.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 17, 2008

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

காவல்துறையே நடத்திய முத்துப்பேட்டைகலவரம்

Source: http://www.tmmk.in/


தமிழக அமைதியைக் குலைத்து வரும் இந்து முன்னணி உள்பட சங்பரிவார் கும்பலுக்கு திருவாருர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒரு முக்கிய குறியாகும். விநாயகர் ஊர்வலம் என்ற போர்வையில் இந்து முன்னணி பாஜக வெறிக்கும்பல் நடத்திவரும் கலவர பேரணியில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் முத்துப் பேட்டை பலமுறை பாதிக்கப் பட்டுள்ளது. பதற்றத்திற்குள் ளாகியுள்ளது.

இந்து முன்னணி கும்பல் நடத்தும் வெறி ஊர்வலத் தின் நோக்கமே முஸ்லிம் பகுதி களை ரணகளமாக்குவது தான். இதை பல்வேறு இடங் களில் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் மட்டுமே வாழும் பகுதிகள் மற்றும் முஸ்லிம்கள் மிகப் பெரும்பான் மையாக வாழும் பகுதிகளில், ஆபாச மாகவும், வெறித்தன மாகவும் கோஷ மிட்டு சண்டைக்கு இழுப்பது, பள்ளி வாசல்களுக்கு அருகே தொழுகை நேரத்தில் மிகமிக மெதுவாகக் கடப்பது, பயங்கர சப்தத்தோடு தாரை தப்பட்டை களை அடிப்பது, பட்டாசுகளை வெடிப்பது ஆகியவை இந்த வெறிக் கும்பலில் இழிசெயல்களில் சில ஆகும்.


`துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியக் கட்டு’, `பத்து பைசா முறுக்கு, பள்ளிவாசலை நொறுக்கு’ `பாபரின் பிள்ளை களே பாகிஸ்தானுக்கு ஓடுங் களே` என்பன போன்ற வெறிக்கூச்சல்களை எழுப்பி முஸ்லிம்களை சீண்டுவது இவர்களின் வழக்கம். காவிக் கும்பலின் கலவரப் பேரணியில் இடம் பெறும் கயவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது தொழுவோர் மீது செருப்புகளை வீசிச் செல்வதும் உண்டு.


மேற்கண்ட சம்பவங்களைக் காலங் காலமாய் பொறுத்துப் பொறுத்து பொறு மையின் விளிம்புக்கே போன முத்துப் பேட்டை முஸ்லிம்கள், விநாயகர் ஊர் வலம் என்ற பெயரில் சங்பரிவார் கும்பல் நடத்தும் வெறிப் பேரணியை மாற்றுப் பாதையில் நடத்துமாறு கடந்த சில ஆண்டுகளாகவே முறையிட்டு வருகின்றனர்.


முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் இதற்காக பல தீர்மானங்களை நிறை வேற்றிவிட்டது. கடந்த ஆண்டு மாற்றுப் பாதை குறித்து அரசால் தமுமுகவுக்கு வாக்கு தரப்பட்டு பிறகு மாவட்ட காவல் துறையால் அது மீறப்பட்டது. இந்த ஆண்டு வெறி ஊர்வலத்தை மிகுந்த வீரியத்துடன் நடத்தி முஸ்லிம்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சங்கும்பல் மும்முர மாக களத்தில் இறங்கியுள்ளது. இதை யறிந்த முஸ்லிம்கள் தரப்பு காவல் துறையிடம் முறையிட்டு மன்றாடி யுள்ளது. பிரச்சினை மிகுந்த பகுதிகல் ஊர்வலப் பாதையை மாற்றியமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உண்டு என உயர் நீதிமன்றம் வெயிட்டுள்ள ஆணை (எண் 22286/2008WP) கூறுகிறது.

ஆயினும் காவல் துறை செவிசாய்த்த பாடில்லை. முத்துப்பேட்டையின் அமைதி யைக் குலைப்பதில் முதலிடத்தில் இருப் பவர் பாஜக மாவட்டத் தலைவராக இருக்கும் கறுப்பு () முருகானந்தம். திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் குமார் சிங், கறுப்புக்கு ஒரு உறுப்பு போலவே செயல் படுகிறார் என்று குற்றம்சாட்டுகின்ற னர் முத்துப்பேட்டை முஸ்லிம்கள்.

முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கும் பழைய பேருந்து நிலைய பகுதி, புதுத் தெரு, கிட்டங்கித் தெரு, பட்டுக்கோட்டை ரோடு, மதரஸா தெரு, தெற்குத் தெரு, பேட்டை ரோடு, அரபுசாஹிப் தெரு ஆகிய தெருக் களின் வழியாகத்தான் ஊர்வலம் நடத்துவோம் என சங்கும்பல் இறுமாப் போடு பேச, மாற்றுப் பாதை இருக்கும் போது முஸ்லிம் பகுதிக்குள் நுழைந்து கலவரம் விளைவிப்பதை நாங்கள் ஏற்க முடியாது என முஸ்லிம்கள் உறுதியாக கூறியுள்ளனர். காவல்துறை முஸ்லிம்களின் கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டது.
பாஜக மாவட்டத் தலைவர் கறுப்பு () முருகானந்தம், ராஜேந்திரன் உள்ளிட் டோர் தலைமையில் பாஜக மாநில துணைத் தலைவர் ஹெச்.ராஜா வெறி யுரையோடு செப்.11, 2008 மதியம் 3 மணிக்கு இந்து முன்னணியின் கலவர ஊர்வலம் தொடங்கியது.


ஏற்கனவே, 2007ல் இவர்கள் பள்ளி வாசலில் செருப்பு வீச்சு நடத்தி யுள்ளதால், இம்முறை தற்காப்புக்காக முத்துப்பேட்டை முஸ்லிம்கள் புதுப்பள்ளி வாசலில் கூடியுள்ளனர். பள்ளிவாசலில் முஸ்லிம்கள் கூடுவதை அறிந்த காவல் துறை பள்ளிவாசலை சுற்றி வளைத்து நிறுத்தப்பட்டது.
சூழ்நிலைகள் பதற்றமாகிக் கொண்டே போக பள்ளிவாசலை ஊர்வலக் கும்பல் தாக்கலாம் என அஞ்சிய ஜமாஅத்தினர் முஸ்லிம்களை பள்ளிவாசலுக்குள் வருமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து எஸ்.பி. அமித்குமார் சிங், திருத்துறைப் பூண்டி வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் பள்ளிவாச லுக்குள் நுழைந்து அங்கிருந்தோரிடம் எச்சரிக்கை விடுக்கும் தொணியில் பேசத் தொடங்கினர். பள்ளிவாசலுக்கு அருகே வந்து வெறிக் கும்பல் கலவரம் தூண்டுவதை ஏற்க முடியாது என்பதில் முஸ்லிம்கள் உறுதிகாட்ட, சாலை மறியல் செய்வீர்களா? செய்து கொள் ளுங்கள்என்று முஸ்லிம்களுக் குப் பாதை காட்டிவிட்டு, `அட்டாக்என்று காவல்படைக்கும் ஆணையிட்டுள்ளார் எஸ்.பி. முன்னதாக பள்ளிவாசலில் கூடியிருந்த கூட்டத்திருந்து யாரோ ஒரு விஷமி வெளிப்புறம் நோக்கி, கல் வீசியுள்ளார். அது காவி மனத்தோடு வந்திருந்த காவல் படைக்கு முஸ்லிம்களைத் தாக்கப் பெரும் ஆயுதமாகப் பயன்பட்டுள்ளது.


காவிவெறிக் கும்பலிடம் இருந்த வெறி காவல்துறையிடம் இடம்மாறியதோ என்னவோ? திடீரென பள்ளிவாசலை சூறையாட ஆரம்பித்துள்ளனர். பள்ளி வாசலின் கண்ணாடிகளை லத்திகளால் அடித்து உடைத்துள்ளனர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததில் காவல் துறையினரின் லத்திகளே உடைந்து போயுள்ளன. உடைந்த லத்திகளை அங்குள்ளோர் எடுத்துவைத்துள்ளனர். அந்த அளவுக்கு வெறி அவர்களின் தலைக்கேறியிருக்கிறது.


எஸ்.பி. நிறுத்துமாறு சொல்லியும் கூட லத்திகளின் சுழற்சி நிற்கவில்லை. நோன்பாளிகளான முஸ்லிம்கள் கொடு மையாக வதை செய்யப்பட்டுள்ளனர். தொழுகையில் இருந்த நிலையில், தமுமுக முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ஹுமாயூன் கபீர் தாக்கப்பட்டு, பல் உடைக்கப்பட்டு இரத்தக் காயப் படுத்தப்பட்டுள்ளார்.


  • இந்து முன்னணி கும்பல் எதைச் செய்ய விரும்பியதோ, அதை முத்துப் பேட்டையில் காவல்துறை மிகச் சிறப்பாக(?) செய்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது.


செய்தியறிந்த தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி இருவரும் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு போலிஸார் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டதைக் கடுமையாக் கண்டித்தனர். கைது செய்யப்பட்ட அப்பாவிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர். இல்லையேல் திருவாரூர் மாவட்டமே ஸ்தம்பிக்கும் வகையில் தமுமுக எனது தலைமையில் போராட்டம் நடத்தும் என்று பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் கைது செய்யப்பட்ட 35 பேரில் 19 பேரை உடனே விடுவித்தனர்.


பூட்சு கால்களோடு பள்ளிவாசலுக்குள் தொழுமிடத்திற்கு நுழைந்த காவல்துறை கண்ணில் பட்டவர்களை யெல்லாம் கைது செய்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந் துள்ளது. முத்துப்பேட்டையில் அத்து மீறிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கலவர ஊர்வலத் திற்கும் நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு.

Monday, September 15, 2008

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்

டெல்லி குண்டுவெடிப்பு; தமுமுக கண்டனம்
Source: http://www.tmmk.in/news/999679.htm

குண்டுவெடிப்புகளைத்தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சரும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகரும் பதவி நீக்கப்படட தமுமுக கோரிக்கை
குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை
நமது நாட்டின் தலைநகரம் டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற மிக மோசமான தொடர் குண்டு வெடிப்புகளைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தக் குண்டுவெடிப்பில் உயிர் இழந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தெரிவித்துக் கொள்கிறது. இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தோர் விரைவில் குணமாகி இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பத் தமுமுக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றது.



டெல்லியில் நேற்று மாலை பொதுமக்கள் திரளாகக் கூடும் இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை நடத்தியவர்கள் நிச்சயமாக காட்டுமிராண்டிகளேயாவார்கள். கடுகளவு மனிதநேயமும் இல்லாமல் அப்பாவி மக்களைக் கொல்லும் நோக்கில் இந்தப் படுபாதக செயல்களைச் செய்த உண்மை குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு உச்சபட்சத் தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.


தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு நகரங்களில் டெல்லியில் நடைபெற்றது போன்ற குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளன. இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு காரணமானவர்கள் என்று கூறிச் சிலர் கைதுச் செய்யப்படுகிறார்கள். இருப்பினும் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு காரணமான உண்மை குற்றவாளிகள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதினால் தான் குண்டுவெடிப்புகள் தொடர்கின்றன. குண்டுவெடிப்புகள் தொடர்பாக அனுப்பபடும் மின்னஞ்சல்களின் அடிப்படையில் யூகங்கள் வெளியாகி விசாரணைகள் நடைபெறுகின்றன. அதிலும் கூட அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு நடைபெற்ற போது மின்னஞ்சல் நவிமும்பையில் அபிசேக் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் இருந்து கென்னட் ஹேவுட் என்ற அமெரிக்கர் ஒருவரால் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த அமெரிக்கர் விசாரணை நிலுவையில் இருக்கும் போதே நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார். நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புகளில் உண்மை குற்றவாளிகள் கைதுச் செய்யப்படாமல் அப்பாவிகள் கைதுச் செய்யப்படுவதே தொடர் அசம்பாவிதங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலை ஏற்படுவதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலும், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணனும் தான் காரணமாக உள்ளார்கள். இந்த இருவரும் உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனப் பிரதமரைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

குண்டுவெடிப்புகள் நடைபெற்றவுடன் உடனடியாகச் சந்தேகப் பார்வையை முஸ்லிம் அமைப்புகள் மீது வீசும் போக்கைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கின்றது. தமிழகத்தில் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் குண்டுவைத்தவர்கள் முஸ்லிம் அமைப்பினர் அல்ல. மராட்டிய மாநிலம் நான்டெட்டில் இருமுறை குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது பஜ்ரங் தள அமைப்பினர் இறந்துள்ளனர். கடந்த ஜுலை மாதம் தானே, பான்வெல், வார்சி போன்ற ஊர்களில் பொது இடங்களில் குண்டு வெடித்த போது மாராட்டிய காவல்துறை சனாதன் சான்ஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுச் செய்துள்ளது. சமீபத்தில் கான்பூரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்து பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இருவர் உயிர் இழந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரும் நிலையில் அதில் முழுப் பலனையும் பெறுவதற்காகப் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் சக்திகள் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகளை ஏன் நடத்தியிருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும். குஜராத் முதல்வர் மோடி முன்கூட்டியே டெல்லியில் குண்டுவெடிக்கும் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். இதே நேரத்தில் அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாகக் கைதுச்செய்யப்பட்டோரை விசாரித்த போது டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக அவர்களிடமிருந்து எந்தவொரு குறிப்பும் கிடைக்கவில்லை என்று அஹ்மதாபாத் காவல் இணை ஆணையாளர் ஆசிஸ் பாட்டியா குறிப்பிட்டுள்ளார். எனவே டெல்லி குண்டுவெடிப்புக் குறித்து ஒரு தலைபட்சமாக விசாரிக்காமல் பல்வேறு கோணங்களில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விசாரித்து உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடும் தண்டனை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோருகின்றது.

Friday, September 12, 2008

மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு!

வேலூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் காவல்துறையின் அடிதடி அத்து மீறலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.



ஒரு நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதும், சட்டஒழுங்கு சீர்கெடாமல் பாதுகாப்பதும் அந்தந்த நாட்டிலுள்ள காவல்துறைகளின் கடமையாகும். தீமைகளை தடுத்து, குற்றவாளிகளை திருத்தி, மக்களின் தோழனாக அவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கவேணடும். அதற்குத்தான் அவர்களுக்கு காலவ்துறை என்று பெயரிடப்பட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்படுகிறது. தனது காக்கிச்சட்டை சீருடையயை அணிந்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு காவல்துறையினரும் இப்படித்தான் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர்.


ஆனால் சமீபத்தில் நடந்த வேலூர் நிகழ்வுகள் தமிழகத்தின் காவல்துறையினர் தாங்கள் எடுத்த உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டுவிட்டு தனது கடமையை மறந்து, திட்டமிட்டே தமிழக அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.






கடந்த 01-09-2008அன்று திலமலர் நாளிதழின் கம்யூட்டர் மலரில் எங்கள் உயிரிலிலும் மேலான முஸ்லிம்களின் ஒப்பற்றத் தலைவர் இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டு புனித ரமலான் மாதத்தின் முதல் நாளில் முஸ்லிம்களின் தன்மான உணர்வுகளை சீண்டிவிட்டது சங்பரிவார தினமலம்.


தமிழக முதல்வரே! அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழகத்தை விநாயகர்சதுர்த்தியின் நேரத்தை பயன்படுத்தி கலவர பூமியாக்க தினமலம் கும்பல் திட்டம் தீட்டியுள்ளதை உங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை அறியாமல், கடந்த 2-08-2008 அன்று வேலூரில் தினமலம் கும்பலை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் மக்கள் மீது கொலைவெறிதாக்குதல் நடத்தியுள்ளது தமிழக காவல்துறை.






ஆர்ப்பாட்டத்திற்கான காரணமென்ன? அவர்களது கோரிக்கை என்னவென்று கேட்காமல் கூட்டத்தை களைப்பதாகக் கூறி உரிமை கேட்டு ஜனநாயக வாழியில் போராடிய மக்கள் மீது தடியடி என்ற போர்வையில் தமிழக காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்தியதை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.




களத்திலிருந்த காவல்துறை உயர் அதிகாரி அறிவுச்செல்வம் ஆர்ப்பாட்டத்திலிருந்த முஸ்லிம் தலைவர்களை தரைக்குறைவாக, கீழ்த்தரமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளார்.






  • சர்வதேசச் சமுதாயத்தின் மிகப் பெரும் தலைவர் எங்கள் உயிரிலிலும் (இந்த வார்த்தையை வெரும் சொல்லாகக் எண்ணிவிட வேண்டாம்) மேலான எங்கள் இறைத்தூதரை இழிவுபடுத்தி கேளிச் சித்திரம் வெளியிட்டு ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வெகுண்டெலச் செய்து சட்டம் ஒழுங்கை சீர்குழைத்த தினமலம் கும்பலை கைது செய்வதை விட்டுவிட்டு ஜனநாயக ரீதியில் உரிமை கேட்ட மக்களை அடக்கி ஒடுக்குவது ஜனநாயக ஆட்சிக்கு அழகல்ல என்பதை எச்சரிக்கையுடன் சொல்லி வைக்கறோம்.


தினமலம் கும்பலை சில நிமிட நேரத்தில் எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமலல்ல அரசிடம் கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்தியது. பல ஆயிரக்கணக்கான மக்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் ஆர்பாட்டத்திலிருந்தவர்கள் ஒரு சில அல்லது நூறு காவல்துறையின் லத்திக்கு அஞ்சி விட்டார்கள், அல்லது தோட்டாக்களுக்கு பயந்து விட்டார்கள் என்று காவல் துறையே நீங்கள் எண்ணிவிட வேண்டாம். நாங்கள் ஆட்சியாளர்களையும் சட்டத்தையும் மதிப்பவர்கள்.



காவல்துறை உயர் அதிகாரி அறிவுச் செல்வம், ஏ.டி.எஸ்பி. இராமதாசு, டி.எஸ்.பி. சரவணன் ஆகியோரின் தவறான நடவடிக்கையால் எங்கள் சகோதரர்கள் பலர் காவல்துறை கருப்புஆடுகளின் கொலைவெறித் தாக்குதலால் படுகாயமடைந்து மருத்துவமணையில் உள்ளனர் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.


ஆட்சியாளர்களே! அரசியல்வாதிகளே! உங்களுக்கொன்றை சொல்லிக் கொள்கிறோம் உங்களை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து அழகு பார்ப்பது மக்களாச்சி நடத்துவதற்குத்தான் மக்களை ஆட்டிவைப்பதற்கல்ல.


சீண்டிப்பார்ப்பது, தூண்டிவிடுவது, உசுப்பிவடுவது இவைகளுக்கெல்லாம் மிகப் பெரிய விலைகொடுத்துள்ளதை கடந்த கால வரலாறுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. ஜப்பான் 1941ம் ஆண்டு (Pearl Harbor) ஹவாய் துறைமுகத்தை தவிடுபொடியாக்கி அமெரிக்காவை சீண்டியதன் விளைவு 1945 ஆகஸ்டு 6ம்நாள் ஹீரோசிமா நாகசாயிகள் நாசமாய்போன வரலாறுகள் மனித குலம் மறக்கமுடியாதவை.


ஆட்சிக்கு வரும் ஒவ்வொறு ஆட்சியாளர்களும் முஸ்லிம்களை குறிவைப்பதையே தனது கொள்கைகளாகக் கொண்டுள்ளனர் இதில் யாரும் விதிவிலக்காக எங்களுக்கு தெரியவில்லை.


முஸ்லிம்களை சீண்டிய தினமலம் இன்று பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன அதல் முதல் அடி அமீரகத்தில் அதன் இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாகும். எங்கள் அடுத்த இலக்கு என்ன என்பதை, காரியத்தை கட்சிதமாக முடித்துவிட்டு உலகிற்கு அறிவிப்போம்.


காலங்காலமாக முஸ்லிம்களை மட்டுமே பழிவாங்க துடிக்கும் ஆட்சியாளர்களே! தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு நீண்ட அனுபவம் உண்டு என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். ஜாதி அரசியல் மலிந்து விட்ட தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை ஜாதிகள் உள்ளன என்று நாம் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. ஆனால் முஸ்லிம் வாக்குகளுக்கு ஜாதிகள் இல்லை என்பதை சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.



1946ல் நடந்த பொதுத் தேர்தலில் பிரிக்கப்படாத சென்னை மகாணத்தில் 29 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட வரலாறு இந்த சமுதாயத்திற்கு உண்டு 1953ல் இராஜியின் மந்திரி சபைக்கு ஆதரவளித்து அவரது ஆட்சியைக் காப்பாற்றிய பெருமையும், 1954ல் குடியாத்தம் தேர்தலில் காமராசரை ஆதரித்து அவரை வெற்றிபெறச் செய்ததிலும், 1962ல் முதன் முதலாக திமுகவுடன் கூட்டணி வைத்து 50சீட்டுக்களை திமுகவுக்கு பெற்றுக் கொடுத்த பெருமையும் எங்கள் சமுதாயத்திற்கு உண்டு.



சட்டையைக் கிழித்தும், மண்டையை உடைத்தும், பாட்டில்களை வீசியும் ரகலை செய்யும் சென்னை மாநகராச்சி மாமன்றதை கண்னியத்தோடு 1965 ல் துணை மேயர் பொருப்பு வகித்தும், 1967ல் மேயர் பொருப்பு வகித்தும் அந்த மாமன்றத்தை கண்ணியத்தோடு வழிநடத்திய பெருமை இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு உண்டு என்பதை தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை மறந்தவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.


சமீபத்தில் தமிழக வாக்காளர் பட்டியலை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதில் மாவட்ட வாரியாக தொகுதிகளை பிரித்தெடுத்து அதில் முஸ்லிம் வாக்காளர்களை மட்டும் இணம்கண்டு பார்த்த போது நம பலத்தைக் கண்டு உண்மையில் நாம் அதிர்ந்தேவிட்டோம்.



இதோ நாங்கள் இணங்கண்டு புறப்பட்டு விட்டோம். முதல்வர் அவர்களே குறித்துக் கொள்ளுங்கள்! தமிழகத்தின் அடுத்த ஆட்சியாளர் முஸ்லிம் சமுதாயம் யார் முகத்தின் முன் விரலை காட்டுகிறதோ அவர் தான் ஆட்சியாளர். தமிழக சட்டமன்றத்தின் மொத்தத் தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்களின் கைவசம் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உளவுத்துறையினரை அழைத்து சரியான புள்ளிவிபரத்தை உங்களுக்குத் தருமாறு ஆணையிட்டுப்பாருங்கள்.



தமிழக முதல்வரே! உரிமைக்காகப் போராடும் எம் முஸ்லிம் மக்களை நோக்கி உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இனியும் தனது லத்தியை சுழற்றினால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதற்கு நீங்கள் தகுந்த விலைகொடுக்க வேண்டியிருக்கும். உங்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த தன் உயிரைப் பணையம் வைத்து களப்பணியாற்றிய எம் முஸ்லிம் சமுதாயத்திற்கு உங்களை வீட்டுக்கு அனுப்பத் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். காலச்சக்கரம் சுழலக்கூடியது என்பதை மறந்துவிடாதீர்கள்.


எங்களுக்கு பிரச்சார மேடைகளோ, வாகனங்களோ தேவையில்லை. அடுத்த ஆட்சியாளர்களை தீர்மானிக்க, இருந்த இடத்திலிருந்துகொண்டு செய்திகளை கொண்டு சேர்க்க எங்களால் முடியும். அத்தகைய வலிமையை அல்லாஹ் எங்களுக்கு வழங்கியிருக்கிறான் என்பதை அடக்கத்துடன் தெரிவிக்கிறோம்.


எனவே மாண்பு மிகு தமிழக முதவர் அவர்களே வேலூரில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுங்கள் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுங்கள் அல்லது முஸ்லிம்கள் அடுத்த தேர்தலில் பாடம் புகட்ட தயாராகி வருகிறார்கள்.

Wednesday, September 10, 2008

துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..



நன்றி: இந்திய தேசிய மக்கள் கட்சி on September 9th, 2008


துக்ளக் இதழில் காதர் மொய்தீன் விஷமத்தனமும் சமுதாய வேதனையும்..
அறிவை பறைசாற்றிய மார்க்கத்தில் அருள்மறை குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் இளமையின் வேகமும், முதுமையின் ஞானமும் இல்லாத தலைவர்கள். “ஆம்“ பேராசிரியர்கள் அல்ல பேருக்கு ஆசிரியர்கள். செம்பறி ஆடுகளாய் முட்டிக்கொள்கிறார்கள். குழந்தையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டும். நையாண்டி “சோ“ துக்ளக் இதழ் சிரிக்கிறது. தகுதியற்றவர்களை, தலைவர்களாக ஆக்கினால் அவர்கள் சொல்லும் செயலும் தகுதியற்றவர்கள் என்று காண்பித்துவிடுவதை போன்று சமுதாய சந்தையில் பொறுப்பற்ற முறையில் காதர் மொய்தீன் பழி சொல்லி புழுதி வாரி இறைத்திருக்கிறார்.

நடுநிலைபோல் நரித்தனம் செய்து நஞ்சு வைக்கும் வஞ்சக எதிரியின் கூடாரத்திற்கு ஆம் துக்ளக் பத்திரிக்கைக்கு ஒற்றர் வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். துரோகிகளை இ°லாம் காணாதது அல்ல. ராமனையோ, ராவணனையோ ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்வது காதர் மொய்தீன் நம்பிக்கை சுதந்திரம். ஆனால் அரசியல் சார்ப்பற்று மதம் கடந்து மனித நேய பணியாற்றும் த.மு.மு.காவை தமிழ்நாட்டின் தீவிரவாத “லஷ்க்கரே-யி“தைய்பா என்று இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை வாசித்திருப்பது கண்டனத்திற்குரியது. வழி சொல்வதற்கு வக்கற்று வீண்பழி சொல்லியிருக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்களின் அறப்பணியை பாராட்டி உங்கள் தொண்டு தொடரட்டும் என்று இரண்டு ஆம்புலன்சை டாக்டர் கலைஞர் வழங்கியதை மறந்து விட்டு, தி.மு.க. கூடாரத்தில் பதவி சுகத்தில் குளிர் காய்ந்து கொண்டு, பொய் பேசுவதற்கே எனக்கு வாய் இருக்கிறது என்று வாய்சவடால் விட்டு இருக்கிறார். “பாவம்“ என்ன பேசுவது என்றே தெரியாமல் உளறியிருக்கிறார்.

அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம். கருத்து முரண்பாடுகள் கூட இருக்கலாம். அபாண்டமாக த.மு.மு.காவை காஷ்மீர் தீவிரவாத இயக்கத்தோடு இணைத்து பேசியிருப்பது. சமுதாய துரோகிகளின் பட்டியலில் தன்னையும் இணைத்துள்ளார். எங்கே எது நடந்தாலும் முஸ்லீம்கள் மேல் பழியை போடும் இந்த காலகட்டத்தில் உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருப்பதால் வாய்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, என்று புரியாமல் தமிழக முஸ்லீம்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தியிருக்கிறார். காயிதே மில்லத் சமுதாயத்திற்கு ஒளி கொடுத்து வழிகாட்டினார். மில்லத் என்று பெயர் வைத்துக்கொண்டு சமுதாயத்தின் விழி பரித்து வழிகெடுக்கிறார். கடல் இருக்கும் வரைக்கும் அலைகள் இருக்கும். காதர் மொய்தீன் போன்ற கருத்து குருடர்கள் இருக்கும் வரை சமுதாயம் சந்தி சிரிக்கும்.


அதோ ராமகோபாலனும் காதர் மொய்தீனும் வாழ்க என்று குரல் கேட்கிறது. இஸ்லாமிய சகோதரர்களே கிளிஞ்சல்களை கடல் தூக்கி வீசுவது போன்று காலம் இவர்களை தூக்கி வீசும். சமுதாயம் கடந்த காலத்தை நினைவில் கொள்ளட்டும். தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது ஆன்றோர் மொழி சகோதரர்களே நீங்கள் முஸ்லீம்கள் சத்தியத்திற்கு சான்று பகருங்கள்.

Friday, September 5, 2008

இறைத்தூதர் அவர்களை அவமதித்த சங்தினமலரை தடைசெய்து இந்தியாவின் இறையான்மையை காக்க அரசு முன்வரவேண்டும்.

எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த சங்பரிவார தினமலரை அரசு தடை செய்ய வேண்டும்.
அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடைசெய்வதுடன் கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களுக்கெதிராக போர்ப்பிரகடணம் செய்துள்ள அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.
இறைத்தூதர் முஹமது நபி (ஸல்) அவர்களைப் பற்றி டென்மார்க் பத்திரிக்கையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கார்டூன்களை வெளியிட்டடது. அதைத் தொடர்ந்து உலகம் முழுதும் பலத்த கண்டனக்குரல்களும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் மீண்டும் தினமலர் நாளிதழின் வேலூர் பதிப்பில் இலவச இணைப்பாக வெளிவருகின்ற கம்ப்யூட்டர் இதழ். இணையதளம் ஒன்றில் பிரசுரமாகியிருந்த முஹமது நபிகள் குறித்த கார்ட்டூனை அந்த “தினமலர் கம்ப்யூட்டர்’’ 02/09/08 இதழில் பிரசுரமாக்கப்பட்டிருந்தது.
உலகமுழுதும் மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பிய செய்தியை மீண்டும் தினமலர் பிரசுரித்திருப்பதின் மூலம் முஸ்லிம்களை குறிப்பாக தமிழக முஸ்லிம்களை வம்புக்கிழுத்துள்ளது இந்த சங்கபரிவார தினமலர்.
புனித ரமலான் மாதத்தின் ஆரம்பத்தில் இவ்வாறன கேளிச்சித்திரத்தை வெளியிடுவது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்திருந்தும் எங்களின் உயிரின் மேலான இறைத்தூதர் அவர்களின் கேளிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள தினமலர் முஸ்லிம்களுக்கு எதிராக போர்பிரகடனம் செய்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ள சங்பரிவாரத்தின் ஊடகமான தினமலரை அரசு தடை செய்வதுடன் முஸ்லிம்களின் உயிரின் மேலான இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கேளிச் சித்திரத்தை வெளியிட்டு சமூக கொத்தளிப்பு ஏற்படுத்திய அதன் ஆசிரியர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து இந்திய நாட்டின் இறையாமையை காக்க வேண்டுமென்று ‍அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.

Wednesday, August 6, 2008

தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை!

தமிழக மீடியாக்களுக்கு ஓர் எச்சரிக்கை
Source: http://tmmk.in/news/999730.htm

நாட்டில் நடக்கும் எந்தவொரு பயங்கரவாத செயலுக்கும் சிறு பான்மை முஸ்லிம்கள் மீது பழி போடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. எங்கே குண்டு வெடிப் புகள் நடந்தாலும் உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க துப்பற்ற, திறமையற்ற காவல் துறை மற்றும் பாதுகாப்பு நிறு வனங்கள் முஸ்லிம் அமைப்பு களையும், அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் காரணமாக்கு வதையும், கைது செய்வதையும் தங்கள் வழக்கமாக்கி கொண்டிருக் கின்றன. கையாலாகாத காவல் துறை சொல்லும் அனைத்தையும் கண், காது, மூக்கு வைத்து தங்கள் மனோ இச்சைக்கு ஏற்ப எழுதுவதையும், ஒளிபரப்புவதை யுமே வாடிக்கையாக கொண்டுள்ளன அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள்.

சமீபத்தில் நடந்த பெங்களூர் மற்றும் அஹ்மதாபாத் குண்டு வெடிப்புகளிலும் வழக்கம் போல முஸ்லிம்களை இணைத்து செய்தி கள் வெளியிட்ட மீடியாக்கள் தமிழகத்தில் தீவிரவாகிதள் கைது, குண்டு வைக்க சதி என்ற காவல் துறையின் வழக்கமான பல்ல வியை போட்டி போட்டு கொண்டு தங்கள் இஷ்டம் போல வெளி யிட்டு அரிப்பை தீர்த்துக் கொண் டன. காவல்துறை சொல்வதை அப்படியே வாந்தி எடுக்கும் இந்த மீடியாக்கள் மறுபுறம் கேட்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் என்ன கூறப்படு கிறது என்பதையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையில்லாமல் செயல் பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் தீவிரவாதி கள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என ஒரு சமூகத்தையும், மதத்தை யும் கொச்சைப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது மட்டுமல்ல, பத்திரிக்கை சட்டத்தின்படி தண்ட னைக்குரியது. ஆனால் எழுது வதற்கு முன்னால் தங்கள் மூளை யிலும், பேனா முனையிலும் போதை ஏற்றிக்கொள்ளும் ஊட கங்களுக்கு சரியான பாடத்தை முஸ்லிம் சமுதாயம் புகட்ட வேண் டியதிருக்கும் என எச்சரிக்கிறோம். மதுரையில் ஒரு நாளிதழுக்கு நேர்ந்த கதியை பார்த்தும் இவர் கள் திருந்தவில்லை. அந்தளவுக்கு போகாமல் ஜனநாயக ரீதியில் இது போன்று வக்கிரமாக எழுதும் ஊடகங்களின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கில் திரண்டு உள் ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தமிழகத்தின் அனைத்து ஊடகங்க ளையும் முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் எச்சரிக்கிறோம்.

தமிழக ஊடகங்களில் இந்துத் துவா மற்றும் ஏகாதிபத்திய கைக் கூலிகளே நிறைந்திருக்கும் சூழ் நிலையில் பொதுவான நடுநிலை யான மாற்று அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை ஏற்படுத்த வேண் டியது முஸ்லிம்களின் அவசர மற்றும் முக்கிய கடமையாக இருக்கிறது. கேரள முஸ்லிம்களின் முன்மாதிரியை கொண்டு தமிழகத் தில் உடனடியாக இதற்கான வேலைகளை சமுதாய நலன் விரும்பிகள், செல்வந்தர்கள் முடுக்கி விடவேண்டும். ஊடகத் துறையில் பணியாற்றுவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் முன் வர வேண்டும். அப்போதுதான் ஊட கத்தில் இருக்கும் நச்சு விதைகளை கிள்ளி எறிய முடியும்.

Thursday, July 17, 2008

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்பட வேண்டும்?

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்பட வேண்டும்?

பேரா.டாக்டர்எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

Source: http://tmmk.in/news/999765.htm


நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளுவதற்கு முதுகெலும்பாக செயல்பட்ட இடதுசாரி கட்சிகளின் உறவை உதறித் தள்விட்டு அமெரிக்கா வுடன் அணுசக்தி தொடர்பான உடன் பாட்டைச்செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு துணிந்து உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து ஆட்சி பறிப்போனாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டைச் செய்தே ஆக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உடும்பு பிடி பிடித்துள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளும் உடன்பாடு நாட்டு நலனுக்குப் பெரிதும் உதவக் கூடியது என்று பிரதமரும் காங்கிரசாரும் வாதிட்டு வருகிறார்கள். வரும் ஜூலை 22ல் நம்பிக்கை வாக்கெடுப்பு நாடாளுமன்றத் தில் நடைபெறும் தருவாயில் அமெரிக்கா வுடனான, 123 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உடன்பாடு எவ்வாறு நாட்டின் நலனுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதைப் பார்ப்போம்.


123 உடன்பாடு என்றால் என்ன?


அமெரிக்க அணுசக்தி சட்டத்தின் 123வது பிரிவிற்குப் பிற நாடுகளுடன் ஒத்துழைப்பு என்று தலைப்பிடப்பட்டுள் ளது. அமெரிக்க அரசு பிற நாடுகளுடன் அணு சக்தி தொடர்பான உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்புக் குறித்து ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்த 123வது பிரிவு விதிக்கின்றது. இத்தகைய ஒப்பந்தம் தான் 123 ஒப்பந்தம் என்று அழைக்கப் படுகின்றது. சுமார் 25 நாடுகளுடன் அமெரிக்கா இந்த 123 உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.


அமெரிக்க அணு ஆற்றல் சட்டத்தின் 123வது பிரிவு பிற நாடுகளுக்கு அணு தொழில் நுட்பத்தை ஏற்றுமதி செய்வதைத் தடைச் செய்துள்ளது. இந்தத் தடையில் இருந்து இந்தியாவிற்கு விதிவிலக்கு அளிப்பதற்காக ஹைட் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த ஹைட் சட்டத் தின் அடிப்படையில் தான் இந்தியாவின் ஆக்கப்பூர்வமான அணு ஆற்றல் தேவைகளை நிறைவுச் செய்வதற்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவதற்கு வழிவகை செய்வதற்காக 123 உடன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த 123 உடன்பாட்டைச் செய்து கொள்வதற்கு முன்பாக இந்தியா இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். 123 உடன்பாட்டின் அடிப்படையில் இந்தியாவில் அமையும் ஆக்கப்பூர்வமான அணு உலை நிலையங்களின் பாதுகாப்புத் தரம் குறித்து முதலாவதாக சர்வதேச அணு ஆற்றல் முகமையுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். இதற்கு அடுத்ததாக என்.எஸ்.ஜி. என்று அழைக்கப்படும் அணுபொருட்கள் ஏற்றுமதி நாடுகளுடனும் ஆக்கப்பூர்வ அணு உலைகளுக்கு தேவைப்படும் யுரேனியம் போன்ற எரிப்பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். சர்வதேச அணு ஆற்றல் முகமை மற்றும் என்.எஸ்.ஜி.யுடன் உடன்பாடு செய்து கொண்ட பிறகு தான் அமெரிக்க நாடாளுமன்றம் இந்தியாவுடனான 123 உடன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும். அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே அணு வர்த்தகம் தொடங்கும். அணு உலை, அணு ஆற்றல் தொடர்பான தொழில் நுட்பம், அணு எரிப்பொருட்கள் முதலியவற்றை இந்தியா இறக்குமதிச் செய்து கொள்ளலாம்.


123 உடன்பாட்டை ஏன் எதிர்க்க வேண்டும்?


1,இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அமெரிக்கா கட்டுப்படுத்தும்


நாம் மேலே குறிப்பிட்டவாறு இந்தியாவுடன் அணு ஆற்றல் தொடர்பான 123 உடன்பாட்டை மேற்கொள்வதற்கு வசதியாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹைட் சட்டம் 2006ல் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் இந்தியாவுடன் அமெரிக்கா அணுஆற்றல் உடன்பாட்டை மேற்கொள்ள இயலாது. ஹைட் சட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தச் சட்டத்தின் முழுப் பெயர் ஹென்றி ஜே ஹைட் அமெரிக்க - இந்திய அமைதிக்கான அணு ஆற்றல் ஒத்துழைப்புச் சட்டம் 2006 ஆகும். இந்த உடன்பாட்டிற்கும் நமக்கும் தொடர்பில்லை, இந்த உடன் பாடு நம்மைக் கட்டுப்படுத்தாது என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் கூறி வருகின்றார்கள். ஆனால் இந்த ஹைட் சட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளது. .


இந்திய அணு ஆற்றல் ஆணையத்தின் முன்னாள் தலைவர்களான எச். என். சேத்னா, எம். ஆர். சீனிவாசன், பி.கே. அய்யங்கார், அணு ஆற்றல் கட்டுப் பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன், பாபா அணு ஆய்வு நடுவத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.கே. பிரசாத், இந்தியா அணு ஆற்றல் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் நிர்வாக இயக்குனருமான வை. எஸ். ஆர். பிரசாத், இந்திரா காந்தி அணு ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் பிளேசிட் ரொட்ரிக்ஸ் ஆகிய இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கூட்டாக வெயிட்டுள்ள அறிக்கையில் ஹைட் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்று ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவுடனான அணு உடன்பாடு குறித்து எழுப்பப்பட்ட அச்சங்களுக்கு பதில் அளிக்கும் போது அளித்த வாக்குறுதிகளுக்கு முரணாக ஹைட் சட்டம் அமைந்துள்ளதாக இந்த விஞ்ஞானிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உதாரணமாக இந்திய அணுகுண்டு வெடிப்புச் சோதனையை நிறைவேற்றினால் உடனடியாக 123 உடன்பாடு முடி விற்குக் கொண்டு வரப்படும். இந்த உடன் பாட்டின் அடிப்படையில் அமெரிக்காவிடமிருந்து பெற்ற அனைத்துக் கருவிகளையும் பொருட்களையும் இந்தியா திருப்பிக் கொடுக்க வேண்டும். திடீரென்று நமது நாட்டில் உள்ள அணு உலைகளுக்கு எரிபொருள் நிறுத்தப்பட்டால், மாற்று எரிபொருட்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ளலாம் என இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டிருந்தன. ஆனால் இந்த ஹைட் சட்டத்தில் இதற்கு வாய்ப்பே இல்லாத வகையில் விதிகள் இயற்றப்பட்டுள்ளன. எனவே எதிர்காலத்தில் இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் அது நமது நாட்டிற்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும். இறக்குமதி செய்யப் பட்ட அணு உலைகளுக்கு எரிபொருள் இல்லாமல் நாம் பெரும் அவதிப் படுவோம்.


இவ்வாறு பல உதாரணங்களை எடுத்துக் காட்டி ஹைட் சட்டம் நமது நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதை மிகத் தெவாக நமது விஞ்ஞானிகள் தோலுரித்துக் காட்டியுள்ளனர்.


ஆங்கிலேய காலனி ஆதிக்கத்திலிருந்து 1947ல் மீண்ட இந்தியாவை அமெரிக்காவின் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு செல்லும் வகையில் ஹைட் சட்டம் அமைந்துள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. இந்தச் சட்டத்தின் படி ஹைட் சட்டத்தின் விதி முறைகளை இந்தியா எவ்வாறு கடை பிடித்து வருகின்றது என்பது குறித்து அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க அதிபர் அறிக்கை தரவேண்டும்.


இந்தியாவின் வெளியுறவு கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கையிலும் குறுக்கிடும் வகையில் ஹைட் சட்டம் அமைந்துள்ளது. ஈரான் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் கொள்கைகளுக்கேற்ப இந்தியாவின் கொள்கை அமைய வேண்டும் என்று இச்சட்டம் நிர்பந்திக்கின்றது. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைக்கு இசைந்தவாறு இந்தியாவின் கொள்கையும் அமைந்திருக்க வேண்டும் என்றும் இச்சட்டம் விதிக்கின்றது. இந்த அடிப்படையில் அமெரிக்காவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு முன்பாகவே அமெரிக்காவின் எடுபிடியாக இந்தியா மாறிய நிகழ்வும் நடைபெற்று விட்டது. இதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நிர்வாகம் வெளிப் படையாகவும் அறிவித்து விட்டது. சர்வதேச அணுஆற்றல் முகமையில் அமெரிக்காவின் கட்டளையை ஏற்று இந்தியா ஈரானுக்கு எதிராக வாக்களித்தது. அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழுக் கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய உறுப்பினர் ரிச்சார்ட் லாகர், 'இந்தியாவுடன் நமது உறவை மேம்படுத்திக் கொள்வதால் ஏற்படும் பாதுகாப்பு ரீதியான பயன்களை நாம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். கடந்த செப்டம்பரிலும் இந்த ஆண்டு பிப்ரவரியிலும் சர்வதேச அணுஆற்றல் முகமையில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இது தனது பாரம்பரிய வெளியுறவு கொள்கைகளை மாற்றி அமைக்க இந்தியா தயாராகிவிட்டதை வெளிக்காட்டியுள்ளது. என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.


அமெரிக்காவின் ஏவலாளாக சர்வதேச அரங்கில் இந்தியா மாறியுள்ளது மட்டுமில்லாமல், நேரு, சாஸ்திரி, இந்திரா உள்ட்ட காங்கிரஸ் பிரதமர்கள் பின்பற்றி வந்த அணிசேரா கொள்கையை மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் கைகழுவியுள்ளதை இது வெட்டவெச்சமாக்கியுள்ளது.


இவ்வாறாக ஹைட் சட்டம் இந்தியா வின் தனித்தன்மைக்கும், இறையாண் மைக்கும் வேட்டு வைக்கிறது.


2. 123 உடன்பாடு இந்தியாவின் சுயமரியாதைக்கு எதிரானது


ஹைட் சட்டம் இந்தியாவைக் கட்டுப் படுத்தாது என்று காங்கிரசார் கூறி வருகின்றார்கள். ஆனால் 123 உடன் பாட்டின் 2.1 பிரிவு மிகத் தெளிவாக ஹைட் சட்டமும் பிற அமெரிக்க சட்டங்களும் இந்த உடன்பாட்டிற்கும் பொருந்தும் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றது.


அணுவியல் ரீதியான தீண்டாமையை சர்வதேச அரங்கில் இந்தியா இதுவரை அனுபவித்து வந்தது 123 உடன்பாடு மூலமாக இது முடிவிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்று இந்த உடன்பாட்டை ஆதரிப்போர் கூறி வருகின்றார்கள். ஆனால் 123 உடன்பாட்டின் பிரிவு 5.2 அதிமுக்கியமான அணு தொழில் நுட்பத்தை இந்தியா பரிமாறிக் கொள்வதைத் தடைச் செய்துள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட பயன்பாடுடைய அணு எரிபொருட்களை இந்தியா பயன்படுத்துவது அமெரிக்க சட்டத்தின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படும். எனவே அணுவியல் ரீதியான தீண்டா மையில் இருந்து நாம் விடுபட்டு விட்டோம் என்று கூறுவது வெற்று முழக்கம் தான்.


123 உடன்பாட்டின் 6 (3) பிரிவு அணுக்கழிவுகளை மீள்சுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்துக் குறிப்பிடுகின்றது. இந்த மீள்சுழற்சி செய்வதற்கான வசதிகளைச் செய்து அத்தகைய ஏற்பாடு மற்றும் முறைமை குறித்து இரு தரப்பு உடன்பாடு செய்து கொண்ட பிறகு முடிவெடுக்கப்படும் என்று குறிப்பிடுகின்றது. இது குறித்து இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் என்ன நேரிடும் என்பது பற்றி 123 உடன்பாடு மவுனமாக உள்ளது. வேறு வார்த்தைகல் சொல்ல வேண்டு மெனில் கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் நமது நாட்டின் உரிமையை அமெரிக்காவே முடிவுச் செய்யும்.


123 உடன்பாட்டின் 14.9 பிரிவின் படி அசாதாரணச் சூழ்நிலைகள் (இவை என்ன என்பது விவரிக்கப்படவில்லை) காரணமாக மீள்சுழற்சி செய்வதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட ஏற்பாடு மற்றும் முறைமையை அமெரிக்கா நிராகரிக்க முடியும் என்று குறிப்பிட்டு ஒரு தலைப்பட்சமாக அமெரிக்காவிற்கு அதிகாரம் வழங்குகின்றது. ஆனால் இந்த (123) உடன்பாட்டை இந்தியா உடனடியாக முறித்துக் கொள்ள இயலாது. அமெரிக்காவிற்கு ஒரு ஆண்டு கால அளவுடைய தாக்கீட்டை (நோட்டிஸை) இந்தியா அளிக்க வேண்டும். உடன்பாட்டை முறித்துக் கொள்வதற்கான காரணத்தையும் இந்தியா அளிக்க வேண்டும். அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தையும் நடத்த வேண்டும். பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால் உடன்பாட்டை முறித்துக் கொள்ள அனுமதி கோரும் உரிமை மட்டுமே இந்தியாவிற்கு உண்டு.


14.3 பிரிவின்படி அமெரிக்கா உடன்பாட்டின் விதிமுறைகளை முறித்து விட்டது என்று மட்டும் கூறி விலகிக் கொள்ள முடியாது. வியன்னா நடை முறை அல்லது உடன்பாடு சட்டங்கள் அல்லது சர்வதேச அணுஆற்றல் முகமையின் ஆளுநர்கள் குழுமம் ஆகியவை வகுத்துள்ள நெறிமுறை களுக்கு உட்பட்டு அமெரிக்கா உடன்பாட்டின் விதிமுறைகளை மீறி விட்டது என்று நிரூபித்து விட்ட பிறகு தான் இந்த உடன்பாட்டில் இருந்து இந்தியா விலகிக் கொள்ள இயலும்.


15 வது பிரிவின் படி உடன்பாட்டின் விதிகள் குறித்த விளக்கம் அல்லது செயல்பாடு குறித்துப் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்வு காணப்பட வேண்டும். இது குறித்து எழும் சர்ச்சைகள் குறித்து மத்தியஸ்தர் அல்லது நீதிமன்றம் நாட இந்தியாவிற்கு உரிமை கிடையாது.


16.2 பிரிவு இந்த உடன்பாடு 40 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறுகின்றது. ஆனால் இந்த உடன் பாட்டின் முன்னோடியாக சர்வதேச அணுஆற்றல் முறைமையுடன் இந்தியா செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் காலவரம்பின்றி இந்தியா பின்பற்ற வேண்டும் என்று விதியாக்கப் பட்டுள்ளது.


123 உடன்பாட்டில் சொல்லப்படா விட்டாலும் கூட இந்தியாவின் எதிர்கால அணுஆற்றல் வளர்ச்சி முயற்சிகளுக்கு இந்த உடன்பாடு ஒரு முக்கிய கட்டுப்பாட்டை விதிக்கின்றது. மார்ச் 2, 2006ல் ஒத்துக்கொள்ளப்பட்டு, மார்ச் 7, 2006ல் நமது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரிவு திட்டத்தின்படி ஆக்கப்பூர்வமான அணுஆற்றல் நிலையம் என்பது இராணுவத் திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்றும் இதனை இந்தியாவே அடையாளம் காணும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் உருவாக்கப்படும் அனல் மின் உலைகள் மற்றும் துரித அணு உலைகல் எவை ஆக்கப்பூர்வம னவை என்பதை முடிவுச் செய்யும் உரிமை இந்தியாவிற்கே உண்டு என்று இந்த உடன்பாட்டில் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்க வெளியுறவு குழு கூட்டத்தில் பேசிய புஷ் நிர்வாகத்தின் சார்பாக 123 உடன்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்த நிக் பர்ன்ஸ், இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாகும் அனைத்து துரித அணு உலைகள் அனைத்துப் பாதுகாப்பு விதிமுறை களுக்கு கீழ் வரும் என்றும் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்குள் இந்தியா வில் உள்ள 90 முதல் 95 சதவிகித அணு உலைகள் அனைத்தும் முழுமையான பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் கீழ் (அதாவது அமெரிக்காவின் கண்காணிப் பின் கீழ்) வந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார். பர்ன்ஸ்சின் இந்த அறிவிப்பிற்கு இந்தியா இதுவரை பதில் அக்கவில்லை.


எனவே 123 உடன்பாடு நமது நாட்டின் சுயமரியாதையை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் வகையில் அமைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.


3, சர்வதேச அணுஆற்றல் முகமையிடம் சரணாகதி


அமெரிக்காவுடன் 123 உடன்பாட்டைச் செய்வதற்கு முன்பாக சர்வதேச அணுஆற்றல் முகமையுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துக் கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தின் நகலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிலைப்பதற்கு முதுகெலும்பாக விளங்கிய இடதுசாரி கட்சிகள் கேட்டப்போ தெல்லாம் அதனை தருவதற்கு மன்மோகன் சிங் அரசு மறுத்துவிட்டது. ஆனால் அமெரிக்க இணைய தளங்கல் இந்த உடன்பாட்டின் நகல் பிரசுரிக்கப்பட்டு அது சாமானிய இந்தியர்களுக்கு இணையம் வழியாக கிடைத்த பிறகு இந்திய அரசு அதனை வெயிட்டது. இது ஒரு பெரும் வெட்கக்கேடு,


அணுஆற்றல் முகமையுடன் செய்துக் கொள்ளப்பட்ட உடன் பாடும் இந்தியாவின் தனித்தன்மையை, சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. அணுஆற்றல் முகைமையுடன் செய்துக் கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்ட உடன்பாட்டின் முகப்புரையில் இந்தியாவின் அணுஉலைகளுக்கு வாக்களிக்கப்பட்ட எரிபொருட்களை அளிப்பதற்கு அணுபொருள் ஏற்றுமதி நாடுகள் மறுத்து விட்டால் இந்தியா தகுந்த முறையில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தத்தின் விதிமுறைகல் இது குறித்து எதுவும் குறிப்பிட்டப்படவில்லை. முகப்புரையில் குறிப்பிடபட்டுள்ளது சட்டமாகாது. சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகல் இருந்து இந்தியாவின் அணுஉலைகளுக்கு எப்போது விதிவிலக்கு அளிக்கப்படும் என்பதை இந்த ஒப்பந்தத்தின் 32வது பத்தியில் தெளிவாக்கப்பட்டுள்ளது. 1. இந்தியாவும் சர்வதேச அணுஆற்றல் முகமையும் கூட்டாக ஒப்புக்கொண்டால் 2. இந்த உலைகள் அணுஆற்றல் தொடர்பான பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என்ற நிலை ஏற்பட்டால் மட்டுமே குறிப்பிட்ட அணு உலைகள் சர்வதேச முகமையின் பாதுகாப்பு கட்டுப்பாட்டின் வளையத்தில் இருந்து விலகும். இந்த விதிமுறை என்ன உணர்த்துகின்றது? நமது அணு உலைகள் அணு ஆற்றலை தயாரிக்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்த பிறகு அதுவும் சர்வதேச அணுஆற்றல் முகமை அந்த நிலைக்கு சான்று வழங்கிய பிறகு தான் அது பாதுகாப்பு விதிமுறைகலிருந்து விலகும்.


சர்வதேச முகமையுடன் செய்துக் கொள்ளப்படும் உடன்பாட்டில் எழும் சர்ச்சைகள் குறித்து அதன் ஆளுநர் குழுமம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்று இந்த உடன்பாட்டில் கூறப் பட்டுள்ளது. அதாவது இந்தியாவின் நிலை சரியானதாக இருந்தாலும், அதற்கு மாற்றமாக ஆளுநர் குழுமம் தீர்ப்பு வழங்கிவிட்டால், இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் பிரச்சனை கொண்டுச் செல்லப்பட்டு இந்தியாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் சூழல் ஏற்படலாம். ஈரான் விவகாரத்தில் இவ்வாறு ஏற்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அணுகழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்ய ஈரானுக்கு உரிமை உண்டு என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிலைப்பாடு எடுத்த போதினும், அமெரிக்காவின் தூண்டுதல் பேரில் இப்பிரச்சனையை சர்வதேச அணுஆற்றல் முகமை பாதுகாப்பு குழுமத்திற்கு எடுத்துச் சென்றது.


இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அணுஆயுதம் இல்லாத நாடு என்ற தகுதியை அளிக்கின்றது. இது பிரதமர் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு முரணாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நாம் உருவாக்கியுள்ள அணுஉலைகளை சர்வதேச அணு ஆற்றல் முகமையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் அதே நேரத்தில் அணுஆயுத ஆய்விற்காக இந்த உலைகல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆனால் இந்தியாவிற்கு அணுஆயுத நாடு தகுதி அளிக்கப் பட்டிருந்தால் அவ்வாறு செய்ய முடியும்.


சர்வதேச அணுஆற்றல் முகமையுடன் செய்து கொள்ளும் உடன்பாடு ஹைட் சட்டம் மற்றும் 123 உடன் பாட்டின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை. நாம் இறக்குமதி செய்யும் அணு உலைகளை காலங்காலமாக சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டு வருகின்றது இந்த உடன்பாடு. அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகளுக்கு முரணாக இந்தியா செயல்பட்டால் உடனடியாக இந்த அணுஉலைகளை நிரந்தரமாக மூடி விடும் ஆபத்தும் உள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தை செய்வது மூலம் மன் மோகன் சிங் அரசு நாம் பெற்ற சுதந் திரத்தை அடகு வைத்து அந்நியருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கும் செயலில் ஈடுபடடுள்ளது.

4.இந்தியாவின் எரிசக்தி தேவையை 123 உடன்பாடு நிறைவேற்றுமா?


இந்தியாவின் எதிர்கால எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு அமெரிக்காவுடனான அணுஆற்றல் உடன்பாடு அவசியம் தேவை என்று உடன்பாட்டின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அமெரிக்கா வுடன் அணுஆற்றல் உடன்பாடு மேற்கொண்ட பிறகு அதன் காரணமாக இந்தியாவில் அணுமின் நிலையங்கள் இயங்கத் தொடங்கினாலும் இந்தியாவின் மொத்த எரிசக்தி தேவைகளில் 9 சதவிகிதத்தைக் கூட அது பூர்த்தி செய்யாது. இது எந்த வகையிலும் நமது எரிசக்தி தேவை பரிபூரணமாகிவிடும் என்ற பாதுகாப்பு உணர்வை நமக்கு அளிக்காது.


இந்திய அரசின் அணுஆற்றல் துறை நமது உள்நாட்டு எரிபொருட்களைப் பயன்படுத்தி 2040ல் 1 லட்சம் மெகவாட் மின்சக்தியையும், 2050ல் 2 லட்சத்திற்கும் அதிகமான மெகவாட் மின்சக்தியையும் நம்மால் தயாரிக்க முடியும் என்று கணித்துள்ளது. இவை முழுக்க முழுக்க நமது சொந்த அணுஆற்றல் உற்பத்தி திட்டத்தைப்பயன்படுத்திக் கிடைக்கும் மின் சக்தியாகும். உண்மை இவ்வாறு இருக்கும் போது பெரும் பொருட் செலவில் தமது நாட்டின் தன்மானத்தை அடகு வைத்து அமெரிக்காவுடன் அணுஆற்றல் உடன்பாடு தேவையா என்பதை நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.


இது மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அணுஉலைகல் தயாராகும் மின்சாரத்தின் விலை ஒரு யூனிட்டிற்கு அனல் மின்நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும். நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலை யத்தை அமைப்பதற்கு ஆகும் செலவை விட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளைக் கொண்டு இயங்கும் நிலையத்தை உருவாக்க செலவு மும்மடங்கு அதிகமாக இருக்கும்.


நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களும், எரிவாயுவை அடிப் படையாகக் கொண்டு இயங்கும் மின்உற்பத்தி நிலையங்களும் எதிர்கால இந்தியாவின் மின் தேவையை நிறை வேற்றப் போதுமானவை. இவற்றுடன் சொந்தக் காலில் நின்று மூன்று கட்டங்களாக உருவாக்கத் திட்டமிட்டுள்ள அணுஆற்றல் நிலையங்களும், குறைந்த செலவில், அந்நிய நாட்டிற்கு தன் மானத்தை அடகு வைக்காமல் நமது தேவையைப் பூர்த்தி செய்யும். ஆனால் அமெரிக்க எஜமானர்கன் உத்தரவை மன்மோகன் சிங் எப்படி மீறுவார்? இதன் காரணமாகத் தான் பாகிஸ்தான் வழியாக ஈரானில் இருந்து இயற்கை வாயுவை குழாய் மூலமாகக் கொண்டு வரும் திட்டத்தை அவர் கிடப்பில் போட்டுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேற்றப் பட்டால் மத்திய ஆசியா, மேற்காசியா மற்றும் தெற்காசியாவில் ஒரு எரிசக்தி பாதுகாப்பு வளையம் உருவாகி விடும். அமெரிக்காவிற்கு இது எரிச்சலாக இருப்பதால் ஈரான்/பாகிஸ்தான்/இந்தியா குழாய் எரிவாயு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் தான் அந்நாட்டு அரசின் அனைத்துக் கொள்கைகளையும் வகுக்கின்றன. தற்போது இந்தியாவுடனான அணுஉடன் பாடு வர்த்தக நிறுவனங்கன் நலன் களை மேம்படுத்துவதற்காகவே வகுக்கப் பட்டுள்ளது. இதற்காக ஆட்சியாளர் களை இந்த நிறுவனங்கள் தங்கள் வளைக்குள் கொண்டு வருகின்றன. மன்மோகன் சிங் அவர்கள் தனது அரசு கவிழ்ந்தாலும் பரவாயில்லை, அமெரிக்காவுடன் உடன்பாட்டைச் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதற்கான சூட்சுமம் இது தான். செறியூட்டப்பட்ட யுரேனியத்தையும், அணு ஆயுதங்களை செயலிழக்கச் செய்த பிறகு கிடைக்கும் புளுட்டோனியத்தையும் இந்தியாவின் தலையில் கட்டுவதற்கும், இந்தியாவில் நிறுவப்படும் அணுமின் நிலையங்கல் இருந்து கொளுத்த லாபத்தைப் பெறுவதற்கும் அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் வாயைப்பிளந்து கொண்டு ஆவலுடன் காத்திருக்கின்றன. லாபத்தைப் பெறுவது மட்டுமின்றி இந்தியாவின் கொள்கைகளையும் நிர்ணயிக்கும் உரிமையைப் பெறுவதினால் தான் உடனடியாக இந்த உடன்பாட்டை நிறைவேற்ற அமெரிக்கா அவசரப்படுகின்றது. தனது எஜமானின் அவசரத்தை விட அதிக அவசரத்தை மன்மோகன் சிங் காட்டுவதைப்புரிந்து கொள்ள முடிகின்றது.


அணுஆற்றலை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது சிக்கனமானது அல்ல. அணுஆற்றல் நிலையங்களை அமைப்பதும், நிர்வகிப்பதும். பிறகு அவற்றைச் செயல் இழக்க வைப்பதும் பெரும் பொருட்செலவைத் தரக்கூடியவை என்பதையெல்லாம் தற்போதைய ஆட்சியாளர் எண்ணிப்பார்ப்பதில்லை.


ஆணுஆற்றல் மாசற்றது, விலை குறைவானது என்று சொல்லப்படுவது உண்மை அல்ல. உயிருக்கு உலைவைக்கும் பல மாசுக்களை அணுஉலைகள் வெளியேற்றுகின்றன. அணுஆற்றலுக்கு மாற்றாக மின் உற்பத்தி செய்வதற்கு இந்தியாவில் வளமான வழிகள் உள்ளன. சூரிய சக்தி, காற்றலைகள், ஆறுகள் போன்றவற்றை முழுமையாகப் பயன் படுத்தினால் நமது தேவைகளை நிறை வேற்ற முடியும். அத்தகைய திட்டங் களை நிறைவேற்றுவதற்கு இந்திய நலனை மட்டுமே நெஞ்சில் ஏந்தி நிற்கும் ஆட்சியாளர்கள் வரவேண்டும்.

ஜூன் 25 அன்று மரணமடைவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் குலாம் மஹ்முத் பனாத்வாலா சாஹிப் அவர்கள் அமெரிக்காவுடனான அணுஆற்றல் ஒப்பந்தத்தை எதிர்த்துப் பத்திரிகை அறிக்கை வெüயிட்டார்.

ஆயிரக்கணக்கான பத்திரிகை அறிக்கையை வெளியிட்டுள்ள பனாத்வாலா சாஹிப்பின் கடைசி பத்திரிகை அறிக்கையில் 'அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொள்ள உள்ள அணுஆற்றல் தொடர்பான ஒப்பந்தம் எங்கள் கட்சிக்கு (முஸ்லிம் லீக்) உடன்பாடுடையது அல்ல. புஷ் நிர்வாகத்தின் ஏகாதிபத்திய தேற்றங்களுக்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது. காங்கிரஸ் கட்சி தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் மறைந்த தங்கள் தலைவரின் கடைசி விருப்பத்திற்கு மாற்றமாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மன் மோகன் சிங் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அங்கமாக முஸ்லிம் லீக் இருந்து வருகின்றது. முஸ்லிம் லீக் கட்சியின் ஒரே உறுப்பினராக மக்களவையில் இருக்கும் இ. அஹ்மது மத்திய அமைச்சரவையில் இணை அமைச்சராக உள்ளார். பனாத்வாலாவின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால் இவர் பதவி விலக வேண்டும். மக்கள் நலனை விடச் சுயநலனே மேலானது என்ற கொள்கையின் காரணமாக பனாத்வாலாவின் கடைசி விருப்பத்தைவிட இந்தியாவை அடிமைப்படுத்தும் அமெரிக்கா உடன் செய்யும் உடன்பாடே மேலானது என்று முடிவுச் செய்து முஸ்லிம் லீக் மன்மோகன் சிங் கட்சிக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க முடிவுச் செய்துள்ளது.


(பேராசிரியர் காதர் மைதீன் மக்களவையில் திமுக உறுப்பினராக இருக்கிறார். தற்போது பனாத்வாலாவின் மரணத்திற்குப் பிறகு இவர் முஸ்லிம் லீக் கட்சியின் தற்காலிகத் தலைவராக இருக்கிறார். இவராலும் பனாத்வாலாவின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. திமுகவின் கொறடா போடும் உத்தரவிற்குக் கட்டுப்பட்டே இவர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்க இயலும்)

நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்யும் இஸ்ரேல்!

ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?
- HUSSAINGHANI

ரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார். மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.

எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரான் கடந்த வாரம் நீண்ட தூர மற்றும் நடுத்தர ரகத்தைச் சேர்ந்த 9 ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவிச் சோதனை நடத்தியுள்ளது. இவை நீண்ட தூர மற்றும் நடுத்தர ரக ஏவுகணைகள் ஆகும். உலகின் 40 சதவீத எண்ணைக்குழாய்கள் செல்லும் ஈரானின் ஹோர்மஸ் ஜலசந்திப் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் சஹாப்-3 ரக ஏவுகணை, 2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கக் கூடியது. இதில் 1 டன் வெடிபொருளை பொருத்தி அனுப்பலாம். இதன் மூலம் இஸ்ரேல், துருக்கி, அரேபிய வளைகுடா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியநாடுகள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் வருகின்றன.

இந்த ஏவுகணைச் சோதனை குறித்து ஈரான் விமானப்படை தலைமை கமாண்டரான ஜெனரல் ஹூஸைன் சலாமி கூறுகையில் சமீபகாலமாக எங்களது எதிரிகள் ஈரானை மிரட்டி வருகின்றனர். அவர்களுக்கு பதிலடியாக எங்களது வல்லமையைக் காட்டும் சோதனை இது. எங்களை யாரேனும் தாக்கினால், எண்ணைக் குழாய்கள் செல்லும் நீர் வழிப் பாதையை மூடி விடுவோம்.

பதிலுக்குத் தாக்கும் திறமையும் எங்களுக்கும் உள்ளது. எங்களது இரு முக்கிய எதிரிகளும் (அமெரிக்கா, இஸ்ரேல்) இப்போது எங்களது ஏவுகணைகளின் எல்லைக்குள் வந்துள்ளனர். எங்களது விரல்கள் டிரிக்கரில்தான் எப்போதும் உள்ளன. எந்த சமயத்திலும் தாக்கக்கூடிய வகையில் ஏவுகணகைளை தயார்நிலையில் வைத்துள்ளோம் என்று கூறினார்.

இதனிடையே ஈரானின் இந்த ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்ததோடு ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகுங்கள்' என, தனது கள்ளக்குழந்தையான இஸ்ரேலை புஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணுஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு முழு ஆதரவு தரப்படும் என்றும் புஷ் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கும்படியும் இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளார். இருந்தாலும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க படைகளை அந்தப் போரில் ஈடுபடுத்த மாட்டோம் என்றும் அத்துடன், ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை, இஸ்ரேல் படைகள் பயன்படுத்தவும் அனுமதிக்கமாட்டோம் எனறும் அமெரிக்க ராணுவ அமைச்சக அதிகாரிகள் அறிக்கைகள் பறக்கவிட்டுள்ளனர்.

ஈரான் ஏவுகணைச் சோதனை நடத்தியவுடன் பீதியில் அலறும் அமெரிக்கா தனது கள்ளப்பிள்ளை ஈஸ்ரேலிடன் உள்ள பேரழிவு ஆயுதங்களைப் பற்றி வாய்திறக்காதது ஏன்?

இஸ்ரேலிடம் இருக்கும் மிகக் கொடுரமான பேரழிவு ஆயுதங்கள் ஈரானுக்கு மட்டுமல்ல எல்லா அரபுநாடுகளுக்கும் அச்சுறுத்தலாக இஸ்ரேல் இருக்கிறது. எகிப்தின் ஒரு பகுதியையும், லெபனானின் ஒரு பகுதியையும், சிரியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டது. அதுதான் வேதகாலம் சொல்லும் தங்கள் புனித பூமி என்று இஸ்ரேல் பஞ்சாங்கங்களைப் புரட்டுகிறது. இன்றைக்கு அந்த நாடு அமெரிக்காவின் நிழலில் இருக்கிறது. உலகம் அந்த நாட்டை அங்கீகரித்து விட்டது.

ஆனால், தங்கள் கண்முன்னே பறிபோன தங்கள் தாய்பூமியை மீட்பதில், இஸ்ரேலைச் சுற்றியுள்ள இஸ்லாமிய நாட்டு இளைஞர்கள் துடியாய் துடிக்கிறார்கள். பறிபோன நாட்டை மீட்க போராடுபவர்களுக்குப் ‍பெயர் தீவிரவாதிகள். அராஜகமாக ஆக்கிரமிக்கும் இஸ்ரேலியர் ராணுவவீராகள் என்று ஊடகங்கள் ஊலையிடும். அதையும் உலக மக்கள் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலிடம் 54க்கும் அதிகமான அணுகுண்டுகள் இருக்கின்றன. அவைகளை அந்த நாடே உற்பத்தி செய்ததா? அமெரிக்கா கொடுத்து உதவியதா? இதுவரை ஆயிரத்து முப்பத்துநான்கு முறை அமெரிக்கா அணுகுண்டுச் சோதனை செய்திருக்கிறது. அதில் இஸ்ரேலுக்காகவும் சோதனை செய்திருக்கிறதா? இப்படி வாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. உறுதியாக, அந்தக் குண்டுகள் அரபு நாடுகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படும். இந்த நிலையில், ‘அணுகுண்டு ஆபத்து, அதனைச் செய்யாதே பரிசோதிக்காதே ராசா’ என்று ஈரானுக்கு மட்டும் புத்திமதி சொல்வது எந்த வகையில் நியாயம்?

ஈரான், அணு ஆயுத வல்லரசாக உருவாவதை உலகநாடுகள் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே சமயத்தில், இஸ்ரேல் அணு ஆயுத வல்லரசாக இருக்கிறதே? எவ்வளவு பெரிய அழிவு ஆயுதங்களை இஸ்ரேல் உற்பத்தி செய்கிறது என்பதனை, அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களே அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டில், அண்டையிலுள்ள லெபனான் மீது இஸ்ரேல் போர்தொடுத்தது. ஒரு மாத காலம் யுத்தம் நடத்தியது. அந்த யுத்தத்தில் கந்தகக் குண்டுகளை வீசி மிகப்பெரும் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தகைய குண்டுகளை வியட்நாம் மீது முன்னர் அமெரிக்கா வீசியது. இப்போது லெபனான் மீது இஸ்ரேல் ஏவியிருக்கிறது. கடுகளவு கந்தகம் உங்கள் உடம்பில் பட்டால் என்னவாகும்?
அந்த இடம் அப்படியே வெந்து போகும். வேதனையால் துடித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஆறாத காயங்களோடு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். சக்தி வாய்ந்த அந்த அழிவு சக்திகளை குண்டுகளாகச் செய்து, லெபனான் மீது இஸ்ரேல் வீசியிருக்கிறது.
எவ்வளவு பெரிய கொடுமை? ரொம்ப ரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த இந்த உண்மையை, இஸ்ரேல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவாகல்ஆன் என்ற அம்மையார் அம்பலத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். அதனை இஸ்ரேல் அமைச்சர் ஜேக்கப் எடரி ஒப்புக்கொண்டிருக்கிறார். விஞ்ஞானத்தின் வேக வளர்ச்சி, இஸ்ரேலை வேதாள உலகச் சக்ரவர்த்தியாக்கியிருக்கிறது.

கந்தகக் குண்டுகள் செய்வதை சர்வதேசச் சட்டம் தடை செய்யவில்லை. ஆகவே, அந்தக் குண்டுகளைச் செய்து, லெபனான் மண்ணின் மீதும் மக்கள் மீதும் வீசினோம் என்று இஸ்ரேல் வக்கிரவாதம் பேசியது.

இறக்கும் வரை மனிதனைத் துடிக்கவிடும் இத்தகைய குண்டுகள், அப்போது உருவாக்கப்படவில்லை. ஆகவே, சர்வதேசச் சட்டம் அதனை அன்றைக்குத் தடை செய்யவில்லை. அம்மையார் ஜகாவா என்ன கேள்வி எழுப்பினார்? ‘பாலஸ்தீனத்தின் காஸாப் பகுதியில் மீண்டும் மீண்டும் குண்டுபோட்டீர்கள். போர் மரபுகளுக்குப் புறம்பாக, மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே குண்டு போட்டீர்கள். அந்தக் குண்டுகளெல்லாம் புதிது புதிதாய்க் கண்டுபிடிக்கப்பட்ட நாசகார ஆயுதங்கள். அவைகளின் அழிவு சக்திகளைக் கணக்கிட, மக்கள் குடியிருப்புக்களையே நாசமாக்கினீர்களா?’ என்று அந்த அம்மையார் கேட்டார். ‘கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா இல்லையா?’ என்றார். காஸாப் பகுதியில் வீசப்பட்ட நவீன ஆயுதங்களைப் பற்றிக் கேட்டால், ‘புதிதாய் செய்த கந்தகக் குண்டுகளை லெபனான் மீது வீசி, சோதித்துப் பார்த்தோம்’ என்று அமைச்சர் பதில் சொன்னார்.
எங்கே விழப்போகிறோம் என்று தெரியாத இடியைப்போல, லெபனான் மீது இஸ்ரேல் வீசிய கந்தகக் குண்டுகள் விழப்போகும் இலக்குத் தெரியாது மக்கள் குடியிருப்புக்கள் மீதே மழையாய்ப் பொழிந்தன. கந்தகத் தீயில் மக்கள் துடியாய்த் துடித்தனர். இது என்ன புதிய அழிவு ஆயுதம் என்று புரியாது தவித்தனர். அவைகளெல்லாம் இஸ்ரேல் ராணுவப் பாசறை உருவாக்கிய கந்தகக் குண்டுகள் என்பதனை இப்போது இஸ்ரேலே தெரிவித்திருக்கிறது.
உலகம் வியப்பால் முகம் சுளித்து நிற்கிறது.
லெபனான் மீது கந்தகக் குண்டுகளை மட்டும் வீசவில்லை. கொத்துக் கொத்தான குண்டுகளையும் வீசியிருக்கிறது. இது இன்னொரு வகையான அழிவு ஆயுதம். ஒரே குண்டு வெடித்து, அதிலிருந்து ஐம்பது, நூறு குண்டுகள் சிதறும். அவைகளும் வெடிக்கும். அதன் அழிவு பயங்கரமாக இருக்கும்.
மரபுகளுக்கு விரோதமான ஆயுதங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது என்று லெபனான் யுத்தத்தின்போதே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவைகளை அன்று இஸ்ரேல் மறுத்தது. அதன்பின் ஒப்புக்கொண்டது.

இன்றைக்கும் இஸ்ரேல் வம்புச்சண்டைக்குப் போகிறது.

இஸ்ரேலோடு ஒப்பிடும்போது, எல்லா இஸ்லாமிய நாடுகளும் நிராயுதபாணிகள்தான்.

இஸ்ரேலிடம் அணுகுண்டுகள் உள்ளன. எந்த இஸ்லாமிய நாட்டிலும் அணுகுண்டு இல்லை.

மிகப் பேரழிவை ஏற்படுத்தும் நச்சுக் குண்டுகளையும், அக்கினிக்குண்டுகளையும் உற்பத்தி செய்து இஸ்ரேல் குவிக்கிறது.

எந்த இஸ்லாமிய நாட்டிலும் இத்தகைய அழிவு ஆயுதங்கள் இல்லை.

தீவிரவாதிகளைத் தாக்குகிறோம் என்ற பெயரால், லெபனான் மீது இஸ்ரேல் படையெடுக்கிறது. சிரியா மீது படையெடுக்கிறது. எல்லை தாண்டி அதன் ராணுவம் செல்கிறது. விமானக் குண்டுவீச்சுக்கள் நடைபெறுகின்றன.

இன்றைக்கு இஸ்ரேலின் ஆயுத வலிமை என்ன? வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவிற்கு ஏவுகணைகளையும் ஏவுகணைச் சாதனங்களையும் விற்பனை செய்திருக்கிறது. அதற்காக அன்றைய அதிகாரபீட அரசியல் பிரமுகர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை கையூட்டு அளித்திருக்கிறது.

இப்போது இலங்கையும் அங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறது. இப்படி ஒரு சின்னஞ்சிறிய நாடு, இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கே ஆயுதம் விற்கும் அளவிற்கு வலிமை பெற்றிருக்கிறது. அத்துடன், அணுகுண்டுகளைக் குவித்து வைத்திருக்கிறது. ஆனால், அதற்குப் பக்கத்தில் உள்ள ஈரான் அணு ஆயுதச் சோதனை செய்தால், உலகச் சமாதானத்திற்கே உலை வைக்கிறது என்கிறார்கள். என்ன நியாயம் இது??

எந்த நாடும் அணுகுண்டு தயாரிக்கக்கூடாது. இருக்கின்ற அணுகுண்டுகளை அழித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டும். அதனை விடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நியாயம். அதன் அண்டை நாடுகளுக்கு ஒரு நியாயம் என்று அநியாயம் பேசக் கூடாது.
அணுகுண்டுகளைவிட ஆபத்தான கந்தகக் குண்டுகளையும், அக்கினிக் குண்டுகளையும் இஸ்ரேல் தயாரிக்கிறது. அதனைத் தயக்கமின்றி பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் வீசுகிறது. அந்தக் குண்டுகள் நாளை வளைகுடா மண்ணிலும் வீசப்படலாம்.
அணுகுண்டு, மனித இனத்தை நொடிப்பொழுதில் அழித்துவிடும். ஆனால், கந்தகக் குண்டுகளும் அக்கினிக் குண்டுகளும் மரிக்கும் வரை மனித இனத்தை உயிரோடு போராட வைக்கும். ஐ.நா. மன்றமும் உலக சமுதாயமும் என்ன செய்யப்போகிறது? மவுனம் தான் பதிலா???