.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, August 16, 2007

தென்காசி கொலை: இந்து முண்ணனி தலைவர் கைது.. தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்

தென்காசியில் 6 பேர் கொலை இந்து முன்னணி தலைவர் கைது: மேலும் 3 பேர் சிக்கினர்

  • கைது செய்யப்பட்ட சக்திபாண்டியன் தென்காசி நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார்.

  • தென்காசி கலவரத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை: த.மு.மு.க. வற்புறுத்தல்
தென்காசி சம்பவத்திற்கு மதசாயம் பூசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று த.மு.மு.க. வற்புறுத்தி உள்ளது.

த.மு.மு.க. மாநில செயலாளர் ஜெ.எஸ். ரிபாயி நிருபர்களிடம் கூறியதாவது:-
தென்காசியில் நடைபெற்ற படுகொலைகள் மத மோதல்கள் இல்லை. இதற்கு மத சாயம் பூசப்படுவதை த.மு.மு.க. வன்மையாக கண்டிக்கிறது. அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருசாரர்களும் ஆயுதம் வைத்திருப்பதாக கூறும் காவல்துறை அவர்களை கடுமையான ஆயுதங்களோடு கையும் களவுமாக பிடித்து முன்எச்சரிக்கை கைது செய்யாமல் அவர்களை வெற்று காகிதத்தில் எழுதிதரகூறி மன்னித்து அனுப்பியதால்தான் இது போன்று பகிரங்கமாக பட்டப்பகலில் படுகொலை நடக்க ஊக்கமளித்து இருக்கிறது. காவல் துறையின் மெத்தனப் போக்கே கொலைகளுக்குக் காரணம்.

இருதரப்பும் பகிரங்கமாக மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படுவதற்கு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் ஒரே நேரத்தில் இரு தரப்பையும் கையெழுத்திட செய்தது நீதித்துறை சரியான கருத்தில் பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகிறோம்.

சம்பவம் நடைபெற்ற பின்னர் காவல்துறையின் நடவடிக்கை சிறப்பாக இருந் தாலும் கைது நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது பொய்வழக்கு போட்டுவிடக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு அப்பாவிகள் கைது செய்யப்பட்டால் த.மு.மு.க. போராட தயங்காது.
தென்காசி பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இயல்பு நிலை திரும்பியது: தென்காசியில் இன்று கடைகள் திறக்கப்பட்டன
6 பேர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து தென்காசியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. கடந்த 2 தினங்களாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. பாதுகாப்புடன் குறைந்த அளவு பஸ்களே இயக்கப்பட்டன.

அசம்பாவிதத்தை தடுக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
சோகமும், பீதியும் கவ்வியிருந்த தென்காசியில் இப்பொழுது சற்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. இன்று கடைகள் திறக்கப்பட்டன. பஜாரில் மக்கள் கூட்டம் மிதமாக காணப்பட்டது. பள்ளி கல்லூரிகளுக்கு மாணவர்கள் வழக்கம் போல் சென்றனர். வேன், ஆட்டோக்களும் இயங்க தொடங்கின.

எனினும் ஒருவித அச்ச உணர்வு தென்காசி பகுதி மக்களிடையே தொற்றியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் சகஜநிலை திரும்புவதற்கு அரசுடன் இணைந்து த.மு.மு.க வீரியமாக களப்பணியாற்றிவருகிறது.

No comments: