.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, April 16, 2012

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!

சவுதியில் 20 ஆண்டுகள் அடிமைப்பட்ட சகோதரி மீட்பு... உறவினர்கள் மகிழ்ச்சி.... தமுமுக முயற்சிக்கு வெற்றி!


அடிமைத்தளையை வேரோடும் வேரடி மண்னோடும் 1433 ஆண்டுகளுக்கு முன்பே தகர்ந்தெரிந்த மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். அந்த இஸ்லாம் முழுமையடையப்பட்டு உலகமுழுதும் பரவ காரணமான அரபுமண்னில் அடிமைத்தனத்தின் வாடை இன்னும் வீசுவது மனித ஆர்வளர்களுக்கும் மார்க்க அறிஞர்களுக்கும் சவாலாகவும் வேதனையாகவும் உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தஞ்சைத்தரணியிலிருந்து தனது 20வது வயதில் 400 ரியால் சம்பளத்திற்கு வீட்டு வேலைக்காக சவூதி அரேபியாவிற்கு வந்துள்ள சகோதரி மும்தாஜ் பேகம் என்பவர், அவர் வந்து 10 மாதங்கள் மட்டும் சம்பளம் பெற்றுள்ளார். அதன் பின் சம்பளமும் இல்லை, அவரை ஊருக்கும் அனுப்பவில்லை. 20 வருடங்களாக சொல்லென்னா துயரங்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

இந்த இடைப்பட்ட 20 வருட காலத்தில் அவரது தந்தை சாலிஹா சகாப் தாயார் சாகிரா பீவி ஆகியோர் மரணமடைந்த செய்தி கிடைத்தும் அந்த ஸ்பான்சர் அந்த சகோதரியை தனது நாட்டிற்கு அனுப்பவில்லை. சகோ மும்தாஜ் பல முறை வீட்டை விட்டு ஓடி காவல்நிலையம் சென்று புகார் கொடுத்தும் பலன் இல்லை. இதோ அனுப்பி விடுகிறேன் என்று காவல் நிலையத்திலிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவர். இப்படியே 20 ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வந்த அந்த சகோதரியைப் பற்றிய தகவல் தமுமுகவோடு சமுதாயப்பணியில் இணைந்து செயலாற்றும் கேரளாவைச் சேர்ந்த சகோதரர்களின் pleaceindia என்ற அமைப்பிற்கு தகவல் கிடைக்க உடனே தமுமுகவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எப்பவும் போல் இந்த புகாரை எடுத்துக் கொண்டு இந்தியத் தூதரகம் சென்றோம். சில நேரங்களில் சில வேலைகள் எளிமையாக முடிந்து விடும் சில நேரங்களில் அதற்குரியமுறையில் அணுக வேண்டி வரும். அந்த வகையில் இந்த வழக்கிலும் நமது அணுகுமுறையை வித்தியாசமாக கடைப்பிடிக்க வேண்டி வந்தது. இந்தப் புகாரை கொண்டு சென்றவுடன் வழக்கம் போல் "எங்களால் என்ன முடியுமோ அதைச் செய்கிறோம்" என்ற பதிலே கிடைத்தது. இறைவன் உதவியால் இந்த வழக்கில் சாதிக்கவேண்டும் என்று தமுமுக களத்தில் இறங்கியது. முறையாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். டிப்லோமெட் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவைகள் கையாளப்பட்டது.

மனித உரிமை ஆணையம், கவர்னரேட், காவல்துறை உயர் அதிகளாரிகள் போன்ற அனைத்து துறைகளிலும் முறையிட்டு உரிய நடவடிக்கை்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

மண்டல தமுமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தூதரகத்திலிருந்து டாக்டர் முஹம்மது அலீம் தலைமையில் தூதரகக்குழு ஹைல் சென்று முகாமிட்டு அடிமையாக சிக்கித்தவித்த சகோதரி மும்தாஜ் மீட்கப்பட்டு அவரது ஸ்பான்சர் கைது செய்யப்பட்டார். 70 ஆயிரம் ரியால் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சகோ மும்தாஜூக்கு 19 ஆண்டுக்கான இக்காம அடிக்க வேண்டி உள்ளதால் அதன் பணிகளும் அவரது பாஸ்போர்ட் புதுப்பிக்காமல் இருந்ததால் காலாவதி ஆகிவிட்டபடியால் அதன் பணிகளும் இன்றும் சில பேப்பர் வேலைகளும் பாக்கி இருப்பதால் அவைகள் முழுமையாக முடிந்தவுடன் இன்ஷா அல்லாஹ் ஒருவார காலத்தில் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாயகத்தில் தற்போது அவருக்கு இருக்கும் அவரது ஒரே உறவினரான சித்தி சதிரா அவர்களை தமுமுக, சவூதி அரேபியா மத்திய மண்டல பொதுச் செயலாளர் ஹூஸைன்கனி தொடர்பு கொண்டு விபரங்களை தெரியப்படுத்தி உள்ளார் மிகுந்த மகிழ்ச்சி அடைத்தார்கள். எல்லாப்புகழும் இறைவனுக்கே......

இந்த மீட்புப்பணியில் பெரிதும் உதவிய இந்தியத் தூதுவர் மரியாதைக்குறிய ஹாமித் அலி ராவ் தூதரக அதிகாரிகள் டாக்டர் முஹம்மது அலீம், சகோதரர் விவேகானந்தன் மற்றும் காவல்துறை லெப். கர்ணல். பஷீர் அஹமது அல் அன்ஸி மற்றும் மனித உரிமை ஆணைய அதிகாரிகளுக்கு மத்திய மண்டல தமுமுகவின் சார்பாக முறையே நன்றிக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

மத்திய மண்டல தமுமுகவின் பணிகளில் இந்தப் பணி மேலும் ஒரு மணிமகுடமாகும். .. .. .. . . எல்லாப்புகழும் இறைவனுக்கே...

ஹூஸைன்கனி, ரியாத்.

No comments: