
.
Tuesday, May 29, 2007
மதசார்பற்ற நாடு இந்தியா?

Saturday, May 26, 2007
வரிந்து கட்டும் சங்கராச்சாரியார்கள்!
சங்கராச்சாரியார்கள் நால்வர் பெங்களூரில் கூடி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்பற்றி விவாதித்தனராம். இதுபற்றி துவாரகா பீட சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த ஜி மகராஜ் கூறியுள்ள கருத்து 'தினமணி'யில் வெளிவந்தது (சென்னை, 24.5.2007, பக்கம் 5) அச்செய்தி வருமாறு:
'ஆதிசங்கராச்சார்யர் ஏற்படுத்திய நான்கு பீடங்களின் சங்கராச்சாரியார்கள் கூட்டம் பெங்களூரில் அண்மையில் நடந்து முடிந்தது.
இக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ராமர் கட்டிய பாலத்தை காக்கக் கோரி மத்திய அரசிடம் மனு அளிக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இதுபற்றி விசாரிக்கும்படி டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் பாலு அதிக ஆர்வம் காட்டவில்லை. மாறாக பாலத்தை இடித்து சேது கால்வாய் அமைக்கவே அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இப்பிரச்சினையில் அரசியல் கலப்படமில்லை. பாலத்தை இடிப்பது இந்துக்களின் மனதைப் புண்படுத்தும். அப்படியிருந்தும் பாலத்தை இடிக்க மத்திய அரசு முடிவு செய்தால், அதை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக உள்ளோம் என்று எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன்.
இதுபோல் நான்கு சங்கர மடத்தின் சார்பிலும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் தீர்மானித்துள்ளோம். பாலத்தை இடிக்காமல், வேறு பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆட்சேபணை இல்லை. இது தொடர்பாக மத்திய அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம். இந்தப் பாலத்தை அமெரிக்காவைச் சேர்ந்த நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புகைப்படம் எடுத்துள்ளது. ராமர் பாலம் 17.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இது இயற்கையாக அமைந்த பாலம் அல்ல. மனிதர்களால் கட்டப்பட்ட பாலமாகும். விஷ்ணு பகவானின் அவதாரமான ஸ்ரீராமரால் மட்டுமே இந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க முடிந்தது.
இந்திய செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களிலும் இந்தப் பாலம் இன்னும் வலுவுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.
கடலுக்கு அடியில் 6 அடி கீழே இது கட்டப்பட்டுள்ளது. அதிக குளிர்ச்சி நீரையும், அதிக வெப்ப நீரையும் தாங்கக் கூடியது இந்தப் பாலம். இந்தப் பாலத்தை இடித்தால் சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட விசையைத் தூண்டிவிட்டதுபோல் ஆகிவிடும். இதனால் தமிழ்நாடு, கேரளம், மகாராஷ்டிரா மாநிலங்களுக்குப் பெரும் அழிவு ஏற்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தப் பாலத்தை இடிக்கும் நடவடிக்கை எடுப்பதன்மூலம் நாட்டுக்குத் தீங்கு ஏற்படுத்துகிறார் மத்திய அமைச்சர் பாலு.''
இவ்வாறு கூறியிருக்கிறார் துவாரகா பீடாதிபதி. நாட்டின் மிக முக்கிய வளர்ச்சித் திட்டத்தை முடக்குவதற்கு அறிவு ஆராய்ச்சிக்கு முன் நிற்க முடியாத புராண இதிகாச மூட நம்பிக்கை சமாச்சாரத்தைக் கொண்டு வந்து குறுக்கே போடுகின்றனர் சங்கராச்சாரியார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?
புராணங்களுக்கும், இதிகாசங்களுக்கும் நம் நாட்டில் பஞ்சமா - அதுவும் இந்து மதம் என்றாலே முழுக்க முழுக்கப் புராணக் குப்பைகள்தானே? நவீன அறிவியல் உலகத்தில் இந்தப் புராணங்கள் எல்லாம் காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டியவை, இல்லையென்றால், கொளுத்தப்பட வேண்டியவைகளே தவிர, பின்பற்றப்பட வேண்டியவையல்ல.
பூமியை பூமாதேவியென்றும், தண்ணீரைக் கங்காதேவியென் றும், காற்றினை வாயு பகவான் என்றும் கூறும் இந்து மடாதிபதிகள், பூமி மீது கால்வைத்து நடக்கலாமா? பூமிமீது மல ஜலம் கழிக்கலாமா? என்ற எளிமையான கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டுமே!
இரண்டாவதாக உண்மைக்கும் மாறான தகவல்களைத் தொடர்ந்து கூறிக் கொண்டேயிருக்கின்றனர். அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானக் கூடம் ராமன் பாலம் இருப்பதாகக் கூறுகிறது என்று ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யையே திருப்பித் திருப்பிக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்.
நாசா இணைய தளத்தை எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். ராமன் பாலம் என்றோ, 17 லட்சம் ஆண்டு களுக்கு முற்பட்டது என்றோ எந்த இடத்திலும் அவர்கள் சொல்ல வில்லை.
'இன்டோலிங்க் காம், வைஷ்ணவ நிறுவன நெட் ஒர்க்' என்னும் பார்ப்பன அமைப்பு ஒன்று நாசா கூறியதாகத் தவறான தகவலைத் தந்து கொண்டு இருக்கிறது. மத்திய அரசு இத்தகு அமைப்புகள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் ராமனால் கட்டப்பட்டது இந்த பாலம் என்று கதைக்கிறார்களே - -பதினேழரை லட்சம் ஆண்டுகளுக்குமுன் மனிதன் இருந்தானா என்பதற்கு முதலில் பதில் கூறட்டும்!
இன்றைக்கு மத்திய அமைச்சர் மாண்புமிகு டி.ஆர். பாலுமீது சேற்றைவாரி இறைக்கும் இந்தச் சங்கராச்சாரியார்கள் அமைச்சரைச் சந்தித்து, ராமன் பாலம் குறித்து விளக்கம் பெற்று, அதனை ஏற்றுக் கொண்டனர் என்கிற செய்தி இதற்கு முன் வெளிவந்ததே! இந்த நிலையில் அமைச்சர்மீது அவதூறு பேசுவதும், ராமன் பாலம் பற்றிப் பேசுவதும் அறிவு நாணயம்தானா?
இவர்கள் நீதிமன்றம்தான் போகட்டும், வீதிமன்றம்தான் வரட்டும், அவர்களை அந்தந்த இடத்தில் சந்திக்க தமிழ்நாட்டு மக்களும் தயார்! தயார்!!
நன்றி: விடுதலை நாளிதழ் 25-05-2007
Friday, May 25, 2007
மதுவைத் தேடிச் சென்றவர்கள் மரணத்தைத் தழுவிய பரிதாபம்! த.மு.மு.க-வின் அவசரகால மீட்புப்பணி குழு உடனடி மீட்புப் பணியில்!!

திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் கலைவாணி தியேட்டர் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்றிரவு 7 மணிக்கு கடையை ஒட்டியுள்ள பாரில் 50-க்கும் மேற்பட்டோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அந்த பார், 60 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டது. ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் மது குடித்து முடித்த பலரும் வெளியே போக முடியாமல் பாரிலேயே இருந்தனர்.
பாரின் ஒரு பக்கத்தில் தனியார் பனியன் கம்பெனியின் 22 அடி உயர காம்பவுண்ட் சுவர் இருந்தது. இது, 400 அடி நீளத்தில் முற்றிலும் கருங்கல்லால் அமைக்கப்பட்டிருந்தது. மழை பெய்தபோது திடீரென்று சுவர் இடிந்து பாரின் ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்தது. பாரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி மண்ணோடு மண்ணாக அமுக்கப்பட்டனர். மழைக்கு பயந்து நுழைவாயிலில் ஒதுங்கியிருந்தவர்கள் சத்தம் கேட்டு அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் விரைந்து வந்து ராட்சத

பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிகம் தங்கி வேலை செய்கின்றனர். மதுரை, தேனி உள்பட தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். நேற்று நடந்த பார் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலோர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இறந்தவர்களில் 20 பேரின் உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஸ்திவாரம் உறுதியாக இல்லாததால்தான் அதிக எடை கொண்ட கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவர், இடிந்து விழுந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து விசாரிக்க டி.எஸ்.பி. குழந்தைசாமி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாரின் உரிமையாளர் கந்தசாமி, பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக உள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பனியன் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் கந்தசாமி கைதானார். பார் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் அமையவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 பேர் மீது வழக்கு திருப்பூரில் பார் மீது சுவர் இடிந்து விழுந்து 28 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் கந்தசாமி, பனியன் கம்பெனி உரிமையாளர் சுப்பிரமணியம் ஆகியோர் மீது திருப்பூர் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசாமி ஏற்கனவே கொலை வழக்கில் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.50 ஆயிரம் நிதிஉயிரிழந்த 28 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.15 ஆயிரமும் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.
2002 இல் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவி அளிக்காமல் இருப்பதா? பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்.
புதுடில்லி, மே 24- 'உலக மக்கள் உரிமை'' எனும் தலைப்பில் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் பன்னாட்டுப் பொது மன்னிப்பு அமைப்பு, குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் இன்னமும் வழங்கப் படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளது.
குஜராத்தில் நிகழ்ந்த கொடுமை 2002 இல் ஏற்பட்ட கலவ ரத்தில் பல்லாஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள்; பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இதுவரை நிவாரணம் அளிக்கப்பட வில்லை. மறுவாழ்வு தரும் செயல்கள் மிகமிகத் தாமதமான முறையில் நடக்கின்றன. குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள்; வாடகைக்கு வீடுகூடக் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கான இடம் பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்கள் மனிதர்கள் வாழ முடியாத இடங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ஒன்றிரண்டு வழக்குகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், முடிக்கப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி மீண்டும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. கொடுஞ்செயல்களில் ஈடுபட்ட 41 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
பா.ஜ. கட்சிக்குத் தொடர்பு
'முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்த வன்முறையாளர்களுக்கும், அன்றைய ஆளுங் கட்சித் தலைவர்களுக்கும் இடையே நடந்த செல் பேசிப் பேச்சுகள் தொடர்பான ஆதாரங்கள் நிறையவே தற்போது கிடைத்துள்ளன. இந்து மத வெறிக் கட்சியான பா.ஜ. கட்சிக்கு இக்கலவரங்களில் உள்ள தொடர்புக்கு அத்தாட்சி கிடைத்துள்ளது.'' மேற்கண்டவாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மதக்காரர்கள், அதாவது இந்து மதக்காரர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கவேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் குஜராத்தின் நரேந்திர மோடியின் பா.ஜ. கட்சி அரசு தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Thursday, May 24, 2007
மாண்டவர் பிரேத பரிசோதனையின் போது உயிருடன் மீண்டார். மருத்துவர்களின் அலச்சியப்போக்கால் மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்புகள்!
தேனி 24-05: இறந்து விட்டதாக கூறி பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் திடீரென எழுந்து உட்கார்ந்ததால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கூட்டப்பன்பேரி என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆண்டவர். கூலித் தொழிலாளி. இவருக்கும், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் விஷம் குடித்து விட்டார் ஆண்டவர்.
உடனடியாக அவரை தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆண்டவர் இறந்து விட்டதாக கூறினர்.
அவரது 'உடல்' ஸ்டிரெச்சரில் வைக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு ஓரமாக வைத்திருந்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பின்னர் 'உடல்' தரப்படும் என டாக்டர்கள் கூறினர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் சாந்தம்பாறையைச் சேர்ந்த ஆண்டவர் என்ற பெயர் கொண்ட இன்னொரு நபரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இந்த நிலையில், கூட்டப்பன்பேரி ஆண்டவரின் 'உடலை' ஊழியர்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மயக்கத்தில் இருந்த ஆண்டவர் மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர்.
பின்னர் டாக்டர்கள் வந்து பார்த்து ஆண்டவர் நலமடைந்து விட்டதை உறுதி செய்து பின்னர் அவரை அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரிலும் மதுரையிலும் நடந்த இருவேறு அறுவை சிகிச்சைகளில் நோயாளிகள் இறந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டாக்டர்களை போலீஸ் கைது செய்தது. டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
அரசு மருத்துவமனைகள் ஸ்தம்பித்தன. அறுவை சிகிச்சைகள் நடைபெறவில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் அடையாள வேலைநிறுத்தம் செய்யப்போவதாக டாக்டர்கள் சங்கம் அறிவித்தது.
பிரச்னை வேறொன்றுமில்லை. தவறான சிகிச்சையினாலோ, கவனக்குறைவாலோ ஒரு நோயாளி இறந்துவிட்டால் அல்லது அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளித்த டாக்டர் பொறுப்பாளியா, இல்லையா என்பதுதான் அடிப்படைக் கேள்வி. இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே சில வழிகாட்டுதல்களைக் காவல்துறைக்குத் தந்திருக்கிறது.
தவறான சிகிச்சை அளித்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்தால், அதே பிரிவில் உள்ள மற்றொரு மருத்துவ நிபுணரின் ஆலோசனையைக் கேட்டு அவரது பரிந்துரைக்குப் பின்னரே சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் கைது செய்யப்படக் கூடாது. இவைதான் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள்.
ஓர் அரசு அலுவலரோ, காவல்துறை அதிகாரியோ தங்களது கடமையை ஆற்றும்போது ஏற்படும் தவறுகளுக்காகத் தண்டனை பெறுவதில்லை. நல்லெண்ணத்துடன் செய்யப்பட்ட முடிவு தவறாகிவிட்டது என்று கருதி மன்னிக்கப்படும். அதே அளவுகோல் டாக்டர்களுக்குப் பொருந்தாது. காரணம், இவர்களது கவனக்குறைவால் ஏற்பட இருப்பது பொருள் இழப்பல்ல, உயிரிழப்பு!
வரவர மருத்துவம் என்பது சேவை என்கிற எண்ணம் அகன்று வியாபாரமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது. பல லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்து, மேலும் பல லட்சங்கள் செலவழித்துப் படித்து, டாக்டர்களாக வருபவர்களிடம் வியாபார நோக்கம் இருப்பதில் அதிசயம் இல்லை. ஆனால், தொழிலில் அக்கறையும், கவனமும் இல்லாமல் இருப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
மருத்துவர்களின், மருத்துவமனைகளின் கவனக்குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகரின் அனுபவமும், முன்னாள் நடிகை விஜியின் அனுபவமும், நினைவில் நிழலாடுகின்றன. இதுபோல் எத்தனை எத்தனையோ சம்பவங்கள் வெளியில் வராமல் நோயாளிகளின் மரணத்துடன் மண்ணாகி விட்டிருக்கின்றன.
சம்பந்தப்பட்ட டாக்டர்களை காவல்துறையினர் கைது செய்தது தவறாக இருக்கலாம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம், நோயாளிகளைப் பரிசோதிக்க மாட்டோம், அறுவைச் சிகிச்சைகள் நடைபெறாது என்று பொதுமக்கள் மீது தங்களது ஆத்திரத்தைத் திருப்புவது எந்த வகையில் நியாயம்? கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல், பொதுநலச் சிந்தனையில்லாமல் நடந்துகொள்ளும் டாக்டர்களின் செயல் கண்டனத்துக்குரியது. மருத்துவ நெறிகளுக்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல, மனிதாபிமானமே இல்லாததும்கூட.
இவ்வளவையும் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். சிகிச்சையின்போது நோயாளி இறந்ததற்காகக் கைது செய்வதென்றால் அத்தனை டாக்டர்களுமே கைது செய்யப்பட வேண்டியவர்கள்தான். டாக்டர்கள் கடவுளல்ல, எல்லா நோயாளிகளையும் குணப்படுத்த. டாக்டர்கள் மீது வழக்குத் தொடர்வது என்பது வேறு, எந்தவித முன்விசாரணையும் இல்லாமல் கைது செய்வது என்பது வேறு.
போராட்டத்தில் ஈடுபடும் டாக்டர்கள் எந்த அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்களோ அதே அளவுக்குக் கண்டனத்துக்கு உரியவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினருமே!
Tuesday, May 22, 2007
30 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் வெளிநாட்டில் வேலைக்குச் செல்லத்தடை.
Monday, May 21, 2007
Aadam Bridge: ராமன் பாலம் ஆதாரம் இருந்தால் சொல்லுங்களேன்!
'ராமன் பாலத்தை, நடந்து செல்வதற்காகப் பல நூற்றாண்டுகளுக்கு முன் பயனபடுத்தியுள்ளனர் என்பதை நிரூபிக்க வரலாற்று ஆதாரங்கள் நிறையவே உள்ளன. இந்தப் பாலம் இயற்கையாக உருவானதல்ல என்றும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர் (எஸ். பத்ரி நாராயணனும் வி. சீனிவாசனும்)''கோயங்கா குடும்பத்துக் கணக்குப் பிள்ளை ஒருவர் மேற்காணும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.
அவரைப் போலவே 'செட்டில்மென்ட் இலாகாவில்'' பணியாற்றிய ஒருவரும் இதே கருத்துகளுக்குச் சொந்தக்காரர் எனத் தம் பேட்டியின் மூலம் அறிவிக்கிறார். ஆதாரங்களை அவிழ்த்துக் கொட்டிவிட வேண்டியதுதானே! உலகின் முதல் பாலம் நைல்நதியில் கட்டப்பட்டது என்றும் கட்டி 4,657 ஆண்டுகள் ஆகின்றன என்றும் தி.க தலைவர் வீரமணி ஆதாரத்துடன் கூறினாரே! 17 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுக்கு முன் ராமன் கட்டினானா? என்றும் கேட்டாரே! பதில் கூறுங்களேன்!
மனிதன் உருவாகி 65 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகின்றன. அவன் பாலம் கட்டி 5 ஆயிரம் ஆண்டுகளுக்குள் ஆகிறது. எப்படி இலட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன என்கிறீர்கள்? ஆதாம் பாலம் (ராமன் பாலம்) இயற்கையில் உருவாகிய மணல்மேடுதான்! மனிதன் கட்டியது என்பதற்கு பத்ரிநாராயணன் வலுவாக ஏதும் கூறவில்லையே! ராமன் கட்டினான் எனக் கூறவில்லையே!
காளைமாட்டைக் குதிரையாக்கிய என்.எஸ். ராஜாராம் போன்றவரான சீனிவாசன்கூட மணல்மேடுகள் கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் மட்டுமே ஏற்படக் கூடும் - இங்கே அப்படி ஏற்படவில்லை என்கிறார்.
Satellite Picture
12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால்தான் இந்தியமாக்கடல் ஏற்பட்டது என்றும் ஜெர்மனியும் பிரான்சும் சேர்ந்த பரப்பளவுள்ள பீடபூமி அழிந்து போனது என்றும் பனி ஆராய்ச்சிக் கப்பலில் சென்ற அறிவியலாளர்கள் கூறியதைச் செய்தித்தாள்கள் 6.5.2007இல் வெளியிட்டனவே, படிக்க வில்லையா? (படிக்க: டெக்கான் கிரானிகிள்)ஆதாரப் பூச்சாண்டியும், ஆராய்ச்சியாளரின் கருத்துப் பூச்சாண்டியும் கருகிப் போய்விட்டதால் மல்கோத்ரா மாதிரி 'நம்பிக்கை' என்று உச்சாடனம் பண்ணுங்கள் அறிவியல் அடிப்படையில் பேசுவது மாதிரிப் 'பாவ்லா' பண்ணாதீர்கள்! புண்ணாக்கி விடுவோம்!
சேதுக்கடல் கால்வாய்த் திட்டத்தை எதிர்ப்பவர்கள் - எந்தப் பெயரால் எதிர்த்தாலும் - தேசத் துரோகிகள்தான்! யாராக இருந்தாலும்..! சங்கரமடத் தலைவர்களாக இருந்தாலும்! அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள்!
நன்றி: விடுதலை நாளிதழ் 20-05-2007
Sunday, May 20, 2007
இராமன் பாலம் புளுகு இனி எடுபடாது!

தந்தை பெரியார்பாதுகாத்து வைத்தார்அது மட்டுமல்ல, இந்த நூல் தந்தை பெரியார் அவர் களால் பாதுகாத்து வைக்கப் பட்ட ஒரு அற்புதமான நூல். 1928-லே வால்மீகி இராமா யணத்தை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்த சி.ஆர். சீனிவாச அய்யங்கார் எழுதிய ``இதர இராமாய ணங்கள்’’ என்பது இந்த நூலினுடைய பெயர். இதை புரட்டினால் அப்ப டியே ஏடு, ஏடாக உடைந்து போகும். வால்மீகி இராமா யணம், துளசிதாஸ் இராமாய ணம், கம்ப இராமாயணம் என்ற இப்படித்தான் இராமா யணத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் இராமாயணத்தைப்பற்றி படிக்கின்ற, பிரசங்கம் செய் கிறவர்களுக்கே தெரியாத அள வுக்குப் படித்தவர்கள் நாங்கள். திராவிட இயக்கத்தவர்கள்.``இதர இராமாயணங்கள்’’ஆகவே எங்களுக்குத் தெளி வாகத் தெரியும். ``இதர இராமா யணங்கள்’’ என்று சொல்லக் கூடிய இந்த நூலிலே யவன இராமாயணம் இருக்கிறது. கிறிஸ்தவ இராமாயணம் உண்டு. ரோமானியர் இராமாயணம் உண்டு. அதேபோல பவுத்த இராமாயணம் உண்டு. இவை இத்தனையும் இதிலே தொகுக்கப்பட்டிருக் கிறது. இந்த நூலில் 75 ஆம் பக்கத்தில் பவுத்த இராமாய ணம் இருக்கிறது. இது ஒரு கற்பனை என்பதற்கு அடையாளத்திற்காக சொல்லு கின்றேன். எனவே இராமர் பாலம் என்று கூறுவதற்கு அர்த்தமே இல்லை. வெறும் நம்பிக்கை என்று சொல்லி இந்த மக்களை மடையர்களாக ஆக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

Saturday, May 19, 2007
Bomb blast at Hyderabad Makkha Masjid ஹைதராபாத் மக்கா மஜ்தில் குண்டு வெடிப்பு.

அத்துடன் பள்ளியில் வெடிக்காத நிலையில் இருந்த இன்னும் இரன்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயல் இழக்க செய்துள்ளனர்.


புகழ்பெற்ற சார்மினாரில் இருந்து 100 அடி தொலை வில் உள்ள இந்த பள்ளியின் மத்தியில் உள்ள வளைவானது மக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டதால் இது மக்கா பள்ளி என்று அழைக்கப்படுவதாக சொல்கிறார்கள். இன்னும் இது 8000 ம் கொத்தனார்களை கொண்டு 77 வருடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாகும். இந்த பள்ளியின் உள் வளாகமானது 75 அடி உயர உயரமும் 220 அடி அகலமும் 180 அடி நீளமும் உடையதாக உள்ளது. இன்னும் பல புகழ் பெற்ற பல கட்டிடக்கலை சிறப்பம்சங்களையும் தன்னிடத்தே கொன்டதாக இந்த பள்ளி உள்ளது.இந்த பள்ளியைப் பற்றிய சரித்திர குறிப்புக்களில், இந்த பள்ளியின் நிர்மான வேலைகள் ஆரும்பமாகியபோது இதை ஆரம்பித்த சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்கள் நாட்டில் உள்ள அனைத்து புகழ்பெற்ற மார்க்க அறிஞர்களையும் அழைத்து எவர் ஒரு தொழுகையைக் கூட விடாமல் இதுவரை தொழுதுள்ளாரோ அவர் வந்து இதற்காக அடிக்கல்லை நாட்டலாம் என்றபோது ஒருவரும் வரவில்லையாம் பின்னர் சுல்த்தான் முகம்மது குதுப் ஷா அவர்களே அந்த அடிக்கல்லைலை நாட்டிவிட்டு தான் தனது 12 ம் வயதில் இருந்து இதுவரை ஒரு தொழுகையை கூட விடவில்லை என்று கூறியதாக வரலாறுன்டு. மேலும் இது இந்தி அரசால் புராதான சின்னமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
Thursday, May 17, 2007
மதச்சார்பற்ற அரசு (Secular State) என்று கூவிக் கொண்டே, அலுவலக வளாகத்துக்குள் கோயில் கட்டுவதா?

இந்த கண்காணிப்புக் குழுபோலவே, தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு விழுக்காடு (மகளிர் இட ஒதுக்கீடு உள்பட) சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதற்கு ஒரு கண்காணிப்புக் குழு (Monitoring Committee) போட்டு, சமூகநீதியில் முழு நம்பிக்கையுள்ள மூவர் குழு அல்லது அய்வர் குழு என்று ஒரு குழு போட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீடு, (S.C., S.T., M.B.C., B.C) உள்பட அரசுத்துறைகள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் எல்லாவற்றிலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி, அரசுக்குத் தகவல் அனுப்பிட வற்புறுத்தவேண்டும்.
பக்தி அவரவர் சொந்த விஷயம். விடுமுறை போட்டுவிட்டு அந்த வேஷத்தில் இருக்கலாமே தவிர, கடமையாற்றும்போது (Duty) இப்படி இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுதலும் அவசியம், அவசியம்!
Wednesday, May 16, 2007
மத்திய அமைச்சராக ராதிகா செல்வி 'புரோட்டோகாலை' (விதி) மீறிய தமிழக அரசு.
சென்னை: மத்திய அமைச்சராக ராதிகா செல்வி பதவியேற்பது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருப்பது 'புரோட்டோகாலை' (விதி) மீறிய செயல் என கூறப்படுகிறது.

18ம் தேதி காலை 9.30 மணிக்கு ராதிகாசெல்வி பதவியேற்பார் என்றும் அவருக்கு குடியரசுத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட வேண்டிய ஒரு அறிவிப்பை, அத்துமீறி தமிழக அரசு வெளியிட்டது தவறு, இதன் மூலம் புரோட்டோ காலை தமிழக அரசு மீறி விட்டது என்று கூறப்படுகிறது.
சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவியும், திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பியுமான ராதிகா செல்வி மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அவர் பதவியேற்கிறார்.
மத்திய அமைச்சரைவயில் நேற்று முக்கிய மாற்றங்கள் நடந்தன. தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு ஏ.ராசாவுக்கு மாற்றப்பட்டது. அவர் வசம் இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையை பிரதமர் தன் வசம் வைத்துக் கொண்டார்.
உள்துறை இணை அமைச்சராக இருந்த ரகுபதி, வனத்துறை இணை அமைச்சராக மாற்றப்பட்டார்.
இதுதவிர புதிய இணை அமைச்சராக ராதிகா செல்வி நியமிக்கபப்ட்டுள்ளார். தயாநிதி மாறன் ராஜினாமாவில் குறைந்த ஒரு இடத்தில் ராதிகா செல்வி சேர்க்கப்பட்டுள்ளார். இணை அமைச்சராக அவர் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
இவருக்கு எந்தத் துறை ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை.
கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கி, சென்னையில் போலீஸாரால் எண்கௌண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் மனைவிதான் ராதிகா செல்வி.
பண்ணையார் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவரை அப்படியே திமுக இழுத்துக் கொண்டு திருச்செந்தூர் எம்.பி. தொகுதியில் நிறுத்தியது. ராதிகா வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் நாடார் சமுதாயத்தினரின் ஓட்டுக்களும் கணிசமாக திமுகவுக்குத் திரும்பியது. ராதிகாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று நாடார் சமூகத்தினர் எதிர்பார்த்தனர். ஆனால் திமுக தலைமை அதை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் நாடார் சமூகத்தினர் இடையே திமுக மீது அதிருப்தி நிலவி வந்தது.
இந்த அதிருப்தி அலையைப் பயன்படுத்தித்தான் சரத்குமார் புதிய கட்சி தொடங்குவதற்கான அடிப்படை வேலைகளில் மும்முரமாக உள்ளார். இந்த நிலையில்தான் சரத்குமாருக்கு செக் வைக்கும் விதமாக ராதிகா செல்விக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
கருணாநிதிக்கு பெருமை சேர்ப்பேன்: ராதிகா
இதற்கிடையில் முதல்வர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மக்களுக்கு சேவை செய்வேன் என மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டள்ள ராதிகா செல்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. இவ்வளவு பெரிய பதவி கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்தில்லை.
மத்திய அமைச்சர் பதிவிக்கு என்னை தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன் என அவர் கூறினார்.
Thursday, May 10, 2007
மதுரை வன்முறைகள் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் விஜயகாந்த் ஆவேசம்.

பெண்களைப் புரட்டியெடுத்த போலீசார். இன்னொரு கொடியன்குளமான கூமாப்பட்டு.

போலீஸ் தடியடியில் பலியானதாகக் கூறப்படும் அறுபது வயது லட்சுமியை, கடந்த 4_ம் தேதி நாம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கெனவே சந்தித்துப் பேசியிருந்தோம். நாம் போயிருந்தபோது அவரால் பேசவே முடியவில்லை. ‘‘அவரை போலீஸார் அடித்து லத்தியால் நெஞ்சில் குத்தினாங்க!’’ என்றார் அருகில் இருந்தவர். அன்றிரவே லட்சுமி இறந்து போனார் என்று கேள்விப்பட்டதும் நமக்கே அதிர்ச்சி.
இறந்து போன லட்சுமியின் மகள் பொன்மாடத்தி, மகன் மாடசாமி ஆகியோரிடம் பேசினோம்.

அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த மகளிர் மன்றத் தலைவி செல்வி, நம்மிடம் பேச முன் வந்தார்.
‘‘பொங்கல் வைத்துச் சாமி கும்பிடுவது தொடர்பாக அன்றைக்கு ராத்திரி காலனியில் கூட்டம் போட்டிருந்தோம். அப்போது மடமடவென்று போலீஸார் வந்து எங்களை ரவுண்ட் கட்டினாங்க. ‘அரிவாளோடு போய் தகராறு பண்ணத்தானே கூட்டம் போடுறீங்க!’ என்று மிரட்டி எல்லோரையும் கைது செய்யப் போனாங்க.
பத்தாவது படிக்கும் என் மகன் பகத்சிங்கை போலீஸார் இழுத்துப் போன போது ‘அவன் படிக்கிற பிள்ளை,விட்டிருங்கய்யா’ என்று நான் கெஞ்சினேன். என்னை எட்டி இடுப்பில் உதைத்த போலீஸ் அதிகாரி ‘அடிங்கடா’ என்று உத்தரவிட்டார்.
போலீஸார் கம்பாலும், துப்பாக்கியைத் திருப்பியும் ஆம்பிளை, பொம்பிளை அத்தனை பேரையும் விரட்டி விரட்டி அடிச்சாங்க.
ஆம்பிளைகள் எல்லாம் காட்டுக்குள் ஓடி விட்டதால், போலீஸாரின் கோபம் பெண்கள் மீது திரும்பியது. பெண்களின் இடுப்புக்குக் கீழே யாரிடமும் காட்ட முடியாத இடத்தில் அடித்தனர்.
போலீஸார் அடித்ததில் ஒரு பெண்ணுக்கு மூன்று மாத கர்ப்பம் கலைந்து விட்டது. அதோடு ராத்திரியிலும் வீடு வீடாகப் புகுந்து தொந்தரவு செய்தாங்க. இதெல்லாம் ராத்திரி இரண்டு மணி வரை நடந்திச்சு. உயிருக்குப் பயந்து இந்த ஊரில் இருக்கிறோம். காட்டுக்கு ஓடிப் போன எங்க வீட்டுக்காரங்க எப்போது திரும்பி வருவாங்கன்னு தெரியலை’’ என்றார் செல்வி. அப்போது அங்கு வந்த சித்திரவடிவு என்பவர், தனது தொடையில் ஏற்பட்ட காயத்தைக் காண்பித்தார்.
போலீஸ் வழக்குப் போட்டு விடுமோ என்ற பயத்தில், அடி வாங்கிய பெண்களில் பலர் சிகிச்சைக்கே செல்லவில்லை. பத்துக்கு மேற்பட்டோர் மட்டும் துணிந்து விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். பல பெண்களை போலீஸார் மிரட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர விடாமல் செய்தது தனிக்கதை.
ஊருக்கு வெளியே நாம் சந்தித்த செல்வியின் கணவர் சடையன் ‘‘என் பையன் உள்பட ஒன்பது பையன்களை போலீஸார் பிடித்துப் போய் ஜெயிலில் அடைச்சிட்டாங்க’’ என்றார் கலக்கத்துடன்.
சமூகநீதி மாணவர் பேரவையின் மாநில அமைப்பாளரான சி. பாஸ்கரனிடம் பேசினோம்.
‘‘இது கொடியன்குளம் போல ஒரு மோசமான சம்பவம்!’’ என்று ஆரம்பித்தவர், ‘‘இரு தலித் பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டது உண்மைதான். போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அது ஓய்ந்து போய் விட்டது. இந்தப் பகுதி மக்கள் அரசு மற்றும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்தி வருபவர்கள். ஆகவே, அவர்களைப் பழிதீர்க்க இதை ஒரு நல்ல வாய்ப்பாக போலீஸார் பயன்படுத்தி, இரவில் வீடு புகுந்து தாக்கியிருக்கிறார்கள். மூடப்பட்டிருந்த வீட்டுக் கதவுகளை ஓங்கி உதைத்துத் திறந்து, அந்த இரவில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு ஓடியதைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். ஒரு வயதுக் குழந்தை கர்ப்பிணிப்பெண் உள்பட பாரபட்சமில்லாமல் எல்லோருக்குமே அடி, உதை விழுந்திருக்கிறது. காயமடைந்த லட்சுமி இறந்துபோக, அவருடன் இருந்த அவரது மகனை சிறையில் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதலை நடத்திய போலீஸார் மீது அரசு நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார் பாஸ்கரன் சூடாக.
இந்தப் பிரச்னையில் கைதானவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமாரிடம் பேசினோம்.
‘‘கூமாப்பட்டி தகராறு இரவு ஏழு மணிக்கே முடிந்து போன நிலையில், போலீஸார் பத்தரை மணிக்கு மேல் வந்து கிராமத்தைப் பந்தாடியிருக்கிறார்கள்.
கூமாப்பட்டி உள்பட மூன்று தலித் கிராமங்களில் முந்நூறு போலீஸார் புகுந்து பெண்களின் சேலைகளை உருவியும், மர்ம உறுப்புகளில் அடித்தும் காயப்படுத்தியுள்ளனர். ‘அப்பாவிகளான எங்களைக் கைது செய்தால் தீக்குளிப்பேன்’ என்று மிரட்டிய முத்துலட்சுமி என்ற பெண்ணை உடனடியாகக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். தவறிழைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, நடந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார் அவர்.
‘‘கூமாப்பட்டியில் நடந்த இருபிரிவினருக்கிடையேயான மோதலின்போது, அம்மச்சியாபுரத்தில் இருந்து சுமார் ஐம்பது பேர் பெட்ரோல் குண்டுகளுடன் வந்ததாகவும், அவர்கள் நடத்திய கல்வீச்சில் மூன்று போலீஸார் காயமடைந்ததாகவும், அதன்பிறகுதான் போலீஸார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு ரவுண்ட் சுட்டதாகவும் திருவில்லிபுத்தூர் தாசில்தார் பாலு என்பவர் கூறியதாக நாம் கேள்விப்பட்டோம்.
மாவட்ட எஸ்.பி. செந்தில்குமாரிடம் பேசினோம்.
‘‘நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி என்ற மூதாட்டி எப்படி இறந்தார் என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டுக்குப் பிறகே தெரியவரும்!’’ என்றார் அவர்.
லட்சுமியின் உடலை வாங்க, அவரது உறவினர்கள் மறுத்து வரும் நிலையில், கடந்த 6_ம் தேதி அந்த உடல் இருந்த மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணக்கிடங்குக்குத் திடீரென வந்தார், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.
‘‘தலித் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட லேசான தகராறு முடிந்து போன நிலையில், அன்றிரவு போலீஸார் வீடு வீடாகப் புகுந்து சுமார் நூறு பெண்களின் மார்பகம், மர்ம உறுப்பு போன்றவற்றைத் தாக்கியுள்ளனர். லட்சுமியின் மரணத்தை, கொலை வழக்காகப் பதிவு செய்யவேண்டும். இதில் தொடர்புடைய அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். சம்பவம் நடந்து இத்தனை நாளாகியும் இன்னும் ஆர்.டி.ஓ. இந்தப் பக்கமே வரவில்லை. போராட்டம் வேண்டாம் என்று நாங்கள் நினைக்கிறோம். அந்தக் கட்டத்துக்கு அரசு எங்களைத் தள்ளிவிடக்கூடாது’’ என்றார் அவர்.
ஒரு கோழியால் ஏற்பட்ட தகராறில் மூன்று குக்கிராமங்கள் இப்படிக் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடப்பது பரிதாபம்தான்.
Friday, May 4, 2007
குஜராத் எண்கவுண்டர்; அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
அப்பாவி கெளசர் பீவி கற்பழித்துக் கொலை.
சிபிஐயிடம் போகிறது போலி எண்கவுன்டர் விவகாரம்:சிக்கலில் நரேந்திர மோடி

