.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, March 24, 2009

முஸ்லிம் லீக் சகோதரர் ஹமீது ரஹ்மான் அவர்களுக்கு!

காயிதேமில்லத் பேரவையின் துணைச் செயலாளர் ஹமீது ரஹ்மான் அவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹூ






.


கீழை S. முஜிபு ரஹ்மான்

முஸ்லிம் லீக் ன் இணைய தளத்தில் உங்களின் கடிதத்தை பார்த்தேன். ஒரு (தமுமுக) இணையதளத்தில் வெளியான கேள்வி பதில் தாங்களை பாதித்து பதில் கூற வைத்துள்ளதோ என்று கருதுகின்றேன்.

எனினும் எனக்கு தெரிந்த கருத்துகளை தாங்கள் முன் வைக்கின்றேன். கற்றரிந்தவர் தாங்கள் என்பதால் நியாயங்களை இன்ஷாஅல்லாஹ் தாங்களும் ஏற்றுக் கொள்ளலாம். தாங்களின் கடிதத்தின் படி சென்ற தேர்தலின் போது அது சமயத்தில் தான், தாங்கள் கூட்டணி பற்றி முடிவு செய்து அறிவித்தாக எழுதியுள்ளீர்கள். ஆனால் இந்த தேர்தலின் போது முன் கூட்டியே கூட்டணி பற்றி அறிவித்து விட்டதாக எழுதியுள்ளீர்கள். 100 ஆண்டு கால பாரம்பரிய கட்சியின் அனுபவம் இதில் மிளிர்வதாக தெரிகிறது. ஆனால் 50 ஆண்டுகளை தாண்டாத இந்திய முழுவதும் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் அனைத்தும் இன்று வரை தனது பழைய கூட்டணியையோ அல்லது புதிய கூட்டணியையோ முடிவு செய்யாத நிலையில் தான், தனது சமூக மக்களின் நலனை பற்றி தேசிய மற்றும் மாநில கட்சிகளிடம் பேசி வருதை தாங்கள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே பாணியில் தான் தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியும் கூட்டணி பற்றி பேசி வருகிறது. இதில் இழிநிலை அரசியல் எங்கிருக்கிறது? சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதிதுவம் வழங்கபட வேண்டும் என்ற உரிமை போராட்டம் தான் முன் நிற்கிறது என்பதை தாங்களுக்கு தெரிவித்து கொள்ளுகின்றேன்.

கிடைத்த பதவிகளாக இருந்தாலும், கிடைக்கவிருக்கும் பதவிகளாக இருந்தாலும் தமுமுக அல்லது மமக வை பொறுத்தவரை இம்மையில் மக்களுக்கும், மறுமையில் அல்லாஹ{க்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற கவலையை உள்ளத்தில் கொண்டு பொறுப்பாக தான் பார்க்கின்றோம். பதவியாக ஒரு போதும் உள்ளதில் எண்ண மாட்டோம். இதே மனநிலையில் தான் தாங்களும், பாரம்பரிய மிக்க மேன்மை பொருந்திய தாங்களின் முஸ்லிம்லீக் அமைப்பினரும் பதவியை பார்ப்பார்கள் என்றே கருதுகின்றேன்.

அரசு பதவியில் (பொறுப்பில்) ஒட்டிக் கொண்டு என்று எழுதியுள்ளீர்கள். சமுதாயத்தின் நன்மையை கருதி மட்டுமே அரசு பதவிகளில் (பொறுப்புடன்) இருப்போம் என்பதில் தமுமுக மற்றும் மமக தெளிவாக இருக்கிறது. பதவியை காட்டினால் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம். எப்படிபட்ட பதவியை தந்தாலும் அது எங்களின் பொறுப்பை அதிகமாக்கியுள்ளதாக மட்டுமே கருதுவோம். உரிமைகளை கேட்க தயங்க மாட்டோம். பதவி என்பது எங்களை பொறுத்தவரை அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தான் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் இருந்த சமுதாய அரசியல் கட்சிகள் நிறைவாக செயல்படும் என்று பதிமூன்று ஆண்டுகள் பொறுத்திருந்து பார்த்து விட்டு, அவைகளின் செயல்பாடு மக்களுக்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் சமுதாயத்தின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தமுமுக தனது அரசியல் பிரிவாக மமக வை தொடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது என்பதை நாணயத்துடன் நியாயவான்கள் பேசிக் கொள்ளுவதை தாங்கள் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

பதிமூன்று ஆண்டுகளாக நாம் யாரையும் உரசி பார்க்கும் எண்ணம் கொண்டதும் இல்லை. அப்படி எண்ணம் கொள்ளப் போவதுமில்லை. மனித சமுதாயத்தை வஞ்சிக்க நினைக்கும் பாஸிசத்தை எதிர்ப்போம். அது அவர்களுக்கு உரசலாக தெரியலாம். எப்படி நீங்கள் எங்களை விமர்சித்தாலும், ஒரு காலமும் முஸ்லிம் லீக்கை நாங்கள் அப்படி பட்ட பாஸிச பட்டியலில் சேர்க்க மாட்டோம். முஸ்லிம் லீக்கை பொறுத்தவரை எங்களின் பார்வை என்னவென்றால் எங்களின் வீரிய மிக்க மூத்தோர் பணியற்றிய போற்றுதலுக்குரிய அமைப்பு. கண்ணியமிக்க தலைவர்கள் பணியாற்றிய அமைப்பு. தற்போது சமுதாயத்தின் எதிர்பார்ப்பை இவ்வமைப்பு நிறைவேற்ற முடியாத பலகீன நிலையில் இருப்பதை நினைக்கும் போது உளமாறஎங்களுக்கும் வருத்தம் தான்.

கடந்த காலத்தின் போது முஸ்லிம்லீக்கோடு நல்லுறவுடன் இருக்கவே விரும்பியிருக்கின்றோம். எப்போதும் நல்லுறவை மட்டும் தான் விரும்புவோம்.

அதே சமயத்தில் சமுதாயத்தை ஏமாற்ற நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு நிச்சயமாக மென்மையானவர்களாக இருக்க மாட்டோம். ஏற்றுக் கொண்ட பொறுப்புகளுக்காக அல்லாஹ்விடம் குற்றம் பிடிக்கப்பட்டு விட கூடாது என்பதை மட்டுமே கவலையாக கொண்டு செயல்படுவோம். அறிவாளிகளுக்கும், ஆற்றல் மிக்கவர்களுக்கும் மறுமை நன்மைகளை பெற்று தரும் நல்ல களமாக தமுமுக மற்றும் மமக செயல்படும். உங்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கும் அல்லாஹ் நிறைவான நன்மைகளை தர துவாச் செய்கின்றோம்.

தமுமுக மற்றும் மமக வை நோக்கி நியாய உணர்வோடு வரும் உங்களின் ஒவ்வொரு விமர்சனத்துக்கும், அறிவுரைக்கும், கண்டத்துக்கும் அல்லாஹ{க்கு மட்டுமே பயந்தவர்களாக! அதன் முக்கியத்துவம் கருதி கவனத்தில் எடுத்துக் கொள்வோம். அதே சமயத்தில் அர்த்தமற்ற விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட நேரமில்லை. உங்களின் நன்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற துவாச் செய்கின்றோம். எங்களின் நன்முயற்சிகள் வெற்றி பெற நீங்களும் துவாச் செய்யுங்கள்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கின்றான்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
கீழை S. முஜிபு ரஹ்மான்
தொடர்பு எண் : 050 5030882
UAE
_________________________________________

பரிதாபத்துக்குரியவர்கள் ஆழ்ந்த அனுதாபம்படுவது தங்களின் பலகீனத்தை மறைக்குமோ?


முஸ்லீக் இணையத்தில் வந்தவைக்கு பதில்
ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை

அரசியல் ஆரோக்கியம் என்று கூறி பூசாரி, மடாதிபதி, சாமியார்கள், ஜோசியக்கார்கள் காலில் விழுவதும்,மதவெறிபிடித்த இந்துமுன்னனியின் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துவதும் லீகின் புதுபரிணாமமா? அல்லது இயல்பு நிலையா? தவறுதலாக நடந்து விட்ட நிகழ்வாகவே கருதுவோம்.

அரசியலில் உள்ளடி வேலை, அரசியல் வியாபாரம் என்றெல்லாம் எழுதியுள்ளீர்கள். நீண்ட நாட்களாகஅதுபோன்ற அரசியலில் இருக்கும் தாங்களுக்கு மட்டுமே நன்றாக தெரிந்திருக்க முடியும். அப்படி பட்ட அரசியலுக்கு முற்று புள்ளி வைக்கத்தான் மமக வை கண்டுள்ளோம்.

சமுதாயம்! சமுதாயம்!! என்றுகூறிய உங்களின் பழைய உள்ளடி வேலையுடன் கூடிய வியாபாரம் பயன் தராமல் போய்விடுமோ என்ற பதட்டம் உங்களின் எழுத்துக்களில் தெரிகிறது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு அரசியலில் உரிய பிரதிநிதிதுவம் கொடுக்கப்படுகிறதா? அல்லது ஏமாற்றபடுகிறதா? அல்லாஹூவுக்கு பயந்து சொல்லுங்கள்.

கண்ணியிமிக்க காயிதே மில்லத்தின் திறனான முடிவுகளை கண்டு அதிர்ந்தார்கள் அன்றைய அரசியல்தலைவர்கள். கண்ணியமிக்க கயிதேமில்லத்தின் தியாகத்தை மட்டுமே சொல்லி கொண்டு, மறுப்பக்கத்தில் சமுதாயத்தின் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றாமல் வீறு நடை, பீடு நடை என்றால் அதை எற்றுக் கொள்ளும் ஏமாளி சமுதாயமாக இனியும் இருக்க மாட்டோம் என்பதை நடைமுறையில் நிருபித்து காட்டியது தான் மமக வின் தொடக்க விழா மாநாட்டில் கலந்து கொண்ட சமுதாய மக்களின்
அற்பணிப்பான பங்களிப்பு.

சிவப்பு விளக்கு வாகனத்தில் பவனி வருவதாக எழுதியுள்ளீர்கள். பல சகோதர துரோகத்திற்கு மத்தியில் அல்லாஹ{க்கு பயந்து சிவப்பு விளக்கு வாகனத்தின் அதிகாரத்தை சமுதாயத்தின் நன்மைக்காக மட்டும் உயிரையும் துச்சமன நினைத்து மிகத் துணிச்சலாக செயல்பட்டு வரும் எங்கள் பொதுச் செயலாளரின் ஆற்றல்மிக்க பணிக்கு சன்றிதழ்கள் பல இங்கு கிடைத்தாலும் மறுமையில் இறைவன் வலது கையில் தரும் நற்ச் சன்றிதழையே இலக்காக கொண்டுள்ளோம்.

தமுமுக வை தடை செய்ய ராமகோபலன் கூறியதாக சொல்லுகிறீர்கள். ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி, மற்றும் அனைத்து இந்துவா பாஸிச அமைப்புகளின் தலைமையகத்திலும் தமுமுகப் பற்றி பேசப்படுவது வழக்கமான ஒன்று. வட நாட்டு மேடைகளில் கூட தமுமுகப் பற்றி நரேந்திர மோடி பேசுகிறார்.

செயல்பாட்டுடன் இருக்கும் அமைப்புகளைப் பற்றி பேசுவார்கள். லீக்கை பற்றிய அவர்களின் பார்வையில் செயல்பாடுகள் இல்லாமல் போய்விட்ட தொண்டர்கள் இல்லாத அமைப்பு. அதை அழிப்பது பற்றியும் பேசுகிறார்களா? எங்களை பொறுத்தவரை முஸ்லிம்லீக் செயல்பாடுகள் அற்றநிலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. முஸ்லிம்லீக் பிரதிநிதிகள் பாரளுமன்றத்திலும் முஸ்லிம் லீக் என்றே அழைக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் பார்வையில் சமுதாயத்தின் அவா? முஸ்லிம்லீக்கிற்கு புது தெம்பு கொடுக்க தலைமை பொறுப்பை உங்களைப் போன்ற இளைஞர்கள் ஏற்று செயல்படுங்கள். ஆற்றல் மிக்க அமைப்பாக உருவாக்குங்கள். அதன் பின்பு அனைவருக்கும் அழைப்பு விடுங்கள். இல்லை என்றால் அறிவுக்கும், திறமைக்கும். ஆற்றலுக்கும், நேர்மைக்கும், தூய்மைக்கும், துணிச்சலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு இறையச்சம் என்ற கோட்பாட்டை கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக மற்றும் மமக வில் இணைந்து பணியாற்ற வாருங்கள் என்று அன்புடன் மறுமையின் இன்பம் காண அழைக்கின்றோம்.

மறுமையில் இன்பம் என்பது கனாகாண்பது இல்லை. நடக்கவிருக்கும் உண்மை. மறுமை வெற்றியை தரும் நேரான வழியில் செல்ல அல்லாஹ் அருள்புரியட்டும்.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு
ஜேனா என்ற ஜெய்னுல்ஆப்தீன்
00919841624418
கீழக்கரை

No comments: