.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, November 25, 2008

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.

தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது.
விருதுபெற்ற டாக்டர் திரு. மாசிலாமணி அவர்களுக்கு எமது மனமார்ந்த பாரட்டுக்களும் வாழ்த்துகளும்
தமிழக விஞ்ஞானிக்கு சவூதி இளவரசர் விருது. புற்றுநோய் ஒரு கொடிய நோய் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த நோயின்கடுமையிலிருந்து தப்ப இரண்டே வழிகள் தான்.மு தலாவது நோய் வராதவாறு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வது.இரண்டாவது, தப்பித் தவறி வந்தால் இதை துவக்கக் கட்டத்திலேயே கண்டறிவது.


இந்த முயற்சியில் உலகெங்கும் பல்வேறு விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் தொடர்ந்து முயன்று வருகிறார்கள்.இந்த ஓட்டப்பந்தயத்தில் டாக்டர்.வ.மாசிலாமணி என்ற தமிழக விஞ்ஞானி ஒரு அற்புத சாதனைப் படைத்து சவூதி இளவரசர் மேதகு நாயிஃபா ( Prince Naifa) அவர்களிடம் பரிசும் பட்டயமும் பெற்றுள்ளார்.பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ஆறரை லட்சம் ரூபாய்.அவருக்கும், அவருக்குத் துணையாக இருந்த மருத்துவர்கள்,விஞ்ஞானிகள்,ஆராய்ச்சியாளர்கள் அனைவரையும் பாராட்டி ,பரிசுகள் வழங்கி ரியாத் சவூதி மன்னர் பல்கலைகழகம் 3-11-2008 அன்று விழா எடுத்து சிறப்பு செய்தது.அரபு நாடுகளில் பணியாற்றும் விஞ்ஞானிகளுக்குக் கொடுக்கப்பட்ட முதல் கௌரவம் இது.முதன் முதலில் இதைப் பெற்றவர் ஒர் தமிழக விஞ்ஞானி. இந்தியாவும் - குறிப்பாய் தமிழகமும் பெருமைக் கொள்ள வேண்டிய விஷயம்.

அவர் அப்படி என்னதான் செய்தார்?

இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து அதில் உள்ள உயிர்மூலக் கூறுகளை லேசர் ஒளி மூலம் பகுத்தெடுத்தார். இதேபோல் அதிகாலையில் வரும் முதல் சிறுநீர்த்துளியின் மூலக் கூறுகளையும் பகுத்தெடுத்தார்.இவைகளை ஆய்வுக்குட்படுத்தி நோயற்றவர்களிடம் இல்லாத சில மூலக்கூறுகள் புற்றுநோய் உள்ளவர்களிடம் அளவுக்கு மீறி இருந்தன.இதைக் கொண்டு புதிதாக மாசிலா புற்றுநோய் ஆய்வு (Masila Cancer Diagnostic) என்ற புதியக் கருத்தமைவை (Technique)கொண்டுவந்தார் இதன் மூலம் வெறும் 5 மி.லி இரத்தமும் 5 மி.லி சிறுநீரும் கொண்டு ஒருவருக்கு புற்றுநோய் இருக்கிறதா இல்லையா , இருந்து குணமாகி விட்டதா அல்லது மீண்டும் வந்திருக்கிறதா என்பன போன்ற பலவிஷயங்களை கணிக்கமுடியும்.இந்தப் புதிய முறை இந்திய மத்திய அரசின் ICMR ல் தர நிர்ணயம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறையின் தொடர் ஆராய்ச்சிக் காரணமாகத்தான் நுரையீரல் புற்று நோய்க்கு மட்டும் தனித்துக் காட்டும் புது உயிர்மூலக்கூறு பற்றியும் கண்டுபிடித்தார்.இந்த முறையின் நம்பகத்தன்மை (Reliablity) 80% என்பதும் இதுவரையில் இத்தகைய்ய Biomarker நுரையீரல் புற்றுநோய்க்கு கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த புதிய முறையின் துணைக் கொண்டு நுரையீரல் புற்று நோயின் துவக்க நிலையைக் கண்டறிவது மட்டுமன்றி தொடர்ந்து பலகாலம் புகை பிடித்துக் கொண்டிருப்பவரில் யாருக்கு இந்நோய் வந்து கொண்டிருக்கிறது என்பதையும் நிர்ணயித்து எச்சரிக்கை மணி அடிக்க முடியும்.

எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே.

Sunday, November 23, 2008

முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

உ.பி முஸ்லிம்கள் அரசியலில் ஒன்றுபட்டால் மத்திய அரசை நிர்ணயிக்கலாம்!

தேசிய அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்திய தமுமுக தலைவரின் லக்னோ மாநாட்டு உரை!!


உ.பி. மாநிலம் லக்னோவில் முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக அரசியல் விழிப்புணர்வு மாநாடு கடந்த ஞாயிறு (நவம்பர் 9) அன்று நடைபெற்றது.


தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த உலமாக்கள், அறிஞர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள், வழக்குரைஞர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் பங்குக் கொண்டார்கள்.


இந்த மாநாட்டில் தமுமுக தலைவர் ஆற்றிய தலைமை உரை.


முஸ்லிம் அரசியல் விழிப்புணர்வு பேரவையின் சார்பாக நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில் பங்குக் கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதசேத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த நான் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தமிழகத்தில் வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 5.6 சதவிகிதம் மட்டுமே என்று 2001ல் எடுக்கப்பட்ட அரசு மக்கள்தொகை புள்ளிவிவரம் கூறுகின்றது.


இதே போல் உ.பி.யில் வாழும் முஸ்லிம்களின் மக்கள் தொகை 18.5 சதவிகிதமென அதே புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இந்தப் புள்ளிவிவரங்கள் அதிகாரபூர்வமானவை ஆனால் ஆதாரப்பூர்வமானவை என்று நான் கருதவில்லை. இதை விடக் கூடுதலாக முஸ்லிம்கள் தமிழகத்திலும், உ.பி.யிலும் வாழ்ந்து வருவது தான் உண்மை நிலை. இருப்பினும் தமிழகத்தை விடப் பன்மடங்கு அதிகமாக நீங்கள் உ.பி.யில் முஸ்லிம்களாக வாழ்ந்து வருகின்றீர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும்.


இந்தியாவில் எண்ணிக்கை அடிப்படையில் உ.பி.யில் தான் அதிகமாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


சதவிகித அடிப்படையில் பார்த்தால் அசாமிற்கு அடுத்த நிலையில் முஸ்லிம்கள் உ.பி.யில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். உ.பி.யின் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு உத்தராஞ்சல் என்ற மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு, உ.பி.யில் தலித்களுக்கு அடுத்த இடத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.


இந்த உண்மைகளை அறிந்த நாங்கள் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம். உ.பி.யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35 இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வகையில் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள். இதே போல் உ.பி.யில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளில் 130 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தகுதியில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள்.


உண்மை நிலை இப்படியிருப்பினும் மிகப் பெரும் கைசேதமாக முஸ்லிம்களை விட மிகக் குறைவாக வெறும் 7 அல்லது 8 சதவிகிதம் உள்ள யாதவர்கள் அல்லது அதனை விடக் குறைவான சதவிகிதத்தில் உள்ள உயர்சாதியினரால் நமது ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிகின்றது நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடிகின்றது.


இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வாழும் உங்கள் மாநிலத்தில் 19 முதலமைச்சர்கள் இது வரை இருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம்கள் இல்லை என்பது தமிழகத்தில் வாழும் எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது.


இதற்குக் காரணம் நமக்கு மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு இல்லாதது தான். இங்கு உ.பி.யில் பதிவு செய்யப்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் 15க்கும் மேற்பட்டவை இருப்பதாகக் கேள்வி பட்டேன். ஆனால் நாடாளுமன்றத்தில் தற்போது உ..பி.யில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 12 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை.


இதே போல் தற்சமயம் உ.பி. சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 56 உறுப்பினர்களில் ஒருவர் கூட இந்த முஸ்லிம் அரசியல் கட்சியின் பிரதிநிதியாக அமரவில்லை. இது எங்கள் உள்ளத்திற்கு மிகுந்த வேதனையை அளிக்கின்றது.


இன்று முஸ்லிம்களின் பலத்த ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்திருக்கும் செல்வி மாயவதியின் ஆட்சியில் பிரமாணர்கள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் இன்று அவர்களது ஆதிக்கம் தான் உ.பி.யில் மிதமிஞ்சி நிற்கிறது.


மாயாவதியின் அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்த்தில் உள்ள 21 அமைச்சர்களில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சர் தான் இருக்கிறார். இந்த அவல நிலையை மாற்றி அமைக்க நீங்கள் திட்டமிட்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது காலத்தின் கட்டாயமாகும்.


இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழகத்தில் எங்களது அனுபவத்தைப்பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.


1992 டிசம்பர் 6ல் உங்கள் மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தியில் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஏற்பட்ட ரணங்கள் எங்கள் மாநிலத்தையும் பாதித்தன. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்கு எதிர்ப்புக்காட்டுவதற்காகக் கோவையில் வீதிக்கு வந்து கருப்புக் கொடி கட்டியவர்கள் மீது தடா சட்டம் பாய்ந்தது.


அநீதிக்கு எதிராக ஒரு சுவரொட்டி ஒட்டுவதற்குக் கூட நாதியற்ற நிலையில் முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து வந்தது.


முஸ்லிம் அரசியல் கட்சித் தமிழகத்தில் இருந்தன. ஆனால் முஸ்லிம் சமுதாயத்தின் உள்ளக்குமுறல்களைக் கண்டுக்கொள்ளாமல் அவை பாராமுகமாகச் செயல்பட்டன.


இந்தச் சந்தர்ப்பத்தில் தான் 1995 ஆகஸ்ட் மாதம் நாங்கள் இழந்த உரிமைகளை மீட்பதற்கும், இருக்கும் உரிமையைக் காப்பதற்கும் என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினோம்.


அனைத்து முஸ்லிம்களுக்காகவும் தமுமுக அப்போது முதல் செயல்பட்டு வருகின்றது.


தமுமுகவின் தொடர் போராட்டத்தின் விளைவாகத் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 3,5 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டைத் தற்போதைய திமுக அரசு வழங்கியுள்ளது. இதன் காரணமாகப் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியில் சென்ற ஆண்டை விடக் கூடுதல் மடங்கு முஸ்லிம் மாணவர்கள் இந்தத் தொழில் படிப்பில் சேருவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.


தமிழக பிரச்னையில் மட்டுமில்லாமல் அனைத்திந்திய அளவிலும் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக நாங்கள் போராடி வருகிறோம். 2004 டிசம்பர் 6 அன்று நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தினோம்.


இந்தப் போராட்டத்தின் விளைவாகத் தான் வாஜ்பேயி ஆட்சியின் போது தள்ளுபடி செய்யப்பட்ட பாபரி மஸ்ஜிதை இடித்தற்கான அத்வானி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.


இதே போல் அனைத்திந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கோரி மார்ச் 7, 2007ல் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தி அனைத்துச்சமுதாயத் தலைவர்களையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தினோம்.


அரசியல் நடவடிக்கைகள் மட்டுமின்றி சமூகங்களுக்கு இடையே பாலங்களை அமைப்பதற்காகப் பல்வேறு வகையான சமூகச் சேவைகளை தமுமுக செய்து வருகின்றது. இதன் முத்தாய்ப்பாக 50 அவசர ஊர்தி சேவை தமிழகம் சார்பாக அனைத்துச் சமுதாய மக்களுக்காகவும் நடத்தப்பட்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக அரசு கேபினட் அமைச்சர் பதவிக்கு இணையான தமிழ்நாடு வக்ப் வாரிய தலைவர் பதவியை எங்கள் அமைப்பிற்குத் தந்துள்ளது. எங்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹைதர் அலி தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைவராக இருக்கின்றார்.


எத்தனை அரசியல் கட்சிகள் சமுதாயத்தின் பெயரால் இருந்த போதினும் தூய்மையான நோக்கத்துடன் மக்கள் சேவை செய்தால் சமுதாய மக்களை ஒருங்கிணைத்துச் சமுதாயத்திற்கான தேவைகளைப் பெறலாம் என்பதற்கு தமுமுகவின் அனுபவம் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்பதைப் பணிவுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.


திமுகவுடன் நாங்கள் நட்புடன் இருந்த போதினும் மத்தியில் ஆட்சி செய்யும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நாங்கள் விமர்சிக்காமல் மவுனமாக இருந்ததில்லை.


தற்போதைய மன்மோகன் சிங் அரசு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதை நாங்கள் அம்பலப்படுத்தி வருகிறோம். மன்மோகன் சிங் அரசின் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் சிறுபான்மையினருக்கு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை 2007 மே 22 அன்று சமர்பித்து விட்டது. ஆனால் மன்மோகன் சிங் அரசு இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாமல் முஸ்லிம்களை ஏமாற்றி உள்ளது.


இதே போல் குறைந்த பட்சச் செயல் திட்டத்தில் பாலஸ்தீன மக்களுக்குச் சொந்த நாடு உருவாகப் பாடுபடுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலஸ்தீன மக்களை அன்றாடம் கொன்று குவிக்கும் இஸ்ரேல் நாட்டின் உளவு செயற்கைக் கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்றது. பா.ஜ.க. இனி ராமர் கோவில் பெயரைச் சொல்லி மக்களிடம் செல்ல இயலாது. முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று அவர்களால் நாட்டு மக்களுக்கு ஆபத்து என்று கூறி வோட்டு வேட்டையாடப் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.


அந்தத் திட்டத்திற்கு உதவிடும் வகையில் தான் மன்மோகன் சிங் அரசின் செயற்பாடும் அமைந்துள்ளது.


தமிழகத்தில் தென்காசியில் குண்டு வெடித்தது. குண்டுகளை வைத்த இந்து முன்னணி தீவிரவாதிகள் தமிழகக் காவல்துறையினரால் கைதுச் செய்யப்பட்டார்கள்.


ஹைதராபாத் மக்கா பள்ளிவாசலில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட ரகக் குண்டுகள் தான் தென்காசியிலும் பயன்படுத்தப்பட்டன என்று தமிழகக் காவல்துறை தெரிவித்தது.


நாம் தமுமுக சார்பாகத் தென்காசி குண்டுவெடிப்பில் இருந்து பாடம் படித்து நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்யக் கோரிக்கை வைத்தோம்.


மத்திய அரசு மவுனமாக இருந்தது. நான்டெட், மாலேகவ்ன் (2006), மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன.


ஆனால் அது மன்மோகன் சிங் அரசைப் போல் தூங்கிக் கொண்டிருந்தது. தற்போது மராட்டிய ஏடிஎஸ் காவல்துறை பல உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது. இதே பாணியில் முன்பே சிபிஐ விசாரணை செய்திருந்தால் டெல்லி, பெங்களூரு, அஹ்மதாபாத், ஜெய்பூர் குண்டு வெடிப்புகளை நூற்றுக்கணக்கான உயிர்களையும் காப்பாற்றியிருக்கலாம். இதனைச்செய்யத் தவறிய மன்மோகன் சிங் அரசை நாங்கள் கண்டித்து வருகிறோம்.


ஆனால் நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் 35 எம்.பி.க்கள் இருந்தும் அவர்கள் மவுனமாக அமர்ந்துள்ளார்கள். இன்று சங்பரிவார் பயங்கரவாதிகள் கைதுச் செய்யப்பட்டு வருகிறார்கள். ஆனால் கைதுச் செய்யப்படுபவர்கள் அம்புகள் தான். அம்புகளை எய்தவர்களையும் கைதுச் செய்ய மன்மோகன் சிங் அரசு முன்வர வேண்டும்.


முஸ்லிம் சமுதாயத்தை வஞ்சிக்கும் இந்தப்போக்குச் சரி செய்யப்பட வேண்டுமெனில் உ,பி,யில் வாழும் நீங்கள் அரசியல் விழிப்புணர்வு மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாக ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகும்.


தீமைகளைத் தடுப்பது முஸ்லிம்களின் கடமையாகும். தீமைகள் என்பது வெறுமனே மது, விபச்சாரம், சூதாட்டம் மட்டுமில்லை. ஆட்சி அதிகாரத்தைத்தவறாகப் பயன்படுத்துவதும் தீமையாகும். எனவே அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி அதனை வேடிக்கை பார்ப்பது ஒரு முஸ்லிமிற்கு அழகு அல்ல.


இது கூட்டணி ஆட்சி காலம். உ.பி, யில் உள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாம் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் அடுத்த ஆட்சி உங்கள் தயவில் தான் அமையும். இந்த நிலை ஏற்பட நீங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.


இன்று இந்தியாவில் அரசியல் கட்சிகளை அமைப்பது எளிதானது. எனவே எத்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகள் சுயநலனுக்காக ஆரம்பிக்கப்பட்டாலும் மக்கள் அவர்களை ஏற்க மாட்டார்கள், ஆனால் தூய்மையான எண்ணத்துடன் ஆலிம்கள், அறிஞர்கள் நிரம்பிய உ.பி.யில் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் உத்தரபிரதேச ஆட்சியை மட்டுமில்லை, இந்தியாவின் ஆட்சியையும் நிர்ணயிக்கக் கூடியவர்களாக நீங்கள் இருப்பீர்கள்..


எங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முஸ்லிம்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்து விடைபெறுகிறேன்.

Wednesday, November 19, 2008

டிச6 போராட்டம்: பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு விளக்கம்!

பகிரங்கக் கடிதம் எழுதியவர்களுக்கு ஒரு விளக்கம்


- பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்


டிசம்பர் 6 போராட்டம் சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் என்றபெயரில் வந்த கடிதத்தையும் தடம் புரளுமா தமுமுக என்ற கடிதங்களையும்பார்த்தேன்.


சமுதாய ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும் என்ற சகோதரரின்நல்லெண்ணத்திற்கு இறைவன் நற்கூலி வழங்குவானாக. ஆனால் டிசம்பர்போராட்டத்திற்காக வரலாற்று பின்னணியை அறியாமல் இந்தச் சகோதரர்களின்கடிதங்கள் அமைந்துள்ளன. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று தமிழகத்தில் ஜனநாயகஅடிப்படையில் முதன் முதலில் போராட்டம் அறிவித்தது தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றக் கழகம் தான் என்பதை அனைவரும் அறிவர்.

பாபரி மஸ்ஜித்இடிக்கப்பட்டது டிசம்பர் 6 1992ல். இதன் பிறகு 1993லிலும் 1994லிலும்தமிழகம் தழுவிய அளவில் யாரும் எந்தவொரு போராட்டத்தையும் நடத்தவில்லை. தமுமுக வெகுமக்கள் இயக்கமாக 1995 ஆகஸ்ட் மாதம் பரிணமித்த பிறகு தான்தமிழகத்தில் டிசம்பர் 6 1995ல் மாநிலம் தழுவிய கதவடைப்பு மற்றும் ஆளுநர்மாளிகை நோக்கிப் பேரணி என்று அறிவித்தது. ஆண்டு தோறும் இந்தப்போராட்டங்களுக்கு 1998 வரை அரசு தடை விதித்தது. ஆயிரக்கணக்கான தமுமுகதொண்டர்கள் உட்படத் தமிழக முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தியாவே தமிழகத்தைத்திரும்பி பார்த்தது.
இந்த இக்கட்டானகாலக்கட்டத்தில் தமிழகத்தில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகளும்அமைப்புகளும் இருந்த போதிலும் அவர்கள் டிசம்பர் 6 அன்று எவ்விதபோராட்டத்தையும் நடத்தவில்லை என்பதையும் இன்று அனைத்து அமைப்புகளும்ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று நாடும் சகோதரர்களின் கவனத்திற்குக்கொண்டு வரவிரும்புகிறேன்.
பாபரி மஸ்ஜித் தொடர்பாகத் தமிழக முஸ்லிம்களின்எழுச்சியை இனி கட்டுப்படுத்த முடியாது என்று தெரிந்த பிறகு 1999 முதல்தமிழகத்தில் டிசம்பர்ப் போராட்டத்திற்குத் தமிழக அரசு தடைச் செய்யவில்லை(தடைச் செய்யும் போராட்ட முறையை அமைப்புகள் அறிவித்த சந்தர்ப்பங்களைத்தவிர)தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய இந்தப் போராட்டங்கள் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதைக் கண்டு தடை நீக்கப்பட்ட காலத்தில் தான்பிற அமைப்புகள் தமுமுகவின் முன்மாதிரியைப்பின்பற்றிப் போராட்டம் நடத்தமுன்வந்தன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2004ல் மார்க்கப்பணியைச் செய்யப் போகிறேன் என்று கூறி தமுமுகவை விட்டு விலகிச் சென்றசகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் தமுமுகவை பின்பற்றிக் கொடி உட்படஅனைத்தையும் காப்பி அடித்தது போல் டிசம்பர் போராட்டத்தையும் காப்பிஅடித்தார். ஒரு அமைப்பு இந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செய்யும் போதுஅதனை ஏன் மற்ற அமைப்புகள் காப்பி அடிக்க வேண்டும்.
ஒரு பணியைச் செய்ய ஒருஅமைப்பு போதும் என்று அவர் உதிர்த்த 'தத்துவத்தை' வழக்கம் போல அவரேமுறித்தார்.
சமுதாயத் தலைவர்களுக்கு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ள சகோதரர் டிசம்பர்ப்போராட்டத்தை வருட பாத்திஹா என்று கொச்சைப்படுத்தியுள்ளார். அறையில்உட்கார்ந்து கொண்டு இவ்வாறு மனம் போன போக்கில் எழுதி விடலாம்.
ஆனால் தமுமுக இந்தப் போராட்டத்தை அறிவித்ததின் ஒரு முக்கியமான நோக்கம் ஒருபாபரி மஸ்ஜிதை இழந்து விட்டோம். இன்னொரு இறையில்லத்தை இழப்பதற்குமுஸ்லிம் சமுதாயம் தயாரில்லை என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்குத்தான். இந்தப் போராட்டம் அத்தகைய சிந்தனையை நிச்சயமாக எழுப்பியிருக்கிறதுதமிழகத்தில் மட்டும் போராடாமல் டெல்லி வரை சென்று தமுமுக போராடியுள்ளது.
சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீன் விலகி 8 மாதம் கழித்து டிசம்பர் 6 2004அன்று தமிழகத்தில் இருந்து டெல்லிச் சென்று நாடாளுமன்ற வாசலில் தமுமுகபோராட்டம் நடத்தியது. வட இந்திய முஸ்லிம் தலைவர்கள் இந்தப் போராட்டத்தில்பங்குக் கொண்டு தமுமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
இந்தப் போராட்டம் நடந்த அன்று மாலை பிரதமரைச் தமுமுக தலைவர் தலைமையிலானகுழு சந்தித்துப் பேசியதால் தான் வாஜ்பேயி ஆட்சிக் காலத்தின் போது பாபரிமஸ்ஜித் இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அத்வானி உள்ளிட்டோர்மீது சிபிஐ மீண்டும் வழக்குத் தாக்கல் செய்து அவர்கள் இன்று குற்றவாளிகூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
டெல்லியில் இந்தப் போராட்டம் நடைபெற்றபிறகு தான் அங்கும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வீரியமாக போரட்டத்தைடிசம்பர் 6 அன்று நடத்துகிறார்கள்.
சென்ற ஆண்டு வி.ஹெச்.பிஅமைப்பினருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலும் நடைபெற்றது.
இலங்கை பிரச்னையில் தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புகள் ஒன்றாகப்போராடுகிறார்கள் என்று கூறுவதும் வட இந்தியர்கள் மராட்டியத்தில்தாக்கப்பட்டது தொடர்பாக லாலுவும் நித்தீசும் பாஸ்வானும் ஒன்றாகஇருக்கிறார்கள் என்று கூறுவதும் தவறு. பல முரண்பாடு அவர்களிடையேஏற்பட்டுள்ளதைச் சகோதரர் படிக்கவில்லைப் போலும்.
எடுத்துக் காட்டாக கடந்தநவம்பர் 17 அன்று இந்திய கம்னிஸ்ட் கட்சி கூட்டிய அனைத்துக் கட்சிகூட்டத்திற்கு வேறுபாடுகளை மறந்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்கலந்துகொள்ளவில்லை. தனியாகப் பந்த் வேறு அறிவித்துள்ளார்கள். இதையெல்லாம்கவனத்தில் கொள்ளாமல் ஏதோ முஸ்லிம்களிடையில் மட்டும் தான் ஒற்றுமையில்லைபோலவும் அதற்கு அமைப்புகள் தனித்தனியாகப் போராட்டம் நடத்துவது தான்காரணம் என்றும் எழுதுவது பொருத்தமில்லை.
தமுமுக தமிழகத்தில் டிசம்பர் 6 அன்று நடத்தும் போராட்டம் வட இந்தியமுஸ்லிம்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.. இந்த ஆண்டு ஏன் ரயில் மறியல்போராட்டம். இதனால் பொது மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துமே என்று ஒருகேள்வி இன்னொரு சகோதரர் எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பர் 6 என்பது மன்மோகன் சிங் அரசுக்குக் கடைசி ஆண்டு. பாபரி மஸ்ஜித் இடிப்புத் தொடர்பானவழக்கை விரைந்து நடத்தத் தவறியதற்காகவும், லிப்ரகான் கமிஷன் தன் பணியைமுடித்த பிறகும் 48 வது முறை அதற்கு ஆயுள் நீடிப்பு அளித்து அத்வானியைக்காப்பாற்றுவதையும் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் ராவ் தந்தவாக்குறுதியை மற்றொரு காங்கிரஸ் பிரதமர் சிங் நிறைவேற்றத் தவறியதைக்கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது.
வருட பாத்திஹாவிற்கு வரும்கூட்டம் அல்ல நாங்கள். ஏசி ருமில் உட்கார்ந்து கொண்டு மேதாவித்தமானகருத்துகளை மட்டும் சொல்பவர்கள் அல்ல நாங்கள்.
எங்களுக்கு ஏற்பட்டஅநீதியைத் தட்டிக் கேட்கத் தியாகம் செய்யும் கூட்டம் நாங்கள் என்பதைஆட்சியாளர்களுக்கு எடுத்துரைப்பதற்காகத் தான் இந்தப் போராட்டம்.
மத்தியஅரசு என்ற செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு ரயில் மறியல் போராட்டம் தான்உதவிடும். ஆனால் பொதுமக்களுக்கு எவ்வித இடையுறும் இல்லாத வகையில்,துளியும் வன்முறைக்கு இடம் கொடுக்காத வகையில் இந்தப் போராட்டம்நடைபெறும். சில போராட்ட வழிமுறைகளை எப்போதாவது ஒரு முறை அவசியம்தேவைப்படும் போது எடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் ரயில் மறியல்போராட்டம் காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
இந்தப் போராட்டம் நடத்துவதற்காக எங்களைத் தடம் புரண்ட கழகம் என்று சகோதரர். பி. ஜெய்னுல்லாபுதீனைபின்பற்றி, சகோதரர் அழைப்பாரேயானால் அதனை ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில்அவர் எங்கள் மீது இந்த அவதுறு பட்டம் சூட்டுவது எங்களுக்கு மறுமையில்அல்லாஹ்விடம் நற்கூலியைப் பெற்றுத் தரும்.
பொதுவான விஷயங்களில் ஒன்றுச் சேர்ந்து போராடும் கோட்பாட்டிற்கு எதிரானது அல்ல தமுமுக. கடந்த காலங்களில் தமுமுகவே இதற்கான முன்முயற்சிகளைச் செய்துபோராடியுள்ளது.
தினமலருக்கு எதிரான போராட்டம் மற்றும் நரேந்திர மோடியின் சென்னை வருகையின் போது நடத்தப்பட்டபோராட்டம் இதற்கு ஒரு எடுத்த காட்டு.
இந்த டிசம்பர் 6 ரயில் மறியல்பேராட்டத்தையும் ஒருங்கிணைந்து நடத்த தமுமுக தயார். விருப்பமுள்ளஅமைப்புகள் தமுமுக தலைமையை வரும் நவம்பர் 24க்குள் தொடர்பு கொண்டால்அவ்வாறு செய்வதற்கும் தமுமுக தலைமை தயாராக உள்ளது என்று இம்மடல் மூலம்தெரிவிக்குமாறு தமுமுக தலைமை இசைவு தந்துள்ளது.
தமுமுக என்பது சமுதாய நலனை முன்நிறுத்தி செயல்படும் அமைப்பு. ஏட்டிக்குப்போட்டியாகச் செயல்படும் அமைப்பு அல்ல.
கள உண்மைகளை அறிந்துபுரிந்து இனி கருத்துச் சொல்லுங்கள் என்பது என் வேண்டுகோல்.

பொறியாளர் ஷாநவாஸ்
செயலாளர்
தமுமுக - குவைத் மண்டலம்
-----------------------------------------------------
இந்த அறிவிப்பு குறித்து கருத்துச் ‍சொல்பவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- Blog Editor
------------------------------------------------------

Monday, November 17, 2008

பட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.

பட்டாசு வெடிப்பும் முஸ்லிம்களின் நிலையும்.
------------------------------------------------------------

முஸ்லிம் சமுதாயமே சிந்திப்பீர்!


பட்டாசு வெடிக்கிறோம் என்ற பெயரில் கண்முன்‍னே பல லட்சம் ரூபாய்களை தீயில் பணச்சாம்பலாக்கிறோம்!


ஆதமுடைய மக்களே வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண்விரயம் செய்வோர்களை அல்லாஹ் ஒரு போதும் நேசிப்பதில்லை. நிச்சயமாக விரயம்செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவார்கள். (அல்-குர்ஆன் 7:31 & 17:27)


சமுதாயமே சிந்திப்பீர்!


பட்டாசு வெடிப்பதால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சி பிறருக்கு துன்பமாக அமையலாமா?


முஸ்லிம்களில் சிறந்தவர் தன் கரத்தாலும், நாவாலும் பிறருக்கு துன்பம் தராதவரே. (நபிமொழி)


தகவல் பதிவு: JAQH, மாணவர் அணி, கோட்டை கிளை, கோவை.

Saturday, November 15, 2008

கலாச்சாரா சீரழிவிற்கு சட்ட அங்கீகாரம் தேடும் அன்புமணி ராமதாஸ்.

"ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம்"
நடுவன் சுகாதாரா துறை அமைச்சர் அன்புமணி.


ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள்.
~~~~~---~~~~~


நன்றி: குமுதம் ரிப்போர்டர்
-சோலை
ண்மையில் மெக்சிக்கோ நாட்டில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க, இந்தியாவில் சட்டம் கொண்டு வருவோம் என்று அந்த மாநாட்டில் அவர் பேசியதாக திடுக்கிடும் செய்தி வந்தது.

ஆணும் ஆணும் சேர்ந்து குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் சேர்ந்து கல்யாணம் செய்து கொள்ளலாம். இந்த வக்கிர உறவிற்குப் பெயர்தான் ஓரினச் சேர்க்கை என்பதாகும்.

இதற்கு ஒரு தமிழ் மகன் ஆதரவா? எண்ணிப் பார்க்கவே இதயம் நடுங்கியது. ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம். பெண்ணும் பெண்ணும் குடித்தனம் நடத்தலாம். இது என்ன கொடுமை? அப்படியானால் குடும்ப உறவுகள், மரபுகள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக வேண்டுமா?

ஓரினச் சேர்க்கையை தமிழ்ச் சமுதாயம் அங்கீகரித்ததாகவோ ஆதரித்ததாகவோ எந்த இலக்கியத்திலும் எந்தத் தமிழ்க் கல்வெட்டிலும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் டெல்லி ஆங்கிலத் தொலைக்காட்சியைத் தற்செயலாகத் திருப்பினோம். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக தகவல் தந்தனர்.

ஓரினச் சேர்க்கை என்ற அநாகரிகத்திற்கு ஆட்பட்டு விட்ட ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன்மீது மத்திய அரசின் கருத்தை உயர்நீதிமன்றம் கேட்டது.


`ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்' என்று மத்திய உள்துறை அமைச்சகம் மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை, `ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும்' என்று மனுத் தாக்கல் செய்திருக்கிறது.

விரும்பிய ஓர் ஆணும் இன்னொரு ஆணும் குடும்ப வாழ்க்கை நடத்தினால் அவர்களுக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் உயர்நீதி மன்றத்தை நாடிய ஓரினச் சேர்க்கையாளரின் கோரிக்கை. ஆஹா! அற்புதம்! அது வேதங்கள் கொள்கை கோட்பாடு என்று அன்புமணி ராமதாசின் மத்திய சுகாதாரத்துறை மனுத்தாக்கல் செய்திருக்கிறது.

ஆனால், ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று உள்துறை தாக்கல் செய்த மனு கூறுகிறது. நல்லவேளை அந்தத் துறைக்கு சீழ்பிடித்த சிந்தனைகள் உதயமாகவில்லை.

`தண்டிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் ரகசியமாக மறைமுகக் குடித்தனம் நடத்துகின்றனர். அவர்களுக்கு சுதந்திரம் அளித்து விட்டால் பகிரங்கமாக வாழ்வார்கள். அப்படி வாழும் போது எய்ட்ஸ் நோய் வர வாய்ப்பில்லை. மறைமுக உறவுகள் அந்த நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்' என்பது மத்திய சுகாதாரத் துறையின் வாதம்.

ஓரினச் சேர்க்கை என்பது இந்திய கலாசாரச் சீரழிவின் உச்சகட்டம். அதனை அனுமதிப்பது என்பது தமிழ்ப் பண்பாட்டிற்கு விதிக்கப்படும் மரணதண்டனை.

முன்னர் ரஷ்யா சென்றிருந்தோம். மாஸ்கோ வானொலி தமிழ் ஒலிபரப்பில் சகோதரர் மணிவர்மா பணி செய்து கொண்டிருந்தார். அவர் கார்வண்ண கரியமேனியன். அவரை சோவியத் சகோதரி காதலித்து மணம் புரிந்து கொண்டார். அவர் ஆப்பிள் நிற அழகி. அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்த போது, `எப்படி அம்மா இவரைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?' என்று கேட்டோம். கலகலவெனச் சிரிப்பலைகள் எழுந்தன.

அந்தச் சகோதரி சொன்னார். `நான் தமிழ் கற்றவள். தமிழர் பண்பாடு தெரிந்தவள். அந்தப் பண்பாடு வேறு எங்கும் இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் உயர்ந்த பண்பாடாகும். அந்தப் பண்பாட்டை மணந்திருக்கிறேன்!' என்றார் அந்தச் சுந்தரி.

நாம் எவ்வளவு பெரிய நாகரிகத்தின் சொந்தக்காரர்கள் என்பது அப்போதுதான் என் மூளையில் உறைத்தது. ஆனால் இங்கே அன்புமணிகள் அதிய ராகம் பாடுகிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் புகைப்படத்தோடு ஒரு செய்தி வந்தது. வயது முதிர்ந்த ஜெர்மன் தம்பதியர் ராமேசுவரம் வந்தார்கள். ஆலயம் சென்றார்கள். தமிழர் பண்பாட்டின்படி இதுவரை வாழ்ந்திருக்கிறோம். மீண்டும் எங்களுக்குத் தமிழர் மண முறைப்படி திருமணம் நடத்துங்கள் என்று அவர்கள் கோரினர். மணவிழாவும் நடந்தது.

இந்தியாவில் எத்தனையோ தேசிய இனங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் மண்ணின் திருமண முறைதான் தலைசிறந்தது என்பது அந்த ஜெர்மன் தம்பதியர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

நமது குடும்ப உறவுகள் - மண முறைகள் இன்று நேற்று தோன்றியது அல்ல. சிந்துவெளி நாகரிகம் கண்ட எம் மூதாதையர் தந்த சீதனம்தான் உலகம் மெச்சும் நமது உறவுமுறைகள். அந்த உறவின் ஒவ்வொரு அம்சமும் அர்த்தம் பொதிந்தவை. இன்றுவரை அந்த நாகரிகத்தின் ஈரவரிகள் உலர்ந்து போகவில்லை. காலவெள்ளத்தில் நமது குடும்ப உறவுகள் கரைந்து போனதில்லை.

ஆனால் இன்றைக்கு அந்தப் பண்பாட்டிற்கே கல்லறை எழுப்பத் துடிக்கிறார்கள். மேலைநாடுகளின் வக்கிர மனிதர்கள் வளர்க்கும் விபரீத உறவுகளுக்கு இங்கே அங்கீகாரம் தேடுகிறார்கள். வேரில் வெந்நீர் ஊற்றப் பார்க்கிறார்கள்.

லட்சம் பேருக்கு அதிகபட்சம் ஐம்பது பேர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். நாங்கள் இப்படித்தான் வாழ்வோம். எங்களை சமூகம் அங்கீகரிக்க வேண்டும். சட்டத்தைத் திருத்துங்கள் என்று மேலைநாடுகளில் மைதானங்களிலும் பூங்காக்களிலும் அவர்கள் கட்டிப் புரள்கிறார்கள். அவர்களுக்காக வாதாட அடகுபோன சிலரும் இருக்கிறார்கள்.

மிருகங்களில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. பறவைகளில் ஓரினச் சேர்க்கை உண்டா? இல்லை. ஆனால் குப்பைமேட்டு மனிதர்கள் சிலர் அந்தக் கொடுமையான வாழ்க்கை நடத்துவோம் என்கிறார்கள்.

அவர்களுக்கு எங்கிருந்து எப்படிப் பணம் கொட்டுகிறது என்றே தெரியவில்லை. செல்வந்தர்களில் அந்தப் பழக்கம் உள்ளவர்கள் மேலைநாடுகளில் இருக்கிறார்கள். அவர்கள்தான் சிம்மாசனங்களையே வளைக்க முதலீடு செய்கிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் இந்தப் பழம் பெரும் பூமி அத்தகைய அநாகரிகச் சட்டங்களை அண்ட விட்டதில்லை. நமது சட்டம் என்ன சொல்கிறது? ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு 397வது சட்டப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கலாம் என்று கூறுகிறது.

ஆனால் அந்தத் தண்டனையை ரத்து செய்து அந்த அநாகரிக உறவை அங்கீகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். அண்மையில் சென்னை வந்த அவர், ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பிரதமரைச் சந்திப்பேன். கோரிக்கை மனுக் கொடுப்பேன் என்றார்.

ஓரினச் சேர்க்கையை அனுமதித்த பின்னரும் எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் பரவாது என்பதற்கு அவர் என்ன உத்தரவாதம் தருகிறார்?பால்வினை நோய் பரவுவதற்கு ஓரினச் சேர்க்கை ஒரு காரணம் என்றால், அதனைத் தடுப்பதற்குத்தானே வழிவகை காண வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தக் கலாசாரச் சீரழிவை அங்கீகரித்தால் போதும் என்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஒரு பக்கம் புகைபிடித்தால் 500 ரூபாய் வரை அபராதம் என்கிறார். இன்னொரு பக்கம் மானக்கேடான ஓரினச் சேர்க்கைக்கு விதிக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்கிறார். இப்படி வேடிக்கை மனிதர்கள் விநோதத் தீர்ப்பு எழுதுகிறார்கள்.

சென்ற வாரம் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜை நிருபர்கள் சந்தித்தனர். `ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்குமா' என்று கேட்டனர். `கர்மம் கர்மம்' என்றார் அவர். `பின்னர் ஏன் அதற்காக வாதாடுகிறார்கள்' என்று கேட்டனர்.

`எனக்கு வயதாகிப் போய் விட்டது. அவர்களையே கேளுங்கள்' என்றார் பரத்வாஜ்.

ஒரு பக்கம் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் என்கிறார்கள். அவைகளுக்கெல்லாம் தாங்கள்தான் இன்றைய காவலர்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் சமூக நியாயங்களையே சவக்குழிக்கு அனுப்பும் வாதங்களை முன் வைக்கிறார்கள். அதிசய ராகம் பாடுகிறார்கள்.

Friday, November 14, 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல் அதிகாரி.

சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மோதலைத் தடுக்கத் தவறிய காவல் துறை!

ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?


என் நெஞ்சு எரிகிறது! அறிஞர் அண்ணா சொன்னது இது. 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி இரவு, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது நடந்த கொடுமை அது.


தஞ்சை தரணியில் கீழ் வெண்மணி கிராமத்தில் கூடுதலாக கூலி கேட்டுப் போராடிய ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்களை, அவர்கள் குடிசை வீட்டில் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தபோது தீ வைக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட 44 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர்.அந்தச் செய்தி கேட்டு முகம் கருத்து, வெட்கத்தால் நாணி, தலை குனிந்த முதலமைச்சர் அண்ணா கீழ் வெண்மணி நோக்கி புறப்படத் தயாராக இருந்தபோது அவரிடம் ஒரு மூத்த பத்திரிக்கையாளர் அந்நிகழ்வு குறித்து கருத்துக் கேட்டார்.


வெறுமையுடன் அவரைப் பார்த்த அண்ணா, “எனது ஆட்சியிலா இது நடைபெறுகிறது? என் நெஞ்சு எரிகிறது” என்று கூறினார் என்று அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அருகில் இருந்து பார்த்த மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறியதைக் கேட்டுள்ளோம். அந்த நிலைதான் நமது நாட்டு மக்கள் பலருக்கும் இன்று ஏற்பட்டிருக்கும்.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் - அன்றைக்கு முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணாவிற்கு ஏற்பட்டது போலவே - பதறியிருக்கும்.


படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.


ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.


பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.


கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.


இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.


தலைவர்களைக் கேவலப்படுத்திய மாணவர்கள்! நடந்த வன்முறை நம்மை பதறச் செய்தது என்றால், இந்த நிகழ்வுகளுக்கான காரணம் நம்மை வெட்கித் தலைகுனியச் செய்வதாக உள்ளது.

இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ பெயரை தவிர்த்திருத்தனராம்.


அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.


இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது.


ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.


நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர்களில் ஒருவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?


தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை.


சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது? இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும்.


சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.


விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

Tuesday, November 11, 2008

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்கு இந்து தீவிரவாதிகளின் தொடர்பு காவல்துறையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.

மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்கு இந்துத்துவா தீவிரவாதிகளின் தொடர்பை உ.பி காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
---~~~---
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு என்ற இந்து தீவிரவாதிக்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
---~~~---
ராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?

ஓபாமாவின் இந்திய ஆலோசகர் சோனால் ஆர்எஸ்எஸுடன் தொடர்பா?


நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 இந்திய அமெரிக்க அமைப்புகள் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்துள்ளனஆனால், தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா மறுத்துள்ளார்.


சோனால் ஷாவின் குடும்பம் குஜராத்தைச் சேர்ந்ததாகும். இவரது குடும்பத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் நல்ல தொடர்புண்டு.


இந் நிலையில் அமெரிக்காவின் இனப்படுகொலைக்கு எதிரான இந்திய கூட்டமைப்பு, இந்திய-அமெரிக்க பல் சமூக கூட்டமைப்பு, மதச்சார்பற்ற மற்றும் ஒற்றுமைக்கான இந்திய அமைப்பு ஆகிய 3 அமைப்புகளும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள சோனால் ஷா, தீவிர ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை ஊக்குவிக்கும், தூண்டி விடும் அமைப்பாகும்.


எனவே இந்த நியமனம் எங்களுக்கு அதிருப்தியை அளிக்கிறது. இதுகுறித்து பிற இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் நாங்கள் ஆலோசனை நடத்தவுள்ளோம்.தனக்கு வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுடன் உள்ள தொடர்புகள் குறித்து சோனால் ஷா தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் இந்துத்வா சக்திகள் ஊடுறுவ முயற்சிப்பது குறித்து அமெரிக்க அரசியல்வாதிகளிடமும், பொருளாதார நிபுணர்களிடமும் எடுத்துக் கூறவுள்ளோம். இதற்கான பிரசாரத்திலும் நாங்கள் ஈடுபடவுள்ளோம்.


தீவிரவாத, மதவாத போக்குடைய அமைப்புகளுடன் தொடர்புடைய இந்தியர்கள் அமெரிக்க அதிகார வட்டத்திற்குள் வந்து விடாமல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சக இந்திய - அமெரிக்க அமைப்புகளை கேட்டுக் கொள்கிறோம்.சோனால் ஷாவை நியமித்தது ஓபாமாவின் தவறல்ல. மாறாக நாம் சரியான முறையில் விழிப்புணர்வுடன் இல்லாததே அதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இனப் படுகொலைக்கு எதிரான இந்தியக் கூட்டமைப்பு கொடுத்த எதிர்ப்புக் குரலைத் தொடர்ந்துதான் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு கடந்த 2005ம் ஆண்டு விசா வழங்க மறுத்தது என்பது நினைவிருக்கலாம்.


புஷ் நிர்வாகத்திடமிருந்து ஓபாமாவிடம் நிர்வாகப் பொறுப்புகளை மாற்றுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில், சோனால் சிங்கும் இடம் பெற்றுள்ளார் என்பது குறி்ப்பிடத்தக்கது.


ஆர்எஸ்எஸுடன் தொடர்பில்லை: சோனால் மறுப்பு


இதற்கிடையே தனக்கு ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இந்துத்வா அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது அபத்தமானது. இது பிரிவினை அரசியல் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.அவர் கூறுகையில், எனது தனிப்பட்ட அரசியல் கொள்கைகளும், வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ். ஆகிய அமைப்புகளின் கொள்கைகளும் வேறு வேறானவை. அதுபோன்ற எந்த அமைப்பின் கொள்கைகளுக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்திய அரசியலுடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. தொடர்புபடுத்தும் நோக்கமும் எனக்கு இல்லை.


குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளில் பிற மனிதாபிமான அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் சேவையாற்றியுள்ளேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன்.


பிரிவினைவாத அரசியலை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதை வெறுக்கிறேன். மதவாத, இனவாத, வன்முறையைத் தூண்டும் அரசியலுக்கு நான் எப்போதும் எதிராகவே இருந்துள்ளேன். மதங்களையும், இனத்தையும் அரசியல் கருவியாக பயன்படுத்துவதை நான் விரும்பியதில்லை.


எனக்கும், இந்துத்வா அமைப்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்திகளே ஆகும். ஆதாரமற்ற புகார்கள் இவை.


2001ம் ஆண்டு ஏற்பட்ட குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நான் செயல்பட்டேன். அதை பெருமையாகவே கருதுகிறேன்.


இன்டிகார்ப்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்ற முறையில் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாகவே கருதுகிறேன்.


இதைத் தவிர்த்த இந்துத்வா அமைப்புகளின் எந்த வகையான கொள்கைகளையும் நான் ஆதரித்ததில்லை. பின்பற்றியதில்லை. ஒருபோதும் அவர்களுக்கு இணக்கமாக இருந்ததில்லை.


அதிபராக ஓபாமா தேர்வாகியிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அதிகார மாற்றப் பணிகளில் நான் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளேன்.ஒரு இந்திய- அமெரிக்கராக, ஓபாமா - பிடன் அதிகார மாற்ற ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருப்பதை கெளரவமாக கருதுகிறேன். அதிபரால் நியமிக்கப்பட்ட குழுவில் இடம் பெறுவது என்பது மிகவும் சந்தோஷமானது. அதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற வதந்திகள் எழுவது இயற்கைதான் என்று சோனால் ஷா கூறியுள்ளார்.

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் இந்து தீவிரவாத கும்பல்!

ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் சங்கும்பலுக்கு தொடர்பு!
இந்து தீவிரவாத பெண் சாமியார் சிக்குகிறார்!!



நன்றி: http://www.tmmk.in/news/999577.htm


மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது. குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும், இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர். உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது. இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது. இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.

மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார். முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?
வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். மாவட்ட அலுவலகத்தில் குண்டு வெடிப்பு!
தேச துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆர்.எஸ்.எஸ். இந்து தீவிரவாத அமைப்பை இந்திய அரசு உடனே தடை செய்ய வேண்டும்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் செருவாஞ்சேரியில் உள்ள ஆர்.எஸ்எஸ். மாவட்ட அலுவலகத்தில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த‍ நேரத்தில் குண்டு வெடித்து பிரதீப், திலீபன் என்ற இரண்டு இந்து தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.

நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் சங்கும்பலை அரசு தடை செய்வது எப்போது?