.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, September 30, 2009

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்! வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

தமிழ்நாடு மின்சாரா வாரியத்தின் அலட்சியம்!
வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின் கம்பம்.

நடவடிக்கை எடுக்குமா மின்சாராவாரியம்?

வீதியின் நடுவே ஊன்றப்பட்டுள்ள மின்கம்பம்.

தேதி: 30-09-2009
அடைதல்

கோட்ட உதவி மின் பொறியாளர் அவர்கள்,
தமிழ்நாடு மின்சாரா வாரியம்,
சிக்கல்,
இராமநாதபுரம் மாவட்டம்.


பொருள்: தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றி உரிய இடத்தில் ஊன்றுவது சம்பந்தமாக.

இராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் கிராமம் ஆண்டிச்சிகுளம் சாலையில் அருந்ததியர் காலனிக்கு வடக்குப் பகுதியில் பட்டா எண்: 548, புல எண்: 129ல் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு பக்கமும் வீடுகள் அமைந்திருக்க அதன் நடுவே 13 அடிச்சாலை செல்கிறது மின்சாரா வாரியத்தின் மூலம் மின் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன தெருவின் தொடக்கத்தில் நிறுவப்பட்டுள்ள மின் கம்பம் சரியாகவும் அதற்கடுத்து நிறுவியுள்ள மின் கம்பம் தெருவின் நடுவிலும் நிறுவப்பட்டுள்ளது (பார்க்க படம்) அந்தத் தெருவில் வசிப்பவர்கள் வாகனங்களின் மூலம் பொருள்கள் கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.

எனவே மின்சார வாரியத்தின் கவனக்குறைவால் தவறுதலாக நிறுவப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றி முறையாக அதன் உரிய இடத்தில் நிறுவித்தர வேண்டுமாய் அங்கு வசிக்கும் பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

கிராம மக்களின் சார்பாக
எம். ஹூஸைன் கனி
சிக்கல்.

நகல்கள்:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்கள்,
மாண்புமிகு தமிழக மின்சார துறை அமைச்சர் அவர்கள்,
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், இராமநாதபுரம்,
கோட்ட மின் பொறியாளர் அவர்கள், தமிழ்நாடு மின்சாரா வாரியம், பரமக்குடி,
ஊராட்சி மன்றதைலைவர் அவர்கள், சிக்கல்.

No comments: