.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, October 26, 2009

மனைவியை மொட்டையடித்து மானபங்கப்படுத்திய கொடுமைக்காரக்கணவன் கைது.

நடத்தையில் சந்தேகப்பட்டு பெல்ட்டால் அடித்து சித்ரவதை:
மனைவியை மொட்டையடித்து மானபங்கப்படுத்திய கணவர் கைது
உடந்தையாக இருந்த மாமியார், மைத்துனரும் சிறையில் அடைப்பு

கோவை, அக். 26:இளம்பெண்ணை மொட்டை அடித்து சித்ரவதை செய்த கணவர், மாமியார், கொழுந்தன் கைது செய்யப்பட்டனர்.

கோவை கோட்டைமேட்டை சேர்ந்தவர் இப்ராகிம் ஷா(30). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த அப்துல்கபூர் மகள் நதீரா பானு(27) என்பவருக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. மகன்கள் அசாருதீன்(10), சைபுல்(5), மகள் சப்ரின்(7).

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மனைவியை இப்ராகிம் அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி ஜமாத்தில் புகார் செய்யப்பட்டு, அவ்வப்போது சமரசம் செய்து வைத்தனர். கடந்த வாரம் நதீராவை, இப்ராகிம்ஷா அடித்து சித்ரவதை செய்தார். இதனால் நதீரா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடந்த 23ம் தேதி இப்ராகிம், மாமனார் வீட்டுக்கு சென்று, சமாதானம் பேசி மனைவியை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். தான் 2வது திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வேண்டும் என நதீராபானுவை இப்ராகீம் வற்புறுத்தி உள்ளார். இதற்கு நதீராபானு மறுத்தார். ஆத்திரம் அடைந்த இப்ராகிம், அவரது தம்பி பைரோஸ்(27) ஆகியோர் நதீராவை அடித்ததோடு, வலுக்கட்டாயமாக நதீராபானுவுக்கு மொட்டை அடித்தனர். வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

மொட்டையடிக்கப்பட்ட நிலையில், தாய் அழுததை நேற்று முன்தினம் இரவு பார்த்த நதீராபானுவின் மகன் அசாருதீன், தாத்தா அப்துல்கபூரிடம் தெரிவித்தான். இதையடுத்து அப்துல்கபூர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இப்ராகிம் வீட்டுக்கு திரண்டு சென்றனர். இப்ராகிமும், குடும்பத்தினரும் அவர்களை தடுத்து தகராறு செய்தனர்.

இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சென்று, நதீராபானுவை மீட்டனர். இப்ராகிம், பைரோஸ் ஆகியோரை கைது செய்தனர்.

உடந்தையாக இருந்த இப்ராகிம் தாய் சரீபா, அக்கா ஆமினாவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இப்ராகிம் வீட்டை விடிய விடிய முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சரீபா நேற்று காலை கைது செய்யப்பட்டார். ஆமினாவை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் மானபங்கம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments: