.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, November 3, 2008

பயங்கரவாதத்தை தூண்டும் பால்தாக்கரேவை கைது செய்! தமுமுக கோரிக்கை!!

பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால்தாக்கரேவை கைது செய்க!
தமுமுக கோரிக்கை!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை
நாட்டை அச்சுறுத்தும் தீவிரவாதத்திற்கு ஆதரவாகவும் பயங்கரவாதத்தின் ஊது குழலாகவும் சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் தலையங்கமாக தீட்டியுள்ள கருத்துக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மாலேகானில் அப்பாவி மக்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தற்போது தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சங் பரிவார் பயங்கரவாதிகள் பெண் சாமியார் பிரக்யாசிங் தாகூர், முன்னாள் ராணுவ அதிகாரிகள் ரமேஷ் உபாத்யாய், சரத், குல்கர்னி மற்றும் தற்போது ராணுவத்தில் பணியிலிருக்கும் ஒரு உயர் அதிகாரி உள்ளிட்ட பயங்கரவாதிகளின் குற்ற செயல்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தட்டிக் கொடுக்கும் விதமாக பால்தாக்கரே தனது விஷமக் கருத்தை விதைத்திருக்கிறார்.

பெண் சாமியார் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் ஹிந்து இயக்கங்கள் பெண்சாமியார் பிரக்யாசிங்கை கைவிட்டு விட்டன என்று எழுதியதோடு கூறுவதோடு அந்த பயங்கரவாதிகள் செய்யும் செயலை நினைத்து பெருமைப்படுவதாகவும் பதிவு செய்திருக்கிறார். அப்பாவிகள் கொலை செய்யப்படுவதும், வெடிகுண்டுகள் செய்ய பயிற்சி அளிப்பதற்கு பெருமைப் படுவதோடு அதை பகிரங்கமாக அறிவித்து இந்திய அரசியல் சாசன சட்டத்தின் மீதும் அமைதி விரும்பும் அனைத்து இந்திய மக்களின் மீதும் போர்ப் பிரகடனம் செய்திருக்கிறார் பால்தாக்கரே.

தீவிரவாதத் தடுப்புப் படை மற்றும் மகாராஷ்ட்ர மாநில அரசுடன் மட்டுமல்ல மத்திய அரசும் தலையிட்டு இவ்விஷயத்தில் தேசத்திற்கு விரோதமாக, பிரச்சாரம் செய்யும் பால்தாக்கரேயை, பயங்கரவாதத்திற்கு பால் வார்க்கும் பால் தாக்கரேயை உடனடியாகக் கைது செய்து பயங்கரவாதத்திற்கு உடந்தையான சக்திகளை ஒடுக்க வேண்டும்.

No comments: