.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, November 2, 2008

பதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்!

பதறச் செய்யும் ஒரு விஷ கலாச்சாரம்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
டேட்டியோ!'. ஐ.டி. வட்டாரங்களில் அஜால்குஜாலாக ஒலிக்கும் லேட்டஸ்ட் `மந்திரச் சொல்' இதுதான். இந்த வார்த்தையைக் கேட்டாலே மகுடி கேட்ட நாகம் போல மயங்கிப்போய் விடுகிறார்கள் ஐ.டி. கம்பெனி இளசுகள்.

அது என்ன டேட்டியோ? `டேட்டிங் வீடியோ' என்பதன் சுருக்கம்தான் இந்த டேட்டியோ. பெங்களூருவில் சக்கைப் போடு போட்டுவந்த இந்த டேட்டியோ, இப்போது கேட்டோ, கேட்காமலோ சென்னையிலும் காலூன்றத் தொடங்கி விட்டது.

மூன்று வாரங்களுக்கு முன் சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற இளைஞர் `டேட்டிங்' மோசடியில் முப்பத்தைந்தாயிரம் ரூபாயை இழந்து ஏமாந்து விட்டதாகக் கூறி கமிஷனர் சேகரிடம் புகார் கொடுத்திருந்தார். எஸ்.எம்.எஸ். மூலம் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து `டேட்டிங் கிளப்'பில் அவர்களை உறுப்பினராக இணையக் கோரி, இளம்பெண்களின் ஆபாச ஆல்பத்தைக் காட்டி ஆயிரக்கணக்கில் பணம் கறப்பதுதான் டேட்டிங் மோசடி.
இந்த ரக மோசடி குறித்து ஏற்கெனவே நாம் `குமுதம் ரிப்போர்ட்டரில்' செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த டேட்டிங் மோசடி எல்லாம் சும்மா பிஸாத்து என்பதுபோல அதைவிட பரபரப்பாக அவதாரம் எடுத்திருக்கிறது டேட்டியோ அல்லது டேட்டிங் வீடியோ! இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் இறக்குமதி செய்யப்பட்டு விபரீதத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது இது.

``கொஞ்சம் விவரமாகத்தான் சொல்லுங்களேன்'' என்று நமக்குத் தெரிந்த ஐ.டி. நண்பர்களின் வாயைக் கிளறினோம்.

நீண்ட யோசனை மற்றும் தயக்கத்துக்குப் பின் ஒருவழியாக அவர்கள், டேட்டிங் வீடியோ பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவிழ்த்துக் கொட்டினார்கள்.``டேட்டிங் வீடியோவின் சங்கேதப் பெயர்தான் `டேட்டியோ'. புதிதாகக் கேட்பவர்கள் இதை ஏதோ ஜப்பானிய மொழியில் உள்ள ஒரு டெக்னிக்கல் வார்த்தை என்றுதான் நினைப்பார்கள். ஆனால் டேட்டிங் என்ற வார்த்தையின் முதல் பாகத்தையும் வீடியோவின் பின்பாதியையும் சேர்த்து உருவாக்கப்பட்ட கூட்டுக்கலவை வார்த்தை இது. இந்த ரகசியம் ஐ.டி. துறையிலுள்ள எங்களைப் போன்ற ஒரு சிலருக்குத்தான் தெரியும்.

இந்தியாவில் டேட்டியோ ஆரம்பமான இடம் பெங்களூரு. யார் யாரோ நடித்த போர்னோகிராபி படங்களை எத்தனை நாட்களுக்குத்தான் நாம் பார்ப்பது? என்ற சலிப்பில் உருவானதுதான் இந்த டேட்டியோ முறை. வேறு ஒன்றுமில்லை. ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் அழகிய இளம் பெண்களும், இளைஞர்களும் வாரஇறுதியில் ஓர் ஆடம்பரமான இருப்பிடத்தில் ஒன்று கூடுவார்கள். உற்சாக பானத்தை உள்ளே இறக்கிக் கொள்வார்கள். அதன்பின் ஆடைகளையும் லீலைகள் தொடங்கும். அதன்பிறகு யார் யாருடன் என்ற வரைமுறை எதுவும் இல்லாமல் `உறவுகள்' உற்சாகமாக அரங்கேறும். உச்சகட்ட போதையில் ஐ.டி. இளசுகள் அடிக்கும் அந்த நிர்வாண லூட்டிகள் ஒருபுறம் வீடியோவில் படமாகும். அதன் பெயர்தான் டேட்டியோ. சுமார் ஒருமணிநேரம் ஓடும் வண்ணம் டேட்டியோவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சிகளைப் பார்த்தால் நீங்கள் மிரண்டு போய்விடுவீர்கள்.

மிதமிஞ்சிய பணவசதியுடன் இருக்கும் இளம் பெண்களும், இளைஞர்களும் த்ரில்லுக்காகவும், சுகத்துக்காகவும், ரிலாக்ஸுக்காகவும் தங்களுக்கு மிக நெருக்கமான, தங்களது ஐ.டி. துறையைச் சேர்ந்த பாய்ஃபிரெண்டுகளுடன் இப்படி டேட்டியோவில் இடம் பெறச் சம்மதிக்கின்றனர்.இந்த டேட்டியோ சி.டி.யை கனவில்கூட வெளியாட்கள் யாரும் பார்த்துவிட முடியாது. மிகமிக நம்பிக்கையான, இதை வெளியில் சொல்லாத, இதை வைத்து பிளாக்மெயில், சீட்டிங் செய்யாத நண்பர்கள் வட்டாரத்துக்குள் மட்டும்தான் இந்த டேட்டியோ சி.டி. சுற்றிச்சுழலும். தனிச்சுற்றுக்கு மட்டுமே விடப்படும் இந்த டேட்டியோவின் சிறு கிளிப்பிங்ஸ் கூட வெளியே வராது. காரணம் அதிலுள்ள ரிஸ்க்தான்.

`இந்த சி.டி.யைக் காரணமாக வைத்து அந்த டேட்டியோவில் இடம்பெற்றுள்ள இளைஞர்களிடம் சிலர் மிரட்டி பணம் கறக்கலாம். அல்லது அதில் இடம்பெற்ற இளம்பெண்களை மிரட்டி தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தலாம்' என்பதால்தான் இப்படியொரு கட்டுப்பாடு. எனவே, டேட்டியோ சி.டி., ஐ.டி. துறையிலுள்ள குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வெளியே வராது. நாங்களே ஒரே ஒருமுறைதான் அந்த டேட்டியோ சி.டி.யை எங்கள் நண்பர் ஒருவர் மூலம் வேறொரு இடத்தில் பார்த்தோம். நாங்கள் பணம் தருவதாகக் கூறியும் அதன் காப்பியை எங்களுக்கு அவர் தர மறுத்து விட்டார்'' என்றவர்கள், சென்னையில் அந்த டேட்டியோ எப்படியெல்லாம் வலம் வருகிறது என்ற தகவலையும் கூறினார்கள்.

``சென்னையில் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் இளைஞர்களும், இளம்பெண்களும் எங்கெல்லாம் ஒன்றாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் நிச்சயமாக இந்த டேட்டியோ சி.டி. இருக்கும். வார விடுமுறை நாட்களில் இவர்கள் ஹாயாக இதைப் போட்டுப் பார்த்து, ரசித்து கமெண்ட் அடிப்பார்கள். சென்னை ஐ.டி. துறையினர் இடையே ஏற்கெனவே போதை, செக்ஸ் உறவு போன்றவை ரொம்பவும் இயல்பான ஒன்றாக மாறி விட்டன. ஆனால் நல்லகாலம், சென்னையில் இன்னும் டேட்டியோ கலாசாரம் அதிகளவில் பரவவில்லை.

தற்போது பெங்களூருவில் இருந்து இறக்குமதியாகும் டேட்டியோவை ஆர்வமாகப் பார்க்கும் சென்னை ஐ.டி. இளைஞர்களும், இளைஞிகளும், அதிலுள்ள த்ரில்லுக்காகவும், சவாலுக்காகவும் நாமும் இதை ட்ரை பண்ணிப் பார்த்தால் என்ன என்ற மனநிலைக்கு வந்துவிட வாய்ப்புள்ளது. டேட்டிங் சென்று உச்சகட்ட உற்சாகக் காட்சிகளை அவர்களும் வீடியோ படமெடுக்க வாய்ப்புள்ளது'' என்ற அந்த இளைஞர்கள், கூடுதலாக ஒரு தகவலையும் சொன்னார்கள்.

``நாங்கள், அதாவது ஐ.டி. துறையினர் மட்டுமே தெரிந்து வைத்திருந்த இந்த டேட்டியோ கலாசாரம் இப்போது வெளியாட்களுக்கும் தெரிந்து, அவர்களும் இதுபோன்ற சி.டி.க்களை மோப்பம் பிடித்துத் தேட ஆரம்பித்து விட்டார்கள். இதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த `சக்கரக்கட்டி' திரைப்படம்.

அதில், பிளேபாய் கேரக்டரில் வரும் சாந்தனுவும், அவரது நண்பர்களும் வீடியோ கேமராக்களை ரகசியமாகப் பொருத்தி, எதிர்வீட்டு இளம்பெண்களின் நடவடிக்கைகளைப் படம்பிடித்து `லைவ்' ஆக அதை டி.வி.யில் ரசிப்பார்கள். ஐ.டி.துறையில் வேலை பார்க்கும் நவீன இைளஞர்கள் இதைப்போல சி.டி. பதிவுகளைக் கண்டிப்பாக வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்தில்தான் வெளியாட்கள் இப்போது இதற்கான வேட்டைகளைத் தொடங்கி இருக்கிறார்கள்.

`சக்கரக்கட்டி' படத்தில் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் படமெடுப்பார்கள். டேட்டியோவில் அப்படியெல்லாம் கிடையாது. டேட்டிங் செல்லப் போகும் பெண்களுக்கு முன்கூட்டியே அறிவித்து, அவர்களின் முழுசம்மதத்தோடுதான் டேட்டியோ எடுக்கப்படும். தவிர, அந்த ஆபாசப் படங்கள் நண்பர்கள் வட்டாரத்தைத் தாண்டி எந்தக் காரணம் கொண்டும் வெளியே வராது என்ற உத்தரவாதத்தால்தான் பெண்கள் அதில் பங்கேற்கச் சம்மதிக்கிறார்கள். இதற்காக ஒரு குழுவாக `சகல' ஏற்பாடுகளுடன் இவர்கள் புறப்பட்டுப் போகிறார்கள். பெங்களூருவில் மலிந்து போய்விட்ட இந்தக் கலாசாரம், தற்போது சென்னையிலும் பரவி வருகிறது.

ஐ.டி.காரர்கள் பலர் சிறையில் அடைபட்ட உணர்வுடன் ஏகப்பட்ட மனப்புழுக்கத்துடன் தவிக்கிறார்கள். இவர்களை இது போன்ற விஷயங்கள் காந்தம் போல கவர்ந்திழுக்கின்றன. டேட்டியோ பிரபலமாக இதுவும் ஒரு காரணம்'' என்றார்கள் நம்மிடம் பேசிய அந்த ஐ.டி. நண்பர்கள்.`அந்த டேட்டியோ காட்சியை நாமும் பார்க்க முடியுமா?' என்று நைஸாகக் கேட்டோம் (ஆசை தோசை அப்பளம் வடை).
``ஸாரி சார்! (அடப்பாவி!) அதற்கு சான்ஸே இல்லை. எங்களுடைய நண்பர்கள் வட்டத்தில் மொத்தம் ஏழு பேர் இருக்கிறோம். அதில் இரண்டு பேருக்கு மட்டும்தான் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. அதுவும் சும்மா இல்லை. ஏகப்பட்ட முயற்சிகள் செய்து, சோர்ந்து சுண்ணாம்பான பிறகுதான் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அந்த பாக்கியம் கிடைக்காத மற்ற ஐந்து நண்பர்களும் அந்த டேட்டியோவுக்காக தலா பத்தாயிரம் ரூபாய் வீதம் ஐம்பதாயிரம் ரூபாய் தரக்கூடத் தயாராக இருந்தார்கள். ஆனால், தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும், அந்த டேட்டியோவைப் பார்க்க முடியவில்லை. அந்தக் கடுப்பில்தான் இவ்வளவு விஷயங்களையும் உங்களிடம் போட்டு உடைக்கிறோம்'' என்றனர் அவர்கள்.`சரி! டேட்டியோவைப் பார்த்ததாகச் சொல்கிறீர்களே? அதில் அப்படி என்னதான் பார்த்தீர்கள் என்றாவது சொல்ல முடியுமா?' என்று கேட்டோம்.

``கண்டிப்பாகச் சொல்கிறோம். மிதமான வெளிச்சம். பெரிய அறைக்குள் ஆறு இளம்ஜோடிகள் உட்கார்ந்து உற்சாகமாக அரட்டை அடித்தபடி உயர்ரக மதுவகைகளைக் குடிக்கிறார்கள். ஆண்களுடன் பெண்களும் சிகரெட் பிடிக்கிறார்கள். அதன்பின் போதை தலைக்கேற அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. அதன்பின் அத்தனை பேரும் முழுக்க முழுக்க நிர்வாணமாகக் கூத்தடிக்கிறார்கள். அதில் மூன்று ஜோடிகளின் முகங்கள் மட்டும் ஆரம்பத்திலிருந்தே மறைக்கப்பட்டுத் தெரிகிறது. ஆனால் மறைக்கப்பட வேண்டிய பாகங்கள் எல்லாம் நிர்வாணமாக இருக்கிறது.

கேமிராவை ஒரே இடத்தில் பொருத்தி, ஒரே கோணத்தில் படமெடுத்திருக்கிறார்கள். படம் முழுக்க ஓரளவு டாப் ஆங்கிளில் ஒரே மாதிரியாகத்தான் தெரிகிறது. டைட்குளோசப் மாதிரியான ஷாட் எதுவும் அதில் இல்லை. ஆனால் படம் மிகமிகத் தெளிவாக கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கிறது. அந்த அளவுக்கு விலையுயர்ந்த டிஜிட்டல் கேமிராவைக் கொண்டு அந்தக் கூத்துகளை அவர்கள் படம் பிடித்திருக்கிறார்கள். படம் எடுத்து முடித்தபின் அதை கம்ப்யூட்டரில் போட்டு எடிட் செய்து முகங்களை மறைத்து ஒரு மணிநேரம் ஓடக்கூடிய டேட்டியோவாக அதை மாற்றி உலவ விட்டிருக்கிறார்கள்'' என்று மிகத் தெளிவாக தாங்கள் பார்த்த ரகசியத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள் அவர்கள்.

மிதமிஞ்சிய பணம், அது தரும் தைரியம், த்ரில், சவால் போன்ற காரணங்களுக்காக ஐ.டி. துறையில் உள்ள குறிப்பிட்ட ஒரு சிலர் ஒரு விஷக் கலாசாரத்தை உருவாக்குவதையும், அது சென்னையில் பரவி இங்குள்ள இளைஞர், இளைஞிகளைக் கெடுப்பதையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டியது போலீஸாரின் கடமை மட்டுமல்ல; அனைவரின் கடமையும்கூட.

இரா. பாலஜோதி நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்

No comments: