.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label பள்ளி கல்வி. Show all posts
Showing posts with label பள்ளி கல்வி. Show all posts

Friday, July 10, 2009

பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவருக்கு முதல்வர் 50 ஆயிரம் வழங்கினார்.

மறு கூட்டல் மூலம் முதல் இடம் பிடித்த பிளஸ்2 மாணவருக்கு ரூ.50 ஆயிரம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னை, ஜூலை. 10 பிளஸ்-2 தேர்வில் மறு கூட்டல் மூலம் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் பாலமுருகனுக்கு முதல் அமைச்சர் கருணாநிதி ரூ.50 ஆயிரம் வழங்கினார்.



பிளஸ்-2 மறு கூட்டல் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வு முடிவு மே மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்டது. தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் நெல்லை ரமேஷ் (நெல்லை மாவட்டம்), எம்.லிங்கேஸ்வரன் (ஈரோடு மாவட்டம்), கே.சி.சிஞ்சு (கிருஷ்ணகிரி மாவட்டம்), ஏ.பிரவீன் (கரூர் மாவட்டம்) ஆகிய 4 பேர் தலா 1200 மார்க்குக்கு 1183 மார்க் எடுத்து மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தனர்.

பிளஸ்-2 தேர்வில் உள்ள விடைத்தாள் நகல் பெற்று மறு கூட்டலுக்கும், மறு மதிப்பீட்டுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவ - மாணவிகளுக்கு புதிய மார்க் குகள் அனுப்பப்பட்டன.

மாணவர் பாலமுருகன் முதலிடம்
அவ்வாறு அனுப்பப்பட்ட மாணவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவர் எஸ்.பாலமுருகனும் ஒருவர். அவர் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்தவர். அவர் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முன்பு எடுத்த மொத்த மதிப்பெண்கள் 1176. அவர் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்கள் வருமாறு:-

தமிழ்-187, ஆங்கிலம்-193, கணிதம்-200, இயற்பியல்-200, வேதியியல்-197, உயிரியல்-199.

ஆனால் அவர் தமிழில் மார்க் குறைந்து இருப்பதாக எண்ணி மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தார். அப்போது அவருக்கு கூடுதலாக 8 மார்க் கிடைத்தது. அதாவது தமிழில் 195 மார்க் கிடைத்தது.

இதன் மூலம் இவருடைய மொத்த மதிப்பெண்கள் 1184 ஆக மாறியது.

இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட பாலமுருகன் ஒரு மார்க் அதிகம் பெற்றுள்ளார். விடைத்தாள் மறுகூட்டல் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார் இந்த மாணவர். மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முதலிடம் பெற்ற மாணவர்களை விட ஒரு மார்க் கூடுதலாகவும் பெற்றுள்ளார் என்றால் இவர்தான் முதலிடம் பெற்ற மாணவர். இவரது விடைத்தாள்கள் முறையாக திருத்தப்பட்டிருந்தால் தேர்வு முடிவுகள் தெரிந்த அன்றே இவர் முதலிடம் பெற்ற மாணவர் என்று அறிவிக்கப்பட்டிருப்பார் அந்த மகிழ்ச்சியை தவறு செய்த ஆசிரியர்கள் வழங்குவார்களா? அந்த நேரத்தில் கிடைக்கும் மகிழ்ச்சியை என்னிப்பார்க்கவேண்டும்.

விடைத்தாள்கள் திருத்தியதில் அலச்சியப்போக்காக இருந்த ஆசிரியர்கள் கைது செய்து தண்டிக்கப்படவேண்டும். அரசு அறிவிக்கப்பட்டுள்ளது போல் பணியிடை நீக்கம் தவறுக்கு தீர்வு ஆகாது.

மறு கூட்டல் மூலம் அதிக மதிப்பெண் பெற்றமாணவனின் இந்த செய்தி அறிந்த முதல் அமைச்சர் கருணாநிதி நேற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர் பாலமுருகனை தலைமை செயலகத்திற்கு அழைத்து பாராட்டி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.

அதுமட்டுமல்ல பாலமுருகன் எந்த கல்லூரியில் படித்தாலும் படிப்பின் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் கருணாநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வி செயலாளர் எம்.குற்றாலிங்கம், இயக்குனர் பி.பெருமாள்சாமி, இணை இயக்குனர் ராஜராஜேஸ்வரி மற்றும் மாணவர் பாலமுருகனின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

விடைத்தாள்கள் திருத்தியதில் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கு! தவறுசெய்த ஆசிரியர்களை கைது செய்து தண்டிக்குமா தமிழக அரசு?

பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் ஆசிரியர்களின் மெத்தனப்போக்கு! விடைத்தாள் திருத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள் ஒரு பாடத்தில் 22 மதிப்பெண் விடுபட்டதால் அதிர்ச்சி.

109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பிறகு, மறு மதிப்பீடு செய்த மாணவர்களுக்கு திருத்திய மதிப்பெண் பட்டியலை அரசு தேர்வுகள் துறை வழங்கி வருகிறது. அதன்படி 1200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்களில், மாணவர்கள் சிலர் குறைந்தபட்சமாக 10 மதிப்பெண்கள் அதிகமாக பெற்றுள்ளனர். அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு 109 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளது தெரிய வந்தது. வணிகவியல் பாடத்தில் அவர் வெறும் 60 மதிப்பெண்கள் பெற்றதாக முதலில் மதிப்பெண் வழங்கப்பட்டது. மறுமதிப்பீட்டுக்கு பிறகு அவர் 169 மதிப்பெண்கள் பெற்றார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியரின் அலட்சியத்தால், சென்னை மாணவருக்கு 22 மதிப்பெண்கள் விடுபட்டுள்ளன. இதனால் கல்லூரியில் அந்த மாணவருக்கு சீட் கிடைக்கவில்லை.

சென்னை, கீழ்ப்பாக்கம் ரெசீனா மெட்ரிக். பள்ளியில் படித்த மாணவர் வி.சி.எஸ்.தீபக். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றார். மொழிப் பாடம் 164, ஆங்கிலம் 151, பொருளியல் 143, வணிகவியல் 142, கணக்கு பதிவியல் 129, வணிக கணிதம் 122 என மொத்தம் 851 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எனினும், கணக்குப் பதிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு 129 கிடைத்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து விடைத்தாள் நகல் கேட்டு பெற்றார். கணக்கு பதிவியல் விடைத்தாளின் 3 பக்கங்கள் திருத்தவே இல்லை என்பதைப் பார்த்து மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மறு மதிப்பீட்டுக்கு தீபக் விண்ணப்பித்தார். மறுமதிப்பீடு செய்யப்பட்ட பிறகு விடுபட்ட பகுதிக்கு 22 மதிப்பெண்கள் கிடைத்தன. அதன்படி மொத்த மதிப்பெண் 873 ஆக உயர்ந்தது.

இதற்கிடையில், சென்னை கல்லூரியில் பிகாம், பிஎஸ்சி விஷூவல் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர தீபக் விண்ணப்பித்து இருந்தார். 75 சதவீதம் மதிப்பெண் இல்லை என்று கூறிய கல்லூரி நிர்வாகம், தீபக் கேட்ட 2 படிப்புக்கும் இடம் கொடுக்காமல் அவரது விண்ணப்பத்தை நிறுத்தி வைத்தது. இதனால் தான் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காமல் தீபக் வேதனை அடைந்தார். மறு மதிப்பீட்டுக்கு பிறகு கிடைத்த 22 மதிப்பெண்களை காட்டி, சீட் வாங்க மாணவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள், பணிக்கு வருவதற்கு முன்பே ஒரு விடைத்தாளுக்கு இவ்வளவு தொகை வழங்க வேண்டும். குறைத்துக் கொடுத்தால் பணிக்கு வரமாட்டோம் என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அதே நேரத்தில் மாணவர்களின் எதிர்காலம் தங்கள் கைகளில் உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடுகிறார்கள்.

பலவிதமான குடும்பச் சூழ்நிலையில் இரவு பகலாக கண்விழித்து மாணவர்கள் படிக்கின்றனர். பதற்றத்துடனேயே தேர்வு எழுதுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றால்தான் நன்கொடை கொடுக்காமல் கல்லூரிகளில் இடம் வாங்க முடியும் என்ற விழிப்புணர்வு இப்போது மாணவர்களிடம் அதிகரித்துள்ளது.

அவர்களின் நம்பிக்கையில் மண்ணை போடும் விதமாக ஆசிரியர்கள் கவனக்குறைவாக விடைத்தாள் திருத்துகின்றனர். நகரங்களில் உள்ள மாணவர்கள் விடைத்தாள் நகல் பெறுவது, மறு கூட்டல் செய்வது, மறுமதிப்பீடு செய்வது போன்ற வசதிகளை பெற முடிகிறது. கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய முடியாமல் விட்டுவிட்டால், விடுபட்ட மதிப்பெண்களை அவர்கள் பெற முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மறு மதிப்பீடு கேட்பவர்களால்தான் விடுபட்ட மதிப்பெண்ணை பெறமுடியும் என்றால் மற்றவர்கள் நிலை என்ன?

கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களை கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் விளையாடிய ஆசியர்கள் தண்டிக்கப்படவேண்டும். தேசத்திற்கு கிடைக்க வேண்டிய பல நல்ல திறமைசாலிகளின் திறமைகள் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்களின் எதிர்காலக் கனவு சிதைக்கப்பட்டுள்ளது. அனு விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம், சந்திராயன் திட்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை போன்றோர்களை உறுவாக்கிய தமிழகம் ஆசிரியர்களின் அலச்சியப் போக்கால் தேசம் நல்ல தலைமுறைகளை இழந்துவிடுமோ என்று நடுநிலையாளர்கள் அச்சப்படுகிறார்கள்.

தவறு செய்த ஆசிரியர்களை கண்டறிந்து தமிழக அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும். கவனக்குறைவாக விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்பது பொது மக்களின் கருத்து.

கடுமையன தண்டனைகளே எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்கும். தண்டனைகளை தொலைக்காட்சி, அச்சு மற்றும் இணைய ஊடகங்கங்களின் மூலம் நாட்டு மக்கள் அறியச் செய்ய வேண்டும். அதுவே தேசபற்றுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வருமா?