.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, September 4, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்: தமுமுக இரங்கல்!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

ஆந்திர முதல்வர் வை. ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெஇகொப்டர் விபத்தில் உயிர் இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. தனது அற்பணிப்பு மிக்க சேவைகளினால் பெரும் மக்கள் ஆதரவை பெற்ற தலைவராக வை.எஸ்.ஆர் விளங்கினார். 2004ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தஇன் போது ஆட்சிக்கு வந்தால் முஸ்இம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அதனை நிறைவேற்றியவர் வை.எஸ்.ஆர். இவ்வாறு அவர் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய பிறகு அது பெரும் சட்டசிக்கலை எதிர்நோக்கிய போது அதனை சாதுரியமாக தீர்த்து இடஒதுக்கீடு பயனை ஆந்திர முஸ்லிம்கள் அனுபவிக்க அவர் வழிவகுத்ததை என்றென்றும் முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவில் நிறுத்திக் கொள்ளும். அவரது மக்கள் ஆதரவு செயல்களின் காரணமாக தான் அவர் மீண்டும் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றார். சீரிய முதல்வரை இழந்து வாடும் ஆந்திர மக்களுக்கும் வை.எஸ்.ஆரின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

(எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்)
தலைவர் தமுமுக
ஒருங்கிணைப்பாளர் மனிதநேய மக்கள் கட்சி

No comments: