.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Wednesday, June 8, 2011

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

"சமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் பிஜேயின் கும்பல்" என்று இன்று காலை ஒரு பதிவு வெளியிட்டிருந்தோம். அதற்கு முகநூலில் பதிலளித்திருக்கும் பிஜேயின் ரசிகர்பட்டாளங்கள், தலைவன் எவ்வழியோ அவ்வழியை தவறாமல் கடைப்பிடிக்கும் தொண்டன்கள் அல்லவா? இந்த ரசிகர்கள் கூடட்டம். கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களுடன் அர்ச்சனை செய்துள்ளார்கள்.

அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இதைப்பார்த்தவுடன் அவர்களின் அளவுக்கு அதே டென்சனில் பதில்வரும் என்று... அதுததான் இல்லை! அவர்களை பயிற்றுவித்தவரிடம் சில காலம் இருந்திருந்தாலும் நல்ல தலைவர்களின் வழிகாட்டலின் பாசரையில் பயின்றவர்கள் நாம். மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம். கிரிமினல், திருட்டு, குறுக்குவழி போன்ற கீழ்த்தரமான சிந்தனைகள் நமக்குக்கிடையாது.

அந்த அர்ச்சனைகளைப் படித்தவுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். காரணம்.... நன்மைகள் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக்கூடியவை அல்ல. அவர்களின் கீழ்த்தரமான வார்த்தைகளுக்குப் பகரமாக நமக்கு மறுமையில் நன்மையாக மாறும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நான் ஒரு முஸ்லிமாக நிச்சயமாக அவர்களை நான் மறுமையில் சந்திப்பேன் அப்போது என்னைப் பற்றிய கீழ்த்தரமான வார்த்தைக்கு இன்ஷா அல்லாஹ் கணக்குத் தீர்த்துக் கொள்வேன்.

நாம் எடுத்து வைத்துள்ள நியாயமான கேள்விக்கு அவர்களின் பதிலை பாருங்கள்... அதுவும் மனிதநேயர் மக்கள் கட்சி என்ற பெயரில் ID

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.

அடுத்தவர்களைப் பற்றி விமர்சிக்கும் போது தனது அமைப்பையோ தன்னைப் பற்றிய அடையாளமோ தெரியாமல் போலி பெயர்களில் விமர்சியுங்கள் என்று அனுமதி அளித்து TNTJ தலைமை தனது கிளைகளுக்கு எழுதிய கடிதம் உங்களின் பார்வைக்கு.....

பாருங்கள் இவர்களின் அயோக்கியத்தனத்தை....

தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே!

4 comments:

இறை அடியான் said...

Not True...

for this article. surely u will be punished by Allah SWT .... fear Allah..

M. Hussainghani. said...

thittachery> திட்டச்சேரி சகோதரரே! உங்கள் மீது இறைவனின் சாந்தி நிலவட்டும்.

இதில் எதை உண்மையில்லை என்கிறீர்கள்? போலி பெயர்களில் வலம் வரச்சொல்லி அனுமதிஅளித்திருப்பதையா? அல்லது போலி பெயரில் அடுத்தவர்களை அர்சச்னை செய்யும் போலி கும்பலையா? எது உண்மையில்லை??
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். கண்மூடிப்பின்பற்றாதீர்கள்? கொஞ்சமாவது உங்களின் சிந்தனைக்கு சுதந்திரம் அளியுங்கள்.‍ நேர்வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்.

ஷர்புதீன் said...

salam

kilinjathu... ithukku naan evvalavo better

fazil said...

இ ந்த பக்கத்தில் உள்ள attached file some time not appearing please keep it and correct it.