.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, October 21, 2008

தந்தை - மகன்களை நிர்வாணப்படுத்தி நீலாங்கரை காவல்துறையின் மனித உரிமை மீறல்!

தொடரும் காவல் துறையின் மனித உரிமை மீறல்!


தந்தை - மகன்களை நிர்வாணப்படுத்தி நீலாங்கரை காவல்துறையின் மனித உரிமை மீறல்!!


காவல் நிலையத்தை முற்றுகையிட்டது தமுமுக!!!


அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

அச்சிறுப்பாக்கம் ஷாஜஹான்




காஞ்சி மாவட்டம் கிழக்கு கடற் கரைச் சாலையில் உள்ளது பனையூர். நீலாங்கரை காவல் நிலை எல்லைக் குட்பட்ட இப்பகுதியின் தமுமுக கிளைத் தலைவராக இருப்பவர் யூசுப். இவரை யும் இவரது குடும்பத்தினரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலை நிகழ்த்தியுள்ளார் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ.


யூசுப் அவரது தம்பி காதர் பாஷா ஆகியோருக்கும், யூசுபின் தந்தை தமீம்ஷா மற்றும் மற்ற தம்பிகள் முஜிபு, பரகத் ஆகியோருக்கும் இடையே தங்கள் சொந்த நிலம் தொடர்பான பிரச்சினை யில் யூசுபின் வீடு தாக்கப்பட்டது.

இதையறிந்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ தனது நீண்ட நாள் கனவு நனவாக கிடைத்த வாய்ப்பாகக் கருதி இதை முழுமையாய் பயன்படுத்தி யூசுபையும் அவரது குடும்பத்தினரையும் கேவலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இப் பிரச்சினையில் தொடர்புடைய இரண்டு தரப்பினரும் காவல் நிலையம் சென்று புகார் அளிக்காத நிலையில், தானாகவே இப்பிரச்சினையில் தலையிட்டு காவலர் களை அனுப்பி இரண்டு தரப்பினரையும் தனித்தனியே காவல் நிலையத்திற்கு வரச் சொல்லியுள்ளார். அவர்களோ காவலர்களிடம், “நாங்களே எங்கள் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள் வோம்’’ என்று சொல்லியுள்ளனர்.

இதையடுத்து ஆய்வாளர் சேகர் பெர்னான்டோ, உதவி ஆய்வாளர் மீனாட்சி சுந்தரத்தையும் சில போலீஸ் காரர்களையும் அனுப்பி இரண்டு தரப்பி னரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வரச் செய்துள்ளார். மாலை 5 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்களிடம், “இப்பிரச்சினை உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டது. ஆகவே நீங்கள் உங்கள் குடும்பத்தார் மீது புகார் கொடுங்கள். அதிகாரிகள் முன்னிலை யில் சமரசம் பேசி புகாரை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என வஞ்சக மாகப் பேசி புகார் பெற்றுள்ளார்.

மறுபுறமோ, “உங்கள் மீது யூசுப் புகார் அளித்துள்ளார், ஆகவே நீங்கள் அவர் மீது புகார் கொடுங்கள்’’ என்று கூற, அவர்களும் புகார் அளித்துள்ளார்கள். ஆனால் அப்புகாரைப் படித்த ஆய்வாளர், “இந்தப் புகார் வேண்டாம். நான் சொல் வது போல புகார் மனு எழுதுங்கள்’’ எனக்கூறி புகார் பெற்றுள்ளார் ஆய்வா ளர் சேகர் பெர்னான்டோ.

புகாரை வலியுறுத்தி பெற்ற ஆய் வாளர், இரண்டு தரப்பினரையும் “சமரசம் பேசலாம் வாருங்கள்’’ எனக்கூறி அழைக்கப்பட்ட இரண்டு தரப்பினரிட மும் இன்னும் சற்று நேரத்தில் துணை ஆணையர் வந்து விடுவார் எனக் கூறியே இரவு 12 மணி வரை காலம் கடத்தியுள்ளார். பிறகு யூசுபின் தந்தை யையும் தம்பிகளையும் ஒன்றுசேர நிர்வாணப்படுத்தியுள்ளார். இதையடுத்து யூசுப், “சார் இதெல்லாம் சரியல்ல, இதுபோல நீங்கள் ஈடுபடுவது நல்லதல்ல’’ எனக்கூற, “நீ மட்டும் என்னடா, நீயும் லுங்கியை அவுருடா’’ எனக்கூற அவரையும் நிர்வாணப்படுத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார்.

இரவு 1 மணிக்கு மேல் காவல் நிலையம் வந்த துரைப்பாக்கம் சரக காவல் துணை ஆணையர் ராதாகிருஷ் ணன், ஆய்வாளர் பெர்னான்டோ இரு வரும் யூசுப் உட்பட அவரது குடும்பத் தினர் அனைவரின் மீதும் உடனடியாக இரவோடு இரவாக கடுமையான குற்றப் பிரிவுகளைக் கொண்டு எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் அனைவரும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர் னான்டோ நிகழ்த்திய மனித உரிமை மீறல் அப்பகுதி முஸ்லிம்களிடம் பெரும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது.

பரங்கிமலை ஒன்றிய தமுமுக செயலாளர் ஜாகீர் இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன், மாவட்டச் செயலாளர் யாக்கூப் ஆகியோரிடம் கூற, மனித உரிமை மீறல் நிகழ்த்திய சேகர் பெர்னான்டோவின் அராஜகத்தைக் கண்டித்து மேற்படி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பரங்கி மலை ஒன்றிய தமுமுக சார்பில் நீலாங்கரை காவல் நிலையம் முற்றுகைப் போராட் டத்தை அறிவிக்க, ஒரே நாளில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் பங்குகொண்டு கைதானார்கள்.

இதுதொடர்பாக மாவட்டத் தலைவர் எம். மீரான் மொய்தீன் அவர்கள் கூறுகையில், “இப்பகுதியில் தொடர்ந்து அனைத்து தரப்பு மக்களிடமும் அதிகார துஷ்பிரயோகத்தைக் கையாளும் நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் சேகர் பெர்னான்டோவிற்கு துரைப்பாக்கம் ஏ.சி. ராதாகிருஷ்ணன் துணை போகிறார். இது வன்மையாகக் கண்டிக்க த்தக்கது. அநியாயமாக பாதிக்கப்பட்ட யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைக்கவும், சேகர் பெர்னான்டோ மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கோரு கிறோம். அந்நடவடிக்கை எடுக்கும்வரை இன்ஷாஅல்லாஹ் மாநிலத் தலைமையின் ஆலோசனையுடன் விரைவில் மாவட்டம் தழுவிய அளவில் பெரும் போராட்டங்களை அறிவிப்போம்’’ என்றார்.

Monday, October 20, 2008

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!

தேமுதிக மாநாட்டு 'சாதனை': பார்க்குமிடமெல்லாம் காலி மதுபாட்டில்கள்!
~~~~~
"சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இது போன்ற மாநாடுகளை பெருநகரங்களில் நடத்துவதை தடைசெய்ய அரசு முன்வருமா?"
சென்னை: விஜய்காந்தின் தேமுதிக இளைஞர் அணி மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்த தொண்டர்கள் குடித்துவிட்டுப் போட்ட பீர் பாட்டில்கள் மற்றும் மதுப் புட்டிகளால் மெரினா கடற்கரையும் அண்ணாசாலை, சிவானந்தா சாலை பகுதிகளும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இந்த மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பெரும்பாலும் நல்ல 'மப்'பில் வந்திருந்தனர்.கையோடு தாங்கள் கொண்டு வந்திருந்து டாஸ்மாக் ஐட்டங்களை நேற்று காலை முதலே அண்ணா சாலை, தீவுத் திடல், மெரினா கடற்கரைப் பகுதிகளில் 'கடை பரப்பி' விட்டனர்.
திறந்த வெளியில் குடித்துவிட்டு காலி மதுப் புட்டிகளையும், பிளாஸ்டிக் குப்பைகளையும் அப்படியே போட்டுவிட்டுச் சென்றதால் சென்னை நகரின் முக்கிய பகுதிகள் நாறிப் போய்விட்டதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.குறிப்பாக குடும்பம் குடும்பமாக சென்னைவாசிகளும், வெளியூர் பயணிகளும் வந்து குவியும் சென்னை மெரினா கடற்கரையில் எங்கும் பீர் பாட்டில்களும், பிளாஸ்டிக் குப்பைகளுமாகக் காட்சி தந்தது மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
மேலும் மணல் பகுதிகளில் உட்கார முடியாத அளவுக்கு தேமுதிக தொண்டர்கள் அசிங்கம் பண்ணி வைத்திருந்ததும், வார இறுதி நாளான நேற்று மக்களை மெரீனா பக்கம் நெருங்க விடாமல் செய்துவிட்டது.இதுபோதாதென்று மஞ்சள் சட்டை அணிந்த சில இளைஞர்கள் பெண்களைக் கிண்டல் செய்வதிலும், கடல் அலைகள் கரையைத் தொடும் பகுதியில் நின்றவண்ணம் அலையில் குளிக்கும் பெண்களைக் கிண்டலடித்தும் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டனர்.'
தொண்டர்கள் எனும் பெயரில் இவர்கள் செய்திருந்த அசிங்கங்களைச் சுத்தம் செய்ய நியாயமாக சென்னை மாநகராட்சிக்கு பெரிய தொகையை வழங்கியிருக்க வேண்டும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர். அரசியல் கட்சி என்ற பெயரில் இவர்களைப் போன்றவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்', என்று அதிருப்தி தெரிவித்தார் இந்த மண்டத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர்.
கடற்கரையே இப்படியென்றால் தீவுத்திடல்....?அங்கு இதை விட பலமடங்கு மோசமான நிலை. இதையும் மாநகராட்சிதான் சுத்தம் செய்தாக வேண்டும்.இன்னொரு பக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 5 மணி நேரத்துக்கும் மேலாக நடுச் சாலையில் மழையில் அவதிப்பட்டனர் பொதுமக்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்துக்கும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறு விளைவிக்கும் இத்தகைய மாநாடுகளை அனுமதிக்கக் கூடாது என பலவேறு மக்கள் நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் அரசு கேட்பதாக இல்லை. அதனால்தான் மக்களுக்கு இவ்வளவு தொல்லை!

Friday, October 17, 2008

இந்து அமைப்புக்கும் - மக்கள் ஓசை தினசரிக்கும் மலேசியாவில் தடை

ஹிண்ட்ராப் என்ற இந்து உரிமை பாதுகாப்பு அமைப்புக்கும், மக்கள் ஓசை தமிழ் தினசரிக்கும் மலேசியாவில் தடை

வியாழக்கிழமை, அக்டோபர் 16, 2008

கோலாலம்பூர்: இந்துக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமான ஹிண்ட்ராப் அமைப்புக்கு (Hindraf) மலேசியா அரசு தடை விதித்துள்ளது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என அந் நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தரவை உள்துறை அமைச்சர் சையத் ஹமீ்த் அல்பார் வெளியிட்டுள்ளார். மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருவதைக் கண்டித்தும், தங்களுக்கும் சம உரிமைகள் கோரியும் போராட்டங்கள் நடந்து வருகி்ன்றன.

இந்தப் போராட்டங்களை ஹிண்ட்ராப் அமைப்பு தான் முன்னின்று நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு இந்த அமைப்பினர் நடத்திய அமைதிப் பேரணி மீது மலேசிய போலீசார் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தினர்.ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவ்வப்போது இந்த அமைப்பின் நிர்வாகிகளை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து வருகின்றனர்.

இந் நிலையில் தான் ஹிண்ட்ராப் அமைப்புக்கே தடையை விதித்துள்ளது மலேசியா அரசு. இது ஒரு சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது.இனவாதத்தை கையில் எடுத்துக் கொண்டு மலாய் மக்களுக்கும் பிறருக்கும் இடையே இந்த அமைப்பு இன மோதலை ஏற்படுத்தி வருவதாகவும், இந்த அமைப்பை தடை செய்யாவிட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்குமே பெரும் ஆபத்தாகிவிடும் என்றும் உள்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.

ஹின்ட்ராப் தலைவர்களிடம் விசாரணை:முன்னதாக கைது செய்யப்பட்ட ஹிண்ட்ராப் தலைவர்களை விடுவிக்கக் கோரி பிரதமரை சந்திக்கச் சென்ற அந்த அமைப்பின் தலைவர்கள் ஜெயதாஸ், செல்வம் மற்றும் சாந்தி ஆகியோர் மீது நேற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அத்துமீறி பிரதமர் இல்லத்தில் நுழைந்ததாகவும், கூட்டம் நடத்தியதாகவும் அவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மூன்று பேரும் டாங்வாங்கி மாவட்டத்தில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக ஹின்ட்ராப் அமைப்பினர் அங்கு குவிந்தனர். அவர்களிடம் ஏஎஸ்பி சிட்னி க்ளைடி ஜெரிமியா விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு ஜெயதாஸ் கூறுகையில், போலீஸார் மக்கள் சேவகர்களாக இல்லை. அரசியல்வாதிகளுக்கு சாதமாக செயல்படுகின்றனர். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. அத்துமீறல் எதுவும் செய்யவில்லை. உரிமைகளை மட்டுமே அங்கு பயன்படுத்தி நியாயம் கேட்டோம் என்றார்.

விடுதலை மனு நிராகரி்ப்பு:‌இந் நிலையில் சிறையில் இருக்கும் 5 பேரும், விசாரணை‌யி‌ன்‌றி‌ பல மாத‌ங்களாக த‌ங்க‌ளை ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வைப்பது ச‌ட்ட ‌விரோதமானது எ‌ன்று கூறி ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்த‌னர். ஆனால் இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

மக்கள் ஓசைக்கு தடை:இதற்கிடையே மலேசியாவின் முன்னணி தமிழ் நாளிதளான மக்கள் ஓசைக்கு அந் நாட்டு அரசு தடை விதித்துள்ளது.அந்தப் பத்திரிக்கையின் ஆண்டு உரிமத்தை மலேசியா புதுப்பிக்க மறுத்துவிட்டது. இதனால் நாளை முதல் அந்தப் பத்திரிக்கையை வெளியிட முடியாத நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து மக்கள் ஓசையின் பொது மேலாளர் பெரியசாமி கூறுகையில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், எங்களது பத்திரிக்கையின் உரிமத்தை இந்த ஆண்டு புதுப்பிக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.இதனால் பத்திரிக்கை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான காரணம் எதுவும் கூறப்படவில்லை. மீறி நாங்கள் பத்திரிக்கையை வெளியிட்டால் எங்களை கைது செய்வார்கள்.

இது குறித்து உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பாரிடம் முறையிடவுள்ளோம் என்றார்.இது பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் என பல்வேறு மலேசிய அமைப்புகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

முஸ்லிம்கள் மீது தீண்டாமைக் கொடுமை! தடுத்து நிறுத்துமா தமிழக அரசு...?

திருவாரூர் மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது தீண்டாமைக் கொடுமை

தடுத்து நிறுத்துமா தமிழக அரசு...?


ஏறிய ஏணியை எட்டி உதைத்துள்ள தி.மு.க எம்.எல்.ஏ.


கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம்ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று எடுத்தெரிந்து பேசியுள்ளார்.

======

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் கம்பூர் ஆகும். கம்பூர் கிராமத்தைச் சுற்றி வடக்குவேரி, திருபாம்புரம், வள்ளார் கோவில்பத்து ஆகிய கிராமங்களைச் சுற்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வாழ்ந்து வருகின் றனர். கம்பூர் கிராமம் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு, புதுமனைத் தெரு ஆகிய நான்கு தெருக்களில் மட்டும் சுமார் 150 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.


இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.


கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.


அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது. பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.


பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.


இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’ என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆனால் ஜமாஅத் பெரியவர்களின் ஆலோச னைக்கு இணங்க, அருகில் உள்ள சுரைக்காயூர், மாளிகை நத்தம், துலார், கருப்பூர், திருபாம்பூர் ஆகிய கிராமங் களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடை பெற்றது.


திருபாம்புரத்தைச் சேர்ந்த நாட்டாண்மை என்று அழைக்கப்படும் கிரா மத் தலைவர் கலியபெருமாள், கம்பூர் என்ற ஊரே இல்லாத நிலையில் பேச்சு வார்த்தை எதற்கு? என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். ஐந்து கிராம பஞ்சாயத் திற்கும் அவர் கட்டுப்படாததால் ஜமாஅத் சார்பில் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கம்போல் காவல்துறை புகாரை கிடப்பில் போட்டது. இதையடுத்து நன்னிலம் டி.எஸ்.பி. நாராயணசாமியிடம் புகார் அளித்துள்ள னர். இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருபாம்புரம் பகுதி மக்களுக்கு ஆதர வாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார்.


பொது விநியோகக் கடை, முஸ்லிம் களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் திருபாம்புரம் பகுதியில் தான் அமைந்துள்ளது. ஆனால் திருபாம்புரத் தைச் சேர்ந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 5.9.08 அன்று முதல் முஸ்லிம் களுக்கு டீ கொடுக்கக்கூடாது, பொது விநியோக கடையில் பொருட்களை வழங்கக்கூடாது, விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் செல்லக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.


இதனால், முஸ்லிம்கள் திருப்பாம்புரத் தில் டீ குடிக்கச் சென்றால் டீ தர மறுத் துள்ளனர். டிராக்டர் உழுவதற்கு எடுத் துச் சென்றால் இரும்பு பைப்கள், உருட் டுக் கட்டைகளை சாலையில் போட்டு தடுத்துள்ளனர். வயல் வேலைகளுக்கு கூலி ஆட்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் கம்பூர் பகுதி முஸ்லிம்களிடம் பேசினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்செயல் இந்திய இறையாண்மை சட்டத்தின்படி தங்களது வாழ்வாதார சூழல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கம்பூர் முஸ்லிம்கள் மனம் வெதும்புகின்றனர்.


இந்நிலையில் காவல்துறையிடம் திருபாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராமு, ரவி, கலியபெருமாள், பாண்டியன் ஆகியோர் மீது கம்பூர் முஸ்லிம்கள் புகார் அளித்தனர். மேலும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் இருதரப் பினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்குப் பின்பும் அதே நிலை நீடித்தது. மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொலைப்பேசி யில் தொடர்புகொண்டு கம்பூர் தீர்வு காண வலியுத்தினர். திருவாரூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 22.09.08 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சமூக பகிஷ்கரிப்பு நடவடிக் கையைக் கைவிடுவது என்றும், விவசாய கூலி வேலைக்கு செல்வதை தடுத் தாலோ அல்லது கடைகளில் பொருட்கள் வழங் கப்படவில்லை என்று தெரிந் தாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காணாமல் போன கம்பூர் ஊர் பெயர்ப் பலகை சம்பந்தமாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், இருதரப்பினரும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்தனர்.


ஆனால் இந்த நிலையிலும், எழுதப் படாத தீர்ப்பாக திருபாம்புரம் பகுதி மக்கள் கம்பூர் முஸ்லிம்கள் மீது தீண்டா மையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று தெரிந்து எடுத்தெரிந்து பேசியுள்ளார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் ஜீவாதார உரிமை களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என மௌனமாக காத்துக் கொண்டிருக் கின்றனர் கம்பூர் முஸ்லிம்கள்.



Thursday, September 18, 2008

சிறைவாசிகள் விவகாரம்: மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்!

வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் தமுமுக தொடர்ந்து வலியுறுத்தல்

Source: தமுமுக அதிகாரபூர்வ இணையதளம்.

குணங்குடி ஹனீபா விடுதலை செய்யப்படாதது ஏன்?
அ. அப்துல் காதர், மந்தைவெளி, சென்னை-28

கேள்வி: அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்தாண்டு களுக்கும் மேலாக சிறைப்படுத்தப் பட்டுள்ள 1,405 கைதிகளை விடுதலை செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பல்லாண்டு களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகள் எத்தனைப் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்?

பதில்: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியான உடனேயே, பத்தாண்டுகளைக் கடந்தும் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் கைதிகளை எவ்வித பாரபட்சமும் காட்டாமல் விடுதலை செய்ய வேண்டும் என த.மு.மு.க. தமிழக அரசை வலியுறுத்தியது.

இதுதொடர்பாக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் முஸ்லிம் கைதிகள் பாரபட்ச மாக நடத்தப்படுவதையும் சுட்டிக்காட்டி, பத்தாண்டுகளை சிறையில் கழித்த முஸ்லிம் கைதிகளை பாரபட்சமில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் எனக் கேட்டிருந்தார்.

முஸ்லிம் சிறைவாசிகளை அண்ணா நூற்றாண்டு விழாவில் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமுமுகவின் மாநிலச் செயற்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், தமிழக முதல்வருக்கு அண்மையில் எழுதிய நினைவூட்டல் கடிதத்தில் கூறியிருப்பதாவது “பேரறிஞர் அண்ணா அவர்களது நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதி களை அவர்களது எஞ்சிய தண்டனை காலத்தை மன்னித்து முன்கூட்டியே விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம். ஆனால் இவ்வாறு விடுதலை செய்யப் படும் கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மிகச் சிலர் மட்டுமே இடம் பெற்றுள் ளார்கள் என்று அறிய வருகிறேன். வகுப்புவாத மோதல் தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு அண்ணா நூற்றாண்டு விழாவில் விடுதலையாகும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அறிய வருகிறேன்.

கடந்த காலங்களில் உணர்ச்சி களுக்கு அடிப்பட்டு குற்றங்கள் புரிந்த இந்த முஸ்லிம் கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருந்துள்ளது நிச்சயமாக அவர்களைத் திருத்தி உள்ளது. இருப்பினும் இவர்கள் மீது பயங்கரவாத முத்திரைக் குத்தப்பட்டு மற்ற கைதி களுக்கு அண்ணா நூற்றாண்டின் போது அளிக்கப்படும் சலுகை மறுக்கப் படுவது அரசின் மீது சிறுபான்மை சமுதாயத்தின் ஒரு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சில சுற்றறிக்கைகளையும் அரசாணை களையும் சுட்டிக் காட்டி அதிகாரிகள் முஸ்லிம் கைதிகளுக்கு அண்ணா நூற்றாண்டு விழாச் சலுகை கிடைக்க விடாமல் தடுத்திருக்கக் கூடும். ஆனால் தாங்கள் இந்த பிரச்சனையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டும் வகையில் ஆயுத சட்டம் மற்றும் வெடிபொருள் சட்டப் பிரிவின் கீழ் தென்மாவட்டக் கலவர வழக்குகளை தாங்கள் துணிந்து வாபஸ் பெறச் செய்தீர்கள். தென்மாவட்டக் கலவரங் களைப் போல் கோவை மற்றும் தமிழ கத்தின் சில இடங்களில் நடைபெற்ற மோதல்கள் உணர்ச்சி வெளிப்பாடாக நடைபெற்ற மோதல்கள் தான். கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வு துறையின் தலைவர் திரு. பரம்வீர் சிங் அவர்கள் கோவை சம்பவங்களை பற்றிக் குறிப்பிடும் போது, “இந்நிகழ்வுக்கு பயங்கரவாத முத்திரை குத்துவதோ, தீவிரவாத சாயம்பூசுவதோ சரியில்லை. இது வெறும் ஒரு மோதல் சம்பவம் மட்டுமேயாகும்’’ என்று குறிப்பிட்டார். இந்தக் கருத்தை கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தனி நீதிமன்ற நீதிபதியும் தனது தீர்ப்பில் பிரதிபலித்தார்.

எனவே, தென்மாவட்டக் கலவர வழக்குகளில் தங்கள் அரசு மேற் கொண்ட அதே நெறிமுறையைப் பின்பற்றி, வகுப்புவாத வழக்குகள் என்று வர்ணிக்கப்பட்ட வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளையும் அவர்களது எஞ்சிய தண்டனைக் காலத்தை மன்னித்து விடுதலை செய்ய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா தருணத்தில் ஆவன செய்ய அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

இவர்கள் தொடர்பான வழக்கு மேல்முறையீட்டிற்குச் சென்றுள்ளது, எனவே இது குறித்து முடிவு செய்ய இயலாது என்று அதிகார வர்க்கம் மேலும் தடையைப் போடலாம். அறிஞர் அண்ணாவின் 98 மற்றும் 99ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2006 மற்றும் 2007ம் ஆண்டுகளிலும் அதற்கு முன்பும் பொது மன்னிப்பில் விடுதலையான ஆயுட்கைதிகளில் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றங்களில் மேல் முறையீடு நிலுவையில் இருக்கும்போது பொது மன்னிப்பைப் பெற்றவர்கள் என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
ஒவ்வொரு மணிப்பொழுதிலும் முஸ்லிம் சமுதாயத்தின் பல்வேறு தரப்பினர் என்னைத் தொடர்பு கொண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவில் கைதிகளுக்கு அளிக்கப்படும் சலுகை ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகள் தொடர்பாகத் தங்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே தயவு கூர்ந்து தாங்கள் சிறுபான்மை மக்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில் இதுகுறித்து உரிய உத்தரவை உடனடியாக இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’’
அண்ணா நூற்றாண்டு விழாவை யொட்டி விடுதலை செய்யப்பட்ட 1,405 கைதிகளில் 35 முஸ்லிம் ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக முஸ்லிம் கைதிகளின் எண்ணிக்கை வருமாறு (சென்னை 4, வேலூர் 4, திருச்சி 2, சேலம் 1, கோவை 7, மதுரை 8, நெல்லை 8, கேரளாவைச் சேர்ந்தவர் 1) இவர்கள் வகுப்புக் கலவரங்கள் தொடர்பான குற்றத்தில் தண்டிக்கப்படாதவர்கள்.
வகுப்புவாத மோதல்களில் சிறைப் பட்டோரை விடுதலை செய்வதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமுமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
============================
அஸ்அத் அலி, திருவாரூர் கேள்வி: பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் குணங்குடி ஹனீபா அவர்கள் அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலை செய்யப்படாதது ஏன்?

பதில்: நீதிமன்றத்தால் ஆயுள் (14 ஆண்டு கால) தண்டனை வழங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவோர் மட்டும் இப்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குணங்குடி ஹனீபா அவர்கள் தண்டனைக் கைதி அல்ல, விசாரணைக் கைதியாவார். அவருக்காக தமுமுக தொடர்ந்து வாதாடும், போராடும்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நளினி 17 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார். அவரை காங் கிரஸ் தலைவி சோனியா, அவரது மகள் பிரியங்கா ஆகியோர் மன்னித்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை.
இதுபோன்ற பாரபட்சங்களும் கண்டிக்கத்தக்கதே.

Wednesday, September 17, 2008

தமிழக முதல்வர் கருணாநிதி முஸ்லிம்களின் பாதுகாவலரா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

தமிழக முதல்வர் கருணாநிதி முஸ்லிம்களின் பாதுகாவலரா?

ஒரு நபரை, ஒரு மாநிலத்தின் முதல்வரை விமர்ச்சனம் செய்வதென்றால் அவருடைய நிரைகளையும், குறைகளையும் இணைத்து சுட்டிக்காட்டுவதே தர்மம். அதனடிப்படையில் மற்ற ஆட்சியாளர்களைவிட தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலுள்ள இன்றைய ஆட்சி பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. பல புதிய தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் தமிழகத்திற்குள் கொண்டு வந்து புரட்ச்சி செய்துள்ளதென்பது உண்மை.



முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள்.



இருப்பினும் தமிழகத்தை ஆண்ட எந்த ஆட்சியாளரும், தமிழக முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி, ஓரவஞ்சனைப் போக்கோடு நடத்தத் தவறியதில்லை என்பதே வரலாறு. அந்த வரிசையில் மற்றவர்களைவிட முஸ்லிம் சமூகத்திற்கு அதிகம் கடமைப்பட்டுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ந்து பட்டை நாமம் போடுவதையும், முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி சட்டி சட்டியாக அல்வா கொடுப்பதிலும், முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதிலும் சாதனை படைத்துள்ளார் என்பதும் யாராலும் மறுக்க இயலாத பேருண்மை.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளுக்கடைகளின் மூலம் தமிழக அரசு வருட வருவாயாக பெற்றது 4750 கோடிகள். அதன்பின்னர் முதல்வர் கருணாநிதி அவர்கள் ஆட்சியின் துவக்கத்தில் அது 8000 கோடியாக உயர்ந்து, இன்றைய நிலவரப்படி இது இன்னும் பரினாம வளர்ச்சி பெற்று குடிகாரர்களால் அரசுக்கு வரும் வருமானம் 10000 கோடிரூபாய்கள் என்று அறிகிறோம். இதில் குடிகாரர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் 10 வகையான புதிய சரக்குகளை அரசு டாஸ்மார்க் கடைகளில் அறிமுகப்படுத்துகிறார் முதல்வர் கருணாநிதி. எனவே வரும் ஆண்டுகளில் அரசுக்கு வருமானம் 12 கோடியைத் தாண்டும். பிறகு ரேசன் கடைகளில் 1 ரூபாய்க்கு 2 கிலோ அரசி என்று போட்டுவிட்டு மக்களை திசைதிருப்பிவிடுவார் கருணாநிதி. ஒரேயடியாக, அரசியோடு சேர்த்து குடிமக்களுக்கு சிரமமில்லாமல் ரேசன் கடைகளிலேயே சாராயத்தையும் ஊற்றிவிட்டால் இன்னும் விற்பனை அதிகமாகும், அரசு மேலும் இலாபமடையலாம். இப்படி நாட்டில் குடிகாரர்களை ஊக்குவித்து, தமிழக குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவருவதிலும் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் சாதனை சாதனை படைக்க நினைத்துவிட்டார் போலும்.


இதற்காகவேண்டியா உயிரைப் பணயம் வைத்து தேர்தல் பணியாற்றி பதவியில் நாம் அமர்த்தினோம்?. நினைப்பதற்கே வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது. 'நான் சிறுபான்மை சமுதாயத்தின் பாதுகாவலன், முஸ்லிம்களின் உற்றதோழன். முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு தீங்கு என்றால் அது என் பிணத்தின் மீதுதான் நடைபெறும்' - இது எங்கோ கேட்ட குரலல்ல, நம் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் பழைய சூளுரைகள். கடந்த 1997ம் ஆண்டு கருணாநிதி அவர்களின் ஆட்சியில் கோவை கலவரத்தின் போது 19 அப்பாவி முஸ்லிம்களை, சங்பரிவார வெறியர்கள் அரசின் காவல்துறையும் இணைந்து கொன்று குவித்து பிணமாக்கியது தனிவிஷயம்.


அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 19 அப்பாவி முஸ்லிம் குடும்பங்களையோ, கலவரத்தில் கோடிக்கணக்கான தங்கள் சொத்து சுகங்களை இழந்த முஸ்லிம் மக்களையோ கண்டுகொள்ளாமல், முஸ்லிம்கள் குண்டு வைத்தார்கள் என முதியவர்கள், நோயாளிகள், பள்ளிமாணவர்கள், தெருக்கடைக்கு டீ குடிக்கப்போனவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை விசாரணைக் கைதிகளாக கோவை சிறையில் 9 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வாட்டி வதைத்தவர்தான் இந்த முத்தமிழ் அறிஞர் முதல்வர் கருணாநிதி. அதில் 100க்கும் மேற்பட்டோர் தங்கள் வாழ்நாளில் 11 வருடங்களை சிறைகளிலேயே இன்றும் தொலைத்துக் கொண்டு இருப்பதை நாடே அறியும். தீவிரவாதிகள் என்ற அக்மார்க் முத்திரை குத்தப்பட்டு நிம்மதி இழந்து நிற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று சிறைகளில் வைத்து பாதுகாக்கின்றாரா கருணாநிதி? இதற்குத்தான் தன்னை முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று சொன்னாரா? எந்த அரசியல் கட்சிகளாலும், தலைவர்களாலும், முஸ்லிம் சமுதாயத்திற்கு பாதுகாப்பில்லை. ஏன் அந்த தலைவர்கள் கூட அடுத்தவர்களின் பாதுகாப்பில்தான் உள்ளனர்.


எனவே முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாப்பதற்கு படைத்த அல்லாஹ் போதுமானவன்.


இதற்கிடையில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் விதமாக முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மற்றுமொரு துரோகத்தைச் செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி 7 வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் சுமார் 1405 பேரை தமிழகச் சிறைகளிலிருந்து விடுவித்துள்ளார்.


குற்றவாளிகள் என்று சிறையில் அடைக்கப்பட்டோர் திருந்தி வாழ்வதற்காக வாய்ப்பளித்து அவர்களை விடுவிக்கும் அதிகாரம் மத்திய மாநில அரசுகளுக்கு உண்டு, அதை நாம் மறுக்க வில்லை. முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுவித்த 1405 ஆயுட்கைதிகள் செய்த குற்றங்களையும், அவர்கள் கழித்த தண்டனைக் காலங்களையும் ஒப்பிடும்போது, தமிழகச் சிறைகளில் 11 வருடங்களாக வாடும், கோவை அப்பாவி சிறைவாசிகள் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அரசு விடுதலை செய்வதற்கு முழு தகுதியானவர்கள். விடுவிக்கப்பட்ட 1405 கைதிகளைவிட தமிழக அரசு விடுவிப்பதற்கு அதிகவாய்ப்புகளும், காரணங்களுமுள்ள கோவை குண்டுவெடிப்பு நிகழ்வில் பொய் வழக்கு போடப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யாமல் தமிழக முதல்வர் கருணாநிதி புறக்கணித்தது ஏன்? அவர்களை அலட்சியம் செய்தது ஏன்? விடுதலை செய்யப்பட்ட 1405 கைதிகளில் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்லாதவர்களே.



விடுதலைசெய்யப்பட்டவர்கள்



  • அவர்களில் பட்டப் பகலில் பிறரை வெட்டிக்கொலை செய்த கொலைகாரர்கள், கள்ளச் சாராயம் காய்ச்சியோர் என்று பலரும் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை அதிரச்செய்த மதுரை பெண் கவுன்ஸிலர் லீலாவதி கொலை வழக்கில் கைதாகி சிறைசென்றவர்களும் இதில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் அடியாட்களான இவர்களை, உச்சநீதிமன்றம் சமுதாய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்று அறிவித்தது. சென்னை உயர்நீதிமன்றம் அந்த குற்றவாளிகள் 6 பேருக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது.



இத்தகைய கொடும் குற்றவாளிகளெல்லாம் விடுதலை செய்யப்படும் போது, தாங்கள் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றாலும், அந்த தண்டனை காலத்தைவிட அதிகமான காலங்கள் (11 வருடங்கள்) சிறையில் வாடி வதங்கிவிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் விட்டது வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது.


இதற்கு மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அது இவ்வருடம் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்படவேண்டிய கைதிகளின் பட்டியலை தமிழக அரசு அனைத்து சிறைகளிலும் கடந்த ஆகஸ்ட் மாதமே எடுக்கத் தொடங்கியது. அப்போதுதான் தினமலர் போன்ற துவேஷப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் தவ்பீக் என்பவரை சர்வதேச தீவிரவாதியாகக் காட்டி தொடர்ந்து பதட்டமான செய்திகளை வெளியிட்டு அரசுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தன. ஒருவேளை அதற்காகத்தான் தமிழக அரசு முஸ்லிம் சிறைவாசிகளை இந்த பட்டியலில் இணைக்க தயக்கம் காட்டியிருக்கிறதோ என்று சந்தேகிக்கிறோம்.


எனினும் தினமலர் போன்ற பார்ப்பன வெறிபத்திரிக்கையின் அரசுவிரோதப் போக்கை கண்டு அஞ்சாமல், தமிழக முஸ்லிம் சிறைவாசிகளின் மறுவாழ்வை கவனத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்ட 1405 நபர்களோடு கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 11 வருடங்கள் சிறையிலுள்ள அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறோம்.

  • கலைஞர் அவர்களே! வழக்கம்போல முஸ்லிம் சமுதாயத்திற்கு இழைக்கப்டும் அநீதிகளுக்கெதிரான இந்த நீதியின் குரலை செவிமடுக்காமல் அலட்சியம் செய்தால், வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தங்களுக்கு பாடம்புகட்டி தக்க பரிசளிப்பதைத் தவிர எம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வேறு வழியில்லை என்பதை முன்னறிவிப்பாக சொல்லிக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் அவர்களே! நீங்கள் தமிழகத்திலுள்ள அனைத்து மதுபாணக்கடைகளையும் இழுத்து மூடிவிட்டு, தமிழகச் சிறைகளில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை உடனடியாக விடுதலை செய்துவிட்டு பின்னர் நான் முஸ்லீம்களின் தோழன்! முஸ்லிம்களின் பாதுகாவலன் என்று கூறுங்கள். தமிழக முதல்வர் செய்வாரா? குறிப்பு:- இங்கு தமிழக முதல்வரை பற்றிய சில உண்மைகளை எழுதியுள்ளதால் மற்ற அரசியல்வாதிகள் அனைவரும் உத்தமர்கள் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம். தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் துரோகம் செய்தவர்களே!. நாம் பார்த்த வரையில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

Source: http://www.tmmk.in/


தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் முத்துப் பேட்டை பலமுறை பாதிக்கப் பட்டுள்ளது. பதற்றத்திற்குள் ளாகியுள்ளது.

இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத் தின் நோக்கமே முஸ்லிம் பகுதி களை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங் களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான் மையாக வாழும் பகுதிகளில், ஆபாச மாகவும், வெறித்தன மாகவும் கோஷ மிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டை களை அடிப்பது, பட்டாசுகளை வெடிப்பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.


`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளை களே பாகிஸ்தானுக்கு ஓடுங் களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.


மேற்கண்ட சம்பவங்களைக் காலங் காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறு மையின் விளிம்புக்கே போன முத்துப் பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முர மாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடி யுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008WP) கூறுகிறது.

ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதி யைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப் பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு () முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல் படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்ற னர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக் களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு () முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட் டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறி யுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.


ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தி யுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.
சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாச லுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள் ளுங்கள்என்று முஸ்லிம்களுக் குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.


காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.


எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடு மையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.


  • இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப் பேட்டையில் காவல்துறை மிகச் சிறப்பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.


செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.


பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக்குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களை யெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந் துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத் திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.

Monday, September 15, 2008

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்
Source: http://www.tmmk.in/news/999679.htm

குண்டுவெடிப்புகளைத்தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சரும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் பதவி நீக்கப்படட தமுமுக கோரிக்கை
குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
நமது நாட்டின் தலைநகரம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற மிக மோசமான தொடர் குண்டு வெடிப்புகளைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் குண்டுவெடிப்பில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் விரைவில் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பத் தமுமுக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றது.



டெல்லியில் நேற்று மாலை பொதுமக்கள் திரளாகக் கூடும் இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் நிச்சயமாக காட்டுமிராண்டிகளேயாவார்கள். கடுகளவு மனிதநேயமும் இல்லாமல் அப்பாவி மக்களைக் கொல்லும் நோக்கில் இந்தப் படுபாதக செயல்களைச் செய்த உண்மை குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.


தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு நகரங்களில் டெல்லியில் நடைபெற்றது போன்ற குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என்று கூறிச் சிலர் கைதுச் செய்யப்படுகிறார்கள். இருப்பினும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதினால் தான் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. குண்டுவெடிப்புகள் தொடர்பாக அனுப்பபடும் மின்னஞ்சல்களின் அடிப்படையில் யூகங்கள் வெளியாகி விசாரணைகள் நடைபெறுகின்றன. அதிலும் கூட அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது மின்னஞ்சல் நவிமும்பையில் அபிசேக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து கென்னட் ஹேவுட் என்ற அமெரிக்கர் ஒருவரால் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அமெரிக்கர் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளில் உண்மை குற்றவாளிகள் கைதுச் செய்யப்படாமல் அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதே தொடர் அசம்பாவிதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலை ஏற்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணனும் தான் காரணமாக உள்ளார்கள். இந்த இருவரும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் பிரதமரைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழகத்தில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்தவர்கள் முஸ்லிம் அமைப்பினர் அல்ல. மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருமுறை குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது பஜ்ரங் தள அமைப்பினர் இறந்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் தானே, பான்வெல், வார்சி போன்ற ஊர்களில் பொது இடங்களில் குண்டு வெடித்த போது மாராட்டிய காவல்துறை சனாதன் சான்ஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுச் செய்துள்ளது. சமீபத்தில் கான்பூரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்து பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் அதில் முழுப் பலனையும் பெறுவதற்காகப் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சக்திகள் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும். குஜராத் முதல்வர் மோடி முன்கூட்டியே டெல்லியில் குண்டுவெடிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். இதே நேரத்தில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைதுச்செய்யப்பட்டோரை விசாரித்த போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை என்று அஹ்மதாபாத் காவல் இணை ஆணையாளர் ஆசிஸ் பாட்டியா குறிப்பிட்டுள்ளார். எனவே டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரிக்காமல் பல்வேறு கோணங்களில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விசாரித்து உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Friday, September 12, 2008

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு!

வேலூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் காவல்துறையின் அடிதடி அத்து மீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.



ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதும், சட்டஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும் அந்தந்த நாட்டிலுள்ள காவல்துறைகளின் கடமையாகும். தீமைகளை தடுத்து, குற்றவாளிகளை திருத்தி, மக்களின் தோழனாக அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கவேணடும். அதற்குத்தான் அவர்களுக்கு காலவ்துறை என்று பெயரிடப்பட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. தனது காக்கிச்சட்டை சீருடையயை அணிந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு காவல்துறையினரும் இப்படித்தான் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.


ஆனால் சமீபத்தில் நடந்த வேலூர் நிகழ்வுகள் தமிழகத்தின் காவல்துறையினர் தாங்கள் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனது கடமையை மறந்து, திட்டமிட்டே தமிழக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.






கடந்த 01-09-2008அன்று திலமலர் நாளிதழின் கம்யூட்டர் மலரில் எங்கள் உயிரிலிலும் மேலான முஸ்லிம்களின் ஒப்பற்றத் தலைவர் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டு புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் முஸ்லிம்களின் தன்மான உணர்வுகளை சீண்டிவிட்டது சங்பரிவார தினமலம்.


தமிழக முதல்வரே! அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை விநாயகர்சதுர்த்தியின் நேரத்தை பயன்படுத்தி கலவர பூமியாக்க தினமலம் கும்பல் திட்டம் தீட்டியுள்ளதை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை அறியாமல், கடந்த 2-08-2008 அன்று வேலூரில் தினமலம் கும்பலை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளது தமிழக காவல்துறை.






ஆர்ப்பாட்டத்திற்கான காரணமென்ன? அவர்களது கோரிக்கை என்னவென்று கேட்காமல் கூட்டத்தை களைப்பதாகக் கூறி உரிமை கேட்டு ஜனநாயக வாழியில் போராடிய மக்கள் மீது தடியடி என்ற போர்வையில் தமிழக காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.




களத்திலிருந்த காவல்துறை உயர் அதிகாரி அறிவுச்செல்வம் ஆர்ப்பாட்டத்திலிருந்த முஸ்லிம் தலைவர்களை தரைக்குறைவாக, கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.






  • சர்வதேசச் சமுதாயத்தின் மிகப் பெரும் தலைவர் எங்கள் உயிரிலிலும் (இந்த வார்த்தையை வெரும் சொல்லாகக் எண்ணிவிட வேண்டாம்) மேலான எங்கள் இறைத்தூதரை இழிவுபடுத்தி கேளிச் சித்திரம் வெளியிட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வெகுண்டெலச் செய்து சட்டம் ஒழுங்கை சீர்குழைத்த தினமலம் கும்பலை கைது செய்வதை விட்டுவிட்டு ஜனநாயக ரீதியில் உரிமை கேட்ட மக்களை அடக்கி ஒடுக்குவது ஜனநாயக ஆட்சிக்கு அழகல்ல என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கறோம்.


தினமலம் கும்பலை சில நிமிட நேரத்தில் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமலல்ல அரசிடம் கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஆர்பாட்டத்திலிருந்தவர்கள் ஒரு சில அல்லது நூறு காவல்துறையின் லத்திக்கு அஞ்சி விட்டார்கள், அல்லது தோட்டாக்களுக்கு பயந்து விட்டார்கள் என்று காவல் துறையே நீங்கள் எண்ணிவிட வேண்டாம். நாங்கள் ஆட்சியாளர்களையும் சட்டத்தையும் மதிப்பவர்கள்.



காவல்துறை உயர் அதிகாரி அறிவுச் செல்வம், ஏ.டி.எஸ்பி. இராமதாசு, டி.எஸ்.பி. சரவணன் ஆகியோரின் தவறான நடவடிக்கையால் எங்கள் சகோதரர்கள் பலர் காவல்துறை கருப்புஆடுகளின் கொலைவெறித் தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமணையில் உள்ளனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.


ஆட்சியாளர்களே! அரசியல்வாதிகளே! உங்களுக்கொன்றை சொல்லிக் கொள்கிறோம் உங்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்ப்பது மக்களாச்சி நடத்துவதற்குத்தான் மக்களை ஆட்டிவைப்பதற்கல்ல.


சீண்டிப்பார்ப்பது, தூண்டிவிடுவது, உசுப்பிவடுவது இவைகளுக்கெல்லாம் மிகப் பெரிய விலைகொடுத்துள்ளதை கடந்த கால வரலாறுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. ஜப்பான் 1941ம் ஆண்டு (Pearl Harbor) ஹவாய் துறைமுகத்தை தவிடுபொடியாக்கி அமெரிக்காவை சீண்டியதன் விளைவு 1945 ஆகஸ்டு 6ம்நாள் ஹீரோசிமா நாகசாயிகள் நாசமாய்போன வரலாறுகள் மனித குலம் மறக்கமுடியாதவை.


ஆட்சிக்கு வரும் ஒவ்வொறு ஆட்சியாளர்களும் முஸ்லிம்களை குறிவைப்பதையே தனது கொள்கைகளாகக் கொண்டுள்ளனர் இதில் யாரும் விதிவிலக்காக எங்களுக்கு தெரியவில்லை.


முஸ்லிம்களை சீண்டிய தினமலம் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன அதல் முதல் அடி அமீரகத்தில் அதன் இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாகும். எங்கள் அடுத்த இலக்கு என்ன என்பதை, காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு உலகிற்கு அறிவிப்போம்.


காலங்காலமாக முஸ்லிம்களை மட்டுமே பழிவாங்க துடிக்கும் ஆட்சியாளர்களே! தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். ஜாதி அரசியல் மலிந்து விட்ட தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை ஜாதிகள் உள்ளன என்று நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. ஆனால் முஸ்லிம் வாக்குகளுக்கு ஜாதிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.



1946ல் நடந்த பொதுத் தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மகாணத்தில் 29 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட வரலாறு இந்த சமுதாயத்திற்கு உண்டு 1953ல் இராஜியின் மந்திரி சபைக்கு ஆதரவளித்து அவரது ஆட்சியைக் காப்பாற்றிய பெருமையும், 1954ல் குடியாத்தம் தேர்தலில் காமராசரை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்ததிலும், 1962ல் முதன் முதலாக திமுகவுடன் கூட்டணி வைத்து 50சீட்டுக்களை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்த பெருமையும் எங்கள் சமுதாயத்திற்கு உண்டு.



சட்டையைக் கிழித்தும், மண்டையை உடைத்தும், பாட்டில்களை வீசியும் ரகலை செய்யும் சென்னை மாநகராச்சி மாமன்றதை கண்னியத்தோடு 1965 ல் துணை மேயர் பொருப்பு வகித்தும், 1967ல் மேயர் பொருப்பு வகித்தும் அந்த மாமன்றத்தை கண்ணியத்தோடு வழிநடத்திய பெருமை இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு என்பதை தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மறந்தவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.


சமீபத்தில் தமிழக வாக்காளர் பட்டியலை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதில் மாவட்ட வாரியாக தொகுதிகளை பிரித்தெடுத்து அதில் முஸ்லிம் வாக்காளர்களை மட்டும் இணம்கண்டு பார்த்த போது நம பலத்தைக் கண்டு உண்மையில் நாம் அதிர்ந்தேவிட்டோம்.



இதோ நாங்கள் இணங்கண்டு புறப்பட்டு விட்டோம். முதல்வர் அவர்களே குறித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்தின் அடுத்த ஆட்சியாளர் முஸ்லிம் சமுதாயம் யார் முகத்தின் முன் விரலை காட்டுகிறதோ அவர் தான் ஆட்சியாளர். தமிழக சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களின் கைவசம் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உளவுத்துறையினரை அழைத்து சரியான புள்ளிவிபரத்தை உங்களுக்குத் தருமாறு ஆணையிட்டுப்பாருங்கள்.



தமிழக முதல்வரே! உரிமைக்காகப் போராடும் எம் முஸ்லிம் மக்களை நோக்கி உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இனியும் தனது லத்தியை சுழற்றினால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதற்கு நீங்கள் தகுந்த விலைகொடுக்க வேண்டியிருக்கும். உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த தன் உயிரைப் பணையம் வைத்து களப்பணியாற்றிய எம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உங்களை வீட்டுக்கு அனுப்பத் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். காலச்சக்கரம் சுழலக்கூடியது என்பதை மறந்துவிடாதீர்கள்.


எங்களுக்கு பிரச்சார மேடைகளோ, வாகனங்களோ தேவையில்லை. அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிக்க, இருந்த இடத்திலிருந்துகொண்டு செய்திகளை கொண்டு சேர்க்க எங்களால் முடியும். அத்தகைய வலிமையை அல்லாஹ் எங்களுக்கு வழங்கியிருக்கிறான் என்பதை அடக்கத்துடன் தெரிவிக்கிறோம்.


எனவே மாண்பு மிகு தமிழக முதவர் அவர்களே வேலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுங்கள் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள் அல்லது முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட தயாராகி வருகிறார்கள்.