.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, October 18, 2009

கோவா குண்டு வெடிப்பு சம்பவம் இந்து அமைப்பினர் 5 பேர் கைது

கோவா குண்டு வெடிப்பு சம்பவம் இந்து அமைப்பினர் 5 பேர் கைது
3 குண்டுகள் செயலிழப்பு


மர்கோவா, அக். 18- கோவாவில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, "சனாதன் சன்ஸ்தா" என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெடிக்காத மூன்று குண்டுகளையும் போலீசார் செயல் இழக்கச் செய்தனர்.

தீபாவளியை முன்னிட்டு கோவா மாநிலம் மர்கோவா நகரில் கிரேஸ் சர்ச் அருகே நரகாசுரன் உருவமொம்மைகள் நேற்று முன்தினம் இரவு எரிக்கப்பட்டன. அந்த இடத்தில் ஸ்கூட்டர் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற மல்கோன்டி பாட்டீல் என்பவர் பலியானார். யோகேஷ் நாயக் என்பவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் சிக்கின. அவற்றை போலீசார் செயலிழக்கச் செய்தனர். வாஸ்கோவில் சாந்த துர்கா கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த மற்றொரு குண்டையும் போலீசார் செயலிழக்கச் செய்னர். ஜெலட்டின் குச்சிகள், கடிகாரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உதவியுடன் அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்கூட்டரின் உரிமையாளர் "சனாதன் சன்ஸ்தா" அமைப்பை சேர்ந்த நிஷாத் பக்லே எனத் தெரிந்தது. குண்டு வெடிப்பில் பலியான மல்கோன்டி பாட்டீல், படுகாயம் அடைந்த யோகேஷ் நாயக் ஆகியோரும் அதே அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிந்தது. இது, மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட சாமியார் பிரக்யா சிங்குடன் தொடர்புடைய அமைப்பாகும்.

இதைத் தொடர்ந்து சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தில் போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். அங்கு வெளிநாட்டினர் உள்பட 167 பேர் தங்கியிருந்தனர். 30 அறைகளில் சோதனை நடத்திய போலீசார் கடிகாரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட சந்தேகத்துக்கிடமான பொருட்களை கைப்பற்றினர். அந்த அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் இருந்து சென்றுள்ள தீவிரவாத தடுப்பு படையினரும் கோவாவில் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சனாதன் சன்ஸ்தா உறுப்பினர்கள் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி: தமிழ்முரசு

No comments: