.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, November 8, 2009

ரியாத் மண்டல த.மு.மு.க நிர்வாகிகள் தேர்வு


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மக்கள் பணியை தமிழகத்தில் மிகச் சிறப்பாக செய்து வரும் அதே வேலையில், கடல்கடந்தும் தமது மனிதநேயப் பணிகளை பரந்து விரிந்து செய்து வருகின்றன. அயல் தேசங்களில் பணியாற்றும் நமது சகோதரர்கள் தமது சமுதாயத்தின் மீது கொண்டுள்ள அக்கரையின் காரணமாக தான் பாணியாற்றும் தேசங்களில் இருந்துகொண்டே மனிதநேயப்பணியை மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள். நமது இரு கண்களும் ஒன்றோடு ஒன்று சந்தித்ததில்லை ஆனால் தனது கடமையிலிருந்து ஒரு போதும் தவறியதில்லை. தமுமுக தலைமையின் வழிகாட்டுதலில் அயல் நாடுகளிலும் தமுமுகவின் கிளைகள் பரந்து விரிந்து செயல்பட்டு மனிதநேயப் பணிகளில் முத்திரை பதித்து வருகின்றன.
அந்த வகையில் சவூதி அரேபிய – தலைநகர் ரியாத் மத்திய மண்டல த.மு.மு.கவின் பொதுக்குழு கடந்த 06-11-2009 அன்று கிழக்கு மண்டலத் தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மௌலவி ஜமால் உமரி அவர்கள் கிராஅத் ஓத, மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

முதலாக மண்டல நிர்வாகத்தின் கணக்குகள் வாசிக்கப்பட்டு புதிய நிர்வாகம் தேர்வு செய்யவிருப்பதை முன்னிட்டு பொருப்பிலிருந்த மண்டல நிர்வாகிகள் தமது பொருப்புகளிலிருந்து ராஜினாமா செய்து விடுப்புப் பெற்றனர்.


உணவு இடைவேளைக்குப் பின், கிழக்கு மண்டலத்திலிருந்து பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் அவர்களின் தலைமையில் தேர்தல் அதிகாரிகளாக வருகை தந்திருந்த மவுலவி அலாவுதீன் பாகவி, சகோதரர் அப்துல் காதர், சகோ இஸ்மாயில், சகோ நூருதீன் ஆகியோரின் முன்னிலையில் மத்திய மண்டல த.மு.மு.கவிற்கான தேர்தல் நடைபெற்றது.

பொதுக்குழுவிற்கு வருகை தந்திருந்த செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் மத்திய மண்டல நிர்வாகிகளை தேர்தல் முறையில் தேர்வு செய்தார்கள். அதில் மண்டலத் தலைவராக மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கனுரைச் சேர்ந்த மவுலவி ஜமால் முஹம்மது பாசில் பாகவி அவர்கள் மண்டலத் தலைவராகவும். இராமநாதபுரம் மாவட்டம் சிக்கலைச் சேர்ந்த எம். முஹம்மது ஹூஸைன் கனி அவர்கள் மண்டல பொதுச் செயலாளராகவும். நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த சகோ ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் பொருளாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனையில் மத்திய மண்டலத்தின் துணைத் தலைவராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கே. பி. முஹம்மது அவர்களையும், துணைச் செயலாளராக புதுக்கோட்டை மாவட்டம் மீ-மீசலைச் சேர்ந்த சகோ. நூர் முஹம்மது அவர்களையும் தேர்வு செய்தனர்.

அல் கஸ்ஸாவிலிருந்து வருகைபுரிந்திருந்த சிறப்புப் பேச்சாளர் மவுலவி அலாவுதீன் பாகவி அவர்களின் உரைக்குப் பின் தாயகத்திலிருந்து த.மு.மு.கவின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களும் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்களும் இணையம் வழியாக வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சிறப்புரையாற்றினார்கள் தங்களது உரையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்து தொடர்ந்து மக்கள் பணியில் சிறப்பாக ஈடுபடவும் அதற்கு உறுதுணையாக மற்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் சிறப்பான முறையில் ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளின் ஏற்புரைக்குப்பின், பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கு கிழக்கு மண்டல த.மு.மு.க தலைவர் பொறியாளர் ஷஃபியுல்லாஹ் கான் பதில் அளித்தார்கள். இறுதியாக சகோ. நூர் முஹம்மது நன்றி உரையாற்ற பொதுக்குழு இனிதே நிறைவுற்றது.

இப்பொதுக்குழுவில் நூற்றி ஜம்பதிற்கும் மேற்பட்ட த.மு.மு.க உறுப்பினர்கள் மற்றும் இருபதிற்கும் மேற்பட்ட சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். இப்பொதுக் குழுவை த.மு.மு.க மத்திய மண்டல தொண்டரணியினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

வந்திருந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகத்தின் பணிகள் சிறக்க துவாச் செய்தவர்களாக தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சமுதாயப் பணியின் கடமைகளை உணர்ந்தவர்களாக விட்டபணிகளைத் தொடர வெற்றிக்களிப்புடன் களைந்து சென்றார்கள்...

No comments: