.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, August 25, 2009

முஸ்லிம்களை வதைக்கும் வக்பு வாரியம்.

ன்றி:இனியவன்






-மாயாவி

தமிழ்நாடு வக்பு வாரியத்துக்கு சொந்தமான கொவ்ஸ் மைதீன் பேட்டை வக்புக்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வீடுகள் கட்டப்பட்டன. கலைஞர் ஆட்சியில் அரசு சார்பில் அவ்வீடுகள் ஏழைகளுக்கு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.உடனே அன்று வக்பு வாரிய தலைவராக இருந்த ஹைதர் அலி வக்ப் வாரியத்திற்கு சொந்தமான வீடுகளை தமிழக அரசு ஒதுக்க கூடாது.வக்ப் வாரியத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.பல முயற்சிகளுக்கு பின்னர் அந்த இடங்கள் வக்பு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அதற்குள் தேர்தல் வந்து விடவே ஹைதர் அலி வக்ப் வாரிய பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இந்நிலையில் புதிதாக பதவியேற்ற கலைஞரின் நண்பர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் வீடுகளை வைத்து சமூகத்தின் மதிப்பை பெற்று விட வேண்டும் என்று களத்தில் இறங்கினார்.பாவம் இளிச்சவாய் பொதுமக்கள்.காசிமேடு பகுதியில் நூறு வீடுகளும் துரைப்பாக்கம் பகுதியில் 176 வீடுகள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிலும் 10% இமாம்களுக்கும் 10% மோதினர்களுக்கும்,10% விதவைகளுக்கும்,10% கை விடப்பட்ட பெண்களுக்கும்,10% வேலை இல்லாத ஆலிம்களுக்கும் மீதி 50% மற்ற ஏழை மக்களுக்கும் என ஒதுக்கப்பட உள்ள நிலையில் 5 நாட்கள் வீடுகளுக்கு விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.வாடகை 250 என்றும் அட்வான்ஸ் 1000 என்றும் வீடு (வெறும்) 250 Sqft என்றும் கூறப்பட்டது. இதை கேட்டதும் வக்பு வாரியத்தின் முன் 17.8.09 திங்கள் கிழமை முதல் மக்கள் சாரை சாரியாக குவிந்தனர்.விண்ணப்பங்கள் வாங்க வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர் வாரிய அதிகாரிகள்.போலீஸ் வந்து கூட்டத்தை சமாளிக்க வேண்டியதாயிற்று.



முதல் நாள் இரவிலேயே ரோட்டிலேயே உட்கார்ந்து அங்கேயே படுத்து தூங்கி காலையில் விண்ணப்பம் வாங்க வந்த முஸ்லிம்களை பார்த்து அந்த பகுதியில் வழக்கமாக தெருவில் வசிக்கும் மக்களே ஆச்சரியப்பட்டனர்.கைக்குழந்தைகளோடு இயற்க்கை உபாதைகளை நிறைவேற்றக்கூட வசதி இல்லாத நிலையில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் அதிகாலை முதலே வரிசையில் நின்று கொண்டிருந்தது பார்க்கவே கொடுமையாக இருந்தது.சமுதாயத்தின் மானத்தை சந்தி சிரிக்க வைக்க வேண்டும் என்ற வக்பு வாரியத்தின் எண்ணம் நல்லபடியாக நிறைவேறியது.வெறும் 276 வீடுகளுக்கு இது வரை 15,000விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது.ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை வைத்து அரசியல் செய்யும் வாரியத்தின் கூத்தை பார்த்து எல்லோரும் காரி துப்பினர்.கூட்டத்தின் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் திணறிய போலீசார் ஒரு கட்டத்தில் தடியடி நடத்தும் சூழ்நிலை உருவானது.கடைசியாக போலீசார் வக்பு வாரிய உயர் அதிகாரியிடம் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்ய நேரிடும் என்று கூறியதால் வியாழன் கிழமையோடு விண்ணப்பம் வழங்குவதை நிறுத்தி கொண்டனர்.


மொத்த ஒதுக்கீட்டில் வக்பு வாரிய உயர் அதிகாரிகளுக்கும் வாரிய உறுப்பினர்களுக்கும்(வாங்காதவர்களும் உண்டு)அவர்களுக்கு தேவை பட்டவர்களுக்கும் போக மீதி உள்ள இடங்களுக்குத்தான் இவ்வளவு போட்டி.நவீன யுகத்தில் இன்டர்நெட் போன்றவற்றில் டவுன்லோட் செய்து கொள்ளும் வசதிகள் எல்லாம் வந்து விட்ட பிறகு மக்களை வரிசையில் நிற்க வைத்து கஷ்டப்படுத்துவது பக்கா அரசியல். வெள்ள நிவாரணம் என்ற பெயரில் திரண்ட கூட்டத்தில் ஏற்பட்ட கசமுசா போன்று ஏற்பட்டு ஏதாவது உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் என்னவாகி இருக்கும்.அப்போது இரங்கல் கவிதையை பாடுவதை தவிர வாரிய தலைவரால் என்ன செய்ய முடியும்.மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கிளம்பி தான் தோன்றி தனமாக வேலை செய்வதை விட்டு உருப்படியான வேலைகளை வக்பு வாரியம் பார்க்க வேண்டும்.

No comments: