.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Saturday, February 6, 2010

முத்துப்பேட்டையை மீண்டும் கலவரமாக்கிய பா.ஜ.க.! கைக்கூலியாகும் காவல்துறை?

முத்துப்பேட்டையில் சங்பரிவார அமைப்புகளால் திட்டமிட்டு கலவரங்கள் உண்டாக்கப்படுவதும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் வருடா வருடம் வன்முறையை தூண்டி வரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி கும்பல்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை சீண்டி வருகின்றன.

கடந்த டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு நாளையொட்டி தமுமுக சார்பிலும் சமுதாய அமைப்புகளின் சார்பிலும் அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. ஆயிரக்கணக்கில் திரண்ட சமுதாய அமைப்புகளின் எழுச்சியைப் பார்த்து வன்மம் கொண்ட பா.ஜ.கவினர் வன் முறையை தூண்டும் விதமாக பேசி யதாக சொல்லி தமுமுகவினர் மீது புகார் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறை கண்டன உரை நிகழ்த்திய தமுமுக மாநில உலமா அணிச் செயலாளர் மௌலவி யூசுப். எஸ்.பி. அவர்கள் மீது வழக்குகள் போட்டது. மேலும், டிசம்பர் 12லிம் தேதி லிபரான் கமிஷன் அறிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக சொல்லி கலவர நாயகன் ஹெச்.ராஜாவை அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.கவினர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஹெச்.ராஜா தமுமுகவையும், முஸ்லிம் களையும் கேவலமாக பேசியுள்ளார். தரக்குறைவாகவும் மதமோதலை தூண்டும் வகையிலும் பேசிய ராஜா 'அடுத்த வருடம் முத்துப்பேட்டையில் டிசம்பர் 6 போராட்டம் நடத்தினால் அவர்களை அதே இடத்தில் வெட்டிப் புதைப்போம்' என்றார். ராஜாவின் அராஜகப் பேச்சை பதிவு செய்த தமுமுக வினர் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ராஜா மீது புகார் அளித்தனர்.

பா.ஜ.க வின் புகாருக்கு உடனடியாக செயல்பட்ட காவல்துறை தமுமுகவின் புகார் மனுவை கூட இழுத்தடித்து பதிவு செய்தது. ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் முத்துப்பேட்டையை சேர்ந்த முஹம்மது தாவூத் என்பவர் வியாபார விஷயமாக முத்துப்பேட்டையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவிலுள்ள பேட்டை என்ற பகுதிக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அவரை வழிமறித்த பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா என்பவன் தலைமையிலான கும்பல் தாவூதை அடித்து அவருடைய செல்போன் பணம் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அனுப்பிவிட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாவூத் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் முத்துப்பேட்டை காவல்நிலைய எஸ்.ஐ. ஆனந்த தாண்டவம், சிவா மீதெல்லாம் கேஸ் போட முடியாது. என்று மிரட்டியுள்ளார். பின்னர் தமுமுகவின் தலையீட்டின் பேரில் புகாரை பதிவு செய்த போலீஸ் இதுவரை சிவா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஆந்திரமடைந்த பேட்டை சிவா கடந்த 28-1-2010 அன்று தனது வாகனம் தாக்கப்பட்டதாகவும், தாக்கியது முஸ்லிம்கள் தான் என்றும் முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளான். பின்னர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த கூலிப்படைகள் மற்றும் சங்பரிவார அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு என் வண்டியை தாக்கிட்டானுங்க, துலுக்க நாய்களை வெட்டுடா என்று செல்போனில் ஆணையிட பேட்டையில் குடியிருக்கும் சுமார் 30 முஸ்லிம் குடும்பங்களை சூறையாட கிளம்பின வன்முறை மிருகங்கள்.

சங்பரிவார கும்பல்கள் தங்களை தாக்க வருகின்ற செய்தியை அறிந்த பேட்டை முஸ்லிம்கள் முத்துப்பேட்டையிலுள்ள சமுதாய அமைப்பினருக்கும், ஜமாத்தார்களுக்கும் தகவல் அளித்தனர். செய்தியறிந்து முத்துப்பேட்டையில் இந்து முஸ்லிம் இளைஞர்கள் திரள ஆரம்பித்தனர். ஆனால் அதே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சங்பரிவார் ரவுடிகள் பேட்டையிலிருந்த முஸ்லிம்களின் கடைகளை அரிவாள், கோடாரி, இரும்பு கம்பிகளால் உடைத்து நொறுக்கினர். ஷரீப் என்பவரது கடை நாசமாக்கப்பட்டது. மேலும் முத்துப் பேட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அரிவாளால் வெட்டினர். இச்செய்தியால் ஆவேசமடைந்த முஸ்லிம் இளைஞர்கள் பேட்டையை நோக்கி திரண்டு வர அதுவரை அமைதி காத்த போலீஸ் இரு தரப்பையும் தடியடி நடத்தி விரட்டியடித்தது. இந்நிலையில் பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் மனார் ஸ்பேர்பார்ட்ஸ் கடைக்கு பின்புறம் இருந்த கொட்டகைக்கும், பக்கத்திலிருந்த குடோன் ஒன்றுக்கும் தீ வைத்த காவிக் கும்பல் பழைய பேருந்து நிலையத்தில் இந்து சகோதரர் ஒருவருக்கு சொந்தமான காய்கறிகடையையும் தீயிட்டு கொளுத்தியது.

தீயிட்டு கொளுத்திய காவிக்கும்பல் இந்துக் கடையை முஸ்லிம்கள் எரித்து விட்டதாக வதந்தியை பரப்பியது. இதனால் கலவரம் பல இடங்களிலும் பரவ ஆரம்பிக்க அப்போது தான் இயங்கத் தொடங்கிய காவல்துறை உடனடியாக காவலர்களை கொண்டு வந்து குவித்தது.

டி.ஐ.ஜி. கரன்சின்ஹா, திருவாரூர் மாவட்ட எஸ்.பி. பிரவீன் குமார் அபிநவ் உட்பட நான்கு மாவட்ட எஸ்.பிக்கள் முத்துப்பேட்டையில் முகாமிட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி இதுவரை முஸ்லிம்கள் தரப்பில் சிராஜுத்தீன், சாஹுல்அமீது, ஷேக் தாவூத், வாஸிம் கான், அயூப்கான், சையத் அலி ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

இதில் வாஸிம் கானுக்கு பதினேழு வயது மட்டுமே ஆகிறது. ஆனால் சங்பரிவார் தரப்பில் இதுவரை 7 பேரை மட்டுமே கைது செய்த காவல்துறை மீதி நபர்களை தேடிக் கொண்டிருப்பதாக கூறுகிறது.

இது தொடர்பாக முத்துப்பேட்டை நகர காவல் ஆய்வாளர் சமரசத்திடம் பேசினோம். கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். இரு தரப்பிலும் கைதுகள் நடந்திருக்கின்றன. என்று கூறிய ஆய்வாளரிடம், பேட்டை சிவா கார் தாக்கப்பட்டது. உண்மையா? காரை தாக்கியவர்கள் யார்? அவர்களை கைது செய்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு மழுப்பலாக பதிலளித்து போனை துண்டித்து விட்டார்.

கலவரத்துக்கு காரணமான கார் தாக்குதல் சம்பவம் பற்றி பேச ஏன் காவல்துறை மறுக்கிறது?

வாகனத்தை தாக்கியதாக பொய்யான புகாரை கூறி அதன் மூலமாக திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய பா.ஜ.க மாவட்ட செயலாளர் பேட்டை சிவா மற்றும் கருப்பு(எ) முருகானந்தம் ஆகியோர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?


தொடர்ந்து காவல்துறை காவிக்கும் பலுக்கு முட்டுக் கொடுத்து வருகின்றது. இப்போக்கு முத்துப்பேட்டையை இன்னொரு கோவையாக உருவாக்கி விடக்கூடாது என்பது தான் நடுநிலையாளர்களின் எண்ணம். காவல்துறை சிந்தித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமா?

No comments: