.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, April 10, 2009

ம.ம.க தனித்து போட்டியிடும் வாய்பளித்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

மனிதநேய மக்கள் கட்சிக்கு திராவிடக் கட்சிகளின் கூட்டணியில் இடம் ஒதுக்காமல் தனித்து போட்டியிடும் வாய்ப்பை நல்கிய இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

எங்கள் சமுதாய பலத்தை நிரூபிக்க வாய்ப்பு நல்கிய கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவிற்கு நன்றிகள் ஆயிரம்....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மக்கள் செல்வாக்கின் பலம் தெரியாமல் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்காமல் தனது தொகுதி பட்டியலை வெளியிட்டதில் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

திமுக மற்றும் அதிமுக தொகுதி பட்டியலில் முஸ்லிம்களை முற்றிலுமாக புறக்கணித்ததற்கும், எங்களை தனித்து போட்டியிட்டு எங்கள் சமுதாயத்தின் பலத்தை அறிய வாய்ப்பு நல்கியதற்கும் முஸ்லிம் சமுதாயம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

திராவிடக் கட்சிகளின் தப்புக்கணக்கு - அதுவே முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றிக்கு வித்திட்டுள்ள ஆரம்பகணக்கு.

கலைஞர் அவர்களே! எங்களை தனிமைப் படுத்தியதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்ச்சியுடன் நன்றி கூறிக்கொள்கிறோம். இதற்கான விலை கொடுக்க தாங்கள் முன் வரும் போது இன்ஷா அல்லாஹ் உங்கள் கைக்கு எட்டாத தூரத்திலிருப்போம் என்பதை இப்போதைக்குச் சொல்லிக்கொள்கிறோம்.

No comments: