.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label Air INDIA. Show all posts
Showing posts with label Air INDIA. Show all posts

Tuesday, June 1, 2010

டாய்லெட்டில் விமானி: 7,000 அடி கீழே பாய்ந்த துபாய்-புனே ஏர் இந்தியா விமானம்


துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த விபத்து மாபெரும் தவி்ர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி, மங்களூர் விமான விபத்து நடந்த 4 நாட்களில், மஸ்கட் வான் வெளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

துபாயிலிருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை 'ஆட்டோ பைலட்' கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு, விமானி அனுபம் திவாரி சிறுநீர் கழிக்கச் சென்றார். காக்பிட்டில் துணை விமானி இருந்தார்.

அப்போது அந்த விமானம் மஸ்கட் மீது 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. இந் நிலையில் வானில் வெற்றிடத்தில் (air pocket) நுழைந்த விமானம், கட்டுப்பாட்டை இழந்தது. விமானத்தை ஆட்டோ பைலட் சிஸ்டமும் தனது கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துவிட்டது.

இதையடுத்து அந்த விமானம் 5,000 அடி கீழே குதித்தது. விமானத்தை துணை விமானி கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்.

இதையடுத்து டாய்லெட்டில் இருந்து ஓடிவந்த பைலட், பாஸ்வேர்டைப் போட்டு காக்பிட்டின் கதவைத் திறக்கவே 2 நிமிடங்களாகியுள்ளது. அதற்குள் விமானம் நிலைதடுமாற ஆரம்பித்துள்ளது.

ஒரு வழியாக கதவைத் திறந்து தனது சீட்டுக்குத் தாவிய விமானி, விமானத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அதற்குள் 3 நிமிடங்கள் ஆகிவிட்டன. இந்த நேரத்துக்குள் விமானம் மேலும் 2,000 அடி கீழே பாய்ந்துள்ளது.

அது போயிங் 737 ரக விமானமாகும். அதில் 118 பேர் இருந்தனர். இந்த சம்பவத்தால் யாரும் காயமடையவி்ல்லை.

இந்த விமானம் தான் பறக்க வேண்டிய உயரத்திலிருந்து கீழே இறங்கியதால், எதிரே வந்த ஒரு விமானத்துடன் மோதும் அபாயம் ஏற்பட்டது. பின்னர் இரு விமானங்களின் விமானிகளும் அதைத் தவிர்த்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் பைலட்டும், துணை பைலட்டும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆட்டோ பைலட் சரியாக செயல்படவில்லை என்று இரு விமானிகளும் குற்றம் சாட்டியுள்ளதாகத் தெரிகிறது.

Monday, May 31, 2010

மங்களூர் விமான விபத்து விமானியே காரணம்! முதல் கட்ட ஆய்வில் தகவல்.


மங்களூரில் விபத்தில் சிக்கிய விமானத்தை தரையிறக்கும் முன், அது மிக அதிக வேகத்தில் பறந்ததால், அதை தரையிறக்க வேண்டாம் என்று விமானியிடம் துணை விமானி 2 முறை கூறியுள்ளார். ஆனால், அதைக் கேட்காமல் தரையிறக்கியதால் தான் விபத்து நடந்ததாகத் தெரிகிறது.

மங்களூர் விமான நிலையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் ஓடுதளமான ரன்வே ஒரு மலையின் மீது தான் அமைந்துள்ளது. ரன்வேயின் இரு முனைகளிலும மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் இந்த ரன்வே, table-top runway என்று அழைக்கப்படுகிறது. இதில் விமானத்தை தரையிறக்க அதிக அனுபவம் வேண்டும்.

கடந்த 22ம் தேதி துபாயிலிருந்து இங்கு தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் ஓடி, நிற்காமல், மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்துச் சிதறி 158 பேர் பலியாயினர்.

அதன் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் இந்த விமானத்தின் காக்பிட்டில், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல், மங்களூர் விமான நிலைய தரைக்கப்பாட்டு மையத்திலும் பதிவாகியுள்ளது.

இந்த உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.

விமானத்தை தரையிறக்க இங்கிலாந்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்லாட்கோ குளுசிகா முயன்றபோது, வேண்டாம் என்று தடுத்துள்ளார் துணை விமானியான அலுவாலியா. அப்போது விமானம் 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

விமானம் அதிக வேகத்தில் தரையிறங்க முயன்றதாலோ அல்லது உயரத்தை போதிய அளவுக்குக் குறைக்காமல் ரன்வேயை அடைய பைலட் முயன்றதாலோ அவரை அலுவாலியா தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

இரண்டு முறை கேப்டனை தடுத்த அலுவாலியா, இன்னொரு முறை வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்க முயற்சி்க்கலாம் என்று கூறியுள்ளது தரைக்கப்ப்டடு மையத்தில் பதிவாகியுள்ளது.

இவ்வளவு வேகத்தில் தரையிறக்கினால், விமானத்தை ரன்வேக்குள் நிறுத்துவது கடினம், அது மலையில் உருண்டுவிட வாய்ப்புள்ளதை உணர்ந்து அலுவாலியா, கேப்டனைத் தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால், அந்த கோரிக்கையை கேப்டன் நிராகரித்துவிட்டு விமானத்தை தரையிறக்கியபோது தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் ரன்வேயின் ஆரம்பத்திலேயே தரையிறங்காமல் 2,000 அடி தள்ளி தரையிறங்கியது. அப்போது விமானத்தை ரன்வேயில் நிறுத்த முடியாது என்பதை கேப்டன் உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் டேக்-ஆப் செய்ய முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் டயர்கள் வெடித்து, விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட, ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் உருண்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த போயிங் 737 விமானத்தை தரையிறக்கிய 4,500 முதல் 5,000 அடி தூரத்திலேயே நிறுத்திவிட முடியும். 2,000 அடி தள்ளி இறங்கியிருந்தாலும் ரன்வேயில் மிச்சமிருந்த 6000 அடி தூரத்தில் அதை நிறுததியிருக்க முடியும். ஆனாலும், அதை ஏன் மீண்டும் டேக்-ஆப் செய்ய விமானிகள் முயன்றனர் என்பது கேள்வியாக உள்ளது.

மேலும் துணை விமானி அலுவாலியா ஏன் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்னார் என்பது கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதன் மூலமே துல்லியமாக அறிய முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

மங்களூர் விமான நிலையத்தி்ற்கு கேப்டன் குளுசிகா 19 முறையும் துணை விமனியான அலுவாலியா 66 முறையும் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலுவாலியா மங்களூரில் வசித்தவரும் ஆவார். இம்மாத இறுதியில் கேப்டனாக பதவி உயர்வு பெற இருந்தார். ஏர் இந்தியாவில் சேரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அமெரிக்கா செல்லும் கருப்புப் பெட்டி:

இந் நிலையில் இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சேதமடைந்துள்ளதால் அதிலிருந்து விவரங்களைப் பெற, அதை அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

ரன்வே நீளம் அதிகரிப்பு:

இதற்கிடையே மங்களூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.

8,000 அடி நீளமான இந்த ஓடுதளம் 9,000 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.

Friday, May 28, 2010

மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?


- MH.கனி
ங்​க​ளூ​ரில் இருந்து எழு​கின்ற மரண ஓலம் ஓய்ந்​தா​லும்,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​க​ளில் தொட​ரும் துய​ரம்​தீர ஆண்​டு​கள் பல​வா​கும்.​ எண்​ணற்ற ஆசை​க​ளை​யும்,​​ கன​வு​க​ளை​யும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்​கும் நேரத்​தில் உயிரிழந்த பரிதாபம் உல​கையே உலுக்​கு​கி​றது.​ எட்​டுப் பேரா​வது உயிர்​பி​ழைத்​த​னரே என்று சமா​தா​னப்​பட்​டுக் கொள்​ள​லாம்,​​ அவ்​வ​ளவே.​

விபத்து என்​பது தவிர்க்க இய​லாத ஒன்று என்​பது தெரிந்​த​து​தான்.​ விமா​னத்​தில் பறந்​த​தால் மட்​டுமே விபத்து ஏற்​ப​டும் என்​றும்,​​ ரயி​லில் பய​ணித்​த​தால் விபத்து ஏற்​பட்​டு​வி​டும் என்​றும் சொல்​லி​விட இய​லாது.​ நடந்து போகும்​போ​து​கூட விபத்து நேரி​ட​லாம்.​ சாலை​யில் செல்​லும் பேருந்தோ,​​ லாரியோ வீட்​டில் மோதிய சம்​ப​வங்​கள் ஏரா​ளம் உண்டு.​

ஆனால்,​​ விபத்து என்​பது மனி​த​னின் கவ​னக்​கு​றை​வாலோ அல்​லது தவ​றான நடை​மு​றை​யாலோ ஏற்​பட்​டி​ருந்​தால் அதை எப்​படி மன்​னிக்க முடி​யும்?​துபாயிலி​ருந்து மங்​க​ளூ​ருக்​குப் பறந்து வந்த விமா​னம் இயந்​தி​ரக் கோளாறு ஏற்​பட்டு வானத்​தில் வெடித்​துச் சிதறி இருந்​தால் அந்த விபத்தை நம்​மால் ஏற்​றுக்​கொள்ள முடி​யா​விட்​டா​லும் ஜீர​ணிக்க முடி​யும்.​ ஆனால்,​​ தவ​று​த​லா​கத் தரை​யி​றங்​கி​ய​தால் விபத்து ஏற்​பட்டு உயி​ரி​ழப்பு என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​விமான ஓட்​டி​யான கேப்​டன் குலு​சிகா,​​ சுமார் 10,200 மணி​நே​ரம் இது​வரை விமா​னத்​தில் பறந்த அனு​ப​வசாலி.​ இது​வரை 19 முறை மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக இறக்கி இருப்​ப​வர் அந்தக் கேப்​டன் குலு​சிகா என்றெல்லாம் சொல்கிறார்கள்.​ கடந்​த​வா​ரம்​கூட அதே விமான நிலையத்தில் தரை இறங்​கி​யிருக்கிறார்.​ விபத்துக்கு கார​ணம் அனு​ப​வ​மின்மை என்றோ,​​ அவ​ருக்கு இடம் புதிது என்றோ சொல்​லி​விட முடி​யாது.​ ஆனால் கண்டிப்பாக தவறு நடந்துள்ளது.

மங்களூர் விமான நிலையம் google map

விபத்து நடந்​த​போது தெளிந்த வானம் இருந்​தி​ருக்​கி​றது.​ மழை எது​வும் பெய்​யா​த​தால் விமா​னம் இறங்​கும் பாதை​யில் ஈரப்​பசை கொஞ்​ச​மும் கிடை​யாது.​ விபத்​துக்​குள்​ளான போயிங் 737 -​ 800 பத்​தி​ர​மாக இறங்​கு​வ​தற்கு மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் 8,000 அடி நீள விமான ஓடு​பாதை தாரா​ள​மா​கப் போது​மா​னது.​ பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்​தது?​

நாம் தேடியவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சாதா​ர​ண​மாக,​​ விமான ஓடு​பா​தை​யில் ஆரம்​பத்தி​லி​ருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்​குள் விமா​னம் தரை​யைத் தொட்​டால் பிரச்னை ஏற்​பட வாய்ப்​பில்லை.​ ஆனால்,​​ இந்த விமா​னம் 3,000 அடி​யில்​தான் விமான தளத்​தில் இறங்​கித் தரை​யைத் தொட்​டது என்​கி​றார்​கள்.​ அதற்கு என்ன கார​ணம் என்​பதை விமா​னத்தி​லி​ருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் கருப்​புப் பெட்டி ஆய்வு செய்​யப்​பட்​டால் மட்​டுமே விடை கிடைக்​கும்.​
அது மட்டுமல்ல உயிர் தப்பியவர்கள் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் அவர்கள் கூறிய தகவல்கள் மேலும் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன விமானம் தரையை தொடும் முன் எதிலோ மோதியிருக்கிறது அதன் பின் தவறான ஓடு பாதையில் தரையை தொட்டதன் மூலம் பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்துள்ளது அந்த நேரத்தில் விமானத்தின் கதவுகள் திறந்து இருந்திருக்கிறது அதை பயன்படுத்தித்தான் உயிர் தப்பிய பயணிகள் வெளியே குதித்துள்ளார்கள் அதன் பின் சுவரில் மோதி அதைத் தாண்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.

இந்த நிலையில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது?
முன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

பணியில் இருக்கும் நிலையிலேயே இந்திய விமானிகள் கேபினிலேயே தூங்கி விடுவது சம்பந்தமாக ஏற்கனவே விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

தூக்கத்தின் காரணமாக தரை இறங்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு மேலேயே சுற்றித்திரிந்த பல சம்பவங்களும் முன்பு நிகழ்ந்துள்ளன தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலாரத்தை ஒளிக்கச் செய்து எழுப்பிய சம்பவங்களும் முன்பு பல நிகழ்ந்துள்ளன. இது போன்ற தூக்கம் மங்களூர் விமான விபத்திலும் நிகழ்திருந்தால்? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?

மங்களூர் விமான விபத்​தின் காரணகாரி​யங்​கள் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் எந்த அளவுக்கு மோசமாகவுள்ளது என்பது பற்றி இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்​திய விமான நிலை​யங்​கள் பாது​காப்பு மற்றும் தரமானவையா? என்​ப​தே கேள்விக்குறியாக உள்ளது.

நமது விமான ஓட்​டி​கள் எந்த அள​வுக்கு அனு​ப​வ​சா​லி​கள் என்​ப​தை​யும் மறு​ப​ரி​சீ​லனை செய்ய வேண்​டிய கட்​டாயத்தில் உள்ளது அரசு.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக,​​ சர்​வ​தே​சத் தரத்​தில் இந்​தியா முன்​னேற வேண்​டும் என்​கிற முனைப்​பில்,​​ வரை​முறை இல்​லாத வளர்ச்​சியை விமா​னப் போக்​கு​வ​ரத்​தில் ஏற்​பட நமது அரசு முனைந்​தது எந்த அள​வுக்​குப் புத்​தி​சா​லித்​த​னம் என்​ப​தை​யும் சீர்​தூக்கி ஆராய வேண்​டிய நேரம் இது.​

எண்​ணிக்​கை​யைக் கூட்ட வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தரத்​தைக் குறைக்க முய​லும் பேதை​மைத்​த​னம் தமி​ழக உயர்​கல்​வித் துறைக்கு மட்​டுமே உரித்​தா​னது என்று எண்​ணி​வி​ட​லா​காது.​ விமா​னத் துறை​யை​யும் பீடித்​தி​ருக்​கும் வியாதி இது​தான்.​ தனி​யார் துறையை ஊக்​கப்​ப​டுத்​தக் கணக்​கு​வ​ழக்கு இல்​லா​மல் அனு​மதி அள்ளி வழங்​கப்​ப​டு​கி​றது.​ வெளி​நா​டு​களி​லி​ருந்து பெறும் பழைய விமா​னங்​க​ளும்,​​ குத்​த​கைக்கு எடுக்​கப்​ப​டும் விமா​னங்​க​ளும்​கூ​டத் தனி​யா​ரால் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​

விமான நிலை​யங்​க​ளும் சரி,​​ தேர்ந்த அனு​ப​வ​சா​லி​க​ளால் பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​கமே.​ சின்​னச் சின்ன நக​ரங்​க​ளில் விமான நிலை​யங்​கள் அமைப்​ப​தும்,​​ விமா​னப் போக்​கு​வ​ரத்து அதி​க​ரிக்​கப்​ப​டு​வ​தும் நல்​ல​து​தான்.​ அதே​நே​ரத்​தில்,​​ போதிய கட்​ட​மைப்பு வச​தி​க​ளும்,​​ திற​மை​யான தொழில்​நுட்​பம் தெரிந்த பணி​யா​ளர்​க​ளும் இருந்​தால்​தானே முறை​யாக அந்த விமான நிலை​யங்​கள் செயல்​பட முடி​யும்.​

விமா​னம் ஒவ்​வொரு முறை இறங்​கும்​போ​தும்,​​ சக்​க​ரங்​க​ளில் தேய்​மா​னத்​தால் விமான ஓடு​பா​தை​யில் ரப்​பர் துகள்​கள் தங்​கி​வி​டும்.​ அதை அவ்​வப்​போது அகற்​றிச் சுத்​தப்​ப​டுத்​தா​விட்​டால் அடுத்த விமா​னம் இறங்​கும்​போது,​​ சறுக்கி விபத்து ஏற்​பட ஏது​வா​கும்.​ இது​போல,​​ விமான நிலை​யத்​தில் இன்​னும் பல நுணுக்​க​மான பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளனவா?.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா? என்​பது சந்​தே​க​மாக இருக்​கி​றது.​ கடந்த இரண்​டாண்​டு​க​ளாக உயிர்ச்​சே​தம் ஏற்​ப​ட​வில்​லையே தவிர,​​ விமா​ன​தள விபத்​து​கள் பல நடந்​தி​ருப்​பது செய்​தி​யாக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான் உண்மை.​

விமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும்.​ மங்​க​ளூர் விமான விபத்து என்​பது ஓர் எச்​ச​ரிக்கை மணி,​​ அவ்​வ​ளவே.​ இதி​லி​ருந்து நாம் பாடம் படித்​தால் புத்​தி​சா​லி​கள்.​ இல்​லா​விட்​டால்?​ அப்​பா​விப் பய​ணி​களின் நிலை?? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா???