.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, March 14, 2010

பேரா. பெரியார் தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்!

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது...


நேர்காணல் தரும் பேராசிரியர்


நமது குழுவினருடன்...


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் இங்கு உள்ள இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10ஆண்டுகளாக இஸ்லாத்தை ஆய்வு செய்து வந்ததாகவும், அதன் பின்னரே இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் ‍கொண்டதாகவும் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு இஸ்லாமிய நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புனித உம்ராவை நிறைவேற்றுவதற்காக சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்றுள்ளார் அதன் பின் மதினா செல்கிறார்.

14-03-2010 அன்று ஜித்தாவில் உள்ள செனையா இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் "நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.

பேரா.பெரியார்தாசன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக்கொண்ட செய்தி அறிந்து ரியாதில் இருந்த அவரிடம் தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

குறிப்பு:
நமது மக்கள் உரிமை வார இதழுக்காக பேராசிரியர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்கள் அளித்த சிறப்பு நேர்காணலின் தொகுப்பு இன்ஷா அல்லாஹ் நமது த.மு.மு.க இணையத்திலும் நமது வலைப்பூவிலும் காணொளியுடன் காணலாம்.

1 comment:

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 
(Pls ignore if you get this mail already)