.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
Showing posts with label தமுமுக.. Show all posts
Showing posts with label தமுமுக.. Show all posts

Monday, April 16, 2012

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!


அடிமைத்தளையை வேரோடும் வேரடி மண்னோடும் 1433 ஆண்டுகளுக்கு முன்பே தகர்ந்தெரிந்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். அந்த இஸ்லாம் முழுமையடையப்பட்டு உலகமுழுதும் பரவ காரணமான அரபுமண்னில் அடிமைத்தனத்தின் வாடை இன்னும் வீசுவது மனித ஆர்வளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சவாலாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைத்தரணியிலிருந்து தனது 20வது வயதில் 400 ரியால் சம்பளத்திற்கு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு வந்துள்ள சகோதரி மும்தாஜ் பேகம் என்பவர், அவர் வந்து 10 மாதங்கள் மட்டும் சம்பளம் பெற்றுள்ளார். அதன் பின் சம்பளமும் இல்லை, அவரை ஊருக்கும் அனுப்பவில்லை. 20 வருடங்களாக சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில் அவரது தந்தை சாலிஹா சகாப் தாயார் சாகிரா பீவி ஆகியோர் மரணமடைந்த செய்தி கிடைத்தும் அந்த ஸ்பான்சர் அந்த சகோதரியை தனது நாட்டிற்கு அனுப்பவில்லை. சகோ மும்தாஜ் பல முறை வீட்டை விட்டு ஓடி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தும் பலன் இல்லை. இதோ அனுப்பி விடுகிறேன் என்று காவல் நிலையத்திலிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவர். இப்படியே 20 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வந்த அந்த சகோதரியைப் பற்றிய தகவல் தமுமுகவோடு சமுதாயப்பணியில் இணைந்து செயலாற்றும் கேரளாவைச் சேர்ந்த சகோதரர்களின் pleaceindia என்ற அமைப்பிற்கு தகவல் கிடைக்க உடனே தமுமுகவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எப்பவும் போல் இந்த புகாரை எடுத்துக் கொண்டு இந்தியத் தூதரகம் சென்றோம். சில நேரங்களில் சில வேலைகள் எளிமையாக முடிந்து விடும் சில நேரங்களில் அதற்குரியமுறையில் அணுக வேண்டி வரும். அந்த வகையில் இந்த வழக்கிலும் நமது அணுகுமுறையை வித்தியாசமாக கடைப்பிடிக்க வேண்டி வந்தது. இந்தப் புகாரை கொண்டு சென்றவுடன் வழக்கம் போல் "எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்கிறோம்" என்ற பதிலே கிடைத்தது. இறைவன் உதவியால் இந்த வழக்கில் சாதிக்கவேண்டும் என்று தமுமுக களத்தில் இறங்கியது. முறையாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். டிப்லோமெட் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் கையாளப்பட்டது.

மனித உரிமை ஆணையம், கவர்னரேட், காவல்துறை உயர் அதிகளாரிகள் போன்ற அனைத்து துறைகளிலும் முறையிட்டு உரிய நடவடிக்கை்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

மண்டல தமுமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தூதரகத்திலிருந்து டாக்டர் முஹம்மது அலீம் தலைமையில் தூதரகக்குழு ஹைல் சென்று முகாமிட்டு அடிமையாக சிக்கித்தவித்த சகோதரி மும்தாஜ் மீட்கப்பட்டு அவரது ஸ்பான்சர் கைது செய்யப்பட்டார். 70 ஆயிரம் ரியால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சகோ மும்தாஜூக்கு 19 ஆண்டுக்கான இக்காம அடிக்க வேண்டி உள்ளதால் அதன் பணிகளும் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் இருந்ததால் காலாவதி ஆகிவிட்டபடியால் அதன் பணிகளும் இன்றும் சில பேப்பர் வேலைகளும் பாக்கி இருப்பதால் அவைகள் முழுமையாக முடிந்தவுடன் இன்ஷா அல்லாஹ் ஒருவார காலத்தில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகத்தில் தற்போது அவருக்கு இருக்கும் அவரது ஒரே உறவினரான சித்தி சதிரா அவர்களை தமுமுக, சவூதி அரேபியா மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனி தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்தி உள்ளார் மிகுந்த மகிழ்ச்சி அடைத்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே......

இந்த மீட்புப்பணியில் பெரிதும் உதவிய இந்தியத் தூதுவர் மரியாதைக்குறிய ஹாமித் அலி ராவ் தூதரக அதிகாரிகள் டாக்டர் முஹம்மது அலீம், சகோதரர் விவேகானந்தன் மற்றும் காவல்துறை லெப். கர்ணல். பஷீர் அஹமது அல் அன்ஸி மற்றும் மனித உரிமை ஆணைய அதிகாரிகளுக்கு மத்திய மண்டல தமுமுகவின் சார்பாக முறையே நன்றிக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மேலும் ஒரு மணிமகுடமாகும். .. .. .. . . எல்லாப்புகழும் இறைவனுக்கே...

ஹூஸைன்கனி, ரியாத்.

Monday, June 13, 2011

வளைகுடா வாழ் தமிழர்களுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும் ரியாத் மாநகரில் நடைபெற்ற அதிமுக முப்பெரும் விழாவில் தமுமுக கோரிக்கை.


அதிமுக சார்பில் சவூதி அரேபியா - ரியாத் நகரில் முப்பெரும்விழா நடைபெற்றது. அதிமுகவின் அம்மா பேரவை ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற முதல்வருக்கு பாராட்டு விழா – தேர்தல் வெற்றி விழா – வாக்காளருகளுக்கு நன்றி அறிவிப்பு விழா என முப்பெரும் விழா கடந்த 10-06-2011 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் ரியாத் நகர் பத்தாவிலுள்ள கிளாசிக் ஹோட்டல் அரங்கத்தில் நடைபெற்றது

இவ்விழாவிற்கு கொரடாச்சேரி கோவி. சந்துரு (இணைச்செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) தலைமை தாங்கினார். காட்டுமள்ளுர் கோயில் அன்பு என்கிற அன்பழகன் (தலைவர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) முன்னிலை வகித்தார். முகவை ராஜன் என்கிற ராஜேந்திரன் வரவேற்புரை வழங்க, கடையநல்லூர் SM.மைதீன் (செயலாளர்- சவுதி அரேபியா அம்மா பேரவை) வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் கூட்டணி கட்சி என்ற வகையில் சிறப்பு விருந்தினார்களாக மனித நேய மக்கள் கட்சியின் தாய்க்கழகமான தமுமுக நிர்வாகிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். ரியாத் மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூசைன் கனி மற்றும் ரியாத் மத்திய மண்டல துணைப் பொதுச் செயலாளர் மீமிசல் OMS. நூர் முஹம்மது ஆகியோர் சமுதாயத்தின் கோரிக்கைகளான இடஒதுக்கீட்டை அதிகரிப்பது, திமுக அரசினால் கொண்டு வரப்பட்ட கட்டாயத் திருமணச் சட்டத்தில் உள்ள குளறுபடிகள் மேலும் முஸ்லிம்கள் காலம் காலமாக முஸ்லிம் ஜமாஅத்களில் நடத்தி வரும் திருமணங்களை அரசு அங்கீகரித்து ஜமாஅத் அல்லது காஜியின் பதிவேட்டை அரசு பதிவாக ஏற்று முஸ்லிம்களின் திருமண நடைமுறைகளில் அரசு அதிகாரிகள் தலையிடுவதை அடியோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என அதிமுக அரசை இந்த சமுதாயத்தின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு உடலாலும் பொருளாலும் உழைத்திட்ட வாக்களர்களுக்கும், கட்சியினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தமுமுக நிர்வாகிகளால் கொண்டுவரப்பட்ட கோரிக்கைகளையும் தங்களின் முப்பெரும் விழா தீர்மானத்தில் இணைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


------------

பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது தமுமுக மண்டலப் பொதுச் செயலாளர் ஹூசைன் கனி கூறியதாவது
சவூதி அரேபியா - ரியாத்தில் உள்ள இந்தியத்தூதரகத்தில் வடநாடு மற்றும் தமிழகத்தின் அன்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமானோர் பணியாற்றுகிறார்கள், தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் தங்களது குறைகள் மற்றும தேவைகள் சம்பந்தமாக தூதரகத்தை தொடர்பு கொண்டால் மொழிப் பிரச்சனையால் தமிழர்களின் குறைகளும் தேவைகளும் தீர்த்து வைக்கப்படுவதில்லை. அயல்நாட்டுக்கு பிழைப்புத் தேடிவரும் தமிழர்கள் அனைவரும் படித்த பட்டாதாரிகளோ அல்லது பல மொழிகளை கற்றுத் தேர்ந்தவர்களோ கிடையாது. தமிழத்தை தவிர வேறொன்றும் தெரியத நிலையில் அவர்களின் குறைகளை தூதரகங்களில் முறையாக எடுத்துச் சொல்லி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு தனிப்பிரிவு உறுவாக்கவும் தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைக்கவும் அதிமுக அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்வதோடு, வட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குறைகளை களைவதற்கும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்குகளை களைந்து நீதமுடன் அரசு அலுவலர்கள் நடந்து கொள்ள ஆவன செய்யவேண்டும் என்று இந்த அரசை வலியுருத்திக் கேட்டுக் கொள்கிறோம் இவ்வறு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Wednesday, February 17, 2010

போரூரில் உடலை தோண்டிய விவகாரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு தமுமுக போராட்டம்




போரூரில் அமைந்துள்ளது சேக்மானிய பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்குட்பட்ட, வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 500 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. இந்த சொத்து என்னுடையது தான் என்று ஒருவர் உரிமை கொண்டாடி வருகிறார். இந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 13-2-2010 அன்று இறந்த முஸ்லிம் பெண்மணியின் உடலை ஜமாத்தார்கள் அடக்கம் செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.



காவல்துறையினர் முஸ்லிம் அமைப்பினரிடம் நாங்கள், அடக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். ஆனால் கொடுத்த வாக்குறுதியை மீறி கடந்த 15-2-2010 அன்று காலை 5 மணியளவில் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் தலைமையில் அம்பத்தூர் தாசில்தார் முன்னிலையிலும், அப்பகுதி முஸ்­ம் ஜமாஅத்தார் அனுமதியின்றி அடக்கப்பட்டிருந்த பெண்மணியின் உடலை தோண்டி எடுத்து வேறு ஒரு பள்ளிவாசல் அடக்கத்தலத்தில் அடக்கம் செய்துள்ளனர்.




திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் இந்த அத்துமீறிய செயலைக் கண்டித்தும், வரம்பு மீறி செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியும், சேக் மாணியம் வக்ஃபு சொத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று 17-02-2010 காலை 11 மணிக்கு தலைமைச் செயலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.







தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி­ தலைமையில் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ப. அப்துல் சமது, மாநிலச் செயலாளர்கள் ஏ.எஸ். எம். ஜுனைத், பி.எஸ். ஹமீது, துணைச் செயலாளர் பி.எல்.எம். யாசின், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத், வட சென்னை மாவட்ட தமுமுக தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் கமருதீன், காஞ்சி மாவட்ட தலைவர் மீரான் முஹைதீன் ஆகியோர் உட்பட ஏராளமான தமுமுக தொண்டர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டுச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.





Sunday, August 30, 2009

அனைத்து தமுமுக கிளை உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அவசர வேண்டுகோள்

கூத்தாநல்லூரில் நேற்று (ஆக 29) இஃப்தாருக்குப் பிறகு திருவாரூர் மாவட்ட தொண்டரணிச் செயலாளர் சகோ. நூர் முஹம்மது அதே ஊரைச் சேர்ந்த சமூக விரோதி அனஸ் மற்றும் அவனது கூட்டாளிகளால் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்திருப்பீர்கள். இந்த குற்றவாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவிக்க சில சக்திகள் முயற்சி செய்து வருகின்றன. இந்த கயவர்களை நீதியின் முன் நிறுத்த தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க அவரது தனி செல்லுக்கு (00914425671441) என்ற எண்ணில் இணைப்பில் உள்ள படிவத்தில் கையெழுத்திட்டு உடனடியாக ஏராளமான ஃபேக்ஸ்களை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஜஸாக் அல்லாஹ்!

திருவாரூர் மாவட்ட தமுமுக சார்பாக