.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Sunday, July 25, 2010

Abbass Shajahan, passed away இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இன்னா லில்லாஹி இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் செயலாளரும், தற்போதைய பொருளாளரும், Microsoft நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவருமான சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான் அவர்கள் 22-07-10 மாலை 7 மணி அளவில் மருத்துவமனையில் காலமானார்.

சகோதரரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு வல்ல ரஹ்மான் பொறுமையை தந்தருள்வானாக!
சகோதரரின் பாவங்களை மன்னித்து அவரது நல்லறங்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயந்த சுவனத்திற்கு உடமைதாரராக்கி அருள் புரிய வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கிறோம்.

கடந்த ஜூன் மாதம் ரியாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது...சன் டிவி ''அசத்தப் போவது யாரு" புகழ் இயக்குனர் ராஜ்குமாருக்கு திருக்குர்ஆன் பிரதி வழங்கும் போது...

சகோதரர் அப்பாஸ் ஷாஜஹான், Low Sugar வியாதிக்காரர், தினமும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்பவர், Low Sugar வரும்பொழுது இனிப்புகள் உட்கொண்டு 15 நிமிடத்தில் சமநிலைக்கு வருவார். அன்றையதினமும் அதுபோல் நடந்தது அவரது துனைவியார் இனிப்புகள் கொடுத்து 15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் மாற்றங்கள் இல்லாததால் உடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பல மருத்துவ உதவிகள் செய்தும் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இறைவனின் நாட்டப்படி நடந்து முடிந்தது.

சகோதரர். அப்பாஸ் ஷாஜஹான் அவர்கள் 18 வருடங்களுக்கும் மேலாக சவூதி அரேபியாவில் Microsoft நிறுவனத்தில் பனியாற்றி வருகிறார், அவருக்கு நிஷா, பாத்திமா என்ற இரண்டு மகள்கள் உள்ளன, இருவரும் தன் பள்ளிப்படிப்பை ரியாத் இந்தியப் பள்ளியில் முடித்து நிசா தற்சமயம் மருத்துவம் இறுதியாண்டும், பாத்திமா பொறியியலும் பயின்றுகொண்டுள்ளார், நிஷாவிற்கு கடந்த வருடம் திருமணம் நடந்தது.

அவரின் தகப்பனார் DR. அப்பாஸ் இப்றாஹிம் அவர்கள் நன்கு அறியப்பட்ட ஒரு பொதுநல சமூகசேவகர், இந்தியப்பள்ளியில் முதல் நிர்வாகக்குழு உறுப்பினராகவும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு Honorary Adviser ஆகவும் இருந்துள்ளார். அவரது தாயார் மகனுடன் பலதடவைகள் உம்ராவிற்கு வந்து சென்றுள்ளார்.

நேற்று வெள்ளிக் கிழமை அரசு அலுவலகங்கள் விடுமுறை என்பதால் இன்று 24-07-2010 அஸர் தொழுகைக்குப் பின் நஷிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது நல்லடக்கப் பணிகள் ரியாத் இந்தியப் பள்ளியின் சேர்மன் சகோதரர் இம்தியாஸ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது த.மு.மு.க மண்டலப் பொதுச் செயலாளர் சகோதரர் ஹூஸைன் கனி உட்பட ரியாத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், தஃப்ரஜ் குழும நிர்வாகிகள் மற்றும் திரளான தமிழ் சகோதரர்கள் கலந்து கொண்டு நல்லடக்கம் செய்து அவரது மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தித்தார்கள்.

No comments: