.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label இந்தியா. விமான விபத்து. பாதுகாப்பு.. Show all posts
Showing posts with label இந்தியா. விமான விபத்து. பாதுகாப்பு.. Show all posts

Monday, May 24, 2010

இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பின் தரம் மிகவும் மோசம் : நிபுணர் கருத்து

விலை மதிப்பற்ற மனித உயிர்களை பாதுகாக்க
விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்த இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமா?

இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் மிக மிக மோசமாகவுள்ளது என்று இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா கடுமையாக சாடியுள்ளார்.

மங்களூரு விமான விபத்தில் 159 பேர் பலியான துயரச் சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில், "விமானப் பாதுகாப்பு அமைப்பின் புள்ளி விவரத்தின்படி, உலக அளவில் இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் விமான விபத்து ஏற்படுகிறது.

நம்மிடம் இன்னமும் விமானப் போக்குவரத்து பாதுகாப்புக்கென பிரத்யேகமான சிறப்பு நிபுணர்கள் இல்லாதது கவலைக்குரியது.

விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகத்திடம் (Directorate General of Civil Aviation) தான் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

எல்லா நாடுகளிலும் விமானப் பாதுகாப்புக்கென தனி வாரியம் உண்டு. ஆனால், அதிக எண்ணிக்கையில் விபத்து நடக்கும் நம் நாட்டில் விமானப் பாதுகாப்புக்கென தனி அமைப்பு ஏதுமில்லை. அரசால் அமைக்கப்பட்ட பல கமிஷன்கள் பரிந்துரைத்தும் கூட இதுவரை அப்படியொரு தனி வாரியத்தை அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை.

இந்தியாவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் தரமில்லை என்பதற்கு மங்களூர் நிகழ்வு மற்றுமோர் உதாரணம். இனியாவது, அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்," என்றார் எம்.ஆர். வாடியா.