.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 28, 2010

மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?


- MH.கனி
ங்​க​ளூ​ரில் இருந்து எழு​கின்ற மரண ஓலம் ஓய்ந்​தா​லும்,​​ பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​க​ளில் தொட​ரும் துய​ரம்​தீர ஆண்​டு​கள் பல​வா​கும்.​ எண்​ணற்ற ஆசை​க​ளை​யும்,​​ கன​வு​க​ளை​யும் சுமந்து கொண்டு பறந்த 158 பேர் கண் இமைக்​கும் நேரத்​தில் உயிரிழந்த பரிதாபம் உல​கையே உலுக்​கு​கி​றது.​ எட்​டுப் பேரா​வது உயிர்​பி​ழைத்​த​னரே என்று சமா​தா​னப்​பட்​டுக் கொள்​ள​லாம்,​​ அவ்​வ​ளவே.​

விபத்து என்​பது தவிர்க்க இய​லாத ஒன்று என்​பது தெரிந்​த​து​தான்.​ விமா​னத்​தில் பறந்​த​தால் மட்​டுமே விபத்து ஏற்​ப​டும் என்​றும்,​​ ரயி​லில் பய​ணித்​த​தால் விபத்து ஏற்​பட்​டு​வி​டும் என்​றும் சொல்​லி​விட இய​லாது.​ நடந்து போகும்​போ​து​கூட விபத்து நேரி​ட​லாம்.​ சாலை​யில் செல்​லும் பேருந்தோ,​​ லாரியோ வீட்​டில் மோதிய சம்​ப​வங்​கள் ஏரா​ளம் உண்டு.​

ஆனால்,​​ விபத்து என்​பது மனி​த​னின் கவ​னக்​கு​றை​வாலோ அல்​லது தவ​றான நடை​மு​றை​யாலோ ஏற்​பட்​டி​ருந்​தால் அதை எப்​படி மன்​னிக்க முடி​யும்?​துபாயிலி​ருந்து மங்​க​ளூ​ருக்​குப் பறந்து வந்த விமா​னம் இயந்​தி​ரக் கோளாறு ஏற்​பட்டு வானத்​தில் வெடித்​துச் சிதறி இருந்​தால் அந்த விபத்தை நம்​மால் ஏற்​றுக்​கொள்ள முடி​யா​விட்​டா​லும் ஜீர​ணிக்க முடி​யும்.​ ஆனால்,​​ தவ​று​த​லா​கத் தரை​யி​றங்​கி​ய​தால் விபத்து ஏற்​பட்டு உயி​ரி​ழப்பு என்​பதை ஏற்​றுக்​கொள்ள முடி​ய​வில்லை.​விமான ஓட்​டி​யான கேப்​டன் குலு​சிகா,​​ சுமார் 10,200 மணி​நே​ரம் இது​வரை விமா​னத்​தில் பறந்த அனு​ப​வசாலி.​ இது​வரை 19 முறை மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் விமா​னத்தை வெற்​றி​க​ர​மாக இறக்கி இருப்​ப​வர் அந்தக் கேப்​டன் குலு​சிகா என்றெல்லாம் சொல்கிறார்கள்.​ கடந்​த​வா​ரம்​கூட அதே விமான நிலையத்தில் தரை இறங்​கி​யிருக்கிறார்.​ விபத்துக்கு கார​ணம் அனு​ப​வ​மின்மை என்றோ,​​ அவ​ருக்கு இடம் புதிது என்றோ சொல்​லி​விட முடி​யாது.​ ஆனால் கண்டிப்பாக தவறு நடந்துள்ளது.

மங்களூர் விமான நிலையம் google map

விபத்து நடந்​த​போது தெளிந்த வானம் இருந்​தி​ருக்​கி​றது.​ மழை எது​வும் பெய்​யா​த​தால் விமா​னம் இறங்​கும் பாதை​யில் ஈரப்​பசை கொஞ்​ச​மும் கிடை​யாது.​ விபத்​துக்​குள்​ளான போயிங் 737 -​ 800 பத்​தி​ர​மாக இறங்​கு​வ​தற்கு மங்​க​ளூர் விமான நிலை​யத்​தில் 8,000 அடி நீள விமான ஓடு​பாதை தாரா​ள​மா​கப் போது​மா​னது.​ பிறகு ஏன் இந்த விபத்து நேர்ந்​தது?​

நாம் தேடியவரை நமக்குக் கிடைத்த தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கிறது. சாதா​ர​ண​மாக,​​ விமான ஓடு​பா​தை​யில் ஆரம்​பத்தி​லி​ருந்து சுமார் 1,400 அடி முதல் 1,800 அடிக்​குள் விமா​னம் தரை​யைத் தொட்​டால் பிரச்னை ஏற்​பட வாய்ப்​பில்லை.​ ஆனால்,​​ இந்த விமா​னம் 3,000 அடி​யில்​தான் விமான தளத்​தில் இறங்​கித் தரை​யைத் தொட்​டது என்​கி​றார்​கள்.​ அதற்கு என்ன கார​ணம் என்​பதை விமா​னத்தி​லி​ருந்து கிடைக்கப் பெற்றிருக்கும் கருப்​புப் பெட்டி ஆய்வு செய்​யப்​பட்​டால் மட்​டுமே விடை கிடைக்​கும்.​
அது மட்டுமல்ல உயிர் தப்பியவர்கள் தொலைக்காட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் அவர்கள் கூறிய தகவல்கள் மேலும் நம்மை அதிர்ச்சி அடையச் செய்கின்றன விமானம் தரையை தொடும் முன் எதிலோ மோதியிருக்கிறது அதன் பின் தவறான ஓடு பாதையில் தரையை தொட்டதன் மூலம் பயங்கர சப்தத்துடன் டயர் வெடித்துள்ளது அந்த நேரத்தில் விமானத்தின் கதவுகள் திறந்து இருந்திருக்கிறது அதை பயன்படுத்தித்தான் உயிர் தப்பிய பயணிகள் வெளியே குதித்துள்ளார்கள் அதன் பின் சுவரில் மோதி அதைத் தாண்டி பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்துள்ளது.

இந்த நிலையில் தவறு எங்கு நிகழ்ந்துள்ளது?
முன்பு நடந்த சில சம்பவங்கள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

பணியில் இருக்கும் நிலையிலேயே இந்திய விமானிகள் கேபினிலேயே தூங்கி விடுவது சம்பந்தமாக ஏற்கனவே விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

தூக்கத்தின் காரணமாக தரை இறங்க வேண்டிய இடத்தை விட்டு விட்டு மேலேயே சுற்றித்திரிந்த பல சம்பவங்களும் முன்பு நிகழ்ந்துள்ளன தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலாரத்தை ஒளிக்கச் செய்து எழுப்பிய சம்பவங்களும் முன்பு பல நிகழ்ந்துள்ளன. இது போன்ற தூக்கம் மங்களூர் விமான விபத்திலும் நிகழ்திருந்தால்? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா?

மங்களூர் விமான விபத்​தின் காரணகாரி​யங்​கள் ஒரு​பு​றம் இருக்​கட்​டும்.​ இந்தியாவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரம் எந்த அளவுக்கு மோசமாகவுள்ளது என்பது பற்றி இந்திய விமானிகள் கூட்டமைப்பின் (Federation of Indian Pilots) நிறுவனத் தலைவர் கேப்டன் எம்.ஆர். வாடியா சமீபத்தில் கடுமையாகச் சாடியிருந்தார். இந்​திய விமான நிலை​யங்​கள் பாது​காப்பு மற்றும் தரமானவையா? என்​ப​தே கேள்விக்குறியாக உள்ளது.

நமது விமான ஓட்​டி​கள் எந்த அள​வுக்கு அனு​ப​வ​சா​லி​கள் என்​ப​தை​யும் மறு​ப​ரி​சீ​லனை செய்ய வேண்​டிய கட்​டாயத்தில் உள்ளது அரசு.​ கடந்த 20 ஆண்​டு​க​ளாக,​​ சர்​வ​தே​சத் தரத்​தில் இந்​தியா முன்​னேற வேண்​டும் என்​கிற முனைப்​பில்,​​ வரை​முறை இல்​லாத வளர்ச்​சியை விமா​னப் போக்​கு​வ​ரத்​தில் ஏற்​பட நமது அரசு முனைந்​தது எந்த அள​வுக்​குப் புத்​தி​சா​லித்​த​னம் என்​ப​தை​யும் சீர்​தூக்கி ஆராய வேண்​டிய நேரம் இது.​

எண்​ணிக்​கை​யைக் கூட்ட வேண்​டும் என்​ப​தற்​கா​கத் தரத்​தைக் குறைக்க முய​லும் பேதை​மைத்​த​னம் தமி​ழக உயர்​கல்​வித் துறைக்கு மட்​டுமே உரித்​தா​னது என்று எண்​ணி​வி​ட​லா​காது.​ விமா​னத் துறை​யை​யும் பீடித்​தி​ருக்​கும் வியாதி இது​தான்.​ தனி​யார் துறையை ஊக்​கப்​ப​டுத்​தக் கணக்​கு​வ​ழக்கு இல்​லா​மல் அனு​மதி அள்ளி வழங்​கப்​ப​டு​கி​றது.​ வெளி​நா​டு​களி​லி​ருந்து பெறும் பழைய விமா​னங்​க​ளும்,​​ குத்​த​கைக்கு எடுக்​கப்​ப​டும் விமா​னங்​க​ளும்​கூ​டத் தனி​யா​ரால் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​

விமான நிலை​யங்​க​ளும் சரி,​​ தேர்ந்த அனு​ப​வ​சா​லி​க​ளால் பரா​ம​ரிக்​கப்​ப​டு​கின்​ற​னவா என்​பது சந்​தே​கமே.​ சின்​னச் சின்ன நக​ரங்​க​ளில் விமான நிலை​யங்​கள் அமைப்​ப​தும்,​​ விமா​னப் போக்​கு​வ​ரத்து அதி​க​ரிக்​கப்​ப​டு​வ​தும் நல்​ல​து​தான்.​ அதே​நே​ரத்​தில்,​​ போதிய கட்​ட​மைப்பு வச​தி​க​ளும்,​​ திற​மை​யான தொழில்​நுட்​பம் தெரிந்த பணி​யா​ளர்​க​ளும் இருந்​தால்​தானே முறை​யாக அந்த விமான நிலை​யங்​கள் செயல்​பட முடி​யும்.​

விமா​னம் ஒவ்​வொரு முறை இறங்​கும்​போ​தும்,​​ சக்​க​ரங்​க​ளில் தேய்​மா​னத்​தால் விமான ஓடு​பா​தை​யில் ரப்​பர் துகள்​கள் தங்​கி​வி​டும்.​ அதை அவ்​வப்​போது அகற்​றிச் சுத்​தப்​ப​டுத்​தா​விட்​டால் அடுத்த விமா​னம் இறங்​கும்​போது,​​ சறுக்கி விபத்து ஏற்​பட ஏது​வா​கும்.​ இது​போல,​​ விமான நிலை​யத்​தில் இன்​னும் பல நுணுக்​க​மான பாது​காப்பு அம்​சங்​கள் உள்​ளனவா?.​ அவை முறை​யா​கக் கையா​ளப்​ப​டு​கின்​ற​னவா? என்​பது சந்​தே​க​மாக இருக்​கி​றது.​ கடந்த இரண்​டாண்​டு​க​ளாக உயிர்ச்​சே​தம் ஏற்​ப​ட​வில்​லையே தவிர,​​ விமா​ன​தள விபத்​து​கள் பல நடந்​தி​ருப்​பது செய்​தி​யாக்​கப்​ப​ட​வில்லை என்​ப​து​தான் உண்மை.​

விமான நிலை​யங்​க​ளைப் புதுப்​பிப்​ப​தற்​கும்,​​ புதிய விமான நிலை​யங்​களை அமைப்​ப​தற்​கும் பல்​லா​யி​ரம் கோடி ரூபாய்​களை வாரி இறைக்​கும் அரசு,​​ திற​மை​யான விமான ஓட்​டி​க​ளை​யும்,​​ விமான நிலை​யத் தொழில்​நுட்​பப் பணி​யா​ளர்​க​ளை​யும் உரு​வாக்​கு​வ​தில் முத​லில் ​ அக்​கறை காட்ட வேண்​டும்.​ மங்​க​ளூர் விமான விபத்து என்​பது ஓர் எச்​ச​ரிக்கை மணி,​​ அவ்​வ​ளவே.​ இதி​லி​ருந்து நாம் பாடம் படித்​தால் புத்​தி​சா​லி​கள்.​ இல்​லா​விட்​டால்?​ அப்​பா​விப் பய​ணி​களின் நிலை?? மனித உயிர்கள் அத்தனை மலிவானதா???

No comments: