.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, November 2, 2008

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...


- பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

http://tmmk.in/news/999603.htm

அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடா தவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.

இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:

“துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.

இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்பு களும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹிட்லரி னால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னி கரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால் கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளி வாக வெளிப்படுத்துகின்றது.

“மேலோட்டமாகப் பார்க்கும் ஒரு வருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக் காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள். அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்ல வனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர் கள் தோற்றம் அளிக்கிறார்கள். அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?

நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற் கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்து வத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்.


மதமாற்றம் பற்றி...

தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத் தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா வில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டு மெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

“இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல. வறுமை, எழுத் தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய் வது நமது கடமையாகும்’’.

சாதியத்தை போற்றும் கோல்வால்கர்

இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக் களில் இந்துத்துவத்தின் பிதாம கன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள் ளார். அவர் எழுதுகிறார்:

பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள் ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமை யையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.

திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத் தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல் வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது. இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும். இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத் தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்பு ணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும். ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்து வம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்ட மைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்’ என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப் படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவ ருக்கு உறு துணையாக இருக்கிறது. பிர தேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின் றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன. இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படு பவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக் கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர் களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சார கர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தின ருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப் படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள். தனது இந்துத்துவ பாசிச குறிக் கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத் தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி. வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன. அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன் றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார் கள். ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த் தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணி யாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சு களுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந் துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக் களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன. இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற் காகத் தனது ஆட்களை அனுப்பிவைக் கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற் றொரு கோர முகமாகும். பள்ளிவாசல் கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்பு’ என்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப் பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)


2. ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)


3. பாரதீய கிஸான் சங் (விவசாயி கள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)


4. பாரதீய மஸ்தூர் சங் (தொழி லாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)


5. ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)


6. மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)


7. விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)


8. அதியபாக் பரிஷத் (உறுப்பினர் கள் 18 லட்சம்)


9. விவேகானந் கேந்திர் (உறுப் பினர்கள் 18 லட்சம்)


10 பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)


11. தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)


12. ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)


13. அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)


14. ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)


15. சிக்கா பாரதி (21 லட்சம்)


16. விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)


17. இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)


18. சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)


19. சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)


20. வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)


21. வனவாசி கல்யாண் ஆசிரம்22. பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)


23. விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)


24. சங்கல்ப்


25. சன்ஸ்கார பாரதி (கலைஞர் களுக்கான அமைப்பு)


26. சாஹ்கார பாரதி (கூட்டுறவுக் கான அமைப்பு)


27. ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)


28. வித் சலஹாக்கர் பரிஷத் (கணக் காளர்களுக்கான அமைப்பு)


29. சேவா பாரதி


30 பாரதீய விசார் கேந்திர்


சுருக்கமாகச் சொல்ல வேண்டு மெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகை யில் அவை செயல்பட்டு வருகின்றன.

No comments: