.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, July 6, 2009

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக தமுமுக ஆர்ப்பாட்டம்

ஓரினச் சேர்க்கைக்கு எதிராக நாளை 06.07.2009 ல் தமுமுக ஆர்ப்பாட்டம்.


ஓரினச் சேர்க்கைக்கு எதிராக 149 அண்டுகளாக இருந்து வந்த ஐ.பி.சி 377வது சட்டப்பிரிவு செல்லாது என, டில்லி நீதி மன்றம் சமீபத்தில் தீர்பளித்தது.

இதனடிப்படையில் அருவருக்கத்தக்க இந்த ஓரினச் சேர்க்கையின் செயலை ஆதரித்து இந்திய அரசு ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்தால் இந்த அருவருக்கத்தக்க செயலுக்கு அனுமதி அளித்து ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விலக்களித்த 127வது நாடாக இந்திய இடம் பிடிக்கும்.

இறைவனின் படைப்பில் மனிதன் முதல் விலங்குள், தாவரங்கள் மற்றும் இன்ன பிற உயிரினங்கள் அனைத்தும் அதற்கு அனுமதிக்கப்பட்ட இயற்கை வரையில் தான் தனது இல்லற சுகத்தையும் இனவிருத்தியையும் பெருக்குகின்றன குறிப்பாக தாவர இனங்களின் உற்பத்திகூட ஆண் ‍பெண் சேர்க்கை என்ற விதியின் படி‍யே விளைச்சல்கள்மேம்படுகின்றன.

இயற்கை விதி இவ்வாறு இருக்க மனித குலத்திற்கு எதிரான, சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை ‍அளிக்கும் ஐ.பி.சி 377வது பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - இன்ஷா அல்லாஹ் 06.07.2009 அன்று மாலை 4.00 மணிக்கு – சென்னை சென்ரல் மெமோரியல் ஹால் அருகில் -

அனைவரும் வருக
அழைக்கிறது தமுமுக.

No comments: