.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, July 15, 2009

பொக்கிஷம் என்ற பெயரில் ஒரு விஷம்! வருகிறது இன்னொரு கலவர திரைப்படம்.


நன்றி -இனியவன்


இயக்குனர் சேரன் இயக்கி நடிக்கும் பொக்கிஷம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.சினிமா பைத்தியங்கள் நிறைந்த தமிழகத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளிவருவது ஒன்றும் புதிது அல்லவே என்று நீங்கள் கேட்கலாம்.திரைப்படம்,கலை என்ற பெயரில் வியாபார வெறி பிடித்து சினிமாகாரர்கள் செய்யும் சமூக சீரழிவுகளை வன்மையாக கண்டிப்பவர்கள் நாம்.சினிமா என்னும் சீரழிவு கலாச்சாரத்தில் இருந்து தமிழ் முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறது.ஒரு சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் சினிமா தளத்தில் இயங்கி வருகிறார்கள்.ஒரு சில மார்க்கம் தெரிந்த முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களால் மார்க்க விசயங்களை முஸ்லிம் சமூக அவலங்களை வெகு ஜன ஊடகமான சினிமாவில் பூடகமாக கூட தெரிவிக்க முடிவதில்லை. தெரிவிக்கவும் முயலுவதில்லை.

சினிமா என்ற ஊடகத்தின் மூலம் புரட்சிகளை ஏற்படுத்திய பல திரைப்படங்கள் (உமர் முக்தார்) மனித வாழ்வின் அவலங்களை, அழகியல்களை காட்டும் அற்புதமான திரைப்படங்கள் (ஈரானிய திரைப்படங்கள்) எடுக்கப்பட்டுள்ளன. எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த கால நிகழ்வுகள்,மக்கள் தலைவர்களின் வரலாறுகள் என திரைப்படங்கள் பல பரிணாமங்களை கொண்டவை, மக்களின் எண்ணங்களை எழுச்சி பெற வைக்கவும்,நல்லவை பக்கம் நாட்டம் பெற வைக்கவும் சுய உணர்ச்சி கொள்ள வைக்கவும் திரைப்படங்கள் பெரும் பங்காற்றுகின்றன.ஆனால் பொழுது போக்கு என்ற பெயரில் சமூக பொறுப்புகளை மறந்து வியாபார வெற்றி,பணம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே களமிறங்கி உள்ள நமது இந்திய குறிப்பாக தமிழ் திரைப்பட வியாபாரிகள் பெண்களின் அந்தரங்க அவயங்களை காட்டுவதிலும் காதல் என்ற பெயரில் சுய ஆசைகளை கற்பனைகளை திரைப்படங்களாக எடுப்பதில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழ் சினிமா தொடங்கியதில் இருந்து இன்று வரை காதல் என்ற ஒற்றை சொல்லை வைத்து வித்தை காட்டுவதில் சினிமாக்காரர்கள் வல்லவர்கள்.

அந்த வகையில் காதல் கதை என்ற பெயரில் சர்ச்சைக்குரிய அல்லது சர்ச்சை ஆகும் என்றே தெரிந்து எடுக்கப்பட்ட படம்தான் சேரனின் பொக்கிஷம். படத்தின் கதை இதுதான். நாகூரை சேர்ந்த முஸ்லிம் பெண்ணான இலக்கியம் படிக்கும் நதிராவி ற்க்கும் (நடிகை பத்மப்ரியா) கப்பல் பொறியாளரான இந்து இளைஞர் சேரனுக்கும்(கதைப் பெயர் தெரியவில்லை) நடக்கும் காதல் அதை ஒட்டிய சம்பவங்கள்தான் கதை.இதில் இருவரும் கடிதம் மூலமாகவே தங்கள் காதலை பரிமாறிக் கொள்கிறார்களாம்.1970 ம் ஆண்டு கால கட்டத்தில் கதை நடப்பதாக செட்டிங் போடப்பட்டு படம் எடுக்கப் பட்டுள்ளதாம்.

மணிரத்தனம் என்ற இருட்டுப்பட இயக்குனர் பம்பாய் என்று இதேபோல்தான் முஸ்லிம் பெண் இந்து இளைனன் என்ற கான்செப்டில் ஒரு கதை எடுத்தார்.படத்தில் முஸ்லிம் பெண் கடல்புறத்தில் குலுங்க குலுங்க ஓடி வரும் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாக்கினார்.பால் தாக்கரேவுக்கு மட்டும் படத்தை போட்டு காண்பித்து அனுமதி வாங்கி வெளியிட்டார்.முஸ்லிம் சமூக பெரியவர்களுக்கோ,இயக்கங்களுக்கோ படத்தை காட்டவில்லை.ஏன் காட்ட வேண்டும் என்ற பாசிச சிந்தனைதான் அவரை அவ்வாறு செய்ய வைத்தது. விளைவு உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.நல்ல வேளையாக தப்பி பிழைத்தார் இருட்டு இயக்குனர்.இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.சிலர் சிறையில் வாடி வருகின்றனர்.மணி ரத்தினத்தின் கதை தெரிந்தும் சினிமாவை புறம் தள்ளியே வைத்திருக்கும் தமிழ் முஸ்லிம்களின் குணம் தெரிந்தும் தொடர்ந்து சில தமிழ் பட வியாபாரிகள் நம்மை தொந்தரவு செய்தே வருகின்றனர்.முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது,முஸ்லிம் பெண்களின் பர்தாவை பயன்படுத்தி கேவலமான செயல்களை செய்வது என பல படங்களை எடுத்து வருகின்றனர். (உதாரணம். ஒற்றன்,ஹே ராம்,இன்னும் பல).

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களின் உபயத்தால் காதல் என்ற பெயரிலும் நட்பு என்ற பெயரிலும் இளம் பெண்களும் இளைஞர்களும் வீட்டை விட்டு ஓடுதல்,ரகசிய திருமணம் செய்தல்,கடற்கரைகளில்,பூங்காக்களில் சேட்டைகள், விடுதிகளில் லீலைகள் என தமிழ் கலாசாரத்தை வளர்த்து வருகின்றனர். இந்த படங்களின் பாதிப்புக்கள் கலாச்சார பெருமை கொண்ட தமிழக முஸ்லிம் சமூகத்தையும் மெல்ல பாதித்து வருகின்றது.ஓடிப்போகும் கலாச்சாரம் தற்ப்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இது போன்ற படங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி தெரிய தேவை இல்லை.முஸ்லிம் சமூகத்து பெண்கள் மற்றும் இளைஞர்களை இது போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டியது முஸ்லிம் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடமை.எனவே பொக்கிஷம் போன்ற படங்கள் வெளி வரும் முன்னே திரைபடத்தை பார்த்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோர வேண்டும். மறுத்தால் திரைப்படம் வெளிவருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை காண்பிக்க வேண்டும். பம்பாய் பட பாதிப்பினால் ஏற்பட்ட விளைவுகள் இந்த படத்தினாலும் ஏற்பட்டு விடக்கூடாது.

தமிழக அரசும் இவ்விஷயத்தில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பின்னர் சட்டம் ஒழுங்கு கெட்ட பின்னர் வருந்துவதை விட முன் நடவடிக்கை எடுப்பதே சாலச் சிறந்தது.

Monday, July 13, 2009

13 ஆண்டுகளாக தூக்கம் கலையாத அஞ்சல் துறை

மாவட்டங்களின் பெயர்களில் ஜாதி தலைவர்ககள், சுதந்திர போராட்டதியாகிகள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டது. இருந்தாலும் அஞ்சலக "சீல்'களில் மட்டும் இன்னும் பழைய மாவட்ட பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இதை யாரும் இதுவரையிலும் கவனித்ததாக தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில், தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் பெயர் கள் அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்களை கொண் டிருந்தது. செங்கை அண்ணா மாவட்டம், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், பசும்பொன் தேவர் மாவட்டம், காமராஜர் மாவட்டம் என்ற பெயர்களுடன் விளங்கியது. கடந்த 1996ம் ஆண்டு பொறுப்பேற்ற தி.மு.க., அரசு, ஜாதித்தலைவர்கள் பெயர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர்களை மாற்றியது. இதனால், காமராஜர் மாவட்டம், விருதுநகர் மாவட்டமாகவும், பசும் பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாகவும், திண்டுக்கல் அண்ணா மாவட்டம், திண்டுக்கல் மாவட்டமாகவும் பெயர் மாற்றம் பெற்றது. தொடர்ந்து போக்குவரத்துக் கழகங்களின் பெயர்களும் மாற்றப் பட்டன. இந்த பெயர் மாற்றம் அனைத்து தரப்பட்ட மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. பொதுவாக பெயர் மாற்றம் பெறும் போது மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்கள் அனைத்திலும் பெயர் மாற்றம் ஏற்பட்டுவிடும். அஞ்சல் துறை சார்பில், அஞ்சலகங்களில், கடிதங்கள் மீது பதிக்கப்படும் "சீல்'களிலும் ஊர் பெயர் மாற்றப்படும் வழக்கம் உள்ளது.


இதன் படி மாவட்டங்களின் பெயர்கள் மட்டுமே அனைத்து ஊர்களிலும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது சிவகங்கை மாவட்டமாக உள்ள பசும்பொன் தேவர் மாவட்டத்தில் உள்ள ஒரு தபால் நிலையத்தில் மட்டும் இன்னும்" பி.எம்.டி' மாவட்டம் என்றே அஞ்சலக சீலில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒருவர் தனது வீட்டு திருமணத்திற்காக சிவகங்கையில் உள்ள ஒருவருக்கு திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளார். தி.நகர் தபால் நிலையத்திலிருந்து அனுப்பப் பட்ட அந்த அழைப்பிதழில் கடந்த மாத 8ம் தேதிக்கான சீல் வைக்கப்பட்டுள்ளது. அது கடந்த மாதம் 12ம் தேதி சிவகங்கை மாவட்ட பள்ளத்தூர் அஞ்சலகத்திற்கு சென்று அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த சீலில் "பள்ளத்தூர்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் உள்ளது. அடுத்ததாக அந்த ஊருக்கான அஞ்சல் குறியீட்டு எண் 630107 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக "P.M.T.DIST' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் மாவட்டம், சிவகங்கை மாவட்டமாக மாற்றப் பட்டு, 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் இந்த பெயர் மாற்றம் மத்திய அரசின் துறையான அஞ்சல் துறையில் மாற்றம் செய்யப்படாதது அதிர்ச்சியாக உள்ளது. தமிழக அரசு இம்மாதிரியான பெயர்கள் இடம் பெறுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பெயர்களை நீக்கியது. இதுகுறித்து, மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னரும், இந்நிலை தொடர்ந்து வருகிறது. இதுகுறித்து, அஞ்சல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""மாவட் டங்கள் பெயர் மாற்றம் பெற்றவுடன், அஞ்சலக சீல்கள் மாற்றப்பட்டுவிட்டன. அஞ்சல் துறையில் சீல்கள் மாற்ற வேண்டும் என்றால், அலிகாரில் உள்ள அஞ்சல்துறை ஸ்டோருக்கு " இண்டன்ட் ' போட்டு அனுப்ப வேண்டும். அவர்கள், இரண்டு மாதங்களில் தயாரித்து அனுப்புவர். பெரும்பாலும் சேதமடைந்துவிடும் இது போன்ற சீல்கள் இரண்டே மாதத்தில் கிடைக்கும். மாவட்டங்கள் பெயர்கள் மாற்றம் பெற்றதும், குறிப்பிட்ட அந்த அஞ்சலகத்தை சேர்ந்தவர்கள் இண்டன்ட் போட்டு அனுப்பி, அங்கிருந்து வராமல் இருக்கலாம்.

அல்லது அஞ்சலக அதிகாரிகளின் அலட்சியத்தால் இது நடந்திருக்கலாம்,'' என்றார். பள்ளத்தூர் அஞ்சலக அதிகாரியின் கவனக்குறைவோ அல்லது அலிகாரில் உள்ள அஞ்சல் துறை ஸ்டோரில் உள்ளவர்கள் கவனக்குறைவோ எது இருந்தாலும் 13 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஊரின் பெயர் மாற்றப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் உத்தரவை மதிக்காத தன்மையை காட்டுகின்றது. தற்போது, இந்த ஒரு மாவட்ட பெயர் தான் தெரிந்துள்ளது. இன்னும் எந்தெந்த மாவட்டங்களின் பெயர்கள் அஞ்சல் துறையின் "சீல்"களில் மாற்றப்படாமல் உள்ளன என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.
நன்றி: தினமலர்

Saturday, July 11, 2009

கம்ப்யூட்டருடன் பிஎட் படித்தால் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கல்வி அமைச்சர் தகவல்

சென்னை, ஜூலை 11- கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்கள் பொன்னுசாமி, ராஜ்குமார், ஜி.கே.மணி (பாமக), எச். வசந்தகுமார் (காங்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூ), கோவிந்தசாமி (மார்க்சிஸ்ட்) ஆகியோர் கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதில்:
தமிழ்நாட்டில் 200 தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுவதும் அரசின் நடவடிக்கைக்கு உட்பட்டுள்ளது. மாநில அளவில் பதிவு மூப்பு அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது அந்த தீர்ப்புக்கு கண்டுப்பட வேண்டும்.

கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகமா னோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். வேலைவாய்ப்பு துறை தரும் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பணி உத்தரவு பிறப்பிக்க முடியும்.

தற்போது உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் நியமனத்தில் கம்ப் யூட்டர் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்று உறுப்பினர்கள் கேட்டனர்.

வருங்காலங்களில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து பிஎட் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Friday, July 10, 2009

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் 50 ஆயிரம் வழங்கினார்.

மறு கூட்டல் மூலம் முதல் இடம் பிடித்த பிளஸ்2 மாணவருக்கு ரூ.50 ஆயிரம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னை, ஜூலை. 10 பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் பாலமுருகனுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் வழங்கினார்.



பிளஸ்-2 மறு கூட்டல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் நெல்லை ரமேஷ் (நெல்லை மாவட்டம்), எம்.லிங்கேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்), கே.சி.சிஞ்சு (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஏ.பிரவீன் (கரூர் மாவட்டம்) ஆகிய 4 பேர் தலா 1200 மார்க்குக்கு 1183 மார்க் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.

பிளஸ்-2 தேர்வில் உள்ள விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவ - மாணவிகளுக்கு புதிய மார்க் குகள் அனுப்பப்பட்டன.

மாணவர் பாலமுருகன் முதலிடம்
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகனும் ஒருவர். அவர் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர். அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பு எடுத்த மொத்த மதிப்பெண்கள் 1176. அவர் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ்-187, ஆங்கிலம்-193, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-197, உயிரியல்-199.

ஆனால் அவர் தமிழில் மார்க் குறைந்து இருப்பதாக எண்ணி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அப்போது அவருக்கு கூடுதலாக 8 மார்க் கிடைத்தது. அதாவது தமிழில் 195 மார்க் கிடைத்தது.

இதன் மூலம் இவருடைய மொத்த மதிப்பெண்கள் 1184 ஆக மாறியது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட பாலமுருகன் ஒரு மார்க் அதிகம் பெற்றுள்ளார். விடைத்தாள் மறுகூட்டல் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த மாணவர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட ஒரு மார்க் கூடுதலாகவும் பெற்றுள்ளார் என்றால் இவர்தான் முதலிடம் பெற்ற மாணவர். இவரது விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருந்தால் தேர்வு முடிவுகள் தெரிந்த அன்றே இவர் முதலிடம் பெற்ற மாணவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பார் அந்த மகிழ்ச்சியை தவறு செய்த ஆசிரியர்கள் வழங்குவார்களா? அந்த நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை என்னிப்பார்க்கவேண்டும்.

விடைத்தாள்கள் திருத்தியதில் அலச்சியப்போக்காக இருந்த ஆசிரியர்கள் கைது செய்து தண்டிக்கப்படவேண்டும். அரசு அறிவிக்கப்பட்டுள்ளது போல் பணியிடை நீக்கம் தவறுக்கு தீர்வு ஆகாது.

மறு கூட்டல் மூலம் அதிக மதிப்பெண் பெற்றமாணவனின் இந்த செய்தி அறிந்த முதல் அமைச்சர் கருணாநிதி நேற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பாலமுருகனை தலைமை செயலகத்திற்கு அழைத்து பாராட்டி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதுமட்டுமல்ல பாலமுருகன் எந்த கல்லூரியில் படித்தாலும் படிப்பின் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் கருணாநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி செயலாளர் எம்.குற்றாலிங்கம், இயக்குனர் பி.பெருமாள்சாமி, இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி மற்றும் மாணவர் பாலமுருகனின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! தவறுசெய்த ஆசிரியர்களை கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் ஆசிரியர்களின் மெத்தனப்போக்கு! விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு பாடத்தில் 22 மதிப்பெண் விடுபட்டதால் அதிர்ச்சி.

109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பிறகு, மறு மதிப்பீடு செய்த மாணவர்களுக்கு திருத்திய மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் துறை வழங்கி வருகிறது. அதன்படி 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில், மாணவர்கள் சிலர் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு 109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளது தெரிய வந்தது. வணிகவியல் பாடத்தில் அவர் வெறும் 60 மதிப்பெண்கள் பெற்றதாக முதலில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மறுமதிப்பீட்டுக்கு பிறகு அவர் 169 மதிப்பெண்கள் பெற்றார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியரின் அலட்சியத்தால், சென்னை மாணவருக்கு 22 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளன. இதனால் கல்லூரியில் அந்த மாணவருக்கு சீட் கிடைக்கவில்லை.

சென்னை, கீழ்ப்பாக்கம் ரெசீனா மெட்ரிக். பள்ளியில் படித்த மாணவர் வி.சி.எஸ்.தீபக். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். மொழிப் பாடம் 164, ஆங்கிலம் 151, பொருளியல் 143, வணிகவியல் 142, கணக்கு பதிவியல் 129, வணிக கணிதம் 122 என மொத்தம் 851 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எனினும், கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு 129 கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து விடைத்தாள் நகல் கேட்டு பெற்றார். கணக்கு பதிவியல் விடைத்தாளின் 3 பக்கங்கள் திருத்தவே இல்லை என்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மறு மதிப்பீட்டுக்கு தீபக் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்யப்பட்ட பிறகு விடுபட்ட பகுதிக்கு 22 மதிப்பெண்கள் கிடைத்தன. அதன்படி மொத்த மதிப்பெண் 873 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், சென்னை கல்லூரியில் பிகாம், பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர தீபக் விண்ணப்பித்து இருந்தார். 75 சதவீதம் மதிப்பெண் இல்லை என்று கூறிய கல்லூரி நிர்வாகம், தீபக் கேட்ட 2 படிப்புக்கும் இடம் கொடுக்காமல் அவரது விண்ணப்பத்தை நிறுத்தி வைத்தது. இதனால் தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் தீபக் வேதனை அடைந்தார். மறு மதிப்பீட்டுக்கு பிறகு கிடைத்த 22 மதிப்பெண்களை காட்டி, சீட் வாங்க மாணவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு விடைத்தாளுக்கு இவ்வளவு தொகை வழங்க வேண்டும். குறைத்துக் கொடுத்தால் பணிக்கு வரமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

பலவிதமான குடும்பச் சூழ்நிலையில் இரவு பகலாக கண்விழித்து மாணவர்கள் படிக்கின்றனர். பதற்றத்துடனேயே தேர்வு எழுதுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றால்தான் நன்கொடை கொடுக்காமல் கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்ற விழிப்புணர்வு இப்போது மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.

அவர்களின் நம்பிக்கையில் மண்ணை போடும் விதமாக ஆசிரியர்கள் கவனக்குறைவாக விடைத்தாள் திருத்துகின்றனர். நகரங்களில் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவது, மறு கூட்டல் செய்வது, மறுமதிப்பீடு செய்வது போன்ற வசதிகளை பெற முடிகிறது. கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய முடியாமல் விட்டுவிட்டால், விடுபட்ட மதிப்பெண்களை அவர்கள் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மறு மதிப்பீடு கேட்பவர்களால்தான் விடுபட்ட மதிப்பெண்ணை பெறமுடியும் என்றால் மற்றவர்கள் நிலை என்ன?

கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடிய ஆசியர்கள் தண்டிக்கப்படவேண்டும். தேசத்திற்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திறமைசாலிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. அனு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம், சந்திராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றோர்களை உறுவாக்கிய தமிழகம் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கால் தேசம் நல்ல தலைமுறைகளை இழந்துவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

தவறு செய்த ஆசிரியர்களை கண்டறிந்து தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பது பொது மக்களின் கருத்து.

கடுமையன தண்டனைகளே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்கும். தண்டனைகளை தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணைய ஊடகங்கங்களின் மூலம் நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும். அதுவே தேசபற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா?

Thursday, July 9, 2009

சவூதி ஏர்போர்ட்டிலிருந்து எளிதில் வெளியேற பயோமெட்ரிக் கார்டுகள் அறிமுகம்.

சர்வதேச விமான நிலையங்களில் குடியேற்று உள்நுழை / வெளியேற்றக் கவுண்டர்களில் நெடுநேரம் வரிசையில் காத்திருக்கும்

நடைமுறைக்கு சவூதி சர்வதேச விமான முனைமம் விரைவில் தீர்வுகாண உள்ளது. பயணிகளின் கைரேகை, கண்ரேகை மற்றும் இதர அடையாளங்களைக் கொண்ட தகவல் அடங்கிய விரைவு வெளியேற்ற மின்னணு வாசல்களில் பொருத்தப்பட்ட பயோமெட்ரிக் கருவிகளால் உடனடியாக ஏர்போர்ட்டிலிருந்து வெளியேற/ உள்வர முடியும். பயணிகள் இத்தகைய அட்டைகளை விமானநிலையச் சிறப்பு வாசல்களில் பொருத்தப்பட்ட இயந்திரத்தில் காட்டி அதிவேகமாக தங்கள் குடியேற்ற நடைமுறைகளை முடித்துச் செல்லலாம்.


சவூதி உள்துறைஅமைச்சின் அறிவுறுத்தலின்படி உள்நாட்டு / வெளிநாடுக் குடிமக்களின் சுயவிபரங்களைக் கணினி மயமாக்குவதன் மூலம் ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றத்தின் மூலம் குற்றவியல் மற்றும் சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் திட்டத்தின் ஒருபகுதியே இந்த விரைவு ஈ-கேட் அட்டை.

தற்போது சவூதி ஏர்போர்ட் மற்றும் குடியேற்ற அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட தகவல்களே புழக்கத்தில் உள்ளது. பயோமெட்ரிக் அட்டைமூலம் குடியேற்ற நடைமுறைகளை விரைவாகவும் துல்லியமாகவும் செய்ய முடியும். சவூதி உள்துறை அமைச்சக வட்டாரத் தகவலின்படி,பயோமெட்ரிக் அட்டை உயர்தர தொழில்நுட்பம் கொண்டதாகும்.இதன்மூலம் குறிப்பிட்டத் தகவல் தேடும்பணி ஓரிரு நொடிகளில் கிடைத்துவிடும் என்றார் சவூத் அல் கஹ்தானி என்ற அமைச்சகப் பணியாளர்.

பிரத்யேக மின்னணு வாசலைக் கடக்கும் பயணிகள்,தங்கள் குடியேற்ற/வெளியேற்ற விபரம் அடங்கிய அறிக்கையைப் பெறுவார்கள். இந்த புதிய சிஸ்டம் மூலமாக சுமார் 2000 கைரேகைகளைப் பதிவு செய்யும் சாதங்களையும் கையடக்க கைரேகை சாதனங்களையும் இணைத்துச் செயல்படும் என்றார். இதுபோன்ற ஐரிஸ் கண்ரேகை கேமராவில் பதிவு செய்யப்பட்ட விரைவு ஈ-கேட் அட்டைகள் துபாயில் கடந்த நான்காண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?

16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.

சென்னையில் இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து... தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து... காதல் வளர்த்த காலம் போயே போச்சு.

நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை.. உங்க செல்போன் நம்பர் என்ன? என்று கேட்டு ஒரு சிரிப்பு.. அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு... 3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம். இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை. இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.

செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.

காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ரன்...

கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னையில் பள்ளி மாணவிகள் காணாமல் போனதாக 50-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீசுக்கு வந்துள்ளது. இதில் வட சென்னை மற்ற பகுதிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிக்கிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவாகிறது. காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.

அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது. வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது. புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.

இது குறித்து வட சென்னை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான். 14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.

டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர். எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.

பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது. இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
வட சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்திற்கு வாரம் 5 புகார்களும், புளியந்தோப்புக்கு 4 புகார்களும், எம்.கே.பி.நகர் போலீசுக்கு 3 புகார்களும், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் முறையே 4 புகார்களும், வருகிறது. குறைந்த பட்சம் 10 வழக்குகளாவது பதிவு செய்யப்படுகிறது.

இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.

வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள். டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்.

Wednesday, July 8, 2009

முஸ்லிம் மாணவன் தாடி: மன்னிப்புக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜூ

டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.

இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.

அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

இதற்கு த.மு.மு.க உட்பட நாட்டிலுள்ள அனைத்து முஸ்லீம் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (6/7/2009) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.

மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.

Tuesday, July 7, 2009

ஓரினச் சேர்க்கை: மத்திய அரசின் ஆதரவு போக்கை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவுப் போக்கு:
மத்திய அரசைக் கண்டித்து தமுமுக மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை வழங்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ஐ நீக்க முயலும் மத்திய அரசின் செயலைக் கண்டித்து தமுமுகவின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 06,07,2009 மாலை 5 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன், மாநில வர்த்தகர் அணிச் செயலாளர் யாசின். மாநில தொண்டரணிச் செயலாளர் முகம்மது ரஃபி, மாநில மாணவரணிச் செயலாளர் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், ''ஓரினச் சேர்க்கை செயலுக்கு வக்காலத்து வாங்கும் அவசியம் என்ன வந்தது? மேற்குலகை தனது புதிய வழிகாட்டியாக கொண்டு விளங்கும் ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசுக்கு அநாகரீக பாதையில் செல்லும் அவசியம் என்ன? கோவாவிலும், சென்னை மகாபலிபுரத்திலும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த வக்கிர பேர்வழிகள் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் இங்கு வந்து தங்களது பாலியல் முறைகேடுகளுக்கு வடிகால் தேடும் போக்கு'' ஆகியன பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

Monday, July 6, 2009

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக நாளை 06.07.2009 ல் தமுமுக ஆர்ப்பாட்டம்.


ஓரினச் சேர்க்கைக்கு எதிராக 149 அண்டுகளாக இருந்து வந்த ஐ.பி.சி 377வது சட்டப்பிரிவு செல்லாது என, டில்லி நீதி மன்றம் சமீபத்தில் தீர்பளித்தது.

இதனடிப்படையில் அருவருக்கத்தக்க இந்த ஓரினச் சேர்க்கையின் செயலை ஆதரித்து இந்திய அரசு ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்தால் இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு அனுமதி அளித்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விலக்களித்த 127வது நாடாக இந்திய இடம் பிடிக்கும்.

இறைவனின் படைப்பில் மனிதன் முதல் விலங்குள், தாவரங்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் அனைத்தும் அதற்கு அனுமதிக்கப்பட்ட இயற்கை வரையில் தான் தனது இல்லற சுகத்தையும் இனவிருத்தியையும் பெருக்குகின்றன குறிப்பாக தாவர இனங்களின் உற்பத்திகூட ஆண் ‍பெண் சேர்க்கை என்ற விதியின் படி‍யே விளைச்சல்கள்மேம்படுகின்றன.

இயற்கை விதி இவ்வாறு இருக்க மனித குலத்திற்கு எதிரான, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை ‍அளிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - இன்ஷா அல்லாஹ் 06.07.2009 அன்று மாலை 4.00 மணிக்கு – சென்னை சென்ரல் மெமோரியல் ஹால் அருகில் -

அனைவரும் வருக
அழைக்கிறது தமுமுக.