.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, September 28, 2010

இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக? ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

மறைகளண்ட தக்லீதுகளின் உலறல்கள்.
இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திடுகிறதா தமுமுக?
ஷேக் தாவூத் என்ற மனநோயளியின் பிதற்றல்கள்.

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், திருவிடைச்சேரியில் புனித ரமலான் மாதத்தில் ஏற்பட்ட மோதலில் இரண்டு முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே அதற்கு யார் காரணம் என்பதும் சமுதாயம் அறிந்துள்ளது.

சம்பந்தப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் உள்ளார். திருவிடைச்சேரியில் என்ன நடந்தது என்று சமுதாய மக்கள் அனைவரும் அறிவர். இந் நிலையில் இந்து முஸ்லிம் மோதல்களுக்கு வித்திருகிறதா தமுமுக என்று ஷேக் தாவூத் என்ற மனநோயளி தனது வலைபூவில் பிதற்றியிருக்கிறார்.

திருவிடைச் சேரியில் நடந்தது என்ன என்று ஏற்கனவே தெளிவாக எழுதிவிட்ட நிலையில் மீண்டும் எழுதி நேரத்தை வீனடிக்க விரும்பவில்லை.

திருவிடைச்சேரியில் நடந்தது என்னவென்று அந்த ஊர் ஜமாத்தார்கள் எழுதி உள்ள கடிதம்:



இனியாவது நடுநிலையோடு சிந்திக்க முன்வரட்டும்.


நடந்த சம்பவங்களின் விபரத்திற்கு:
“The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html

http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml

http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

4 comments:

mkr said...

சகோதரரே நான் எந்த அமைப்பையும் சேர்ந்தவன் இல்லை.ஆனால் சற்று
யோசிக்க வேண்டாமா…. இந்துக்களுக்கு இரவு நேரத்தில் என்ன வேலை
அதுவும் ஆயுதங்களுடன்?ஒரு வேலை இந்துக்கள் அந்த சம்பவத்தில்
பாதிக்கப்பட வில்லையென்றால் உங்கள் போன்றவர்களின் கூற்றை எற்பதை
தவிர வேற வழியில்லை.

M. Hussainghani. said...

சகோதர் MKR அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

நீங்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் ஆனால் சமுதாய சிந்தனையும் அக்கரையும் இருந்தால் போதும்.


முதலில் சம்பவத்தை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் அல்லது எனது வலைப்பூவில் தெளிவாக விரிவாக எழுதப்பட்டுள்ளது அதை படியுங்கள்.

உங்கள் கேள்விக்கான பதில் அதில் உள்ளது.

நாம் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறோம்

சமாதானத்திற்கு வந்தவரிடம் துப்பாக்கி எதற்கு?

ஒரு வேலை சமாதானத்திற்கு வந்தவரை அங்குள்ளவர்கள் அடித்தாலும் எதிர்த்து அதே அளவுக்கு சண்டைபோட்டிருக்கலாமே?
ஒரு முஸ்லிமை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்வதுதான் சமாதானமோ???

நடுநிலையோடு சிந்தியுங்கள்.
நாளை மறுமையில் பதில் சொல்ல வேண்டும் என்ற அச்ச உணர்வு கொள்ளுங்கள்.

mkr said...

அலைக்கும் வஸ்லாம்

நண்பரே துப்பாக்கியில் சுட்டதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த வில்லை.கண்டிக்க தக்கது.இதற்க்கக இந்துக்களை கூட்டி வந்ததை எந்த விததிலும் நிங்க|ளும் நியாயப் படுத்த முடியாது.

M. Hussainghani. said...

கொலைக்குற்றம் தவறு என்பதை ஏற்றுக்‍ கொண்டமைக்கு நன்றி

இந்துக்களை யாரும் அங்கு கூட்டடி வரவில்லை.

1) சம்பவம் நடந்துள்ளது பள்ளியில்

2) பள்ளியில் இருந்தவர்களிடம் கூட்டமாக வந்தவர்கள்தான் சண்டையிட்டுள்ளார்கள்

பள்ளியில் இருந்தவர்கள் வந்தவர்களின் தாக்குதல் மற்றும் பயத்தினால் பள்ளியில் உள்ள மைக்கில் உள்ளுர் மக்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.

கிரமத்தின் சூழல் உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன். வெளியூரிலிருந்து ஒரு கூட்டம் உள்ளுர்வாசிகளை படைதிரட்டி அடிக்க வந்தால் சாதிமத பேதமின்றி உதவிக்கு வருவார்கள் என்பது இன்றும் கிராமங்களில் உள்ள நடைமுறை. அது தான் அங்கு நிகழ்ந்துள்ளது.