.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, March 9, 2009

போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!

போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!

இலங்கைத் தமிழர்களின் பிரச்னை என்ன என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசி யல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத் திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்க ளுடைய வேதனையை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயி னும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களு டைய பிரச்னையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது

தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும், திரைப்படத்துறையி னரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண் டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப் படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா? மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக் கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்பு கள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்னையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை

இனி எந்த அரசியல் கட்சியும், சமுதாய இயக்கமும் இதைத் தங்க ளுடைய தனியுரிமைப் பிரச்னையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமி ழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச் னையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், ராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன் னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்

சர்வதேச அரங்கில் இப்பிரச்னையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப் படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருள்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும், உற்ற தன் னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்க ளின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்
இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிக ளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதி லும், அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக் கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்
விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத் தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக்கைப் போர் நடத்துவதும், சுவ ரொட்டி விளம்பரங்கள் செய்வதும், வழிநடைப் பயண இயக்கம் மேற் கொள்வதும், போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக்குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்னை தீர இம்மியள வும் உதவாது. சில நாள்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்னையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன் றுகிறது

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர் களும் துபை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்க ளும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனை களையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பது தான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்னை தீராது

வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சி பூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவூபூர்வமாக சர்வதேச அரங் கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற் குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர் நிறுத்தம்; சர்வதேச அளவி லான சமரசத் தீர்வு - இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்

ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நார்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர் கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகு னிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், ""போதும் நிறுத்துங்கள்'' உங்கள் அரசியலை!

No comments: