.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, April 22, 2010

''அரசு கொடுத்த பரிசு...!'' குணங்குடி அனீபா குமுறல்

கடந்த 13 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார் குணங்குடி அனீபா. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நிறுவனர், பா.ம.க-வின் முன்னாள் பொருளாளர், ஜிஹாத் கமிட்டி தலைவர் என்று பல பொறுப்புகளை வகித்தவர் குணங்குடி அனீபா. ரயில் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக பூந்தமல்லி கோர்ட்டில் கடந்த வாரம் ஆஜரான அனீபாவிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

? ''13 வருட சிறை அனுபங்கள் எப்படி இருக்கு?''

''நீதிமன்றக் காவலில் எனக்கு இன்பமும் துன்பமும் சேர்ந்தே கிடைத்தன. நல்ல ஆரோக்கியமாக இருந்த நான், சிறைக்கு வந்த பிறகு கண்பார்வைக் குறைவு, ரத்தக்கொதிப்பு, இதய வலி, நீரிழிவு, முதுகுதண்டுத் தேய்மானம் என்று பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டேன். அதன் விளைவு... இப்போது ஊன்றுகோலுடன் நடமாடும் நிலை எனக்கு! சிறையில் நான் பராமரிக்கும் செடி கொடிகள்தான் எனக்கு நண்பர்கள். 33 வருடங்களுக்கு முன்பு என் திருமணம் நடந்தது. மூன்று மகன்கள், ஒரு மகள், இரண்டு பேத்திகள், ஒரு பேரனோடு எனது தாய் தந்தையரும் இருக்கிறார்கள். அவர்களோடு எனது கடைசி காலத்தை கழிக்கவேண்டும் என்பதுதான் இப்போதைய என் ஆசை!''

? ''உங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளின் நிலை இப்போது என்ன...?''

''மறைந்த தமிழ்ப் புலவர் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் குடும்பத்தைச் சேர்ந் தவன் நான். த.மு.மு.க., பா.ம.க., ஜிஹாத் கமிட்டி என்று பொறுப்புகள்

வகித்தபோது மக்கள் பிரச்னைக்காகவும் இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டும் போராட்டங்கள் நடத்தியிருக்கிறேன். எனது சமூகப் பணிகளை விரும்பாத சிலர் தவறான தகவல்களை அரசிடம் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து கோவை குண்டு வெடிப்பை காரணம் காட்டி, ஜிஹாத் கமிட்டியை தமிழக அரசு தடை செய்தது. தேவகோட்டை அனுமந்தக்குடியில் என் மகளின் திருமணம் நடந்துகொண்டிருந்த போது, என்னை போலீஸ் கைது செய்தது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு என் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நான் இன்றைக்கு சிறையில் இருப்ப தற்கு காரணமானவர்கள், பணியில் இருந்தே ஓய்வு பெற்றுவிட்டனர். அவர்கள் நேர்வழி பெற இறைவனிடம் வேண்டுகிறேன். 6.12.97-ல் நடைபெற்ற ரயில் குண்டு வெடிப்பு சதி வழக்கு தவிர, எல்லா வழக்குகளிலும் எனக்கு விடுதலை கிடைத்துள்ளது. இறைவன் சித்தம் இருந்தால் இதிலும் விடுதலை கிடைக்கும்!''

? ''நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்கிறீர்களா..?''

''வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் போதிக்க வில்லை. யாருடைய உயிரையும் பறிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. பல அமைப்புகளில் இருந்தபோதும், நான் துளிகூட தீவிரவாதத்தை ஆதரித்ததில்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. அதற்கு நானே ஓர் உதாரணம். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் நிரபராதி. எந்த மதத்துக்கும் நான் எதிரானவன் கிடையாது. 1987-ல் வட தமிழகத்தில் வன்னியர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் மோதல் ஏற்பட்டபோது, அந்தப் பகுதிக்கு சென்று அமைதி ஏற்பட பாடுபட்டேன். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியபோது, நானும் கலந்துகொண்டேன். 97-ம் ஆண்டு தென் தமிழகத்தில் சாதி மோதல் வெடித்தபோதும் அமைதிக்காகப் பாடுபட்டேன். அப்போது முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்துகொண்டு ஒற்றுமைக்காகப் பாடுபட்டவன் நான்!''

?''தற்போதைய தி.மு.க. ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''1991 முதல் 1996 வரையில் கலைஞர் தலைமையில் ஏழு கட்சிகள் கூட்டணி இருந்தபோது, அந்த கூட்டணியில் ஆலோசனைக் கூட்டம் சுமார் 25 முறை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் நான் தொடர்ந்து கலந்துகொண்டு வந்தேன். கலைஞரே என்னுடைய பெயரை சொல்லி அழைக்கும் அளவுக்கு இருந்தேன். ஆனால், அதன்பிறகு நிலைமை மாறியது. கடந்த காலங்களில் தி.மு.க. அரசால்தான் நானும் என் குடும்பமும் இஸ்லாமிய மக்களும் நேரடியாக பாதிக்கப்பட்டோம். போராளி பழனிபாபா, கோவை முஸ்லிம்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோவையில் சொத்துகள் அழிக்கப்பட்டன. தி.மு.க-வின் வளர்ச்சிக்கும் ஆட்சியில் அது அமர்வதற்கும் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வந்த முஸ்லிம் களுக்கு தி.மு.க. கொடுத்த பரிசுதான் அடக்குமுறை.

எங்களின் மனவேதனை தீரவேண்டுமென்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசில் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதமும் மாநிலத்தில் ஐந்து சதவிகிமும் இடஒதுக்கீட்டை தி.மு.க. அரசு பெற்றுத் தரவேண்டும். முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிய கலைஞரால்தான் இதையும் செய்ய முடியும்...'' என்றவர்,

''ஜூ.வி. மூலம் அரசுக்கு ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன்...'' என்றபடி இதையும் சொன்னார்-

''மத்திய-மாநில காவல் துறை விசாரணை செய்து, அந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்று பொதுமன்னிப்பு பொருந்தாமல் தமிழகச் சிறை களில் உள்ள கோவை பாட்ஷா உட்பட ஐம்பது முஸ்லிம்கள் மற்றும் நளினி, முருகன் உட்பட அனைத்து சமூகங்களையும் சேர்ந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் வரும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையட்டி தமிழக முதல்வர் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுதலை செய்ய உதவிட வேண்டும்!''

புதிய குற்றச்சாட்டுகள்...

பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6-ம் தேதி திருச்சி, ஈரோடு, திருச்சூர் ரயில் நிலையங்களில் குண்டுகள் வெடித்தன. இது நடந்தது 1997-ம் ஆண்டு. இந்த வழக்கில் அனீபா உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 'விசாரணை முடிந்து கடந்த 31-ம் தேதி தீர்ப்பு கூறப்படும்' என்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி அனீபாவின் வழக்கறிஞர் சிவபெருமாள், ''வழக்கின் நடைமுறைகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு தேதியும் குறிக்கப்பட்ட நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போடப்பட்ட 'பொதுச் சொத்துகள் சேதம் விளைவித்தல் சட்டம்' பிரிவு 4, இந்திய ரயில்வே சட்டம் 151 ஆகிய பிரிவுகளை நீதிமன்றம் நீக்கிவிட்டு, இந்திய தண்டனை சட்டம் 109 பிரிவை புதுசாக சேர்த்துக் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன. குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்து புதிதாக நீதிமன்றம் சேர்த்திருப்பது தவறு என்று நீதிமன்றத்திலும் வாதாடினோம். அரசு தரப்பு வழக்கறிஞர்கள்கூட எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை...'' என்றார்.


நன்றி: ஜூவி
- எம்.தமிழ்செழியன்
படங்கள்: எம்.உசேன்

Friday, April 16, 2010

தீண்டாமை ஒழிய இஸ்லாமே தீர்வு (audio) உரை: ஈ.வெ.ரா. பெரியார்


சேந்தையம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் 69 பேர்கள் இஸ்லாத்தை தழுவியது தொடர்பாக ஈ.வெ.ரா. பெரியார் ஆற்றிய உரை



Tuesday, April 6, 2010

பென்னாகரம் இடைத்தேர்தலின் படிப்பினை!

துடிக்கும் தொண்டனின் இதயம்!

ஏன் போனது டெபாசிட்?
_____________________________________
நன்றி: ஜூவி

''தி.மு.க. என்பது மூளையால் வளர்ந்த கட்சி... அ.தி.மு.க. இதயத்தால் வளர்ந்த கட்சி! தி.மு.க-வின் தொண்டனுக்கு யோசிக்கக் கற்றுக் கொடுத்தே அந்தக் கட்சியை வளர்த்தார்கள் அதன் தலைவர்கள். எம்.ஜி.ஆரோ, தன்னை நேசிக்கக் கற்றுக் கொடுத்தே படை திரட்டினார்!'' என்று அடிக்கடி சொல்வார் ஒரு திராவிட இயக்க மூத்த தலைவர். அதையே இன்னும் விளக்கமாக,

''தி.மு.க. அறிவால் செழித்த கட்சி. அ.தி.மு.க. என்பது அன்பால் முகிழ்த்த கட்சி'' என்றும் சொல்வார் அவர்!

தி.மு.க. கழகத்தின் தலைமையை உணர்ச்சிப் பெருக்கோடு குற்றம் சாட்டிவிட்டு, தனிக் கட்சி கண்ட எம்.ஜி.ஆர்., தான் இருந்தவரையில் ஒட்டுமொத்தத் தொண்டர்களையும் தன் அன்புப் பிடிக்குள் அசை யாமல் வைத்திருந்தார். அதனால்தான் போட்டியிட்ட திண்டுக்கல் எம்.பி. தொகுதி முதல் இடைத் தேர்தலிலேயே சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்தது அந்தக் கட்சி!

இன்றைக்கு பென்னாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட்டைப் பறிகொடுத்து

தலைகுனிந்து நிற்பதும் அதே சாதனைக் கட்சிதான்! 'பென்னாகரம் தொகுதியில் தி.மு.க-வுக்கு கிடைத்திருக்கும் வெற்றி ஜனநாயகத்துக்கு ஏற்பட்டிருக்கும் மாபெரும் தோல்வி' என்ற அறிக்கையால் இந்தத் தோல்வியை நியாயப்படுத்தி, நிம்மதியாகிவிட்டார் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா. ஆனால், தொண்டனின் இதயம் நிம்மதியை மொத்தமாக இழந்துபோனது. ஈரோட்டில் ஒரு தொண்டன் தீக்குளித்திருக்கிறான். இன்னும் எத்தனையோ தொண்டர்களின் இதயத்துக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது அவநம்பிக்கை நெருப்பு!

டெபாசிட் இழப்பது என்பது அ.தி.மு.க-வின் வரலாற்றில் இதுவரை ஐந்தாறு தொகுதிகளில்தான் நடந்திருக்கிறது. அதுவும் ஒட்டுமொத்தத் தொகுதிகளையும் தலைவர்கள் சுற்றிச் சுற்றி வந்து கவனிக்கவேண்டிய பொதுத் தேர்தல்களின்போது!

எம்.ஜி.ஆர். காலத்தில் கிள்ளியூர், ஒசூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்தது. துடித்துப் போனார் எம்.ஜி.ஆர். 'ஏன் இப்படி நடந்தது?' என்று பல மணி நேரம் செலவிட்டு விசாரணை நடத்தினார். 'வேட்பாளர் தேர்வு தவறாகிவிட்டது' என்று சக தலைவர்கள் எத்தனையோ ஆறுதல் சொல்லியும், அவர் மனது அடங்கவில்லை என்பார்கள்.

2006-ல் மைனாரிட்டி பலத்தோடு தி.மு.க. அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு நடந்த இடைத்தேர்தல்களில் கம்பம், தொண்டாமுத்தூர் உட்பட ஐந்து தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடவே இல்லை.

அப்போதுதான் அக்கட்சியின் தொண்டர்களில் பலருக்கும் வருத்தமும் அச்சமும் மேலிட ஆரம்பித்தது. காரணம், தங்களையெல்லாம் ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் அன்பெனும் பட்டு நூல் அறுந்துகொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள். இருந்தாலும் தேர்தலில் இருந்து விலகியதற்கு அவர்களே வெவ்வேறு காரணங்களைக் கற்பித்துத் தங்களைத் தேற்றிக் கொண்டார்கள்.

ஆனால், பென்னாகரம் நிலைமை அதுவல்ல! கட்சிக்குள் இருந்த குடும்பப் பாச உணர்வெல்லாம் மெள்ள மெள்ள நைந்துபோய், ஆளுங்கட்சியின் அசுரவேக முன்னேற்றமும்... அதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய தங்கள் தலைவியின் துப்புரவான பாராமுகமும்... இதனால் கட்சித் தளபதிகளைத் தாக்கிவிட்ட கடும் சோர்வும் சேர்ந்துதான் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

வறண்ட அவர்கள் மனதோ பசுமையைத் தேடி பின்னோக்கி ஓடுகிறது...

1980-ம் வருடம் அ.தி.மு.க. ஆட்சி பிரதமர் இந்திரா காந்தியால் கலைக்கப்பட்டது. அப்போது வந்த தேர்தலில் மாபெரும் கூட்டணியாய் காங்கிரஸும் தி.மு.க-வும் இணைந்து மிரட்ட... எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர் தமிழகம் முழுவதும் சூறாவளியாய் சுற்றினார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியின் அசுர பலத்தையும் தாண்டி 129 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நாட்கள் அ.தி.மு.க. தொண்டனின் இதயத்தில் ஏக்கத்தோடு இப்போது நிழலாடுகிறது. 84-ம் வருட தேர்தலின்போது கடுமையான உடல்நலக்குறைவால் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோதும்கூட, அவர் படத்தையே தமிழகம் முழுவதும் காட்டி வெற்றிக் கொடியை நாட்டிய பெருமித உணர்வு இன்னும்கூட அந்தத் தொண்டனை விட்டு அகலவில்லை.

அதேபோல, ஜெ. என்றும் ஜா. என்றும் கட்சி இரண்டாக உடைந்து... மீண்டும் ஜெயலலிதா தலைமையில் இணைந்து... இரட்டை இலை சின்னத்தை மீட்டு... 91-ல் மறுபடி ஆட்சியைக் கைப்பற்றிய சமயத்தில், 'எங்கள் தலைவருக்கு மறைவேயில்லை. புரட்சித் தலைவியின் உருவில் அவர் என்றும் வாழ்கிறார்' என்று விண்ணதிர கோஷமிட்ட அதே தொண்டன்தான், 'என்ன ஆனது என் தலைவிக்கு?' என்று விக்கித்துப் போய் உட்கார்ந்திருக்கிறான்:

1996 தேர்தலில் தோற்ற பிறகு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டும் கலங்காமல் வெளியில் வந்து, கர்ஜனையோடு கருணாநிதியை எதிர்கொண்ட தங்கள் தலைவிக்கு, அப்போதெல்லாம் வராத சோர்வு, எந்தவித அடக்குமுறைகளுமே தங்களுக்கு எதிராக இல்லாத இந்த சமயத்தில் ஏன் வந்தது என்ற அவனுடைய கேள்வி அர்த்தமுள்ளது! 'மைனாரிட்டி தி.மு.க' என்று வார்த்தைக்கு வார்த்தை ஆளுங்கட்சியை தங்கள் தலைவி வர்ணித்தபோது, உற்சாகத்தோடு முறுவல் பூத்த காலம் போய், 'டெபாசிட் இல்லாத அ.தி.மு.க.' என்ற ஏளனப் பேச்சுக்கு ஆளாகிவிட்டதை எண்ணி மருகி நிற்கிறான் அந்தத் தொண்டன்!

''ஒரு தகவல் தெரியுமா சார் உங்களுக்கு? தமிழகத்தி லேயே எம்.ஜி.ஆர். சிலைகள் நிறைய இருக்கறது பென்னாகரத்தில்தான். அந்தளவுக்கு அந்த மக்கள் புரட்சித் தலைவர் மேல வெறியா இருக்கறவங்க. அப்படிப்பட்ட தொகுதியில இந்த கதின்னா எங்கே நடந்திருக்கு தவறு? அரசு இயந்திரத்தையும், பணத்தையும், பிரியாணியையும் காட்டித்தான் தி.மு.க. இத்தனை ஓட்டுகளை வாங்கி ஜெயித்தது என்று சொல்லி எங்கள் கட்சித் தொண்டனை சமாதானப்படுத்த முடியலை. 'அப்படியே பார்த்தாலும், பா.ம.க. எப்படி ரெண்டாம் இடத்துக்கு வந்தது. காசு பணத்துக்கு மயங்காத மக்கள் கூடவா நமக்கு ஓட்டுப் போட முன்வரலை'னு எதிர் லாஜிக் பேசுறான் எங்க தொண்டன்...'' என்று உதடு துடிக்கச் சொல்கிறார், அ.தி.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர்.

''சசிகலா குடும்பத்துக்கு தேவையில்லாம முக்கியத்துவம் கொடுக்குறாங்கனு சொல்லித்தான் மக்கள் ஏற்கெனவே ஆட்சியை விட்டு இறக்கினாங்க. ஆனா, இப்படி டெபாசிட்டே போகிற அளவுக்கான நிலைமை வருவதற்கு, சசிகலா குடும்பத்தின் தலையீடுகளை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கு தெரிஞ்சே பொறுப்புகள் கொடுத்து, கட்சியை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆக்கியது மட்டுமே இந்த சறுக்கலுக்குக் காரணமில்லை. தொண்டனுக்கும் தனக்குமான இடைவெளியை தானாகவே அதிகப்படுத்திக்கிட்டாங்க அம்மா. அதுதான் முக்கியக் காரணம்!'' என்று குமுறுகிறார் இன்னொரு தலைவர்.

''தள்ளாத வயதிலும், ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தினம் ஒரு மணி நேரமாவது அறிவாலயத்துல உட்கார்ந்து கடைநிலை தொண்டனின் பிரச்னை வரை காதில் வாங்குறாரு கருணாநிதி. அம்மாவோ கட்சி ஆபீஸுக்கு வர்றதே ஒரு அதிசயத் திருவிழாவா ஆகிப்போச்சு. இதோட, கட்சிக்கு அடிக்கடி லீவு விட்டுட்டு கொடநாட்டுக்கு போயிடுறாங்க. எதிர்க்கட்சியா இருந்து செய்ய வேண்டியதை எல்லாம் அறிக்கைகள் மூலமாகவே சாதிச்சிடலாம்னு நினைச்சிட்டாங்க. ஓ.பி.எஸ்., மதுசூதனன், செங்கோட்டையன் மாதிரியான முக்கியஸ்தர்கள்கூட, மிக அவசரமான முடிவுகளை எடுப்பதற்காக அம்மாவை சந்திக்க முடியாதபோது கட்சி எப்படி உயிரோட்டத்தோடு இருக்க முடியும்?'' சீனி பட்டாசு போல வெடிக்கிறார் இன்னொரு சீனியர்.

இன்னும் சிலரோ அம்மாவிடம் நேரிலேயே பேசுவதுபோல் ஆதங்கத்தைக் கொட்டுகிறார்கள். ''புதிய சட்டசபை திறப்பு விழாவுல கலந்துக்கக் கூடாதுங்குறதுக்காகத்தான் நீங்க கொடநாடு போனீங்க. இதுதான் நீங்க செஞ்ச பெரிய தவறு. சட்டசபை திறப்பு விழாவுக்கு போயிருந்தா ஒட்டுமொத்த மீடியோவோட பார்வையும் உங்க மேலதான் இருந்திருக்கும். எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூப்பிட்ட நாகரிகத்துக்கு போனாங்கன்ணு மக்கள் மத்தியிலும் ஒரு இமேஜ் வந்திருக்கும். இதையெல்லாம் உங்களுக்கு யாரு எடுத்துச் சொல்றது? நடக்கக்கூட முடியாத நிலையிலும் பென்னாகரத்துக்கு வந்து கருணாநிதி மேடையில் ஏறி பேசிட்டு போறாரு. நீங்க டெம்போ டிராவலர்ல கண்ணாடியைக்கூட இறக்காம போறீங்க? பென்னாகரம் வந்தப்பவாவது தேர்தல் பொறுப்பாளர் தம்பிதுரையைக் கூப்பிட்டு பேசினீங்களா? வேட்பாளரிடம் பேசினீங்களா? உங்க முகத்தைப் பார்த்ததும் அப்படியே ஓடிவந்து ஓட்டுப் போடுறதுக்கு இது எம்.ஜி.ஆர். காலம் இல்லை. வீட்டுக்குள்ளே டி.வி. வச்சிக்கிட்டு உலகத்தையே மடியில் உருட்டிப் பார்க்கிற விவரமான ஜனங்களின் காலம்! எம்.ஜி.ஆர். விதைச்சுட்டுப் போன அன்பு என்கிற பயிரை, திரும்பத் திரும்ப நேரில் வந்து நீர் வார்த்தால்தான் கட்சியைக் காப்பாற்ற முடியும்!'' என்றவர்கள் தொடர்ந்து...

''தினந்தோறும் தொகுதிக்குள் சுற்றி வருகிற அனுபவசாலிகள் கருத்துக்கு கொஞ்சமாவது காது கொடுத்திருக்கணும், அம்மா! இடைத்தேர்தல் அறிவிச்சதும் பென்னாகரத்தோட நிலவரத்தை தெரிஞ்சு தேர்தல் பொறுப்பாளர்களை நியமிச்சிருக்கணும். அது வன்னிய செல்வாக்குமிக்க தொகுதிங்கிறதால எல்லா கட்சியிலயுமே வன்னிய நிர்வாகிகளைப் பொறுப்பாளரா போட்டாங்க. ஆனா, நீங்க கொங்கு கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தம்பிதுரையை தேர்தல் பொறுப்பாளரா போட்டீங்க. அதே மாவட்டத்துல இருந்த வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனைக் கண்டுக்கக்கூட இல்ல. உங்களால கட்சியைவிட்டுப் போன செல்வகணபதியை முன்னிறுத்திதான் தி.மு.க. வன்னிய மக்களை வளைச்சது. டாக்டர் ராமதாஸும் சாதியை சொல்லித்தான் எல்லா வீட்டுக்குள்ளயும் போயிட்டு வந்தாரு. ஆனா, அ.தி.மு.க-வில எல்லோரும் கடமைக்காகத்தான் வேலை பார்த்தாங்க. தம்பிதுரையில ஆரம்பிச்சு பிரசாரத்துக்கு வந்த அத்தனை பேருமே ஏதோ ஆபீஸ் டூட்டி மாதிரி காலையில 10 மணிக்கு வந்துட்டு சாய்ந்திரம் அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பிப் போயிட்டாங்க.

டாக்டர் ராமதாஸ் தர்மபுரியிலேயே தங்கி ஒவ்வொரு கிராமமாகப்போய் வீடு வீடாக அலைஞ்சு திரிஞ்சு ஓட்டு கேட்டாரு. தி.மு.க-வுலயோ எ.வ.வேலுவோடு மொத்தம் பதினைஞ்சு அமைச்சருங்க வேலை பார்த்தாங்க. துணை முதல்வர் ஸ்டாலின் ஒரு கிராமம் விடாம திறந்த வேன்ல சுத்திட்டு இருந்தாரு. நீங்களோ வந்ததும் தெரியலை... போனதும் தெரியலை! வழக்கம்போல கொடநாட்டுல போய் ஓய்வெடுத்தீங்க. நம்ம வேட்பாளருக்கு தொகுதி முழுக்க சொந்தக்காரங்க இருக்கறதா கேள்விப்பட்டோம். அவங்க மொத்தப் பேரும் ஓட்டுப் போட்டிருந்தாக்கூட டெபாசிட் வாங்கியிருப்போம். ஆனா வேட்பாளரோட சொந்தக்காரங்களையே நம்மால கவர முடியலையே! இதெல்லாம் இப்பவாவது உங்களுக்கு தெரியுமா?'' என்கிறார்கள் எங்கோ இருக்கும் தங்கள் தலைவியின் திசை நோக்கி!

மீண்டும் மீண்டும் அவர்கள் சுட்டிக்காட்டுவது தங்கள் தங்கத் தலைவரின் பொற்காலத்தையேதான்!

''அப்பல்லாம் ஒரு ஆர்.எம்.வீ., ஒரு முத்துசாமி, ஒரு பண்ருட்டி, ஒரு அண்ணாச்சி, ஒரு திருநாவுக்கரசுனு திரும்பின பக்கமெல்லாம் பர்சனாலிட்டிகளின் படையெடுப்பு இருக்கும். கட்சிக்காரர்களின் கஷ்டங் களையும் மக்களின் தேவைகளையும் கவனிச்சுத் தீர்ப்பதற்கான முழு சுதந்திரத்தையும் அவங்களுக்குக் கொடுத்திருந்தார் புரட்சித் தலைவர். அவங்களும் தங்கள் தலைவருக்கான கவர்ச்சியையும் அன்பு உருவத்தையும் நேரில் ஏந்திச் செல்லும் தூதர்களாகவே மாநிலம் முழுக்கச் சுற்றி வந்தார்கள். ஆனா, இப்போ யார்தான் தங்கள் சொந்த ஆளுமையோடு கட்சி வேலைகளைப் பார்க்க முடிகிறது? 'எல்லாமே அம்மாதான். மத்தவங்க சும்மாதான்' என்று கட்சியின் சக தலைவர்கள் சொல்லுவதை அல்லவா அம்மா ரசிக்கிறார். தனிப்பட்டு யாரும் பேர் வாங்கிவிடக்கூடாது என்பதற்கல்லவா அவர் கூடுதலாக கவலைப்படுகிற மாதிரி தெரிகிறது! 'எல்லாமே அம்மாதான்' என்பதே நிஜமாகவே இருந்தாலும், அந்த அம்மா அவ்வப்போதாவது மக்கள்முன் வந்து தரிசனம் கொடுத்தால்தானே கட்சி என்று இருப்பது ஜனங்களுக்குத் தெரியும்? வழியும் விடமாட்டேன்... வரமும் தரமாட்டேன் என்று அம்மா ஏன் இப்படி சும்மாவே இருக்கிறார்?'' என்று ரத்தக் கண்ணீர் வடித்துக் கேட்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

கடைசி நம்பிக்கையோடு காத்திருக்கிறான் தொண்டன். என்ன பதில் சொல்லப் போகிறார் முன்னாள் முதல்வர்?

நமது அரசியல் நிருபர்


அமெரிக்காவில் நித்தியானந்தாவின் லீலைகள்

நித்திய ஆனந்தாவுக்கு எதிராக, 'பிளாக்மெயில்' சீடர் தர்மானந்தா ஒரு பக்கம்

குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்க... 'குடைச்சல் நம்பர் டூ'வாக கடல் தாண்டி குபீரென்று பாய்ந்திருக்கிறது புது தோட்டா! இது அச்சு அசல் அமெரிக்க பிரஜை ஒருத்தரின் கைங்கரியம்! அவர் பெயர் டக்ளஸ் மெக்கெல்லர்!

கலிஃபோர்னியாவில் அட்டார்னி ஜெனரல் ஜெரி ப்ரவுனுக்கு இவர் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தின் நகலில், அதிரடியாக பல குற்றச்சாட்டுகள் நித்தியானந்தா மீது!

'ஐயா அட்டார்னி ஜெனரல் அவர்களே,

நித்தியானந்தா என்ற சாமியார் அமெரிக்காவில் பல கிளைகள் வைத்து ஆன்மிகம் என்ற பெயரில் பலே மோசடிகள் செய்து வருகிறார். நித்தியானந்தா ஃபவுண்டேஷன், லைஃப் ப்ளிஸ் ஃபவுண்டேஷன், நித்ய யோகா, வேதிக் டெம்பிள், தியானபீடம் ஃபவுண்டேஷன் என்று அவர் பலவகையிலும் நிறுவி பல குற்றங்கள் செய்து வருகிறார். அதையெல்லாம் நீங்கள் விசாரித்து உரிய தண்டனையை அவருக்குத் தரவேண்டும். அதற்கான பக்கா சாட்சியாக நானே வந்து எல்லாம் சொல்லத் தயார்! 2003-ம் வருடம் தொடங்கி, ஆறு வருடங்கள் அவரோடு ஒட்டி உறவாடிய பக்தன் என்ற முறையில் எனக்கு பல ரகசியங்கள் தெரியும்...' என்கிறது, இந்த டக்ளஸ் மெக்கெல்லர் எழுதியதாகச் சொல்லப்படும் கவரிங் லெட்டர்!

எல்லாம் போச்சு சாமியாராலே!

செக்ஸ் க்ரைம், மோசடிகளோடு சேர்த்து 'ஹவாலா' டைப்பிலான 'மணி லாண்டரிங்' விவகாரத்திலும் நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லி திகில் கிளப்புகிறது இந்தக் கடிதம். 'அந்த சாமியாராலேதான் என் வேலை போச்சு. என்னைவிட்டு என் பொண்டாட்டிபோயிட்டா! இப்ப நான் கிட்டத்தட்ட நடுத்தெருவில் நிக்கிறேன் அவராலே! தேவைப்பட்டா இந்தியாவின் எந்த கோர்ட்டிலும் போய் நின்றுகூட இதைப் பற்றியெல் லாம் நான் விவரமாகச் சொல்லத் தயார்' என்று போட்டுத் தாக்குகிறது அந்தக் கடிதம்!

நித்ய பிரபாவாகிய நான்...

வெள்ளைக்கார குடைச்சல் பார்ட்டி தன் கடிதத்தோடு கொடுத்திருக்கும் நீளமான டாகு மென்ட்டில் விவகாரம் செம ஹாட்டாகவேவிவரிக்கப் பட்டிருக்கிறது.

''2003-ம் வருஷத்துலதான் எனக்கு நித்தியானந்தா அறிமுகமானாரு. இந்து மதத்தின் மீது இருந்த ஈடுபாட்டால அவரோட ஐக்கியமானேன். என் பெயரை 'நித்ய பிரபா' என்றே சாமியார் மாத்தி வெச்சாரு. அமெரிக்காவுல அவர் ஆசிரமம் தொடங்கியபோது, அதுல டெலிபோன் ஆபரேட்டர் வேலையில தொடங்கி அத்தனை வேலைகளையும் நானே செஞ்சுருக்கேன். நித்திய ஆனந்தாவுக்கு விசா கிடைக்காத சமயத்துல நான்தான் பெரும் முயற்சி எடுத்து அவருக்கு அமெரிக்காவுக்கு விசா கிடைக்க ஏற்பாடு செஞ்சேன்.

எனக்கு சொந்தமான 'சான்ஜோஸ்' வீட்டிலும் நித்தியானந்தா தங்குவாரு. அந்த சமயத்துல அமெரிக்காவை சேர்ந்த பல இளம் பெண்கள்அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போவாங்க. முதலில் எனக்கு இதெல்லாம் தப்பா தோணவே இல்ல.

ஆனால், நான் நித்திய ஆனந்தாவோடு இப்படி இழைவது என் மனைவிக்கு ஏனோ பிடிக்கலை. அவரைவிட்டு விலகி வரும்படி அந்த மகராசியும் பல தடவை சொன்னா... நான்தான் பாவி, கேட்காமப் போயிட்டேன். அதனால அவ டைவர்ஸ் வாங்கிட்டுப் போயிட்டா. அவளுக்கு ஏன் நித்தியானந்தாவைப் பிடிக்கலன்னு அப்ப எனக்கு தெரி

யலை...'' என்று புலம்பும் அந்த டக்ளஸ் மெக்கெல்லர் கடிதம்... ஜிலுஜிலுப்பாக மேற்கொண்டு போகிறது.

யார் அந்த நடிகை..?

''2007-ம் ஆண்டு நித்தியானந்தா தமிழ் சினிமா நடிகை ஒருத்தரை கலிஃபோர்னியாவுக்கு கூட்டிட்டுவந்தாரு. சினிமாவுல எனக்கு பெருசா ஈடுபாடு இல்லை. அதனால அவங்க பேருஎனக்கு நினைப்பில் இல்லே. ஆனா, திருமணம் செய்தவங்கன்னு மட்டும் தெரியும். அந்த நடிகைகூட என் வீட்டுல 15 நாள் தங்கியிருந்தாங்க. அந்த நடிகைக்கும் நித்திய ஆனந்தாவுக்கும் செக்ஸுவல் ரிலேஷன் ஷிப் இருந்ததைநான் புரிஞ்சுக்கிட்டேன். அதைப்பத்தி அவரிடமே கேட்டேன். 'கடவுளை அடைய ஆனந்தமான வழி இதுதான்'னு என்கிட்ட சிரிச்சுக்கிட்டே சொன்னாரு...'' என்று சொல்லும் புகார் கடிதம்,

''பிறகு ஆசிரமத்துக்கு வந்த பல பெண்களோடு குரூப் செக்ஸ் வெச்சுக் கிட்டதையும் என்னால உணர முடிஞ்சுது. பெண்களோடு சந்தோஷமாக இருக்கிறதை அவர் மறைக்கவோ மறுக்கவோ இல்லை'' என்று கலாய்க்கிறது!

அடங்காத ஆசை...

மேற்கொண்டு சொல்லப்படுகிற குற்றச்சாட்டு, தூக்கிப்போட வைக்கிற ரகம்!

''கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியில் சனாதன் தர்மா கோயில் என்று ஒன்று இருக்கு. இந்த கோயில்ல நித்தியானந்தாவோட பயிற்சிப் பட்டறைகள் நடக்கும். கோயிலோட கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே சகல வசதிகளோட கூடிய சொகுசு அறை இருக்கு. அவருக் காக உருவாக்கப்பட்ட பிரத்தியேகமான அறை அது. பயிற்சிப் பட்டறை நடக்குற சமயத்துல அடிக்கடி ரெஸ்ட் எடுக்க அந்த அறைக்குள்ள போயிடுவாரு. அமெரிக்காவுல வசிக்கும் தமிழ்ப் பெண்களுக்கு மட்டும் அந்த அறைக்குள் அனுமதி. தமிழ்ப் பெண்கள் மீது அவருக்கு அப்படி ஓர் அடங்காத ஆசை!

அந்த அறைக்குள்ள போனா என்ன நடக்கும்ணு என்னைப் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். பெண்களும் விருப்பப்பட்டுத்தான் போயிட்டு வருவாங்க.

அதேபோல, மான்ட்க்ளேயர் ஏரியாவுலதான் வேதிக் டெம்பிள் இருக்கு. அங்கேயும் கர்ப்பக்கிரகத்துக்கு பக்கத்துலயே நித்தியானந்தாவுக்கு ஓர் அறை உண்டு. இந்த அறையின் சாவி அவரது உதவியாளரான மா நித்ய கோபிகாகிட்ட இருக்கும். அமெரிக்க

என்.ஆர்.ஐ-யான நித்ய கோபிகாவோட ஒரிஜினல் பெயர் வித்யா விஸ்வநாதன்.

அந்த வேதிக் டெம்பிளுக்குள்ள இருக்கிற சொகுசு அறைக்கு யாரெல்லாம் போகவேண்டும் என முடிவெ டுக்கும் அதிகாரம் நித்ய கோபிகா கையிலதான் இருந் தது. விதவிதமான பெண்களைத் தேர்ந்தெடுத்து அவருக்கு அனுப்பி வைக்கும் உன்னதமான வேலையை செய்ததே கோபிகாதான்!'' என்று குபீர் கிளப்புகிறது அமெரிக்க குடைச்சல் புகார்.

தயாராக மூன்று பெண்கள்...அதோடு விட்டால்தானே..!

''நித்தியானந்தாவின் ஆன்மிக போதனை களில் நம்பிக்கை கொண்டு அவரிடம் வந்துசேர்ந்த கலிஃபோர்னியா மற்றும் லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்த மூன்று பெண்களை வலுக் கட்டாயமாக பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கியிருக்கிறார் அவர். அந்தப் பெண் களிடம் விசாரித்தால் நிச்சயமாக புகார் கொடுக்க முன்வருவார்கள். அதனால் அவர்களை விசாரிக்க வேண்டும்'' என்று சொல்லிவிட்டு,

''இந்தியாவில் ஒரு விதமான போதனைகளை செய்யும் இந்த சாமியார், அமெரிக்காவில் மட்டும் கிளுகிளு பாலிஸியைத்தான் ஓப்பனாக போதிப்பார். 'உலகத்துக் கான அத்தனை பலன்களையும் செக்ஸ் ஆய்வுகள் மூலம் மட்டுமே பெற்றுத் தரமுடியும். அதற்கான ஆராய்ச்சியில்தான் நான் இறங்கியிருக்கிறேன். அதோடு, எந்தப் பிரச்னைகளையும் செக்ஸ் மூலம் தீர்க்க முடியும் என்பதை நான் உணர்ந் திருக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்வார் சாமியார்'' என்று பத்த வைக்கிறது!

வயிற்று வலி... விளக்கு ஒளி!

நம்மூர் கிளுகிளு கதைகளில் வருகிற மாதிரியே ஒரு எபிஸோடையும் எடுத்து விடுகிறார் இந்தடக்ளஸ் மெக்கெல்லர். ''ஒருநாள் இரவு நான் ஆசிரமத்துக்குப் போயிருந்தேன். அப்போது கதவுகள் மெள்ளத் திறந்திருக்க... எட்டிப் பார்த்தேன். உள்ளே தீப விளக்கின் வெளிச்சத்தில் இரண்டு பெண்கள் முழு நிர்வாணமாக இருக்க... அவர்களுடன் ஆனந்த நிலையில் இருந்தார் நித்திய ஆனந்தா. எல்லாம் முடியும் வரை(?) அமைதியாகக் காத்திருந்தேன்.

தாண்டவத்தை முடித்துவிட்டு வெளியே வந்தவர், 'அந்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் தீராத வயிற்று வலி இருந்திருக்கு. அதை சரி பண்ணுவதற்குத்தான் இந்த சிகிச்சை கொடுத்தேன். அதனாலதான் மின்சார லைட் இல்லாம தீப விளக்கு வெளிச்சத்தில் அவங் களுக்கு சக்தி கொடுத்தேன். இனி அவங்களுக்கு வயித்து வலியே இருக்காது' என்று சிரித்தபடி சொன்னார், சான்ஸை பயன்படுத்திய சாமியார். எனக்குத் தெரிஞ்சு அமெரிக்காவுல மட்டும் ரெண்டு வருஷத்துல எப்படி யும் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நித்தியானந்தா இப்படி ஆனந்த டிரீட்மென்ட் கொடுத்திருப்பாரு.

உலகம் முழுக்க இப்போ அவரோட லீலைகளைப் பத்தி பிரச்னைகள் கிளம்பியிருக்கு. அதனாலநாங்களும் இங்கே நடந்த சம்பவங்களை உங்களோட கவனத்துக்கு கொண்டு வந்துட்டோம். நீங்க நடவடிக்கை எடுங் கய்யா...'' என்று கலிஃபோர்னிய அட்டார்னி ஜென ரலுக்கு எழுதப்பட்ட கடிதம் பவ்யமாக முடிகிறது.

விதவை பெண் வில்லங்கம்...

சேலம் மாவட்டத்தில் ஒரு ஏரியாவிலுள்ள வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த இளம் விதவை ஒருவரையும் சாமியாருக்கு எதிராக உசுப்பிவிட முடியுமா என்று அவருக்கு எதிரான பார்ட்டிகள் தீவிரமாக முயல்கின்றன. இந்த எதிர்த் தரப்பு பார்ட்டிகள் சொல்வது இதைத்தான் -

''கணவன் இழந்த பெண் அவர். தனிமை சோகம் தாளமுடியாமல் மனஆறுதல் தேட சாமியாரின் பிடதி ஆசிரமத்துக்குப் போனார். பிடதி ஆசிரமத்திலேயே ஒரு கட்டத்தில் சேர்ந்தும்விட்டார். வழக்கம்போல எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருக்க... ஒரு நாள் தியான மண்டபத்தில் அந்த பெண்ணின் மீது கைகள் படர்ந்திருக்கிறது.

அன்று இரவே பள்ளியறை பூஜைக்கு அந்தப் பெண் அழைக்கப்பட்டிருக்கிறாள். பள்ளியறைக்குள் சாமியார் கொடுத்த டிரீட்மென்ட்டை பெண்ணால் ஜீரணிக்கவே முடியவில்லையாம். அடுத்த நாளே ஆசிரமத்திலிருந்து கிளம்பி, சொந்த ஊருக்குத் திரும்பி விட்டாராம். அந்த விதவைப் பெண் எந்த நேரமும் புகார் கொடுத்து பிரச்னையைக் கிளப்புவார் என சாமியார் தரப்பும் பயந்தது. அந்தப் பெண்மணியும் கிட்டத்தட்டஅந்த மூடில்தான் இருந்திருக்கிறார். இதற்கிடையில், சி.டி விவகாரம் வெளியாவதற்கு முன்பு சாமியார் தன் பரிவாரங்களோடு சேலம் வந்தபோது, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்து மனமுருக மன்னிப்பு கேட்டுவிட்டார். மறுபடியும் ஆசிரமத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தாராம். அந்தப் பெண் மறுத்து விட்டார். ஆனால், தைரியமாக வெளியில் வந்து புகார் தரும்படி நாங்கள் அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வருகிறோம்...'' என்கிறார்கள் இந்த எதிர்பார்ட்டிகள்.

வயசென்ன சாமீ?

இருக்கிற வில்லங்கங்கள் போதாதென்று, நித்திய ஆனந்தாவின் வயசு விவகாரத்தை வைத்தும் சிலர் பிரச்னை பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். விசா வில் ஒரு தேதி, பாலிடெக்னிக்கில் படித்தபோது ஒரு தேதி என்று அவர் மாற்றிக் கொடுத்திருப்பதாக சில ஆதாரங்களை எடுத்துக் காட்டும் அவர்கள்... 'சமீபத் தில் நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சில கோர்ட் ஆவணங்களில் வேறொரு தேதி இருக் கிறது. இதெல்லாம் சட்டத்துக்குச் செய்கிற துரோக மில்லையா?' என்று கொளுத்திப் போட... எட்டு திசையிலிருந்து வரும் பந்துகளில் எதை எப்படித் தடுத்து ஆடுவது என்று இன்னும் தீவிரமான சட்ட ஆலோசனையில் இறங்கியுள்ளார் நித்திய ஆனந்தா!

''டக்ளஸ் மெக்கெல்லரை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொண்டுவிட முடியாது'' என்று கூறும் முன்னாள் ஆசிரமவாசிகள், அவர் இணையதளத்தில் வைத்துள்ள விவரமான 'பிளாக் ஸ்பாட்'டை அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நித்திய ஆனந்தா ஆசிரம நிகழ்வுகள் தொடர்பான எக்கச்சக்க வீடியோ படங்கள் ('அந்த மாதிரி' எதுவும் இல்லை!), சாமியார் பற்றிய கடும் விமர்சனங்கள் என்று விவரமாகவே தொகுத்து வைத்துள்ளார் இந்த அமெரிக்க அதிரடி மச்சான்!

''2007 நித்யானந்தா நடத்திய பயிலரங்கத்தில் கலந்து கொண்ட போது 'திடீர் முக்தி' கொடுக்கிறேன் பேர்வழி...என்று அவர் சில கண்கட்டு வித்தைகளை நடத்தினார். சாம்பிராணி நெருப்பில் போதை திரவியங்களை கலந்து மயக்கத்தை ஏற்படுத்தியிருப்பாரோ என்று இப்போது தோன்றுகிறது'' என்று இவர் தன் புகாரில் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் போதை மருந்து குற்றம் செமத்தியான கடுமையோடு டீல் செய்யப்படும் என்பதால், ஆசிரம தரப்பு ரொம்பதான் கவலையோடு இதை கவனிக்கிறதாம்.

ஏதோ சீட்டு கம்பெனியில் பணம் கட்டி ஏமாந்ததுபோல, ''நான் அவரிடம் சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை ஏமாந்திருக்கிறேன். என்னைப் போல பல அமெரிக்க பக்தர்களையும் நித்தியானந்த சாமியார் நம்பிக்கை மோசடி செய்துவிட்டார்'' என்றும் தன் புகாரில் புலம்பியிருக்கிறாராம் மெக்கெல்லர்.

- மு.தாமரைக்கண்ணன், கே.ராஜாதிருவேங்கடம்

நன்றி: ஜூவி

Sunday, April 4, 2010

லாலுவையும் முலாயமையும் தமுமுக தமிழகம் அழைப்பதன் காரணம் என்ன?

"பாடம் புகட்ட வருகிறது வடக்கு"
_________________________________________
நன்றி: ஜூவி

ந்திய முஸ்லிம்களின் முக்கிய தலைமை அமைப்பான 'அகில இந்திய முஸ்லிம்கள் தனி சட்ட வாரிய'த்தின் 21-வது பொதுக்குழுக் கூட்டம், கடந்த வாரம் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்தது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் கலந்துகொண்டார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2005-ல் அறிமுகப்படுத்திய வகுப்பு கலவர சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், சில மாற்றங்கள் செய்து அதை 2009-ல் மீண்டும் அறிமுகப்படுத்தியது. இப்போது இதற்கும் அகில இந்திய முஸ்லிம்கள் தனி சட்ட வாரியக் கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியதாமே?''

''ஆம்! அதைத் தற்போதைய வடிவத்தில் நிறை வேற்றக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. காரணம், 2005-ல் அறிமுகப்படுத்தியதைவிட எந்த வகையிலும் அதன் அடிப்படை மற்றும் நோக்கம் மாற்றப்படவில்லை. கலவரக்காரர்களுக்குக் கடுமையான தண்டனைகளும் அதில் இல்லை. அது, மாநில அரசு மற்றும் காவல் துறைக்கு அளவுக்கு அதிகமான அதிகாரம் கொடுப் பதாகவே உள்ளது. அந்தச் சட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் செய்து அறிமுகப்படுத்தவேண்டும் என பிரதமரை சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம்.''

''பெண்கள் இடஒதுக்கீடு மசோதா குறித்து உங்கள் தனி சட்ட வாரியம் விவாதிக்காமல் விட்டதன் காரணம்?''

''முஸ்லிம்களின் தனிச்சட்டங்களை மட்டும் விவாதிக்க அமைக்கப் பட்ட இந்த அமைப்பில், மத்திய அரசு அமல்படுத்தும் பெண்கள் மசோதா குறித்துப் பேசுவது சரியாக இருக்காது. ஆனால், இதன் உறுப்பினர்களான த.மு.மு.க., ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த், இந்திய தேசிய லீக் உட்பட முக்கிய முஸ்லிம் அமைப்புகள் மசோதா குறித்து எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு கொடுப்பது என கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது. முஸ்லிம் சமுதாயப் பெண்களுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீடு இருப்பதால், த.மு.மு.க. சார்பில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் போன்ற வடஇந்திய தலைவர்களை தமிழகம் வரவழைத்துப் பெரிய அளவில் ஒரு மசோதா எதிர்ப்பு கூட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்.''

''லாலுவையும் முலாயமையும் அழைப்பதன் முக்கியக் காரணம் என்ன?''

''நம் நாட்டில் சமூக நீதி காக்கும் பாசறையாக விளங்கும் மாநிலம் தமிழகம். அதை அடிப்படையாகக் கொண்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய பெரிய திராவிடக் கட்சிகளும் அந்த மசோதாவை கண்மூடித்தனமாக ஆதரிப்பதுடன், உள்ஒதுக்கீட்டையும் கேட்க மறுத்துவிட்டன. இவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில்தான் லாலு, முலாயம் போன்ற வடஇந்தியத் தலைவர்களை தமிழகம் அழைத்துள்ளோம்...''
- சாந்தினி
படம்: எஸ்.சபா