வழங்க உடனடியாகப் பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்...'' என்றார்.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும், இது போன்ற தியாகிகளின் வாரிசுகள் பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படுவது யாருக்கு அசிங்கம்?
- கே.கே.மகேஷ்
படங்கள்: கே.குணசீலன்
நன்றி ஜூவி.

Thursday, September 18, 2008

சிறைவாசிகள் விவகாரம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்!

வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்

Source: தமுமுக அதிகாரபூர்வ இணையதளம்.

குணங்குடி ஹனீபா விடுதலை செய்யப்படாதது ஏன்?
அ. அப்துல் காதர், மந்தைவெளி, சென்னை-28

கேள்வி: அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாண்டு களுக்கும் மேலாக சிறைப்படுத்தப் பட்டுள்ள 1,405 கைதிகளை விடுதலை செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பல்லாண்டு களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் எத்தனைப் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?

பதில்: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியான உடனேயே, பத்தாண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை எவ்வித பாரபட்சமும் காட்டாமல் விடுதலை செய்ய வேண்டும் என த.மு.மு.க. தமிழக அரசை வலியுறுத்தியது.

இதுதொடர்பாக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் முஸ்லிம் கைதிகள் பாரபட்ச மாக நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டி, பத்தாண்டுகளை சிறையில் கழித்த முஸ்லிம் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

முஸ்லிம் சிறைவாசிகளை அண்ணா நூற்றாண்டு விழாவில் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமுமுகவின் மாநிலச் செயற்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழக முதல்வருக்கு அண்மையில் எழுதிய நினைவூட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது “பேரறிஞர் அண்ணா அவர்களது நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை அவர்களது எஞ்சிய தண்டனை காலத்தை மன்னித்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இவ்வாறு விடுதலை செய்யப் படும் கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மிகச் சிலர் மட்டுமே இடம் பெற்றுள் ளார்கள் என்று அறிய வருகிறேன். வகுப்புவாத மோதல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு அண்ணா நூற்றாண்டு விழாவில் விடுதலையாகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அறிய வருகிறேன்.

கடந்த காலங்களில் உணர்ச்சி களுக்கு அடிப்பட்டு குற்றங்கள் புரிந்த இந்த முஸ்லிம் கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளது நிச்சயமாக அவர்களைத் திருத்தி உள்ளது. இருப்பினும் இவர்கள் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு மற்ற கைதி களுக்கு அண்ணா நூற்றாண்டின் போது அளிக்கப்படும் சலுகை மறுக்கப் படுவது அரசின் மீது சிறுபான்மை சமுதாயத்தின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சில சுற்றறிக்கைகளையும் அரசாணை களையும் சுட்டிக் காட்டி அதிகாரிகள் முஸ்லிம் கைதிகளுக்கு அண்ணா நூற்றாண்டு விழாச் சலுகை கிடைக்க விடாமல் தடுத்திருக்கக் கூடும். ஆனால் தாங்கள் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஆயுத சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டப் பிரிவின் கீழ் தென்மாவட்டக் கலவர வழக்குகளை தாங்கள் துணிந்து வாபஸ் பெறச் செய்தீர்கள். தென்மாவட்டக் கலவரங் களைப் போல் கோவை மற்றும் தமிழ கத்தின் சில இடங்களில் நடைபெற்ற மோதல்கள் உணர்ச்சி வெளிப்பாடாக நடைபெற்ற மோதல்கள் தான். கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வு துறையின் தலைவர் திரு. பரம்வீர் சிங் அவர்கள் கோவை சம்பவங்களை பற்றிக் குறிப்பிடும் போது, “இந்நிகழ்வுக்கு பயங்கரவாத முத்திரை குத்துவதோ, தீவிரவாத சாயம்பூசுவதோ சரியில்லை. இது வெறும் ஒரு மோதல் சம்பவம் மட்டுமேயாகும்’’ என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிமன்ற நீதிபதியும் தனது தீர்ப்பில் பிரதிபலித்தார்.

எனவே, தென்மாவட்டக் கலவர வழக்குகளில் தங்கள் அரசு மேற் கொண்ட அதே நெறிமுறையைப் பின்பற்றி, வகுப்புவாத வழக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளையும் அவர்களது எஞ்சிய தண்டனைக் காலத்தை மன்னித்து விடுதலை செய்ய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா தருணத்தில் ஆவன செய்ய அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

இவர்கள் தொடர்பான வழக்கு மேல்முறையீட்டிற்குச் சென்றுள்ளது, எனவே இது குறித்து முடிவு செய்ய இயலாது என்று அதிகார வர்க்கம் மேலும் தடையைப் போடலாம். அறிஞர் அண்ணாவின் 98 மற்றும் 99ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளிலும் அதற்கு முன்பும் பொது மன்னிப்பில் விடுதலையான ஆயுட்கைதிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களில் மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போது பொது மன்னிப்பைப் பெற்றவர்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஒவ்வொரு மணிப்பொழுதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் என்னைத் தொடர்பு கொண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கைதிகளுக்கு அளிக்கப்படும் சலுகை ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் தொடர்பாகத் தங்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே தயவு கூர்ந்து தாங்கள் சிறுபான்மை மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் இதுகுறித்து உரிய உத்தரவை உடனடியாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’
அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி விடுதலை செய்யப்பட்ட 1,405 கைதிகளில் 35 முஸ்லிம் ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை வருமாறு (சென்னை 4, வேலூர் 4, திருச்சி 2, சேலம் 1, கோவை 7, மதுரை 8, நெல்லை 8, கேரளாவைச் சேர்ந்தவர் 1) இவர்கள் வகுப்புக் கலவரங்கள் தொடர்பான குற்றத்தில் தண்டிக்கப்படாதவர்கள்.
வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
============================
அஸ்அத் அலி, திருவாரூர் கேள்வி: பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் குணங்குடி ஹனீபா அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்படாதது ஏன்?

பதில்: நீதிமன்றத்தால் ஆயுள் (14 ஆண்டு கால) தண்டனை வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவோர் மட்டும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் தண்டனைக் கைதி அல்ல, விசாரணைக் கைதியாவார். அவருக்காக தமுமுக தொடர்ந்து வாதாடும், போராடும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி 17 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். அவரை காங் கிரஸ் தலைவி சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் மன்னித்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை.
இதுபோன்ற பாரபட்சங்களும் கண்டிக்கத்தக்கதே.

Saturday, May 26, 2007

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!

சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் கூடி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்பற்றி விவாதித்தனராம். இதுபற்றி துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து 'தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:

'ஆதிசங்கராச்சார்யர் ஏற்படுத்திய நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் கூட்டம் பெங்களூரில் அண்மையில் நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.

இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை. பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம். பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.

இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.

கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம். இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டத்தை முடக்குவதற்கு அறிவு ஆராய்ச்சிக்கு முன் நிற்க முடியாத புராண இதிகாச மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகின்றனர் சங்கராச்சாரியார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமா - அதுவும் இந்து மதம் என்றாலே முழுக்க முழுக்கப் புராணக் குப்பைகள்தானே? நவீன அறிவியல் உலகத்தில் இந்தப் புராணங்கள் எல்லாம் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை, இல்லையென்றால், கொளுத்தப்பட வேண்டியவைகளே தவிர, பின்பற்றப்பட வேண்டியவையல்ல.

பூமியை பூமாதேவியென்றும், தண்ணீரைக் கங்காதேவியென் றும், காற்றினை வாயு பகவான் என்றும் கூறும் இந்து மடாதிபதிகள், பூமி மீது கால்வைத்து நடக்கலாமா? பூமிமீது மல ஜலம் கழிக்கலாமா? என்ற எளிமையான கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டுமே!

இரண்டாவதாக உண்மைக்கும் மாறான தகவல்களைத் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானக் கூடம் ராமன் பாலம் இருப்பதாகக் கூறுகிறது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யையே திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

நாசா இணைய தளத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ராமன் பாலம் என்றோ, 17 லட்சம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்றோ எந்த இடத்திலும் அவர்கள் சொல்ல வில்லை.

'இன்டோலிங்க் காம், வைஷ்ணவ நிறுவன நெட் ஒர்க்' என்னும் பார்ப்பன அமைப்பு ஒன்று நாசா கூறியதாகத் தவறான தகவலைத் தந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு இத்தகு அமைப்புகள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்டது இந்த பாலம் என்று கதைக்கிறார்களே - -பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் இருந்தானா என்பதற்கு முதலில் பதில் கூறட்டும்!

இன்றைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலுமீது சேற்றைவாரி இறைக்கும் இந்தச் சங்கராச்சாரியார்கள் அமைச்சரைச் சந்தித்து, ராமன் பாலம் குறித்து விளக்கம் பெற்று, அதனை ஏற்றுக் கொண்டனர் என்கிற செய்தி இதற்கு முன் வெளிவந்ததே! இந்த நிலையில் அமைச்சர்மீது அவதூறு பேசுவதும், ராமன் பாலம் பற்றிப் பேசுவதும் அறிவு நாணயம்தானா?

இவர்கள் நீதிமன்றம்தான் போகட்டும், வீதிமன்றம்தான் வரட்டும், அவர்களை அந்தந்த இடத்தில் சந்திக்க தமிழ்நாட்டு மக்களும் தயார்! தயார்!!

நன்றி: விடுதலை நாளிதழ் 25-05-2007

Monday, May 21, 2007

Aadam Bridge: ராமன் பாலம் ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!

ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!


'ராமன் பாலத்தை, நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயனபடுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர் (எஸ். பத்ரி நாராயணனும் வி. சீனிவாசனும்)''கோயங்கா குடும்பத்துக் கணக்குப் பிள்ளை ஒருவர் மேற்காணும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.

அவரைப் போலவே 'செட்டில்மென்ட் இலாகாவில்'' பணியாற்றிய ஒருவரும் இதே கருத்துகளுக்குச் சொந்தக்காரர் எனத் தம் பேட்டியின் மூலம் அறிவிக்கிறார். ஆதாரங்களை அவிழ்த்துக் கொட்டிவிட வேண்டியதுதானே! உலகின் முதல் பாலம் நைல்நதியில் கட்டப்பட்டது என்றும் கட்டி 4,657 ஆண்டுகள் ஆகின்றன என்றும் தி.க தலைவர் வீரமணி ஆதாரத்துடன் கூறினாரே! 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுக்கு முன் ராமன் கட்டினானா? என்றும் கேட்டாரே! பதில் கூறுங்களேன்!


மனிதன் உருவாகி 65 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அவன் பாலம் கட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆகிறது. எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்கிறீர்கள்? ஆதாம் பாலம் (ராமன் பாலம்) இயற்கையில் உருவாகிய மணல்மேடுதான்! மனிதன் கட்டியது என்பதற்கு பத்ரிநாராயணன் வலுவாக ஏதும் கூறவில்லையே! ராமன் கட்டினான் எனக் கூறவில்லையே!

காளைமாட்டைக் குதிரையாக்கிய என்.எஸ். ராஜாராம் போன்றவரான சீனிவாசன்கூட மணல்மேடுகள் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் மட்டுமே ஏற்படக் கூடும் - இங்கே அப்படி ஏற்படவில்லை என்கிறார்.

Satellite Picture
12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால்தான் இந்தியமாக்கடல் ஏற்பட்டது என்றும் ஜெர்மனியும் பிரான்சும் சேர்ந்த பரப்பளவுள்ள பீடபூமி அழிந்து போனது என்றும் பனி ஆராய்ச்சிக் கப்பலில் சென்ற அறிவியலாளர்கள் கூறியதைச் செய்தித்தாள்கள் 6.5.2007இல் வெளியிட்டனவே, படிக்க வில்லையா? (படிக்க: டெக்கான் கிரானிகிள்)ஆதாரப் பூச்சாண்டியும், ஆராய்ச்சியாளரின் கருத்துப் பூச்சாண்டியும் கருகிப் போய்விட்டதால் மல்கோத்ரா மாதிரி 'நம்பிக்கை' என்று உச்சாடனம் பண்ணுங்கள் அறிவியல் அடிப்படையில் பேசுவது மாதிரிப் 'பாவ்லா' பண்ணாதீர்கள்! புண்ணாக்கி விடுவோம்!

சேதுக்கடல் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் - எந்தப் பெயரால் எதிர்த்தாலும் - தேசத் துரோகிகள்தான்! யாராக இருந்தாலும்..! சங்கரமடத் தலைவர்களாக இருந்தாலும்! அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!

நன்றி: விடுதலை நாளிதழ் 20-05-2007