.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label புதிய கிளை. Show all posts
Showing posts with label புதிய கிளை. Show all posts

Saturday, June 13, 2009

த.மு.மு.க தலைவரின் லண்டன் பயணம்

லண்டனில் த.மு.மு.க தலைவரின் உரை
லண்டனில் உள்ள இஸ்லாமிய அழைப்பு பணி மையம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் முனைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இஸ்லாம் கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் நாளை 13-06-2009 மாலை 7 மணியாளவில் உரையாற்றவுள்ளார்கள்.


தமிழகத்தில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று மாநிலத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் சேவைகள் செய்து வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இந்திய எல்லையைத் தாண்டி வெளிநாட்டின் பல பகுதிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரிட்டன் பயணம் செய்துள்ள தமுமுக தலைவர் முனைவர் ஜவஹிருல்லாஹ் அவர்கள் லண்டனில் வசிக்கும் நமது சமுதாயத்தவர்கள் ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு அமர்வுகளில் மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.