தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
.
Saturday, October 2, 2010
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பா? கட்டப் பஞ்சாயத்தா? தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
Thursday, September 23, 2010
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.
இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...
“பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!
1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.
1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.
தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.
தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.
மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Monday, September 20, 2010
பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திடவும்!
நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட பாபர் பள்ளியின் தீர்ப்பு இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 24ம் தேதி அலகாபாத் நீதிமன்றத்தில் வழங்கப்படஉள்ளது...
தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை.
இழந்த உரிமையை பெற்றுள்ளோம்...
வழங்கப்படும் தீர்ப்பு முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை. நீதி கேட்டு உச்சநீதி மன்றம் செல்லும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே! தேசத்தின் நலன் கருதி பாபரி பள்ளி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அமைதிகாத்திட வேண்டுமாய் உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.