.

வருகையாளர்களே! உங்கள் மீது கடவுளின் சாந்தி உண்டாகட்டும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, June 18, 2009

தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்புக்கூடு

தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடை தொட்டியில் எலும்புக்கூடு வந்தது எப்படி?


மயிலாடுதுறை, ஜூன் 17- தருமை ஆதீனம் அருகே பாதாள சாக்கடையில் எலும்புக்கூடு கிடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை கட்டும் பணி, கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக ஆங்காங்கே ஆள்நுழைவு தொட்டிகள் (மேன் ஹோல்) கட்டப்பட்டுள்ளது. இதில் தருமை ஆதீனம் மடத்தின் பின்புறம் உள்ள தொட்டிக்குள் எலும்புக்கூடு கிடப்பதாக மயிலாடுதுறை போலீசாருக்கு நேற்று மதியம் தகவல் வந்தது.

இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், எஸ்.ஐ. சின்னையன் மற்றும் போலீசார் சென்று தொட்டியில் கிடந்த எலும்புக்கூட்டின் பாகங்களை சேகரித்தனர். பின்னர் அவை தடயவியல் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எலும்புக்கூடு கிடந்த இடத்தில் ரோஸ் கலர் நைலக்ஸ் சேலை கிடந்தது. இதனால் இறந்தது பெண்ணாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து, எலும்புக்கூடாக கிடந்தவர் யார், அவர் கொலை செய்யப்பட்டரா என்று பல கோணங்களில் விசாரிக்கின்றனர். தடயவியல் நிபுணர்கள் அறிக்கை வந்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments: