.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Friday, May 15, 2009

மத்திய சென்னை வன்முறை: காட்டிக் கொடுத்த சமுதாய துரோகிகள்.

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் கள்ள ஓட்டுப் போட வந்தவர்களை தடுத்த மனிதநேய மக்கள் கட்சியினர் 6 பேர் மீது திமுக குண்டர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.


சரியாக குறிபார்த்து தாக்குதல் நடந்ததின் பிண்ணனியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில நிர்வாகிகளின் வழிகாட்டுதலில் இந்த கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற ஐஸ் ஹவுஸ் பகுதியின் பூத் ஏஜன்டாக த.த.ஜ வின் மாநில நிர்வாகி ஒருவர் இருந்துள்ளார். கள்ள ஓட்டுக்கள் அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் செ.ஹைதர் அலி ம.ம.க தொண்டர்களுடன் நிகழ்விடத்திற்கு வந்துள்ளார்.

எங்கு அடித்தால் கள்ள ஓட்டை சரியாக போட்டு முடிக்க முடியும் என்று சரியாக திட்டமிட்டு, வந்த வாகனத்தையும் வாகனத்தில் இருந்த மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களையும் அடையாளம் காட்டி தாக்குதல் நடத்த காட்டிக் கொடுத்துள்ளார் த.த.ஜ வின் மாநில நிர்வாகியான அந்த பூத் ஏ‍ஜென்ட்.

இயக்க வெறியின் காரணமாக ஒரு இஸ்லாமிய சகோதரனை காட்டிக் கொடுத்து மாற்று மதத்தவர்கள் கையினால் கொலைவெறி தாக்குதல் நடத்தி ரத்தம் சிந்த உடந்தையாக இருந்த த.த.ஜவினர் நாளைக்கு குஜராத்தை போல் ஒரு சம்பவம் தமிழ்நாட்டிலும் நடக்க இயக்க வெறியின் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகளையே இஸ்லாமிய விரோதிகளு்ககு காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

எனதருமை முஸ்லிம் சமுதாயமே! தனி மனித கருத்து வேருபாடின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை மாற்று மதத்தவர்களிடம் காட்டிக் கொடுத்து கருவறுக்கத் துடிக்கும் த.த.ஜவினரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கி‍றேன் என்று சொல்வார்கள். ஒன்றாக பழகி, ஒன்றாக இருந்த நண்பர்களுத்தான் தெரியும் அவரின் பலமும் பலகீனமும் அதே நண்பர் எதிரணியில் இருந்தால் இவரின் ரகசிய செயல் திட்டங்கள் அனைத்தும் எதிரிக்கு இலகுவாக கிடைத்து விடும். வெல்வது எதிரி! கொல்வது ? நண்பனையா? இங்கே முஸ்லிம் சமுதாயம் சமுதாய துரோகிகளால் காட்டிக் கொடுத்து ரத்தம் சிந்தப்படுகிறது.

இவர்கள் நேர்வழி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.

No comments: