.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, September 20, 2010

பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!

சமுதாயச் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளியின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 24ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படஉள்ளது...

தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.

இழந்த உரிமையை பெற்றுள்‍ளோம்...

வழங்கப்படும் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நீதி கேட்டு உச்சநீதி மன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஆகவே! தேசத்தின் நலன் கருதி பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

Anonymous said...

வாவர் பள்ளி வழக்கில் தீர்ப்பு என்னவாகிலும் இருந்தாலும் அமைதிக் காக்க வேண்டும் என்ற உங்களின் கருத்து மிக்க வரவேற்கத்தக்கது. தீர்ப்பு பிழைப்பினும் ஆண்டவன் கணக்கு பிழைக்காது. இந்துக்களும், இஸ்லாமியரும் அண்ணன் தம்பி போல் பழகி வரும் இந்நாட்டில் வாவர் பள்ளி இடிப்பு ஒரு கலங்கமே இருப்பினும்.... நான் இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்வது எல்லாம் ஒன்று மாத்திரமே அந்த இராமன் வாழ்க்கையில் நடந்த விடயமே... பொறுத்தார் நாடாள்வார், பொறுக்காதார் காடாள்வார், இஸ்லாமிய மக்களின் பொறுமை அவர்களுக்கு நல்ல தீர்ப்பினைப் பெற்று தரும்.....