.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, July 25, 2009

ஆசிரியர் பயிற்சி பெற ஊனமுற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை: இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற ஊனமுற்றோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கை, கால், உடல் ஊனமுற்றோருக்கென, ஊனமுற்றோர் நல்வாழ்வுத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மையம், சென்னை பூந்தமல்லியில் செயல்பட்டு வருகிறது.

இதில், அறிவியலை முதன்மையாகக் கொண்டு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட கை, கால், உடல் ஊனமுற்ற நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பெற 250 ரூபாய்க்கான வங்கி வரைவு, "ஸ்டேட் கமிஷனர் பார் டிசேபிள்டு, சென்னை - 6' என்ற பெயரில் சுயவிலாசமிட்ட ஐந்து ரூபாய்க்கான தபால்தலை ஒட்டிய அட்டையுடன், வங்கி வரைவோலையின் பின்பக்கத்தில் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரியை குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை, முதன்மைச் செயலர், ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர், 15/1 மாதிரி பள்ளிச்சாலை, ஆயிரம்விளக்கு சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

துபாய் ராஜா said...

நல்லதொரு தகவல்.