.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, August 16, 2007

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்!

தமிழக முதல்வருக்கு தமுமுக அவசரக் கடிதம்

தென்காசி டி.எஸ்.பி. மற்றும் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்

தமிழக முதல்வருக்கு தமுமுக தலைவர் அவசரக் கடிதம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தமிழக முதல்வருக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
''நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று காலையில் இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு தரப்பையும் சேர்ந்த ஆறு நபர்கள் உயிர் இழந்தது மிகுந்த வேதனையைத் தருகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் குமாரபாண்டியனைக் கொலை செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்களும், கடந்த மார்ச் மாதம் தமுமுக மாவட்டத் தலைவர் சேட் கானை கொலை செய்யும் நோக்கில் பயங்கரமாக தாக்கியவர்களும் சமீபத்தில் நிபந்தனை பிணையில் விடுதலையாகி வெüயே வந்துள்ளார்கள்.
சாதாரணமாக இதுபோல் நிபந்தனை பிணையில் வெüவருபவர்களுக்கு வெü மாவட்டங்கüல் தான் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்படும். தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் தாக்கப்பட்ட பிறகு தென்காசியில் நடைபெற்ற சிறுசிறு சம்பவங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுக்கும் திருச்சியில்தான் நிபந்தனை பிணையில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் குமாரபாண்டியன் கொலை மற்றும் சேட்கான் கொலை முயற்சியில் கைதாகி நிபந்தனைப் பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கு மட்டும் தென்காசியில் கையெழுத்திட உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சேட்கானை தாக்கி பிணையில் வெüயில் வந்தவர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை பல்வேறு வகையில் வீதிகளில் வைத்து மிரட்டி வந்தனர். மாலை நேரங்கüல் சில முஸ்லிம் வீடுகள் மீது கல்வீச்சிலும் இறங்கினர். இவ்வாறு அவர்கள் தென்காசியில் தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தி வருவது குறித்து நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு அவ்வப்போது புகார் களை அüத்து வந்துள்ளோம்.
நெல்லை மாவட்ட தமுமுக தலைவர் சேட்கானை மீண்டும் தாக்கி கொலை செய்வோம் என்று அவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மிரட்டி வருவது குறித்தும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தோம், இருதரப்பிலும் கைதாகி விடுதலை ஆனவர்கள் தொடர்ந்து தென்காசியில் இருப்பது சட்டம் ஒழுங்கை சீர்கெடுக்கும் என்பதையும் நாம் முன்கூட்டியே தெரிவித்திருந்தோம், தென்காசி டி.,எஸ்,பி.யாக இருக்கும் மயில்வாகனனும், ஆய்வாளர் சந்திரசேகரனும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களது செயல்பாடுகüனால் பதட்டம் அதிகரிக்க காரணமாகவும் செயல்பட்டனர் என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
தென்காசியில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தென்காசியில் தொடர்ந்து அமைதி நிலவ தன்னாலான அனைத்து ஒத்துழைப்பு களையும் அரசுக்கு தரும் என்று உறுதி அüக்கிறோம்.
இக்கோஷ்டி மோதலுக்கு வித்திட்ட தென்காசி டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் ஆய்வாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேநேரத்தில் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை தென்காசியில் பணியில் அமர்த்த வேண்டும். உயிரிழந்த முஸ்லிம்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.''

No comments: