.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Monday, February 9, 2009

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

சினிமாத் துறையில் ஊறிப்போயுள்ள காவி சிந்தனை
நாட்டு நலனுக்கு உகந்ததல்ல!

-தமிழ்ச் செல்வன்

நான் சினிமா பார்பதும் இல்லை அதற்கான விமர்சனங்கள் எழுதுவதும் இல்லை சில நேரங்களில் விமர்சனத்திற்குறிய திரைகாட்சிகளை மட்டும் பார்பதுண்டு ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உலகத் திரைத்துறையின் மிக உயரிய விருதான 2 விருதுகளைப் பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமை‍யை அடைந்துள்ளார். (ஸ்லம்டாக் மில்லியனர் திரைக்கதையில் நமக்கு உடன்பாடு இல்லை அந்தக் கதை இந்தியாவின் உள்கட்டமைப்பு வாழ்கை முறையை அசிங்கப்படுதியுள்ளதாக அறிந்தேன்) ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரையிலும் ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார். இவரது விசயத்தில் தமிழ்திரை உலகினர் நடந்து கொண்ட விதம் இந்த கட்டுரை எழுதத் தூண்டியது.

ரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைப்புயல் ஏ. ஆர்.ரஹ்மான். தனது முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர்.

இந்திய மொழிப்படங்கள் தவிர உலக மொழிகளிலும் தனது இசைத் திறமையால் பல விருதுகளைப் ‍வென்றுள்ள ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில மொழி திரைப்படத்திற்கு சிறந்த இசைக்கான விருதுகளை பெற்றுள்ளார். கோல்டன் குலோப் விருதுக்குப் பிறகு பிரிட்டனின் மிக உயர்ந்த விருதான பாஃப்டா விருதும் பெற்றுள்ளார் இந்த பாஃப்டா விருது இவருடன் இன்‍னொரு இந்தியருக்கும் கிடைத்துள்ளது.

இரண்டு மிக உயர்ந்த விருதுகளைப் பெரும் முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது. 43 வயதே ஆகும் ஏ.ஆர்.ரஹ்மான் சாதித்தது ஏராளம் இவரது ஆடியோ சீடிக்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்று சாதனை படைத்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இவரது விருதுகளையும் சாதனைகளையும் விவரிக்க இந்த ஆக்கமல்ல ஆனால் உலக அளவில் இவ்வளவு பெரிய சாதனைகள் புரிந்துள்ள ஒரு இந்தியன் குறிப்பாக தமிழனை நமது தமிழ் திரை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது தான் நமது விமர்சனம்.

காதல் கோட்டை படத்திற்காக முதன் முதலாக தேசிய விருதை பெற்றுக் கொண்டு சென்னை திரும்பிய இயக்குனர் அகத்தியனுக்கு தங்கத்தில் அடையாள அட்டை கொடுத்து கௌரவித்தது இயக்குனர்கள் சங்கம். அதுமட்டுமல்ல... பாலசந்தர், பாரதிராஜா போன்ற இரு ஜாம்பவான்களும் இருபுறமும் நின்று அவரை மலர் தூவி வரவேற்றார்கள்.

1944 ல் நிறுவப்பட்ட கோல்டன் குளோப் 66 ஆண்டுகளாக உலகில் உள்ள பல்வேறு சிறந்த கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருது பற்றி சொல்பவர்கள் 'ஆஸ்கர் விருதுக்கு முந்தைய அடையாளம் இது' என்றே பெருமையாக பேசுவார்கள். இந்த முறை பிரிட்டிஷ் இயக்குனர் டேனி போயல் இயக்கிய 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் இசையமைத்தற்காக விருது பெற்றிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இவ்வளவு பெரிய விருது பெற்ற ஒரு தமிழனின் சாதனை, இடைத்தேர்தல் வேட்டு சத்தத்தில் சப்தமில்லாமல் போனதது தான் வேதனை. அந்த நேரத்தில் தமிழ் தொலைக்காட்சிகள் இடைத்தேர்தல் முடிவும், அது குறித்த அலசல்களிலும் தன் முகத்தை திருப்பிக் கொண்டன சரி, இதுவாவது போகட்டும் இது அவாள்களின் வாடிக்கை. விருதை வாங்கிக் கொண்டு சென்னை வந்திறங்கிய ரஹ்மானை வரவேற்க தமிழ் திரையுலகத்தை சேர்ந்த வி.ஐ.பிகள் ஒருவருமே போகவில்லை என்பது தான் தமிழ்த் திரை உலகினரின் இன்னோரு முகத்தை காட்டியது.

ரஹ்மானின் ரசிகர்கள் மட்டும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தார்கள். நாதஸ்வரம், மேளதாளத்தோடு அவரது வீடு வரைக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அன்று நள்ளிரவு மட்டும் அந்த தெரு திருவிழா கோலம் பூண்டிருந்தது. திரை உலகத்தப் பொருத்தவரை ஒரு தெருவோடு முடிந்து போகிற கொண்டாட்டமா இது? அங்கும் மதவாதம் காவி சிந்தனை தலைக்கேறிப் போயுள்ளது.

ஆச்சரியத்தில் மூழ்கி அதிர்ச்சியில் இருந்தவர்கள் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்த உயரிய விருதுகளைப் பெற்ற முதல் இந்தியன் என்ற முறையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ தலைவர் அத்வானி, அபிஷேக் பச்சன், ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்தினார்கள். கை நிறைய மலர் கொத்துகளோடு நேரில் வந்து வாழ்த்தினார்கள் நடிகர் பார்த்திபனும், இயக்குனர் கதிரும். தமிழக முதல்வர் கலைஞரும், அதிமுக தலைவி ஜெயலலிதாவும் தங்கள் வாழ்த்துகளை அறிக்கையாகவே வெளியிட்டார்கள்.

தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம், ரஹ்மானுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளார்கள்.

சிம்பொனி இசையமைத்து வந்த ஒரு தமிழனுக்கு தமிழ்த்திரை உலகமும் தமிழ் ஊடகங்களும் ஆண்டுக்கு மேல் புகழ்பாடி வந்தன இது போன்ற சாதனையை யாரும் இதுவரைசெய்திடவில்லை என்ற ஒரு மாயைதோற்றம் அப்போது உண்டாக்கப்பட்டது.

உலகின் மிக உயரிய விருதுகளைப் பெற்று வந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லீம் எனபதால் பாராட்டுவிழா அடுத்த கட்டம் பாராட்டுவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள் திரை உலகிலும் ஊறிப்போயுள்ள செங்பரிவார சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம்.

இவர்கள் தான் இந்திய சுதந்திர வரலாற்றை சரியாக படம் பிடித்து மக்களுக்கு சொல்பவர்களா? இந்தியாவின் சுதந்திரத்தில் தனது விகிதாச்சாரத்திற்கும் அதிகமான தியாகங்களைக் கொண்ட சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு உடலாலும், உயிராலும், பொருளாளும் அதிகமதிகம் தியாகங்கள் செய்த சமுதாயம் இந்த முஸ்லிம் சமுதாயம்.

ஆனால் இந்த காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக்கூட்டம் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், திருடர்களாகவும், தமிழை இன்று வரை அதன் உயிரோட்டத்தோடு அதன் கருத்துக்களை சிதைக்காமல் பேசும் முஸ்லிம்களை தமிழை கடன் வாங்கி கொத்திக் கொதறி பேசுபவர்கள் போல் சித்தரித்து வெகுஜன மக்களிடமிருந்து தனிமை படுத்தும் பணியை நீண்ட காலம் செய்து வந்தார்கள்.

சுதந்திர தியாகச் செம்மல் மைசூர் சிங்கம் திப்புவின் தியாகம் எத்தனை திரைப்படங்களில் சொல்லப்பட்டுள்ளது? மாவீரன் மருதநாயகம் என்ற கான்சாகிப்பின் வரலாறு எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? நமது பகுதியைச் (தென்தமிழ்நாடு)சேர்ந்த சுதந்திர போராட்ட மாவீரனா? யார் அவன்? என்று அந்த வரலாற்றை தேடிச் சென்ற நடிகர் கமல்ஹாசனுக்கு அந்த சுதந்திர போராட்ட வீரன் கான்சாகிப் என்று அடையாளம் கண்டவுடன் அவன் ஒரு முஸ்லிம் என்பதால் அந்த வரலாற்று உண்மையை அங்கேயே போட்டு மூடிவிட்டார் நன்றாக நடிக்கத் தெரிந்த அந்த நடிகர்.

விருது பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் ஒரு முஸ்லிம் என்பதால் பாராட்டக்கூட மனமில்லாத காவி சிந்தனை கொண்ட கூத்தாடிக் கூட்டத்தின் முகம் இதோ கிழிந்து தொங்குகிறது.

கமல், மணிரத்தினம், போன்றவர்கள் என்றால்... இல்லாத ஒன்று உறுவாக்கப்படுகிறது இந்த ஊடகங்களால்.

திரைப்படம் மற்றும் அதன் துறையில் நமக்கு உடன்பாடில்லை அது சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் கேடு கெட்ட துறை. ஆனால் ஒரு கருத்துருவாக்கத்தை உருவாக்கி மிகப் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் மிகப் பெரிய ஊடகம் என்பது உண்மை.

இப்போது நடந்து கொண்ட இந்த நிகழ்வு இந்தத் துறையில் ஊரிப்போயியுள்ள சாதிய வெறி காவி சிந்தனை எந்த அளவுக்கு தலைக்கேறிப்போயுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. சிந்தனை மாற்றத்தை உண்டுபன்னும் இந்தத்துறையில் காவி சிந்தனை ஊறிப்போயுள்ளது நாட்டு நலனுக்கு உகந்தததல்ல.

1 comment:

Prapa said...

வாழ்த்துக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி .எங்கள் பக்கமும் வாங்க....